Friday, November 24, 2017

'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்' பட்டியலில் ஜெயலலிதா?


'திராவிட பொதுவாழ்வு வியாபார குடும்பஅரசியல்'  சங்கமமாகி முடிவை நோக்கி ?


தாய்மொழி தமிழ் வழியில் அடிப்படைக் கல்வியை பயில்பவர்கள் எல்லாம், ஒப்பீட்டளவில், ஆங்கில வழியில் அடிப்படைக் கல்வியை பயில்பவர்களை விட, மூளையின் புலன் அறி திறன்களிலும் (Cognitive Skills), பாரம்பரிய பண்பாடுகளை மதித்து வாழ்வதிலும் முன்னணியில் இருப்பார்கள் என்று உலகில் நடந்து வரும் ஆய்வுகள் எல்லாம் உணர்த்தி வருகின்றன. (http://tamilsdirection.blogspot.co.uk/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

ஜெயலலிதாவை 'அம்மா' என்று குறிப்பிடும் இளவரசியின் மகன் விவேக் ஆங்கிலவழிக்கல்வியில் தமிழை ஒரு பாடமாக கூட படிக்காதவர்; ஜெயலலிதாவின் 'கருணையால்'(?) இன்று நம்ப முடியாத அளவுக்கு செல்வந்தராக வாழ்பவர்; ஜெயா தொலைக் காட்சிகளின் எஜமானராக இருப்பவர். ( http://www.thehindu.com/news/national/tamil-nadu/father-mother-boss-vivek-jayaraman-a-son-to-three-women/article20596955.ece )

ஜெயா தொலைக்காட்சியில் தி.மு.க தலைவர்களில் ஒருவரான துரைமுருகனில் பேட்டி ஒளிபரப்பாகியுள்ளது. கடந்த நவம்பர் 8 அன்று, தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் பங்கேற்ற போராட்டமானது, ஜெயா தொலைக்காட்சியில் 'லைவ்' (Live) - ஆக ஒளிபரப்பப்பட்டுள்ளது.

தி.மு.க தலைவர்களில் ஒருவரான துரைமுருகன், 1989இல் சட்டசபையில் நடந்த கலவரத்தில், ஜெயலலிதாவின் சேலையை உருவியதாகவும், திருநாவுக்கர்சர் தனது வேட்டியின் மூலம் ஜெயலலிதாவின் மானத்தைக் காப்பாற்றி துணை புரிந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

சசிகலா குடும்ப அரசியலும், தி.மு.க தலைவர் குடும்ப அரசியலும் சங்கமாகி விட்டதை, அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தி உள்ளார். (https://www.youtube.com/watch?v=QSmn4QZ9iMg )

விவேக் ஆங்கில வழிக்கல்வியில், தமிழை ஒரு பாடமாக கூட படிக்காமல் வளர்ந்ததற்கும்;

இன்று ஜெயலலிதாவிற்கு எந்த அளவுக்கு நன்றி மறந்து பயணிக்கிறார்? என்பதற்கும்;

உள்ள தொடர்பானது, எனது ஆய்வு கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலே குறிப்பிட்ட சான்றின்படி, விவேக்கிற்கு பெற்றோர் ஸ்தானத்தில் இருந்த ஜெயலலிதாவும்;

தமிழ்நாட்டில், கீழ்வரும் போக்கில், 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொண்ட பெற்றோர்' பட்டியலில் இடம் பெற்று விட்டாரா? என்பதும் எனது ஆய்வில் இடம் பெற்றுள்ளது.

துவக்கம் முதலே ஆங்கில வழிக் கல்வியில் பயின்ற "குழந்தைகள் எல்லாம், தமிழ் மொழி, பண்பாடு, வேர்கள் அற்று, வளர்ந்து, தற்கொலை, கொலை, போதை மாத்திரை, திருட்டு போன்ற சமூக நோய்களில், அதன் காரணமாவே சிக்கி;

அதிலும் தப்பித்து உயர்ந்த படிப்பில், உயர்ந்த வேலையில் சேர்ந்த பின்;

பெற்றோர்கள் உள்ளிட்ட சுற்றத்தை 'நியூசென்ஸ்' என்று ஒதுக்கி வாழ;

அதையும் வெளியில் சொல்ல வெட்கப்பட்டு, செத்துக் கொண்டே வாழும் பெற்றோர்கள் எல்லாம் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் நாடாக தமிழ்நாடு இருக்கிறது.

ஆங்கில வழிக்கல்வியில்,  'சொந்த காசில் சூன்யம்' வைத்துக் கொள்ளும் போக்கில்;

தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.’ (http://tamilsdirection.blogspot.co.uk/2017/07/blog-post_16.html )

வாழ்க்கை வாழ்வதற்கு பணம் ஈட்டல் தேவை என்றாலும், பணத்திற்கும் அப்பாற்பட்ட அன்பு, பாசம், நட்பு உள்ளிட்ட மனித மதிப்பீடுகளை எல்லாம் காவு கொடுத்து, அற்பர்கள் என்று தெரிந்தும், காரியம் சாதிக்க காலில் விழுந்து, பணமே வாழ்க்கை என்று வாழ்பவர்களின் குழந்தைகளும், அதே போக்கில், வாழ்வதை குறை சொல்ல முடியுமா? அப்படிப்பட்ட குழந்தைகளுக்கு, நல்ல குடும்பங்களில் வாழும் குழந்தைகளின் நட்பு கிடைக்குமா?

கல்லூரி ஆசிரியர் சங்கங்களின் தலைவர்களாக இருந்தவர்களால் 'வில்லனாக' சித்தரிக்கப்பட்டவர் திருச்சி ' REC ( இன்று NIT- National Institute of Technology)- 'இன் முதல் இயக்குநர் மணிசுந்தரம் ஆவார். அவருடன் நெருக்கமாக பழக, எனக்கு  கிடைத்த வாய்ப்புகள் மூலம்;

நியாயமான கோரிக்கைகள் எல்லாம், 'உணர்ச்சிபூர்வ' சிறையில் சிக்கி, தீருவதற்கான வாய்ப்பையும் கெடுத்து, சங்க தலைவர்களின் பொதுவாழ்வு வியாபார மூலதனமாவதை, தடுக்க முடியாத மோசடியில் தமிழ்நாடு சிக்கி பயணிக்கிறது;

என்பது தொடர்பான  அனுபவங்களை நான் பெற்றேன். வாய்ப்பு அமையும் போது, அதனை பதிவாக வெளியிடுவேன்; 'ஈழ விடுதலை' எவ்வாறு 'திராவிட அரசியல் பொதுவாழ்வு வியாபாரிகளிடம்' சிக்கி, 'சாண் ஏறி முழம் சறுக்கின கதையானது? என்பதை வெளிப்படுத்தியது போலவே. 

அந்த காலக்கட்டத்தில், தனது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த ஒரு திராவிடக் கட்சித் தலைவரின் மகனை குறிப்பிட்டு, அப்போது 'பெரியாரிஸ்டாக' பயணித்தஎன்னிடம் கிண்டலாக கீழ்வரும் தகவலை வெளிப்படுத்தினார்.

அவன் பள்ளியில் ஆங்கில வழியில் படித்தவன். கூடுதலாக இந்தியும், ஒரு மேற்கத்திய மொழியும் படித்தவன். தமிழை ஒரு பாடமாக கூட படித்ததில்லை. 'தமிழ், தமிழ்' என்று ஏன் தமிழ்நாட்டை ஏமாற்றுகிறீர்கள்?"

இன்று திக, தி.மு., .தி.மு., ...தி,மு.கவில்  வசதியாக வாழும் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளில் ஆங்கில வழியில், தமிழை ஒரு பாடமாக கூட படிக்காதவர்களே இருந்தால், வியப்பில்லை; விதி விலக்குகள் கூட இல்லாத அளவுக்கு.

தமது குடும்பப்  பிள்ளைகளில் ஆங்கில வழியில் படிக்க வைத்து, தமிழில் சரளமாக எழுதவும், படிக்கவும் தெரியாத‌  போக்கில், ஏற்கனவே திராவிடக் கட்சிகள் எல்லாம் சங்கமமாகி விட்டார்களா? என்ற கேள்வியானது எழுந்துள்ள நிலையில்;

இன்று திக, தி.மு., .தி.மு., ஆகிய திராவிடக் கட்சிகள் எல்லாம் சசிகலா குடும்ப அரசியலில் 'சங்கமமாகி' பயணிக்கிறர்களா? அந்த சங்கம போக்கானது, 1996இல் முளை விட்டதன் முடிவா? என்ற விவாதமும் அரங்கேற வேண்டிய நேரமும் வந்து விட்டது; கீழ்வரும் பின்னணியில்.

1977 ஆம் ஆண்டு  ஜூன்மாதம் நடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அ.தி.மு.க வென்று எம் ஜி ஆர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்.

அதன் பிறகு நடந்த இரு தேர்தல்களிலும் அவரே முதல்வரானார். அவர் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் இருந்தபோது நடந்த தேர்தலில் கருணாநிதி எப்படியாவது தாம் தமிழக முதல்வராக வேண்டும் என மக்களிடம், "இத்தனை  ஆண்டுகள் என்னை முதல்வர் பதவியில் இருந்து விலக்கி வைத்து தண்டித்தது போதாதா?" என்று கேவலமாக இரந்து வேண்டியும் - "என் நண்பர் எம் ஜி ஆர் உடல் நலத்துடன் மீண்டு வந்ததும் அவரிடமே முதலமைச்சர் பதவியை ஒப்படைப்பேன்" என்று நைச்சியமாகப் பேசியும் கெஞ்சியும் எம் ஜி ஆரின் மரணம் வரை அது நடைபெறவில்லை. கை எட்டும் தொலைவில் இருந்த முதலமைச்சர் நாற்காலியில் மீண்டும் அமர்வதற்குக் கருணாநிதிக்குப் பதின்மூன்று ஆண்டுகள் அரசியல் பயணம் செய்யவேண்டி இருந்தது.; http://russellpages.blogspot.co.uk/2010/10/

அதாவது தமிழ்நாட்டில் தி.மு.க குடும்ப அரசியலுக்கு எதிரான அலையில் தான் மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது என்பதை உணர்ந்து, எம்.ஜி.ஆரின் ஆதரவு அலையில், தி.மு.க தலைவர் முதல்வராக முயன்றது மேற்குறிப்பிட்ட தகவலில் வெளிப்பட்டுள்ளது. அதில் தி.மு.க தலைவர் வெற்றி பெற முடியாமல் போனது. ஆனால் முதல்வர் ஜெயலலிதா அப்பொல்லோவில் 'மர்மமான' முறையில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்ட நாளிலிருந்து, சசிகலா குடும்ப அரசியலை எதிர்த்து, தி.மு.க தலைவர் ஸ்டாலின் பயணித்திருந்தால், கருணாநிதி முயற்சித்து தோற்ற இடத்தில், ஸ்டாலின் வெற்றி பெற்றிருப்பார் என்பது எனது கணிப்பாகும். அதற்கு மாறாக சசிகலாவுடன் அப்பொல்லோவில் கனிமொழியின் தாயார் நெருக்கமாகி, சட்டசபையில் ஆளுங்கட்சி ஆதரவுடன் கருணாநிதிக்கு சாதகமான விதி விலக்கைப் பெற்று, மக்கள் மன்றத்தில் 'இரண்டும் கெட்டான்' போக்கில் பயணித்து, இன்று 'ஜெயா' தொலைக்காட்சியிலும், 'நமது எம்.ஜி.ஆர்' இதழிலும் சங்கமமாகி, தி.மு.க மரணத்தை நோக்கிய பயணத்தை தொடங்கி விட்டது, என்பதும் எனது கணிப்பாகும். (http://tamilsdirection.blogspot.co.uk/2017/06/3-role-ofdifferent-media-in-shaping.html )

ஜெயலலிதா சசிகலாவின் செல்வாக்கில் சிக்கி, 1991இல் தொடங்கிய அவரது ஆட்சியில் தான், ஊழல் கோரப்பசிக்கு தமிழ்நாட்டில் மலைகள், ஏரிகள், ஆறுகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட இயற்கை வளங்கள் எல்லாம் இரையாக தொடங்கியதும், அச்சுறுத்தி தனியார் சொத்துக்களை அபகரிக்க தொடங்கியதும் ஆகிய போக்குகள் வெளிப்பட்டன; அதன் விளைவாக   எழுந்த வெறுப்பு சுனாமியில், தி.மு. தலைவர், எம்.ஜி.ஆரின் மறைவிற்குப் பின் முதல்வரானார். அதிலும் தி.மு. பாடம் கற்காததால், மீண்டும் ஜெயலலிதா முதல்வரானார்; சசிகலா குடும்ப அரசியல் வெறுப்பிற்கும், தி.மு. குடும்ப அரசியல் வெறுப்பிற்கும், ஏற்றவாறு மாறி, மாறி ஜெயலலிதாவும், கருணாநிதியும் முதல்வரானார்கள். அதில் ஜெயலலிதா பாடம் கற்று, சசிகலா குடும்பத்தை ஒதுக்கி பயணித்ததால், கடந்த சட்டமன்ற தேர்தலில், விதி விலக்காய் வெற்றி பெற்று, முதல்வராக தொடர்ந்தார்.

மாறி மாறி ஆண்ட இரண்டு கட்சிகளிலும் ஊழல் வலையில் இடம் பெற்று வசதியானவர்கள் எல்லாம், நானறிந்த 'பெரியார் சமூக கிருமிகள்' உட்பட, தத்தம் குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, அப்பா, அம்மாவை மறந்து, 'மம்மி, டாடி' போக்கில், வறட்டு கெளரவ சமூக ஒப்பீடு நோயில் சிக்கி பயணித்தார்கள்; சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் போக்கில்.

தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கின் வெளிப்பாடாக;

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் 'சர்க்காரியா கமிசன்ஊழல் குற்றவாளிகள் தப்பித்த காரணத்தால், தமிழ்நாடானது ஊழலிலும், ஊழல் வ‌ளர்த்த ஆங்கிலவழிக் கல்வியிலும், அதன் மூலமாக 'தமிழ்நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாமும், நமது குடும்பமும், பிழைத்துக் கொள்வோம்' என்று போக்கில் வீரியம் பெற்று;

இன்று மேற்கத்திய மோகத்தில் 'அனுபவித்து' வாழ, பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் திருடர்களும், கொலையாளிகளும், தற்கொலைகளும், போதை மாத்திரை, மது அடிமைகளும் 'அதிவேகமாக அதிகரிக்க';

ஒப்பீட்டளவில் தமிழ்நாட்டில் வாழும் பிற மாநில, வெளிநாட்டு குடும்பப் பிள்ளைகள் எல்லாம் உருப்பட்டு வருகிறார்கள். (http://tamilsdirection.blogspot.co.uk/2016/09/1967.html )

மேலே குறிப்பிட்டவாறு தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர் வளர்ந்து வரும் சூழலில்;

தமிழ்நாட்டில் தமிழர்களில் விவரமானவர்களுக்கு(?) பொருள் ரீதியிலும், ஏமாந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வ ரீதியிலும் 'தீனி' போட்டு, தொண்டர்களை 'வளர்த்து', அவ்வப்போது 'பொது பிரச்சினைகளை'  வைத்து, போராடி வரும் 'வாழ்வியல் புத்திசாலி(?) தலைவர்கள்' எல்லாம், வருமானம் ஈட்ட, பல பல புதிய வழிகள் எல்லாம், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில் வெளிப்பட்ட புதிய போக்குகளாகும். 'சொந்த காசில் சூன்யம்' வைத்து மர்மமான முறையில் நடந்துள்ள‌ ஜெயலலிதாவின் மரணமானது, அந்த போக்குகளில் பயணித்தவர்களை எல்லாம் சசிகலாவின் நேரடி/மறைமுக ஆதரவாளர்களாக மக்களுக்கு அடையாளம் காட்டி, அவர்களின் அரசியல் மரணத்திற்கு வழி வகுத்துள்ளது. பணத்துக்காக எந்த மனித உறவையும், எந்த சமூக மதிப்பீடுகளையும் (Social Values) காவு கொடுக்கும் தமிழர்களை வளர்த்து வரும், 'அமாவாசை சமூக செயல்நுட்பமும்', அத்தகைய அரசியல் மரணம் மூலமாக முடிவுக்கு வரும், என்பதும் எனது கணிப்பாகும்.  
(http://tamilsdirection.blogspot.co.uk/2017/04/1967.html'பணமே தெய்வம்' என்று மனித காக்கைகளாகவும், நாய்களாகவும் வாழும் மனிதர்களை ஒதுக்கி வாழும் நல்ல குடும்பங்கள் அதிகரித்து வருவதும், சுயலாப நோக்கற்ற இயல்பான அன்புக்கு வறட்சியான சமூக புலத்தில் வாழ்வதன் 'தண்டனைகளை', அந்த 'மனித காக்கை/நாய்' வகையறாக்கள் எல்லாம் சந்தித்து வருவதும், மேலே குறிப்பிட்ட கணிப்பிற்கான முன்னறிவிப்பு 'சிக்னல்களாகும்' (signals).

அன்று சர்க்காரியா கமிசனை இந்திராகாந்தியின் ‘பழிவாங்கல் நடவடிக்கை’ என்று சித்தரித்தவர்கள் எல்லாம், அதே இந்திராகாந்தியால் அதே ஊழல் குற்றவாளிகள் தப்பித்ததை கண்டிக்கவில்லை. அதே போக்கில், சசிகலா குடும்பம் சந்தித்து வரும் வருமான சோதனைகளை எதிர்ப்பவர்களும், 'கூலிக்கு’ மாரடிக்கிறார்களா? அல்லது சுயலாப நோக்கின்றி எதிர்க்கிறார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கே தெரியும்.

தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கினை துவக்கி, அன்றைய பிரதமர் இந்திராகாந்தி பயணித்த திசையில்;

இன்றைய பிரதமர் மோடி பயணிக்க வாய்ப்பில்லை;

என்று நான் கருதுவதற்கு முக்கிய காரணம் கீழ்வருமாறு;

கடந்த பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க கூட்டணியானது ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாத தமிழ்நாட்டில், பா.ஜ.க ஒரு இடத்திலும், பா.ஜ.க கூட்டணியானது இரண்டு இடங்களிலும் வெற்றிகளை ஈட்டியுள்ளன; 1967க்குப்பின் பாராளுமன்ற தேர்தலில், தி.மு.க, அ.இ.அ.தி.முக ஆகிய‌ திராவிடக் கட்சிகளின் துணையின்றி, தேசியக்கட்சியானது, முதல்முறையாக வெற்றி பெற்றது. 

நெருக்கடி காலத்தில், தி.மு. ஆட்சியைக் கலைத்து, தி./தி.மு. தலைவர்களில் பெரும்பாலோரை சிறையில் அடைத்து, அரசு துறைகளில் ஊழலை குறைத்து, பின் நடந்த பாராளுமன்ற தேர்தலில், இந்திரா காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்து, ஆனால் தமிழ்நாட்டில் பிரமிக்க வைக்கும் வெற்றியை ஈட்டியது; 'பிரிவினை' சூட்டில், 'மாநில சுயாட்சி' என்ற பெயரில், அரங்கேறிய ஊழல் ஆட்சிக்கு, தமிழ்நாட்டு மக்கள் வழங்கிய தண்டனையாக. அதில் பாடம் கற்காமல், மத்திய அரசில் தமது சுயலாப அரசியலுக்காக, தமிழ்நாடு காங்கிரசை காவு கொடுத்து, தி.மு.கவுடன் கூட்டு சேர்ந்து இந்திராகாந்தி பயணித்தார்.

இந்திராகாந்திக்கு இருந்த அந்த நெருக்கடி இல்லாமல், அதீத பெரும்பான்மையுடன் ஆட்சி செய்யும் மோடிக்கு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தில் பா..கவிற்கு கிடைத்துள்ள வாய்ப்பினை, கெடுத்துக்கொள்ள வேண்டிய தேவை எதுவும் கிடையாதுஏற்கனவே மத்தியில் பா.ஜ.க ஆட்சியில் மாறி மாறி இடம் பெற்ற, மடியில் 'கனம்'(?) உள்ள‌ திராவிடக் கட்சிகள் எல்லாம்,  'இந்துத்வா எதிர்ப்பு' உள்ளிட்ட பலவகை கூத்துகளை அரங்கேற்றி, மோடியின் 'கடைக்கண் பார்வைக்கு' ஏங்கி வரும் சூழலில்.

தமிழ்நாட்டில் தரகர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், நேர்மையற்ற வழக்காடிகள் (unscrupulous litigants) அடங்கிய 'நன்கு மசகிடப்பட்ட (ஊழல்) எந்திரம்' (well-oiled machine), 'பெரிய அளவில்' (mega racket), செயல்பட்டு வருவதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, அம்பலப்படுத்தியுள்ளது. (cchttp://timesofindia.indiatimes.com/city/chennai/magistrates-cannot-direct-issue-of-birth/death-certificates-high-court/articleshow/58188926.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section )

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', அது போன்ற ஊழல் எந்திரங்கள் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டை, ஊழல் வலைப்பின்னலில் இருந்து காபாற்றும் முயற்சியானது மிகவும் சிக்கலான, கடினமான செயலே ஆகும்.( chttp://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

எனவே மோடி ஆட்சியில் தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள சோதனைகள் மூலம், உண்மையில் பாரபட்சமின்றி ஊழல் திமிங்கிலங்கள் சிக்கி, ஊழல் சொத்துக்கள் எல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டால், நெருக்கடி கால 'திராவிட' ஊழல் ஒழிப்புக்கு தமிழ்நாட்டு மக்களிடையில் கிடைத்த வரவேற்பை விட, அதிக வரவேற்பானது, அதன்பின் நடக்கும் பாராளுமன்ற/சட்டமன்ற தேர்தல் முடிவுகளில் வெளிப்படும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.co.uk/2017/11/panamapapers-2015.html )

திராவிடக் கட்சிகளில் உள்ள முக்கிய புள்ளிகள் எல்லாம் வரிசையாக பா..கவில் சேர தொடங்கியுள்ள சூழலில்; (http://tamilsdirection.blogspot.co.uk/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

தமிழுக்கு பாதகமான 'இந்துத்வா எதிர்ப்பு உணர்ச்சிபூர்வ' தற்கொலைப் போக்கில் தொடராமல்;

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,

ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும்  அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம், தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்;

ஊழல் அலையில் பயணிக்கும் ஆங்கிலவழிக் கல்வி நோயினை, ஆர்.எஸ்.எஸின் 'தாய்மொழிவழிக்கல்வி மீட்பு' முயற்சிகள் துணையுடன் வீழ்த்தி;

இந்தியாவில் பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக, 'தமிழ்வழிக் க‌ல்வி' மீட்பானது பேரெழுச்சி பெறும் வாய்ப்பும் கிட்டும்.


சுயலாப நோக்கின்றி தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒன்று சேர்ந்து செயல்படுவதன் மூலமே, நாம் எல்லாம் அந்த வெற்றிக்கு வினை ஊக்கியாக (Catalyst) பங்களிக்க முடியும்.