Saturday, May 21, 2016


2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்பட்ட 'சிக்னல்';



அரசியல் வெளி (Political Space) காலியாகி விட்டதா?

அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும்,சமூக செயல்நுட்பம்?


‘அ.இ.அ.தி.மு.க கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்ற சட்டமன்ற தொகுதிகளை விட , குறைவாக வென்றாலும், 2016 சட்டமன்ற தேர்தலில், ஆட்சியைப் பிடிக்கும்’ என்பதை, தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, ஏற்கனவே பார்த்தோம்.

“வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும்,  என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே  மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்;  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.”
(May 1, 2016; ‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’;
http://tamilsdirection.blogspot.com/2016/05/blog-post.html  )

2011சட்டமன்ற தேர்தலில் 23 தொகுதிகளில் வென்ற தி.மு.க கூட்டணியானது, 2016 சட்டமன்ற தேர்தலில் 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க  எந்த அளவுக்கு பலகீனமாகியது ?, தி.மு.கவில் ஸ்டாலின் முயற்சியால்,  எந்த அளவுக்கு பலமானது? என்பதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பிரதிபலிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அவருக்கு, அ.இ.அ.தி.மு.கவைப் போல, கட்சிக்குள் 'தடைகளின்றி' செயல்பட வாய்ப்பிருந்திருந்தால், தி.மு.க இன்னும் அதிக இடங்களில் வெற்றி பெற்று, ஆட்சியைப் பிடிக்க போட்டி போடும் நிலைக்கு வந்திருக்கக் கூடுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இரண்டு கட்சிகளிலும், சில தொகுதிகளில், 'மிக அதிக வித்தியாசத்தில்' வெற்றி பெற்றதற்கு காரணம்; தொகுதி மக்களுக்கு சேவை செய்ததன் மூலமா? அல்லது  'திறமையான வலைப்பின்னல்’ மூலமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதே போல், உரத்தநாடு தொகுதியில், ஆளுங்கட்சியில் 'செல்வாக்கான அமைச்சர்' வேட்பாளர், அவரது சொந்த ஊர் தொகுதியில், தொகுதி மக்களிடம் நல்ல பேர் உள்ள தி.மு.க வேட்பாளரிடம் தோற்றதும், ஆய்விற்குரியதாகும். எந்த கட்சியாக இருந்தாலும், சாதாரண மக்களிடம் நல்ல பேர் எடுத்த வேட்பாளர்கள் வெற்றி பெறும் போக்கும் துவங்கியுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளுடன் கடந்த காலத்தில் கூட்டு சேர்ந்து விட்டு, மத்தியில் ஆட்சியில் 'பங்கும் அனுபவித்து' விட்டு, 2016 சட்ட மன்ற தேர்தலில் தோற்ற, கட்சிகளின் தலைவர்களில் சிலர், 'பணநாயகம்' வென்றது' என்று கருத்து தெரிவித்தால், அது சாதாரண மக்களிடம் எடுபடுமா? என்பது ஆய்விற்குரியதாகும்.

'வாக்களிப்பது ஜனநாயக கடமை' என்றும், 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு'என்றும்,  2016 சட்டமன்ற தேர்தலில், இதற்கு முன் இல்லாத அளவுக்கு பிரச்சாரம் நடந்ததானது, மிகவும் பாராட்டத்தக்கதாகும்.

அவ்வாறு பிரச்சாரம் நடந்தும், சென்னையில் வாக்குப்பதிவு ஏன் குறைந்தது?

'வாக்குக்கான பண விநியோகம்' ஆனது, மற்ற இடங்களில் நடந்தது போல அங்கு நடைபெறவில்லையா?

அல்லது மற்ற இடங்களை விட, 'வாக்கிற்கு பணம் வாங்கும் அளவுக்கு', தேவையில்லாத 'நடுத்தர, மேல்தட்டு மக்கள்', மற்ற  பகுதிகளை விட, சென்னையில்  அதிகம் பேர் வாழ்கிறார்களா? அல்லது  'வாக்குக்கான பண விநியோகம்'  நடைபெறாமல் தடுப்பதில், அதிக அளவில், சென்னை கண்காணிக்கப்பட்டதா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியதாகும்.

1996 மற்றும் 2011 சட்டமன்ற தேர்தல்களில் 'கடும் அதிருப்தி' அலையில், ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய போக்கில், சென்னையில் 'நடுத்தர, மேல்தட்டு' மக்களில், அதிகம் பேர் வாக்களித்ததால், வாக்கு சதவீதமானது,  2016 தேர்தலை விட அதிகமாக இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

இந்த தேர்தலில்,  அது போன்றோர்  ஏன்  வாக்களிப்பதில் ஆர்வம் காட்டவில்லை? என்ற கேள்விக்கு, தேர்தலுக்கு முன்னேயே, திரு.தங்கர்பச்சன் குழுவினர் மேற்கொண்ட முயற்சியில் வெளிப்பட்ட, கீழ்வரும் தகவல் கவனிக்கத்தக்கதாகும்.

படித்தவர்கள், வசதியானவர்கள் தான் வாக்களிக்க வருவதில்லை என்பதால், அப்படிப்பட்டவர்களைத் தேடித் தேடி சந்தித்தோம்.

ஊழல்வாதிகளையும், கொள்ளைக்காரர்களையும், மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களையும் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் வேலையையெல்லாம் போட்டு விட்டு வரிசையில் வெயிலில் நின்று காத்துக் கிடக்க வேண்டுமா?” என்று சொன்னவர்களே அதிகம். ‘‘நாங்கள் வாக்களித்தாலும் வாக்களிக்காவிட்டாலும் அப்படிப்பட்டவர்கள் தான் மீண்டும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனும்போது, இந்த வாக்குரிமை எங்களுக்குப் பயன்படாத ஒன்று’’ என்று முகத்தில் அறைந்தது போல் சொன்னார்கள்."

பணம் வாங்கி வாக்குப் போட்டவர்களும்,  அது போன்ற காரணத்தையே சொன்னாலும் வியப்பில்லை.

இந்தியாவில் 2016 சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் நடந்தது. அந்த 5 மாநிலங்களில், தேர்தல் கமிசன் கண்காணிப்பில், கைப்பற்றப்பட்ட சட்டவிரோத பணத்தில்,  தமிழ்நாடு முதல் இடத்தில் இருக்கிறது.


தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்'  (Depoliticize) வளர்ந்த வேகத்தில், ஆதாயத்தொண்டர்கள் 'பலத்தில்', அரசியல் கட்சிகள் பயணித்து வருகிறார்களா?

தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய‌, இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,  'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space)  பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும்  கொள்கை அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,  'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில் ‘செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.

அந்த இரண்டு கட்சிகளிலுமே,  'உழைப்புக்கு  பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றியவர்களே அதிகம் என்றால், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize)  போக்கில்,  தங்களின் அரசியல் வெளியை (Political space) விட்டு, அந்த இரண்டு கட்சிகளும் வெளியேறிவிட்டதை,  அது உணர்த்தாதா?   

அந்த அரசியல் வெளியானது, இப்போதுள்ள கட்சிகளில், அல்லது, புதிதாக தொடங்கும் கட்சிகளில் ஒன்று, ஆக்கிரமிப்பதில் வெற்றி பெற்றால், அந்த கட்சி அடுத்த சட்டமன்ற தேர்தலில், நினைப்பதைவிட எளிதாக, ‌ ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புண்டா?

இப்போதுள்ள கட்சியாக இருந்தாலும், புதிதாக தொடங்கப்படும், கட்சியாக இருந்தாலும், அந்த அரசியல் வெற்றிடத்தை ஆக்கிரமிக்கும், சமூக செயல்நுட்பம் பின்வருமாறு.

1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது.

பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது. 

அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற  முடியாது. அந்த வலைபின்னலை, கட்சிக்குள் தடைகளின்றி,  'முழு அதிகாரத்துடன்'  செயல்படுத்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குப் பின், அ.இ.அ.தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? குடும்பத்துக்குள் தடைகளுடன் செயல்பட்டு, ஆனாலும்  2016 தேர்தலில் 'சாதனை' வெற்றி பெற்றுள்ள ஸ்டாலினுக்குப் பின்,  தி.மு.கவில் அடுத்து யார் இருக்கிறார்? என்ற கேள்விகள்,  அந்த வலைப்பின்னலானது, மரண வாயிலில் நிற்பதை, குறிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967க்குப்பின் அந்த வலைப்பின்னலில், எந்த அளவுக்கு, சுயலாப கள்வர் நோய் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, குடிநீர் பிரச்சினை, சாலை பிரச்சினை,போன்ற இன்னும் பல தெரு/கிராம/உள்ளூர் பிரச்சினைகளும் வளர்ந்துள்ளன. அந்த வலைப்பின்னலை நம்பாமல், பாதிக்கப்பட்ட மக்கள், குறிப்பாக பெண்கள் வீதியில் இறங்கி போராடுவதும், அந்த அளவுக்கு அதிகரித்துள்ளது; அந்த வலைப்பின்னலை 'அரசியல் நீக்கம்'(Depoliticize)  நோய்க்குள்ளாக்கி.

அத்தகைய போராட்டங்கள் ‘மீடியா’ கவனத்தை ஈர்த்தவுடன், அதில் நுழைந்து ‘வெளிச்சம்’ போடுவதும், ‘மீடியா’ கவனம் குறைந்தவுடன், அதிலிருந்து விலகி, அடுத்த ‘வெளிச்சத்தை’ நோக்கி ஓடுவதுமான, 'அரசியல் நாடகங்களின்' காலமும், முடிந்து வருகிறது. அந்த வலைப்பின்னல் மூலம் 'உருவான', 'ஊழல் பணக்காரர்' குடும்ப‌ ஆடம்பர திருமணங்களில் கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றியும்,  'என்னென்ன வழிகளில் சம்பாதித்தார்?' என்பது பற்றியும்,  'கிசு கிசு' பேச்சுகள் அதிகரித்து வருவதும்,  'புதிதாக' அரங்கேறிவரும் 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமுக நகைச்சுவை' ஆகும். அதன் தொடர்ச்சியாக, அந்த 'ஊழல் பணக்காரர்கள்' எல்லாம், 'விலை உயர்ந்த’  காரில்,  தெருவில் செல்லும் போது, தெரு ஓர தேநீர் கடைகளில், அந்த 'கிசுகிசு' பேச்சுக்கள்,  'உரக்க' பேசி, விவாதிக்கப்படுகின்றன. 

அத்தகையோரில்  'அதிபுத்திசாலிகள் சிலர், 'தமிழ், தமிழ் உணர்வு' 'புரவலர்களாக' வலம் வரும்போது, ஆங்கிலவழியில் கல்வி பயிலும்/பயின்ற மாணவர்கள் மத்தியிலும், 'ஆங்கிலத்தில்' பேச 'ஏங்கி வாழும்' சாதாரண மக்கள் இடையிலும், தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருளாகி வருகின்றன. அதே சமுக செயல்நுட்பத்தில், ‘அரசியல் நீக்கம்’ (Depoliticize) போக்கில், தமிழ்/திராவிடக் கட்சிகளின் சமூக அடித்தளமானது ‘அரிக்கப்பட்டு’  வருகின்றன.

மாணவர்களிடமிருந்தும், சாதாரண மக்களிடமிருந்தும், 'அந்நியமாகி' உள்ள போக்கிலிருந்து, தமிழ் அமைப்புகள் மீள வேண்டுமானால், அந்த 'அதி புத்திசாலிகளின் சமூக நோய் தொடர்பிலிருந்து' விடுபட்டு, ஊழல் ஒழிப்பிலும் பங்கேற்று, தமிழ்வழிக்கல்வி அரசு பள்ளிகளை மரண வாயிலிலிருந்து மீட்பதற்கு,  முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும்.

எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற'  இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize)  போக்குடன் தொடர்புடையது?  என்பதும் ஆய்விற்குரியதாகும். 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி,  ‘அரசியல் நீக்கம்'  போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ய்விற்குரியதாகும். கீழ்வரும் அடிமை கலாச்சாரமானது, ‘அரசியல் நீக்கம்' போக்குடன் தொடர்புடையதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“1967-க்கு முன் தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்களும் முதலமைச்சர்களும் ‘காமராசர், பக்தவத்சலம், அண்ணாதுரை’ என்றே அவர்களின் பெயர்களால் அழைக்கப் பட்டார்கள். இன்றைக்குத் திராவிடக் கட்சிகளின் தலைவர்களின் பெயரைச் சொன்னால் அவமரியாதை என்று கருதும் அளவுக்கு அடிமைக் கலாச்சாரப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.”

 (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

கடந்த பாராளுமன்ற தேர்தலில், இரண்டு திராவிடக்கட்சிகளைத் தவிர்த்து, மற்ற கட்சிகளில், அதிக வாக்கு சதவீதம் பெற்று, மூன்றாவது இடம் பிடிக்கும் அளவுக்கு(http://www.dnaindia.com/india/report-in-tamil-nadu-bjp-ranks-third-in-vote-share-1989154 ),  ‘கச்சத்தீவு உள்ளிட்ட  தமிழக மீனவர்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்’, ‘தமிழ்நாட்டு 'ஊழல் பெருச்சாளிகள்' தண்டிக்கப்படுவார்கள்'என்ற எதிர்பார்ப்பை, மோடி ஏற்படுத்தினாரா?

மோடி பிரதமரான பின், அந்த திசையில், அந்த 'நம்பிக்கைகள்', எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் பலகீனமாகியுள்ளதோ, அந்த அளவுக்கு, 2016 சட்டமன்ற தேர்தலில், பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் 'சரிந்துள்ளதா? என்பவையும் ஆய்விற்குரியவையாகும்.  


அந்த நம்பிக்கைகளை பூர்த்தி செய்து, 'பெரியார்' ஈ.வெ.ரா உள்ளிட்டு, தமிழ்நாட்டு 'பிரிவினை' தலைவர்களின் தியாகங்களை, அஸ்ஸாமில் 'அங்கீகரித்துள்ளது' போல அங்கீகரித்து, தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை 'மீட்பதிலும்', உண்மையான அக்கறையை செயல்பூர்வமாக நிருபித்தால்,  'அஸ்ஸாம் வழியில்', தமிழ்நாட்டில், அடுத்த சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க ஆட்சியைப் பிடிக்க வாய்ப்புள்ளது. ( ‘BJP had forged alliance with Assam Gana Parishad and Bodoland People’s Front which are prominent regional players. Their strategic expertise worked in BJP’s favour.’; http://www.abplive.in/india-news/five-reasons-why-bjp-won-assam-assembly-elections-345838)


அஸ்ஸாம் பிரிவினை நோக்கில் பயணித்த சர்பானந்த சோனோவாலை (Sarbananda Sonowal; https://en.wikipedia.org/wiki/Sarbananda_Sonowal ) பா.ஜ.கவில் சேர்த்து, முதல்வர் வேட்பாளராக  முன்னிறுத்தி, ‘பிரிவினை நோக்கில்’  பயணித்த கட்சிகளுடன் 'கூட்டணி' வைத்து, அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இன்றுள்ள சர்வதேச அரசியல் சூழலில், 'பிரிவினையை' கைவிட்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்துக்கு இணக்கமாக(Harmony), 'தமிழர்', 'அஸ்ஸாமியர்' போன்ற இன்னும் பல 'உள் அடையாளங்களை' (Sub-Identity), அந்தந்த மொழி, பாரம்பரியம், பண்பாடுகளுடன் சேர்த்து வளர்ப்பதன் மூலமே, ‘இந்தியர்'  அனைவரும், சாதி/மத/மொழி உள்ளிட்ட ந்த அடிப்படையிலும்,  பாரபட்சமின்றி வளரமுடியும்,  என்பதை நிரூபிக்க, அஸ்ஸாமில், பா.ஜ.கவிற்கு அரிய வாய்ப்பு கிட்டியுள்ளது; வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் ‘பல்வேறு பிரிவினை சூழ்ச்சிகளிலிருந்து’,  இந்தியாவைக் காப்பாற்றி.


ஆனால் தமிழ்நாட்டில், தமது 'உழைப்புக்கு' (?) பலன்கள் எதிர்பார்த்து, திராவிடக்கட்சிகளின் வழியில், ‘குழு அரசியலில்’ பயணிக்கும், தமிழக பா.ஜ.க தலைவர்கள்,  அதற்கு வழி விட்டு ஒதுங்குவது கடினமே. (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’ ; 

http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது.
நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா?


எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.

காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்த, 'அரசியல் நீக்க உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்' ஆனது, 'உரம்' பெற்று வளர்ந்து 
(http://tamilsdirection.blogspot.com/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html), 

இடையில் தமிழ்நாட்டுக்கு வந்து 'சிக்கிய' ஈழ விடுதலை முயற்சியை சீர்குலைத்து, இன்று முற்று பெற்று, அரசியல் வெளியானது காலியாகி, சுயநல நோய்களுக்கு இடமில்லாதவாறு, சரியான அரசியலை எதிர்நோக்கி, வரவேற்க தமிழ்நாடு காத்திருக்கிறது. மேலே குறிப்பிட்ட 'ஊழல் வலைப்பின்னல்' மூலம் வரும் 'லாபங்களை' விரும்பி இழந்து, 'அந்த' வலைப்பின்னலின் வாடையின்றி, உண்மையான சுயமரியாதையுடன் வாழ்பவர்களை, அடையாளம் கண்டு மதிக்கும் போக்கானது,  சாதாரண மக்களிடையே, அதிகரித்து வருவதானது, அதன் அறிகுறியாகும்.

'தமிழ் அழிவு சுனாமி' தொடக்க அறிகுறிகள் பற்றிய புரிதலின்றி 
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html), 

அறிவுபூர்வ விமர்சனம் மூலம் உரிய பாடங்கள் கற்று பயணிக்காமல், ஆங்கிலம் அறியாத, தமிழிலும் புலமையாளர்களின் நூல்களை படிக்கும்  அறிவில்லாத, 'சாகச' நோயில் சிக்கியவர்களின் 'ஆதரவை' பெரிதாக கருதி, 'உணர்ச்சிபூர்வமாக' பயணித்து, 'நோட்டா' வாக்கு சதவீதத்தை விட  குறைவாக ம.தி.மு.கவும், 'நாம் தமிழர்' கட்சியும் பெற்று, (http://www.dinamalar.com/news_detail.asp?id=1526924), வைகோவும்,  சீமானும்,  'அரசியல் முள்ளி வாய்க்காலை'  சந்தித்துள்ளார்களா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சாதாரண மக்களும் சரி; மாணவர்களும் சரி; நேர்மையான சுய சம்பாத்தியத்துடன், 'ஆக்கபூர்வ’ செயல்களில் ஈடுபடுபவர்களையே மதிக்கிறார்கள்.   அறிவுபூர்வ பேச்சுக்களையும், எழுத்துக்களையுமே மதிக்கிறார்கள். 

நேர்மையான சுயசம்பாத்தியமும்,சமூக அக்கறையும் உள்ளவர்கள் தமிழ்நாட்டில் கணிசமாக இருப்பதானது, அண்மையில் வெள்ள நிவாரண முயற்சிகள் மூலம் வெளிப்பட்டது. பொது இடங்களில் திருடுபவர்களையும், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களையும் பொதுமக்களே பிடித்து, உதைத்து, காவல் நிலையத்தில் ஒப்படைக்கும் செய்திகளும் அவ்வப்போது ஊடகத்தில் வெளிவருகின்றன.

ஊழலில் மூழ்கியுள்ள அரசும், சட்டமும், ஒரு  சாதாரண குடிமகனின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை இழந்துள்ள சமுக சூழலை, நன்றாக வெளிப்படுத்திய 'பாபநாசம்' திரைப்படமானது, வியாபார ரீதியில் வெற்றி பெற்றுள்ளதும் ஒரு நல்ல அறிகுறியே ஆகும்.

“ஊழலில் மூழ்கியுள்ள அரசும், சட்டமும், ஒரு  சாதாரண குடிமகனின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை இழந்துள்ள சூழலில், பிணம் தின்னும் கழுகுகள் போன்ற சிற்றினமாக‌, சோரம்  போகாமல், தனது குடும்பத்தை பாதுகாத்து, வாழ்வதற்கு  எவ்வளவு துயரங்கள் அனுபவிக்க வேண்டி வரும்? என்பதை தத்ரூபமாக வெளிப்படுத்திய படம் 'பாபநாசம்'. கூடுதலாக,'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சிக்கும் பங்களித்து வாழ்வது சாத்தியமா? என்பதற்கான‌ விடைகளை, செயல் மூலம் வெளிப்படுத்துமாறு, நாம் எவ்வாறு வாழ முடியும்? என்பதை மேலே பார்த்தோம். 

அவ்வாறு வாழ்ந்து, குற்ற உணர்வின்றி, மனநிறைவுடன் மரணத்தை தழுவ முடியும். ஊழல் வலைப்பின்னலின் வாடையின்றி, உண்மையான சுயமரியாதையுடன் வாழ்பவர்கள் மட்டுமே, தமிழ்நாட்டில் 'போலி மரியாதையில்' சிக்காமல் வாழ்கிறார்கள். 'தமிழ், தமிழ் உணர்வு, தமிழ்வழிக்கல்வி' என்று எழுத்தில், பேச்சில் முழங்கிக் கொண்டு, தமிழ்நாட்டில் தமது குடும்பப்பிள்ளைகளை, ஆங்கில வழியில் படிக்க வைத்து (வெளிநாடுவாழ் தமிழருக்கு வேறு வழியில்லை), திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்க வைத்து, 'சோரம்' போய் சம்பாதித்த செல்வமும், செல்வாக்கும்,  நமது மரணத்திற்குப் பின் என்னாகும்? தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த‌, நமது வாரிசுகளுக்கு, நாம் விட்டுச் செல்லும் களங்கமாக தொடராதா? குற்ற உணர்வுடன் தானே,  நமது மரணத்தை  நாம் சந்திக்க முடியும்? எனவே சோரம் போகாமல் வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது,  'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சிக்கான வாய்ப்புகளும் அதிகரிப்பது உறுதியாகும்.  

Saturday, May 7, 2016


 சட்டமன்ற தேர்தல் முடிந்து, எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும்;

 

    தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்பது சாத்தியமே;  

                           நமது பங்களிப்புடனும்


“எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும்,  அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்தந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருக்கும் அளவுக்கு, கட்சிகள் எல்லாம், 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், 'ஊழல் ஒழிப்பு, மது விலக்கு' தொடர்பான தலைவர்களின் பேச்சுக்களுக்கு என்ன விளைவு இருக்கும்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

( http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html )

மேற்குறிப்பிட்ட 'ஊழல் சங்கமத்தின்'  வினோதமான போக்கு என்னவென்றால், இரண்டு திராவிடக் கட்சிகளில் உள்ள கட்சிக்காரர்களின் 'எதிரிகள்'  எல்லாம், பெரும்பாலும், அந்தந்த கட்சியிலேயே பயணிக்கிறார்கள் என்பதும், அந்த  உட்கட்சிப்போரில், தமக்கு  'ஊழல் சங்கமத்தில்', 'நட்புடன்' இருக்கும் 'அடுத்த கட்சியில்' 'உதவிகள்' பெற்று, அந்த போரை  நடத்துவதுமாகும்.

அதன் தொடர்ச்சியாக, தமது கட்சியில்,  தமக்கு 'எதிரான' வேட்பாளர்கள் என்னென்னை 'தவறுகள்' புரிந்து, எந்தெந்த 'வழக்குகளில்' சிக்கியுள்ளார்? 'சட்டத்திற்கு புறம்பாக' என்னென்ன வழிகளில் சொத்துகள் சேர்த்துள்ளார்? என்பது தொடர்பான புகார்கள், உரிய ஆதாரங்களுடன், கட்சித் தலைமைக்கு அனுப்பப்பட்டு வரும் செய்திகளும்,  ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

(‘திமுக, அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராக படையெடுக்கும் புகார் மனுக்கள்’; http://www.dinamani.com/edition_vellore/vellore/2016/04/16/ )

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள,  'புலனாய்வு வசதிகள்' மூலம்,  மேற்குறிப்பிட்ட ஆதார‌பூர்வமான புகார்கள் எல்லாம், மோடி அரசின் 'உள்துறை' (Home) வசம் வந்து சேர்ந்திருக்க வேண்டும்.  மோடி அரசுக்கு, தமிழ்நாட்டில் ஊழலை ஒழிக்கும் எண்ணமிருந்தால், உரிய விசாரணைகளை முடுக்கி, குற்றவாளிகளை எல்லாம் தண்டிப்பது சாத்தியமே; சட்டமன்ற தேர்தல் முடிந்து, எந்த கட்சி ஆட்சியில் அமர்ந்தாலும்.

தமிழகத்தில் 'நீண்ட கால வதந்தியாக' 'உலா' வரும்,  'எம்.ஜி.ஆர் பார்முலா' (MGR Formula) உண்மையில் செயல்பட்டதா? அதன் அடுத்த கட்டமாக,  ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி எல்லாம் சேர்ந்து, 'ஊழல் சங்கமம்' உருவாகி, வளர்ந்து, 'டாஸ்மாக்' வரை நீண்டுள்ளதா? தமிழக பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக்கட்சிகளில் உள்ள தலைவர்களில் யார்? யார்? அதில் சிக்கி, 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களுடனும்,  கிறித்துவ என்.ஜி.ஓ 'வி.ஐ.பி'க்களுடனும், 'இரகசிய தொடர்பில்', பொதுவாழ்வில் பயணிக்கிறார்கள்? விமர்சனத்திற்கும், துரோகத்திற்கும் இடையிலான வேறுபாடு தெரியாமலும், விமர்சனத்துடன் கூடிய உண்மையான ஆதரவிற்கும், 'ரசிகர்' போர்வையில் 'சுயலாப கள்வர்களை' வளர்த்து செயல்பட்ட‌, 'தூண்டில் மீனுக்கும்' இடையிலான வேறுபாடு தெரியாமலும், தமிழ்நாட்டின் 'ஊழல் சங்கமம்' பற்றிய புரிதலின்றியும், பயணித்து, விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரழிவை சந்தித்தார்களா? (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html) அந்த போக்கில், தமிழ்நாட்டில் உருவான 'புதுப் பணக்காரர்கள்' யார்? யார்? ஆக, கடந்த சுமார் 20 வருடங்களில், கட்சிகளின் அடிமட்டம் வரை,  பல நூறு கோடி சொத்துள்ள அதிபர்கள் உருவாகி, தமிழ்நாட்டை சீரழித்து, வளர்ந்து வந்துள்ளதானது,  அந்த 'ஊழல் சங்கமம்' செயல்நுட்பத்திலா?  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்களும் சிக்கி, சீரழியும் அளவுக்கு, அந்த 'ஊழல் சங்கமம்' செல்வாக்கில் உள்ளதா?என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

தமிழ்நாட்டில் 'ஊழல்' மூலம் பெரும் பணக்காரர்களாக இருக்கும் குடும்பங்களின் 'நிம்மதிக்கு' சவாலாக, சர்வதேச அரசியல் பொருளாதார சூழல் 'வளர்ந்து' வருகிறது. அதை புரிந்து கொள்ள வேண்டுமானால், உலக அளவில் ஊழலை ஒழிக்க வேண்டிய நெருக்கடியில், மேற்கத்திய நாடுகள் 'எந்த அளவுக்கு' பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்? என்பது பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும்.

உலகில் அணுமின் நிலையங்களின் செயல்பாடுகள் காரணமாக,  கதிர்வீச்சு கழிவுகள் எல்லாம் நிரந்தர சேமிப்புக்கு வழியின்றி  அதிகரித்து வருகின்றன. (Currently, there are no permanent disposal facilities in the United States for high-level nuclear waste; therefore commercial high-level waste (spent fuel) is in temporary storage, mainly at nuclear power plants.; http://www.nrc.gov/reading-rm/doc-collections/nuregs/brochures/br0216/ ; Most scientists agree  that the main proposed long-term solution is deep geological burial, either in a mine or a deep borehole. However, almost six decades after commercial nuclear energy began, no government has succeeded in opening such a repository for civilian high-level nuclear waste,; https://en.wikipedia.org/wiki/Radioactive_waste  ) இரண்டாம் உலகப்போரில், சப்பானில் அமெரிக்கா வீசிய 'அணுகுண்டுகள்' காரணமான கதிர்வீச்சில், இன்றும் அந்த நகரங்கள் அதன் 'பாதகங்களை' அனுபவித்து வருகின்றனர். அத்தகைய ஆபத்தான, நீண்ட காலம் பாதிக்கக்கூடிய, 'கதிர்வீச்சு கழிவுகளை',  ‘ஆளில்லா விமானங்கள்’ (Drone) மூலம், அமெரிக்க உள்ளிட்ட, மேற்கத்திய நாடுகளில் உள்ள நகரங்கள் மீது தாக்குதல்கள் நடத்த, பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதானது, அண்மையில் ஊடகங்களில் வெளிவந்துள்ளன,

( ‘Isil plotting to use drones for nuclear attack on West’; “the dangers of Islamic State of Iraq and the Levant (Isil) getting hold of nuclear material was “only too real”.”; http://www.telegraph.co.uk/news/2016/04/01/isil-plotting-to-use-drones-for-nuclear-attack-on-west/ ) 'அமெரிக்க கனவில்' ஆங்கிலவழிக்கல்வியில் படித்து, அமெரிக்காவிலும், மேற்கத்திய நகரங்களிலும், 'செட்டில்' ஆகியுள்ள தமிழ்நாட்டு பிள்ளைகளின்  பெற்றோர்களின் 'நிம்மதியை குலைக்கும் தகவல் இதுவாகும். 

உலக பொருளாதார சீர்குலைவிலிருந்து தப்பிக்கவும், 'ஊழல்' ஒழிப்பானது,  உலக தேவையாகிவிட்டது. (http://www.forbes.com/2009/01/27/corruption-financial-crisis-business-corruption09_0127corruption.html )

எனவே பயங்கரவாத எதிர்ப்பு நோக்கிலும், உலக பொருளாதார பாதுகாப்பு நோக்கிலும்
தமிழ்நாடு, இந்தியா உள்ளிட்டு உலக அளவில் ஊழல்கள் தொடர்பான பண பரிவர்த்தனைகள் எல்லாம், உலக நிதி அமைப்பு (IMF) உள்ளிட்ட பல அமைப்புகளின்,  தீவிர கண்காணிப்பில் உள்ளன.

 ( ‘The IMF and the Fight Against Money Laundering and the Financing of Terrorism’ ; http://www.imf.org/external/np/exr/facts/aml.htm  & http://www.vox.com/2016/4/3/11356326/panama-papers )

இந்தியாவிலும் புதுடெல்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்கள் எல்லாம், பயங்கரவாத தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் தப்பிப்பதும்,  இந்தியாவில் பயங்கரவாதிகளுக்கு உதவி வரும் ஊழலானது,  எந்த அளவுக்கு குறைகிறது? என்பதைப் பொறுத்ததாகும். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைகள், பயன்படுத்திய ஊசிகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை (Bio Medical Waste)  'அழிக்க' ஒரு கி.கிராம் கழிவுக்கு ரூ39 செலவழிப்பதை தவிர்த்து, ரூ49/கி.கிராம் 'லாபத்திற்காக', 'சட்ட விரோதமாக' அந்த‌ 'கழிவுகளை' மீண்டும்,  'திருட்டு வியாபாரிகளுக்கு' விற்பவர்களும், அந்த திருட்டு வியாபாரிகளும் (http://www.newindianexpress.com/states/tamil_nadu/Whistleblower-exposes-dirty-underbelly-of-Chennai-hospitals/2016/05/11/article3426633.ece ), சென்னை வெள்ள பாதிப்புகளுக்கு காரணமான ஏரிகள், ஆறுகள் உள்ளிட்டவற்றை 'திருடிய' ஊழல் பேர்வழிகளும், கிரானைட், தாதுமணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களை சூறையாடி வரும் ஊழல் பேர்வழிகளும், மும்பை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை விட, மோசமான 'சமூக பயங்கரவாதிகள்’ (Social Terrorists)  இல்லையா?

பயங்கரவாத எதிர்ப்பு நோக்கில் அமெரிக்காவும் (https://web.archive.org/web/20090217023833/http://ustreas.gov:80/press/releases/tg22.htm ) ஐரோப்பிய ஒன்றியமும் (https://www.wsws.org/en/articles/2006/06/sril-j02.html ), விடுதலைப்புலிகளுக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் எல்லாம், முள்ளிவாய்க்கால் பேரழிவுக்கு எந்த அளவுக்கு பங்களித்தன? என்பதும் ஆய்விற்குரியதாகும். சர்வதேச ஊழல் வலைப்பின்னலில் 'சிக்கி' பயணிக்கும், 'ஆயுத போராட்டங்கள்' எல்லாம், 'பயங்கரவாத ஊழல் எதிர்ப்பு' நடவடிக்கைகளிலிருந்து தப்புவது கடினமே. 

அது மட்டுமல்ல, 'டிஜிட்டல் யுகத்தில்',  'ஊழல்கள்' மூலம் சொத்து சேர்ப்பவர்களின் உரையாடல்கள், பண பரிவர்த்தனைகள், உள்நாட்டு/வெளிநாட்டு பயணங்கள் அனைத்துமே 'டிஜிட்டல் தடயங்களாக', எப்போது வேண்டுமானாலும், 'சரியான திசையில்' முயற்சிப்பவர்களுக்கு, கிடைக்கும் 'வசதிகளும்' உள்ளன. எனவே உண்மையில் ஊழலை ஒழிக்கும் எண்ணம் அரசுக்கு இருந்தால், அது எளிதில் சாத்தியமே. அரசே தடையாக இருந்தால், அந்த தடைகளை மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அகற்றுவதும் சாத்தியமே.

தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய ‘பெரியார்’ ஈ.வெ.ராவின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதி,  அகற்றிய வைத்தியமானதன் விளைவாக;

'ஊழல்' தீனியில், 'ஆங்கிலவழிக் கல்வியானது', 'புற்றீசல்' போல, 'தமிழ் வேர்க்கொல்லியாக', வளர்ந்துள்ள நிலையிலும்,  'பெரியார்' கட்சிகள் எல்லாம், 'ஊழல் ஒழிப்பில்' அக்கறையின்றி பயணித்து வருவதும், அதே 'ஊழல் தீனியில்',  'பெரியார் சமூக கிருமிகள்', 'சமூக பயங்கரவாதிகளாக', வளரக் காரணமானதா? 1944இல் ஈ.வெ.ரா, தனது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations) பற்றிய புரிதலின்றி சறுக்கி, 'சிற்றினம்' செல்வாக்கு பெற வழி வகுத்து, ராஜாஜி அதை உரமூட்டி வளர்த்து, 1967க்குப்பின் தமிழ்நாட்டு சமூகம் ஆனது, சீரழிவு போக்கில் சிக்கியதால், 'ஊழல் தீனியில்',  'பெரியார் சமூக கிருமிகள்', குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை சீர்குலைக்கும் 'சமூக பயங்கரவாதிகளாக', வளர்ந்தார்களா? (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )  என்பதும் ஆய்விற்குரியதாகும்

தமிழ்நாட்டில் 'ஊழல் சங்கமத்தில்',  ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சியின் விளைவாக, ஆங்கில அறிவும், கல்வியின் தரமும் நம்பமுடியாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. 'திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்காமல், ஆங்கில வழியில் படிக்க வைக்க வசதியிருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பவர்களே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள். அத்தகையோர் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு கிட்டும்.' ( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) 'ஊழல் சங்கமத்தில்', குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், வேலைவாய்ப்புகளும் பெற்று, அந்தந்த பிரிவுகளில் பெரும்பாலும் படித்த, வசதியான குடும்பப்பிள்ளைகள் எல்லாம் 'இடஒதுக்கிட்டின்' பலன்களை பெரும்பாலும் அபகரித்து, ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளுக்கு 'சமூக நீதி' மறுக்கப்படுவதன் மூலம், 'ஊழல் சங்கமத்தில்', 'சமூக நீதியும்' காவு போகிறது. ( http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2016-02-11T23:42:00-08:00&max-results=7&start=13&by-date=false )

'ஊழல் தீனி பெரும் பசியாளர்களின்' ஆட்டம் அடங்கும் வகையில், தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்பது சாத்தியமே,  என்பதை அடுத்து பார்ப்போம். 

“அரசியல் நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வந்து, (சென்னை வெள்ளத்தில் மீட்பு மூலம் வெளிப்படுத்திய ஆர்வத்தின் தொடர்ச்சியாக‌) 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க, இளைஞர்கள், எளிதில் 'ஊழல் தொடர்பான' தகவல்களை தேடி பெற வாய்ப்புள்ள‌ 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில், 'ஊழல் சொத்துக்களை' பறிமுதல் செய்து, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் போக்குகளுக்கான வாய்ப்புகள் ('அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக கண்ணுக்கு தெரியாமல்,  உள்மறையாக (Latent) ) கனிந்து வரும் சூழலில்; (by 2005 Nigeria had recovered $1.2 billion stolen by former President Sani Abacha by requesting assistance from multiple jurisdictions including Switzerland, Jersey, and Liechtenstein;  https://en.wikipedia.org/wiki/International_asset_recovery )” என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html )

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றுகின்ற தமிழ்நாட்டு இளைஞர்களில், யார்? யார்? 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க விரும்புகிறார்களோ, அவர்களெல்லாம் , ஒருங்கிணைந்து' செயல்பட்டு, 'ஊழல் பெருச்சாளிகளுக்கு' எதிரான  ஆதாரங்களை திரட்டுவதும் சாத்தியமே. அந்த முயற்சிக்கு உலக அளவில் 'எதிர்பாராத' அளவுக்கு, 'உதவிகள்' கிடைக்க வாய்ப்புள்ள சர்வதேச அரசியல் பொருளாதார சூழல் நிலவுவதையும், மேலே பார்த்தோம்.

எனவே தமிழ்நாட்டை 'ஊழல் வெள்ளத்திலிருந்து' மீட்க மோடி அரசுக்கு, 'தடைகள்' ஏதும் இருந்தாலும் ( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html & http://indiafacts.org/lessons-from-bjps-bihar-election-fiasco/), தமிழ்நாட்டு இளைஞர்களின் செயல்பாடுகள் காரணமாக, அந்த தடைகள் நீங்கி, மோடி அரசானது, தமிழ்நாட்டை ஊழல் வெள்ளத்திலிருந்து மீட்க, 'சுறுசுறுப்பாக' செயல்பட போவதும் சாத்தியமே;  கீழ்வரும் தகவல் தரும் நம்பிக்கையிலும்.

2008இல்(காங்கிரஸ் ஆட்சியில்) இந்தியாவின் மொத்த உள்நாட்டு  உற்பத்தியில் அபகரித்து, 18% ஆக (index of crony capitalism) இருந்த  'ஊழல் பணக்காரர்கள்' எண்ணிக்கையானது, மோடி ஆட்சியில் 3% ஆக குறைந்துள்ள தகவலை, இந்துத்வா எதிர்ப்பு இதழே வெளியிட்டுள்ளது. (http://timesofindia.indiatimes.com/business/india-business/Crony-wealth-in-India-3-of-GDP-from-18-in-2008-The-Economist/articleshow/52180205.cms )
 


நமது சமூக வட்டத்திலுள்ள 'ஊழல்' பூனைகளுக்கு, அந்த பூனைகளின் தயவால் நாமடையும் 'பலன்களை' இழப்பது பற்றிய கவலையின்றி, மணி கட்டினால், ஊழல் பூனைகளின் சமூக சுவாசத்திற்கான, 'சமூக ஆக்சிஜன்' வற்றி,  ஊழல் பூனைகளின் ஆட்டம் அடங்கும்,  என்பதையும்,  ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_25.html )

தமிழக பா.ஜ.கவானது 'திராவிட அரசியல் நோய்களிலிருந்து' விடுபடவில்லையென்றாலும் (தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் திராவிடச் சிக்கல்கள்’ ; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html ) ;

'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்காக', குடும்ப/வாரிசு அரசியலில் சிக்காமல், 'சுயலாப' நோக்கின்றி, 'உணர்ச்சிபூர்வ' போக்கை விடுத்து, 'அறிவுபூர்வமாக' செயல்படும் கட்சிகள் எதுவும் இதுவரை இல்லையென்றாலும்;

அதே இளைஞர்கள் மூலம் அந்த குறையும் நீக்கப்படும். 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' 'மீட்சிக்கான வெளிச்சம்' ஆனது, 'பார்க்கத் தெரிந்தவர்களுக்கு'  (திருக்குறள் 573 ) தெரியத் தொடங்கியுள்ளது; அரசியல் நீக்கம் (Depoliticize) முடிவுக்கு வரும் காலமும், நெருங்கிக் கொண்டிருக்கிறது.