Tuesday, April 26, 2016



 'அழுகியது' கழகங்கள் மட்டுமா?

 

 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே;                          எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்


2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், தேர்தல் முடிவுகளுக்குப் பின், தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்படப்போகும் போக்குகள் பற்றிய,  கீழ்வரும் கணிப்பு, எனது கவனத்தை ஈர்த்தது.

“கட்சியின் பழைய வரலாற்று நினைவுகளாலும் தலைவர்கள் மீதான கண்மூடித்தனமான அன்பாலும் கீழே உயிரைக் கொடுத்து உழைக்கிறார்கள் தொண்டர்கள். நடுவில் தரகு வேலையில் தேர்ந்தவர்களே கொழிக்கிறார்கள். நிழல் அதிகார மையங்களே ஆள்கின்றன.
மக்களும் தொண்டர்களும் நெருங்க முடியாத உயரத் தில் கட்சித் தலைமைகள் நிற்பதால், நிழல் அதிகார மையங்களையும் இடைத்தரகர்களையும் தாண்டி அவற்றால், உண்மையான தொண்டர்களை அடையாளம் காண முடியவில்லை. நிழல்களின் தவறுகள் அம்பலமாகும்போது, கட்சித் தலைமைகளால் ‘அடி - அழு’ பாவனைகளைத் தாண்டி ஒன்றும் முடியவில்லை.

ஓரளவுக்கு மேல் இந்த பாவனையை நீடிக்கவும் முடியாது. பாவனைகள் நீண்டு உண்மையாகவே அவர்கள் மீது அடி விழுந்தால், அடி வாங்குபவர்கள் திரும்ப அடிப்பார்கள். பேச ஆரம்பிப்பார்கள். தரகின் பங்குகள் வெளிச்சத்துக்கு வரும். தலைமைகளின் பிம்பங்கள் உடைந்து நொறுங்கும். எப்படியும், புரையை ரொம்பக் காலம் பொத்திவைக்க முடியாது. ஊழல் முடை நாற்றம் அடிக்கும். சீழ் வெளியேறும். அதையே இப்போது வேட்பாளர் அதிருப்திப் போராட்டங்களாகப் பார்க்கிறோம். இரு கழகங்களும் அழுகிக்கொண்டிருக்கின்றன! “
‘அழுகும் கழகங்கள்’ – சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/

இந்தியாவில் 2016 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடக்கிறது. தேர்தல் கமிசன் கண்காணிப்பில், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில்,  தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது. (http://indianexpress.com/article/elections-2016/india/india-news-india/assembly-elections-2016-over-rs-62cr-illegal-cash-seized-in-poll-bound-states-tamil-nadu-tops-west-bengal-assam/)

நாம் ஓட்டிற்கு பணம் வாங்கினாலோ, அல்லது அவ்வாறு பணம் விநியோகிக்கும் தரகராக பணியாற்றி லாபம் அடைந்தாலோ, நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே."யார் ஆட்சியைப் பிடித்தால், நமக்கு லாபம்? தேர்தலுக்காக செலவு செய்யப்படும் பணத்தில், நாமும் நமக்கான பங்கை அபகரிக்க, யார் வேட்பாளராக நின்றால், நமக்கு லாபம்?" என்ற சுயநலநோக்கு நமக்கிருந்தாலும், நாமும் 'அழுகிய' மனிதர்கள் தானே. 
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_16.html)

'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்று செல்வம், செல்வாக்குடன் வலம் வருபவர்களில் எவராவது, நமது குடும்பத்தில், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் இருப்பது தெரிந்தவுடன், அவர்களை திருத்துவதிலோ, திருந்த மறுத்தால் ஒதுக்கி வைப்பதிலோ,  நாம் ஈடுபடவில்லையேன்றால், நாமும் 'அழுகிய'  மனிதர்கள் தானே.

அந்த ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை பயம்' குறைந்து, கல்லூரி, பள்ளி மாணவர்கள் வரை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகள், 'அதிவேகமாக' அதிகரித்து வருவது; பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'அழுகிய மனிதர்களான‌ சமூக குற்றவாளிகளாக' நாம் இருக்கையில் ?

அழுகிய மனிதர்களை ஆதரவாளர்களாகவும், தொண்டர்களாகவும், அதிகம் அழுகியவர்களுக்கே முன்னேற வாய்ப்புள்ளதாகவும் உள்ள,  கட்சிகள் எல்லாமே 'அழுகிய' கட்சிகள் தானே.

'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'அழுகிய மனிதர்கள்' எவ்வாறு உருவானார்கள்? என்பது பற்றிய எனது ஆய்வின் மூலம், தமிழ்நாட்டில் சமூக நோயாக‌ வளர்ந்து வரும், 'அழுகல்' தொடர்பான சமூக செயல்நுட்பத்தை, நான் கண்டுபிடித்து, பதிவு செய்துள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html)

நம்மிடையே வாழும் 'அழுகல்' மனிதர்களின் அறிவானது,  எந்த சமூக செயல்நுட்பத்தில் செயல்படுகிறது? என்பதை மேற்குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.

கீழ்வரும் திருக்குறள் அளவுகோலின்படி, தமிழ்நாட்டில் வாழும் 'அழுகல்' மனிதர்கள் எல்லாம், ‘அழுகல்  இனம்’ தானே; எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும்.

'நிலத்தியல்பால் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்ப தாகும் அறிவு' - திருக்குறள் 452

நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாதவர்களும், உழைத்து சம்பாதிக்க மனமில்லாதவர்களும், தமிழ்நாட்டில் அரசியலில் வளர்வதானது, சீரழிவில் முடியும் என்று,  1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில்,  ஈ.வெ.ரா எச்சரித்திருக்கிறார். அந்த 'அழுகல் இனம்' உருவான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலானது,  ஈ.வெ.ராவுக்கு இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் 'அழுகல் இனம்' உருவாக காரணமான,  'அழுகல் சமூக செயல்நுட்பமானது', எப்போது முளைவிட்டு, எப்படி வளர்ந்தது? என்ற ஆய்விற்குதவும் கீழ்வரும் பதிவை அடுத்து பார்ப்போம்.


“பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். 
('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல் - திருக்குறள் 460'; 
https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)
 
மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது……………. மனிதர்களின் பண்புகள் அடிப்படையில், தமிழில் வழக்கத்தில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, தவறாக ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்' (Race)  என்ற பொருளில் திரித்த‌, காலனிய சூழ்ச்சியில், 'திராவிடர் இனம்' என்ற அடையாளமானது, உணர்ச்சிகர போதையில், கவர்ச்சிகரமான பேச்சு, எழுத்து மூலம் தமிழர்களின் சமூக அடையாளமாக திணிக்கப்பட்டதா? அது தமிழர்களின் இயல்பில் , அரசியல் நீக்கம் உள்ளிட்டு என்ன வகைகளிலான திரிதலை ஏற்படுத்தியது?

'இனம்' திரிந்தது ஆனது, தமிழர்களின் இயல்பில் திரிதலைத் தூண்டியதா?

 (''காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3)  இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்';

இயல்பில் திரிந்து, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி', 'எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும்,  அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்ததந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருந்ததும்,  2016 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் மாற்றங்களுக்கு காரணமா?  தமிழ்நாடானது, 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், என்ன மாற்றம் ஏற்படும்? 

'தமிழ்நாட்டில் 'சிற்றினமானது', 'அழுகல் இனமாக', ஆதிக்கத்துடன் வளர்ந்த வளர்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், ஒரே காலக்கட்டத்தில், ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய வகையில் நிகழ்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அது போன்றே, 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) -  சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்; 
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதாவது 'அழுகல் இனமானது', தமிழ்நாட்டில் ஆதிக்க சக்தியாக வளர்ந்த சமூக செயல்நுட்பம் காரணமாகவே, தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) வீழ்ச்சியும், தமிழ் இலக்கணத்தின் வீழ்ச்சியும், மது/போதை பொருள், திருட்டு, கொலை, தற்கொலை, உள்ளிட்ட சமூக நோய்கள் எல்லாம், பள்ளி/கல்லூரி மாணவர்கள் வரை பரவியதும், சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே பரவியதும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், உள்ளிட்ட இயற்கை வளங்களை கொள்ளையடித்ததும், ஒன்றுடன் ஒன்று பின்னி, அரங்கேறினவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

முந்தைய பதிவில் குறிப்பிட்ட 'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்', 'அழுகல் இனத்தின் ஆதிக்கத்திற்கும்', தொடர்பு உண்டா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி சாத்தியமா?

'அழுகல் மனிதர்கள்' எல்லாம், 'பகுத்தறிவு, சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, ஆன்மீகம், இந்துத்வா, தலித், முஸ்லீம்' உள்ளிட்ட இன்னும் பல முகமூடிகளுடன் ஏமாற்றி வாழ, நாம் துணையாக இருக்கிறோமா?  நாம் 'அழுகல் இனத்தில்' இருக்கிறோமா? நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் ‘அழுகல் மனிதர்கள்’ இருந்து, அந்த 'அழுகல் மனிதர்களோடு', நாம் நேசமாக இருப்பது தொடர்ந்தால், நாமும் அந்த 'அழுகல் மனிதர்' இனத்தில் இடம் பெறுவதை தவிர்க்க முடியுமா? குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளும், சமூக ஒழுக்க நெறிகளும், பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான சடங்குகளும், 'அழுகல் இனத்தின்  ஆதிக்கத்திற்கு' அடிமையாக, நாம் துணை போகிறோமா? தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை (வாய்ப்பு கிடைத்தால், அவர்களுடன் நெருக்கமாகி, பலன்கள் அனுபவித்துக் கொண்டே) குறை சொல்லியவர்கள் யார்? யார்? அவ்வாறு குறை சொல்லியவர்களில், தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள் எல்லாம்,   'அழுகல் மனிதர்கள்'  இல்லையா? 

ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு எச்சரிக்கையை கருத்தில் கொண்டு;

தமிழ்நாட்டு பொதுவாழ்வில், நேர்மையான சுயசம்பாத்தியமில்லாதவர்களில், உண்மையான சமுக அக்கறை உள்ளவர்களெல்லாம், பொது வாழ்விலிருந்து ஒதுங்கி, நேர்மையான சுயசம்பாத்தியம் மூலம்,  தற்சார்பை உறுதிப்படுத்திக் கொண்டு, அதன் பின்னர், மீண்டும் பொதுவாழ்வில் ஈடுபடலாம்;  'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்க வேண்டுமானால். 


குடும்பம், நட்பு, கட்சி போன்ற அடிப்படைகளில்,  'அந்த அழுகல் மனிதர்கள்' மீது  நமக்குள்ள 'பற்றிலிருந்து' விடுபட்டு, 'அழுகல் இனத்தின்' 'பிடியிலிருந்து' வெளியேற முடியுமா?

சமூக ஒப்பீடு நோயில், 'திராவிட மனநோயாளியாக' சிக்கி, வாழ்பவர்களுக்கு,  அது சாத்தியமில்லை.

‘அந்த நோயில் சிக்காதவர்களுக்கு, குறைந்த பட்சம் தமது சமூக வட்டத்தில், அது சாத்தியமே’ என்று நிரூபிக்கும் வகையில், நான் வாழ்ந்து வருகிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான ஆதரவானது; வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்' என்ற நம்பிக்கையில். 
(http://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_19.html )

“'ஊழல் வழிகளில்' பணம் சம்பாதிக்க, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைப்பவர்களையும், அவர்களை கண்டிக்காமல் 'நல்லுறவு' பேணுபவர்களையும், 'சமூக கிருமிகளாக' கருதி, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, நான் வாழ்கிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' சீர்குலைவிற்கு எதிரான போரில், எனது பங்களிப்பாக.”
(http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

ஊழல் ஒழிப்பானது, ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்களெல்லாம், ஊழல் ஒழிப்பு கட்சிகளின் மாநில பொறுப்பாளர்களாக வலம் வருகிறார்கள். கட்சி வேறுபாடின்றி, ஊழல் சொத்துக்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டால், 'மதுவிலக்கு' உள்ளிட்டு, அனைத்து வளர்ச்சித் திட்டங்களையும், அந்த பணத்தில் செயல்படுத்த முடியும் என்பதை, அனைவரும் ஒப்புக்கொள்ளும் விந்தையும், தமிழ்நாட்டில் உள்ளது. 'அழுகல் இனத்தின்' ஆதிக்கம் ஒழியாமல், மதுவிலக்கு அமுலானால், 'டாஸ்மாக்' கடைகளெல்லாம், 'கள்ளச்சாராய' கடைகளாக, 'புது அவதாரம்' எடுக்காதா?

'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்தை ஒழிக்காமல், இவையெல்லாம் சாத்தியமா? 'பூனைக்கு யார் மணி கட்டுவது?’

என்று குழம்ப வேண்டியதில்லை.
சுயலாப நோக்கற்ற, சமூக அக்கறையுள்ள, ஒவ்வொருவரும், தமது சமூக வட்டத்தில் உள்ள
'அழுகல் இன' பூனைகளுக்கு மணி கட்டுவது சாத்தியமே, என்பதையும், மேற்சொன்ன வகையில் நான் நிரூபித்து வருகிறேன். அவ்வாறு நாம் ஒவ்வொருவரும் நமது சமூக வட்டத்திலுள்ள 'அழுகல் இன' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், தற்போது சீரழிந்துள்ள ‘சமூக செயல்நெறி மதகுகள் ‘ புத்துயிர் பெறும். 
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html

அதன்பின் ஊழல் ஒழிப்பு உள்ளிட்ட  சட்டங்களும் ஒழுங்காக செயல்படும்; தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்காக; 'அழுகல் இனத்தின்' ஆதிக்கத்திலிருந்து, 'விடுதலை' பெற்று. 

தமிழில் மனிதரின் பண்பு அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்', 1944க்குப்பின் திரிந்து உருவான, 'அழுகல் இனத்திலிருந்து' 'விடுதலை' பெற்றால் தானே, தமிழ்நாட்டில் 'நல்லினம்' பல்கி பெருக முடியும். நமது முயற்சியில், நமது சமூக வட்டத்திலிருந்து, 'அழுகல் இனத்தை' அகற்றுவது தானே, அதற்கு சரியான, வலுவான, தொடக்கமாக அமையும்.

காந்தப்  புலத்தில் இருந்தாலும், இரும்பு போன்ற ஒரு சில உலோகங்கள் மட்டுமே, ‘காந்தத் தூண்டல்’ (Magnetic Induction) என்ற வினைக்குள்ளாகி, காந்தமாக மாறும்.

அது போல, ‘அழுகல் இனத்தின் ஆதிக்கத்தில்’  உள்ள சமூக சூழலில்;

இயல்பில் 'பலகீனமான' தமிழர்களே, தமிழ்நாட்டில் ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' என்ற சமூக செயல்வினை மூலம், 'அழுகல் இனமாக' மாறி வருகிறார்கள்.

அதற்கு 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'சீரழிவு சமூக வினையூக்கியாக (Catalyst)' செயல்பட்டு வருகிறார்கள் என்பதும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், நான் மேற்கொண்டு வரும் சமூகவியல் பரிசோதனையில் (Sociological Experiment) வெளிப்பட்டுள்ளது.

நமது சமூக வட்டத்தில் இருக்கும் 'அழுகல் இனத்தை', அடையாளம் கண்டு அகற்றுவதானது, ‘அழுகல் இன சமூகத் தூண்டல்' எனும் சமூக நோயிலிருந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க துணை புரியும்.

Saturday, April 23, 2016


'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' ;

 

'பெரியார்' கட்சிகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளும்


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.

“எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.” (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த,  தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன். 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) , தொடர்ந்து 'இணைய வழியில்' அந்த கண்டுபிடிப்பை விளக்கி பல கட்டுரைகள் வெளியிட்டு வருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு, 2005 முதல் இன்றுவரை, ஏன் வெளிவரவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

உணர்ச்சிபூர்வ போதையிலோ, அல்லது 'பொதுவாழ்வு வியாபாரியாக' வாழ்வதாலோ, ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’, 'பெரியார்' கட்சிகளும், 'பெரியார்' கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற ஆராய்ச்சியையும் தொடங்க வேண்டுமா?

1944க்கு முந்தைய ஈ.வெ.ராவின் 'குடிஅரசு' இதழ் பாணியில், எனது பதிவுகளையும், அவற்றிற்கும் வரும் அறிவுபூர்வ மறுப்புகளையும், ஒரே நூலாக வெளியிடும் எண்ணமும் எனக்குண்டு. எனவே, எனது பதிவுகளுக்கு கீழே வாச‌கர் பதிவிடும் கருத்துக்களையும் அகற்றாமல், ஆர்வமுடன் படித்து வருகிறேன்.

இசை ஆராய்ச்சிக்கு முன், மார்க்சியம், லெனினியம் புலமையோடு, 'பெரியார்' கொள்கையில் நான் பயணித்த காலத்தில், ‘அறிவுபூர்வ விவாத வறட்சியில்’ கம்யூனிஸ்ட் கட்சிகளும், கம்யூனிஸ்ட் கொள்கையாளர்களும் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழுந்ததை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.


“தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில்,  எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும்,  வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத  நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும்,  வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்……………………..இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன், தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய‍ லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை, என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபட‌த் தொடங்கினேன்.

பெரியார் இயக்கத்திலும், பொதுவுடமை இயக்கத்திலும், தமக்குள்ள அறிவு வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலும், தாம் ஏற்றுக் கொண்ட கொள்கை தொடர்பான புலமையை அதிகரிக்க விரும்பும் ஆர்வமும், அதற்கான உழைப்பும் இருந்ததில்லை என்பது எனது களப் பார்வை(Observation) ஆகும். இது தொடர்பாக 'உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய தமிழ்நாடு' என்று பதிவு செய்துள்ளேன்.(http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

உண்மையில் மார்க்சியம் லெனினியம் தொடர்பாக‌,  முனைவர் பட்டம் உள்ளிட்டு, ஆழ்ந்த ஆராய்ச்சியில் எவரேனும் ஈடுபடுபவர்கள் இருந்தால், அவர்கள் பார்வையில் படட்டுமே என்று, அது தொடர்பான பதிவையும் வெளியிட்டுள்ளேன்.
[ http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html
]”

ஒரு சமூகத்தில் தாய்மொழியும், அவர்களின் அடையாளமும், நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது தாய்மொழியும், அடையாளமும், பயனற்றது என்று கருதும் மக்கள், கட்சிகளையும், கொள்கைகளையும் 'விரயமாக' கருதி, பலவகை போதைகளில் பயணிக்கத் தொடங்குவார்கள். (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm ) தமிழ்நாட்டில் தமிழர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் தமிழையே,  ' விரயம் - waste' ஆக கருதும் அபாயமும் வளர்ந்து வருவது உண்மையானால், கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக,  மாறி வருகின்றனவா?

“பொது மக்கள், குறிப்பாக நன்கு படித்து நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்பவர்கள் ( மற்றும் அவர்கள் வழியில் தமது பிள்ளைகளை ஆங்கிலவழி நர்சரியில் சேர்த்து பயணிக்கும் கூலித் தொழிலாளர்கள்)மத்தியில், 'தமிழ், தமிழ்' என்று பேசுபவர்கள் பற்றிய இழிவான அபிப்பிராயமும், ஆங்கில வழிக் கல்வி மூலமாக வேர் பிடித்து வளர்ந்து வரும் திரிந்த மேற்கத்திய வாழ்வு முறை காரணமாக‌,  தமிழையே,  அவர்களில் பெரும்பாலானவர்களின் பார்வையில் ' விரயம் - waste' ஆகக் கருதும் அபாயமும் வளர்ந்து வருகிறது. ஏற்கனவே பார்த்த தமிழுக்கான ஆபத்துகளின் பின்னணியில், இது 'தமிழ் அழிவு சுனாமி' தொடக்கத்தின், முதல் அறிகுறியாகவும் இருக்கலாம்.”
 
கம்யூனிஸ்ட் கொள்கைகளும், 'பெரியார்' கொள்கைகளும், 'அறிவுபூர்வ விவாத வறட்சியில்' சிக்கி, விரயமாக- waste' ஆக,  மாறி வருகின்றனவா? என்ற கேள்வி தொடர்பான பதிவு வருமாறு.

'அரசியல் பின்புலம் எதுவுமற்று, கொள்கை முழக்கங்களோ தத்துவ விளக்கங்களோ இல்லாமல், ஊழலை ஒழிப்பேன் என்பதை மட்டும் சொல்லிக்கொண்டு அரசியல் செய்த விஜயகாந்த் பெற்ற வெற்றி, பிற கட்சிகளின் சித்தாந்த முழக்கங்களைக் கேலிப்பொருளாக்கியது எப்படி என்பது தனியே விவாதிக்க வேண்டியது.'
'மறுபடியும் முதலிலிருந்தா?'- அரவிந்தன்

“ ''எங்களுக்கு கொள்கை இல்லை; அ.தி.மு.க., - தி.மு.க.,விற்கு மாற்று வேண்டும் என்பதே எங்களின் கொள்கை,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

கொள்கைகள் சருகாகி, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில், 'தேர்தல் ஆதாய' நோக்கில், கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்து கட்சிகளும் பயணிக்கிறார்களா? அந்த கட்சிகளின் 'வால்களாக' (வெளியில் தெரிந்தும், தெரியாமலும்) ' 'பெரியார் கட்சிகள்' பயணிக்கிறார்களா?...................... தமிழ்நாட்டில், இன்று கட்சிகளின் சித்தாந்த முழக்கங்கள் எல்லாம் கேலிப்பொருளாகியுள்ளது பற்றியும், 1952 பொது தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சியானது 131 தொகுதிகளில் போட்டியிட்டு, 62 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய எதிர்க்கட்சியாக வெளிப்பட்டது பற்றியும், 64 வருட வளர்ச்சி/வீழ்ச்சிக்கு(?) பின், 2016 சட்டமன்ற தேர்தலை, விஜயகாந்த் தலைமையில் உள்ள அணியில் சந்தித்துள்ளது பற்றியும், ஆய்வு    மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.”

தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தனக் காடுகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்களை கொள்ளையடித்தவர்களை எதிர்த்து, மக்களை திரட்டி, போராடாததில், கம்யூனிஸ்ட் கட்சிகளும், 'பெரியார்' கட்சிகளும் 'ஒரே வகையில்' பொதுவாழ்வில் பயணித்தார்களா? அக்கொள்ளைக்கு துணை போன, அந்தந்த ஆளுங்கட்சி 'புள்ளிகளுடன்', தத்தம் சுயநலன்களுக்காக, வெளியில் தெரிந்தும், தெரியாமலும் நெருக்கமாக 'பொதுவாழ்வில்' பயணித்தார்களா? அத்தகைய சுயநல போக்கில், தமிழ்நாட்டில் 'இந்துத்வா' கட்சிகளில் யார்? யார்? பயணித்தார்கள்? இப்படிப்பட்ட  மோசமான சமூக சூழலே, 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? தமது தாய்மொழியை 'காட்டுமிராண்டி' மொழியாக கருதி, தமிழில் இருந்த 'இனம்' திரிந்து, 'அடையாளச் சிதைவுக்குள்ளாகி',   'உணர்ச்சிபூர்வ போதையாளர்களாகவோ', அல்லது 'பொதுவாழ்வு வியாபாரிகளாகவோ', பெரும்பான்மையான 'பெரியார்' கொள்கையாளர்கள் வாழ்கிறார்களா, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர அனுமதித்து? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கும்';

கட்சிகளின் தொடர்பின்றி, தமிழ்நாட்டில் தினமும் ஆங்காங்கே, தண்ணீர் பிரச்சினை, சாலை பிரச்சினை, மோசடி உள்ளிட்ட இன்னும் பல பிரச்சினைகளுக்காக, வீதியில் இறங்கி, பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் போராடி வருவதற்கும் தொடர்பு உண்டா? 

மேற்குறிப்பிட்ட தொடர்பின் பின்னணியில், முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி, திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் வளர்ந்தார்களா? 

அந்தந்த கட்சிகளில் சுயலாப நோக்கின்றி, தத்தம் கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்கள் எவரேனும் இருந்தால்;

தத்தம் கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகளை, 'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக்க' வேண்டாமா? அது இயலாதெனில், 'சமூக கிருமிகளின்' பிடியில் மீளமுடியாத வகையில் சிக்கியுள்ள‌, அப்படிப்பட்ட கட்சிகள் நீடிப்பதே, சமூகத்திற்கு கேடாகாதா? 'அழுகும் கழகங்கள்'  (சமஸ்; http://tamil.thehindu.com/opinion/columns/) வரிசையில் அக்கட்சிகள் இடம் பெறாதா? 'அழுகும் கழகங்கள்' செல்வாக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்தார்களா?  'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை' மீட்க முடியுமா? (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )

அத்தகைய ஆய்விற்கு
முதல்படியாக,  'அறிவுபூர்வ விவாத வறட்சிக்கு' முடிவு கட்ட வேண்டாமா, திருப்பு முனையில் இருக்கும் தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரிய‌ ?

Wednesday, April 20, 2016



'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான ஆதரவானது;

வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்'



கீழ்வரும் குறிப்பில் உள்ளவை பற்றிய‌ 'அறியாமையில்', ஈ.வெ.ராவை 'தேசதுரோகி' என்றும், 1967க்கு முன் 'முரசொலியில்' ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி வெளிவந்தவைக்கு, இன்று 'புத்துயிர்' கொடுத்தும், இழிவு படுத்திவரும்,  'இந்துத்வா' முகாம்களில் உள்ளவர்களும் சரி;

'சுயநல கள்வர்களாக' 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம் சமூகத்தை சீரழித்துக் கொண்டே, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பகுத்தறிவு' என்று 'வாழும்' 'சமூக கள்வர்களை' கண்டுகொள்ளாமல், 'பெரியார்' போதையில் ('திருச்சி பெரியார் மையத்தில்' நான் பயணித்தது போல; ) வாழ்ந்து வருபவர்களும் சரி; (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

சுயலாப நோக்கின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சி பற்றி,  அந்த இரு வகை பிரிவினரில், எவருக்கேனும், உண்மையான அக்கறை இருந்தால், அவர்கள் 'வீழ்ச்சிக்கான' காரணங்களை சரியாக கண்டுபிடிக்க, அவசியம் படிக்க வேண்டியது, ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையாகும்.

இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அரசியல் கட்சிகளில் உள்ள 'பொதுவாழ்வு வியாபாரிகள்' பற்றிய சமூக 'எக்ஸ் ரே' (X-ray) போன்று அந்த உரை அமைந்துள்ளதை, இன்று அந்த உரையை படிப்பவர்கள் அறிவார்கள். (இணையத்தில் எனது தேடலில் அந்த உரை கிடைக்கவில்லை. கிடைத்தால் இந்த பதிவில் அதையும் இணைக்கலாம்)

அத்தகைய அபாய எச்சரிக்கை விடுத்த, ஈ.வெ.ரா, அதன்பின் 'உணர்ச்சிபூர்வ' போக்கில், தி.மு.கவினரையும், குறிப்பாக அண்ணாதுரையையும் இழிவுபடுத்தியவையெல்லாம், எழுத்து மற்றும் ஒலி வடிவங்களில் வரலாற்று சான்றுகளாக வாழ்கின்றன. அதே போல், அண்ணாதுரையை தவிர்த்து, மற்ற தி.மு.க தலைவர்கள் எல்லாம்,  ஈ.வெ.ராவை இழிவுபடுத்தியவையெல்லாம், 'முரசொலி' உள்ளிட்ட இதழ்களில் இருக்கின்றன; ஒலி வடிவிலும் இருக்கலாம். திராவிட இயக்க வரலாற்றில்,  அது போன்ற கருத்துக்கு, ‘பகிரங்க மன்னிப்பு’  கேட்ட முதல் நபராக வைகோ இருக்கலாம். (http://tamil.chennaionline.com/news/newsitem.aspx?NEWSID=52c7f082-09dd-444f-aeb0-7794cd2058d2&CATEGORYNAME=TCHN )

தி.க மற்றும் தி.மு.க இடையே,  1949 முதல் 'வீரியமாக' வளர்ந்த 'உணர்ச்சிபூர்வ' மோதல்கள் காரணமாக, தி.க பலகீனமாகி, தி.மு.க 'வீரியத்துடன்' ராஜாஜியின் 'துணையுடன்' வளர்ந்து, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், ஈ.வெ.ராவையும், தி.கவையும் ஓரங்கட்டி, 'உண்ர்ச்சிபூர்வ' போராட்டங்களில், தமிழ்நாட்டில் 'திராவிட' இயக்க ஆதரவுடன், 'காந்தி வழியில்'(?) மாணவர்களை போராட்டங்களில் பங்கேற்க வைத்து;

அதுவே 1967 ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்க, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' ஆகியவற்றின் 'வீழ்ச்சிப் பயணம்' தொடங்கியதா? தமிழர்களிடையே இருந்த புலமையும், அறிவும், மானமும், சுயமரியாதையும் வீழ்ச்சிக்குள்ளாகி, 'சுயநல கள்வர்' நோயானது, 'சமூக வைரஸாக' (Social Virus) பரவி, 'குறுக்கு வழிகளில்' பணம் சம்பாதிக்க, மனித காக்கைகளும், மனித நாய்களும் 'வீரியமாக' வளர, உணர்ச்சிபூர்வ 'சுனாமியில்', அறிவுபூர்வ போக்குகளும் வீழ்ச்சிக்குள்ளாகி, தமிழ்வழிக்கல்வியும் (எனவே தமிழும்) மரணப்பயணத்தில் சிக்கியதா? (http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html)  

அந்த வீழ்ச்சிப்போக்கில், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்து, என்னைப் போன்றவர்களை முட்டாளாக்கி, 'திருச்சி பெரியார் மையம்'  மூலம் 'பலன்கள்' பெற நேர்ந்ததா? 'அந்த பாதிப்புகள்' காரணமாக, எனது இசை ஆய்வுப்பணிகளின் ஊடே, சமூகவியல் ஆய்வும் மேற்கொண்டு, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்த சமூக செயல்நுட்பத்தினை நான் கண்டுபிடிக்க நேர்ந்ததா? என்பவையெல்லாம் விவாதத்திற்கும், ஆய்விற்கும் உரியவையாகும்.

“பெரியாரின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1)

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில், அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன.

எனது இசை ஆய்வுகளின் முலம், பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன்.” (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அந்த கண்டுபிடிப்பை 2005 முதல் என்னை சந்தித்த,  தஞ்சை இரத்தினகிரி உள்ளிட்ட 'பெரியார்' கொள்கையாளர்களிடம் தெரிவித்து வந்துள்ளேன். 2006 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலரில்' கட்டுரை வெளியிட்டு (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html  ), தொடர்ந்து 'இணைய வழியில்', அந்த கண்டுபிடிப்பை விளக்கி, பல கட்டுரைகள் வெளியிட்டு வருகிறேன். அதற்கு ஏதும் அறிவுபூர்வ மறுப்பு வெளிராத நிலையில், ( 2005 முதல் இன்றுவரை, ஏன் வெளிவரவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும். இனிமேலாவது வருமா?) அவ்வாறு அறிவுபூர்வ மறுப்பு வெளி வராத நிலையில், திருச்சி பெரியார் மையத்திற்கு நான் உழைத்ததன் பலனாக, 'தனது கடனுக்காக, பிராமண சார்பாகவும், பா.ஜ.க சார்பாகவும்' மாறிவிட்டதாக, என்னிடம் நேரில் தெரிவித்து விளக்கம் கேட்கும் துணிச்சலின்றி, என்னை இழிவுபடுத்தி,  'கோழைத்தனமாக',  எனது முதுக்குப் பின்னால் பிரச்சாரம் நடந்து வந்துள்ளது. (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) இவையனைத்தையுமே, அந்த கண்டுபிடிப்புடன் தொடர்புடைய சமூக சிக்னல்களாக (Social Signals)  கருதி, எனது சமூகவியல் ஆய்வில், நான் பயணிக்கிறேன்; 'இழிவுக்கு இலக்கணமாக' வாழ்பவர்களை, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் அடையாளம் கண்டு; 'பெரியார் முகமூடியுடன்' எவ்வாறு ஏமாற்றி வாழ்கிறார்கள்? 1944-இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் உணர்ச்சிபூர்வ போக்குகள் தலை தூக்கி, சமூக ஒப்பீடு நோயில், லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நஞ்சானது, சமூக ஆற்றல் ரத்த ஓட்டத்தில் கலந்து ஏற்படுத்திய பாதிப்புகள்,  தமிழ்நாட்டில் இருந்த சமூக செயல்நெறி மதகுகளை எந்த அளவுக்கு சிதைத்தன? என்ற சமூக செயல்நுட்பம் (Social Technique)  பற்றிய ஆய்வுடன். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்படும் உணர்ச்சிபூர்வ போக்குகளை எதிர்த்தும், (
http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none.html);

'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கில், இன்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெளிப்படும் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்தும், என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கி வருகிறேன்; 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்காக, சுயலாப நோக்கின்றி வாழ்பவர்கள் மத்தியில், இதற்கான ஆதரவானது, வெகு விரைவில், 'சிறுதுளி பெரு வெள்ளமாகும்', என்ற நம்பிக்கையில்; 

திராவிடர்/திராவிட, தேசிய, பொதுவுடமை கட்சிகளில் எண்ணற்றோரின் தியாகங்களை எல்லாம், 'பொதுவாழ்வு மூலதனமாக்கிய' சமூக கிருமிகள் எல்லாம்;

அந்தந்த கட்சிகளில் உள்ள சுயலாப நோக்கின்றி, தத்தம் கொள்கைக்கு உண்மையாக வாழ்பவர்களின் சமூக பொறுப்பினால், விளைந்த முயற்சிகளால்;


அந்தந்த கட்சிகளில்,  'சமூக விசாரணை' மூலம், 'சமூக தண்டனைகளுக்குள்ளாக';


அதன் மூலம், அந்த சமூக கிருமிகளின் வலைப்பின்னலில் இடம் பெற்றிருந்த, நீதிபதிகள், அரசு வக்கீல்கள், காவல் துறை, சிறை துறை ஆகியவற்றில் இருக்கும் 'கறுப்பு ஆடுகள்' எல்லாம் அம்பலமாக;
 


அரசும், சட்டமும் தமது 'முகத்தை'க் காப்பாற்றிக்கொள்ள, 'சமூக குற்றவாளிகளை' சட்டம் மூலம், 'சரியாக' தண்டிக்கும் படலமானது, தமிழ்நாட்டில் தொடங்கும், என்ற எதிர்பார்ப்பில்.

குறிப்பு:

1857 இந்திய விடுதலைப் போர் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா சுமார் 50க்கும் அதிகமான மன்னர்களின் ஆட்சியில் இருந்திருக்கும்; தமிழ்நாடும் பல மன்னர்கள் ஆட்சியில் இருந்திருக்கும்; 'இந்தியர்' என்ற அடையாளமானது 'பாரம்பரியம், பண்பாடு' பரிமாணங்களில் 'வேற்றுமையுடன் கூடிய ஒற்றுமையில்'; 'அரசியல்' பரிமாணமின்றி. அந்த பின்னணியில் தான், அதன்பின் 'காலனி சூழ்ச்சியில்' அரங்கேறிய மாற்றங்களின் பின்னணியில், 1947 இந்திய விடுதலைக்கு முன், ஈ.வெ.ரா கோரிய 'திராவிட நாடு பிரிவினையை', ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்தனர்.

இன்றுள்ள சர்வதேச சூழலில், 'இந்தியர்' அடையாளத்துடன் இணக்கமான முறையில் தமிழர் உள்ளிட்ட அடையாளங்களை, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றை, மேற்கத்திய வழிபாட்டில் சிக்காமல், நவீனமயப்படுத்தி (Modernization without Westernization)  முன்னேறுவதே புத்திசாலித்தனம்; வீழ்ச்சியிலிருந்து மீண்டு முன்னேற.

குறிப்பு 1:
தமிழ்நாட்டில் எந்தக் கட்சியாக இருந்தாலும், எப்படிப்பட்ட பொதுத் தொண்டர்கள் இனி பொது வாழ்வில் செல்வாக்கு பெற முடியும், என்பதற்கான பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் கருத்து,  கீழ்வரும் மேற்கோளில் உள்ளது.

"எந்த பொதுத் தொண்டனுக்காவது மனைவி இருக்கிறது; மக்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கும் குடும்பத்தில் வசதி இருக்க வேண்டும். அல்லது  அவர்களும் உணவு உடை தவிர மற்றெதையும் கருதாதப் பொதுத் தொண்டர்களாக இருக்க வேண்டும்.பொதுத் தொண்டு ஊதியத்தால் வாழ்கிறவர்கள், அவர்கள் குடும்பங்கள்  சராசரி வாழ்க்கைத் தரத்துக்கு மேல் வாழக் கூடாது; வாழவே கூடாது.

வாழ வேண்டி வந்தால், வாழ்ந்து கொள். ஆனால் 'நான் பொதுத் தொண்டன், கஷ்ட நஷ்டப்பட்டவன் ' என்று சொல்லாதே. சொல்வதற்கு வெட்கப்படு; உன் மனதிலும் நீ நினைத்துக் கொள்ளாதே. அப்படி நினைப்பாயேயானால், சொல்லுவாயேயானால், நீ 'மக்களை ஏமாற்றி வெற்றி பெறுவதாகக் கருதிக் கொண்டிருப்பவன்' என்று தான் சொல்ல வேண்டும்.

மற்றும் இதை ஏன் சொல்லுகிறேன் என்றால், நீ பொதுத் தொண்டன் ஆகாமல், சுயநலத் தொண்டனாகி, உனக்கென்றே நீ பாடுபடுபவனாக ஆகி இருந்தால், இன்று உன் நிலை எப்படியாகி இருக்கும்? உன் தரம் அந்தஸ்து என்ன ஆகியிருக்கும் என்பதை உன் தரத்தைக் கொண்டு உண்மையாய் நினைத்துப் பார்த்து, உன் பொதுத் தொண்டு (வேஷம்) ஆனது உன்னைத் தியாகம் செய்ய செய்ததா?அல்லது உன் தகுதிக்கும்  மேற்பட்ட செலவத்தையும்,வாழ்க்கை வசதியையும், அந்தஸ்தையும் தேடிக் கொள்ளச் செய்ததா? என்று எண்ணிப் பார். " -  பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் 17.09.1962

( பெரியார் 84 ஆவது பிறந்த நாள் மலர் )

தனக்கு வருமானம் தரும் பணியிடத்தில், வாழுமிடத்தில் 'புத்திசாலித் தனமான, இழிவான' சமரசங்களுடனும், அந்த போக்கிலான, 'ஆதாயம் தரும் சமூக வலைப்பின்னலுடன்', தம்மையும், தமது குடும்பத்தையும் 'பாதுகாப்புடன்' வளர்த்துக் கொண்டு, ஊரான் விட்டுப்பிள்ளைகளைத் தூண்டி, 'காவு கொடுத்து', வாழும் 'முற்போக்கு' தமிழ்/திராவிடக் கட்சியினரை அடையாளம் காண உதவும் அளவுகோல் இதுவாகும்.