Saturday, June 24, 2017

Is the Language Policy derailing the nation building process in India?


Many will be surprised to know that in the first general election in 1952, after the Indian independence, Congress that led the independence movement, failed to get absolute majority in Tamilnadu, as the several parties, banking on the support generated by the  ‘separate Dravida Nadu’ demand of ‘Periyar’EVR, won significant number of the assembly seats. Worse, tempting few of those parties to defect, under the initiative of Rajaji, Congress formed the first government in TN, after the independence.

Interestingly, before the independence, Rajaji supported the  ‘separate Dravida Nadu’ demand of his friend ‘Periyar’EVR, who entered into the public life, under the influence of Rajaji.

The demand for the separation of Tamilnadu (then Madras Presidency) from India even before the independence, gained unbelievable support, due to the imposing of Hindi by the then CM Rajaji, as the following article, rightly, explained.

“In 1937 when the Madras Presidency under C Rajagopalachari insisted on a compulsory learning of Hindi in the State, the Dravidian movement spearheaded by the Justice Party of E V Ramaswamy (popularly called Periyar) got a major campaign agenda. They vehemently opposed this imposition, and the agitation went on for three years before it was revoked in 1940.” (https://swarajyamag.com/culture/the-language-genie-put-it-back-into-the-bottle-for-the-sake-of-national-unity )

The anti-Hindi steam sustained the anti-India sentiments in Tamilnadu, which was exploited by Rajaji’s U-turn w.r.t Hindi, to support 1965 Anti-Hindi agitation, joining hands with the DMK leader C.N.Annadurai, resulting in dethroning in 1967, not only the Congress party, but also all the national parties from TN politics; forcing them to survive as the ‘tails’ to the Dravidian parties; apart from discontinuing the voluntary learning of Hindi in TN schools.

Unfortunately ‘Periyar EVR’s opposition to the 1965 anti-Hindi agitation & his experiencing the humiliations in the agitations, were not subjected to objective debate, which might have revealed the reasons for the failure of the nation building process in Tamilnadu. Without encouraging such debates, worse, ‘Periyar’ parties in TN, now resort to ‘thug’ style (காலித்தனம் in EVR’s words) agitations. (‘The Dravidian Movement & Rescuing Tamilnadu’ ; http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html

I doubt if the language policy of the Indian govt, takes into account, the threat to the nation building process, due to the imposition of Hindi on the non-Hindi speaking people.

Had the first war of Indian independence 1857 succeeded, India would now be under the rule of more than 50 kings.

Ignoring the above fact, the nation building process, after the Independence, was subordinated to the dynastic vested interests of Nehru family (http://tamilsdirection.blogspot.sg/2016/10/caution-bjps-support-to-strengthen.html ) ;

spreading the dynastic infection to the regional parties, including DMK.

The failure in the nation building process was mainly responsible for the growth of the chauvinistic regional parties and the separatist groups; in turn weakening the soft power of the government & forcing the employment of hard power as witnessed in Kashmir, which, in my view, would have prospered like Sikkim, minus the mischief from Pakistan.

Encouraging the role of the mother tongue in education, administration, and social life, will help the nation building process; resulting in a socially conducive environment, in which, the encouragement to learn other non-mother tongue Indian languages including Hindi, Sanskrit, etc will work.

Imposing Hindi not only will derail the nation building process (cautioned well by most of the TN members in the constituent assembly debates; “This kind of intolerance makes us fear that the strong Centre which we need, a strong Centre which is necessary will also mean the enslavement of people who do not speak the language of the legislature, the language of the Centre. I would, Sir, convey a warning on behalf of the people of the South for the reason that there are already elements in South India who want separation and it is up to us to tax the maximum strength we have to keeping those elements down, and my honourable friends in U.P. do not help us in anyway by flogging their idea ‘Hindi Imperialism’ to the maximum extend possible.”- T.T. Krishnamachari; http://www.languageinindia.com/april2006/constituentassemblylastdays.pdf ) ;
  
but also will cause a kind of pyramid like infection to even the regional languages, to ‘destroy’ the other mother tongue languages, under the ‘misused power’ of the regional languages, as explained below.

“But interestingly this concept of linguistic imperialism runs right down the pyramid. For instance, the oral languages and dialects of Karnataka like Beary, Tulu, Kodava, Konkani, Siddi, Hakki Pikki which are oral languages bereft of scripts, feel terribly threatened by the hegemony of official Kannada, which in turn fears a Hindi, which eventually is intimidated by English!” (https://swarajyamag.com/culture/the-language-genie-put-it-back-into-the-bottle-for-the-sake-of-national-unity )

Anti-India steam in TN acquire boosting, whenever TN Tamils visit countries like Singapore & Srilanka, raising the question why Tamil, unlike such countries, in the administration of the Indian central govt, should continue the inferior status. The steam get additional boost, when they visit European countries, China & Japan, where the mother tongue dominates in the education, administration & social life.

W.r.t the anti-India steam in TN, I like to draw the attention of the pro-Tamil Hindutva supporters to probe, if the Archelogy & Linguistics related central govt departments in Mysuru & New Delhi, discriminate against Tamil, Tamils & Tamilnadu, as the following link suggested.
If the above allegations are true, PM Modi government need to act to rescue Tamil, Tamils, & Tamilnadu; as I fear that such unattended discriminations will lead to the future separation of Tamilnadu, headed by political thugs, misusing the Tamil sentiments & transforming TN to decay more like African countries, looting the remaining natural wealth, & safeguarding MOSTLY the non-Tamils in TN (http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html  )

The depoliticizing of TN politics, due to the corrupt rule of the Dravidian parties, had forced all the political parties to survive with ‘directly or indirectly benefitted’ ‘party workers’(?), alienating the college students and youth, as the Chennai Merina ‘Jallikkattu Support Struggle’ demonstrated; Also the ‘media projected’ Tamil poets/writers/orators (mostly anti-Hindutva), who directly or indirectly ‘benefit’ (?) by developing ‘mutually beneficial links’ (?) with such political thugs, are either alienated or disrespected by the college students & youth; also in the alienation process, anti-Hindutva in TN becoming (may be with few exceptions) synonymous with corruption. 

In fact, thanks to the above alienation, the selfish agenda of the Dravidian parties disabled their potential to exploit the anti-Hindi steam in TN. Also thanks to ‘the Sasikala phenomenon’, the Dravidian parties corrupt rule of TN will end soon. Hence the Modi govt is now having a ‘buffer time’ to initiate concrete steps, to influence TN to enter into the Indian unity stream, to rescue Tamil, Tamils & Tamilnadu. 

The mother tongue language based identity of the individual, excluded in the nation building process, will not only derail the process but also destroy it in the long run; as my research had revealed that unknowingly ‘Periyar’ EVR, decrying mother tongue based education, encouraged western-English mania in TN, divorcing the values based cultural roots of the Tamils, leading to thugs dominating in the public life. 

I shall not be surprised if any study revealed that the period of accelerated corruption in public life in India, and the period of accelerated growth of the English medium (commercial) education in Tamilnadu, were the same, and also inter-related.  

From social dynamics point of view, one must be aware of the contradicting social forces both within the pro-Hindutva as well as anti-Hindutva circles;


& objectively sense the vested interests in operation, both within the pro-Hindutva as well as anti-Hindutva circles;

to play a constructive role for the welfare of all the people in the country.

Hence BLIND support to pro-Hindutva or anti-Hindutva, may force us to play unconsciously socially destructive role.   

The developments in Natural Language Processing (NLP) could be employed to empower all the languages of India in education, administration and social life, ensuring a strong nation building process.  

Will Modi Govt wake up to include the NLP based language policy in the agenda of the Digital India?

 Note:  'Why Karl Marx on castes in India, Noam Chomsky on Nandigram and Amartya Sen on Modi, were wrong?' ; http://veepandi.blogspot.sg/2017/06/why-karl-marx-on-castes-in-india-noam.html  

Monday, June 19, 2017

'துக்ளக்கு'ம், 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடும்';


            இரா.செழியன் பயணித்த திசையில் தீர்வு?


திராவிடர் கழகம் சார்பில், சுமார் 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த, 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூல்களும், எனது மேற்பார்வையில், ஒரு குழுவினர் சேகரித்த தகவல்களை, தொகுத்து எழுதியவையாகும். அதற்காக சென்னை கன்னிமாரா நூலகம் உள்ளிட்டு, பல இடங்களில் ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பான விபரங்களை சேகரித்தேன். 1967க்குப் பின் தான், தமிழ்நாட்டிற்கான நிதிகள் குறையும் போக்கு தொடங்கியதானது, அதில் வெளிப்பட்டது.

சில பிராமண அதிகாரிகள் 'துவேஷ' நோக்கில், பிராமணரல்லாத அதிகாரிகளின் பதவி உயர்வுகளை கெடுத்ததை (இவை போன்று உயர்கல்வி/அதிகார நிறுவனங்களிலும், இன்றும் நடக்கும் சில நிகழ்ச்சிகள், மரணப்போக்கிலுள்ள 'பெரியார்' கட்சிகளுக்கு இன்றும் 'ஆக்சிஜன்' ஆக) நேரில் சாட்சியாக அனுபவித்த; 

மத்திய அரசில் உயர் அதிகாரியாக பதவி வகித்து, பணி ஓய்வு பெற்ற, 'நல்ல' பிராமண அதிகாரிகளை நண்பர்களாக கொண்டுள்ள‌, எனது 'பிராமணரல்லாத' நண்பர் தெரிவித்த கீழ்வரும் தகவலானது, மேலே குறிப்பிட்ட புதிருக்கு விளக்கமானது.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில், மத்திய அரசிலும் அவர்கள் செல்வாக்குடன் இருந்ததால் தான், தமிழ்நாட்டிற்கு பாதகங்கள் இன்றி, சாதகங்கள் நிகழ்ந்தன: காமராசராலும் திருச்சி 'பெல்', தூவாக்குடி 'துப்பாக்கி தொழிற்சாலை', ஆவடி 'டேங்க்' தொழிற்சாலை போன்றவை வந்தன. பிராமண எதிர்ப்பில், தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் தமிழ்நாட்டு பிராமணர்கள் செல்வாக்கு குறைந்ததே,1967க்குப் பின் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய‌ வேண்டிய பெரும் திட்டங்கள் எல்லாம்,  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த‌ பெங்களுருக்கு சென்றன; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகள் முளை விட்டு வளர்ந்தன; கச்சத்தீவும் பின்னர் பறி போக‌. 

1967க்கு முன், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டு, 'பெரியார்' ஈ.வெ.ராவும், அண்ணாவும் 'பிரிவினைக்கான காரணங்களாக' முன் வைத்தவை எல்லாம், 1967க்குப் பின், எந்த அளவுக்கு பொருத்தமற்று (irrelevant) போயின? என்பதும் ஆய்விற்குரியவையாகும்? (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?     வீழ்ந்து வருகிறார்களா?’  ;  http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html    & http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

'சில' பிராமணர்களின்  'துவேஷ' போக்கினால் ஊக்குவிக்கப்படும், 'பிராமண எதிர்ப்பு' சமூக சூழலானது;

பாலியல் தொந்திரவுக்கு உள்ளான பிராமணப் பெண் கொடுத்த புகாரிலிருந்து, அந்த தொந்திரவு கொடுத்த 'பிராமணரல்லாத' உயர் அதிகாரி தப்பிக்கவும், 'பிராமணரல்லாத' 'திராவிட' அரசியல்வாதி, தனிப்பட்ட விரோதத்தை, 'பிராமண எதிர்ப்பு' என்ற முகமூடியில், பிராமண அதிகாரியை, பழிவாங்க முயற்சிக்கவும், பிராமணரல்லாத பேராசியரின் வகுப்பில் 'ஒழுக்கக்கேடான தொந்திரவு' கொடுத்து, 'பெரியார்' படத்தை, பிராமண மாணவர்கள் உடைக்கவும், வழி வகுத்தன, என்பது எனது அனுபவங்களாகும். (குறிப்பு கீழே) 

தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, காலனிய சூழ்ச்சியில் 'ரேஸ்' (Race) என்ற மேற்கத்திய பொருளில் திரிந்து, அந்த திரிதல் மூலம், ஆரியர் - திராவிடர் மோதல் அரங்கேறி, 'அந்த சில' பிராமணர்களும், 'பெரியார்' கொள்கையாளர்களும், அந்த சூழ்ச்சியில் பலியாகி, பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

சமூகத்தில் நல்லவைகளும், தீயவைகளும் திடீரென வானத்திலிருந்து வந்து குதித்து விடாது. மேலே குறிப்பிட்ட பாதகமான காலனி சூழ்ச்சி வரலாற்றுப் பின்னணியில் தான், 'பெரியார் சமூக கிருமிகளும்', சிம்புவின் 'பீப்' பாடலும் வெளிப்பட்டதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/08/blog-post.html

‘கடந்த வாரம் சென்னை எல்லையில்,  ஆந்திராவுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசியை பெண்கள் கடத்த முய‌ன்றதை, தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை, அந்த பெண்கள் அடித்த செய்தி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. 'ஜிகிர் தண்டா' திரைப்படத்தில் கதாநாயகி, அறிமுக காட்சியில், துணிக்கடையில் சேலை திருடுவது காட்டப்பட்டது. அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடி திருடியும், அவர்களுக்கு தண்டனையில்லையென்றால், (கூடுதலாக அவர்களிடம் 'பலன்' பெற்று 'புகழ்' பாட, உணர்ச்சிக்கவிஞர்கள்/பேச்சாளர்கள்/எழுத்தாளர்கள் 'மிகுந்துள்ள' தமிழ்நாட்டில்பிழைப்பிற்கு ரேசன் அரிசியை கடத்துவது தவறா? இவை போன்ற கேள்விகளை, சாதாரண மக்களிடம், 1967க்கு முன், கற்பனை கூட செய்திருக்க முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

அடுத்து, மேலே குறிப்பிட்ட 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூலகளிலும், நான் பதிவு செய்த கருத்தானது, 'துக்ளக்' ( 21.06.2017) இதழ் 'கேள்வி‍ - பதில்' பகுதியில் வெளிவந்து, என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி: 'கேரள நதிகளிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரைக் கூட, தமிழகத்திற்குத் தர மாட்டோம்' என்கிற அம்மாநில அரசின் 'அராஜக' தீர்மானம் பற்றி....?

பதில்: இவையெல்லாம் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள். எப்படிப் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று பார்ப்போம். கேரளாவுக்கு அரிசி தேவை. நம்மிடம் நிலம் இருக்கிறது. தமிழகம்'இவ்வளவு நிலத்தில் நாங்கள் குத்தகை முறையில் நெல் பயிரிட்டு உங்களுக்குக் கொடுக்கிறோம். நீங்கள் இவ்வளவு தண்ணிரை கொடுங்கள்' என்று பேசினால், ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.'உங்களிடம் தண்ணீர் இருக்கிறதே கொடுங்கள்'என்று மட்டும் கேட்டால், எப்படி அவர்கள் கொடுப்பார்கள்? கேரளாவிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படத்தான் செய்கிறது. ஏனென்றால், ஒரு இடத்தில் தண்ணீர், இன்னொரு இடத்தில் மக்கள் ‍ அதுதான் காரணம்.

'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூல்களிலும், மேற்குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான‌ எனது பதிவானது, தீர்வை குறிப்பிட்டு, நேரு குடும்ப ஆட்சியில் அது சாத்தியமில்லை என்பதையும் குறிப்பிட்டு, பிரிவினை 'உணர்ச்சிபூர்வ' போக்குகளை வளர்க்கவே உதவியது; குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளில் பலர் படிப்பையும், பிழைப்பையும் கெடுத்து, தீக்குளித்து போராடி, தத்தம் வாழ்வை தொலைக்கவும், அதை 'அரசியல் மூலதனமாக்கி', சுயநல தலைவர்கள் பிழைத்து, தத்தம் குடும்பப் பிள்ளைகள் படித்தாலும், படிக்காவிட்டாலும் நன்கு 'செட்டில்' செய்து வாழும் வகையில்; அதன் 'தொடர் விளைவு' போக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமிகளும்' உருவாகி வளரும் வகையில். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html  )

அதற்கு மாறாக, மோடி பிரதமராக ஆட்சி செய்து வரும் சூழலில்;

'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, தனது பதிலில் ஆக்கபூர்வமான சாத்தியமாகும் வகையில், மேலே குறிப்பிட்ட பதிலில், விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலானது, 'பொதுவாழ்வு வியாபார' போக்கிலிருந்து, 'விடுதலை' ஆவதே, அதற்கான முன் நிபந்தனையாகும், என்பது எனது கருத்தாகும்.

அது போலவே, கீழ்வரும் ஆய்வின் பின்னணியில்;

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' இதழில், குருமூர்த்தி 'இரா.செழியன் ‍ சில நினைவுகள்' என்ற தலைப்பில், எழுதியுள்ளதானது;

சுயலாப நோக்கற்ற 'பெரியார்' கொள்கையாளர்களின் பார்வைக்கு உரியதாகும்.

1944இல் 'திராவிடர் கழகம்' துவக்கிய 'பெரியார்' ஈ.வெ.ரா, தனது அண்ணன் மகன் சம்பத்தை தனது வாரிசாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனது செல்வாக்கிலிருந்து விலகி, சம்பத் அண்ணாவின் செல்வாக்கிற்குள் சிக்கியதை, அறிந்து, அம்முயற்சியை கைவிட்டார். 1948 தூத்துக்குடி மாநாட்டில், 'பெரியார்' ஈ.வெ.ரா 'அண்ணாவின் செல்வாக்கிலிருந்த குழுவுக்கு' எதிராக பேசியது முதல் 1949 வரை, அண்ணாவின் வலது கரமாக சம்பத் செயல்பட்டிருக்காவிட்டால், 1949இல் தி.மு.க தோன்றியிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அண்ணா 'திராவிட நாடு பிரிவினையை' கை விட்ட பிறகு, அதே சம்பத், 'இந்திய தேசியத்திற்கு' இணக்கமாக, தமிழ்நாட்டின் நலன்களுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் நோக்கில், சென்னையில் கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு, காஞ்சிபுரத்திலிருந்து   வந்து கலந்து கொள்ள மறுத்து, சம்பத்தின் முயற்சியை, அண்ணா சிதைத்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது முதல், தி.மு.கவில் ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகாமல் பயணித்த வெகு சிலரில் ஒருவராகிய இரா,செழியன், 1970-களில் இந்திரா ஆட்சியில், நெருக்கடி கால கொடுமைகளை எதிர்த்து போராடி, ஜெயபிரகாச நாராயணன் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். பின் ஜனதா கட்சியில் சேர்ந்து, தேசிய நீரோட்டத்தில் பயணித்து, கடந்த 06.06.2017இல் மறைந்துள்ளார். 

நெருக்கடிகால சிறை அனுபவங்கள் தொடர்பான, மறைந்த முன்னாள் சென்னை மேயர் 'சிட்டிபாபு டைரி'யில், 'கிடைக்காமல் போன'(?) பக்கங்களில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டால், இரா.செழியன் போன்ற நேர்மையான மனிதர்கள் எல்லாம், 'திராவிட' கட்சியிலிருந்து விலகி, தேசிய நீரோட்டத்தில் இணைந்ததற்கான, கூடுதல் விளக்கமானது, கிடைக்கக் கூடும். 

வெறுப்பு அரசியலானது, சமூக குற்றவாளிகளுக்கு 'கேடயமாக' பயன்பட்ட போக்கே, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு காரணமானது. அந்த 'கேடயமானது', அரசியல் நீக்கத்திற்கும், ஆதாய அரசியலுக்கும் வழி வகுத்து, 'கேவலமாகி' வருகிறது; வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து, தமிழ்நாட்டை மீட்பதற்கு வழி வகுத்து.

அந்த மீட்சியை துரிதப்படுத்தும் நோக்கில்;

திராவிடர்/திராவிட இயக்கத்திலிருந்து விலகி, தேசிய நீரோட்டத்தில் பயணித்த இரா.செழியன், ஈ.வெ.கி. சம்பத் போன்றோர், அந்த விலகலுக்கான காரணங்கள் பற்றி எழுதி வெளிவந்துள்ளவற்றை, தேடி படிக்க வேண்டும், என்ற உந்துதலை, மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' கட்டுரை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சியில் 'பெரியார்' ஈ.வெ.ரா சிக்கி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, மேற்கத்திய குறிப்பாய (Western Paradigm) அடிமையாக 'குருட்டு பகுத்தறிவு' போக்கில் பயணித்தது தொடர்பாக, அவர்கள் கருத்து ஏதும் வெளிப்படுத்தி உள்ளார்களா? என்பதும் (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)- 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் ; உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையிலா? அழிவுபூர்வ‌ திசையிலா?; http://tamilsdirection.blogspot.sg/2017/02/depoliticize-10.html  );

அந்த உந்துதலுக்கு காரணமாகும்.


குறிப்பு:

1. தாய்மொழிவழிக்கல்வியை ஆதரித்து, சாதி, மத அடிப்படைகளில் புறக்கணிப்பை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, உயர்கல்வி/அதிகார மையங்களில், அப்புறக்கணிப்பு தொடர்பான புகார்களை வரவேற்று, விசாரித்து, தகுந்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளில், எனது வரை எல்லைகளுக்குட்பட்டு, நான் ஈடுபடுவேன்

2. 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமிகளாக', நான் அடையாளம் கண்டு,  எனது  சமூக வட்டத்திலிருந்து அகற்றியவர்களை போல் இல்லாமல், தனிப்பட்ட வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து, என் மீது அன்பு செலுத்திய, 'அதிகம் படித்த' சில பிராமண 'புலமையாளர்கள்'(?), அறிவுபூர்வ பார்வையின்றி, பெரியார்' ஈ.வெ.ராவைப் போலவே, தனது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழையும், தமிழ் இசையையும் 'கீழாக' கருதும் போக்கை வெளிப்படுத்தியதால், அத்தகையோரையும் எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றியுள்ளேன்; தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப 'புலமையாளர்களை'(?) ஒதுக்கியது போலவே.

Tuesday, June 13, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (4)


தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation);
ரஜினி மூலமாகவா? அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலமாகவா?


தமிழ்நாடு தற்போது வளர்ச்சி நோக்கிய திருப்பு முனையில் இருப்பதை உணர்த்தும் 'சிக்னல்கள்' (signals) எனக்கு புலப்பட்டதன் காரணமாக, அந்த போக்கிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவே;

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன் (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson );

எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி.

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize)  மற்றும் 'ஆதாய அரசியல்' போக்கில் கட்சிகள் பயணித்து வரும் சமூக சூழலில்;

ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள், குடும்பம் உள்ளிட்ட அமைப்புகளில் ஏற்பட்டு வரும் சீர்குலைவுகள், நம்பகத்தன்மை உள்ள மனிதர்கள் குறைந்து, 'சுயலாப கணக்கு' தரகர்களும், திருடர்களும் 'குடும்பம், நட்பு' உள்ளிட்ட சமூக பிணைப்புகளையும் கெடுத்து, 'சமூக ஆற்றல் ரத்த ஓட்டமே' நஞ்சாகி வருவது உள்ளிட்ட அனைத்து போக்குகளும், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட மாற்றத்தினை கணிக்க உதவும், சமூக 'சிக்னல்கள்' ஆகும்.

‘சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமுகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, போன்றவை அதிகரிப்பதும், சுமார் 11 வயதிலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் போக்குகள் அதிகரிப்பதும், சமூக நெறிமுறைகளின் சீரழிவின் வெளிப்பாடுகள் ஆகும். அதிலும் சட்டத்தை ஏமாற்றி, (பணம் ஈட்ட நாய்களாகவும், புலமை, நேர்மை, மதிக்க தெரியாத கழுதைகளாகவும், 'வாழ்வியல் புத்திசாலிகளாக') குறுக்கு வழிகளில் செல்வம் செல்வாக்கு சம்பாதிப்பவர்களை 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது,  சமூகத்தின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும்.அது தமிழ்நாட்டில் வாழும்  தமிழர்களுக்கு இடையில் உள்ள, தொடர்புகளாகிய‌, சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.’ ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.htmlநீரழிவு நோயாளிகளின் காலானது, 'காங்கிரின்' நோயால் பாதிக்கப்பட்டால், காலை அகற்றியே, உயிர் பிழைக்க முடியும். (Gangrene ; http://www.healthline.com/health/gangrene-diabetes#overview1அது போல, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றா விட்டால், நம்மையே சீரழித்து விடும், 'சமூக காங்கிரின்' தொத்து நோய்களாக வாழும் 'சுயலாப கள்வர்கள்', 'அதிவேகமாக' அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சிக்கியுள்ளது. 

ஒரு கரைசலில் (Solution) நடைபெறும் மாற்றங்களில், 'படிகம்' (crystal) உருவாவதன் தொடக்க நிகழ்வானது, 'நியுக்கிலியேசன்' (Nucleation)  என்று அழைக்கப்படும். புதிய 'வெப்ப இயக்க கட்டம்' ( new thermodynamic phase ) அல்லது 'கட்டமைப்பை' (new structure), கனிவான சூழலில், சுயமான அமைப்பின் (via self-assembly or self-organization) மூலம் உருவாகி கொள்ளும் செயல்முறை நிகழ்வே, 'நியுக்கிலியேசன்' ஆகும். (https://en.wikipedia.org/wiki/Nucleation)

கனிவான சமூக சூழலில், நடக்கும் சமூக மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க உதவும் சமூகவியல் கருத்தாக்கமானது, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆகும்.

கனிவான சமூக சூழலில், அதிவிரைவாக நடக்கும் 'சமூக நியுக்கிலியேசனை' கீழ்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில், தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும்.

ஒரு சமூகத்தில் எழும் முரண்பாடுகளை, சரியான நேரத்தில் சரியாக தீர்க்க தவறும் போது, அம்முரண்பாடுகளை தவறாக பயன்படுத்தி, சமூக நச்சு சக்திகள், கனிவான சூழலில், அமுரண்பாடுகளை, 'பொருத்தமான தீக்குச்சி' மூலம் பற்ற வைத்து, பண்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் அகற்றி, திருப்பு முனையில், ஊழல் மற்றும் ஒழுக்கக் கேடுகளை வளர்க்கும் திசையில் பயணிக்க கூடும்.

ஒரு சமூகத்தில் நல்ல சமநிலையானது (good equilibrium)  குலைந்து, ஊழலும், ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து, செல்வாக்கு பெறும் நிலையில், அடுத்த மாற்றத்திற்கான, 'திருப்பு முனை'யை அடையும். அப்போது 'தகுந்த தீக்குச்சி'யானது வெளிப்பட்டு பற்ற வைக்கும் போது, அந்த 'சமூக நச்சு வாயுக்கள்' எரிந்து, சாம்பலாகி, சமூகமானது,  திருப்புமுனை கட்டத்தினுள் நுழையும்.

சமுகத்தில் அது போன்ற 'தீக்குச்சி' சம்பவங்கள், ஏற்கனவே 'செல்வாக்குடன்' வலம் வரும் தீய அல்லது நல்ல கட்சிகளை ஒழித்து, புதிய கட்சியின் 'திடீர் வேக' செல்வாக்கில், அந்த சமூகமானது, தீய அல்லது நல்ல திசையில் பயணிக்கும்.

அதனை விளங்கிக் கொள்ள, கீழ்வரும் உதாரணம் பயன்படும்.

1982இல் ஹைதராபாத் விமான நிலையத்தில், அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ராஜிவ் காந்தி, கூடியிருந்த எண்ணற்ற மக்களின் முன்னிலையில், ஆந்திர முதல்வர் அஞ்சையாவை 'பபூன்' என்று குறிப்பிட்டு அவமதித்தார்; ஆந்திர அரசியலில் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி ,நடிகர் என்.டி.ஆர் புதிதாக 'தெலுங்கு தேசம்' கட்சி தொடங்கி, மறுவருடமே முதல்வராகி, இன்று ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிந்துள்ள இரண்டு மாநிலங்களுமே 'பிராந்திய கட்சிகளின்' ஆட்சிகளில் பயணித்து வரும் போக்குகளுக்கு அடித்தளமாக.

ஒரு சமூகத்தில் 'திருப்பு முனைக் கட்டம்' என்பதானது;

ஏற்கனவே இருந்த 'சமநிலையானது' (Social Equilibrium) சீர்குலைவு போக்கில், பயணம் செய்து, 'சமூக கலங்கலுக்கு' (Social Disequilibrium)   உள்ளாகி, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation )  மூலம், மேலே குறிப்பிட்ட 'சமூக தீக்குச்சி' நிகழ்ச்சிகள் மூலம், புதிய சமநிலையை நோக்கி பயணிக்கும்.

இந்திய விடுதலைக்குப்பின், தேச கட்டுமானத்தை (Nation Building) , நேரு குடும்ப ஆட்சியானது, சுயநல குடும்ப அரசியலுக்கு அடிமைப்படுத்தி, பயணித்ததன் விளைவாக, தமிழ்நாடானது, 1967இல் தேசியக்கட்சிகளின் பிடிகளிலிருந்து விடுபட்டது. அதிலும் பாடம் கற்காமல், இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் பயணித்ததன் விளைவாகவே, ஆந்திராவில் 'புதிய‌ கட்சி' உருவாகி ஆட்சியைப் பிடித்தது. அதன் தொடர்விளைவாகவே, கூடுதல் பிரிவினைக்கு உள்ளாகி, அது மேலும் இரண்டு மாநிலங்களாக பிரிந்துள்ளது.

உலக அளவில், நானறிந்த வரையில், 'சமூக நியுக்கிலியேசன்' கருத்தின் மூலம், சமூகத்தில் நடந்து வரும், மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற‌  மாற்றங்களை, முதலில் ஆராய்ந்ததை, வெளிப்படுத்திய ஆங்கில நூல் 'வரவிருக்கும் மாற்றங்கள்' (‘The Shape of Things to Come’- Author: H.G. Wells ) . அந்நூலின் கருத்துக்களை, ஐ.நாவில் உயர் அதிகாரியாக பணியாற்றி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்த பிலிப் ராவன் ( Dr. Philip Raven ; https://en.wikipedia.org/wiki/The_Shape_of_Things_to_Come ) எவ்வாறு உருவாக்கினார்? அவரின் மரணத்திற்குப் பின், அந்த நூலானது எவ்வாறு தொகுக்கப்பட்டு, 2ஆம் உலகப்போர் எப்போது நடக்கும்? என்பதை, முன்கூட்டியே கணித்து, உலகை வியப்பிற்கு உள்ளாகியது, உள்ளிட்டவற்றை, அந்நூலின் முன்னுரையானது, வியப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ளது.

சமூக நியுக்கிலியேசன் தொடர்பாக, ஆராய்ந்த இன்னொரு ஆராய்ச்சியாளர் சார்லஸ் ஆர்ட்டன் கோலி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Charles_Cooley  )

‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற நூலின் அடிப்படையில், 'சமூக வளர்ச்சி மற்றும் வடிவம்'- ‘ON SOCIAL GROWTH AND FORM’ பற்றிய ஆய்வினையும், அந்த ஆய்வில் 'சமூக நியுக்கிலியேசன்' ஆய்வினையும் பிணைத்து, உலக அளவில் நான் மட்டுமே ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் போது, எனது ஆய்வுகள் வளர்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன் தர வாய்ப்பிருக்கும்.

சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குகளும், மேலே குறிப்பிட்ட வகையில், ஆராய்ந்து, அடுத்து வருவதை, கணிக்க துணை புரிபவைகளாகும்.

ஆந்திராவில் ராஜிவ் காந்தியின் 'பபூன் தீக்குச்சி' சம்பவம் ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, இந்திய விடுதலை காலக் கட்டத்தில் நடந்த. 'தெலுங்கானா புரட்சியிலிருந்து, தொடங்க வேண்டும்.

அது போல, தமிழ்நாட்டின் திருப்புமுனையான 1967 ஆட்சி மாற்றத்திற்கு, வழிவகுத்த ராஜாஜியின் முயற்சியால் உருவான 'தி.மு.க கூட்டணி தீக்குச்சி' ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, காலனி 'இனம்' சூழ்ச்சியில், சிக்கி, 'பெரியார்' ஈ.வெ.ரா 1944-இல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்ததிலிருந்து  தொடங்க வேண்டும். தமிழரல்லாத மன்னர்கள் ஆட்சியிலும், பின்னர் காலனி ஆட்சியிலும், அதன்பின் இந்தியா விடுதலை அடைந்து, 1967 வரையிலும் புலமையுடன் உயிருடன் இருந்த தமிழ் மொழியானது;

இன்று தமிழ்வழிக் கல்வியின் ( எனவே தமிழின்) மரணப்படுக்கையில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html

1944இல் உருவான தி.கவிலிருந்து, 1949இல் தி.மு.க பிரிந்து உருவாக காரணமான அண்ணா, பயின்ற பச்சையப்பன் கல்லூரியும் (http://timesofindia.indiatimes.com/city/chennai/pachaiyappa-students-go-on-rampage/articleshow/59185425.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section
  ), தி.மு.க வளர்சசியில் முக்கிய பங்காற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழமும், எந்த காலக்கட்டத்தில் ஊழலுக்கும், கட்டுப்பாடு சீர்குலைவிற்கும் உள்ளானது?  

திசை மாற்றத்திற்கு உள்ளான சமூகமானது, தீய திசையில் பயணிக்கத் தொடங்கினால், ஊழலும், ஒழுக்கக் கேடுகளும் வளர்ந்து, சமூக நச்சு வாயுக்களின் பெருக்கத்தால், அந்த சமூகமானது, சமூக மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி, அடுத்த 'சமூக தீக்குச்சி' மூலம், அந்த சமூக நச்சு வாயுக்களிடமிருந்து, 'விடுதலை' பெற்று, ஆக்கபூர்வமான 'நல்ல சமுக சுவாசத்திற்கு' ஏங்கும் கட்டத்தினை அடையும்.

மேலே குறிப்பிட்ட பின்னணியிலேயே கீழ்வரும் கணிப்பை வெளிப்படுத்தினேன்.

‘முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/06/3-role-ofdifferent-media-in-shaping.html )

'அரசியல் நீக்கத்தில்', ஆதாய அரசியல் போக்கில், 'சிறை பட்டுள்ள' இன்றுள்ள கட்சிகளின், தலைவர்களின், அவர்களை ஆதரிக்கும் 'அறிவுஜீவிகளின்',  நிலை பற்றி கீழ்வரும் பதிவில் பார்த்தோம்.

‘தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்', அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html ) உலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்க‌ளையும், தியாகங்களையும், தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர் கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால் நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும், அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல‌ தலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்த‌ கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

இந்திய விடுதலைக்குப்பின் உருவான நேரு அரசே ஊழலில் சிக்கி பயணித்த பின்னணியில், எந்த அமைச்சர் மீதும் ஊழல் குற்றசாட்டு, எதிர்கட்சிகளாலேயே சுமத்தப்படாத அளவுக்கு, முதல் முறையாக, இந்தியாவில் மத்திய‌ அரசில் மோடி அரசானது, ஆட்சி புரிந்து வருகிறது. நாட்டு நலனை முன்னிறுத்தி, தேச கட்டுமானத்தை துவக்கி, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, அஸ்ஸாம் உள்ளிட்டு, வடகிழக்கு மாகாணங்களில், அடுத்து, அடுத்து, கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி, பயணித்து வருகிறது. தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களை கேடாக, கருதி, பிரிவினை முயற்சிகள் (தமிழ்நாட்டில் நடந்ததைப் போல) வடகிழக்கு மாநிலங்களில் நடக்கவில்லை. எனவே அந்த ஆணி வேர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, கூட்டணி அட்சி அமைக்கும் முயற்சி, அங்கெல்லாம் சாத்தியமாகி வருகிறது.

தமிழக பா.ஜ.கவில் அது போன்ற முயற்சிக்கு, வழி விட்டு ஒதுங்கும் மனப்பக்குவம் உள்ள தலைவர்கள் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

தமிழ்நாட்டில் பிரிவினை கட்சிகள் எல்லாம்;

தமிழ்நாட்டை ஊழல் பேராசையில் சூறையாடிய, 'திராவிட' குடும்ப அரசியலை எதிர்க்காமலும், வெளியில் தெரிந்தும், தெரியாமலும், அந்த 'சூறையாடலில்' பங்கு பெற்று, பயணித்த கட்சிகளே மிகுந்துள்ளனவா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பா.ஜ.க கூட்டணி அரசில், தமிழ்நாடு பயணிக்க தொடங்கினால், ஊழலுக்கு இடமின்றி, தாய்மொழி வழிக்கல்வி மீட்சி முயற்சிகள் வெற்றி பெறும், என்பது எனது கணிப்பாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசனுக்கான', அதற்கான‌ சமூக சூழல் கனிந்துள்ளது, என்பது எனது ஆய்வு முடிவாகும்.

ஊழலை ஒழித்து, சாதி, மத பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கில் இந்தியாவை மீட்க, மோடி ஆட்சி செய்கிறார்; அதை கெடுக்க, மத வெறி போக்குகளை பயன்படுத்தும் மோடி எதிர்ப்பில், 'இந்துத்வா' போர்வையில் பயணிக்கும், சக்திகளையும் சமாளித்து.

'மத சார்பற்ற' போர்வையில், மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம், 'இந்துத்வா' போர்வையில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்கள்.

எனது ஆய்வுகள் மூலம், 'பெரியார்' ஈ.வெ.ராவின், தமிழரின் 'ஆணி வேர்கள்' தொடர்பான தவறான நிலைப்பாடுகளை திருத்திக் கொண்டு, எனது வழியில்,  காமராஜரை ஈ.வெ.ரா ஆதரித்தது போல், 2005 முதல், மோடி ஆதரவு போக்கில், எந்த 'பெரியார்' கட்சியாவது பயணித்திருந்தால்;

இன்று 'சமூக நியுக்கிலியேசன்' போக்கில், அஸ்ஸாமைப் போல, தமிழ்நாட்டிலும் அக்கட்சியானது, தாய்மொழிவழிக் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான நிபந்தனைகளுடன்;

பா.ஜ.கவுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.

அதற்கான வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட சூழலில்;

அதற்கான சமூக நியுக்கிலியேசன் நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில் நுழைந்தாக வேண்டும்.

அது ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.


குறிப்பு: முகநூலில் வெளிவந்துள்ள எச்சரிக்கை:

“ரஜினி அரசியலுக்கு வந்த பின்னர்... அவரை ஒன்றுமில்லாமல், புஸ்ஸு என்று ஆக்கி விட அனைத்து மீடியாக்களும் ரவுண்டு கட்டி அடிப்பார்கள். ஏனென்றால், இங்கே மீடியாக்கள் எல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அரசியல் ரீதியாக தங்களைத் தவிர வேறு ஒரு சக்தி வளர்வதை விரும்ப மாட்டார்கள்... ஒருவரை தூக்கி விடுவது போல் போக்குக் காட்டி, சமாதி கட்டுவதற்கு வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டனுக்கு நேர்ந்த கதி தமிழகம் அறியும்....
இவ்வளவே...! இதை மீறி ரஜினி எப்டி ஜொலிக்கிறார்னு பாக்கலாம்!”