Wednesday, November 25, 2015


'அந்த பட்டியலில்' அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ'

           தமிழின் மீட்சிக்கான விளக்கம் வெளிவருமா?

    வைரமுத்துவின் திரைஇசைப் பாடல்களில் சுருதி மோதல்?


"பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா.அ.மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார்." என்பதையும்,
"எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால். பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்;அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன்." என்பதையும்,
கீழ்வரும் பதிவிலும், முகநூலிலும் வெளியிட்டேன்.

எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் திரு.பொன்.முருகானந்தம், முகநூல் பதிவில், வெளியிட்ட கீழ்வரும் தகவல், எனது கவனத்தை ஈர்த்தது.

"கீழ்க்கண்ட தகவல் அ.மார்க்ஸ் வலைத்தளத்தில் (amarx.org)  படித்தது . 

 ”இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்றெல்லாம் காவடி தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்."

மேற்குறிப்பிட்ட 'மீடியா குவியத்தில்' வாழும் அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ' ஆகியோர், 'சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்க'ளா? இல்லையா? என்று எனக்கு தெரிய வாய்ப்பில்லை; மூவருடனுமே எனக்கு எந்த தொடர்பும் இன்றி வாழ்வதால்.

ஆனால் மூவருமே மேற்சொன்ன கேள்விக்கு, தமது மனசாட்சிக்குட்ப்பட்டு, விடை காண உதவும், கீழ்வரும் தகவலை குறிப்பிட விழைகிறேன்.

இன்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் யாப்பிலக்கணமானது,தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் வரும், 'இசை', 'நிறுத்தல்' உள்ளிட்ட பல இசையியல் தொடர்பான சொற்களை, தவறுதலாக புரிந்து கொண்டு, தவறுதலாக கற்பிக்கப்பட்டுகிறது என்பதை,  கடந்த சுமார் 20 வருடங்களாக, 'கணையாழி' உள்ளிட்ட இலக்கிய இதழ்கள், ஆய்வு இதழ்கள்/மலர்கள், இணைய ஆய்வு இதழ்கள் (http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13 ),  தமிழிலும் ('தமிழ் இசையியல்‍ புதிய கண்டுபிடிப்புகள்') , ஆங்கிலத்திலும் ('Ancient Music Treasures- Exploration for New Music') நூல்கள் வெளியிட்டும், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை (வி.ஜெயதேவன், வீ.அரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் முன்னிலையில்) உள்ளிட்டு  ( தமிழ்நாடு, சிங்கப்பூர்) பல ஆய்வரங்கங்களிலும் விளக்கியுள்ளேன். இவை பற்றி தெரிந்த தமிழ் அறிஞர்கள் பட்டியலையும் வெளியிட்டு, யாப்பிலக்கணம் தொடர்பான பாடங்களில் உள்ள குறைகளை நீக்க, தமதளவில் அவர்கள் என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்? மேற்கொண்டும் வெற்றி பெறவில்லையென்றால், அதற்கு 'திராவிட' அரசியலில் தமிழ் சிறையுண்டது காரணமாகுமா? அல்லது தமிழ் வள்ர்ச்சியை விட, தங்களின் செல்வம்/செல்வாக்கு வளர்ச்சியையே குறிக்கோளாக கொண்டு அவர்கள் வாழ்கிறார்களா? என்ற கேள்விகளை, கீழ்வரும் பதிவில் எழுப்பியுள்ளேன். 

அந்த பட்டியலில் அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ'(?) ஆகியோரும் இடம் பெற வேண்டியவர்கள் என்பது என் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெற்ற எவரிடமிருந்தும், அல்லது அவர்களது ஆதரவாளர்களிடமிருந்தும் எந்த விளக்கமும் வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. இனிமேலாவது வெளிவந்தால், அது தமிழின் மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு துணை புரியும் என்பதும் எனது கருத்தாகும்.

தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்துடன், கூடவே பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றையும் இழந்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்தில், தமிழ் வேரற்ற 'தமிங்கீலிசர்களின்' நாடாக, தமிழ்நாடு மாறிவரும் போக்கு வெற்றி பெறுமானால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக வாய்ப்புண்டா? என்ற கேள்வியை முந்தைய பதிவில் பார்த்தோம். அவ்வாறு நேர்ந்தால், அதற்கு மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களும் பொறுப்பாக மாட்டார்களா? 

குறிப்பு:
நியுட்டன் ஆராய்ச்சி முடிவுகளில் பல தவறு என்று அவருக்கு பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அது நியுட்டனின் புகழுக்கு பாதிப்பாக கருதப்படாமல், அறிவியல் வளர்ச்சியாக கருதியதால், அறிவியல் வளர்ந்தது.


வைரமுத்துவின் திரை இசை பிரவேசத்திலிருந்து, திரை இசையில் எழுத்தின் ஒலிக்கும், தொடர்புள்ள இசைச்சுரத்திற்கும் சுருதி மோதல் நிகழத் தொடங்கி, கீழ்நோக்கி பயணிக்கிறது என்பது, மேலே குறிப்பிட்டுள்ள யாப்பிலக்கணம் தொடர்புள்ள,  என் ஆய்வு முடிவாகும். http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html  அதை விவாதத்திற்கு உட்படுத்தி, தவறு என்று நிரூபிப்பதையும், சரி என்றால் திருத்திக்கொள்வதையும், தவிர்த்து, புறக்கணிப்பதால், இழப்பு யாருக்கு? திரைப்பட இசைப்பாடல்களுக்கு தானே. அந்த பொதுநலன் பற்றிய அக்கறையின்றி, சுயநல அடிப்படையில், தமிழ் திரை உலகம் பயணிக்கிறதா?

Tuesday, November 17, 2015

தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான சமூக ஆற்றல் விரயத்தைத் தவிர்க்க;

ஓர் எச்சரிக்கை - திருச்சி பெரியார் மையம் தொடர்பாக‌  

 

'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக வாய்ப்புண்டா?


திருச்சி பெரியார் மையத்தில்   இருந்தவர்களில் சிலர், மீண்டும்   அது  போன்  பணிகளை வேறு  பெயரில் தொடங்க  ஆரம்பித்து  இருப்பதும், பழைய  நபர்களை  தொடர்பு  கொண்டு  வருவதும், பற்றிய தகவல் எனக்கு கிடைத்துள்ளதால், எனக்குள்ள சமூக பொறுப்பின் அடிப்படையில், இந்த எச்சரிக்கையை விடுப்பது, எனது சமூக கடமையாகும். 

பெரியார் மையத்தில் செயல்பட்டு, என்னுடன் தொடர்பில் இருப்பவர்கள் எவரும், இது பற்றி எனக்கு தெரிவிக்கவில்லை. 'சமூக கிருமிகளாக' எனது அறிவு, அனுபவ அடிப்படையில், நான் அடையாளம் கண்டு, எனது சமூக வட்டத்திலிருந்து, நான் அகற்றியவர்களில், எவரேனும் அது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், அது எனக்கு தெரிய வாய்ப்பில்லை. எனக்கு அது பற்றி மேலும் தெரிந்து கொள்வதிலும் ஆர்வமில்லை.

எனது சமூக வட்டத்திலிருந்து, நான் அகற்றியவர்களில், எவரேனும் அது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டிருந்தால், அவர்கள், (மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பு மந்தமாக இருப்பதை உணர்ந்து http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/), ஏற்கனவே 'ஒழுக்கக்கேடான' முறைகளில் ஈட்டிய செல்வத்தோடு திருப்தி கொள்ளாமல், சுயநல நோக்கில், பெரியார் ஆதரவாளர்களை ஏமாற்றி, மீண்டும் இன்னொரு வலம் வர முயற்சிக்கிறார்கள்,  என்பதும் என் கருத்தாகும். திருச்சி பெரியார் மையம் மூலம் 'வலுவடைந்து',  பின் திராவிட அரசியல் கொள்ளைக் கூட்டத்திற்கு நெருக்கமாகி, உண்மையாகவும், நேர்மையாகவும் என்னைப் போன்று வாழ்வது 'முட்டாள்த்தனம்' என்று, என் குடும்பமும், சுற்றமுமே கருதும் அளவுக்கும், திருச்சி பெரியார் மையத்தில் இருந்த பலர் 'வியந்து' நெருக்கமாகி, 'லாபத்தில் பங்கு' பெற்று, 'மதிக்கும் அளவுக்கும்', 'அதீத' பணக்காரர் ஆனவர்கள், அந்த 'லாபத்தில் பங்கு' பெற்ற‌, பெரியார் மையத்தார்களின் 'கூட்டு'டன், மீண்டும் இன்னொரு வலம் வர முயற்சிக்கிறார்கள்,  என்பதும் என் கருத்தாகும். இது போன்ற போக்குகளின் 'அதிவேகவளர்ச்சியே', தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தையும், அதனுடனேயே, தமிழ்மொழியின், (சமூக உறவுகளையும் நடைமுறைகளையும் சீர்குலைத்து,) பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றின், மரணப்பயணங்களையும் தூண்டியிருக்கலாம், என்பதும் என் கருத்தாகும். கொள்கை பின்புலத்தில், பொது அரங்கில் வளரும் 'சமூகக்கிருமிகளான' மனிதர்கள் எல்லாம், சமூகத்தில், தமது 'கள்வர் நோயை' எவ்வாறு பரப்புகிறார்கள்? என்ற ஆய்விற்கும் இது அரிய உள்ளீடாகும். ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html )  தமிழ்ச்சொல்லான 'இனம்' ஆனது, ஆங்கிலச் சொல்லான 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரிந்து, பயன்படுத்தப்பட்டதால் (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html), சங்க காலம் முதல், அடையாளம் காணப்பட்ட 'தீ இனம்',  இன்று சமூகத்தில் ஆதிக்கத்துடன்  வலம் வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தனது கொள்கைகளும், நிலைப்பாடுகளும் உள்ளிட்டு எந்த கொள்கையையும் (மார்க்சியம், லெனினியம்,etc) 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உடபடுத்தப்படவில்லையென்றால், அவை 'சமூகப்பிணமாக', 'சமூக அருங்காட்சியகத்திற்கு' போக நேரிடும் என்று எச்சரித்தவர் 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் ஆவார். அவரின் கொள்கைகளையும், அவை தொடர்பான (சுமார் 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த) திருச்சி பெரியார் மைய புத்தகங்களையும் மேற்குறிப்பிட்ட மாற்றங்களுக்கு 'உட்படுத்தாமல்' பயன்படுத்துபவர்களில்,  சுயநல நோக்கில்லாதவர்கள் எல்லாம் 'பெரியார் உணர்ச்சிபூர்வ போதையில்' வாழும் கொள்கைப்பிணங்களா? சுயநல நோக்கில் வாழ்பவர்கள் எல்லாம், 'பெரியார்' கொள்கை பிணம் தின்னும் கழுகுகளா? என்பவை ஆய்விற்குரியவையாகும் http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html

எனக்கு 'சமூக கிருமிகளாக' தெரிந்தவர்கள், வேறு எவருக்கேனும் 'நல்லவர்களாக' தெரிந்து, அவர்களுடன் சேர்ந்து செயல்பட்டால், அதை நான் குறை சொல்லமுடியாது. 

தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதால், தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான சமூக ஆற்றல் அரிதாகி வருவதை கணக்கில் கொண்டு, கீழ்வரும் எச்சரிக்கையை வெளிப்படுத்த வேண்டியது எனது சமூக கடமையாகும். 'அதனை அவரவர் தத்தம் அறிவு, அனுபவ அடிப்படைகளில் பரிசீலித்து ஏற்றுக்கொள்வதும், ஒதுக்கித் தள்ளுவதும், அவரவருக்கு உள்ள உரிமையாகும்' என்ற  புரிதலுடன்,  அந்த எச்சரிக்கையை வெளிப்படுத்துகிறேன். 

தனிநபர் முக்கியத்துவம் இன்றி, சுயவிமர்சனம், விமர்சனம் போன்றவற்றை உயர்த்திப் பிடித்து, நன்கொடையின்றி, சொந்தப் பணத்தில், சொந்த முயற்சியில் செயல்பட்டு,1980களில் தொடங்கி, சுமார் 15 புத்தகங்கள், பலமுறை மறுஅச்சு செய்து செயல்பட்ட திருச்சி பெரியார்மையம்,  1991இல் (நான் முழுவதுமாக இசை ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கியபின்)  செயல் இழந்தது. திருச்சி பெரியார் மையமும் தனிநபராகிய என்னை நம்பியே இயங்கி, நான் ஆய்வுகள் நோக்கி திசை திரும்பியதும், செயலாக்கியை(processor)  இழந்த கணினி போல, செயல் இழந்தது என்பதும், எனக்கே வருத்தமளிக்கும், கண்டுபிடிப்பும், உண்மையுமாகும். அந்த கண்டுபிடிப்பின் மூலமே, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சீரழிவுகளுடன் தொடர்புள்ள, ‘சமூக ஆற்றல் உறிஞ்சி’ செயல்நுட்பத்தினை ( Social Energy Sucking mechanism) கண்டுபிடிக்க முடிந்தது என்பதும், அதன் அரிய‌ பலனாகும்.  (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_77.html)
நமது சமூக வட்டத்தில் உள்ள, 'பெரியார்' முகமூடி 'சமூக ஆற்றல் உறிஞ்சிகள்', எவ்வாறு 'ஒழுக்கக்கேடான' முறைகளில், 'செல்வம், செல்வாக்கு' ஈட்டியுள்ளனர்? என்று ஆராய்ந்து, அந்த சமூக கிருமிகளை அகற்றாவிடில், அவர்களின் செல்வம், செல்வாக்கில் மயங்கி, நாமும், நமது குடும்பம், சுற்றம் உள்ளிட்ட‌ நமது சமூக வட்டமும், அந்த நோயில் சிக்குவதை தவிர்க்க முடியுமா? அக்கிருமிகளிடம் 'லாபத்தில் பங்கு' பெற்று வாழ்வதை விட, இழிவான வேறு வாழ்க்கை  உண்டா? ஏரிகள், கால்வாய்களை, 'ஊழல் கோரப்பசியில்' 'முழுங்கி', தமிழ்நாடு வெள்ளத்தில் மூழ்கி பல உயிர்கள் பலியானது; 'டாஸ்மாக்' மூலம் மாணவிகள் வரை பள்ளிகளிலேயே குடித்து சீரழிவது; மவுலிவாக்கம் பலமாடி கட்டிடம் இடிந்து பல உயிர்கள் பலியானது;  'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை பயம்' குறைந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவது; பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'மறைமுக பங்களிப்பு சமூக குற்றவாளிகளாக' நாம் இருக்கையில் ? கூடுதலாக, நமது மூளையில் செயல்படும், 'சுயநல குறுக்குவழி' எண்ணங்களால் ஏற்படும் பாதிப்புகள் (https://www.youtube.com/watch?v=W81CHn4l4AM ), மற்றும் உயிரணு ஆய்வுகள் (genetic researches) வெளிப்படுத்தி வரும் உண்மைகள் அடிப்படைகளில், நாமும், நமது குடும்பமும், 'நமது பரம்பரையும்' அதற்கான 'விலை' கொடுப்பதினின்றும் தப்ப முடியுமா? சட்டத்தின் பிடியில் சிக்கி, தண்டனைக்குள்ளாகாமல், 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' வாழும் சமூக கிருமிகளை, நமது குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக வட்டத்தில் 'அங்கீகரித்து', 'பாராட்டி' வாழ்வது, 'இழிவு' என்று நமக்கு தெரியவில்லையானால், நாமும் இழிவானவர்கள் இல்லையா? சமூக அங்கீகாரம் இன்றி, குறைவாகவே, 1967க்கு முன் இருந்த, 'சிற்றினம்' இன்று,  'சமூக கிருமிகளான தீ இனமாக', சமூகத்தில் செல்வாக்குடன் வலம் வருவதற்கு, நம்மைப் போன்றவர்கள் வாழும் வாழ்க்கை, காரணமில்லையா?

'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா?'(1988) உள்ளிட்டு, பெரியார் மைய வெளியீடுகளில், முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை புறக்கணித்து, பெரியார் மையம் மரணத்திற்குப்பின், ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html), 'இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்' (திருக்குறள் 448) போல, பிரபாகரன் பயணித்ததில், பெரியார் அமைப்புகளுக்கு பங்களிப்பு இல்லையா? ("நடந்த தவறுகளுக்கு, அந்த உணர்ச்சிபூர்வ போக்கு வளர பங்களிப்பு வழங்கி, பலிகடாக்களாகவும் ஆன,  பெரியார், அண்ணா, பிரபாகரன் என்று தனி மனிதர்கள் மீது குற்றம் சுமத்துவது எளிது. திராவிட இயக்கத்திலும், ஈழ விடுதலை ஆதரவாக செயல்பட்ட (நான் உள்ளிட்டு) அனைவருமே இதற்குக் காரணமாகும். எனவே மனித உறவுகளில், 'சுயலாப' நோக்கற்றவர்கள் ஒவ்வொருவரும், மற்றவர் மீது குற்றம் சுமத்துவதற்கு முன், நடந்த தவறுகளுக்கு நமது பங்களிப்பு என்ன? என்ற சுயவிமர்சனத்தில் ஈடுபடுவது தான், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்பு முயற்சிக்கான முதல் படியாகும்."; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_77.html ) மீண்டும் 'திருச்சி பெரியார் மையம்' போன்ற  பணிகளை, வேறு  பெயரில் தொடங்க  ஆரம்பித்துள்ளவர்கள், அது போன்ற கேள்விகளை எழுப்பி, 'புதிதாக' நிகழ்கால நடப்புகளை 'கூர்ந்து' கவனித்து, அவை தொடர்பான சான்றுகளை தேடி, 'புதிதாக' வெளியீடுகள் கொண்டு வந்தால், அது வரவேற்கத்தக்கதாகும். 'உள்ளடக்க தரத்தில்' பெரியார் மைய வெளியீடுகளைப் போன்று இருந்து, 'அறிவுபூர்வ விமர்சனங்களை' வரவேற்கும் வகையில் இருந்தால், அது பாராட்டத்தக்கதாகும்.

பெரியார் இயக்கத்தில் இருந்த பெரும்பாலான பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், தங்களிடம் இருந்த தகவல்களை தங்கள் பேச்சு, எழுத்து மூலம் தங்களை வளர்த்துக் கொள்ள மட்டுமே பயன்படுத்திக் கொண்டு, தங்களிடம் பழகுபவர்களை சற்று கீழே வைத்து, தம்மை 'அறிவுஜீவியாக' உயர்த்திக் காண்பித்து பழகுவதை பார்த்தவன் நான்.
அவர்கள் போலன்றி, நான் என்னைச் சுற்றியுள்ளவர்களை (மார்க்சியம், லெனினியம் உள்ளிட்டு ஆங்கில ஆய்வு இதழ்கள்/நூல்கள் படிக்கும் ஆங்கில அறிவு இல்லாதவர்கள்), எனக்கு சமமாகக் கருதி, அறிவுபூர்வமாக வளரத் தூண்டும் வகையில், நானறிந்தவற்றையும், குறிப்பாக அவை தொடர்பான சான்றுகளையும் பகிர்ந்து கொண்டேன். கீழ்வரும் காரணத்தால், அது தவறு என்பதை, திருச்சி பெரியார் மையம் அனுபவங்கள் எனக்கு உணர்த்தின.

ஒரு மனிதரின் இயல்பையும், இயல்பின் அடிப்படையில் நல்லினமா, அல்லது தீயினமா, என்று ஆராய்ந்து அறியாமல், 'எல்லோரும் சமம்' என்று நடத்துவது முட்டாள்த்தனம் மட்டுமல்ல; மிகவும் ஆபத்தானதும் கூட. கீழ்வரும் திருக்குறள், நாலடியார் தரும் எச்சரிக்கையும் அதுவே ஆகும். 

'நன்றுஆற்ற லுள்ளும் தவறுஉண்டு அவரவர்
பண்பறிந்து
ஆற்றாக் கடை' - திருக்குறள் 469


‘மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த‌
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனம் தீப்பட்டக்கால்.’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 10

"புலமையை வளர்ப்பதில் ஆர்வமின்றி,  யாரிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, என்ற அடிப்படை நாகரீகம் கூட தெரியாத, 'சராசரி பொது அறிவின்' அடிப்படையில், கேள்விகள் கேட்டு, புலமையையும், புலமையாளர்களையும், 'கிண்டல்' செய்து மகிழும், 'சமூக கிருமிகள்', தமிழ்நாட்டில் வளர்ந்த 'பாவத்தில்' , எனது 'தொண்டுகளுக்கும்' பங்கு உண்டு" http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html 


மேலே குறிப்பிட்ட‌ குறள் (469) வழியில், நிகழ் காலத்தில் 'சமூகக் கிருமிகளை' கையாள, நான் பின்பற்றி வரும் வழிமுறை: “Some people give to a fault. They give everything they’ve got and, most importantly, they give to the WRONG TYPES OF PEOPLE. When you give to takers, the pie gets smaller and eventually becomes exhausted.
When you give to givers, the pie continually gets bigger and bigger.

Thus, being a giver isn’t enough. You need to give to the right people if you want your success and relationships to last. Who you surround yourself with, and who you work with, really matters.”; https://medium.com/@benjaminhardy/23-smart-ways-to-increase-your-confidence-productivity-and-income-5ee8a3158f31 )


தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களில், தமது அறிவுக்கு தெரிந்த நோய்களை குணமாக்குவதற்கு பதிலாக, அந்த ஆணிவேர்களையே 'நஞ்சாக' கருதிய ஈ.வெ.ராவின் அணுகுமுறையானது, 'பெரியார்' மூலம் சிற்றினம் மேற்குறிப்பிட்ட 'கிண்டல்'கள் திறமைகளை வளர்த்து, தீ இனமாக‌ ஊழல் வழிகளில் ஆதிக்கம் பெற்று, 'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்றவற்றை சிதைத்து, 'தமிழ்வேரற்ற' தமிங்கிலீசர்கள் தமிழ்நாட்டில் வளர காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

திருச்சி பெரியார் மையம் மூலம் வணங்கத்தகும் மனிதர்களின் நட்பு எனக்கு கிடைத்ததை, ஈடு கட்டவோ, என்னவோ, குடும்பம், நட்பு உள்ளிட்ட சமூக உறவுகளின் மகத்துவம் தெரியாத‌, 'இழிவின் இலக்கணமான', 'கள்வர்'(திருக்குறள் 813) நபர்களிடமும், நான் பழகியிருக்கிறேன். அவர்களை, 'பெரியார்' சமூக கிருமிகளாக‌,  அடையாளம் கண்டபின், எனது அறிவு, அனுபவங்களை, சுயநல நோக்கின்றி, அவர்களுக்கு வழங்கியதால், வந்த விளைவு என்ன? என்ற ஆய்வில், வெளிப்பட்டவைகள் பின்வருமாறு;

தாமாக செல்வத்திலோ, செல்வாக்கிலோ வளர்வதற்கு இயல்பான தகுதிகளும், திறமைகளும் இல்லாதவர்களில், தமது இயல்பால் 'தீ இனமாக' உள்ளவர்கள் எல்லாம், தமது 'வளர்ச்சிக்காக' வாலாட்டி, நம்மிடமிருந்து, அவர்களுக்கு வேண்டியவை கிடைத்து, 'வலுவான' பின், அடுத்து தமது வளர்ச்சிக்குதவும் நபர்களையும், இடங்களையும் நாய்கள் போல் 'நுகர்ந்து' இடம் பெயர்வது, 'தீ இனத்தின்' இயல்பாகும். (http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

 1970களில் "புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக, அந்த தமிழ்வழிக்கல்வி வீழ்ச்சி ஓட்டத்திலேயே,  தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார்."  என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html

மேலே குறிப்பிட்ட காலக்கட்டதில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் பயணித்த போக்கில், நான்  'எதிர் நீச்சலில்', எனது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, அவர்கள் வளர்ந்த பின் , மற்ற பெரியார்/தமிழ் ஆதரவாளார்கள் தத்தம் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்தது அறிந்து, என் மேல் கோபமும்/வெறுப்பும் கொள்ள;

'பெரியார் முகமூடியில்' 'சுயநல கள்வராக' இருந்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வலுவாகி, 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'செல்வர் ஆகி', தனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்க வைத்து, அந்த போக்கில் 'வளர்ந்த' சமூக கிருமிகளை, எனது 'சமூக வட்டத்தில்' அனுமதித்த 'பாவத்தின்' விளைவாக‌, அந்த கிருமிகள் மேற்குறிப்பிட்ட 'கோபத்தையும் வெறுப்பையும்' (அதன் நியாயங்களை நான் உணர்ந்து, ஆனால் விளக்க முடியாதிருந்த நிலையில்) பயன்படுத்தி, தமது 'செல்வம், செல்வாக்கு' வெளிச்சத்தில் 'ஏமாற்றி', என் குடும்பத்தின் 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' முன்மாதிரியாக (Role Model);

'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும்' வாலாட்டுபவர்கள் குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்,  'கிருமிகளே' என்ற நிலைப்பாட்டில்; கிருமிகளின் வாடையின்றி, ஒதுங்கி, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும்(Passions), வணங்கத்தக்க மனிதர்களை எனது சமூக வட்டமாகக் கொண்டும், வாழ்கிறேன்; கொள்கை வேடங்களில் ஏமாந்து, 'சமூக கள்வர் தடைகளின்றி',  நாம்  பயணிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றிய தெளிவுடன்; இயல்பில் சிற்றினமானவர்கள், நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று.

 'பெரியார் கள்வர்களை' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததன் காரணமாக, எனக்கு தெரிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தவர்கள், அந்த 'பெரியார் கள்வர்கள்' போட்ட 'செல்வ, செல்வாக்கு' வெளிச்சத்தில் சிக்கி, தமது 'மூளை செயல்பாட்டை (Brain processing) ' திசை திருப்பலுக்குள்ளாக்கி, 'பெரியார் கள்வர்கள்' போல் , பயணிப்பதை, அறிந்து, சமூகத்தில் எனது சமூக வட்டத்தையே பாதித்துள்ள, அந்த நோய், எப்போது? எப்படி பரவியது? என்று, எனது இசை ஆய்வு முயற்சிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே,  இந்த பதிவு உள்ளிட்ட,  எனது பதிவுகளாகும்.

ஒருவரின் சொந்த வாழ்வு, குடும்ப வாழ்வு, அவர் வாழும் சமூகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக தொடர்புடையது என்பது பற்றியும், அந்த சமூக பிணைப்பில் 'குடும்ப மதிப்பீடுகள்' வகிக்கும் முக்கிய பங்கு பற்றியும், கீழ்வரும் இணைய தளத்தில், எளிதில் புரியும் வகையில் விளக்கப்பட்டுள்ளது.
https://prezi.com/2jsow7toikpm/how-changes-in-the-society-affects-the-family-values/

குடும்ப மதிப்பீடுகளை சீர்குலைக்கும் அளவுக்கு, சமூக நச்சுக் கிருமிகள்,  'பெரியார்' முகமூடியில் வலம் வருகிறர்களா?

மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பத்தில், எனது தொடக்க கால ஆய்வு உதவியாளர்களாக பங்களிப்பு வழங்கிய எனது மனைவியும், கூடுதலாக எனது ஆய்வுகள் வழியில் ' நடனத்தின் இயற்பியல்(Physics of Dancing) ' ஆய்வுகளுக்காக நன்கு 'உருவாகி' வந்த என் மகளும், எப்போது, எப்படி 'திசை திரும்பி', 'பெரியார்' போர்வையில் ஒழுக்கக்கேடான, (ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறைக்கு செல்ல வேண்டிய) வழிகளில் 'அபரீதமான' செல்வம் ஈட்டிய நபரை முன்மாதிரியாக(role model) கொண்டு, நான் 'வாழ்வியல் முட்டாள்த்தனமான' முறையில் குடும்பம் நடத்தியதாக கருதி, என்னை வெறுக்கத் தொடங்கினார்கள்?

ஒருவன் 'புத்தனாக' இருந்தாலும், தனது வியாபார தொடர்பால் (Business Association), அப்பா - மகள் உறவு முறிவது அறிந்து, அதில் தொடர்ந்தால், அவன் புத்தனா? சமூக நோய்க்கிருமியா? அதிலும், எனது ஆய்வுகள் வழியில், 'நடனத்தின் இயற்பியல் (Physics of Dancing)' ஆய்வுகளுக்காக, நன்கு 'உருவாகி' வந்த என் மகளின் உள்ளார்ந்த ஈடுபாட்டை (Passion) சிதைத்து, தனது 'சமூக கிருமி' நோயில் சிக்க வைத்து,  'திசை திருப்பியது', எவ்வளவு மோசமான சமுக குற்றம்? 

மனித உறவுகளை சீர்குலைத்து, சுயலாபத்தோடு வாழும், சமூக கிருமிகள் எல்லாம் 'நர்சிசிச' (Narcissism) மனநோயாளிகள் ஆவர். (Using other people without considering the cost of doing so; https://en.wikipedia.org/wiki/Narcissism#Traits_and_signs ) சமூக கிருமிகள் எல்லாம் மனசாட்சியின்றி, தமது சுயநலன்களுக்காக, முதுகுக்குப் பின்னால் எவ்வளவு இழிவான பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள்? என்பதும், னது சமூகவியல் ஆய்விற்குதவிய தனித்துவமான உள்ளீடாகும்.
 
அந்த நபர் 'பெரியார் கொள்கையாளர்' என்ற போர்வையில், எனது சமூக வட்டத்தில் நான், ஏமாந்து அனுமதித்திருக்கவில்லையென்றால், அவர் எனது குடும்பத்தில், இந்த அளவுக்கு, பாதிப்பு ஏற்படுத்தியிருக்க முடியுமா?

அவ்வாறு பாதிப்பு ஏற்படுத்தியதை அறிந்த, 'பெரியார்' கொள்கையாளர்களில் யார்? யார்? அவரைக் கண்டித்தார்கள்?

யார்? யார்? அவரை சமூக கிருமியாக அடையாளம் கண்டு ஒதுக்கினார்கள்?

யார்? யார்? அந்த நபர் எவ்வாறு ஒழுக்ககேடான வழிகளில் பணம் ஈட்டினார்? என்று ஆராய்ந்தார்கள்? 1967 ஆட்சி மாற்றத்திற்குப்பின், தமிழ்நாட்டில் 'திராவிட' அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் 'அரவணைப்பில்' உருவாகி வளர்ந்துள்ள, 'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலில்', 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வலிமை' பெற்று, இடம் பெற்று, அந்த 'புத்தர்' உருவானாரா? அந்த நபர் இன்று யார், யாரோடு, எப்படி, எப்படி, 'கூட்டு' சேர்ந்து, எவ்வளவு ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில் சம்பாதிக்கிறார்? (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html )

அது பற்றிய கவலையின்றி, யார்? யார்?  அவரிடம் 'வாய்க்கரிசி' பெற்று 'நட்பினை' தொடர்ந்தார்கள்? 'பெரியார் கட்சிகளில்', 'ஊழல் ஒழிப்பை' பற்றி கவலைப்படாத போக்குகள், இது போன்ற 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம்,  'புத்தர்' முகமூடியில் வளர காரணமானதா?

'பெரியார் முகமூடி'யில் வாழும் அந்த ‘புத்தரின்’ குற்றமும்,  அதைத் தட்டிக்கேட்காமல், அவருடன் 'உறவு' கொண்ட 'பெரியார் கொள்கையாளர்களின்' செயலும், சமூகவியல் ஆய்விற்குள்ளானதன் காரணமாக, வெளிப்பட்டதே கீழ்வரும் கண்டுபிடிப்பாகும்.

“தவறு செய்வது மனித இயல்பு. ஆனால் ஒரு மனிதர் தவறு செய்ய முற்படும்போது, அதைத் தடுப்பதும், மீறி புரிந்த தவறை உணர்ந்து, திருந்தி வாழ்வதும் அந்த மனிதர் வாழும் குடும்பத்தில், சமூக வட்டத்தில், சமூகத்தில் உள்ள சமூக செயல்நெறி மதகுகளின் (Social Functional Checks) வலிமையைப் பொறுத்ததாகும்……………..1944இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கி, சமூக ஒப்பீடு நோயில், லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நஞ்சானது, சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில் கலந்து ஏற்படுத்திய பாதிப்புகள்,  தமிழ்நாட்டில் இருந்த சமூக செயல்நெறி மதகுகளை எந்த அளவுக்கு சிதைத்தன?”
http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html

சமூகக்கேடான வழிகளில் பணம் ஈட்டியவருடன் கூட்டு சேர்ந்து,  பணம் சம்பாதிக்க, அப்பா உறவு முறிந்தாலும் பரவாயில்லை என்று வாழும் மகளை, அந்த குடும்ப உறவுகளில் எவராவது கண்டித்தார்களா? இல்லையென்றால் அந்த குடும்ப உறவுகள், 'பணத்தையே தெய்வமாக வணங்கும்' பக்தர்களா? எனவே தான் அந்த 'புத்தரின்' 'அந்த' பணத்தில் 'மயங்கி', அவர்கள் நேசமுடன் அந்த 'புத்தருடன்' உறவாடினார்களா, அப்பா - மகள் உறவு முறிந்தது பற்றிய கவலையின்றி; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் 'ஊழல் பாதுகாப்பு செல்வாக்கு வளையம்' மீது உள்ள நம்பிக்கையில் ? 

மிகுந்த மதிப்பீடுகளுடனும், சமூக அக்கறையுடனும் இருந்த எனது குடும்பமானது, இப்படிப்பட்ட உறவினர்கள் இருந்ததால் தான்,  'பெரியார் சமூக கிருமியான' அந்த ‘புத்தரால்’, 'இந்த அளவுக்கு' , சீர்குலைக்க முடிந்தது, என்பதும் என் கருத்தாகும். 1944இல் ஈ.வெ.ரா, தனது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதலின்றி சறுக்கி, 'சிற்றினம்' செல்வாக்கு பெற வழி வகுத்து, ராஜாஜி அதை உரமூட்டி வளர்த்து, 1967க்குப்பின் தமிழ்நாட்டு சமூகம் சிக்கிய சீரழிவு போக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமியாக' வளர்ந்த, அந்த 'புத்தரின் பணத்திலும், புத்தரின் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பத்தின் பின் பலத்திலும்’ மயங்கி, தாம் 'வாழ்வியல் புத்திசாலித்துடன்' வாழ்வதாக கருதி, எனது குடும்பமும், இப்படிப்பட்ட உறவினர்களும்  சீரழிந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 

தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா? (எனது அனுபவங்கள் அடிப்படையில்) சுயலாப நோக்கில் மதம் மாறிய கிறித்துவர்களிடமிருந்து, இந்த சமூக செயல்நுட்பமானது, திராவிடக்கட்சிகளால் அகவயபடுத்தப்பட்டு, இன்று தமிழ்நாட்டில் தேசிய, இந்துத்வா உள்ளிட்டு அனைத்து கட்சிகளிலும் 'இயல்பில் திரிதல்' நோயை தொத்துநோயாக வளர்த்து வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html

'அழுகும் கழகங்கள்'  (சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/) செல்வாக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா?'பெரியார் முகமூடியில்', பொதுவாழ்வு 'வியாபாரத்திற்கு', 'முதலில்லா மூலதனமாக' பயன்பட்ட, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' வரிசையில் 'ஊழல் ஒழிப்பு' எப்போது சேர்ந்தது? திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது?

'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும், 'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக.

மேற்குறிப்பிட்ட கேள்விகள் அடிப்படையில், தமிழ்நாட்டில் 'பெரியார்' சமூக கிருமிகள் எப்போது? எப்படி? உற்பத்தியானார்கள்? என்ற கேள்விகள் எழுப்பிய உந்துதலில்;

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் , ஆய்வினைத் தொடங்கினேன். http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

1944இல் தொடங்கிய திராவிட இயக்க வரலாற்றில், நானறிந்த வரையில், எவர் குடும்பத்திலும் நடக்காதது என் குடும்பத்தில் நடந்துள்ளதால், மேற்குறிப்பிட்ட கேள்விகள் பொது அரங்கிற்கு வந்துள்ளன.

குடும்ப உறவுகளிலிருந்து ஒதுங்கி, வாழத் தொடங்கிய பின், நான் திட்டமிடாமலேயே, வணங்கத்தகும் மனிதர்கள் மட்டுமே, எனது சமூக வட்டத்தில் வளர, எனது ஆய்வுகளும், நானே மலைக்கும் அளவுக்கு வளர்ந்து வருகின்றன. ( http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

சுயலாப நோக்கின்றி, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும் (Passions), இயற்கையோடும், சமூகத்தோடும் 'ஒட்டி' வாழும் ( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html );  எனது சுறுசுறுப்பான, உற்சாகமான வாழ்வினை இன்று அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களும்,  வாழுமிடம், பணியாற்றுமிடம் ஆகிய இடங்களில் என்னை (எனது கடந்த காலம் அறியாத) கவனிப்பவர்களும், வியப்பில் மூழ்குவதும் உண்மையா? பொய்யா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். 

1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னை போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக', 'சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம் எனக்கு இருந்தது. சுயசம்பாத்தியம் இல்லாதவர்களுடன் சேர்ந்து, பொதுத்தொண்டு  செய்வதில் உள்ள அபாயங்கள் பற்றி, 1948 தூத்துக்குடி மாநாட்டில், 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் விடுத்த எச்சரிக்கையில் இருந்து, அவரே சறுக்கியது போலவே, அவர் வழியில் நானும் சறுக்கியதாக உணர்கிறேன். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' ( புறநானூறு 192) அந்த சறுக்கலில் 'மூழ்காமல்', 'உடுக்கை இழ்ந்தவன் கை' (குறள் 788) நட்புகள், மற்றும் என் உள்ளார்ந்த ஈடுபாடுகள்(Passions)  என்ற இரு துடுப்புகள் மூலம் நான் தப்பித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html


ஆடம்ஸ் ஸ்மித் (Adam Smith) எழுதிய 'The Theory of Moral Sentiments' என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளவாறு;  

ஒரே நேரத்தில் மனசாட்சியுள்ள முதல் மற்றும்  மூன்றாம் மனிதனாக (1st & 3rd person), நமது வாழ்வினை அணுகும்போது, இன்பங்கள் மட்டுமின்றி, அரிய பாடங்களை வழங்கும் துன்பங்களையும், 'அனுபவித்து' வாழ முடியும்; உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions) வாழும்போது. 

சமூக‌ ஒப்பீடு(social comparison) நோயில் சிக்கி, உள்ளார்ந்த ஈடுபாடுகள் என்றால் என்ன? என்று விளங்காத, 'புதுப் பணக்காரகளின்' ஆதிக்கத்தில், தமிழ்நாடு 'அறிவுப் பாலைவனமாக' மாறி வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html

அதன்பின், 'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின் தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது சமூக வட்டமானது,  சுயநலக் கள்வர்களுக்கு இடமில்லாத வகையிலும், இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் உள்ள‌, எனது பதிவுகளை அறிவுபூர்வமாக அணுகும், விமர்சிக்கும், வணங்கத்தக்கவர்கள் இடம் பெறும் வகையிலும்,  வளர்ந்து வருகிறது. நம்பமுடியாத அளவுக்கு எனது ஆராய்ச்சிகளும் வளர்ந்து வருகின்றன. http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_22.html ஆனாலும், 'பணம், புகழ்' வேண்டி, எனது ஆய்வுகளிலேயே முழுகவனம் என்னால் செலுத்த முடியாது; தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்துடன், கூடவே பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றையும் இழந்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்தில், தமிழ் வேரற்ற 'தமிங்கீலிசர்களின்' நாடாக, தமிழ்நாடு மாறிவரும் போக்கை கண்டு கொள்ளாமல். ('தமக்கென வாழா மன நோயாளிகள்'; http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html ) அப்போக்கு வெற்றி பெறுமானால், 'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாகவே, அவரின் (அவர் வழியில் என் போன்ற எண்ணற்றவர்களின்) சுயநலம் பாரா உழைப்பும் தியாகமும் பயன்பட்டதாக, கருதப்படாதா? என்ற கவலையும் இருக்கிறது.

தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான முயற்சிகளானவை, 'ஊழல் கோரப்பசி'யாளர்களாகிய, 'சுயநல' பொதுத்தொண்டர்களுக்கு இரையாகுவதை தவிர்த்தால் தான், மீட்சிக்கான சமூக ஆற்றல் விரயத்தையும் தவிர்க்க முடியும். http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html 

நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும் பொது அரங்கில் சுயநலத்திற்காக செயல்படுகிறோமா? அல்லது உண்மையாகவே பொதுத்தொண்டராக இருக்கிறோமா? என்று நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கும், 'சுயநல' பொதுத்தொண்டரிடம் நாம் ஏமாறாமல் இருப்பதற்கும், கீழ்வரும் எச்சரிக்கை மிகவும் பயன்படும்.

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செ
ல்வத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962

( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் ) 

'திராவிட ஆட்சிகளின்' விளைவாக உருவான புதுப்பணக்காரர்களில், 'தனி தமிழ்நாடு, தனி ஈழம், தமிழ்  இனம், தலித், பெரியாரியல், மார்க்சியம், லெனினியம், இந்துத்வா, முஸ்லீம், ஆன்மீகம்' என்று இன்னும் பல முகமூடிகளுடன் 'வலம்' வரும் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு, அவரவர் 'தகுதி, திறமைகளுக்கு' ஏற்ப, 'நன்கொடை' வழங்கி, தமது 'சமூக பாதுகாப்பு கவசத்தை' உருவாக்கி, 'செல்வாக்குடன்' 'வாழ்வியல் புத்திசாலிகளாக' வளர்ந்து வருபவர்கள் யார்? யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அப்புதுப்பணக்காரர்களை முன்மாதிரியாக கொண்டு, அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம், பணம், பதவி போன்ற‌ எலும்புத் துண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு வளரலாமா? அதற்கு 'பெரியார் தந்த புத்தி' பங்களிப்பு வழங்கலாமா? 'நாய்களாக' பெருமிதத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், மனிதர்களாக வாழ்பவர்களைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்கும் காலமும், அதிக தொலைவில் இல்லை. இன்று 'வெற்றியின் இரகசியமாக' இருப்பதானது, விரைவில் 'இழிவின் இலக்கணமாக', மக்களால் கருதப்படும் காலமும், அதிக தொலைவில் இல்லை. 
(http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html)

 பின்னூட்ட(Feedback) கேள்வியும், விளக்கமும்:

(திருச்சி பெரியார் மையத்தில்) "தனிநபரை  மையப்படுத்தாத  குழுவில்  விமர்சனம், சுயவிமர்சனம்  இருக்கும்போது,  இது போன்ற  வாய்ப்புகள்  ஏற்படுவதற்கான  காரணிகள்  என்ன?"

நான் தொடர்ந்து ஆய்ந்து வரும் கேள்வி இது.  'இனம்' என்ற தமிழ்ச்சொல்லின் பொருளானது, ஆங்கில 'ரேஸ்'(Race)  என்ற பொருளில் திரிந்து, அதில் நான் எனது அறிவில் மயங்கியது காரணமா? அல்லது எனக்கிருந்த 'பெரியார்' போதையில், 'திராவிட மனநோயாளிகளை' அடையாளம் காணாமல், அவர்களுக்கு 'அறிவுத்தீனி' போட்டு வளர்த்தது காரணமா? இதனுடன் தொடர்புள்ள பகுதி கீழே:

"‘நில நலத்தால் நந்திய நெல்லே போல், தம்தம்
குல நலத்தால் ஆகுவர்,சான்றோர்; கல நலத்தைத்
தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை
தீ இனம் சேரக்கெடும்’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 9

இசை ஆராய்ச்சிக்கு முன் , திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம் ஆகியவற்றை செலவழித்து, (உண்மையில் 'சிற்றினம்') தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' போதையாளர்களை,   'பெரியார் கொள்கையாளர்' என்று நானே ஏமாந்து, உழைத்து, அதன் மூலம் ‘வலுவானவர்கள்', மேலே குறிப்பிட்ட‌,  'கறுப்பு ஆடுகள்' கூட்டத்தோடு சேர்ந்து, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தோடு, தமிழ்நாட்டின் கனி வளங்களை சூறையாடியதோடு திருப்தி அடையாமல், உண்மையாகவும் நேர்மையாக
வும் வாழ்ந்து வரும் குடும்பங்களையும், தூண்டப்பட்ட(Induced) சிற்றினமாக, சிதைப்பது என்பது, தமிழ்நாட்டின் உச்சக்கட்ட வீழ்ச்சியின் அறிகுறியே ஆகும்.நேர்மையான முறையில் 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிக்கும் தகுதி, திறமைகளற்ற‌, தீ இன இயல்புள்ள சிற்றினமானது, சான்றாண்மை தீ இனம் சேர்க்கையால், நம்பமுடியாத அளவுக்கு வலிமை பெறுவதால், சமூகத்திற்கு வரும் கேடு பற்றிய ஆய்வுக்குகந்த‌ களமாக, தமிழ்நாடு உள்ளது. 

‘நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460"
http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html

தமிழ்நாட்டில், சுயலாப நோக்கில், தனிநபர்கள், 'இந்துத்வா'வை எதிர்க்கும் கட்சிகளிலிருந்து, 'இந்துத்வா' வை ஆதரிக்கும் கட்சிகளுக்கும், 'இந்துத்வா' வை ஆதரிக்கும் கட்சிகளிலிருந்து, 'இந்துத்வா'வை எதிர்க்கும் கட்சிகளுக்கும் மாறி வரும் காலம் இது. அதே 'தேர்தல் சுயலாப நோக்கில்', 'இந்துத்வா'வை எதிர்க்கும் ( 'பெரியார் கட்சிகளை' ஆதரவாக கொண்டுள்ள) கட்சிகளும், 'இந்துத்வா'வை ஆதரிக்கும் கட்சிகளும், வெட்கமின்றி கூட்டணிகள், ' மாறி, மாறி' ஏற்படுத்தி வரும் காலம் இது.

இப்போக்குகள் பற்றிய புரிதலின்றி, அகத்தில் சீரழிந்த மனிதர்களை  'தோழர்'களாக கருதி, புறத்தில்  'விமர்சனம், சுய விமர்சனம்' போன்றவைகளின் மீது 'நம்பிக்கை' வைத்து, அணுகுவது என்பதானது, எவ்வளவு ஆபத்தானது என்பதை, திருச்சி பெரியார் மைய அனுபவங்கள் அன்றி, வேறு வழியில் நான் கண்டுபிடித்திருக்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சாதாரண மனிதர்களில் 'சிற்றினம் யார்?' என்று அறியும் 'கண்ணோட்டம்' (திருக்குறள் 573) மூலமாக‌, நமக்கு பிடித்த 'கொள்கை ஆதரவாளராக' புறத்தில் காட்சி தந்தால், ஏமாறும் வாய்ப்பு அதிகம் என்பதும், என் அனுபவமாகும். 


சமூகத்தில் புரட்சிக்கான வாய்ப்புகளை மலடாக்கி வரும் முக்கிய காரணியான , மனித உறவுகளில் நுழைந்த 'கள்வர்'(திருக்குறள் 813)நோய் பற்றி, உலக அரங்கில் இன்று விவாதங்கள் அரங்கேறி வருகின்றன.  " In a society of continuous, mutual feedback, friendship, too, becomes commercialized" https://www.opendemocracy.net/transformation/byung-chul-han/why-revolution-is-no-longer-possible  இந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலேயே, நவீன சமூகத்தில் (modern society) , மேற்கத்திய கிறித்துவ சூழ்ச்சி பின்னணியில், அகச்சீரழிவுடன் தொடர்புள்ள அந்த 'கள்வர்' நோயானது,  ஒரு சமூக இயக்கம் மூலம் வளர்ந்தது தமிழ்நாட்டிலா? தமிழ்நாட்டில், அந்நோய் சுனாமியில், இந்துத்வா எதிர்ப்பு, ஆதரவு உள்ளிட்ட அனைத்துக் கொள்கைகளும், அடிமைப்பட்டுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  

அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'சாதி ஒழிப்பு, பகுத்தறிவு, தமிழ் உணர்வு, தலித், இந்துத்வா, இஸ்லாம், மனித உரிமை, பெண்ணுரிமை' போன்ற இன்னும் பல முகமூடிகளுடன், 'தீ இனமாக' வலம் வருவதைத் தடுக்காமல், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' வீழ்ச்சியிலிருந்து மீள வாய்ப்புண்டா?
http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

சுயலாப நோக்கின்றி, சமூக வளர்ச்சிக்காக, 'இந்துத்வா'வை எதிர்க்கும் கட்சிகளிலும், 'இந்துத்வா' வை ஆதரிக்கும் கட்சிகளிலும் உள்ளவர்கள் எல்லாம், தமது ஆற்றலானது, மேற்குறிப்பிட்ட 'சுயலாப' போக்குகளுக்கு துணை புரிகிறதா? என்று ஆராய்ந்து, திருத்தி, நல்வழியில் பயணிக்கச் செய்யும் சுயபரிசோதனைக்கு
ம், ஆக்கபூர்வமான சமூக தள விளைவிற்கும் ( social polarization)  எனது பதிவுகள் துணை புரியலாம்.