Friday, January 27, 2017

 'உதவிகளும்', ‘தூண்டில் மீன்களும்’ ; சீமானும், ராகவா லாரன்சும்



அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும், வெற்றி பெற வாய்ப்புண்டா?


சென்னை மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்பாக, சீமான் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தை ஈர்த்தது.

‘மாணவர்கள் போராட்டத்தை முடித்து வைக்க ராகவா லாரன்ஸ் யார் என்று கேள்வி எழுப்பிய சீமான், அவருக்கும் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்றும், மாணவர்கள் நடத்திய போராட்டத்தை அவர்களே முடித்துக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார். ராகவா லாரன்ஸ் ஒரு கோடி ரூபாய் கொடுத்ததால் போராட்டத்தை முடித்து வைக்க வேண்டும் என்று சொல்கிறாரா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பினார்.’

தமிழ்த் திரைப்படத் துறையைச் சார்ந்த சீமான், ராகவா லாரன்ஸ் ஆகிய இருவரையும் நான் நேரில் பார்த்ததில்லை; அறிமுகமும் கிடையாது; அவர்கள் இயக்கிய திரைப் படங்களையும் நான் பார்த்ததில்லை.

ராகவா லாரன்ஸ் ஆடியுள்ள நடனங்களையும், இயக்கிய நடனங்களையும் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறேன். நான் மேற்கொண்டு வரும் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வினைப் போல, 'நடனத்தின் இயற்பியல்' (Physics of Dancing)  ஆய்வினை, ஆர்வமுள்ள நடன ஆய்வாளருடன் சேர்ந்து மேற்கொள்ளும் போது, அந்த ஆய்வுக்கான உள்ளீடுகளில் (Research inputs), அந்த நடனங்களும் இடம் பெறும். ( ‘நவீன நடனத்தின் 'பிதா மகள்'  இசாடொரா டுன்கண் (Isadora Dunken ) வழியில்; பிரபு தேவாவும், ராகவா லாரன்சும் மீட்பார்களா?; 
http://tamilsdirection.blogspot.com/2016/10/normal-0-false-false-false-en-in-x-none_31.html )

அதே போல எம்.ஜி.ஆர், சிவக்குமார் போன்ற திரைப்பட பிரமுகர்கள் வரிசையில், நம்பமுடியாத அளவுக்கு வியப்பூட்டும் வகையில் நலிந்தவர்களுக்கும், உடல் - மன சவாலுக்குள்ளானவர்களுக்கும் (Physically & Mentally Challenged), ராகவா லாரன்ஸ் உதவி வருவது எல்லாம், உண்மையென்றால், அவர் வணங்கத்தக்க அளவுக்கு உயர்ந்த மனிதர் என்பது என் கருத்தாகும்.

ஒரு மனிதர் புறத்தில், பிறருக்கு செய்யும் உதவிகள் எல்லாம், அவரது மனதில் எந்த ஈடுபாட்டைத் (interest)  தூண்டுகோலாகக் கொண்டு, அந்த உதவிகள் எல்லாம், அவரிடமிருந்து வெளிப்படுகின்றன? என்பது அவருக்கு மட்டுமே முழுமையாக தெரியும். அவருக்கு உண்மையிலேயே நெருக்கமானவர்களுக்கும், பகுதியாக தெரிய வாய்ப்புண்டு.

அகத்தில் சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாட்டினை, தூண்டுகோலாகக் கொண்டு, புறத்தில் வெளிப்படும் உதவிகள் எல்லாம், அந்த உதவிகள் பெறும் நபருக்கே ஆபத்தாக முடியும் வாய்ப்பும் இருக்கிறது.

தனிநபர் அளவில், அந்த ஆபத்துகளை எவர் சந்தித்தாலும், அது பொது அரங்கில், ஊடகத்தில் அம்பலமாவது அபூர்வமாகும். சுயலாப கணக்கில் 'உதவிகள்' என்ற துருப்புச் சீட்டின் மூலம், தம்மிடம் ஏமாந்த அப்பாவிகளையும், தமிழ்நாட்டையும், சீரழித்து வரும் சமூக கிருமிகள் எல்லாம், 1967க்குப் பின் முளை விட்டு, 1991 முதல் 'வீரியமாக' வளர்ந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட சூழ்ச்சிகரமான உதவிகளை வழங்குபவர்களும், பெறுபவர்களும் பொது வாழ்வில் உள்ளவர்களாக இருந்தாலும், உதவிகள் பெறுவது 'பொது பிரச்சினை' என்ற பெயரில் நடந்தாலும், அந்த சூழ்ச்சிகர சமூக செயல்நுட்பத்தில், உதவிகள் பெறுபவர் நேர்மையானவராக இருந்தால், அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து, அவர் தப்புவதும் அபூர்வமே.

உதவிகளை வழங்குபவரைப் போலவே, உதவிகள் பெறுபவருக்கும், சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாடு இருக்குமானால், அப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாந்து, அவர்களை பொதுவாழ்வில் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்பட அனுமதித்த சமூகமானது, அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து தப்பவே முடியாது.

1980கள் தொடக்கம் வரை இலங்கையில் மலையகத்தமிழர் பிரச்சினைத் தவிர, வேறு எந்த பிரச்சினை பற்றியும், தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு ('பெரியார்' இயக்கத்தில் கொள்கை புலமையாளனாக (Theoretician) பயணித்த நான் உள்ளிட்டு) தெரியாது. மே 19 1982   சென்னை பாண்டி பஜாரில்  மோட்டர் சைக்கிளில் (விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்) பிரபாகரன் ஓட்ட, பின்னால் அமர்ந்து பயணித்த‌ ராகவன்,  ( 'புளோட்' - PLOT-  இயக்க) தலைவர் உமா மகேசுவரனையும்,  அவரது உதவியாளர் ஜோதீஸ்வரனையும் சுட்டதில் அவர் தப்பித்து, பின் நால்வரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட செய்தி மூலமே, பொது அரங்கில், 'ஈழப் பிரச்சினை' பெரும்பாலோரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது. 

இன்றைக்கு சுமார் 55 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு அது தெரியும்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த அந்த காலக்கட்டத்தில், ஈழ விடுதலை குழுக்களுக்கு, ‘அபரீதமான உதவிகள்’ எங்கிருந்து, எதற்காக வந்தன? தமிழ்நாடெங்கும் அந்த குழுக்கள் எல்லாம் 'ஆயுத பயிற்சிகளும்', 'கண்காட்சிகளும்', ''பத்திரிக்கைகளும்', கொலைகளும், சித்திரவதை முகாம்களும், செயல்பட்ட அளவுக்கு, சம்பந்தப்பட்ட சட்டங்கள் எல்லாம் 'கண்களை' மூடிக் கொண்ட அளவுக்கு, மத்திய அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்கியது? போன்ற கேள்விகள் எல்லாம், அந்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரித்து பயணித்த, திருச்சி 'பெரியார் மையத்தில்' விவாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் திருச்சி பெரியார் மாளிகையில், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்த, புலவர் இமயவரம்பனிடம், 'காஷ்மீர், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் 'தனி நாடு' கோரும் ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கி வரும், இந்திராகாந்தியின் உதவியை விடுதலைப் புலிகள் பெறுவது, சரி என்றால், நாம் ஏன் (அன்றைய இலங்கை அதிபர்) ஜெயவர்த்தனேயிடம் தனித் தமிழ்நாட்டிற்கு ஆதரவும், உதவியும் பெறக்கூடாது?" என்று நான் கேட்ட போது, அவரால் உரிய விளக்கம் தர முடியவில்லை.

'உதவிகள்' தொடர்பான புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்து, முள்ளிவாய்க்கால் பேரழிவானது, எவ்வாறு வரலாற்று சான்றாகி விட்டது? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

“'சாதி' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இந்தியா பயணித்து வருவதும், 'இனம்', அதன் அடிப்படையில் 'திராவிடர்' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'வித்தியாசமான' போக்கில் தமிழ்நாடு பயணித்து வருவதும், ஆகிய பின்னணியில்; மேற்குறிப்பிட்ட இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலை பற்றிய ஆய்வினையும், மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அத்தகைய ஆய்வின் மூலமே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினா போராட்டத்தில்' ஊடுருவிய சமூக விரோத சக்திகளையும், அவர்கள் மேற்கொண்ட 'ஆதரவு தூண்டில் மீன்' சமூக செயல்நுட்பத்தையும், விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்ததே, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு காரணமா? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html) தமிழ்நாடு அது போன்று 'முள்ளி வாய்க்கால் அழிவு' போன்ற திசையில் பயணிக்காது என்பதையும், 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி' உணர்த்தியுள்ளது. 
(http://www.dinamalar.com/news_detail.asp?id=1697611 )

'தமிழ் இன உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' போன்றவற்றை 'பொது வாழ்வு மூலதனமாக'  கருதி, திராவிட அரசியல் கொள்ளை குடும்பங்களின் 'வாலாக', 'வளமாக' வளர்ந்து வரும், நானறிந்த‌ 'பெரியார் சமூக கிருமிகளை' விட, வேறு வழியின்றி பிழைப்பிற்காக விபச்சாரம் செய்பவர்களும், அந்த விபச்சாரிகளின் தரகர்களும்  மதிக்கத் தக்கவர்களே ஆவர்; ஏனெனில் அவ்வாறு அவர்கள் வாழ்வதன் மூலம், மேல்நடுத்தர, வசதியான தமிழர்களில் பெரும்பாலோர், எந்த அளவுக்கு 'பொது வாழ்வு வியாபாரிகளை' 'உரசாமல்', 'சுயநல பாதுகாப்புடன்' வாழ்ந்து வருகிறார்கள்? என்பதை வெளிப்படுத்தும் 'சமூக சிக்னலாக' (Social Signal), அந்த விபச்சாரிகளும், தரகர்களும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களில் 'அதி புத்திசாலிகள்' அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து வருகிறார்கள்; அந்த சமூக சிக்னலின் அடுத்த கட்ட அபாய எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி.

தமிழ்நாட்டை 'அந்த அரசியல் விபச்சார' நோயிலிருந்து மீட்க 1949 முதல் 1967 வரை ஈ.வெ.ரா அவர்கள் முயற்சித்து, தனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலின்றி பயணித்து தோற்றதன் வெளிப்பாடாக; ‘1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/race-race.html )  ;

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்ததற்கான காரணங்களை, அறிவுபூர்வமாக‌ சமூக பொறுப்புடன் விவாதித்து, தமிழ்நாடு பயணித்திருந்தால்;

'ஈழ விடுதலை' முள்ளிவாய்க்கால் பேரழிவு நோக்கி பயணித்திருக்குமா? என்று இன்று கூட அறிவுபூர்வமாக விவாதிக்கும் சூழல் இருக்கிறதா? என்பதை;

இன்று 'ஈழ விடுதலை' ஆதரவாளர்களாக உள்ள சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தெளிவுபடுத்துவார்களா?

அவர்களின் முயற்சிகளுக்கு கிடைத்து வரும் உதவிகள் பற்றிய வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability)  நடைமுறையில் உள்ளதா?

இல்லையென்றால், அன்றைய பிரதமர் இந்திராகாந்தி எந்த சுயலாப அரசியல் உள்நோக்கத்தில், 'ஈழ விடுதலை' குழுக்களுக்கு உதவினாரோ, அந்த உதவிகளிலிருந்து, சீமானின் 'நாம் தமிழர்' கட்சி உள்ளிட்ட, 'தமிழ் உணர்வு' கட்சிகள் எல்லாம் பெற்று வரும் உதவிகள் எவ்வாறு வேறுபட்டது? இந்திராகாந்தி உதவிய காலம் 'டிஜிட்டல்' யுகமல்ல. எனவே 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?'(1988 மார்ச்) உள்ளிட்ட ‘திருச்சி பெரியார் மைய’ எச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானது. 

இன்று 'பொறுக்கி' (குறிப்பு 1 கீழே) என்ற சொல் மூலம், விடுதலைப் புலி ஆதரவாளர்களின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கும் சுப்பிரமணியசுவாமியின் 'உதவியுடன்', விடுதலைப்புலிகள்1980களின் பிற்பகுதியில் இஸ்ரேலின் 'மொசாத்' உளவு அமைப்பு மூலம் ஆயுத பயிற்சி பெற்ற சான்றினை, 'ராஜிவ் கொலையும், சதிகளும்' புத்தகத்தில் வெளியிட்டிருந்தோம். அதே காலக்கட்டத்தில், இலங்கை இராணுவமும், அங்கே பயிற்சி பெற்றதையும் அதில் குறிப்பிட்டிருந்தோம். சர்வதேச அரசியல் சூதாட்டங்களில் இது போன்ற உதவிகள் செயல்படும் நுட்பத்தை விளக்கிய, 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression) நூல் அறிமுக கட்டுரையும், அந்த காலக்கட்டத்தில் 'உண்மை' மாத (தி.க) இதழில் நான் எழுதி வெளிவந்துள்ளது. 'ஈழ விடுதலை'க்கான ஆயுதப் போராட்டமானது, எவ்வாறு சர்வதேச சூழ்ச்சியில் சிக்கிய பொம்மலாட்டமாகி, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இட்டுச் சென்றது என்பதை விளக்கி வெளிவந்து கொண்டிருக்கும் பலவற்றில் இதுவும் ஒன்றாகும்; https://wideawakegentile.wordpress.com/2014/09/29/srilanka-mossad-ltte-and-the-rajiv-gandhi-assassination/. அந்த காலக்கட்டத்தில்   EPRLF குழுவின் புரவலராக இருந்த கும்பகோணம் ஸ்டாலினை நான் சந்தித்தபோது, "எங்களுக்கு அறிவு ஜீவிகள் தேவையில்லை. 'வன்முறை' மூலம், 'தனி ஈழம்' பெறுவோம்" என்று ஆணவத்துடன் பேசினார். மேலே குறிப்பிட்ட பொம்மலாட்டத்தில், EPRLF-ம், அந்த அமைப்பின் வளர்ச்சிக்கு ஸ்டாலினின் பங்களிப்பும், சுவடின்றி மறைந்த போனது ஏன்? என்பது பற்றி, ஸ்டாலினோ, அவரது ஆதரவு 'பெரியார்' கொள்கையாளர்களோ ஆய்வு செய்தார்களா? அல்லது அந்த ஆய்வின் அவசியம் தெரியாமல், 'தனித் தமிழ்நாடு' போதையில், அவர்களில் யார், யார், EPRLF-ஐ அழித்த, விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களாக மாறினார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். அறிவுக்கு எதிரான, தனித்தமிழ்நாடு போதையில் சமூகத்திற்கு கேடான உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டில், 'பெரியார் கொள்கையாளர்கள்' எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கினார்கள்? என்பதும், விடுதலைப் புலிகள் தொடர்பான ‘திருச்சி பெரியார் மையஎச்சரிக்கை வெளியீடுகள் எல்லாம், விழலுக்கு இரைத்த நீரானதும், அதே ' திருச்சி பெரியார் மயமானது', நான் ஒதுங்கிய பின், 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதும், ஒன்றுடன் ஒன்று எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அறிவு ஜீவி ஆண்டன் பாலசிங்கத்தின் மறைவின் விளைவாக (குறிப்பு 2 கீழே), முள்ளிவாய்க்கால் போரில், சரியான நேரத்தில் சரணடைய கிடைத்த வாய்ப்புகளை தவறவிட்டு, 'தவறான நேரத்தில்' சரணடைய முயன்றதே, பேரழிவுக்கு காரணமா? என்பதானது, ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உரியதாகும். 

'தான் உழைக்காமல், உழைப்பின் மூலம் உயராமல், ஒரு தலைவரையே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல் கலாச்சாரம்' ('துக்ளக்' 01 - 02 - 2017  கேள்வி - பதில்) உள்ள தமிழ்நாட்டில், அந்த பிழைப்பில் உள்ள தலைவர்களின் 'உதவியையும்' பெற்று பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். உதாரணமாக, ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள; http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) காளிமுத்துவும் அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.

வெளிப்படைத்தன்மையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability)  இல்லாத மனிதரும், குடும்பமும், கட்சியும், அரசும், எந்த அமைப்பும், சமூகத்திற்கு கேடாக பயணிப்பதில் இருந்து தப்ப முடியாது. (‘அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும்’; 
http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html )

இது டிஜிட்டல் யுகம். சீமானாயிருந்தாலும், ராகவா லாரன்ஸாக இருந்தாலும், நானாக இருந்தாலும், சுயலாப உள்நோக்கங்களை மறைத்து, நீண்ட காலம் பொது அரங்கில் பயணிக்க முடியாது: மற்றவர்களை நோக்கி விரலை நீட்டும் போது, நம்மை நோக்கியும், நமது விரல்கள் இருந்தாக வேண்டும்.

50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணிக்கும், 'படித்த, படிக்கும்' மாணவர்களிடமிருந்தும், இளைஞர்களிடமிருந்தும், நாம் தப்ப முடியாது. ஆங்கில அறிவற்ற‌, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ' விட்டில் பூச்சிகளாக, கட்சிகளின் பொதுவாழ்வு வியாபாரத்திற்கு 'பலியாகி' வந்தவர்களின் எண்ணிக்கையும், தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' குறைந்து வருகிறது. 

'சமூக விரோதிகளும்', அவர்களின் சுயரூபம் தெரியாமல் அவர்களை பின்பற்றும் 'உணர்ச்சிபூர்வ' மாணவர்களும், மறைந்திருந்து காவல் துறையை தாக்கி உசுப்பி விட்டு, காவல் துறை நிதானமிழந்து வன்முறையை கையாளும் போக்கினை, தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்திய 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, எவ்வாறு 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து வேறுபட்டது? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘1938  -  1965  -   2017’;
http://tamilsdirection.blogspot.com/2017/01/1938-1965.html'தனித்தமிழ்நாடு' போதையில் தேசியக் கொடியை அவமதிப்பவர்களையும், பா.ஜ.கவில் உள்ள 'சமூக பிரிவினை' போக்குள்ளவர்களையும், 'அடையாளம்' கண்டு எதிர்க்கும் மாணவர்களும், 2017 ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் வெளிப்பட்டுள்ளார்கள். (https://www.facebook.com/arasezhilan/videos/10206226398337784/இந்திய அரசியல் சட்ட எரிப்பு, தேசியக் கொடி அவமதிப்பு, பிள்ளையார் சிலை உடைப்பு உள்ளிட்டு எந்த போராட்டமாக இருந்தாலும், பொதுமக்களுக்கும், பொதுச் சொத்துக்கும் ஊறு விளைவிக்காமல், வன்முறைக்கு இடம் கொடுக்காமல், நீதி மன்றம் வழங்கும் தண்டனையை எதிர் வழக்காடாமல் ஏற்று, அனுபவித்து பயணித்தவர் ஈ.வெ.ரா ஆவார். 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டத்தில் ஊடுருவி, தேசியக் கொடியை அவமதித்து, போராட்டத்தில் இருந்த மாணவர்களால் கண்டிக்கப்பட்ட 'தனித்தமிழ்நாடு', 'பெரியார்' ஆதரவாளர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், ஈ.வெ.ராவின் போராட்ட அணுகுமுறையை மக்கள் மன்றத்தில் அசிங்கப்படுத்திய சமூக குற்றவாளிகள் ஆவர்.

“கவர்னர் கையெழுத்திட்டு சட்டம் நிறைவேறிவிட்டது. மாணவர்கள் போராட்டம் சரித்திரம் படைத்து விட்டது. ஆனால் அதைக் கொண்டாட முடியாமல் போராட்டம் கலவரத்தில் முடிந்தது மனதை வலிக்கச் செய்கிறது. கடைசி நாள் வரை அமைதியாக இருந்த மாணவர்கள் எப்படி வன்முறையில் ஈடுபடுவார்கள்? போலீசார் நினைத்திருந்தால் முதல் நாளிலேயே மெரினாவில் கூடவிடாமல் போராட்டக்காரர்களை அடித்து விரட்டி இருக்க முடியும். அவர்கள் கடைசி நாள் வரை பாதுகாப்பு அளித்தனர். கலவரத்துக்கு காரணம் யார்? என்பது மர்மமாக இருக்கிறது. முதல்வரும், பிரதமரும் முயற்சி எடுத்ததால்தான் ஜல்லிக்கட்டு தடை நீங்கி நிரந்தர சட்டம் நமக்கு கிடைத்தது. இதற்காக அவர்கள் இருவருக்கும் நன்றி. அடுத்த மாதம் ஜல்லிக்கட்டு வெற்றி விழா நடத்தி இனிப்புகள் வழங்கி இருவரையும் பாராட்டுவோம். மாணவர்கள் யாரேனும் பிரதமர், முதல்வரை தவறாகப் பேசி இருந்தால் அவர்களை மன்னிக்க வேண்டுகிறேன். மாணவர்களைக் கைது செய்து இருந்தால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறேன்.” ( http://tamil.oneindia.com/news/tamilnadu/ragava-lawrence-statement-on-the-end-jallikkattu-protest-272719.html ) என்ற ராகவா லாரன்ஸின் கருத்தை நான் வரவேற்கிறேன். ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும்,  'தீர்வு' தொடர்பான தெளிவின்மையே, சமூக விரோத சக்திகள் ஊடுருவி, திசை திருப்பி, வன்முறைக்கு காரணமாகி, அடுத்த முறை இந்த தவறு அரங்கேறாமல் இருக்க, தமிழ்நாட்டு மக்களுக்கே பாடம் புகட்டி விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

போராட்டத்தின் ஊடே, எது தீர்வு? என்று வழிகாட்டும் நம்பகத்தன்மையுள்ள குழு தலைமை உருவாகியிருந்தால், போராட்டத்தின் முடிவில் வன்முறை வெடித்திருக்குமா? அவ்வாறு குழு தலைமை உருவாக இருந்த வாய்ப்பானது, 'சுயலாப அரசியல்' நோக்கில் ஊடுருவிய சக்திகள் மூலம் சிதைக்கப்பட்டதா? என்ற கேள்விகளுக்கு விடை காணாமல், அடுத்து இது போன்று அரங்கேறும் போராட்டமும் வெற்றி பெற வாய்ப்பில்லை.

மேற்குறிப்பிட்டது உள்ளிட்டு, எனது பதிவுகள் தொடர்பாகவும், அறிவுபூர்வ விமர்சனங்களை வரவேற்கிறேன். மாறாக உணர்ச்சிபூர்வமாக, 'தமிழின துரோகி' என்று 'கடவுளால்' நியமிக்கப்பட்ட நீதிபதிகளை போல, என்னைக் கண்டித்தாலும், அதைப் பற்றி கவலைப்படாமல், நமது மனசாட்சிக்கு உட்பட்டு, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுடன் எனது பயணத்தை, நான் தொடர்வேன்.


குறிப்பு:

1. 'பெரியார்' ஈ.வெ.ராவிற்குப் பின், நானறிந்த வரையில், தமிழில் 'அநாகரீகம்' என்ற அடையாளத்தில் உள்ள சொற்களை பயன்படுத்திய, 'ஊழல்' குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர் சுப்பிரமணியசுவாமி ஆவார். இருவருமே தாம் பயன்படுத்திய அந்த சொற்களுக்கு, அறிவுபூர்வமான விளக்கமும் தந்துள்ளனர். உதாரணமாக, தான் பயன்படுத்திய 'பொறுக்கி' என்ற சொல்லானது, 'ஆபாசமாக, வன்முறை தொனியில், அச்சுறுத்தும் வகையில், பேசி விட்டு, எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிபவர்' (One of the ways to recognise a porki is if his or her language is vulgar hard porn, threatens violence but runs away on retaliation )  என்று சுப்பிரமணியசுவாமி தமது 'டுவிட்டரில்' தெரிவித்துள்ளார். சுப்பிரமணியசுவாமியை 'வீரமாக' எதிர்த்து பேசி விட்டு, பின் சுப்பிரமணியசுவாமியின் எதிர்ப்பைக் கண்டு, ஓடி ஒளிந்த 'திராவிட'  கட்சி தலைவர்கள் யார்? யார்? என்ற ஆராய்ச்சியை, சுப்பிரமணியசுவாமியின் 'பொறுக்கி' தொடர்பாக, அவரைக் கண்டித்து வருபவர்கள் ஆராயத் தொடங்கினால், 'பொறுக்கி' விவாதமும், ஆக்கபூர்வ திசையில் பயணிக்கக் கூடும்.  'பெரியார்' ஈ.வெ.ரா வையும், சுப்பிரமணிய சுவாமியையும், அவர்களின் எதிர்ப்பாளர்கள் எல்லாம் இணையத்தில்,  'உண‌ர்ச்சிபூர்வமாக'  இழிவுபடுத்தும் போக்கில் ஒன்றுபட்டுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா, சுப்பிரமணிய சுவாமி ஆகிய‌  அந்த‌  இரண்டு பேருமே சுயநலத்தில் பணம் சம்பாதிக்க பொதுவாழ்வில் இருந்தவர்கள் அல்ல. எனவே 'பொதுவாழ்வு வியாபாரிகளும்', அவர்களின் எடுபிடிகளும், அந்த இருவரையும் கண்டிக்க அருகதை அற்றவர்கள், என்பதும் என் கருத்தாகும்.

என்னை நேரடியாக எதிர்க்க, 'பொறுக்கி' அளவுக்கு கூட துணிச்சலின்றி, என் முதுகுக்குப் பின்னால், என்னை இழிவுபடுத்தி வரும் 'பெரியார் சமூக கிருமிகள்' எல்லாம், 'பொறுக்கியை' விட கேவலமானவர்கள் இல்லையா? 
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

2. 1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம்,  என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். (' தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு; 'தமிழ் ஈழம்'  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark);

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன். (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson  )
எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி மெனக்கெடுவதற்கு, மேற்குறிப்பிட்டது போன்ற பல அனுபவங்களிலிருந்து, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான வழிமுறைகளை கண்டுபிடிக்கவேயாகும்.

Tuesday, January 24, 2017

சாதி, மத உயர்வு தாழ்வுகளை ஒழிப்பதில்;


ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி வெளிப்படுத்தியுள்ள பாடம்


தமிழ்நாட்டில் எந்த பொதுப் பிரச்சினையாக இருந்தாலும், அந்த பிரச்சினையில் மட்டுமே ஒருமித்த கருத்துடையவர்கள் எல்லாம், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைக் கடந்து, ஒன்றுபட்டு போராடினால், வெற்றி பெற வாய்ப்பு அதிகம் என்பதையும்;

தமது நிலைப்பாட்டிற்கு மக்களை திரட்ட முடியாதவர்கள் எல்லாம், அந்த ஒற்றுமையான போராட்டத்தில் ஊடுருவி, அப்போராட்டத்தை திசை திருப்ப முயற்சித்தால், வெற்றி பெற முடியாது என்பதையும்;

அந்த அமைப்புகள் இனி தமது அடையாளத்துடன், அது போன்ற போராட்டங்களில் நுழைய முயன்றால், ஒதுக்கப்படுவார்களா? என்பது அடுத்து வரும் போராட்டம் மூலம் தெரியும் என்பதையும்;

உணர்த்தியுள்ள போராட்டம், 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் ஆகும். 

‘அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த 'ஜல்லிக்கட்டு மீட்சி' போராட்டமானது, 1965 போராட்டத்திற்கு எதிரான திசையில், 1938ஐ நோக்கி, 1938 போராட்ட திசையில், அதனையும் விஞ்சி, சாதனை படைத்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/1938-1965.html )

அவ்வாறு சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, 'ஒற்றுமையுடன்' போராடி, வெற்றி பெற்று, நடைபெறும், 'ஜல்லிக்கட்டில்';

புதிய தமிழகம் நிறுவனர் கிருஷ்ணசாமி ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளது போல, 'ஜல்லிக்கட்டில் சாதி ஏற்றத்தாழ்வு இருந்தால்', அந்த ஏற்ற தாழ்வு இருப்பதை, அகற்றுவதற்கும்,

மேலே குறிப்பிட்ட 'ஒற்றுமையை' பயன்படுத்துவதே புத்திசாலித் தனமாகும்.

மாறாக, அதற்காக, "ஜல்லிக்கட்டு த‌டுக்கப்படவேண்டும்'' என்று அவர் கூறுவதையும், 'உணர்ச்சிபூர்வ வெளிப்பாடாக'வே கருத முடியும்; அவருக்கு இந்தியாவில் பிரிவினையைத் தூண்டும் வெளிநாட்டு நிதி உதவி  'பீட்டா' போன்ற‌ அமைப்புகளின் தூண்டுதல் இல்லை என்ற நம்பிக்கையில். அதாவது ஒரு தனிமனிதர் வெளிப்படுத்தும் ஒரு கருத்திற்கான காரணம் சரியாக இருந்து, தீர்வு தவறாக இருந்தால், அந்த காரணம் தான் அதிக முக்கியத்துவம் பெறும், தவறான தீர்வுக்கு ஆதரவற்ற நிலையில். 

அது போன்ற உணர்ச்சிபூர்வ' வெளிப்படுகளை, சமூக 'சிக்னலாக' (Social signal) கருதி, மேலே குறிப்பிட்ட ஆக்கபூர்வ திசையில் பயணிப்பவர்கள் எல்லாம் அதனை கண்டிக்கும் ஆற்றல்/நேர விரயத்தில் ஈடுபட மாட்டார்கள். அது மட்டுமல்ல, அந்த கருத்தை சொன்னதற்காக, கிருஷ்ணசாமி மற்ற சமூக பிரச்சினைகளில் எடுத்திருந்த நிலைப்பாடுகளை விவாதித்து, மேலே குறிப்பிட்ட ஒற்றுமையான முயற்சி திசையிலிருந்து, திரும்பும் தவறையும் செய்ய மாட்டார்கள்.

ஒருவரின் நிலைப்பாடுகள் என்பவை விவாதத்தின் கருப்பொருளாகும் போது தான், அவரின் நிலைப்பாடுகள் அனைத்தையும், விதி விலக்கின்றி விவாத்திற்கு உட்படுத்த வேண்டும்.

அந்த விவாதத்திலும், அவரை 'எடை போடும்' முயற்சியும், அந்த விவாதத்திற்கு தொடர்பில்லாததாகும். அவரை 'எடை போடுவது' என்பதானது, கருப்பொருளாகும் போது தான், அவரின் தனிப்பட்ட நிலையில் தொடர்புள்ள தகவல்கள் அனைத்தையும், விதி விலக்கின்றி விவாதத்திற்கு உட்படுத்த வேண்டும். 

இந்த மூன்று எல்லைக் கோடுகளையும் தாண்டி நடைபெறும் விவாதங்கள் எல்லாம், அறிவுபூர்வ போக்கிலிருந்து தடம் புரண்டு, உணர்ச்சி பூர்வ போக்கில் சிக்க வைத்து விடும்.

சாதி, மத  ஏற்றத் தாழ்வுகளை அகற்றுவதிலும், 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில், ஆக்கபூர்வமாக செயல்பட முடியாது, என்பதை 'வைக்கம் போராட்டம்' மூலம், ஈ.வெ.ரா அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.

வைக்கம் போராட்டத்தில் கோவிலைச் சுற்றியுள்ள சாலைகளில் நடக்கும் உரிமை மட்டுமே அப்போராட்டத்தின் வெற்றியில் கிடைத்ததால், கோவில் நுழைவு கோரிக்கை நோக்கில், அப்போராட்டத்தை இழிவு படுத்த முடியுமா?

எந்த கோரிக்கையும் வெற்றி பெற வேண்டுமானால்;

'வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும்
 துணை வலியும் தூக்கிச் செயல்' திருக்குறள் 471

நான் கல்லூரியில் பேராசிரியராக, 'பெரியார்' இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்ற காலத்தில், எனது மாணவர் ஒருவர் 'பெரியார்' கொள்கையில் ஈர்க்கப்பட்டு, தி.க மாணவரானார். 

1980களில், ஒரு முறை கிராமத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற போது, 'கள்ளர்' சாதியைச் சேர்ந்த அவர், தனது கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்களுடன் தொடர்பின்றி ஒதுங்கி இருந்ததை, விவாதத்தில் அறிந்தேன். அந்த மாணவர், “கல்லூரியில் எனக்கு தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் கிராமத்திற்கு,  அவர்கள் வீட்டிற்கு நான் போய் வருவேன். ஆனால் எனது கிராமத்தில், நான் அதை நடைமுறைப் படுத்தினால், என்னை வீட்டை விட்டு துரத்தி விடுவார்கள். பின் நான் எப்படி, படித்து உருப்பட முடியும்?" என்று அவர், தனது நிலையை தெளிவு படுத்தினார்.

ஆனால் அது போல் 'பெரியார்' இயக்கத்தில் சேர்ந்து, படித்து, நல்ல வேலையில்/ சுயசம்பாத்தியத்தில் இருந்து கொண்டு, 2ஆவது, 3ஆவது, 4ஆவது தலைமுறையாக தமது சாதிக்குள்ளேயே எல்லா திருமணங்களையும் நடத்திக் கொண்டு, 'கறுப்பு சட்டையுடன்', 'சாதி ஒழிப்பு' 'பெரியார்' கொள்கையாளராக, தம்மை வெளிப்படுத்திக் கொண்டவர்களை, 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்திலேயே, நான் மதித்து, என்னை நெருங்க அனுமதித்ததில்லை. 

பொதுவாக நானாக இருந்தாலும், யாராக இருந்தாலும், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும் உள்ள தகவல் பரிமாற்ற வலிமையானது (Communication strength), நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதைப் பொறுத்ததே ஆகும். 

தமிழில் 'இனம்' என்ற சொல்லானது காலனிய சூழ்ச்சியில் திரிந்த போக்கில், 'சாதி' என்ற சொல்லும் திரிந்து, இன்றுள்ள சாதி அமைப்பானது அதே சூழ்ச்சியில் உருவானது தொடர்பான சான்றுகளையும் பார்த்தோம். "ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா?" என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) அது போன்ற ஆய்வுகளை விளங்கி, அறிவுபூர்வமாக விவாதிக்காமல், உணர்ச்சிபூர்வமாக 'சாதி ஒழிப்பில்' பயணிப்பவர்களில் யார்? யார்? இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலையில் தெரிந்தோ, தெரியாமலோ சிக்கி, பயணிக்கிறார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

'சாதி' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இந்தியா பயணித்து வருவதும், 'இனம்', அதன் அடிப்படையில் 'திராவிடர்' என்ற அடையாளத்தில் உள்ள காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றி, 'வித்தியாசமான' போக்கில் தமிழ்நாடு பயணித்து வருவதும், ஆகிய பின்னணியில்; மேற்குறிப்பிட்ட இந்திய சமூகத்தில் பிரிவினை நோயை வளர்க்கும் வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓ வலை பற்றிய ஆய்வினையும், மேற்கொள்ள வேண்டியதும் அவசியமாகும். அத்தகைய ஆய்வின் மூலமே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு மெரினா போராட்டத்தில்' ஊடுருவிய சமூக விரோத சக்திகளையும், அவர்கள் மேற்கொண்ட 'ஆதரவு தூண்டில் மீன்' சமூக செயல்நுட்பத்தையும், விளங்கிக் கொள்ள முடியும். அத்தகைய புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்ததே, முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு காரணமா? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html ) தமிழ்நாடு அது போன்று 'முள்ளி வாய்க்கால் அழிவு' போன்ற திசையில் பயணிக்காது என்பதையும், 'ஜல்லிக்கட்டு போராட்ட வெற்றி' உணர்த்தியுள்ளது. (http://www.dinamalar.com/news_detail.asp?id=1697611

'தமிழ் இன உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு(?)' போன்றவற்றை 'பொது வாழ்வு மூலதனமாக'  கருதி, திராவிட அரசியல் கொள்ளை குடும்பங்களின் 'வாலாக', 'வளமாக' வளர்ந்து வரும், நானறிந்த 'பெரியார் சமூக கிருமிகளை' விட, வேறு வழியின்றி பிழைப்பிற்காக விபச்சாரம் செய்பவர்களும், அந்த விபச்சாரிகளின் தரகர்களும்  மதிக்கத் தக்கவர்களே ஆவர்; ஏனெனில் அவ்வாறு அவர்கள் வாழ்வதன் மூலம், மேல்நடுத்தர, வசதியான தமிழர்களில் பெரும்பாலோர், எந்த அளவுக்கு 'பொது வாழ்வு வியாபாரிகளை' 'உரசாமல்', 'சுயநல பாதுகாப்புடன்' வாழ்ந்து வருகிறார்கள்? என்பதை வெளிப்படுத்தும் 'சமூக சிக்னலாக' (Social Signal), அந்த விபச்சாரிகளும், தரகர்களும் வாழ்ந்து வருகிறார்கள்; அவர்களில் 'அதி புத்திசாலிகள்' அரசியலிலும் நுழைந்து சாதனை படைத்து வருகிறார்கள்; அந்த சமூக சிக்னலின் அடுத்த கட்ட அபாய எச்சரிக்கையையும் வெளிப்படுத்தி.

தமிழ்நாட்டை 'அந்த அரசியல் விபச்சார' நோயிலிருந்து மீட்க 1949 முதல் 1967 வரை ஈ.வெ.ரா அவர்கள் முயற்சித்து, தனது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலின்றி பயணித்து தோற்றதன் வெளிப்பாடாக; ‘1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/race-race.html )  

அகத்தில் 'சாதி வெறியுடனும்', (மேலே குறிப்பிட்ட 'பெரியார் சமூக கிருமிகள்' உள்ளிட்டு) புறத்தில் 'சாதி ஒழிப்பு' வீரர்களாகவும் வலம் வருபவர்களை விட, தமது சாதி அடையாளத்துடன் அகத்திலும், புறத்திலும் நேர்மையாக வாழ்பவர்கள் எல்லாம்;

அதிக மனிதாபிமானம் உடையவர்களாகவும், தம்மால் இயன்ற அளவு சாதி, மத உயர்வு தாழ்வுகளை கடைபிடிக்காதவர்களாகவும் இருக்கிறார்கள், என்பது எனது அனுபவமாகும்.

சாதி உயர்வு தாழ்வுகளை அகற்றுவதில், சமூக உளவியலில் (Social Psychology) நடைபெறும் மன மாற்றங்கள் மூலமே, அவை தொடர்பான சட்டங்களும் தமது கடமையை சரியாக செய்யமுடியும். எனவே சமூக அளவில் சாதி, மத உயர்வு, தாழ்வுகளை எதிர்ப்பதாக ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்டு பெரும்பாலான அமைப்புகள் அறிவித்துள்ள நிலையில்; ("முஸ்லீம்களை 'அந்நிய ஆக்கிரமிப்பாளர்களாக' 'இந்து' தேசியவாதிகள் கருதவில்லை. ‘தீண்டாமை கொடுமைக்கு இந்து சமூகமே காரணம்  என்றும், ‘அதை ஒழிக்க வேண்டும்என்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களாக இருந்த, கொல்வால்கரும், தியோரஸும் கண்டித்துள்ளார்கள்."; http://tamilsdirection.blogspot.in/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_27.html )

எந்த ஒரு பிரச்சினையில் ஆதரவு வந்தாலும், அந்த ஆதரவை ஏற்று பயணிப்பதே புத்திசாலித்தனமாகும். அவர் தமக்கு பிடிக்காத கொள்கை சார்பானவர் என்ற அடிப்படையில், அந்த ஆதரவினைப் புறக்கணிப்பது, முட்டாள்த்தனமாகும்.

அவ்வாறு ஈ.வெ.ரா அவர்கள் பயணித்ததாலேயே; இந்திய விடுதலைக்கு முன், தமது 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கைக்கான ஆதரவை, ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களிடம் பகிரங்கமாக கோரி, பெற்றார்;  ஆந்திராவில் இருந்த பிராமண நாத்தீகர் கோராவுடனும் சேர்ந்து செயல்பட்டார்.

எனவே ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், எங்கெங்கு சாதி உயர்வு தாழ்வு கடை பிடிக்கப்படுகிறது? என்பது தொடர்பான சரியான தகவல்களை பெறுவதிலும், அதில் முன்னணி பங்கு வகிக்கும் நபர்களை அடையாளம் கண்டு, நேரில் சந்தித்து, 'அனைத்து சாதி'களின் ஒற்றுமை மூலம் வெற்றி பெற்று நடக்கும் ஜல்லிக்கட்டில், 'சாதி உயர்வு, தாழ்வு கடை பிடிப்பதை' கை விடுமாறு கோருவதும், அவர்களில் உடன்பட மறுத்து, 'சாதி வெறியராக' வெளிப்படுபவரை தனிமைப் படுத்தி, ஊடக குவியத்தில் பலகீனமாக்கி, அதன்பின் மேலே குறிப்பிட்ட திருக்குறள் வழியில் வெற்றி பெறுவது சாத்தியமே.

குடையைக் கண்டு அஞ்சி ஒதுங்கும் அந்த கால மாட்டைப் போல, மேலே குறிப்பிட்ட முயற்சியில், 'இந்துத்வா' ஆதரவாளர்களை 'பெரியார்' கொள்கையாளர்களும், 'பெரியார்' கொள்கையாளர்களை 'இந்துத்வா' ஆதரவாளர்களும், தமக்கு 'கெட்ட பெயர் வந்து விடுமோ?' என்று அஞ்சி, 'ஒற்றுமையுடன்', செயல்பட தயங்கினால், மேலே குறிப்பிட்ட சாதி, மத உயர்வு தாழ்வுகளை ஒழிப்பதில், அவர்களுக்குள்ள 'நேர்மையானது', கேள்விக்குறி ஆகாதா? ஜல்லிக்கட்டு போராட்டம் வெற்றியில் இருந்து கூட, அந்த பாடத்தைக் கற்றுக் கொள்ள வேண்டாமா?

Sunday, January 22, 2017

                                       1938  -  1965  -   2017


எச்சரிக்கை:
ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி கட்ஜு டிவிட்டரில் கூறியுள்ளது:" அவசர சட்டம், தமிழக சட்டசபையில் சட்டமாக உருமாறும்போது, அது நிரந்தர சட்டமாகிவிடும். அநேகமாக விரைவிலேயே அதை அரசு செய்யப்போகிறது. எனவே பிரச்சினையில்லை" என கூறியுள்ளார். (http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/22/apprehensions-of-jallikattu-agitators-unfounded-katju-1562344.html ) இது சரி என்றால், போராட்டம் தொடர்வது, தவறாகாதா? 10 ஆண்டுகளாக சொந்த செலவில் சட்டப் போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் ‘ஜல்லிக்கட்டு நாயகன்’ ராஜசேகர், தமிழக முதல்வருக்கு சட்ட ஆலோசனை வழங்கவும், 4 துறை அமைச்சர்களை சந்திக்கும் குழுவிலும் இடம்பெற்றுள்ள நிலையிலும், ஆளாளுக்கு 'எது நிரந்தர சட்டம்?' என்று குழப்பி வருவது சரியா? ஹிப் ஹாப் ஆதி, ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்டு போராட்டத்தை தூண்டியவர்கள் தெளிவுபடுத்தி, போராட்டத்தை நெறிப்படுத்துவது, அவர்களின் சமூக கடமையாகாதா? 

தவறினால், அக்குழப்பம் சட்டம் ஒழுங்கு சிக்கலாகி, தடியடி, துப்பாக்கி சூடு என்று பல உயிர்களை 'காவு' வாங்கினால், பலியாக போவது குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளே, 1965 போல, தற்போது 1938 வழியில் நடைபெற்று வரும் போராட்டமானது திசை மாறினால்.
ஆதியின் சரியான எச்சரிக்கை: https://www.facebook.com/hiphoptamizha/?hc_ref=SEARCH
'The Godfather'  ( https://en.wikipedia.org/wiki/The_Godfather_(novel)மற்றும் 'The Aquitaine Progression' (https://en.wikipedia.org/wiki/The_Aquitaine_Progression ) ஆங்கில நாவல்களை படித்தவர்களால், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில், முதல்வரையும், பிரதமரையும்,இழிவுபடுத்திய, போராட்டத்தில் 'ஊடுருவிய'  'சுயநல சக்திகள்' பற்றியும், 'பீட்டா' அமைப்பின் சர்வதேச சூழ்ச்சி பற்றியும் (http://www.nathanwinograd.com/?cat=10 ), அந்த 'சூழ்ச்சிக‌ள்' தெரியாமல், அந்த 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டத்தில்,  'நிதானம்' தவறி, 'உளறியவர்கள்' பற்றியும், விளங்கிக் கொள்ள முடியும். 10 வருடங்களுக்கு மேலாக போராடி வரும் போராட்டக் குழுவின் விளக்கத்தை ஏற்காமல் (https://www.youtube.com/watch?v=TpNSc32jLew ) ; வன்முறைகளுக்கு இடம் கொடுத்து, மறுநாள் 'நீதியரசர் ஹரி பரந்தாமன் ஜல்லிக்கட்டு சட்டம் பற்றி விளக்கிக் கூறியதை அடுத்து மாணவர்கள் மெரினா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.'(http://tamil.thehindu.com/tamilnadu/) என்பதும் கவனிக்கத்தக்கதாகும்; 1965 திசை திருப்பல் முயற்சியானது, முளையிலேயே, நல்ல வேளையாக ஒரு நாளிலேயே முடிவுக்கு வந்ததும். 

                                            -----------------

'ஜல்லிக் கட்டு' போராட்டத்தில், 'திராவிட' கட்சிகளும், அந்த கட்சிகளின் 'வால்களாக' பயணித்த 'தேசிய' கட்சிகளும், தமிழ்நாட்டில் 'அந்நியமாகியுள்ளதானது', உலகிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தி, பொது மக்களுக்கு ஊறு விளைவிக்கும் கேடுகளில் முடிந்த, காந்தியின் 'அகிம்சை' வழியிலிருந்து மாறுபட்டு, உலக வரலாற்றிலேயே முதல் முறையாகவா? என்ற கேள்வி எழும் வகையிலும்;

ஊழல் அரசியலில், கட்சித் தலைவரின் காலில் விழும் அவமரியாதை முதல்வர்கள், அமைச்சர்களின் பங்களிப்பால், இந்திய அளவிலும், உலக அளவிலும், ஈடு இணையற்ற தலைக்குனிவுக்கு உள்ளாகி, 'அவமரியாதை நாடா, தமிழ்நாடு?' என்ற கேள்வி அரங்கேறி வந்துள்ள சூழலில்;

கட்சிகளையும், தலைவர்களையும் ஓரங்கட்டி;

சாதி, மத வேறுபாடுகளைக் கடந்து, அந்த அவமரியாதையிலிருந்து, தமிழ்நாட்டை மீட்கும் வகையில், 'மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னெடுத்த, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' போராட்டமானது, அரங்கேறிவருகிறது.

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து, முற்றிலும் மாறுபட்டு, ஈ.வெ.ராவை அவமதித்து, பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் ஊறு விளைவிக்கும் வகையில், அண்ணாவும், ராஜாஜியும் தூண்டி, நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடான திசையில், தமிழ்நாடு பயணித்து, சீரழிவின் உச்சக் கட்டத்தை அடைந்திருந்தது.  

‘1944க்கு முன்  ‘பெரியார்’ தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன?சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு,காந்தி காலத்தில் இந்தியாவின் பிற பகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.’ (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, மாணவர்களும் இளைஞர்களும் முன்னெடுத்த 'ஜல்லிக்கட்டு மீட்சி' போராட்டமானது, 1965 போராட்டத்திற்கு எதிரான திசையில், 1938ஐ நோக்கி, 1938 போராட்ட திசையில், அதனையும் விஞ்சி, சாதனை படைத்துள்ளது.
(‘Not expecting support from any organisation nor political parties has been the hallmark of the demonstrations led predominantly by students and young working professionals, demanding revocation of ban on jallikattu.  In the same way, they have steadfastly remained independent in arranging food, water and cleaning the leftovers at Marina.’; http://www.newindianexpress.com/cities/chennai/2017/jan/20/jallikattu-agitators-in-chennai-continue-to-be-self-reliant-for-food-water-1561514.html )

1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பயணித்த திசையிலிருந்து, 1944இல் 'ஆரியர் - திராவிடர்' மோதல் அறிமுகத்தோடு, திசை திரும்பி பயணித்தன் விளைவே, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பதும்;

அந்த திசையில் தமிழ்நாடு பயணித்த போக்கில், காலனிய சூழ்ச்சியின் அடுத்த கட்ட தொடர்ச்சியாக, வெளிநாட்டு நிதி உதவி என்.ஜி.ஓக்களின் ஒத்துழைப்போடு, அமெரிக்காவில் தலைமை அலுவலகத்தைக் கொண்ட 'பீட்டா' அமைப்பும் (http://www.nathanwinograd.com/?cat=10  )  வளர்ந்து, சூழ்ச்சி வலையில் ஜல்லிக்கட்டை ஒழித்ததானது;

தமிழ்நாட்டின் அழிவு திசை பயணத்திற்கு எதிரான சமூக ஆற்றல்கள் எல்லாம், சென்னை வெள்ள நிவாரணத்தை குவியப் புள்ளியாக்கி, வெளியாகி, அந்த புதிய சமூக செயல்நுட்பத்தின் அடுத்த கட்ட வளர்ச்சியாக‌, 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பையும் 'குவியப் புள்ளியாக்கி, வெற்றி நோக்கி பயணிக்கும் சமூக செயல்நுட்பத்தை நான் கண்டுபிடித்து, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

‘மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை(structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும்.’(http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html )

ஊழல் அரசியலில் தமிழ்நாடு பயணித்ததால் விளைந்த காவிரி, முல்லைப்பெரியாறு, கச்சத்தீவு உள்ளிட்ட பிரச்சினைகளில், உச்சநீதிமன்ற ஆணைகளும் செல்லாக்காசாகி வரும் சூழலில்;

அதே ஊழல் அரசியல் காரணமாகவும், மேற்கத்திய ஆதிக்கத்தில்  'ஆரிய - திராவிட' பிரிவினை சூழ்ச்சியில், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவைக்கு ஏற்பட்ட வீழ்ச்சியும், தமிழரின் அடையாளத்திற்கு ஆபத்தாக கருத்தப்பட்ட சூழலில்;

'மாணவர்களின், இளைஞர்களின், 'சமூக உளவியலில்' அதிகரித்து வந்துள்ள 'அவமரியாதைக்கு' எதிரான 'சுயமரியாதை' 'தீயானது',

கிராமம், விவசாயம், பண்பாடு, சுயமரியாதை, வீரம் உள்ளிட்ட பல பரிமாணங்களை உள்ளடக்கிய‌ 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பானது', அந்த‌ 'சுயமரியாதை தீ' வெளிப்படுவதற்கு வாய்ப்பானது;

எனவே மாணவர்களை, இளைஞர்களை நேரடியாக பாதிக்கும் கல்விக் கொள்ளை திசைக்கும் எதிராக பயணிக்கும் அறிகுறிகளுடன், அது அரங்கேறியுள்ளது.

மேலே குறிப்பிட்ட சமூக செயல் நுட்பத்தை, ஓரளவு அடையாளம் கண்டு, ''இந்திய இளைஞர்களுக்கு வழி காட்டும் தமிழ் எழுச்சி' (‘Tamil spring awaits India's youth’) என்ற தலைப்பிலான, கீழ்வரும் கட்டுரை விளக்கியுள்ளது. 

‘How much of our history and past, our culture and spirituality, our identity and authenticity as a people, shall we pawn for the glitter and titillations of modernity? Should we sever our roots to be transplanted into the global village? Can material gains compensate for all that we are robbed of in the process? Is modern culture all sanity and our native cultures a domain only of embarrassment? Shouldn’t we critique the seed of cultural inferiority our colonial masters planted in our collective consciousness and muster up the courage to look at the warts on the faces of the western cultural monolith? How come, as Krishnamachari Srikkanth asked, boxing is not cruelty and Jallikattu is?


வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex), வெற்றிகரமாக விதைத்த காலனிய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி; ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்' ; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

தமிழில்   ஏற்கனவே வழக்கில் இருந்த 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருளை திரித்து,  'ஆரிய - திராவிட' பார்வையில், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை கெடுதலாக சித்தரித்து பயணித்த போக்கில்,  (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

தமது கடந்த கால வரலாறு, பண்பாடு, பாரம்பரியம், ஆன்மீகம், தனித்துவமான அடையாளம் தொடர்புள்ள சமூக ஆற்றல்கள் எல்லாம், 'உலகமயமாதலின்' மூலமாக செயல்படும் மேற்கத்திய சூழ்ச்சிக்கு எதிராக, ஆக்கபூர்வ சுயமரியாதை மீட்சி திசையில், 'ஜல்லிக்கட்டு எதிர்ப்பு' என்பதை குவியப் புள்ளியாகக் கொண்டு, படித்த இளைஞர்கள், படிக்கும் மாணவர்கள் முன்னணி வகிக்க, கிளர்ந்தெழுந்துள்ளது; ஜல்லிக்கட்டு காளையைப் போலவே;

'ஆரிய - திராவிட' காலனிய சூழ்ச்சியையும் அவமரியாதை போக்கின் கவசமாக ஒதுங்கச் செய்து. (http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html  ) 

அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வமாக 'பெரியார் கொள்கையில்' இனியும் பயணிப்பதானது, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் தமிழர் சுயமரியாதை மீட்சி நோக்கில், 'ஜல்லிக்கட்டு' எதிர்ப்பில் வெளிப்பட்டுள்ள சமூக ஆற்றல்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும், உள்ளாகும் எதிர்க்குவியமாகும் ஆபத்தில், 'பெரியாரை' சிக்க வைத்து விடும்; தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு பற்றிய அவரின் தவறான நிலைப்பாடுகள் காரணமாக.

' ‘பெரியாரின்’  முழு பொதுவாழ்வையும், அவரின் தியாகங்களையும் கணக்கில் கொள்ளாமல், அவரைப் பற்றி 'இழிவாக', 'திராவிட உணர்ச்சிபூர்வ பாணியில்' பேசி/எழுதி வரும் 'இந்துத்வா' ஆதரவு பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், 'பெரியார்' கட்சிகள் 'நன்றி' சொல்லவேண்டும். ஏனெனில் மேற்குறிப்பிட்ட தவறான திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கு, 'ஆக்ஸிஜன்' வழங்கி, 'உயிருடன்' நீடிக்க உதவி வருபவர்களும் அவர்களே ஆவர்.' (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

குறிப்பு:

1. ‘ஜல்லிக்கட்டு விவகாரத்தில் பாஜகவை மட்டுமே குற்றம் சொல்லும் சொந்தங்களுக்கு...,’ 

2. 'நண்பர்களே
தற்போது மெரினாவில் மைக் பிடித்த நண்பர்கள் முதல்வரை வாடா போடா என்று ஒருமையில் பேசி வருகின்றனர் 

கூட்டம் கூடிவிட்டதால் நாம் என்ன வேண்டுமானாலும் பேசலாமா நண்பர்களே
இந்த போராட்டமே அம்மாவோ ஐயாவோ இருந்திருந்தால் நடைபெற்றிருக்குமா 
காவல்துறை உதவியில்லாமல் நடைபெற்றிருக்குமா

சிந்தியுங்கள்'
https://www.facebook.com/gauthaman.br

Thursday, January 19, 2017

                    ‘துக்ளக்’கும், சசிகலா நடராஜனும்


'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணியில் நடராஜன்


“நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்” என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் (சசிகலா) நடராஜன்.

மேலே குறிப்பிட்ட செய்தியில், ஜெயலலிதாவிற்கு தனது மனைவி சசிகலாவும், தானும், தனது குடும்பத்தினரும் எந்த அளவுக்கு பக்கபலமாக இருந்து 'தொண்டு' செய்தோம், என்பதை பட்டியலிட்டு;

 அதன் தொடர்ச்சியாக, சசிகலா தொடர்பாக;

"இன்று அவர் ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார் என்று கூறுகிறார்கள். வெட்கமாக இல்லையா, என அவர்களை கேட்கிறேன். இந்த விஷமத்தை பரப்புகிறவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் முகமூடியை ஊர், ஊராக சென்று கிழித்துக்காட்டுவேன்" என்று சூளுரைத்துள்ளார்.

'சசிகலா ஜெயலலிதாவை கொலை செய்து விட்டார்' என்பது விஷமமான தகவல் என்றும், அதை சுயலாப உள்நோக்கத்துடன், சில 'விஷமிகள்' பரப்பி வருகிறார்கள், என்ற நடராஜனின் கூற்றை ஏற்றுக் கொண்டாலும்;

'அந்த விஷமமான' தகவலானது தமிழ்நாடெங்கும், குறிப்பாக கிராமப்புறங்களில், 'காட்டுத்தீ'  போன்று ஏன் பரவி வருகிறது?

இன்றைக்கு பொதுச் செயலாளராக பதவி ஏற்றிருக்கும் சசிகலாவும், அவருக்கு பக்க பலமாக இருக்கும் சசிகலாவின் உறவினர்களும் தனக்கு எதிராக சதி செய்ததை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு, ஜெயலலிதா சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ள நிலையில்;

'அந்த சதி' பற்றிய நடராஜனின் விளக்கம் மூலமாகவே,  'காட்டுத்தீ' போல பரவி வரும்,  'அந்த வதந்தியை' முறியடிக்க முடியும்;

என்ற பொதுமக்களின் கருத்துருவாக்கம்  (Public Opinion Formation)  பற்றிய சமூக செயல்நுட்பம்' நடராஜனுக்கோ, அல்லது அவரின் ஆலோசகர்களுக்கோ தெரியாதா?

‘பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion Formation) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.’ என்பதையும்;

'நேற்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள, இன்று எதற்காக சசிகலா காலில் விழுகிறார்கள்? நாளை எவர் காலில் விழுவார்கள்? தமது சொந்த, பந்தங்கள் மதிப்பதற்கு, பணம் சம்பாதிக்கஇப்படி அவமரியாதையாக வாழ வேண்டுமா? இப்படி வாழ்பவர்களை மதிக்கும், அவர்களின் சொந்த பந்தங்களின் யோக்கியதையும் இப்படித்தானா? நமது யோக்கியதையும், நமது சொந்த பந்தங்களின் யோக்கியதையும் அதே போக்கில் தான் உள்ளதா? என்ற கேள்வியை மனசாட்சியுடன் எழுப்பி, விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் பயணிக்கவில்லையென்றால், நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

1925இல் .வெ.ரா அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் பலனா, இவையெல்லாம்? என்று சசிகலா மட்டுமல்ல, அவரை ஆதரிக்கும் தி. தலைவர் கி.வீரமணி மட்டுமல்ல;

ஆட்சிக்கனவில் மிதக்கும் அனைத்து கட்சிகளும், தலைவர்களும் விடைகள் கண்டு, சுதாரிக்க வில்லையென்றால்:

விஜயகாந்த் சந்தித்துள்ள விளைவினை விட, இன்னும் மோசமான விளைவுகளையே சந்திப்பார்கள்? ' என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html )

'அந்த சதி' பற்றிய நடராஜனின் விளக்கம், ஏற்கனவே வெளிவந்துள்ளதா

என்று இணையத்தில் தேடியபோது, கீழ்வரும் காணொளி கிடைத்தது.

'பட்டுப்புடவையை இரவல் கொடுத்த மாதிரி', தமிழகம் என்ற 'பட்டுப் புடவையை' ஜெயலலிதாவிடம் கொடுத்து விட்டு, அந்த பட்டுப் புடவைக்கு ஊறு நேர்ந்துவிடக் கூடாது, என்று தான் ஜெயலலிதாவை கவனமுடன் பார்த்து வந்துள்ளதாகவும்;

"இனி அப்படி இருக்க மாட்டேன்" என்றும்;

"அரசியலில் வெளிப்படையாக வா என்று அவர் (ஜெயலலிதா) அழைத்திருக்கிறார். அவரது நடவடிக்கை (நடராஜனை சிறையிலடைத்தது) மூலம் அழைத்திருக்கிறார். அதை ஏற்று அரசியலில் வெளிப்படையாக, நான் வருவேன்." என்பது உள்ளிட்டு, இன்னும் பல 'வியப்பூட்டும்' தகவல்களை எல்லாம், மேலே குறிப்பிட்ட பேட்டியில் நடராஜன் வெளிப்படுத்தி உள்ளார்.

கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது "மத்தியில் இனி கூட்டாட்சி தான். தனித்து எந்த கொம்பனாலும் ஆட்சி அமைக்க முடியாது' என்று நடராஜன் கணித்து, சசிகலாவுடன் உள்ள தனது "உறவு உடைந்தது உடைந்தது தான்' என்று தெரிவித்து, சசிகலாவிற்கும் ஜெயலலிதாவிற்கும் உறவு விரிந்ததற்கு துக்ளக் சோவே காரணம் என்றும் குற்றம் சுமத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=_hARl0Vgo4M )

அவ்வாறு அரசியலில் வெளிப்படையாக பயணித்து வந்த நடராஜன்;

நாங்கள் குடும்ப அரசியல்தான் செய்வோம்என்று துவக்கத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள, ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளதானது, அரசியல் நகைச்சுவை ஆகாதா

அரசியல் அரங்கில் இது போன்ற நகைச்சுவைகளை வழங்கி, 'துக்ளக்' சோவிற்கு துணை புரிந்து வந்தவர் தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதி ஆவார். ஆனால் அந்த நகைச்சுவையை தன் மீதான தனி மனித தாக்குதலாக, அவர் கருதாமல், தனிப்பட்ட முறையில் சோ வுடன் நட்பு பாராட்டினார்.

அதே போல, ஜெயலலிதாவை அரசியலில் ஆதரித்து வந்த சோ, 1996 பொதுத் தேர்தலில் ஜெயலலிதாவை தோற்கடிக்கவும் பங்களித்தார், பகிரங்கமாகவே. அதற்காக ஜெயலலிதாவும் சோவை வெறுக்கவில்லை.

அது மட்டுமல்ல, 'சசிகலா' தமிழக அரசின் செயல்பாடுகளில் 'சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தியாக' இருப்பது தவறு என்பதையும் பகிரங்கமாக  'துக்ளக்' சோ  வெளிப்படுத்தியிருக்கிறார். (https://www.youtube.com/watch?v=J-voqvypEyI

துக்ளக் சோவும் சரி, இப்போது துக்ளக் இதழின் ஆசிரியராக உள்ள குருமூர்த்தியும் சரி, தங்களின் சொத்து, சுகத்திற்காக பொதுவாழ்வில் இருக்கிறார்கள், என்று அவர்களால் எதிர்க்கப்பட்ட எவரு‌ம் கூடகுற்றம் சுமத்தியதில்லை. பொது அரங்கில் துணிச்சலுடன் விவாதத்தை சந்திக்க துக்ளக் சோவும், குருமூர்த்தியும்  தயங்கியதில்லை.

பா.ஜ.கவை பகிரங்கமாக ஆதரித்து கொண்டே, அக்கட்சியின் குறைகளையும், மோடி ஆட்சியின் நிலைப்பாடுகளில் உள்ள தவறுகளையும் 'பகிரங்கமாக' சுட்டிக்காட்டி வந்தவர்கள், துக்ளக் சோவும், குருமூர்த்தியும், ஆவர். குருமூர்த்தி சார்ந்துள்ள 'சுதேசி இயக்கம்', மோடி அரசை ஆதரிக்க வேண்டியவைகளில் ஆதரித்தும், எதிர்க்க வேண்டியவைகளை பகிரங்கமாக எதிர்த்தும், செயல்படும் இயக்கமாகும். 1967க்குப் பின், திராவிட கட்சிகளில் சோ, குருமூர்த்தி போன்றவர்கள், ஆதரவாளர்களாக‌ இருந்திருந்தால், வாரிசு அரசியல், குடும்ப அரசியல் போன்ற நோய்களில், அக்கட்சிகள் சிக்கியிருக்குமா? பா.ஜ.க போன்று, திராவிடக் கட்சிகளில், அவர்களை 'சகித்துக்' கொள்வார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவை ஆகும்.

குருமூர்த்தி 'பொது அரங்கில் பகிரங்கமாக ஊழல் குற்றம் சுமத்தி, விவாதத்திற்கு தயார்' என்று அறிவித்த போது, அவ்வாறு விவாதிக்காமல் பின்வாங்கியவர்கள் வரிசையில், முன்னாள் மத்திய அமைச்சர்கள் .சிதம்பரம் (http://www.dailymail.co.uk/indiahome/indianews/article-3341680/Gurumurthy-takes-jibe-former-finance-minister-Chidambaram-16-business-premises-raided-tax-officials.html ) , தயாநிதி மாறன் (http://www.thehindu.com/news/national/tamil-nadu/gurumurthy-challenges-dayanidhi-maran-to-debate-on-bsnl-exchange-scam/article6815547.ece ) உள்ளிட்ட பலர் அடங்குபவர்.

சசிகலாவை துக்ளக் சோ எதிர்த்த அதே நோக்கில், துக்ளக் ஆசிரியராக பொறுப்பேற்றுள்ள குருமூர்த்தியும், சசிகலாவின் குடும்ப அரசியலை எதிர்த்து, தொடர்ந்து துக்ளக்கில் எழுதி வருகிறார். அதன் தொடர்ச்சியாகவே துக்ளக் ஆண்டு விழாவில் பேசினார்.

அதை மறுத்து, சசிகலாவோ, அல்லது ஒரு இதழின் ஆசிரியராக இருக்கும் நடராஜனோ பத்திரிக்கைகளில் எழுதினாலோ, மேடைகளில் பேசினாலோ, அந்த குடும்ப அரசியல் சரியா? தவறா? என்பது பொது மக்களுக்கு தெளிவாகும்.

தி.மு. தலைவர் கலைஞர் கருணாநிதியோ, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவோ, தம்மை பகிரங்கமாக எதிர்த்த, துக்ளக் சோவை, 'மறைந்திருந்து' தாக்குவதாக சொல்லவில்லை, என்பதை கவனத்தில் கொள்ளாமல்;

தனது இதழ் சார்பாக கூட்டம் போட்டு, குருமூர்த்தியின் குடும்ப அரசியல் குற்றச்சாட்டை மறுத்திருக்கும்;

அல்லது தனது இதழில் தலையங்கம் மூலமோ, கட்டுரைகள் மூலமோ மறுத்திருக்கும்;

வாய்ப்புகளை நடராஜன் நாடாமல்;

துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன் மறைந்திருந்து தாக்குற?", என்று நடராஜன் குற்றம் சுமத்தினால்;

அது 'வின்னர்' திரைப்பட வடிவேல் பாணியில், காமெடி ஆகாதா

அந்த 'காமெடி வசனத்தில் ஆரிய திராவிட கருத்து' இடம் பெற்றதற்கு, தி.க. தலைவர் கி.வீரமணி மூலகாரணமா? 
(http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில், சுப்பிரமணியசுவாமிக்கு ஏன் 'இசட்' பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியது?  என்று எவரும் கேட்கவில்லை

பயங்கரவாதத்தையும், ஊழலையும் எதிர்த்து போராடி வருபவர்களுக்கு உள்ள அச்சுறுத்தல்களில் இருந்து, அவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், பாதுகாக்க வேண்டியது அரசின் கடமையாகும். அந்த அடிப்படையிலேயே சுப்பிரமணிய சுவாமி, குருமூர்த்தி, போன்றஇன்னும் பலருக்கு அரசு பாதுகாப்பு வழங்கி வருகிறது.

சுப்பிரமணிய சுவாமி, குருமூர்த்தி போன்றவர்கள் எல்லாம் எவர் சொத்தையும் அச்சுறுத்தி மிரட்டி வாங்கவில்லை; கொலை செய்யவில்லை. அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் எல்லாம், வெளியில் செல்லும்போது, தமக்கான சொந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து கொள்வர்.

மேலே குறிப்பிட்ட பின்னணியில், 'குருமூர்த்திக்கு ஏன் பாதுகாப்பு?' என்று நடராஜன் வினா எழுப்புவதும் நகைச்சுவை ஆகாதா?

சென்னையில் சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பானசி.பி. வழக்கில் சிக்கிய தயாநிதி மாறன்", " ஒரு ஆர்.எஸ்.எஸ் கொள்கையாளரை" திருப்தி செய்வதற்காக சி.பி.அய் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியதானது, ‘திராவிட சந்தர்ப்பவாதத்தின் உச்சமா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்
(http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_25.htm )

ஆனால் தயாநிதி மாறன் கூட, நடராஜனைப் போல, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியை "தைரியம் இருந்தா வெளியில வா. ஏன் மறைந்திருந்து தாக்குற?", என்று மீடியா வெளிச்சத்தில் பேசவில்லை

ஏனெனில், அப்படி பேசினால், அது 'வின்னர்' திரைப்பட வடிவேலு பாணி நகைச்சுவை ஆகிவிடும்  என்று தயாநிதி மாறனுக்கும் தெரியும்; . சிதம்பரத்திற்கும் தெரியும். ( https://www.youtube.com/watch?v=i3Cuk0rck18

'வின்னர்' திரைப்பட வடிவேலு நகைச்சுவையை விட, உலகப் புகழ் பெற்ற நகைச்சுவையை, நிகழ்கால தமிழக அரசியல் சூழலில் கையாண்டுள்ளார், எழுத்தாளர் வாஸந்தி. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes

‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;

ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம்.

ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. 

பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்; 

சசிகலாவிற்கு எதிரான சமூக ஆற்றல்களின் ஒரே குவியப் புள்ளியாக;

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்ற ஒரே காரணத்தின் அடிப்படையில் தீபாவிற்கு பெருகி வரும் ஆதரவும், தமிழ்நாட்டு 'அறிவு ஜீவிகளை' பார்த்து, 'அந்த சிறுவன் கை கொட்டி சிரிக்கும்' ஒலியே ஆகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post_12.html

குறிப்பு:


1.    .பி.எஸ் முதல்வராக இருந்த போது, பொது அரங்கில், 'மீடியா வெளிச்சத்தில்' தமிழக முதல்வரை ஜெயலலிதா அவமதித்ததில்லை; காரணம் அதன் விளைவுகள் தம்மை எந்த அளவுக்கு பாதிக்கும்? என்று 1996 தேர்தல் தோல்வியானது அவருக்கு கற்றுக் கொடுத்திருந்தது.

ஆனால் சசிகலா, தமிழக முதல்வரை மட்டுமல்ல, பொது நிகழ்ச்சிகளின் மாண்புகளை எந்த அளவுக்கு அவமதித்து நடந்து வருகிறார்? என்பதை;

''சின்னத்தனம்', சுயமரியாதை இழப்பு' என்ற தலைப்பில், துக்ளக்'( 26.01.2017) தலையங்கம் விளக்கியுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, மெரினாவில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவிகள்;

'சின்னம்மா, சின்னம்மா.. ஓபிஎஸ்ச எங்கம்மா..' என்று "இளம் பெண் கோஷமிடும் வீடியோ வைரலாகியுள்ளது."; ( http://tamil.oneindia.com/news/tamilnadu/a-young-woman-protest-at-jallikattu-protest-marina-beach-going-viral-272260.html )

2.   சென்னை வெள்ள நிவாரணத்தில், அரசியல் கட்சிகளை எல்லாம் 'தாமதமான' வால்களாக்கி;

சென்னை முதல் கன்னியாகுமரி வரை இளைஞர்களும். மாணவர்களும் 'செயல்பூர்வமாக' உதவியபோக்கு என்பது;

தமிழ்நாட்டின் மீட்சியின் தொடக்க அறிகுறி என்பது தொடர்பான‌,  எனது பதிவுகளை படித்து வந்துள்ளவர்களுக்கு,  'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டம் என்பது,  எவ்வாறு அதன் தொடர்ச்சியே ஆகும்? என்பதும் விளங்கும்.

மக்களின் தேவைகளும், அதை உணர்ந்து (sensitize),  செயல்பூர்வமாக உதவும் மனிதர்களும், இணைய வழி விரிந்த சமூக சூழலில், ஒத்திசைவான முறையில் (Social Resonance), செயல்பாடுகளுக்கான அமைப்புகளானவை (structures), திட்டமிடாமலேயே, அந்த ஒத்திசைவு போக்கிலேயே உருவாகும்.
(http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html