Tuesday, June 28, 2016



இருட்டறையில் 'இல்லாத' கறுப்புப் பூனையை தேடும் வேலை தொடர வேண்டுமா?


         கீழ்வரும் கருத்துக்களை விளக்கியுள்ள ஆங்கில கட்டுரை ;

                  Why Devdutt Pattanaik Is Mostly Wrong
                                 Aravindan Neelakandan

1.   மேற்கத்திய 'ரேஸ்'  (Race) என்ற சூழ்ச்சியில்,  'இந்து', 'இந்துத்வா' சிக்கவில்லை. 'ஆரிய இனம்' என்பது 'இருட்டறையில் இல்லாத‌ கறுப்புப் பூனையை தேடும் வேலை' என்பதே ஆர்.எஸ்.எஸின் நிலைப்பாடு ஆகும்.
““Did the Aryans and their original home exist?” It concludes that such a quest is “searching for something which simply does not exist” like “searching for a black cat in a dark room which is not there.”

2.   அரவிந்தர் 'ஆரிய இனம்' என்ற கருத்தை ‘அபத்தம்’ என்றும்,’போலி அறிவியல் முடிவு’ (pseudo-scientific conclusions)  என்றும் விளக்கியுள்ளார்.

3.    'ஆரிய இனம்' என்ற கருத்தானது , ‘தமக்கு விருப்பமான கற்பனை கருதுகோளின் அடிப்படையிலான, அறிவியல் ஆராய்ச்சி மோசடி’ (“based on nothing but pleasing assumptions and inferences based on such assumptions” and that it was “a perversion of scientific investigation”. )  என்று அம்பேத்கார் கருத்து தெரிவித்துள்ளார்.

4. முஸ்லீம்களை 'அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாக' 'இந்து' தேசியவாதிகள் கருதவில்லை. ‘தீண்டாமை கொடுமைக்கு இந்து சமூகமே காரணம்’  என்றும், ‘அதை ஒழிக்க வேண்டும்’ என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்த, கொல்வால்கரும், தியோரஸும் கண்டித்துள்ளார்கள். (Hindu nationalists do not consider Muslims of India alien invaders. And both Golwalkar and Deoras, the second and third heads of RSS, squarely blamed Hindu society for the evil of untouchability and took the responsibility of removing it.)

மேற்குறிப்பிட்டதற்கு முரணாக 'இந்துத்வா' சார்பாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களுக்கும் சான்றுகள் இருக்கலாம்.

எதிரெதிரான நிலைப்பாடுகள் உடையவர்களில், திறந்த மன‌தும், அறிவுநேர்மையும் உடையவர்கள் எல்லாம், ஒருவரையொருவர் மதித்து, 'பிறர் பார்வை அறிதலை' (empathy:ability to understand and share the feelings of another.) அகவயப்படுத்தி, அறிவுபூர்வ விவாத திசையில் பயணிப்பார்கள். அதற்கு மாறாக, ஒருவரையொருவர் இழிவு செய்து, உணர்ச்சிபூர்வ விவாத திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் செனோபோபியா மனநோயில் சிக்கியவர்கள் ஆவர்.

தவறிழைத்தவர்களை பாரபட்சமின்றி அடையாளம் கண்டு, சட்டபூர்வ தண்டனைக்குட்படுத்துவதில் கவனம் செலுத்தாமல்;

அவர்கள் சார்ந்த சாதி, மதம், மொழி, இனம், நாடு அடிப்படைகளில், அந்த பிரிவு மக்கள் அனைவரையும்,  எதிரியாக கருதுவது என்பது 'செனோபோபியா' (xenophobia) எனும் குணப்படுத்தக்கூடிய மனநோயாகும். (http://www.medindia.net/patients/patientinfo/xenophobia-medical-treatment.htm ) தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகளை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் மனிதர்களும், கட்சிகளும், இந்த வகை மனநோயில் சிக்கும் வாய்ப்பும் அதிகமாகும். "சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.”
(http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) எனவே அறிவுபூர்வ விவாதங்களை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வ போக்குகளை ஆதரிப்பவர்கள் எல்லாம், எந்த கட்சியில்/கொள்கையில் இருந்தாலும், சமூக குற்றவாளிகளே (அல்லது வெளிநாட்டு/உள்நாட்டு சுயநல சக்திகளின் 'கங்காணிகளே') ஆவர். உணர்ச்சிபூர்வ போதையில், அத்தகையோரின் 'சுயரூபங்களை' கண்டுபிடிக்கும் அறிவின்றி, தம்மை அழித்துக்கொள்ளும் 'விட்டில் பூச்சிகளின்' எண்ணிக்கையே, உணர்ச்சிபூர்வ கட்சிகளின் பலமாகும். நல்லவேளையாக, தமிழ்நாட்டில் 'விட்டில் பூச்சிகளின்' எண்ணிக்கையானது, ‘அதிவேகமாக’ குறைந்து வருவதானது, 'தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின்' மீட்சிக்கான நல்ல அறிகுறியாகும்.

'கடந்த கால அடிமைகளாக' வாழாமல், கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு தம்மை உட்படுத்திக்கொண்டு,  'ஆக்க பூர்வ வளர்ச்சி' நோக்கி, அறிவுபூர்வமாக‌ பயணிப்பவர்கள் எல்லாம், 'உடன்படும்' கருத்துக்கு ஒத்து வருபவர்களை ஒருங்கிணைத்து பயணிப்பதே,  புத்திசாலித்தனம் ஆகும்.

சுயநல உள்நோக்கத்தோடு 'ஒத்து' இருப்பது போல், நம்முடன் பயணிப்பவர்கள் எல்லாம், தமது சுயநலத்திற்கு ' வாய்ப்பு’ கிட்டும் போது, தமது 'இழிவான சுயரூபத்தை' வெளிப்படுத்தி அம்பலமாவார்கள், என்பது, எனது 'திருச்சி பெரியார் மையம்' அனுபவமாகும்.  (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

எனவே ‘அதற்கும் வாய்ப்புண்டு’ என்ற எச்சரிக்கையுடன், மேற்குறிப்பிட்ட வகையில், 'உடன்படும்' கருத்துக்கு ஒத்து வரும் 'இந்துத்வா'ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களை  ஒருங்கிணைத்து,  பயணித்தால் மட்டுமே, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு, சுயலாப நோக்கின்றி,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். எனது ஆய்வுப் பணிகளுக்கிடையில், அதற்கும் நேரம் ஒதுக்கி, நான் முயற்சித்து வருகிறேன்; ‘இந்துத்வா’ ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள,  'சுயநல சமூக கிருமிகளை' அடையாளம் கண்டு, ஒதுக்கி; அதனால் வரும் இழப்புகளையும் விரும்பி ஏற்று; தமிழ்நாட்டை சீரழித்து வரும் பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளுக்கும் அடிமையாகாமல்; தமது அறிவு, திறமைகளை எல்லாம், 'பாராட்டு, புகழ், செல்வம்' நோக்கில் 'விலை பேசி'யும், வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்களுடன், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் 'பலன்கள்'(?) அனுபவித்தும், 'வித்தியாசமான‌ விபச்சாரிகளாக',   வாழாமல்.

விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்து,  'அறிவில்' சாதனையாளர்களாகும் வாய்ப்பை இழந்து, (தாய்மொழிவழி அடிப்படைக் கல்வியை இழந்ததால்; http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html ), இன்று தமிழில் தமிழ்நாட்டில் சரளமாக எழுத படிக்க தெரியாத மாணவர்களை, நான் சந்தித்து வருகிறேன். தமிழில் பழந்தமிழ் இலக்கியங்களை படிக்கும் அளவுக்கு அறிவின்றி, ஆங்கில நூல்களையும்/இதழ்களையும் படிக்கும் அறிவின்றி, சராசரி பொது அறிவின் அடிப்படையில், கேள்விகள் கேட்டு, 'பெரியார்'/முற்போக்கு ஆதரவாளர்களாக வலம் வருபவர்கள் எல்லாம், இன்றைய மாணவர்களின் கேலிப்பொருளாகும் வாய்ப்பும்,  அதிகரித்து வருகிறது.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )

தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் குடும்பங்களில், தத்தம் தாய்மொழிகளில் 'அப்பா, அம்மா' என்று அழைத்து, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு வெளிப்படுவதும்;

தமிழ்நாட்டு கிராமங்களில் கூட, ஆங்கில வழி 'விளையாட்டுப் பள்ளிகளின்' (Play School) புற்றீசல் வளர்ச்சி  மூலமாக, 'மம்மி, டாடி' அரங்கேறி, குடும்ப உறவுகளில் இயல்பான அன்பு சீர்குலைந்து, 'சுயநல மனித மிருக போக்கு' அதிகரித்து வருகிறது என்பதும்;


எனது அனுபவத்தில் வெளிப்பட்டுள்ளது; மனிதர்களாக பழகுவதற்குள்ள தகுதியையும் தமிழர்களில்  பலர் இழந்து வருகிறார்களா? என்ற கேள்வியும் எழுந்துள்ள சூழலில்.


சுயலாப நோக்கமின்றி, 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சியில் அக்கறையுள்ள ஒவ்வொருவரும், தலைவர்களையும் கட்சிகளையும் எதிர்பார்க்காமல், தம்மால் இயன்ற முயற்சியை,  தாமதமின்றி தொடங்க வேண்டும். இது தொடர்பாக, திரு.வி.க 1920களிலேயே முன் வைத்த, கீழ்வரும் கோரிக்கையும் கவனிக்கத் தக்கதாகும். 

"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது.  தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்".  திரு.வி.க 18-4-1928; தமிழ்ச்சோலை
( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8); காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க‌ உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம்?; http://tamilsdirection.blogspot.in/2015/07/normal-0-false-false-false-en-us-x-none.html )

எனது முயற்சி தோற்றால், அல்லது இது போல வேறு எவரும், எனக்கு தெரியாமல் முயன்று தோற்றால்;

தமிழ் வேரற்ற தமிங்கிலீசர்கள் நாடாக, 'தரகர்களும், நத்தி பிழைப்பவர்களும், கூலிகளும், திருடர்களும்' மிகுந்த நாடாக தமிழ்நாடு மாறும்; ('குடிசைத் தொழிலாக மாறிய செம்மரக் கடத்தல்'; http://www.dinamalar.com/news_detail.asp?id=1562009 )
தமிழ்நாட்டில்  புலமையாளர்கள் எல்லாம், பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டில் குடியேறியவர்களாக இருக்க. ( ‘'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (2); தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

குறிப்பு:  'அரவிந்தன் நீலகண்டனுடன் ஒரு தலித் இளைஞர் – நேருக்கு நேர்' 
http://www.vinavu.com/2014/07/18/aravindan-neelakandan-encounters-a-dalit-youth/
பாராட்டத்தக்க வகையில், அறிவுபூர்வமாக நடந்துள்ள இந்த உரையாடலை வரவேற்கிறேன். அது போல, எனது பதிவுகளில் உள்ள நிலைப்பாடுகளுக்கு எதிரான கேள்விகளை வரவேற்கிறேன்.

Sunday, June 26, 2016


இரண்டு கொலை செய்திகள்:

'மறைமுக பங்களிப்பு சமூக குற்றவாளிகளாக', நாம் இருக்கிறோமா?



முதல் செய்தி:

“கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரங்கசாமியும், ரவிக்குமாரும் மது அருந்திக்கொண்டு இருந்த போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ரவிக்குமார், ரங்கசாமியை அருகில் கிடந்த கல்லை எடுத்து தலையில் அடித்ததாக தெரிகிறது. இதில் ரங்கசாமி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரவிக்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் விடுதலை ஆனார்.

சிறையில் இருந்து வெளியே வந்த ரவிக்குமார் காளிபாளையத்துக்கு சென்றார். ரங்கசாமி வீட்டுக்கு சென்ற அவர் எனக்கு எதிராக சாட்சி கூறிய உன்னையும், உன்னுடைய குழந்தைகளையும் கொல்லாமல் விடமாட்டேன் என்று சுகந்தாமணியை மிரட்டியுள்ளார். 

இந்நிலையில் நேற்று காலை வேலை சென்ற சுகந்தாமணி பேருந்து நிலையம் அருகே ரவிகுமார் போதையில் வருவதை பார்த்த சுகந்தாமணி, ரவிக்குமாரின் தலையில் கீழே கிடந்த கல்லை எடுத்து அவர் தலையில் தாக்கினார். இதனால் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ரவிக்குமார் இறந்தார்.”

இரண்டாவது செய்தி :

“சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பயணிகள் கண்ணெதிரே ஐ.டி. பெண் ஊழியர் சுவாதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளியை விரைவில் பிடித்துவிடுவோம் என ரயில்வே காவல்துறை டிஐஜி பாஸ்கர் தெரிவித்துள்ளார்…………..அவர் மேலும் கூறும்போது, "இந்த கொலையை செய்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவராகவும் இருக்கக்கூடும். ரயில் நிலையத்தில் சுவாதியுடன் பேசிக் கொண்டிருக்கும்போதே திடீரென்று வெட்டிவிட்டு ரயில் நிலையத்தில் இருந்தவர்கள் உதவிக்கு வரும்முன் தப்பி சென்றிருக்கிறார். எனவே அந்த நபர் கூலிப்படையைச் சேர்ந்தவனாக இருக்கலாம். இந்த கொலை குறித்து பொதுமக்கள் தகவல் ஏதும் தெரிந்தால் காவல்துறைக்கு தெரிவிக்கலாம்" என்றார்.”

முதல் செய்தியில் கைது செய்யப்பட்ட கொலையாளியானவர், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்பதால் சில நாட்களுக்கு முன்பு ரவிக்குமார் விடுதலை ஆனார்."

முதல் செய்தியில் கொலையாளியை, கொலையுண்டவரின் மனைவி கொலை செய்து விட்டு, போலீசில் சரணடைந்துள்ளார். "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை" என்பதால், அவர் விடுதலை ஆவாரா? இல்லையா? என்பதும், வழக்கின் முடிவில் தெரியும்.

இரண்டாவது செய்தியின்படி, கொலையாளி  கைதானாலும், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை என்ற விடுதலை ஆவாரா? மாட்டாரா?  என்பதும்,  வழக்கின் முடிவில் தெரியும்.
இரண்டாவது செய்தியில் கொலையாளி  கைது செய்யப்பட்ட பின், வெளிவந்துள்ள கருத்து வருமாறு:

“கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றால், மூன்று மாதங்களில் ஜாமினில் வந்து விடுகின்றனர். சிறைக்கு சென்றதால், தங்களை பார்த்து அனைவரும் பயப்பட வேண்டும் என, ரவுடியாக மாறி விடுகின்றனர். தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனையாக வழங்க வேண்டும். தண்டனையில் இருந்து, யாரும் தப்பிக்க முடியாத அளவுக்கு சட்டத்தை மாற்ற வேண்டும்.”- ஆட்டோ ஓட்டுனர்.

குற்ற வழக்குகளில், காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி ஆகிய மூவரில் ஒருவரோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்டவர்களோ, 'ஊழல் நோயில்' சிக்கியிருந்தால், "இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை" என்று குற்றவாளி விடுதலையாவதற்கும், அல்லது குறைந்த தண்டனை பெறுவதற்கும் வாய்ப்புண்டு. குறைந்த தண்டனை பெற்றாலும், சிறை அதிகாரிகள் 'ஊழல் நோயில்' சிக்கியிருந்தால்,  அந்த சிறை தண்டனையானது, 'சுகவாழ்வாக' அமையவும் வாய்ப்புண்டு.
 

1967க்கு முன் இவை போன்ற கொலை வழக்குகளில்;

"இந்த வழக்கில் போதிய சாட்சிகள் இல்லை"

என்று கொலையாளிகள் விடுதலையான புள்ளி விபரங்களை;

1967க்கு பிந்திய இவை போன்ற  புள்ளி விபரங்களோடு ஒப்பிட்டு,  ஆராய வேண்டியது அவசியமாகும்;

இனிமேலாவது கொலை செய்பவர்களுக்கும், கொள்ளையடிப்பவர்களுக்கும்,
சட்டத்தின்  மேல்  பயம் வர வேண்டுமானால்.

1944இல் தி.க தோன்றவில்லையென்றால், 1949இல் தி.மு.க தோன்றியிருக்குமா? 1949இல் தி.மு.க தோன்றவில்லையென்றால், 1967இல் ஆட்சி மாற்றம் நடந்திருக்குமா?

எனவே, மேற்குறிப்பிட்ட ஆய்வில்;

1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின், தமிழ்நாட்டில் 'திராவிட' அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் 'அரவணைப்பில்' உருவாகி,   'காவல்துறை, அரசு வக்கீல்,  நீதிபதி,  சிறை உள்ளிட்ட‌ துறைகளில் 'கறுப்பு ஆடுகள் ஊழல் வலைப்பின்னல்' வளர்ந்துள்ளதா? என்பதும் இடம் பெற வேண்டும்.

அந்த வலைப்பின்னலில் 'பெரியார்' முகமூடியுடன் இடம் பெற்று, புதுப் பணக்காரர்களாக வலம் வரும் சமூக கிருமிகள் யார்? யார்? 

அந்த கிருமிகளின் எடுபிடிகளாக 'துணை பலன்' அனுபவித்தவர்கள் யார்? யார்?

என்ற ஆராய்ச்சியை,  சுயலாப நோக்கற்று, சமூக பொறுப்புடன் வாழும் 'பெரியார் கொள்கையாளர்கள்' தொடங்க வேண்டியது, அவர்களின் சமூக கடமையாகாதா?;

தமிழின் மரணப்பயணத்திற்கும், 'பெரியார்' முகமூடி சமூக கிருமிகளின் பிடியில், தமிழர்களின் சீரழிவிற்கும், காரணமான வரலாற்று குற்றவாளியாக, 'பெரியார் கட்சிகள்' முத்திரை குத்தப்படுவதை, தவிர்ப்பதற்காகவும்;  திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா?  அல்லது சமூகத்திற்கு கேடாக, திரிந்து விட்டதா? தமிழ்நாட்டில் குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளில், 'பணத்துக்காக' சீர்குலைவுகள் அதிகரிக்கும் வேகத்தில், முதியோர் இல்லங்களும், கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பங்களில் வன்முறை, கொலை, தற்கொலைகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவதும், உண்மையா? அதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்தால், அந்த நோயின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க வளர்ச்சிக்கும், தொடர்பு உண்டா?  என்ற கேள்விகளும் எழுந்துள்ள சூழலில். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

“நமது சமூக வட்டத்தில் உள்ள, 'பெரியார்' முகமூடி 'சமூக ஆற்றல் உறிஞ்சிகள்', எவ்வாறு 'ஒழுக்கக்கேடான' முறைகளில், 'செல்வம், செல்வாக்கு' ஈட்டியுள்ளனர்? என்று ஆராய்ந்து, அந்த சமூக கிருமிகளை அகற்றாவிடில், அவர்களின் செல்வம், செல்வாக்கில் மயங்கி, நாமும், நமது குடும்பம், சுற்றம் உள்ளிட்ட‌ நமது சமூக வட்டமும், அந்த நோயில் சிக்குவதை தவிர்க்க முடியுமா? அக்கிருமிகளிடம் 'லாபத்தில் பங்கு' பெற்று வாழ்வதை விட, இழிவான வேறு வாழ்க்கை  உண்டா? ஏரிகள், கால்வாய்களை, 'ஊழல் கோரப்பசியில்' 'முழுங்கி', தமிழ்நாடு வெள்ளத்தில் மூழ்கி பல உயிர்கள் பலியானது; 'டாஸ்மாக்' மூலம் மாணவிகள் வரை பள்ளிகளிலேயே குடித்து சீரழிவது; மவுலிவாக்கம் பலமாடி கட்டிடம் இடிந்து பல உயிர்கள் பலியானது; 'காவல்துறை, அரசு வக்கீல், நீதிபதி, சிறை உள்ளிட்ட‌ ஊழல் வலைப்பின்னலின்' 'பங்களிப்பால்', 'தண்டனை பயம்' குறைந்து, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, மோசடிகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவது; பற்றியெல்லாம் கவலைப்பட நமக்கு அருகதை இருக்குமா, 'மறைமுக பங்களிப்பு சமூக குற்றவாளிகளாக' நாம் இருக்கையில்?”; இதே நிலை நீடிக்குமானால், எதிர்காலத்தில் நமது குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும், இரண்டாவது செய்தியில் கொலையுண்ட சுவாதியை போல, கொலை செய்யப்படவும் வாய்ப்பிருக்கிறது, என்ற நினைப்பின்றி.
( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

குறிப்பு: 

இரண்டாவது செய்தியிலுள்ள, நுங்கம்பாக்கம் கொலையை நேரில் பார்த்த பயணியாக, நான் இருக்க நேரிட்டிருந்தாலும், அந்த வழக்கில் சாட்சியாக நான்  விரும்ப மாட்டேன்: ஏற்கனவே தமிழ்நாட்டு நீதி மன்றங்களில் நான் பெற்ற கசப்பான அனுபவங்களின் காரணமாக.( http://www.driftline.org/cgi-bin/archive/archive_msg.cgi?file=spoon-archives/third-world-women.archive/third-world-women_2002/third-world-women.0205&msgnum=1&start=1&end=442http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )


'சென்னைக்கு பக்கத்து மாவட்டத்துல இருக்கிற ஒரு போலீஸ் ஸ்டேஷன்ல, புகாரோட யார் வந்தாலும், அங்க இருக்கிற சிறப்பு எஸ்.ஐ., உற்சாகம் ஆகிடுதாரு... 'இதை நானே விசாரிச்சு முடிக்கேன்'னு, சொல்லி புகாரை வாங்கிடுதாரு வே... கையோட எதிர்தரப்பை பார்த்து, பேரம் பேசி, ஒரு தொகையை கறந்துட்டு, புகார் கொடுத்தவங்களுக்கு எதிராவே செயல்படுதாரு... ''சமீபத்துல, பாண்டூர்ல அடிதடி கேஸ்ல மாட்டினவனை, பேரம் பேசி பணத்தை வாங்கிட்டு, வழியிலேயே விடுவிச்சிட்டாரு வே...அந்த குற்றவாளி, தனக்கு எதிரா புகார் கொடுத்தவரை கத்தியால குத்திட்டு தப்பிச்சு ஓடிட்டான்... 
''அதிகாரிக்கு, ஸ்டேஷன் உயர் அதிகாரியும் உடந்தையா இருக்கிறதால, நேர்மையான போலீசார் எதுவும் செய்ய முடியாம புலம்புதாவ...'

http://www.dinamalar.com/splpart_detail.asp?id=91


Saturday, June 25, 2016



"ஏன் இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மற்ற மதத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள், பயமா?"

என்ற கேள்விக்கு நான் அறிந்ததை விட, கூடுதல் தகவல்கள் உள்ள, அறிவுபூர்வமான விளக்கம் கீழே.  

இதனை எனக்கு அனுப்பிய திரு.அரசு.எழிலனுக்கு (arasezhilanpr@gmail.com)  நன்றி.

இதனை எனது சமூக வட்டத்தில் உள்ள இந்துத்வா ஆதரவாளர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது எனது சமூக கடமையாகும்.

இந்துத்வா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே அறிவுபூர்வமாகவும், ‘பிறர் பார்வை அறிதல்’ (Empathy) அணுகுமுறையில் ஆரோக்கியமாகவும், விவாதங்களை முன்னெடுப்பதன் மூலமாக‌;

'உணர்ச்சிபூர்வ' இரைச்சல் துணையுடன், 'சுயநல கள்வர்களாக', எதிரெதிர் முகாம்களில் 'பிழைப்பவர்களை',  ஓரங்கட்டி, ஒதுக்க முடியும்.

அதன்மூலம் 'தமிழ், தமிழர், தமிழ்நாடு'  மீட்சிப் பாதையில் பயணிக்கும், என்பதும், என் கருத்தாகும். 

சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் 'மீட்சிக்கான' திசையில் முயலும்  'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து விட்டது என்பதும், என் கருத்தாகும்.
                                              --------------------------------

ஏன் இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மற்ற மதத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள் பயமா?

இப்படியொரு வினா தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாதிகளால் கேட்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக் கேட்டுக்கொண்டே வருகின்றனர். இந்துத்துவத்துக்கு ஆட்படாத இந்துமத நம்பிக்கையாளர்களும்கூட இப்போது இக்கேள்வியைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கான பதில் இது.

கடவுள் இல்லை என்கிற போதே அது எந்த மதக்கடவுளும் இல்லை (இயேசு, அல்லா உள்பட) என்றுதான் பொருள். நாங்கள் எந்தக் கடவுளுக்கும் விதிவிலக்குக் கொடுக்கவில்லை.
அது மிகச்சிறந்த அறிவாளிகளான உங்களைப்போன்றோருக்குத்  தோன்றவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?

இசுலாம் மதத்தை விமர்சித்து குரானை மறுத்து பெரியார் தொண்டர் தோழர் புவனன் எழுதிய “குரானோ குரான்”  நூலும் , இசுலாம் மதத்தை விமர்சித்து பெரியார் தொண்டர் தோழர் எஸ். டி. விவேகி எழுதிய ”வேதமும் விஞ்ஞானமும்”  நூலும், இசுலாம் மதத்தை விமர்சித்து “பிரபஞ்சமே கடவுள்” என்ற நூலும், தோழர் சாகித் இசுலாம் மதத்தை விமர்சித்து எழுதிய “அடிமை - அல்லாவின் ஆணை” , “ஆத்மாவும் அதுபடும் பாடும்” ஆகிய இரு நூல்களும் தோழர் தஜ்ஜால்  இசுலாம் மதத்தை விமர்சித்து எழுதிய “ஆரம்பத்தை நோக்கி”  என்ற நூலும்  டாக்டர் அலி சினா எழுதிய ”முகமதுவையும் முஸ்லிம்களையும் அறிவோம்” (தமிழில் மொழிபெயர்த்தவர் சிராஜ் அல் ஹக்) என்ற நூலும் இன்னும் பிற நூல்களும் இசுலாத்தை விமர்சித்து தமிழில் வந்த நூல்கள். இபின் வராக்  எழுதிய “Why I Am Not A Muslim” போன்று ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் உள்ளன. கிறித்தவ மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட “கிறித்தவர்கள் சிந்தனைக்கு” (ஜார்ஜ்) ”பாதிரியும் பாவமன்னிப்பும்”, மரண சாசனம் -1, மரண சாசனம் -2, மரண சாசனம் -3 (ஜீன் மெஸ்லியர்),  நான் ஏன் கிறித்தவனல்ல? (பெட்ரண்ட் ரசல்) போன்ற தமிழ் நூல்களைத் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. தோழர் புவனன் எழுதிய ”பைபிளோ பைபிள்” உள்ளது. ஏராளமான ஆங்கில நூல்களும் உள்ளன. தோழர் அருணன் எழுதிய “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை - 5 தொகுதிகள்,  ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” (மொழிபெயர்ப்பு கு.வெ.கி. ஆசான்), தருமி எழுதிய ”மதங்களும் சில விவாதங்களும்” ஆகிய நூல்கள் கிறித்தவ, இசுலாமிய மதங்களை விமர்சிக்கிற நூல்கள்.  "Rationalist Voice", "The Atheist" போன்ற இதழ்களிலும் நிறையக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.

இப்போதைக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். தேடினால் ஏராளமாய்க் கிடைக்கும். இசுலாத்தையும் கிறித்தவத்தையும் விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் பெரியாரிய, மார்க்சிய, முற்போக்கு இதழ்களில் வந்துள்ளன.  இசுலாத்தையும் கிறித்தவத்தையும் விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் www.iraiyillaislam.blogspot.com, www.paraiyosai.wordpress.com, www.pagaduu.wordpress.com, www.senkodi.wordpress.com போன்ற பல இணையதளங்கள் உள்ளன. youtube - லும் ஏராளமான காணொளிகள் (வீடியோ) உள்ளன.

தர்க்க ரீதியாக இன்னொரு செய்தியையும் இங்கு பதிவிடவேண்டும்.

Why i am not a Hindu? - Prof. Ramendra
Why i am not a Christian? - Bedraund Russel
Why i am not a Muslim? - Ibin Warrak

இந்து மதத்தை விமர்சித்து நான் ஏன் இந்துவல்ல? நூலினை எழுதியவர் இந்து.
கிறித்தவ மதத்தை விமர்சித்து நான் ஏன் கிறித்தவனல்ல? நூலினை எழுதியவர் கிறித்தவர்.
இசுலாம் மதத்தை விமர்சித்து நான் ஏன் இசுலாமியனல்ல? நூலினை எழுதியவர் இசுலாமியர்.

இசுலாம் மதத்தை விமர்சித்து தமிழில் வெளிவந்த நூல்கள் என முன்பு குறிப்பிட்ட நூல்களில் “அல்லா - அது அடிமையின் ஆணை” நூலாசிரியரும், ”வேதமும் விஞ்ஞானமும்” நூலாசிரியரும், ”பிரபஞ்சமே கடவுள்” நூலாசிரியரும், "ஆரம்பத்தை நோக்கி” நூலாசிரியரும் இசுலாமியர்கள் என்பதை உங்களின் அறிவான பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன். 

அமெரிக்காவைச் சேர்ந்த நாத்திகர் இராபர்ட் கிரீன் இங்கர்சாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த நாத்திகர் பெட்ரண்ட் ரசலும்  கிறித்தவ மதத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதியபோதும், பேசியபோதும் யாரும் அவரிடம் நீங்கள் ஏன் கிறித்தவ மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்றோ,

அல்பேனியாவைச் சார்ந்த நாத்திகர் அன்வர் ஓட்சா இசுலாமிய மதத்தை விமர்சித்து எழுதியபோதும், பேசியபோதும் நீங்கள் ஏன் இசுலாமிய மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்றோ யாரும் கேட்டதில்லை.

எதை விமர்சிப்பது, எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை அந்தந்த நாட்டின் சூழல்தான் தீர்மானிக்கும்.

உண்மையான,  அறிவார்ந்த தேடல் உள்ளவர்களால் மட்டுமே இவற்றைச் சிந்தித்து ஏற்க முடியும். என்ன செய்வது! உங்களைப் போன்றோர் (இந்து, இசுலாம், கிறித்தவ, மற்ற அனைத்து மதத்தவரும்) மதத்தீவிர வாதத்தால், மதவெறியால், மத அடிப்படைவாதத்தால் போதையேற்றப் பட்டிருக்கிறீர்கள். பல்வேறு மாற்றுச் சிந்தனைகளையும் படித்து சிந்திக்காதவரையில் உங்களைப் போன்றோரை மீட்டெடுப்பது மிகமிகக் கடினம். ஆனாலும் நாங்கள் முயன்றுகொண்டேதான் இருப்போம்.