Saturday, September 28, 2019


1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்; .வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா? தவறா? (2);


1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள்?



ஒரு மனிதர் நல்ல அல்லது தீய செயலில் ஈடுபட, அவர் மனதில், அதற்கான தூண்டுதல் எண்ணம் (Motivation) உருவாக வேண்டும்.

செயலில் ஈடுபட தூண்டுதல் எண்ணம் உருவாக, மனதில் அது தொடர்பான ஈடுபாடு (interest) இருக்க வேண்டும்.

மனதில் ஈடுபாடு உருவாக வேண்டுமானால், அதற்கான தேவைகளை (Needs) உணரவேண்டும்.

சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம்  மனிதரின் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும்(Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன 

தமிழ்நாடு உள்ளிட்டு உலக அளவில், பல உயிர்களை காவு வாங்கியுள்ள இணையவழி விளையாட்டு 'நீல வேல் மீன் விளையாட்டு' ஆகும்

எப்படிப்பட்ட உளவியல் முறையில், எப்படிப்பட்ட மனநிலை உள்ளவர்கள் எல்லாம்,  அந்த விளையாட்டுக்கு பலியாகி வருகிறார்கள்? என்பது தொடர்பான ஆய்வுகள்  வெளிவந்துள்ளன.. அந்த ஆய்வுகளில் வெளிப்பட்ட தகவல்களும், தமிழ்நாட்டில் 1965லிருந்து அரங்கேறிவரும் தற்கொலைகளும், எனது கவனத்தை ஈர்த்துள்ளன.

தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச இன்பவலையில் சிக்க வைப்பதானது, அந்த விளையாட்டின் வெற்றிக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

'பெரியார்' .வெ.ரா தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி காலனிய சூழ்ச்சியில் சிக்கிபயணித்தப் போக்கின் தொடர்விளைவாக‌, தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' போன்ற சொற்களின் பொருள் திரிந்து, தவறான தகவல்கள் துணையுடன், உணர்ச்சிபூர்வ சாகச இன்பவலையில் தமிழ்நாடு சிக்கி, பயணித்து, கிரானைட் மலைகள், ஏரிகள், ஆறுகள், தாது மணல், ஆற்று மணல், காடுகள் போன்ற இயற்கை வளங்கள் எல்லாம் ஊழல் சுனாமிக்கு இரையான போக்கில், ஊழல் கல்வி வியாபாரம் மூலம் ஆங்கிலவழிப் பள்ளிகள், தமிழை சீரழித்ததோடு, கீழ்வரும் வகையில், எண்ணற்ற மனித உயிர்களையும் காவு வாங்கியுள்ளது.

அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக, தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் எண்ணிக்கையற்றவை ஆகும். அவை பெரும்பாலும் அடித்தட்டு மக்களின் குடும்பங்களில் நடந்த சாவுகளாகும்; பொதுவாழ்வு வியாபாரத்தில் மேல்தட்டு வாழ்க்கையில் பயணிப்பவர்களின் முதலில்லாத மூலதனங்களாக

காலனி ஆட்சியில் சிக்கி, விடுதலையான நாடுகள் எல்லாம், மேற்கத்திய வழிபாடு போக்கிலான 'தாழ்வு மனப்பான்மை' மூலம்;
'காலனிய மனநோயில்' சிக்கி, சீரழிந்து வருவது பற்றிய ஆய்வுகளின் பின்னணியில்,

தமிழ்நாட்டில் மட்டுமே;

தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களை சிதைத்து, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையே சுயலாபத்திற்கு காவு கொடுக்கும், 'திராவிட மனநோயாளிகள்' எவ்வாறு உருவானார்கள்?
‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

தாழ்வு மனப்பான்மையை(inferiority complex) ஈடுகட்ட, தவறான திசையில் பயணிப்பவர்களை 'சிற்றினமாக' பழந்தமிழ் இலக்கியங்கள் அடையாளம் காட்டுகின்றன. 1944-இல் 'திராவிடர் கழகம்' உருவாகி, 'தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு' அனைத்தும் தமிழர்க்கு கேடானவை, என்ற திசையில் பயணித்ததால், அந்த 'சிற்றினமானது', 'தீயினமாக' வலிமை பெறும் சமூக செயல்நுட்பம் அரங்கேறியதா? அதன் தொடர் விளைவாக .வெ.ரா அவர்களையே ஓரங்கட்டி, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் அவமதித்து, 'திராவிட மன நோயாளிகள்' எவ்வாறு உருவாகி, வளர்ந்தார்கள்? .வெ.ரா இயக்கத்தில், விலைமதிப்பற்ற எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், 'திராவிட' அரசியல் கொள்ளை'க்கான சமூக செயல்நுட்பத்திற்கு, எவ்வாறு வழி வகுத்தது? தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிந்து, 1944இல் 'திராவிடர் கழகம்' உருவான போதே, அதற்கான 'விதை' போடப்பட்டு, அதன் வளர்ச்சியிலேயே, .வெ.ரா, மற்றும் அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்கள் எல்லாம், அந்த சமூக செயல்நுட்ப வளர்ச்சியில் பலியானதா?

1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்தது. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. 1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics)  நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்ச்சி பூர்வவளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய  அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது
(‘தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html)  

இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்ச்சி பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்ச்சி பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.

.வெ.ரா அவர்கள் தமது கொள்கைகளும் 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு உள்ளாக வேண்டியவையே', என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் .வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் .வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ளசான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் .வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?’ 
(‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)- சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/)

அதே போல, 'இனம்' மற்றும் 'சாதி' ஆகிய சொற்களின் பொருளானது, காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தொடர்பான, எனது ஆய்வுகளையும், .வெ.ரா இன்று படித்தால், அவரின் 'இந்திய தேசிய' எதிர்ப்பு என்பதானது;

திராவிட அரசியல் கொள்ளை சூழ்ச்சியில், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது, என்பதையும் பகிரங்கமாக அறிவித்து, 'திராவிடர்/திராவிட 'குழப்பங்களிலிருந்து விடுபட்டு, தெளிவான 'தமிழர்' அடையாளத்தை, 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமாகவே வளர்த்தெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பார், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்

.வெ.ரா அவர்கள் 'எதிர்காலத்தில் இந்தியா சிதறலுக்கு உள்ளாகும்' என்ற வகையில் கணித்தார்.

இந்திய விடுதலைக்குப் பின், இந்தியா ஒரே நாடாக நீண்ட காலம் நீடிக்காது என்று உலக அளவில் பலர் கணித்திருக்கின்றனர். உதாரணங்கள் சில:

"கி.பி 2000 த்தில் இந்தியா முழுவதும் ஒரே நாடாக இருக்காது"- பிரிட்டன் இராணுவத்துரைச் சேர்ந்த மனவியல் நிபுணர் லாரன்ஸ் (இந்தியன் எக்ஸ்பிரஸ் 21.10.1982)

"இந்தியாவின் பலவீனம் பல தீர்க்கப்படாத உள்நாட்டு மற்றும் சர்வதேச சிக்கல்களில் உள்ளது.இதனால் இந்தியா பிரிவினைக்குள்ளாக உண்மையில் சாத்தியமுடையதே"- தர்பரா சிங் 'Destabilization and Subversion from Challenges’ நூலில்; Blitz 18.07.1987

கி.பி 2024 இல் இந்தியா எப்படி இருக்கும்? என்பது தொடர்பான தமது ஆய்வினை 1974 இல் மிலோவான் டிஜிலாஸ் என்ற அறிஞர் வெளியிட்டார். அதில் கீழ்வரும் கணிப்பு வெளியானது.

இந்தியா மீது எனக்கு அனுதாபம் இருந்தாலும்,நீண்ட காலத்திற்கு ஒன்றாகவே இருக்கும் என்று நான் நம்பவில்லை" ( The Illustrated Weekly 06.09.1987)

நேரு குடும்ப வாரிசு அரசியலில் இந்தியா நீடித்ததே மேற்குறிப்பிட்ட கணிப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். காலப்போக்கில் தேசியக்கட்சிகள் பலகீனமாகி, மாநிலக்கட்சிகளின் பலத்தில் மத்திய அரசு ஆள்வது தொடர்கதையானால், மேற்குறிப்பிட்ட கணிப்புகள் சாத்தியமாகலாம். ஆனால் அது தமிழ்நாட்டிற்கு எவ்வாறு கேடாகும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான',  'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, தமிழ்நாட்டில் 'வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு-  சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாகவும் இருந்தால், வியப்பில்லை. எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்.

'இந்தி எதிர்ப்பு' தொடர்பாக, .வெ.ரா அவர்களின் நிலைப்படானது கீழ்வரும் வகையில் வெளிப்பட்டுள்ளது.

ஆயுதப் போராட்டம் இன்றி, வன்முறை இன்றி, பிரிவினைக் கோரிக்கை நிறைவேறும் வரையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் 'சமூக நீதி' நோக்கில் ஆட்சி செய்யும் வகையில் அழுத்தம் தர வேண்டும். காலனி ஆட்சியில் ஆங்கிலம் படித்தது எப்படி புத்திசாலித்தனமோ, அது போலவே இந்தியாவில் இந்தியைப் படிப்பதும் தவிர்க்க முடியாதது ஆகும். பிரிவினைக் கோரிக்கையில் இருந்து துண்டித்து இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தியதும், நடத்துவதும் முட்டாள்த்தனமாகும்.

.வெ.ரா அவர்களின் சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு கூடிய தனித்தமிழ்நாடு திசையில் பயணித்தவன் நான். தமிழ்நாட்டில் ஈழவிடுதலையும் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு சாதகமான திசையில் பயணித்ததை முன்கூட்டியே கணித்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட ( விடுதலைப்புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறார்களா? இன்னும் சில) எச்சரிக்கைகள் எல்லாம் புறக்கணிப்புக்கு உள்ளானது கண்டு வெறுத்து, பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'இசையின் இயற்பியல்(Physics of Music) அணுகுமுறையில் ஆய்வு செய்யும் திசையில் பயணித்தேன். அதன் மூலமாக, தமிழ் அடையாளச்சிதைவு உள்ளிட்டு .வெ.ராவால் ஏற்பட்ட பாதகங்களை நான் கண்டுபிடித்தேன். தமிழும், தமிழ்நாடும் தப்பிக்க வேண்டுமானால், அதற்கு இந்தியாவின் தேசக்கட்டுமானமானது எவ்வளவு முக்கியம்? என்பதை உணர்ந்தேன். பா.. உள்ளிட்ட தேசியக்கட்சிகள் எல்லாம் குறுகிய கட்சி நலன்களுக்காக எவ்வாறு தேசக்கட்டுமானத்தை தடம் புரளச் செய்துள்ளன? என்பதையும் கண்டுபிடித்து, கீழ்வரும் பதிவில் வெளியிட்டுள்ளேன்.

‘Fringe Mechanism derailing the Indian Nation Building Process’; http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html

எவரும் எதிர்பாராத வகையில், குடும்ப வாரிசு அரசியலை ஓரங்கட்டி, மத்தியில் முதன் முதலாக பிரமிக்க வைக்கும் தனிப்பெரும்பான்மையுடன் மோடி தலைமையில் பா.. ஆட்சி தொடர்ந்து நடக்கிறது. தேசக்கட்டுமான நோக்கில், மோடி ஆட்சியில் வெளிப்பட்ட குறைபாடுகளையும் மேற்குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன். பிற்காலத்தில் இந்தியா சிதறுவதற்கான வாய்ப்பின்றி தப்பிக்கக் கிடைத்துள்ள ஒரு அரிய வாய்ப்பாகவே, மோடியின் ஆட்சியைக் கருதுகிறேன். ஆர்.எஸ்.எஸ் மற்றும் சுதேசி இயக்கம் போன்றவைகளும் ஆட்சியின் குறைபாடுகளை அவ்வப்போது சுட்டிக்காட்டி வருகின்றன

மோடி அரசின் செயல்பாடுகளில் ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய செயல்பாடுகளை ஆதரித்துக் கொண்டே, குறைகளைச் சுட்டிக்காட்டும் 'டிப்பாராக' பயணிக்காமல்;

சமூகக் கறுப்பு வெள்ளை நோயில் சிக்கி
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html);

தமிழ்நாட்டில் மோடி எதிர்ப்பில் பயணிப்பவர்கள் எல்லாம், இந்துத்வா முகாம்களில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களின் மற்றும் திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் சேவகர்களாகவே வெளிப்படுவார்கள்.

தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில், ஊழல் அரசியல் குடும்பங்களின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்கவும் கிடைத்துள்ள அரிய வாய்ப்பாகும்.

'‘இந்திய விடுதலைக்கு முன், 1937 முதல்வர் ராஜாஜியின் 'இந்தித் திணிப்பும்', காங்கிரசில் வட இந்தியரின் ஆதிக்கமும், 'இந்தியர்' என்ற அடையாளத்தை பின் தள்ளி, எவ்வாறு 'பிரிவினை' நோக்கிலான திராவிடர் அடையாளம் மூலம் அபரீதமாக பிரிவினைக்கான மென்சக்தியை (Soft Power) வளர்த்தது? அந்த மென்சக்தியை, தி.கவிடமிருந்து தி.மு. எவ்வாறு அபகரித்தது? பின் 1957 முதல் அந்த மென்சக்தியை 'திராவிட' அடையாளத்தில் எவ்வாறு தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தியது? 'திராவிடர்/திராவிட அடையாள பின்பலத்தில், 'தமிழர்' என்ற அடையாளமும் எவ்வாறு 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கு எதிராக முன் நிறுத்தப்பட்டது?

அந்த மென்சக்தி தொடர்பான சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, 'திராவிட' ஊழலை சமரசமின்றி எதிர்ப்பதில் தடம் புரண்டு, காங்கிரஸ் தி.மு.கவுக்கு வாலாகி, தமிழ்நாட்டை மீட்கும் கட்சியாக வளரும் வாய்ப்பினை எவ்வாறு இழந்தது? அதே காங்கிரஸ் பாணியில், பா..கவும் எவ்வாறு பயணிக்கிறது?’

மேற்குறிப்பிட்ட காங்கிரஸ் பாணியை விட இன்னும் மோசமாகவே தமிழக பா.. பயணித்து வருகிறதா? என்ற கேள்வியைத் தமிழக தேர்தல் முடிவுகள் எழுப்பியுள்ளன.

மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையானது தமிழ்நாட்டிற்கு பாதகமான திசையில் காங்கிரஸ் - தி.மு. ஆட்சியில் பயணித்ததைப் போலவே, மோடி ஆட்சியிலும் தொடர்கிறது. கீழ்வரும் உயர்நீதி மன்ற தீர்ப்பின் மூலமாக, தமிழ்நாட்டினை இந்தியாவிலிருந்து துண்டிக்கும் திசையில் மத்திய அரசு பயணிக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.                       (https://www.thenewsminute.com/article/carbon-dating-proves-adichanallur-relics-905-696-bc-madras-hc-slams-asi-99557)

இந்திய அரசியல் நிர்ணய சட்டம் உருவான விவாதங்களில் அவினாசிலிங்கம் செட்டியார், டி.டி.கிருஷ்ணமாச்சாரி போன்ற தேசியவாதிகளும் அந்த அபாயத்தை எச்சரித்து 'இந்தித் திணிப்பு' தொடர்பாகஉரையாற்றிய பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அறியலாம்.

தமது தமிழ் தொடர்பான நிலைப்பாட்டிற்கு எதிராகவெளிந்துள்ள சான்றுகளை எல்லாம் புறக்கணித்துள்ள‌ (https://tamilsdirection.blogspot.com/2019/09/is-nagaswamy-aware-of-thephonetic.html) நாகசாமியின் தமிழ் தொடர்பானநிலைப்பாடுகள், தமிழ்நாட்டில் தொல்லியல் ஆய்வுகள் புறக்கணிப்பு போன்றவை எல்லாம் தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்புள்ளவையாகும். துணிச்சலுள்ள இன்னொரு அண்ணாதுரை உருவானால், அது சாத்தியமாகும் வாய்ப்பிருக்கிறது. தனித்தமிழ்நாடு பொதுவாழ்வு வியாபாரம் மூலமாக அது தாமதமாகிறது.

அதனால் கிடைத்துள்ள கால இடைவெளியில் தேசிய எதிர்ப்பிலிருந்து தமிழ் உணர்வினை மீட்டு, தமிழத்துவாவை தேசியத்துடன் இணைக்கும் முயற்சி வெற்றி பெறுவதே, தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் நல்லது;

என்பதும் எனது ஆய்வுமுடிவாகும்
(‘இந்தியாவில்வித்தியாசமானதமிழ்நாடு (5); அகில இந்திய பா..-வின் 'அடையாள அரசியல்' வெற்றியில், தமிழ்நாடு இடம் பெறாதது ஏன்?’; http://tamilsdirection.blogspot.com/2019/06/5.html)

உலக அளவிலான 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' பற்றிய ஆய்வுகளுக்கு வெளிச்சம் காட்டும்சிக்னல்கள்தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வருவதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்சி என்பதானது, தமிழ்நாட்டின், தமிழர்களின் தன்மான மீட்பிற்கு வழி வகுக்கும் முயற்சியாகும். அநேகமாக சோவியத் ஒன்றியம் போல, இந்தியா சிதறும் வாய்ப்பிலிருந்து, இந்தியாவை மீட்கும் முயற்சியாகவும் வெளிப்பட்டாலும் வியப்பில்லை. அந்த முயற்சிக்கு தடையாக இருந்த சமூக வண்ணக் குருட்டு நோயும்(Social Colour Blindness) விரைவில் நீங்கும் என்பதும் எனது கணிப்பாகும்.’ 

தமிழரின் ஆணிவேர்கள் சிதைந்துள்ள நிலையில், தமிழ்நாடு மீட்சி திசையில் பயணிக்க வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளது.

தாய்மொழியும், பாரம்பரியமும், பண்பாடும் ஒரு மனிதரின் அடையாளத்தோடு தொடர்புடைய ஆணிவேர்களாகும்.

தமது பாரம்பரியப் பண்பாட்டு சூழலில் தாய்மொழி வழியில் அடிப்படைக்கல்வி கற்பதே, குழந்தைகளின் புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு நல்லது என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.                                                            (http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html)

அத்தகைய மூளை வளர்ச்சி பெற்றவர்கள், தான் வாழும் சமூகத்தோடும், இயற்கையோடும் ஒட்டிய வாழ்வும், அதன் மூலம் தனது இயல்போடு இசைந்த உள்ளார்ந்த ஈடுபாடுகளை(Passions)  அடையாளம் கண்டு, பேணி வளர்த்து, இயல்பான இன்பங்களை அனுபவித்தும், துன்பங்களை அதற்கான 'விலையாக' ‘அனுபவித்தும்’, வாழ இயலும்.                                  (http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html)

எனவே அந்த ஆணிவேர்களைப் பேணிப் பாதுகாப்பதும் அவசியமாகும். உலக அளவில் சாதனை புரிந்த விஞ்ஞானிகளும்,தொழில்நுட்ப வல்லுநர்களும், படைப்பாளர்களும் உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு அவ்வாறு வாழ்ந்தவர்களே என்பதைக் கவனத்தில் கொண்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றியாக வேண்டும்.'

Note: Also visit: ‘Spreading Blue Whale in TN; Corruption & declined Tradition as Social Catalysts’; http://tamilsdirection.blogspot.com/2017/09/spreading-blue-whale-in-tn-corruption.html?m=1