Tuesday, July 12, 2016



'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை'(?)யும்


“ 'மாதொருபாகன்' நாவலுக்கு தடை இல்லை: படைப்பாளிகளின் கருத்துரிமையை பாதுகாக்க 3 மாதத்தில் நிபுணர் குழு அமைக்க வேண்டும்- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு” - http://tamil.thehindu.com/tamilnadu/

மேலே குறிப்பிட்டுள்ள தீர்ப்பை வரவேற்றவர்கள், மற்றும் அத்தீர்ப்பின்படி உருவாக உள்ள‌ நிபுணர் குழுவின் பார்வைக்கு, சமூக பொறுப்புடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்தை எதிர்நோக்கி, கீழ்வரும் கருத்துக்களை முன்வைக்கிறேன்.

ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations)  எப்படி தீர்மானிப்பது?

மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனித உரிமை மீறல் ஆகாதா?

ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம்,பண்பாடு,நிலத்தடி நீர் அதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும். மேலேக் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள்,  அந்த தொடர்புகளின் அடிப்படையில் பெறப்படுபவை ஆகும்.அந்த தொடர்பை பற்றிய தெளிவின்றி, மனித உரிமைகளைத் தனித்து, பிரித்து அணுகுவது ஆபத்தாகும். அந்த அணுகுமுறையில், மனித உரிமைப் பாதுகப்பு முயற்சிகளில் பாரபட்சம்(discrimination)  கடைபிடிப்பது பேராபத்தாகும்.

தமிழ்நாட்டில் தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள சீர் கேடுகளிலிருந்து, சுயநல நோக்கின்றி, மீட்பு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர் இனியும் புறக்கணிக்க முடியாத கேள்விகள் இவை. 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினையும், அதை எழுதிய பெருமாள் முருகனின் 'மனித உரிமை' (?)பாதுகாப்பாளர்களும், தமிழ்நாட்டில் இக்கேள்விகளை குவிய விவாதத்திற்கு(focused debate)  உட்படுத்த வேண்டிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளார்கள்.அந்த கேள்விகளுக்கான விடைகள், மனித உரிமை பாதுகாப்பில் சட்டத்தின் வரை எல்லைகள், மற்றும் சமூகத்தின் வரை எல்லைகள் பற்றியும் தெளிவுபடுத்தும். அந்த நாவல் தொடர்பான 'மனித உரிமை மீறல்' பிரச்சினை பற்றிய தகவல்கள் கீழுள்ள குறிப்பில் உள்ளன.

ஒரு மனிதன் தனி ஒரு ஆளாக ஒரு தீவில் வசிக்கும்போது அவரின் மனித உரிமைக்கு அவசியமில்லை. மானம், மான நஷ்டம் போன்ற பிரச்சினைகளும் இல்லை.

ஒன்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள் சேர்ந்து வாழும்போது,கருத்துரிமை உள்ளிட்ட மனித உரிமைகள் ஆனவை, சம்பந்தப்பட்ட மனிதர்களில் எவரையும் பதிக்காத வரையில், பிரச்சினை இல்லை. பாதிக்கும் போது தான், மனித உரிமைகளுக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் தேவைப்படுகின்றன.

அத்தகைய வரையறைகளையும், வரை எல்லைகளையும் சம்பந்தப்பட்ட மனிதர்கள் தமக்குள் கலந்து பேசி, உருவாக்கி, கடைபிடிக்கும் போதும் எந்த சிக்கலுமில்லை.

வரை எல்லைகள் மீறுவதைக் கண்காணித்து, நெறிப்படுத்தும் பணி, அந்த மனிதர்கள் வாழும் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பின் மூலமே நிறைவேற்ற முடியும். அந்த அமைப்புக்கு உள்ள வலிமையைப் பொறுத்தே, அந்த அமைப்பின் கட்டளைகள் நிறைவேறும்.
சட்ட அடிப்படையிலான நீதிபரிபாலன அமைப்பாகிய அரசு என்பதன் தோற்றம், வளர்ச்சி, கால ஓட்டத்தில் பெறும் மாற்றம் அனைத்தும் சமுகத்தால் அங்கீகரிக்கப்பட்ட பண்புடன் இருக்கும் வரை தான்,சட்டத்தை அமுல்படுத்தும் வலிமை அரசுக்கு இருக்கும். அந்த வலிமை குறைந்து,பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர்,அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் தடையான‌, ‘உள்மறை இரகசியத்தடைகள்’ - ‘Subterranean censorship’ -இந்தியாவில் அதிகரித்து வருவது பற்றி பின்னர் பார்ப்போம்.

சமூகத்தில் உள்ள மக்கள் கோரிக்கைகள் மூலமும், போராட்டங்கள் மூலமும் கொடுத்த அழுத்தங்களே மனித உரிமைகளின் தோற்றம், மற்றும் வளர்ச்சி பற்றிய வரலாறு ஆகும்.

தனி மனித உரிமைகளை வலியுறுத்திய 'மாக்ன கார்த்தே'- Magna Carta (1215)-,'உரிமைகளுக்கான விண்ணப்பம்'- the Petition of Right (1628), 'அமெரிக்க அரசியல் சட்டம்'- the US Constitution (1787),,'மனிதர் மற்றும் குடிமகன் உரிமைகள் பற்றிய பிரெஞ்சு பிரகடனம்'- the French Declaration of the Rights of Man and of the Citizen (1789),,'அமெரிக்காவின் உரிமைகள் சட்டம்' - the US Bill of Rights (1791) , உணர்த்தும் வரலாறு அது தான்.
(Documents asserting individual rights, such as the Magna Carta (1215), the Petition of Right (1628), the US Constitution (1787), the French Declaration of the Rights of Man and of the Citizen (1789), and the US Bill of Rights (1791) are the written precursors to many of today’s human rights documents.- http://www.humanrights.com/what-are-human-rights/brief-history/cyrus-cylinder.html )

ஐ.நாவின் உலக மனித உரிமைகள் பிரகடனப்படி, -Universal Declaration of Human Rights-
உலகில் உள்ள ஒவ்வொரு மனிதருக்குமான மரியாதை என்ற தத்துவத்தின் அடிப்படையில் அமைந்துள்ளவையே மனித உரிமைகள் ஆகும். (Human rights are based on the principle of respect for the individual. Their fundamental assumption is that each person is a moral and rational being who deserves to be treated with dignity.- http://www.humanrights.com/what-are-human-rights.html )

ஒரு மனிதரின் மரியாதை -honour-, கெளரவம்- reputation, உள்ளிட்டு அவரின் தனிவாழ்க்கைக்கான உரிமை- The Right to Privacy (No one shall be subjected to arbitrary interference with his privacy, family, home or correspondence, nor to attacks upon his honour and reputation. Everyone has the right to the protection of the law against such interference or attacks.)

ஒரு மனிதரின் சுதந்திரமான வளர்ச்சிக்கும்- free development, கெளரவத்திற்கும்- dignity  அத்தியாவசியமான சமூக பண்பாடு - social and cultural rights - உள்ளிட்ட சமூக பாதுகாப்பு உரிமை - Social Security  (Everyone, as a member of society, has the right to social security and is entitled to realization, through national effort and international co-operation and in accordance with the organization and resources of each State, of the economic, social and cultural rights indispensable for his dignity and the free development of his personality.)

மேலேக் குறிப்பிட்ட வரையறையின்படி, ஒரு மனிதரின் அல்லது ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் மரியாதையைக் குலைக்கும் அளவுக்கு, இன்னொரு மனிதரின் அல்லது இன்னொரு சமூகத்தின் மனித உரிமைகள் செயல்பட முடியாது. அதாவது மனித உரிமையின் செயல்பாட்டுக்கான வரைஎல்லைகளுக்குக் கட்டுப்பட்டே, எந்த மனிதரின் அல்லது எந்த சமூகத்தின் மனித செயல்பாடும் அந்த வரைஎல்லைகளுக்குள் தான் செயல்பட வேண்டும். கட்டுப்பாடற்ற மனித உரிமை என்பது, நீண்ட வரலாற்றின் அடிப்படையில் உருவான மனித உரிமையின் வரையறையையும், வரை எல்லைகளையும் மீறியதாகும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தமக்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை,தமது குடும்பத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;தமது சமூக வட்டத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;பொதுவில் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை;என்று பேச்சுரிமை பல தளங்களில் செயல்படுவதாகும். அந்தந்த சமூக பாரம்பரிய, பண்பாடுகளின் அடிப்படையில் அவை செயல்படுவதாகும். ஐ.நாவின் மனித உரிமைகள் அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில் செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும்.மேற்கத்திய நாடுகளில் ' பூங்கா- park- ' போன்ற பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து புரள்வது அவர்களுக்குள்ள உரிமை. அதைப் பார்த்து, இந்தியாவில் அதை அனுமதிக்க முடியுமா? அந்த நோயில் சிக்கி, இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க ஆண் பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா?

'மாதொரு பாகன்' நாவலில் திருச்செங்கோடு பகுதியில் பெருமாள் முருகன் குறிப்பிட்ட தகவல்கள் ஆதாரபூர்வமானவையா? இல்லையா? என்பது ஆய்விற்குரியது. ஆதாரபூர்வமானவையென்று வாதத்திற்காக வைத்துக்கொண்டாலும், அதை நாவல் மூலம் வெளிப்படுத்தி, அங்கு வாழும் மக்களின் மரியாதைக்கும், கெளரவத்திற்கும் களங்கம் கற்பிப்பது, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் மீறல் ஆகாதா? பெருமாள் முருகனின் எழுத்துரிமைக்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் வரை எல்லைகள் பொருந்தாதா?

இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்கான 'அறிவுபூர்வமான கட்டுப்பாடுகள்' (reasonable Restrictions),  மேலேக்குறிப்பிட்ட வரை எல்லைகளின் அடிப்படையிலேயே உருவானவை, என்பதை, அது தொடர்பான இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் தெரிவிக்கின்றன.

பேச்சுரிமையும், எழுத்துரிமையும்,அந்த வரை எல்லைகளை மீறும்போது, அவை 'மான நட்ட வழக்கு'க்குரியவையாகக்(Defamation) கருதப்பட்டு, நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

உலகில் உள்ள சமூகங்கள் வெவ்வேறு பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் வெவ்வேறாக இருக்கும்போது,மனித உரிமைக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் வெவ்வேறாக இருப்பதில் வியப்பில்லை.

காலனி ஆட்சியில் அடிமைப்பட்ட நாடுகளில், இரு வேறு நாடுகளின் வரையறைகளும், வரை எல்லைகளும் ஒரு வகையான மோதலில் சிக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் அந்த பாதிப்புகளே காலனிய மன நோயாளிகளையும், திராவிட மன நோயாளிகளையும் உருவாக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம்('காலனிய' மனநோயாளிகளும்,'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் மானநட்ட வழக்கு தொடுத்து தண்டிப்பதற்கு, இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம் போன்றவை மூலமே வழக்கு தொடுத்தாக வேண்டும்.அந்த இரண்டும் மேற்கத்திய சமூக வரலாற்றுப் பின்னணியில் உருவாகி, இந்திய சமூக சூழலில் எந்த அளவுக்கு நீதியை நிலைநாட்ட பயன்பட்டிருக்கிறது? குற்றவாளிகள் 'ஓட்டைகள்' மூலம் தப்பிக்க வழி வகுத்திருக்கிறது? என்பது ஆய்விற்குரியதாகும்.

பாதிப்புக்குள்ளானதாக கருதிய குறிப்பிட்ட பிரிவினர், நீதிமன்றம் மூலம் நிவாரணம் தேடாமல், தமக்குள்ள சமுக பலத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்திய திரைப்படங்களையும், நூல்களையும் தடை செய்து வரும் வரலாற்றை சுப்ரதீப்த சர்க்கார்(Subhradipta Sarkar)  ஆய்வு செய்து ‘தடைக்குள்ளான ஜனநாயகத்தில் பேச்சுரிமை' -‘Right to Free Speech in a Censored Democracy’’ வெளியிட்டுள்ளார். அரசுக்கு சம்பந்தமில்லாமல் நடைமுறைப்படுத்தப்படும் அந்த தடையை அவர் உள்மறை இரகசியத்தடை  ‘Subterranean censorship’ என்று குறிப்பிட்டுள்ளார். https://www.law.du.edu/documents/sports-and-entertainment-law-journal/issues/07/right.pdf

சமூகத்தில் வாழும் மனிதர்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்கு, அந்த அமைப்பில் 'கூடுதலாக' செல்வாக்கு இருக்கும்போது, அந்த அளவுக்கு செல்வாக்கற்றவர்கள், அமைப்புக்கு அப்பால், தமக்கான 'நீதிக்கு' முயற்சிப்பது என்பது, அந்த அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.

ஒரு நாட்டில் நீதி மற்றும் சட்டம் எவ்வாறு செயல்படுவது என்று மதிப்பிடுவது தொடர்பாக‌,  அந்நாட்டின் குடிமக்கள் நினைப்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை கிரேக்க அறிஞர் சாக்ரடீஸ் தெளிவுபடுத்தியுள்ளார். (Socrates argues that law and justice should be evaluated above what citizens think the proper action to take is. “I thought I should run any risk on the side of law and justice rather than join you, for fear of prison or death, when you were engaged in an unjust course” (32b-c). From ‘Moral Theories and Moral Obligations’ Written by Michael J. Ritter Edited by Michael J. Ritter and Richard J. Colling}

இந்திய விடுதலைக்குப் பின், மனித உரிமை மீறல்களில், மேற்குறிப்பிட்ட‌  சமசீரற்ற பண்பு வலிமை பெற்று வருகிறதா? அந்த அளவுக்கு, மனித உரிமைகள் பாதுகாப்பில் அரசு வலிமை இழந்து வருகிறதா? 'உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரைஎல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளானவை, கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்களின் கொள்ளை, 'மாதொரு பகன்', 'விஸ்வரூபம்' திரைப்படம் 'தடை'ப் பிரச்சினைகள் போன்றவற்றுடன் தொடர்பு கொண்டவையா? உரிய நீதி பெறுவதற்கு சட்டத்தில் உள்ள ஓட்டைகளும்,ஊழல் தொடர்புள்ள அரசு வக்கீல், நீதிபதிகள் உள்ளிட்ட குறைபாடுகளும் எந்த அளவுக்கு இருக்கின்றன? அவை மேற்குறிப்பிட்ட சமசீரற்ற பண்பு வலிமை பெற எந்த அளவுக்கு துணை புரிந்துள்ளன? போன்ற கேள்விகளின் வலிமையை 'மாதொரு பாகன்' 'மனித உரிமை மீறல்' பிரச்சினை வெளிப்படுத்தியுள்ளது.

இந்திய வரலாற்றில் வேதங்களுக்கும், யாகங்களுக்கும் எதிரான 'அறிவுபூர்வ' விவாதங்கள் நடைபெற்றதற்கு சமஸ்கிருதத்திலும், தமிழிலும் பல சான்றுகள் உள்ளன. தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்வுபூர்வமாக தடம் புரண்டு, பொது அரங்கில் எதிரணியினர் ஒருவரையொருவர் இழிவுபடுத்துவது, 1944இல் முளை விட்டு வளர்ந்ததை ஏற்கனவே பார்த்தோம்(’பெரியார் ஈ.வெ.ரா வின்  'ஆன்மீக'ப் பெருந்தவறு’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அவ்வாறு தடம் புரண்டதானது, மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் எழ காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில்  மனித உரிமை ஆர்வலர்கள், மனித உரிமைகள் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளில் பாரபட்சம் கடைபிடிக்கிறார்களா? என்ற கேள்வியையும் 'மாதொரு பாகன்' நாவல் பிரச்சினை எழுப்பியுள்ளது.

பெருமாள் முருகனின் 'எழுத்துரிமையை'(?) கம்யூனிஸ்டுகளும் ஆதரிக்கிறார்கள். அவர்கள் கேரளாவில் கம்யூன்ஸ்ட் கட்சியினரால், பால் சக்கிரியா (Paul Zachariah,) என்ற மலையாள எழுத்தாளரை கம்யூனிஸ்ட் கட்சியினர் தாக்கியதைக் (manhandled) கண்டித்தார்களா? பெருமாள் முருகன் எழுத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அவ்வாறு பெருமாள் முருகனைத் தாக்கவில்லை.இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் சேர்ந்து, கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மேற்கொண்ட 'ஒழுக்கக் கட்டுப்பாடுகளையும்'(moral policing), கம்யூனிஸ்ட் தலைவர்கள் மிகவும் ஆடம்பர வாழ்க்கையில் பாலியல் தேவைகளை பூர்த்திசெய்து வாழ்ந்ததையும்(“lavishly, indulging in sex”)  பால் சக்கிரியா கண்டித்து எழுதியதே, அந்த தாக்குதலுக்குக் காரணமாகும்.

தமிழ்நாட்டில் கடந்த வருடங்களில், அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகளால் மிரட்டப்பட்டு, அரசு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி, அந்த கொலையாளிகள் நிரபராதிகளாக விடுதலையானார்கள். பெருமாள் முருகனுக்கு குரல் கொடுக்கும் மனித உரிமை ஆதரவாளர்கள், அந்த எந்த பின்பலமற்ற அப்பாவி சாட்சிகளின் மனித உரிமைக்கு குரல் கொடுத்தார்களா? ஆக மனித உரிமைப் பாதுகாப்பிலும் பாரபட்சம் காட்டுவது என்ன நியாயம்?

தமிழ்நாட்டில் மனித உரிமைப் போராளிகளால் முன்னெடுக்கப்படும்,  மனித உரிமைகள் தொடர்பான வரையறைகளும், வரை எல்லைகளும் எவ்வாறு உருவாகி, எந்த அளவுக்கு நேர்மையாக, அல்லது பாரபட்சமாக செயல்படுகிறது?

தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் உள்ள மனித உரிமை மீறல்களை 'வாழ்வியல் புத்திசாலித்த‌னத்துடன்' கண்டு கொள்ளாமல்,  'ஆதிக்கவாதிகளுடன்' நல்லுறவாக இருந்து கொண்டு, தம்மையும் தமது குடும்பத்தையும் நன்கு செட்டில் செய்து, பெருமாள் முருகன் பிரச்சினை போன்றவற்றில் சுயலாப நோக்கின்றி போராடுபவர்களுடன் சேர்ந்து, முன்னுக்கு நிற்கும் ‘மனித உரிமைப் போராளிகளை’(?)  எவராலும் அம்பலப்படுத்த முடியாது; அந்த அளவுக்கு மீடியா, நிதி மன்றம் உள்ளிட்டு அனைத்திலும் அவர்கள் வலிமையானவர்களா? ஒரு சமூகத்தின் மொழி, பாரம்பரியம்,பண்பாடு,நிலத்தடி நீர் அதாரங்களாகிய ஏரிகள், குளங்கள், கிரனைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள், மனித உரிமைகள் எல்லாம் ஒன்றுக்கொன்று தொடர்புடையவையாகும்.சமூகத்தில் வெளிப்படும் ஆற்றல் செயல்பாடானது(‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html), அந்த தொடர்பை துண்டித்து, மற்றவற்றைப் பின்னுக்குத் தள்ளி, பாரபட்ச போக்கில், தமக்கு 'வேண்டியவர்களின்' மனித உரிமைகளுக்காக மட்டும் போராடுவது சரியா? வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் மனித உரிமை என்.ஜி.ஓக்களுக்கு உள்மறை ‘Subterranean’  செயல்த்திட்டம் இருப்பதே மேற்குறிப்பிட்ட பாடபட்ச மனித உரிமை பாதுகாப்பு முயற்சிகளுக்கு காரணமா? உலக வர்த்தக வியாபார நலன்களுக்கு ஏதுவாக இந்திய மக்களை 'நுகர்வு கலாச்சாரத்தில்' சிக்க வைக்க, இந்திய பாரம்பரிய, பண்பாடுகளுக்கு இருக்கும் செல்வாக்கில் வலிமையையும், மேற்கத்திய சூழ்ச்சிகளுக்கு எதிரான இந்திய மக்களின் ஒற்றுமையையும் குலைப்பதற்கு வெளிநாட்டு நிதி உதவியில் செயல்படும் என்.ஜி.ஓக்கல் பங்களிப்பு வழங்கி வருகிறார்களா? ‘India Foundation for the Arts (IFA)’ என்ற என்.ஜி.ஓ அமைப்பு 'மாதொரு பாகன்' நாவல் எழுத பெருமாள் முருகனுக்கு ரூபாய் 3,28,500 நிதி உதவி செய்துள்ளது. 'மாதொரு பாகன்' நாவல் மூலம் பெருமாள் முருகன் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்படுவதற்குரிய குற்றவாளியானால், அந்த நாவல் எழுதத் தூண்டி, நிதிஉதவி செய்த அமைப்பும் குற்றவாளியாகாதா?

ஐ.நா போன்ற சர்வதேச அமைப்புகளில் உலக நாடுகளுக்கிடையே பாரபட்சமான செல்வாக்குகள் இருப்பதால், வலிமையான அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகள், ஐ.நா பிரகடனப்படுத்தியுள்ள மனித உரிமைகளை மீறி செயல்பட்ட போது, அதைத் தடுக்கும் வலிமை ஐ.நாவுக்கு இருந்ததில்லை. அது ஐ.நா அமைப்பின் சமசீரற்ற பண்பின் வெளிப்பாடு ஆகும்.

எனவே இந்தியாவிலும், உலக அளவிலும் மனித உரிமைப் பாதுகாப்பில் உள்ள பாரபட்சத்தையும்,வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில்,இன்னொரு சமூகத்தில் அந்த வரை எல்லைகளைத் திணிப்பதானது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமைவதையும், தமிழ்நாட்டில் பொது அரங்கில், சமூகப் பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நெருக்கடியை, 'மாதொரு பாகன்' நாவலும், பெருமாள் முருகனும், அவரின் 'எழுத்துரிமை' (?) அதரவாளர்களும் ஏற்படுத்தியுள்ளார்கள்.

சுதேசி புறக்கணிப்பில், இறக்குமதி செய்யப்பட்ட மேற்கத்திய சமூகத்தின் கருத்து அமைப்பில் (Paradigm), பாரபட்ச அணுகுமுறையில்,  ஒரு சமுகம் சிக்கிவிடுமானால், அங்கு தீவிரவாதமும், பயங்கரவாதமும் எளிதில் முளைவிட்டு, அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக‌ வளர்வதை தடுக்க முடியாது.

"ஏற்கனவே தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவாளர்கள், 'மெட்ராஸ் கஃபே' (Madras Café) உள்ளிட்டு தமக்குப் பிடிக்காத திரைப்படங்களை எதிர்த்துப் போராடி , தடையில் வெற்றியும் பெற்றதை ஊடகங்கள் வெளிப்படுத்தியுள்ளன.

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் நூல்களை எதிர்த்து நடக்கும் போராட்டங்களும், விடுதலைப் புலிகள் ஆதரவாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும்; கருத்துரிமை எதிர்ப்பில் ஒரே வகையா? இல்லையா? பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் விடுதலைப்புலி ஆதரவாளர்கள் மேற்கொண்ட‌  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், விடுதலைப்புலி ஆதரவாளர்களில் (குறிப்பாக அந்தந்த பகுதிகளில்)  யார் யார்  பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் கருத்துரிமை மீது மேற்கொண்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

பாதிக்கப்பட்டதாகக் கருதிய மக்கள், பாதிப்புக்குள்ளாக்கியதாகக் கருதிய பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் உள்ளிட்ட  எழுத்தாளர்களை எதிர்த்து,போராடினார்கள். பெருமாள் முருகன், புலியூர் முருகேசன்  சார்ந்த சாதியினரையோ அல்லது கட்சியினரையோ தாக்கவில்லை.

ஆனால் இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஆய்விற்காகவும், ஆன்மீக சுற்றுலாவிற்காகவும் வந்திருந்தவர்களை, 'சிங்களவர், பெளத்தர்' என்ற காரணத்திற்காக தாக்கியவர்கள் தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் செயல்படும் கட்சியினர் ஆவர். (http://dbsjeyaraj.com/dbsj/archives/18826 )

பெருமாள் முருகன், புலியூர் முருகேசன் ஆகியோரின் கருத்துரிமை ஆதரவாளர்களில் யார் யார் மேற்குறிப்பிட்ட  தாக்குதலைக் கண்டித்தார்கள்? அல்லது ஆதரித்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்……….."

Wednesday, July 6, 2016


நாடு பயணிக்கும் போக்கில்:

நாம் எவ்வாறு செல்வாக்கு செலுத்த முடியும்?



நமது சொந்த விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, மூன்றாம் மனிதரைப் போல, நாட்டு நடப்புகளை கவனித்தால் மட்டுமே, நாடு பயணிக்கும் போக்கு தொடர்பாக‌,  நாம் ஓரளவு சரியாக கணிக்க முடியும்;  

அதிலும் நமது 'நேர்மையான' வருமானம் அனுமதிக்கும், 'சொகுசு' (Comfort Zone) வாழ்விலிருந்து விலகி, இயன்ற வரை சாதாரண மற்றும் அடிமட்ட மக்களுடன் 'அந்நியமாகாமல்' பழக, பார்க்க (witness) இயலுமானால்;

'குறுக்கு வழி' பணக்காரர்கள் எல்லாம், 'கிசு கிசு' பாணி ‘சமூக தகவல் பரிமாற்ற செயல்நுட்பம்’ (Social Communication Mechanism) மூலம் அசிங்கப்படுவதானது, அதிகரித்து; 'ஊழல் பணக்காரர்' குடும்ப ஆடம்பர திருமணங்கள் எல்லாம், கலந்து கொள்பவர்களிடையே, அந்த நபரின் 'கடந்த காலம்' பற்றிய, 'கிசு கிசு' பேச்சுகள் மூலமாக, 'சொந்த காசில் சூன்யம் வைத்துக் கொள்ளும் சமூக நகைச்சுவை' ஆகி, அத்தகைய வாய்ப்பை இழந்துள்ள  சூழலில்.

தமிழக சட்ட மன்ற தேர்தலுக்கு முன், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் எல்லாம் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிவிக்க, நான் அதிலிருந்து மாறுபட்டு, அ.இ.அ.தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்று கணித்திருந்தேன்; அ.இ.அ.தி.மு.க சார்பு 'ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற, 'பெரியார் சமூக கிருமி’ மூலமாக, எனது குடும்பத்தில் சீர்குலைவினை, நான் சந்தித்து வரும் சூழலிலும் (‘தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?’; http://tamilsdirection.blogspot.in/2016/05/blog-post.html) "அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள  ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக'  உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில்;..ஊழலுக்கு எதிரான 'செயல்பூர்வ சாதனைகள்' இன்றி, மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது; தமிழ்நாட்டில் பா.ஜ.க 'தலை நிமிர' முடியாது; என்ற சூழலில்." என்பதையும், அந்த கணிப்பில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

அது போல மோடி அமைச்சரவையில் மாற்றம் வரப் போகிறது என்று ஊடகத்தில் செய்திகள் வெளிவரத் தொடங்கியபோது, எனக்கு தெரிந்த பேராசிரியர்களில் பெரும்பாலோர், மனித வள மேம்பாட்டு துறையில் மாற்றம் வராது என்று உறுதியாக (சோகத்துடன்) நம்பினார்கள்.

நான் மட்டுமே,   ‘99% சதவீதம் மாற்றம் வரும்’ என்று, அவர்களிடம் எனது கணிப்பை வெளிப்படுத்தினேன். எனது கணிப்பு தவறானால், அதனை சமூக மூச்சு திணறலாக (Social Suffocation) கருதி, எனது ஆய்வுத்திட்டம் (R & D Project)  முடிந்தவுடன், தமிழ்நாட்டிலிருந்து வெளியேறி, சிங்கப்பூரில் அல்லது எனது ஆய்வுகளை ஊக்குவிக்கும் நாட்டில், வாழ முடிவு செய்துள்ளதாக, என்னிடம் பணியாற்றும் ஆய்வாளரிடம் (Ph.D Research Scholar) தெரிவித்து விட்டேன்.

ஏனெனில், அது நடக்கவில்லையென்றால், கடந்த பாராளுமன்ற தேர்தலில் மோடிக்கு ஆதரவாக இருந்த மாணவர்களில் பெரும்பாலோர், அடுத்த பாராளுமன்ற தேர்தலில், மோடிக்கு எதிராக வாக்களித்து, மாநிலக்கட்சிகள், அதில் பலன் பெற்று, குழப்ப திசையில் இந்தியா பயணிக்க நேரிடும் என்று கருத்து தெரிவித்து வந்தேன்.

நான் கணித்தது போலவே,  மனிதவள மேம்பாட்டு  துறையிலிருந்து, ஸ்மிருதி ராணியை மாற்றி;

தமது திறமைகளை நிரூபித்துள்ள ஜவடேகரை,  அந்த துறையின் அமைச்சராக்கியுள்ளனர்.

சர்வதேச சமூக, அரசியல்,  பொருளாதார போக்குகள் பற்றிய புரிதலுடன், நாட்டின் போக்குகளை ஓரளவாவது சரியாக கணிக்க முடியுமானால், அந்த போக்குகளில் உள்மறைந்துள்ள (Latent) முரண்பாடுகள் (Contradictions)  பற்றிய தெளிவு கிடைக்கும். அந்த தெளிவின் மூலமே, நமது வரைஎல்லைகளுக்குட்பட்டு (Limitations), நமக்குள்ள ஆற்றலின் மூலம், அந்த முரண்பாடுகள் மீதும், நாடு பயணிக்கும் திசையின் மீதும், ஆக்கபூர்வமாக செல்வாக்கு செலுத்த முடியும்

அல்லது மனசாட்சியை அடகு வைத்து, குறுக்கு வழிகளில் 'செல்வம், செல்வாக்குடன்' சமூக கிருமியாகி, இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம்,  தமது 'வால்களாக்கியும்', வாழவும் முடியும்; 'வித்தியாசமான பொதுவாழ்வு விபச்சாரத்தை' சமூக நோயாக வளர்த்துக் கொண்டு. 

சுயலாப நோக்கின்றி, தாம் ஆதரிக்கும்/எதிர்க்கும் கட்சிகளுக்குள் உள்ள முரண்பாடுகளை (Contradictions) பகிரங்கமாக கையாண்டதில், இந்திய பொது வாழ்வில், ஈடு இணையற்ற முன்னுதாரணம் 'பெரியார்' ஈ.வெ.ரா ஆவார்; தமது 'அறிவு வரை எல்லைகள்' (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி பயணித்திருந்தாலும்.

உதாரணமாக காங்கிரசில் பிரதமர் நேருவை கடுமையாக எதிர்த்துக் கொண்டே, முதல்வர் காமராஜரை தீவிரமாக ஆதரித்தார். 

அந்த முன்னுதாரணத்தை, என்னால் இயன்றவரை அகவயப்படுத்தி (internalize), நானும் பயணிக்கிறேன்; எனது அறிவு வரை எல்லைகள் பற்றிய தெளிவுடன்.

உதாரணமாக மோடியின் ஆட்சியை ஆதரித்து கொண்டே(‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும்  ‘திராவிடச் சிக்கல்கள்; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html );

மனிதவள மேம்பாட்டு அமைச்சர்  ஸ்மிருதி ராணியின் தவறுகளையும் நான் கண்டித்து வந்துள்ளேன். ( சென்னை அய்.அய்.டியில் அம்பேத்கார்-  பெரியார் வாசகர் வட்ட பிரச்சினை தொடர்பாக: ‘Chennai IIT & APSC issue : The Noises dominating over the Signals’; "if it is the ‘tip of the iceberg of the changes’ introduced by the Modi govt, it may prove to be the ‘Modi’s waterloo’, nullifying all other achievements of the non-corrupt govt."; http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

அதே போல, 'பெரியார்' ஈ.வெ.ராவை 'தேச துரோகி' என்று கண்டித்த,  தமிழக பா.ஜ.க தலைவர்களில் ஒருவரான எச்.ராஜாவை எனது பதிவுகளில் விமர்சித்துள்ளேன். ( ‘பா.ஜ.க  எச்.ராஜா பேசியது சரி என்றால்;  என்னை போன்றவர்கள் தமிழ்நாட்டில் இருக்க அருகதையில்லை. http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

நமது கணிப்புகள் பெரும்பாலும் தவறானால், சமூக முரண்பாடுகள் பற்றிய, (கட்சிகள், கொள்கைகள், மனிதர்கள் தொடர்பான‌) நமது புரிதலில் உள்ள தவறுகளை வெளிப்படுத்திய 'சிக்னல்'களாக, அவற்றைக் கருதி, நமது புரிதலில் உரிய திருத்தங்களை (கசப்பாக இருந்தாலும்) மேற்கொண்டு,  பயணித்தால் தான், ஆக்கபூர்வமாக, வெற்றி நோக்கி, நாம் பயணிக்க முடியும். தமது கணிப்புகள் தவறானதற்கு, மக்களை குறை சொல்லும் கட்சிகளும்/தலைவர்களும், (தொடர்ந்து தோல்விகளை தழுவும் திரைப்பட இயக்குநர்களும் கூட) 'சுய மரண' திசையில் பயணிப்பவர்கள் ஆவர்; 'பாதுகாப்பின்மை' (insecurity) மனநோயில் சிக்கி, 'ஊற்றுக் கண்களாகிய' சாதாரண மக்களிடமிருந்தும், இயற்கையினிடமிருந்தும் அந்நியமாகி, உணர்ச்சிபூர்வமாக தமது நிலைப்பாடுகளை  'பாதுகாப்பு கவசமாக' கருதி, ஆனால் உண்மையில்  மனச்சிறை கைதியாக வாழ்ந்து கொண்டு.

கட்சி, கொள்கை, புற தோற்றங்களை மட்டுமே நம்பி ஏமாறாமல், ஆதரிக்க வேண்டியவைகளை, 'பிம்ப' சிறையில் (Ego prison)  சிக்காமல், துணிச்சலுடன் ஆதரித்தும், எதிர்க்க வேண்டியவைகளை எதிர்த்தும்;

என்னைப் போலவே, ‘இன்னும் பலரும் பயணிக்கிறார்கள் என்ற நம்பிக்கையை,  கீழே குறிப்பிட்டுள்ள‌ தகவல்கள் உணர்த்துகின்றன. 

'பெரியார்' ஈ.வெ.ரா ஆதரவாளர்கள் இடையே, முகநூலில் நடந்த, இந்த விவாதத்தை எனக்கு அனுப்பி வைத்த திரு.பொ.முருகானந்தத்திற்கு நன்றி.

பிஜேபியின் பயோமெட்ட்ரிக் அட்டடென்ஸ் சிஸ்டம் டெல்லி அரசு அலுவலர்களை சரியான நேரத்திற்கு அலுவலகத்திற்கு வர வைத்திருக்கிறது.

என்னுடைய(எனதுநாட்டின்) சாதனை, என்னுடைய குறை இதில் நான் எதில் மிகுந்தநேரம் செலவிடவேண்டுமென்றால், என்னைப் பொறுத்தவரை எனது குறைகளை நிவர்த்தி செய்வதில் தான். குறைகளின் மீது வலிமையான எதிர்மறை பின்னூட்டந்தேவை. 

பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!! 

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும். 

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.”

மேற்குறிப்பிட்ட திசையில் வெளிப்பட்டுள்ள இன்னொரு தகவல் வருமாறு.

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி செய்கிறது. அங்கு ஒரு மாவட்ட நீதிமன்ற கட்டிடம் கட்டப்பட்டு வரும் திட்டத்தில்,  நூறாண்டு பழமையான ஏரி பாதிக்கப்பட உள்ளது.  அந்த ஏரியைக் காப்பாற்ற‌,  அந்த மாநில காங்கிரஸ் கட்சியினரும், பா.ஜ.க கட்சியினரும் இணைந்து போராடி வருகிறார்கள்.
(“BJP and Congress have come together to save century-old Pipliyahana lake of the city near which construction of new building of the district court is going on.”

எனது பார்வையில், சமூக குருட்டு (Social Colour Blindness)  நோயில் சிக்கி, (http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ; ‘திறந்த மனதின்றி, கோபத்துடன் வாழ்பவர்களின் மூளையில், சமூகத்தில் வெளிப்படும் 'சிக்னல்களை' தவறாக புரிந்து கொண்டு,  தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் வாய்ப்புகள் இருப்பதை, ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. ; People with anger disorder wired to misunderstand social cues: New study; http://www.dnaindia.com/health/report-people-with-anger-disorder-wired-to-misunderstand-social-cues-says-study-2232386 )

உணர்ச்சிபூர்வமாக, 'இந்துத்வா' எதிர்ப்பில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், மக்கள் செல்வாக்கை இழந்துவரும் சூழலில்;

மோடி அரசில் 'எதிர்பார்த்த' பலன்கள் கிடைக்காத,  'இந்துத்வா' கட்சியினர், மோடி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உணர்ச்சிபூர்வமாக, செயல்படுவதற்கும்; 

நடுநிலையாளர்களின் கருத்துக்கு மோடி அரசு மதிப்பு கொடுத்து, அதனை கண்டித்து வருவதும், ஊடகங்களில் வெளிப்பட்டுள்ளன.

தமிழக பா.ஜ.க எச்.ராஜா, வலது கம்யூனிஸ்ட் எம்.பியான டி.ராஜா தொடர்பாக பேசிய மிகவும் தவறான கருத்தை, மத்திய அமைச்சர் வெங்கயா நாயுடு கண்டித்துள்ளார்.

( The BJP on Monday has distanced itself from the comment made by H Raja. Union parliamentary affairs minister M Venkaiah Naidu has said in New Delhi that the party does not approve " the purported statement made by H Raja". "There should not be personal criticism. There should be decent criticism," Naidu told the media after an all-party meeting on the eve of the Budget Session.

"If D Raja is a patriot, let him prove his patriotism by asking Communists to shoot his daughter. I would have done that if it was my child,'' the BJP leader had said. ( http://timesofindia.indiatimes.com/city/chennai/H-Rajas-speech-brings-down-public-discourse-to-new-low/articleshow/51099250.cms )

சுயலாப நோக்கின்றி, தமது வரை எல்லைகள் பற்றிய தெளிவுடன், 'பாராட்டு, புகழ்' உள்ளிட்ட‌ போதைகளுக்கு உள்ளாகாமல், பயணிப்பவர்கள் மட்டுமே, நாடு பயணிக்கும் போக்கை  கணித்து, முரண்பாடுகள் மீதும், நாடு பயணிக்கும் திசையின் மீதும், ஆக்கபூர்வமாக செல்வாக்கு செலுத்த முடியும்.

மீடியா வெளிச்சத்தில் வெளிப்படையாக 'பாராட்டு, புகழ்' போதையில் வலம் வருபவர்களை விட, மீடியா வெளிச்சத்திற்கு வராமல், பாராட்டு, புகழ் உள்ளிட்ட போதைகளில் சிக்காமல்;
 

அடி ஓட்டத்தில் (under current) பயணிப்பவர்களின் முயற்சிகளே, சமூக அரசியல் மாற்றங்களில் தீர்மானகரமான (Decisive)  செல்வாக்கு செலுத்துகின்றன. 

உதாரணத்திற்கு ஒன்று:

திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் என்னுடன் பணியாற்றிய பேரா.பொன்னுசாமி, 1989இல் மருங்காபுரி எம்.எல்.ஏ ஆனபின், சட்டமன்ற கூட்ட தொடருக்கு செல்லும் முன், காஜாமலை காலனியில் இருந்த எனது வீட்டிற்கு வந்து, விவாதித்து, குறிப்புகள் எடுத்து செல்வார்.1989-91 சட்டமன்ற குறிப்புகளை ஆராய்ந்தால், அந்த காலக்கட்டத்தில் சட்டமன்றத்தில் 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்பாக, அதிக தகவல்களை அவர் சட்டமன்றத்தில் பேசியதானது வெளிப்படும்.


பின் 1991இல் ஜெயலலிதா முதல்வராகவும், பேரா.பொன்னுசாமி சட்டசபை துணை சபாநாயகர் ஆனார். சட்டசபையில் கச்சத்தீவு தீர்மானம் நிறைவேற்றுதல் தொடர்பாக, என்னுடன் விவாதித்து எடுத்துக்கொண்ட குறிப்புகளே, முதல்வர் ஜெயலலிதா முன் மொழிந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கச்சத்தீவு மீட்புக்கான தீர்மானமாக சட்டசபையில் நிறைவேறியது

 இது தொடர்பான,  கடந்த சுமார் 50 வருடங்களில், நான் பங்கேற்ற, பார்த்த;

1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், பாரதி நூற்றாண்டு விழா வருடம் முழுவதும் 'பாரதி வளர்த்த்து பார்ப்பனீயமா? மூட நம்பிக்கையா/' வழக்காடு/பட்டிமன்ற நிகழ்ச்சிகள்;
 
'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு/விவசாயம்' பிரச்சாரங்கள்/போராட்டங்கள்; சுமார் 25 வருடங்களுக்கு முன்னரே, வெளிநாட்டு நிதி NGO உதவி  இல்லாமல், சுயபலத்தில்,  'அணு சக்தியா? அழிவு சக்தியா' (1990) என்ற தலைப்பில் 'திருச்சி பெரியார் மையம்' வெளியிட்டதை, தமிழ்நாட்டு 'முற்போக்குகள்'/ NGOக்கள் புறக்கணித்து, தும்பை- அத்திட்டத்தை வேறு மாநிலத்திற்கு 'இடம் பெயர' இருந்த வாய்ப்பை- விட்டு விட்டு, இன்று வாலைப் பிடித்து, பாதுகாப்பை முன்னிலைப்படுத்தாமல், அணு உலையை மூடுமாறு, குவியப்படுத்தியது சரியா?


'தமிழ் ஈழ விடுதலை' குழுக்கள்/மோதல்கள்/அறிவுபூர்வ விமர்சனங்களை மூழ்கடித்த உணர்ச்சிபூர்வ போக்குகள், மார்க்சிய-லெனினிய குழுக்களில், 'அறிவுபூர்வ கொள்கை விவாத வறட்சி', தமிழ்நாட்டில் அரசியல் நீக்கம்(depoliticize)/அடையாளக் குழப்பம் உள்ளிட்டவை தொடர்பான;

எனது அனுபவங்களை பதிவு செய்யும் எண்ணமும் உள்ளது.

அதில் 'சுயலாப' நோக்குடன், நம்முடன் பயணிப்பவர்கள் எல்லாம், வாய்ப்பு கிடைக்கும்போது, தமது பங்கை மிகைப்படுத்தி, வியாபாரத்திற்குட்படுத்தி, சமூக கிருமிகளாக வெளிப்படவும் வாய்ப்பிருக்கிறது.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) அதையும் தாண்டி, துணிச்சலான உரிய திருத்தங்களுடன், ஆக்கபூர்வமாக நம்மால் பங்களிப்பு வழங்கவும் முடியும்

விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமி’களை, ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலமே, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த, தமிழர்களை வேரற்றவர்களாக்கும் பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது. சுயநலக் கள்வர்களின் மூலதனமான, உணர்ச்சிபூர்வ போதைகளை எதிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் மூலம், 'மீட்சிக்கான'  புதிய சமூக தளவிளைவினையும் (New Social Polarization)  தூண்ட முடிந்தது. சாதி, மத வேறுபாடுகளை ஓரங்கட்டி, மனித நேயத்தை குவியப்படுத்தி, இளைஞர்களும், மாணவர்களும், முன்னெடுத்த வெள்ள நிவாரணப் பணிகளும், அடி ஓட்டத்தில் (under current) அதன் தொடர்ச்சியும், புதிய சமூக தளவிளைவின் முன்னறிவிப்பே ஆகும்.( ‘தாராளமாக உதவும் இளைஞர்கள்: ஆர்ஜே பாலாஜி நேர்காணல்’; http://tamil.thehindu.com/society/lifestyle/) அந்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளவாறு, தமிழ்நாட்டில் ஆங்காங்கே, கல்லூரி மாணவர்கள்/இளைஞர்கள், வெளியில் தெரியாமல், 'பிரமிக்கும்' வகையில், ஆக்கபூர்வமான உதவிகள் புரிந்து வருவதையும், நான் பார்த்து, கேட்டு, வியப்பில் மூழ்கி, நம்பிக்கையுடன் பயணிக்கிறேன்.


குறிப்பு: கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் கீழ்வரும் கேள்வியைக் கேட்டேன்.

"கர்நாடக அரசு கல்வி, நிர்வாகம், வேலை வாய்ப்புகளில் கன்னட மொழிக்கு முன்னுரிமை கொடுத்து ஆணைகள் அமுல்படுத்தியுள்ளது. அதே ஆணைகளை வாங்கி, 'கன்னடம்' என்பதற்குப் பதிலாக 'தமிழ்' என மாற்றி ஏன் முதல்வர் ஜெயலலிதா ஆணை பிறப்பிக்கக் கூடாது?"

"கர்நாடக அரசின் அந்த ஆணைகளை வாங்கித் தாருங்கள். நான் முயற்சிக்கிறேன்" என்று அவர் பதில் சொன்னார். எனக்குத் தெரிந்த 'தனித்தமிழ்' முக்கிய நபரிடம் அதைத் தெரிவித்தேன். ஒன்றும் பலனில்லை.

அடுத்து தி.மு.க ஆட்சிக்கு வந்தது. அமைச்சர் தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தகவலைச் சொன்னேன். அவர் பெருமையுடன் "அந்த கர்நாடக அரசின் ஆணைகள் வந்து விட்டன. எனது துறையில் தான் உள்ளது" என்றார். அதாவது பேரா.பொன்னுசாமியின் முயற்சியால் அந்த ஆணைகள் கிடைத்த‌ பின், ஆட்சி மாற்றம் நடந்ததிருக்கிறது. தி.மு.க ஆட்சியில் ப.தண்டபாணிக்கு ஏற்பட்ட முடிவே, 'அந்த' ஆணைகளுக்கும் நடந்தது. 

மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த போது, பேரா.பொன்னுசாமி 'கட்சி மாறி'யாகி விட்டார். அந்த தவறினை அவர் செய்யாமல், அ.இ.அ.தி.முகவில் நீடித்திருந்தால், மீண்டும் அவர் மூலம் முயற்சி நடந்து வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.


தமிழக சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றிய‌ கச்சத்தீவு தீர்மானத்தில் பேரா.பொன்னுசாமி ஆற்றிய முக்கிய பங்கினையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html)