Saturday, January 31, 2015


'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3)  

இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்



அண்மையில் குழந்தைகள் மருத்துவ மனவியல் நிபுணர் ஒருவரிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் உள்ள‌ பள்ளி,கல்லூரி மாணவர்கள் பற்றி,  'அதிர்ச்சியூட்டும்' தகவல்களை அவர் தெரிவித்தார். அதில் ஒரு தகவல் வருமாறு;


+ 2 முடித்து, கல்லூரியில் B.A(English) சேர்ந்து, வகுப்பில் முதல் மதிப்பெண் எடுத்த வந்த மாணவனின் தாய்,  கீழ்வரும் 'சிக்கலை'ச் சந்தித்தார். அவர் பங்கேற்ற திருமணங்கள் உள்ளிட்ட குடும்ப நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பெண்கள்,  தத்தம் பிள்ளைகள் B.Tech, M.B.B.S,  போன்ற படிப்புகள் படிப்பதை 'பெருமையுடன்' தெரிவித்த போது, தனது மகன் கல்லூரியில்  படிப்பது கேவலமாக (“இன்பத்தைத் திருடும் ஒப்பீடு"; https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html) அந்த பெண்ணுக்குத் தோன்றியது. உடனே பட்டவகுப்பில் 2ஆம் வருட படிப்பைக் கட்டாயப்படுத்தி, நிறுத்தி, தனது மகனை  B.tech சேர்த்தார். அங்கு தொடர்ந்து பல பாடங்களில் 'பெயில்'(fail) ஆகி, depression க்கு உள்ளாகி, தற்கொலைக்கும் அந்த மாணவர் முயற்சித்தார்.அதன்பின் மனவியல் நிபுணரிடம் சில மாதங்கள் சிகிச்சை பெற்று,  அந்த மாணவருக்கு பிடித்த இன்னொரு துறையில் பயிற்சி பெற்று நலமுடன் உள்ளார்.

கடந்த சில வருடங்களில் அது போல  depression க்கு உள்ளாகி, தற்கொலைக்கு முயற்சிக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் எண்ணிக்கை 'அதி வேகமாக' அதிகரித்து வருகிறது. 

வயதான தமிழர்களில், மிகவும் வச‌தியானவர்கள் , தமது பிள்ளைகளின் புறக்கணிப்புக்கு உள்ளாகவில்லையென்றாலும், தமது நேரத்தை தமக்குப் பிடித்தவாறு செலவு செய்யும் வழிகளான உள்ளார்ந்த ஈடுபாடோ(Passion), வேறு வேலையோ இல்லாமல், தமக்கு தாமே 'பாரமாக' வாழ்கிறார்கள்.வசதியற்றவர்கள் கூடுதலாக தமது பிள்ளைகளின் புறக்கணிப்புக்கும் உள்ளாகி வாழ்கிறார்கள்.

நாம் ஒவ்வொருவரும் குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்திருக்கிறோம். மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி,  தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன்,  புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழ்வதிலும் குழந்தைப் பருவத்திற்கு ஈடான வேறு பருவம் கிடையாது. எவ்வளவு வயதானாலும் தமது படைப்பாற்றலையும், கற்பனைத் திறனையும் நன்கு பேணி இயற்கையோடும், சமூகத்தோடும் இயைந்து மகிழ்ந்து வாழ, நமக்குள் இருக்கும் குழந்தையை நாம் இழந்து விடக் கூடாது. (குறிப்பு கீழே) அவ்வாறு குழந்தையைப் போல ஆர்வத்துடன் படைப்பாற்றலையும் கற்பனைத்திறனையும் தமது வாழ்வில் இயைந்து வாழ்பவர்கள், வயதானாலும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள் என்பது ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளது.( ‘Creativity may play  key role in healthy aging. ‘ http://www.nbcnews.com/id/4893420/ns/health-aging/t/creativity-may-play-key-role-healthy-aging/#.U5lNz0DUqdE)

1940- களில் மலேசியாவில் சீனக் குடும்பங்களில்,  பெண் குழந்தைகளின் கால் மணிக்கட்டில் சிறு வயதிலேயே ஒரு வளையத்தை மாட்டிவிடும் பழக்கம் இருந்தது. குழந்தைகள் வளர்ந்து பெரிய பெண்கள் ஆனாலும், கால் மணிக்கட்டு, அவர்கள் வீட்டை விட்டு தாமாகவே ஓட முடியாத அளவுக்கு சிறியதாக இருக்கும்.    குழந்தைப் பருவத்தில் உடல்ரீதியில் செயற்கையாக பாதிப்பினை மனிதர்களால் ஏற்படுத்த முடியும் என்பதற்கு இது ஒரு சான்றாகும்.

அது போலவே, தமிழ்நாட்டில் கடந்த 40 வருடங்களாக, திராவிடக் கட்சி ஆட்சிகளில் 'புற்று நோய்' போல் வளர்ந்துள்ள ஆங்கில வழிக் கல்வி மற்றும் திரிந்த மேற்கத்திய பண்பாட்டு திக்க சமூகச் சூழலில், குழந்தைகளின் குழந்தைப் பருவ, விலை மதிக்க முடியாத 'இயல்பை' முறித்து வளர்க்கும் பெற்றோர்கள் அதிகரித்து வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் நகரங்களில் (அதைப் பார்த்து இப்போது சிற்றூர்களிலும், கிராமங்களிலும் கூட) குழந்தை 2 வயது கடந்தவுடனேயே விளையாட்டுப் பள்ளியில் சேர்த்து ஆங்கில வழியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டு சூழலில், குழந்தையின் இயல்பை முறிக்கும் படலம் தொடங்குகிறது. தமது தாய்மொழியில் தமது பண்பாட்டு சூழலில் , நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்பது பற்றிய கவலையின்றி,  தமது இயல்பை ஒட்டிய துறுதுறுப்புடன் புதியவற்றை தேடி கற்பதிலும்,விருப்பமான வகையில் ஓடி ஆடி பாடி மகிழும் இயல்பானது முறிக்கப்படுகிறது. பிறர் நம் குழந்தைகளைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்ற கவலையில், பெற்றோர்கள் தம் கவலையை  குழந்தைகள் மனதிலும் விதைக்க‌,  'இயல்முறி குழந்தை வளர்ப்பு' செயல்நுட்பம் தமிழ்நாட்டில் அரங்கேறுகிறது.

ஒவ்வொரு குழந்தைக்கும் அதன் இயல்புக்கேற்ற வகையில் உள்ள திறமைகளை அடையாளம் கண்டு வளர்த்தெடுக்க,  அடிப்படைக் கல்வி தாய்மொழியிலேயே இருக்க வேண்டும் என்பதும் உலக அளவில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளின் அறிவுரையாகும். பொருள் புரிந்தும் புரியாமலும் ஆங்கில நர்சரி பாடல்களை மனப்பாடம் செய்து 'பெற்றோர் மகிழ்ந்து பெருமிதம் அடையும் அளவுக்கு, ' குரங்காட்டியிடம் பயின்ற குரங்கைப் போல ' நர்சரி வித்தைகள்' செய்து காண்பிக்குமாறு குழந்தைகள்  'ஊக்குவிக்கப் படுகீறார்கள்/ மிரட்டப் படுகிறர்கள்'. அக்குழந்தை 6 வயதில் முதலாம் வகுப்பைக் கடக்கும் முன்னரே, தமது குழந்தைப் பருவ இயல்பை தொலைத்து விட்டு, 'முதியவரை'ப் போல, குறுக்கு புத்தியோடும்(cunning), தம்மை எப்போதும் உயர்த்தி காண்பிக்க வேண்டும் என்ற முனைப்போடும் வளர்கிறார்கள்.

மதிப்பெண்கள் குறைந்தால் தாய்மார்கள்  பெறும் கோபமும், பிள்ளைகளை அடிப்பதும் சரி, குரங்காட்டியையும் விஞ்சி,  பெரும்பாலான தாய்மார்கள் ‘நன்கு வளர்க்கும் வெறியில்’ குழந்தைப் பருவ இயல்பை  முறித்து வருகிறார்கள்.. குரங்குகள் குரங்காட்டியை 'தாஜா' செய்து காரியங்கள் சாதிக்க முயல்வது போல, குழந்தைகளும் பயம் கலந்த 'எஜமான' பாசத்தை பெற்றோர்களிடம் காட்டுகிறார்கள். பெற்றோர்களுக்கும், குழந்தைகளுக்கும் இடையில் இருக்க வேண்டிய 'இயல்பான' அன்பானது,'இயல்முறி குழந்தை வளர்ப்பின்' காரணமாக 'எஜமானன்‍ - சேவகன்' வகை அன்பாக, அல்லது ‘எஜமான - செல்லப் பிராணி’  வகை  அன்பாக‌ மாறிவிடுகிறது.

அந்த காலத்தில் கல்லூரி மாணவர்கள் அனுபவித்திராத வசவுகளையும், தண்டனைகளையும் முதலாம் வகுப்பு சேரும் முன்னரே இக்குழந்தைகள் அனுபவித்து விடுகின்றனர். அந்தக் கால கல்லூரி மாணவர்களை விட, தப்பிப்பதற்காக பொய் சொல்லுதல், புறங்கூறுதல், ஏமாற்றுதல் உள்ளிட்ட 'கலைகளில்' முதலாம் வகுப்பிலேயே அக்குழந்தைகள் நிபுணராகி விடுகிறார்கள். அடிப்படைக் கல்வி( primary education)  பயிலும்போதே, குழந்தைப் பருவ இயல்பைத் தொலைத்து 'முதியவராகி' விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் தமது இயல்பை ஒட்டி 'சுதந்திரமாக' மேற்கொள்ளும் பரிசோதனைகளே (விரும்பியவாறு பாடுதல், ஆடுதல், உடைத்தல், கிறுக்குதல், etc) , படைப்பாற்றல்/சுய உருவாக்கல் போன்றவற்றின் ஊற்றுக்கண்கள் என்பதை ஆய்வுகள் தெளிவுபடுத்தியுள்ளன.

  1. “When we attempt to foster children’s creativity, including in the visual arts, we need to observe the principle of freedom, which is generally an essential condition for all kinds of creativity. This means that the creative activities of children cannot be compulsory or forced and must arise only out of their own interests.http://lchc.ucsd.edu/mca/Mail/xmcamail.2008_03.dir/att-0189/Vygotsky__Imag___Creat_in_Childhood.pdf

  1. “If you look at the mavericks of science and technology you will see a pattern of creative outlets being a key to their childhood. Creative activity in childhood rewires your brain to think out-of-the-box according to the researchers.” http://www.psychologytoday.com/blog/the-athletes-way/201310/childhood-creativity-leads-innovation-in-adulthood
மதிப்பெண்கள் பெறுவதற்காக, அல்லது தாம் விரும்பும் கலை/விளையாட்டில் முதலிடம் பெற வேண்டும் என்பதற்காக, குழந்தைகளை அடித்து, மிரட்டி, கதற கதற அழவைத்து அதன் 'இயல்பை' முறிக்கும் முறையே தமிழ்நாட்டில் குழந்தை வளர்ப்பாக வளர்ந்து வருகிறது.

உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழி கல்வியற்ற ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் 1970களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறு  பயிலும் குழந்தைகள், மேல்நிலைக் கல்வியைத் தாண்டும்போது, வீட்டுக்குப் பழக்கப்பட்ட செல்லப் பிராணிகளாகவோ (domesticated animals ) அல்லது யாருக்கும் அடங்காத முரடர்களாகவோ (unruly disobedient thugs ) வெளிப்படுகிறார்கள். இரண்டு வகையினருமே படைப்பாற்றல்/சுய உருவாக்கல்/நல்லொழுக்க மதிப்பீடுகள் ரீதியில் பாதிக்கப்பட்ட மாணவர்களாகவே சமூகத்தில் வாலிபர்களாக வளர்கிறார்கள். 

செல்லப் பிராணிகள் போன்று வளர்ந்த குழந்தைகள், பெற்றோர்களிடம் காட்டிய எஜமான அன்பை, திருமண‌மான பின், ஆண் தன் மனைவியிடமும், பெண் தன் கணவனிடமும் காட்ட, பெற்றோர்கள் மனைமுடைந்து வாழும் நிலையும் வளர்ந்து வருகிறது. முதுகெலும்பு முறிந்தவர்கள் சுயமாக துணையின்றி நடமாட முடியாது. அது போல  ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்’  காரணமாக, அம்முறையில் குழந்தைகள் வளர்ந்து பெரியவரான பின்னும், மனரீதியில் முதுகெலும்ப‌ற்றவர்களாக,  'எஜமான' துணையுடன் வாழ வேண்டியவர்கள் ஆகி விடுகிறர்கள். தாம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடுகள்/ஆய்வுமுடிவுகளை 'எஜமான'ராகக் கருதி, மனரீதியில் முதுகெலும்பற்றவர்களாக, ஒரு போலியான பாதுகாப்புக் கவசத்துடன் 'அடிமைகளாக', வாழ்பவர்கள், அவற்றிற்கு எதிராக வெளிப்படும் சான்றுகளை வெறுத்து ஒதுக்கும், பகையாகக் கருதும் தவறுகளுக்கும்,அதன் தொடர்விளைவான தமிழ்நாட்டில் 'பொது வாழ்வு வியாபார' வளர்ச்சிக்கும், அந்த 'இயல்முறி  வாழ்க்கை நோயே' காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளின் வளர்ச்சிக்கும், அந்த நோயின் வளர்ச்சிக்கும், எந்த சமூக செயல்நுட்ப(social mechanism) அடிப்படையில் தொடர்பு உள்ளது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

விளையாட்டுப் பள்ளி (play school) முதல் தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை 'மதிப்பெண் ரோபோக்களாக' கட்டாயப்படுத்தி, அதன் விளைவாக அதிக அழுத்தமும், எரிச்சலும் அகவயப் பட்ட பெண்களாக மாறி , தங்கள் சொந்த மகிழ்ச்சியையும் இழந்து 'கனவுக்காக'வாழ்கிறார்கள். மிக ஆசையுடன் 'செல்லப் பிராணி' போல் வளர்த்த குழந்தைகள் வாலிப வயதில் தாய்மார்களின் கனவுகள் சிதையும் அளவுக்கு, பாரம்பரிய ஒழுக்கமின்றி திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்தில் வாழ்வது,  அல்லது திருமணத்திற்குப் பின் 'எஜமான' இடத்திலிருந்து பெற்றோர்களை அகற்றுவது,  அவர்களுக்கு அதிர்ச்சியாகிறது. அதனால் மனநோய் மருத்துவரின் ஆலோசனை தேவைப்படும் அளவுக்கு பல தாய்மார்கள் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி தேர்வுகளில் மதிப்பெண்கள் குறைந்ததற்காக மாணவர்களும் பெற்றோர்களும் தற்கொலை  செய்து கொள்ளும் போக்கும் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ளது.

ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது. அதிலும் அவர்களின் இயல்புக்கேற்ற துறையை அடையாளம் கண்டு, அதற்கான திறமைகளை வளர்த்து சாதிப்பதும் தடை படுகிறது. பெற்றோர்களின் கனவுகளுக்காக அவர்களின் வாழ்வு ஒரு வகையிலான மனித ரோபோக்களாக அமைந்து விடுகிறது. 

மேலே விளக்கியுள்ள ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்’ காரணமாக, பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகள் முக்கியத்துவம் இழந்த சூழலில், வளர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆவது கடந்த 40 வருடங்களில் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும்.

இந்தியா உள்ளிட்டு காலனி ஆட்சியிலிருந்து, விடுதலையான நாட்டில் உள்ள மக்கள் 'காலனிய மன நோயில் சிக்கியுள்ளதையும், ஆனால் தமிழ்நாட்டில் கீழ்வரும் போக்கில் ,கூடுதலாக, இயல்முறி  வாழ்க்கை நோயாகிய, திராவிட மனநோயில் சிக்கியுள்ளதையும் ஏற்கனவே பார்த்தோம்.('காலனிய' மனநோயாளிகளும்,'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

“உலகிலும் சரி, இந்தியாவிலும் சரி, பொதுவாக ஒரே தாய்மொழி பேசும் இருவர் சந்தித்துக் கொண்டால், தங்கள் தாய்மொழியில் தான் உரையாடுகின்றனர்.அதில் தமிழர்கள் மட்டுமே, அதிலும் அதிகம் படித்தவர்கள், பெரும்பாலும் தமிழில் பேசுவதைத் தவிர்த்து ஆங்கிலத்தில் உரையாடுகின்றனர்.அவர்களை 'ஏக்கமுடன்' பார்த்து,  மற்ற தமிழர்களும், அது போல நாமும் பேச வேண்டும் என்ற 'இலட்சியத்துடன்'(?) வாழ்கின்றனர். அத்தகையோரில் குடிப் பழக்கம் உடையவர்கள்,  மது போதையில் தப்பும் தவறுமாக தங்களுக்குத் தெரிந்த ஆங்கில வார்த்தைகளில் பேசி, அந்த ஏக்கத்தைத் தீர்த்துக் கொள்கிறார்கள்.

ஒருவரைப் பற்றி மிகவும் இழிவாக நாம் கருதி, அந்த நபரின் இழிவான செயல்பாடுகள் பற்றி நமது குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் 'விலாவாரியாக' விவாதித்து விட்டு, அவர் 'செல்வமும்,செல்வாக்கும் மிக்க நபர்' என்ற ஒரே காரணத்தால், அவரிடம் நாய் போல் குழைந்தும், காலில் விழுந்தும் 'காரியங்கள்' சாதித்து தமது செல்வத்தை, செல்வாக்கைப் பெருக்குவது சரியா? அப்படிப்பட்ட‌ நபர்கள் அதிகரித்து வரும் நாடாக தமிழ்நாடு உள்ளது. அப்படி வாழ்வதே 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' என்று அவர்கள் குடும்பம், நட்பு உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில் அந்த நோயைத் தீவிரமாக பரப்பியும் வருகிறார்கள்.”

அறிவின்(knowledge) வீழ்ச்சிக்கும்,'குறுக்குவழி பணம் ஈட்டும்' திறமைகளின் '(Skills) அதிவேக' வளர்ச்சிக்கும் வழி வகுத்த (’ தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும், சமூக நோய்கள் வளர்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )  இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்களைக் காப்பாற்ற நினைப்பவர்கள் எல்லாம், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைப் பின் தள்ளி,ஓரணியில் திரண்டு செயல்பட்டால் தான்,குழந்தைகள், தாய்மார்கள்,பெரியவர்கள் உள்ளிட்ட தமிழர்களைக் காப்பாற்ற முடியும்.

குறிப்பு: பல‌ வருடங்களுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில், சிங்கப்பூரில் மிகவும் வயதான தமிழ்ப் பாட்டிகள், குழந்தைகளைப் போல, உற்சாகமாக மேடையில் நடனமாடியதைக் கண்டது, மறக்க முடியாத மகிழ்ச்சியாக அமைந்தது.

Sunday, January 25, 2015


'ஆர்.எஸ்.எஸ்' மீது தயாநிதி மாறன் குற்றம் சுமத்தியதானது;

 திராவிட சந்தர்ப்பவாத’த்தின் உச்சமா?



சென்னையில் சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பாக,  கடந்த ஆட்சியில் சி.பி.ஐ வழக்கு விசாரணையைத் துவங்கி,  விசாரணை மந்தமாக முன்னேறியது.( குறிப்பு கீழே) பின் உச்ச நீதிமன்ற தலையீட்டில் விசாரணை முன்னேறி, தற்போது தயாநிதி மாறானின் உதவியாளரையும், சன் தொலைக்காட்சி ஊழியர் இருவரையும் கைது செய்துள்ளது.அது தொடர்பாக, தயாநிதி மாறன் தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரை திருப்தி செய்வதற்காக சி.பி.அய் செயல்படுவதாகக் குற்ற‌ம் சாட்டியுள்ளார். (Mr Maran, who met his DMK party chief M Karunanidhi today, accused the investigating agency of framing him and trying to please the RSS or Rashtriya Swayamsevak Sangh, the ideological mentor of the ruling BJP. "I am being singled out. The CBI is fixing me to please an RSS ideologue from Tamil Nadu," Mr Maran alleged. “ http://www.ndtv.com/article/india/cbi-trying-to-fix-me-says-former-telecom-minister-dayanidhi-maran-652138)


மேலேக் குறிப்பிட்டுள்ள சான்றின்படி, மோடி ஆட்சி காலத்திலும், மன்மோகன் ஆட்சி காலத்திலும் மேலேக் குறிப்பிட்ட வழக்கு தொடர்பாக 'ஒரே போக்கில்' செயல்பட்டு வந்த சி.பி.ஐயானது, தமிழ்நாட்டில் உள்ள ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாள‌ரின் அழுத்ததால், அந்த போக்கிலிருந்து மாறி, மேலேக் குறிப்பிட்ட கைதுகளில் ஈடுபட்டுள்ளதா? தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஆர்.எஸ்.எஸ் காரர்களுக்கு இந்த வழக்கில் அக்கறை இல்லையா? இல்லையென்றால், ஏன் இல்லை? தமிழ்நாட்டு ஆர்.எஸ்.எஸிலும் தி.மு.க சார்பாளர்கள் இருக்கிறார்களா? என்ற கேள்விகள் எழுவது தவறா?

கலைஞர் கருணாநிதி ஆட்சிக் கலைப்பு உள்ளிட்டு, என்னென்ன‌ 'சிக்கல்களுக்குள்ளாகும்' போதெல்லாம், பார்ப்பன சூழ்ச்சி என்று,  எப்போதெல்லாம் கருத்து வெளிப்படுத்தியுள்ளார் என்பது ஆய்விற்குரியதாகும். உதாரணமாக ஒரு சான்று கீழே;

“நக்கீரன்” போன்ற பத்திரிகைகள் நம்முடைய இயக்கத் தலைவர்களின்பால் பரிவு கொண்ட ஏடுகள் என்று வெளியிலே சொல்லிக் கொண்டாலும், உள்ளூர அவர்களுக்கு இருக்கின்ற உணர்வினை வெளிக்காட்டிச் செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். இதில் வேதனையான வேடிக்கை என்னவென்றால், இந்தப் பிரச்சினை பேசப்பட்ட போது, இதில் துளியும் சம்மந்தம் இல்லாத என் துணைவியார் ராஜாத்தி அம்மையார் பற்றியும், என் மகள் கனிமொழியைப் பற்றியும் எழுதியிருப்பது வேதனை அளிக்கக் கூடியது. என் செய்வது?   இருவரும் பார்ப்பன சாதியிலே பிறந்த பெண்களாக இருந்திருந்தால், தங்கள் மீது முன்போலப் பயங்கர வழக்குகள் பாயுமே என்ற பயம் இருந்திருக்கும்.  இராஜாத்தி அம்மாளும், கனிமொழியும், நானும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆயிற்றே;” http://rssairam.blogspot.in/2012/11/blog-post_2.html

1944இல் திராவிடர் கழகம் உருவாகி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் தடம்புரண்டு, உணர்வுபூர்வ போக்கில் சிக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டாலும், பெரியாரின் பிராமண எதிர்ப்புக்கும், கலைஞர் கருணாநிதியின் பிராமண எதிர்ப்புக்கும் பண்பு ரீதியில் வேறுபாடு உண்டு. ராஜாஜி உள்ளிட்டு எந்த பிராமணரையும் தனது தனிப்பட்ட பிரச்சினைக்காக, தனது கொள்கை ரீதியிலான பிராமண எதிர்ப்பைப் பெரியார் பயன்படுத்தவில்லை.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்த்திற்கு 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ப்யன்படும் போக்கானது செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது' எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.அந்த வேறுபாடு மறைந்து, தனிநபரின் சுயநலத்திற்கும், தமிழ்வழி வீழ்ச்சிக்கும்,கனிவளங்கள் சூறையாடப்படும் ஊழல் கோரப்பசிக்கும், 'பார்ப்பன எதிர்ப்பு, ஆர்.எஸ்.எஸ் எதிர்ப்பு' ஆனவை, 'தமிழ் இன உணர்வு' என்ற போர்வையில் பயன்படும் போக்கானது, செல்வாக்கு பெற்றதற்கு, அந்த 'தடம் புரண்டதானது', எவ்வளவு பங்களிப்பு வழங்கியது என்பதும் ஆய்விற்குறியதாகும்.

“ பிராமணர்களின் அதிக்கத்தை எதிர்த்த பெரியார் , தமது பிராமண நண்பர்களின் தோட்டங்களிலேயே தமது கட்சியின் பயிற்சி வகுப்புகள் நடத்தியிருக்கிறார்.பெரியாரும் ராஜாஜியும்; "இருவரும் சேர்ந்து முன்போல ஒத்துழைக்க முடியுமா என்கின்ற விஷயமாகவே பேசிப் பேசி ஒத்துழைக்கச் சந்தர்ப்பம் ஏற்படக்கூடும் என்கின்ற நம்பிக்கை மீதே ஜெயிலில் பிரிந்தோம்." என்று பெரியார் தெரிவித்த கருத்து எதை உணர்த்துகிறது? (‘எனது நண்பர் ராஜாஜி ‘:- குற்றாலத்தில் ராஜாஜியைச் சந்தித்ததுகுறித்து தந்தை பெரியார் 1936 ஜூலை 14-ம் தேதி ‘குடிஅரசு’ இதழில் எழுதியதிலிருந்து… தொகுப்பு: சு. ஒளிச்செங்கோ, http://tamil.thehindu.com/opinion/columns/)

பெரியாரும் ராஜாஜியும் நட்பாக இருந்தது போல,தமிழ்நாட்டில் ஆங்காங்கே உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டர்களுக்கும் தனிப்பட்ட முறையில், நேர்மையாகவும் மிகுந்த ஆச்சாரங்களுடன் வாழ்ந்த பிராமணர்கள், நண்பர்களாயிருந்தார்கள். ஒரு பிராமணப் பெண்ணை மணந்து, அசைவ உணவைத் தவிர்த்து,உண்மையான கொள்கைப்பற்றுடன் நேர்மையாக வாழ்ந்த பெரியார் தொண்டரையும் நான் சந்தித்திருக்கிறேன்.”
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none.html

அண்ணா உயிரோடு இருந்தது வரையிலும், கலைஞர் கருணாநிதி தாம் சந்தித்த சிக்கல்களுக்கு பிராமண எதிர்ப்பைப் பயன்படுத்தியதற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக, அதுவரை, ராஜாஜியுடன் கலைஞர் கருணாநிதிக்கு இருந்த 'உறவு'(?), அவரின் அரசியல் முன்னேற்றத்திற்கு, தமிழக முதல்வராகும் வரை உதவியது. எனவே தமது சொந்த சிக்கல் தொடர்பாக, 'பிராமண எதிர்ப்பை'க் கேடயமாகப் பயன்படுத்தும் சந்தர்ப்பவாதப் போக்கானது, எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்பது ஆய்விற்குறியதாகும்.

தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி 1969இல் முதல்முறையாக தமிழக முதல்வராக பதவி ஏற்றார்.அன்று தமிழ்வழிக் கல்வியின் நிலை, காவிரி,கச்சத்தீவு, முல்லைப் பெரியாறு போன்ற சிக்கல்கள் முளை விடாத நிலை, அரசர்கள் ஆட்சி, அதன் பின் காலனி ஆட்சி, இந்திய விடுதலைக்குப்பின் 1967 வரை காங்கிரஸ் ஆட்சி வரை தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், காடுகள் இருந்த நிலை, மலைகளும்,ஆற்று மணல் உள்ளிட்ட கனிம‌ வளங்களும் இருந்த நிலை ஆகியவற்றைப் பற்றி இன்று சுமார் 60 வயதுக்கும் மேல் வாழ்பவர்களுக்கு தெரியும். அவர்களில் தி.மு.க உள்ளிட்ட திராவிடக்கட்சிகள், பெரியார் கட்சிகள், எண்ணிக்கையில் அதிகரித்து வரும் தமிழ்க் குழுக்கள் ஆகியவற்றின் ஆதரவாளர்களும் அடக்கம்.

இன்று தமிழ்வழி மரணப் பயணத்தில் இருப்பதும் 
(http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_3.html) ;’ தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (5); தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள்?’) ஊழல் பேராசைப் பெரும்பசிக்கு தமிழ்நாட்டின் கனிவளங்கள் சூறையாடப்பட்டுள்ளதும் வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஒரு சமூகத்தில் அரசியல் மூலம், நாட்டின் முக்கிய பொறுப்பில் அமர்பவர்களின் பங்களிப்பானது, எவ்வாறு அந்த நாட்டை வளர்ச்சிப் பாதையில் அல்லது வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க வைக்கும் என்பது தொடர்பான சமூகவியல் செயல்நுட்பத்தை ஏற்கனவே பார்த்தோம்.

“ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ,சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.

உதாரணமாக 1967‍இல் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற அண்ணாதுரை, அதற்கான ஆளுமை தனக்கில்லை என்பதை அறிந்து, தான் தனது புற்று நோயால் விரைவில் மரணமடைய விருபுவதாக, தன்னைச் சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் ராமமூர்த்தியிடம் தெரிவித்ததை, அவர் தனது நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.

அவருக்குப் பின்னர், முதல்வரான கலைஞர் கருணாநிதி, பெரியார்,அண்ணாவின் பிறந்த நாட்களை விட, தனது பிறந்த நாளுக்கு, அரசு செல்வாக்கினைப் பயன்படுத்தி, ‘அதீத முக்கியத்துவம்’ கொடுத்தது, தனது நலன், தனது குடும்ப நலன்களையே பிரதானமாகக் கொண்டு ஆட்சி செய்தது போன்ற திசையில் பயணித்தார். அந்த திசையில் அவர் இன்றுவரை'வெற்றிகரமாக', தி.மு.க தலைவராக பயணித்து வருவதற்காக, அவர் கட்சிக்குள்ளும், தமது சமூக வட்டத்திலும், பயன்படுத்திய செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

“தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.”
(http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அவ்வாறு சமூகம் சீரழிவுப் பாதையில் பயணிக்கும் போது, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான ஓட்டுநர்களாக தேவைப்படும்,  'தகுதி, திறமைகள்' பற்றி ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html)” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

1944க்கு முன் பிராமணர்களும் இருந்த நீதிக்கட்சியிலும், காங்கிரஸ் கட்சியிலும் இருந்த படித்தவர்களும், பணக்காரர்களும் உண்மையான சமூகப்பற்றுடன் அடிமட்டத்தில் இருந்தவர்களை உயர்த்த, மேற்கொண்ட முயற்சிகள் வெளிச்சத்திற்கு வர வேண்டிய நேரம் வந்து விட்டது.1944இல் திராவிடர் கழகம் உருவாகி, ஆக்கபூர்வ உணர்வுகளை,'பிராமண எதிர்ப்பு' என்ற பெயரில் 'கோபம்,வெறுப்பு,பழி வாங்கல்' போன்ற அழிவுபூர்வ உணர்வுகளில் 'சமூக நீதி' முயற்சிகளை சிக்க வைத்ததே, இன்று தமிழையும், தமிழ்நாட்டின் கனிவளங்கையும் ஊழல் கோரப்பசியில் சூறையாடுபவர்களின் கேடயமாக 'பிராமண, ஆர்.எஸ்,எஸ் எதிர்ப்பு' பயன்படும் விளைவிற்கு வழி வகுத்ததா?1944க்கு முன் புலமையாளர்கள் எல்லாம், 'தலித்' மற்றும் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும்,அறிவை மதித்து நண்பர்களாகிய பழகிய போக்கு மறைந்து, இன்று படித்த 'முற்போக்குகள்' கூட சாதிப்பார்வையில் சிக்கி வாழும் சீரழிவிற்கும் அது வழி வகுத்ததா? மேலேக் குறிப்பிட்ட 'வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்'  என்ற நோயின் பிடியில், தமிழ்நாடு சிக்கியதற்கும் அது காரணமா?தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து,குற்ற உணர்வேயின்றி தமிழ் ஆதரவாளர்களாக வலம் வரும் போக்கிற்கும் அது காரணமா? என்பவையெல்லாம்  ஆய்விற்குரியதாகும்.

மத்திய அரசில் முக்கிய பொறுப்பில் சீனியர் காபினெட் அமைச்சராக  தயாநிதி மாறன் இருந்து, பின்னர் சிக்கிய வழக்குகளின் தோற்றமும், அந்த வழக்கு விசாரணையில் என்னென்ன குறைபாடுகள் எவ்வாறு நடந்தன என்பதும், எந்தக் கட்டத்தில் ஏன் உச்சநீதிமன்றம் தலையிட்டது என்பதும், மன்மோகன் சிங் ஆட்சியில் அந்த வழக்குகள் பயணித்த போக்கிலேயே, மோடி ஆட்சியில் தொடர்ந்து, பின் ஏன் சூடு பிடித்தது என்பதும் தொடர்பான உண்மைகளை இனியும் இருட்டில் சிறை வைக்க முடியாது என்பது என் கருத்து. 

திமு.க தலைவர் கருணநிதியைச் சந்தித்த பின், அவரைப் போலவே தனது சிக்கலுக்கு 'ஆர்.எஸ்.எஸ்' மீது தயாநிதி மாறன் குற்றம் சுமத்தியதானது, ‘திராவிடசந்தர்ப்பவாத’த்தின் உச்சமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு :
“ 'இந்த தவறான இணைப்பால், தொலைத்தொடர்புத் துறைக்கு பல கோடி ரூபாய் வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது' என, ஊழியர் சம்மேளனம் சார்பில் நான் குரல் எழுப்பியதும், பிரச்னை பூதாகாரமாக வெளியே வந்தது. ஆனாலும், இந்த பிரச்னையின் ஆதாரங்களாக இருக்கும் ஆவணங்களை, தொலைத்தொடர்புத் துறை அதிகாரிகள் அழித்து விட்டனர். பொது மேலாளராக இருந்து செயல்பட்ட செல்வம், ஓய்வு பெற்று சென்ற பின், ஒரு நாள் தொலைத்தொடர்புத் துறை அலுவலகத்துக்கு வந்து, நடந்த முறைகேட்டைக் காட்டிக் கொடுக்கும் ஆவணங்களைத் தேடித் தேடி அழித்திருக்கிறார். இந்தத் தகவல்கள் கிடைத்ததும், அது தொடர்பாகவும் நான், தொலைத்தொடர்புத் துறை, தலைமையகத்துக்கு புகார் செய்தேன். பின்னாளில், சி.பி.ஐ., அதிகாரிகள், இந்த பிரச்னை தொடர்பாக, என்னை அழைத்து விசாரித்த போது, இது குறித்து கூறினேன்; விளக்கமான புகார் கொடுத்தேன்; வாக்குமூலம் பதிவு செய்தேன். இந்த வழக்கில், நானும் ஒரு முக்கிய சாட்சி.” தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர் சம்மேளனத்தின் மாநிலச் செயலர் சி.கே.மதிவாணன்; http://www.dinamalar.com/news_detail.asp?id=1168382

Thursday, January 22, 2015


தொல்காப்பியம் மூலம் புதிய வேலை வாய்ப்பு

கணினி இசை அமைப்பாளர்(Computer Music Composer)




தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில் நான் மேற்கொண்ட ஆய்வுகளானது, இசைத் தகவல் தொழில் நுட்பத் துறையில் (Music Information technology) புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பது நானே எதிர்பார்த்திராத‌ அதிசயம் ஆகும். அவற்றில் புதிய வேலை வாய்ப்புக்கான ஒரு துறை பற்றி இங்கு பதிவு செய்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

ஒரு பாடலில் ஒலிக்கும் எழுத்தின் ஒலிக்கும்,இசைக்கும் உள்ள தொடர்பு பற்றிய இலக்கணத்தை நான் கண்டுபிடித்துள்ளேன். 

அதே போல ஆபிரகாம் பண்டிதரின் அரிய ஆய்வில் வெளிப்பட்டுள்ள 'ராக ஸ்புட முறை'யினை(Raga Sputa Method)  ஆய்வு செய்து, அதிலுள்ள குறைகளை அடையாளம் கண்டு, சரி செய்து, கணினி வழி இசை அமைப்பு மென்பொருள் உருவாக்கும் ஆய்வுத் திட்டத்திலும் ஈடுபட்டுள்ளேன்.

மேலேக் குறிப்பிட்ட ஆய்வுகளின் அடிப்படையில், இரண்டு புகழ் பெற்ற பொறியியல் கல்லூரிகளில் 'இசைத் தகவல் தொழில் நுட்பம்' (Music Information Technology ‘ (common elective to all discipline B.tech students) அறிமுகம் செய்து,  ஆய்வுகளிலும் ஈடுபட்டு வருகிறேன். அதில் வெளிப்பட்ட, என்னை வியப்பில் ஆழ்த்திய, முன்னேற்றம் வருமாறு;

இசை படித்திராத பொறியியல் மாணவர்களுக்கு, புதிய அணுகுமுறையில், ஒலியிலிருந்து துவங்கி, அது எவ்வாறு இசையாக மாறுகிறது என்று விளக்கினேன். அதன்பின் அவர்களால் எளிதில் மேற்கத்திய இசையின் மேஜர், மைனர், ஸ்கேல்களையும்,( Major & Minor scales)  கர்நாடக இசையின் மேளகர்த்த ராக முறையினையும் புரிந்து, மேற்கத்திய இசைக் குறியீட்டில் (score view- sheet music) உள்ள பாடலை , கர்நாடக இசைக் குறியிட்டு முறையில்.(Karnatic Notation) மாற்றவும், கர்நாடக இசைக் குறியீட்டிலுள்ள பாடலை மேற்கத்திய இசைக் குறியிட்டிலும் மாற்ற முடிந்தது. கணினி ‍துணையுடன், அவற்றை கணினியில் இசையாக ஒலிக்க வைக்கவும் முடிந்தது.

இதுவரை இன்றைய இசை அமைப்பாளர்கள் பயன்படுத்தாத எண்ணற்ற,  கர்நாடக இசை, மேற்கத்திய இசை உள்ளிட்டு, உலகில் உள்ள பல வகை இசைகள், புத்தகங்களில் இசைக் குறியிட்டு(Music Notation)  முறைகளில் உள்ளன. இதுவரை காதால் கேட்டிராத அப்பாடல்களை, கணினி மூலம் ஒலிக்க வைக்க என்னிடம் பயிற்சி பெற்ற மாணவர்களால் முடியும் என்பது எனக்கே வியப்பைத் தந்தது. எனது பயிற்சியின் மூலம் திரை இசை அமைப்பாளர்கள் உருவாக வாய்ப்புள்ளதை, அடுத்து பார்ப்போம்.

இசைக் கருவிகளின்றி கணினி மூலம் (1996 சமயம்) நான் உருவாக்கிய இசைக்குப் பொருத்தமான பாடல் வரிகளுடன், 2011இல் (இசை படித்திராத) ஒரு கல்லூரி மாணவருக்கு பயிற்சி கொடுத்து, அவர் படித்த‌  கல்லூரி  நிகழ்ச்சியில் பாட வைத்தேன். பின்னணி இசை கணினியிலிருந்து 'பெருக்கி'  (amplifier) மூலம் ஒலிக்க, 'மைக்' முன் அந்த மாணவர் பாடினார்.பாட்டு முடிந்தவுடன், அந்நிகழ்ச்சியின் சிறப்பு பேச்சாளர்-'பசங்க'  திரைப்பட இயக்குநர்-   பாண்டிராஜ் தாமாகவே மேடையில் ஏறி, மைக்கைப் பிடித்து, 'இந்த பாடல், இசைக்கருவிகளுடன் ரெக்கார்டிங் தியேட்டரில் ஒலிப்பதிவு செய்து கேட்டால், எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியும். 'சுப்பிரமணியபுரம்' படத்தில் 'ஹிட்' ஆன 'கண்கள் இர‌ண்டால்' என்ற பாட்டு அளவுக்கு 'ஹிட்' ஆகும். எனது அடுத்த படத்திற்கு இசை அமைப்பாளரை முடிவு செய்து விட்டேன். எனவே எனது அதற்கடுத்த படத்திற்கு,  என்னை இசை அமைப்பாளர்" என்று அறிவிக்க ஒரே கைதட்டல். நிக‌ழ்ச்சி முடிந்ததும், அவர் வாய்ப்புக்கு நன்றி தெரிவித்து , ‘திரைத் துறை எனக்கு சரி வராது, எனது இசை ஆய்வுகளே எனக்குப் போதும்' என்று சொல்லி, அதற்கு முற்றுப் புள்ளி வைத்தேன்.

Internet, mobiles, tablets etc பலவகையான  digital music gadgets   அறிமுகத்துடன் இசைக் கேட்போர் எண்ணிக்கையும், அவர்கள் உலக அளவிலான வெவ்வேறு இசைகளைக்  கேட்பதும் 'அதி வேகத்தில்' அதிகரிக்கிறது. அதற்கேற்ற வகையில் புதிய இசைகள் உருவாக்க இயலாமல், 'பழைய' இசைகளை 'புதிய வடிவில்' வெளியிடுவது அதிகரித்து வருகிறது. ( http://www.newindianexpress.com/magazine/Making-Music/2014/07/13/article2324072.ece )

இந்தியாவில் இந்தி, தமிழ் உள்ளிட்டு திரைப்படப்பாடல்களில் 'ஹிட்'(Hit) பாடல்கள் அபூர்வமாகி வரும் போக்கு எனது கவனத்தை ஈர்த்துள்ளது. நான் நுழைய விரும்பாத திரை இசைத் துறையில், ஆர்வமும், உழைப்பும், அடிப்படைக் கணினி அறிவும், உள்ள இளைஞர்களைத் தேர்ந்தெடுத்து, கணினி இசைப் பயிற்சி கொடுத்து, திரை இசைத் துறையில் அறிமுகப்படுத்தவும் வாய்ப்புள்ளது. எனது ஆய்வுத் திட்டங்களின் ஊடே, அதற்கும் நேரம் ஒதுக்குவது பற்றியும் திட்டமிட்டு வருகிறேன். அது செயல் வடிவம் பெற்ற பின், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவின் பெருநகரங்களில் கணினி இசைப் பயிற்சி மையங்களைத் தொடங்குவார்கள். இன்னொரு பிரிவினர், திரையில் பிரபலமான இசை அமைப்பாளர்களிடம் இதுவரை பயனில் வராத இசைகளைக் கணினி மூலம் தேடித் தரும் உதவி இசை அமைப்பாளர்களாக, திரை இசைத் துறையில் அடியெடுத்து வைப்பார்கள்.

அதிகபட்சம் 30 நாட்கள் (தினமும் ஒன்றரை மணி நேரம் மடிக் கணினியுடன்) என்னிடம் பயிற்சி பெற்றவர்களால், மேலேக் குறிப்பிட்ட புத்தகங்களில் உள்ள இசைகளை கணினி மூலம் இசையாக வெளிப்படுத்தவும், அவரவருக்குள்ள படைப்பாற்றலுக்கு ஏற்ற வகையில் புதிய இசைகளை உருவாக்கவும் முடியும்.

என்னிடம் பயிற்சி பெற்றவர்கள் முதலில் இந்திய அளவிலும், பின்னர் உலக அளவிலும் இசை அமைப்பாளர்களாக முக்கிய இடம் பெற வேண்டும். அவர்களுக்குத் தொடர்ந்து 'பின்பலமாக' நான் செயல்பட்டு, மின்வழி இசை ஆலோசனை (Online Music Composing Consultancy) என்ற புதிய தொழில் வியாபாரத் துறையை உலகிற்கு அறிமுகப்படுத்தவும் எண்ணியுள்ளேன்.

எனது முயற்சிகளில் நான் பெறும் வெற்றிகள் காரணமாக, உலகில் இசைத் தகவல் தொழில் நுட்பத்தையும்(Music Information technology) , கணினி இசை மொழியியலையும் (Computational Musical Linguistics)   பயன்படுத்தி, சந்தைப்படுத்தக் கூடிய பொருட்களை உருவாக்க, பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி, ஆய்வுப் படையெடுப்பு தொடங்கும் காலம் அதிக தொலைவில் இல்லை.