Thursday, March 29, 2018


இந்தியாவில், தமிழ்நாட்டில், 'தேசக் கட்டுமானச் சிக்கல்'  (Nation Building Crisis);



‘டெபாசீட்’  இழக்கும் கட்சியாக காங்கிரஸ் வளர்ந்து வருவதானது, நாட்டுக்கு நல்லதல்ல

 


இந்தியாவில் உள்ள 'தேசக் கட்டுமானச் சிக்கல்' (Nation Building Crisis) பற்றிய புரிதல் இன்றி;

'இந்துத்வா ஆதரவு'  முகாமில் எச்.ராஜா போன்ற இன்னும் பலரும்;

'இந்துத்வா எதிர்ப்பு' முகாமில் சீமான், வைகோ போன்ற இன்னும் பலரும்; 

உணர்ச்சிபூர்வ போக்கில் பயணிப்பதில் ஒன்றாகி;

இந்தியாவில் வித்தியாசமாக பயணிக்கும் தமிழ்நாட்டில் (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html  );

'தேசக் கட்டுமானச் சிக்கல்' மோசமாகவே வழி வகுக்கிறார்கள்; என்பது எனது ஆய்வு முடிவாகும்.

2ஆம் உலகப்போரில் வெற்றி பெற்றவர்களின் செல்வாக்கில் கூறுபோடப்பட்டு உருவான நாடுகளில்;

காலனி ஆட்சியில் சிக்காத நாடுகளில், 'தேச கட்டுமானம்' ஒப்பீட்டளவில் வலுவாக‌ வளர்ந்து வந்துள்ளதை போல‌;

இந்தியாவில் நடைபெறாமல் சீர்குலைந்துள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். 

இந்திய விடுதலைக்குப் பின், தேசக் கட்டுமானத்தை, நேரு குடும்ப வாரிசு அரசியலுக்கு உட்படுத்திய நோயின் வீச்சில்; 

இந்தியாவில் மாநிலக்கட்சிகள் எல்லாம் அந்த நோயையே உரமாக்கி வளர்ந்து, ஆப்பிரிக்க நாடுகளுடன் போட்டி போடும் வகையில் ஊழல் வலைப் பின்னலில் சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) சீர் குலைத்து வருகிறார்களா? என்ற விவாதத்திற்கான நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

அந்த சீர்குலைவினைப் பற்றிய புரிதலின்றி, 'தேசக் கட்டுமான சமூக செயல்நுட்பம்' பற்றிய புரிதலுமின்றி,

தமிழ்நாட்டில் மேலே குறிப்பிட்டவாறு இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உணர்ச்சிபூர்வமாக பயணிப்பதை ஊக்குவிப்பதானது, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் கேடாகவே முடியும்.

இந்துத்வா ஆதரவு முகாமில் உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் இருந்தாலும்;

ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்ட இன்னும் பலர் அந்த தேசக்கட்டுமான‌ சீர்குலைவின் மூலமாக இந்தியா சிதறும் வாய்ப்புள்ள அபாயத்தை உணர்ந்து, அறிவுபூர்வ வாதங்கள் மூலமாக, அந்த சீர்குலைவினை எதிர்த்து, 'தேச கட்டுமானம்' வளர்ச்சி நோக்கி, பயணிக்கிறார்கள். 

ஆர்.எஸ்.எஸ் தாய்மொழி வழிக் கல்விக்கு புத்துயிர் கொடுத்து, தாய்மொழிகளில் உள்ள இலக்கியங்களை எல்லாம் ஊக்குவிக்கும் முயற்சிகளில் ஈடுபடுவதும் அந்த நோக்கில் தான், என்பதும் எனது கருத்தாகும். ( ‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace  genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html
   
ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்களுக்கு சமஸ்கிருதத்தில் புலமை உள்ள அளவுக்கு, தமிழ் உள்ளிட்ட தொன்மை மொழிகளில் புலமை இல்லை என்பதன் காரணமாக‌, மேக்ரோ உலக பார்வையில் அவர் எழுதி வரும் நூல்களில் தமிழ்நாடு பற்றியும், தமிழ் பற்றியும் சரியான புரிதல் வெளிப்படவில்லை என்பதும் எனது கருத்தாகும். இந்தியாவிலும், உலக அளவில் செல்டன் பொல்லோக் போன்ற புகழ் பெற்ற எழுத்தாளர்கள் போன்றவர்களின் படைப்புகளிலும், அந்த தவறு தொடர்வதற்கு அவர்களை குறை சொல்வதில் பொருளில்லை. 

தமிழ்நாட்டிலும் உலகிலும் தமிழைப் பற்றியும், தமிழ் இசையை பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் என் போன்றோர் அறிவுபூர்வமாக வெளியிடும் கருத்துக்களை புறக்கணித்து;

உணர்ச்சிபூர்வமாக 'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' என்ற போக்குகளில் உணர்ச்சிபூர்வமாக அபத்தமாக வெளியிடும் கருத்துக்களையும், அந்த எழுத்தாளர்களையும் ஊக்குவிக்கும் தமிழ் அமைப்புகளே;

தமிழைப் பற்றியும், தமிழர்களைப் பற்றியும் இந்திய அளவிலும், உலக அளவிலும், புலமையாளர்கள் மத்தியில் சரியான புரிதல் இல்லாமல் போனதற்கு காரணமாகும். 


'பார்ப்பன எதிர்ப்பு', 'சமஸ்கிருத எதிர்ப்பு' பின்புலத்தில், தமிழையும், தமிழ் இசையையும் அறிவுபூர்வ பார்வையில் 'அபத்தமாக அதீதமாக' புகழும் எழுத்தாளர்களையும், பேச்சாளர்களையும்;


உலகில் உள்ள தமிழ் அமைப்புகளும், தமிழ் ஆர்வலர்களும் ஊக்குவிக்கும் (1944இல் முளைவிட்டு, 1949 முதல் வீரியத்துடன் வளர்ந்த‌) போக்கானது தொடரும் வரை, 'அந்த அபத்தமே' உலகில் புலமையாளர்கள் பார்வையில், தமிழையும் தமிழ் இசையையும் ஏளனமாக அணுக வழி வகுக்கும்.

டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில் அறிவுபூர்வ போக்குகளுக்கு கிடைத்து வரும் வரவேற்புகள் நம்பிக்கை தருகின்றன.

'இசையில் தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடையா?'; http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html 

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?   ;  http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html
 
போன்ற எனது ஆய்வுகள் எல்லாம்,  காலனியத்திற்கு முன், தமிழ்நாடானது எவ்வாறு இருந்தது? என்ற மறுஆய்வினை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளன‌. 


'தேசக்கட்டுமானம்' என்பதானது, காலனியத்திற்கு முன் இருந்தவைகளை எல்லாம், உணர்ச்சிபூர்வ இரைச்சலின்றி, அறிவுபூர்வமாக அடையாளம் கண்டு, காலனியக்கட்டத்தில் நடந்த சேதங்களையும், பிற மாற்றங்களையும் அதே அணுகுமுறையில் கணக்கில் கொண்டு, காலனியத்திற்குப் பின் இன்றுவரை அரங்கேறியுள்ள 'காலதேச வர்த்தமான மாற்றங்களை கணக்கில் கொண்டும், 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை 65) வளர்த்தெடுக்கப்பட வேண்டிய ஒன்றாகும். 


அந்த முயற்சியில் ஈடுபடுபவர்கள் எல்லாம், 'சாதி', 'இனம்', 'இந்து', 'செவ்வியல்/நாட்டுப்புறவியல்'  போன்ற இன்னும் பல சொற்கள் எல்லாம் காலனிய சூழ்ச்சியில் 'பொருள் திரிதலுக்கு' (Semantic Distortion)  உள்ளானதையும் கணக்கில் கொண்டாக வேண்டும்.

தேசக் கட்டுமானத்தை, 'நேரு குடும்ப வாரிசு அரசியல்' உட்படுத்திய நோயிலிருந்து மீட்கும் வாய்ப்பானது, மோடி ஆட்சியில் உருவாகி இருந்தாலும்;

'தேசக் கட்டுமான சமூக செயல்நுட்பம்' பற்றியும், அதற்கு இணக்கமான மென்சக்திகளை (Soft Power) சரியாக அடையாளம் கண்டு பேணி வளர்ப்பதிலும், பா.ஜ.கவும் மோடி அரசும் தடுமாறி வருவதை கீழ்வரும் பதிவுகளில் ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

மோடி அரசு வரும் காலத்தில் வீழ்ந்தாலும், நேரு குடும்ப வாரிசு நோய் வளர்த்த  குடும்ப மாநிலக்கட்சிகளே  அதில் பலன் பெறப்போவதை அண்மையில் நடந்த உ.பி தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளன. அந்த போக்கில் ‘டெபாசீட்’ இழக்கும் கட்சியாக காங்கிரஸ் வளர்ந்து வருவதானது, நாட்டுக்கு நல்லதல்ல, என்பதை துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியும் ஏற்கனவே எச்சரித்துள்ளார். 


காங்கிரஸ் ஆளும் ஒரே பெரிய மாநிலமான கர்நாடகத்தின் முதல் அமைச்சர் இந்தியை எதிர்ப்பதிலும், காவிரி பிரச்சினையில் உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை எதிர்ப்பதிலும், மைனாரிட்டிகளாக மாறும் போட்டியில் இந்துக்களில் உள்ள பிரிவுகளை ஊக்குவிப்பதிலும், பிரிவினை போக்கில் தேசக்கட்டுமான சீர்குலைவுப் போக்கில் பயணிக்கிறாரா? அதற்கு கடிவாளம் போட்டு, தேசக்கட்டுமானத்தை மீட்கும் வலிமையின்றி, காங்கிரஸ் தலைமையானது பலகீனமாகி விட்டதா? தேசக் கட்டுமானமானது நேரு குடும்ப வாரிசு நோயில் சிக்கி வீழ்ச்சியடைந்துள்ளதன் சிக்னலாக, காங்கிரஸ் தலைமையானது, கர்நாடக காங்கிரஸ் முதல்வரின் பிரிவினைப் போக்கினை ' சகித்துக் கொள்ளும்' அளவுக்கு பலகீனமாகி விட்டதா? அந்த போக்கில் பா.ஜ.க தலைமையையும் கேலிக்குள்ளாக்கி, கர்நாடக பா.ஜ.க பயணிக்கிறதா?


இந்தியாவில் தாய்மொழிவழி அடையாளங்களான 'தமிழர்', 'கன்னடர்' போன்றவை எல்லாம் சரியான தேசக்கட்டுமான சமூக செயல்நுட்பத்தில் 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமான முறையில் வளர்த்தெடுக்கப்படாததையே, காவிரிச் சிக்கல் உள்ளிட்ட மாநிலங்களுக்கிடையில் நீண்டகாலமாக தீர்க்கப்படாமல், உச்சநீதி மன்றத்தையே கேலிக்கூத்தாக்கி வரும் சிக்கல்களும், பிரிவினை முயற்சிகளும் உணர்த்துகின்றன. நேரு குடும்ப வாரிசு நோயில், இந்திய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக‌ மாநிலக்கட்சிகள் வளர்ந்ததற்கும் அதுவே காரணமாகும்.

எனவே இந்தியாவில் தேசக் கட்டுமானமானது நேரு குடும்ப வாரிசு நோயிலிருந்து மீண்டு, சரியான திசையில் முன்னேற, 'தேச கட்டுமான சமூக செயல்நுட்பம்' பற்றிய ஆய்வினை, தமிழ்நாட்டினைக் குவியமாக கொண்டு முன்னெடுத்து வருகிறேன்.

சங்க காலம் முதல் காலனிய அறிமுகம் வரை தமிழ்நாடு எப்படி இருந்தது? சாதிகள், சடங்குகள், உள்ளிட்டு காலனிய காலத்தில் என்னென்ன மாற்றங்கள் என்னென்ன முறைகளில் நடந்தன? 1944இல் ஈ.வெ.ரா, அண்ணா போன்றவர்கள் பங்களிப்பில், தமிழ்நாடு எவ்வாறு இந்தியாவில் வித்தியாசமான நாடாக பயணித்தது? 

அதன் தொடர் விளைவாக, உலகில் புலமையாளர்கள் பார்வையில், தமிழையும் தமிழ் இசையையும் ஏளனமாக அணுக வழி வகுத்த, 'பார்ப்பன எதிர்ப்பு', 'சமஸ்கிருத எதிர்ப்பு' பின்புலத்தில், தமிழையும், தமிழ் இசையையும் அறிவுபூர்வ பார்வையில் 'அபத்தமாக அதீதமாக' புகழும் 'திராவிட மனநோயாளிப் போக்கு' எந்த சமூக செயல்நுட்பத்தில் அரங்கேறியது? அந்த போக்கின் தொடர்ச்சியாக, ' ரவுடி வீரமணி' மூலம் 'கற்பனை இன்பம்' அனுபவிக்கக் கூடிய அளவுக்கு, அந்த‌ 'அபத்தமாக அதீதமாக' புகழும் 'பிரபல' பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் தமிழ்நாட்டில் எந்த சமூக செயல்நுட்பத்தில் வளர்ந்தார்கள்? (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) 

என்பது போன்ற கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக ஆய்வுகள் மேற்கொள்வதன் மூலமாக;

'தமிழர்' என்ற அடையாள நோக்கிலும், 'இந்தியர்' என்ற அடையாள நோக்கிலும், சரியான தேசக்கட்டுமான சமூக செயல்நுட்பத்தை கண்டுபிடித்து, இந்தியாவில் இது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டு வருபவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று; 

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியாவில் உள்ள மக்கள் படும் தவிர்க்கக்கூடிய துயரங்களில் இருந்து விடுதலை பெறுவதுடன்;

வெளிநாட்டு, உள்நாட்டு சூழ்ச்சி வலைகளில் இருந்து இந்தியாவை மீட்டு வளரச் செய்வதற்கு, அம்முயற்சிகள் உதவும். 

ஒரு தனிமனிதனால் ஆகக்கூடிய முயற்சியல்ல என்பது தெரிந்தும், பொதுவாழ்வு வியாபாரிகளாக இல்லாமல், சுயலாப நோக்கின்றி, தமிழின், தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம் காலப்போக்கில் சேர்ந்து, ‘ஈகோ’ (Ego) சிக்கலற்ற கூட்டுமுயற்சியாகி, உரிய பலனைத் தரும் என்பது எனது அசாத்திய நம்பிக்கையாகும்.

கடுமையான பொருளாதாரச் சிக்கலையும், பயங்கரவாதத்தையும், சமூக சீர்குலைவையும் சந்தித்து வரும் அமெரிக்கா, ர‌ஷ்யா போன்ற நாடுகளிலும் 'தேசக்கட்டுமான சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகள் நடைபெற்று வருவதையும் கீழே குறிப்பிட்டுள்ளேன்.

எனவே எனது அசாத்திய நம்பிக்கை வெற்றி பெறுமானால், அது உலக அளவிலான 'தேசக்கட்டுமான சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கும் வெளிச்சம் காட்டுவதாக அமைந்தாலும் வியப்பில்லை.

Links: 

What is wrong with importing Euro-centric nationalism to India? A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’  ; http://tamilsdirection.blogspot.in/2016/07/what-is-wrong-withimporting-euro.html
 
Is BJP aware of the derailing of the Indian nation building process?  ;  http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html

Is the Language Policy derailing the nation building process in India?  ; http://tamilsdirection.blogspot.in/2017/06/is-language-policy-derailing-nation.html
 
தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கான கருதுகோள்(2) (Hyphothesis); தமிழ்நாட்டில் 'தேச கட்டுமானம்' (Nation Building)  சிதைவுக்குள்ளாகியுள்ளதா? அதற்கு 'அதிக' பங்களித்தது, ஈ.வெ.ராவா? ராஜாஜியா?; http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-us-x-none_13.html
 
'இந்துத்வா எதிர்ப்பு' தமிழ்நாட்டில் 'சமூக சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதா? 'இந்துத்வா'வுடன் இணக்கமான 'தமிழத்துவா' சாத்தியமா?; http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html

தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல் (2); 'தமது பக்கமே கோல் போட்ட(same side goal) 'உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியல்' ?; http://tamilsdirection.blogspot.in/2018/01/2-same-side-goal.html

தமிழ்நாட்டின் ‘செருப்பு அரசியல் (3);  எச் ராஜாவுக்கு முன்னோடியான பிரதமர் நேரு ? தமிழ்நாடானது மீட்சிப் பாதையில் முன்னேற தொடங்கி விட்டது ; http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_10.html

அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (1); http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html

The ‘Pandora’s box’ inherited by the unprepared Modi Govt; Why the everlasting success of PM Modi’s rule depends on the performance of the HRD team?     ; http://tamilsdirection.blogspot.in/2017/03/the-pandoras-box-inherited-by.html
 
Will JNU help ‘the nation building’ process, or derail it?  Is JNU a Pandora’s Box, camouflaged by the ‘Emperor’s New Clothes’?  The compulsion ‘to chant Bharat Mata Ki Jai’;  The signal for the Disruptive Dimension of ‘the nation building process' ?    ; http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-in-x-none_27.html


Are the seculars & liberals in India, losing the hopes for social survival? The Semantic Trap of the ‘Western Paradigm Prison’; http://veepandi.blogspot.sg/2017/07/are-seculars-liberals-in-india-losing.html


Is Tamilology not a part of the Swadeshi Indology?  ; http://tamilsdirection.blogspot.in/2017/03/tamilology-not-part-of-swadeshiindology.html
 
Failure Won’t Deter US Nation-Building Complex  ; https://thediplomat.com/2013/12/failure-wont-derail-us-nation-building-complex/

Nation-building, nationalism and the new ‘other’ in today’s Russia (NEORUSS)  ; http://www.nupi.no/en/About-NUPI/Projects-centres-and-programmes/Nation-building-nationalism-and-the-new-other-in-today-s-Russia