Sunday, May 31, 2020

ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே;


.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே;


.வெ.ரா என்ற மதிக்கத்தக்க சமூக கணினியின்செயலாற்றி ' (processor) 


'சமூக  அருங்காட்சியகத்திற்கு' போவதைத் தடுக்க முடியுமா?
 


இந்தியாவில் இன்றுள்ள சாதி அமைப்பு என்பதானது காலனி ஆட்சியில் அறிமுகமானது;

தமிழர்களில் தற்குறிகளை வளர்த்தது 'பார்ப்பன சூழ்ச்சி' அல்ல', காலனிய சூழ்ச்சியாகும்;

என்பதை உரிய சான்றுகளின் அடிப்படைகளில் நான் விளக்கியுள்ளேன்

அதனை உரிய சான்றுகளின் அடிப்படையில் மறுப்பதையும் நான் வரவேற்கிறேன்.

ஆனால் அதை ஏற்றுக் கொள்ளாமலும் மறுக்காமலும்;

2016 சனவரியில் மேற்குறிப்பிட்ட பதிவு வெளிவந்துள்ள நிலையில், வர்ணாசிரம அடிப்படையில் சாதி உருவானது என்றும், தமிழர்களில் தற்குறிகளை வளர்த்தது 'பார்ப்பன சூழ்ச்சியே' என்று இனியும்  வாதிடுவது சரியா?

தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். நாகசாமி போன்ற தொல்லியல் அறிஞர்கள், அது தொடர்பான தொல்லியல் சான்றுகளை எல்லாம், தொலைக்காட்சி பேட்டிகளில் வெளிப்படுத்தியுள்ளனர்.
(தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது சமஸ்கிருத மூலங்களில் (Sanskrit sources) இருந்து உருவானதாக, நாகசாமி வெளியிட்ட கருத்து தவறு என்பதை நான் விளக்கியுள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2019/03/blog-post.html & http://tamilsdirection.blogspot.com/2019/09/is-nagaswamy-aware-of-thephonetic.html)
 

திருக்குறள் (423) வழியில் அவரின் கருத்தினை அணுகுவதே சரியாகும்.

இன்றும் ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தியாவில் ஊதியத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் எவ்வாறு இருந்தது?

அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் பெண்கள் எப்போது வாக்குரிமை பெற்றார்கள்? பெண் கல்வியும், வேலை வாய்ப்புகளும், ஊதியமும், எவ்வளவு மோசமான நிலையில் இருந்து, எந்தெந்த காலக்கட்டங்களில் முன்னேறி, இன்று என்ன நிலையில் உள்ளது?

ஒரு சமூகத்தில் மனித உரிமைக்கான வரையறைகள்(definitions) மற்றும் வரை எல்லைகளை(limitations) எப்படி தீர்மானிப்பது?

மனித உரிமை பாதுகாப்பாளர்களின் பாரபட்ச (discrimination) போக்கு, மிகவும் பாதகமான மனித உரிமை மீறல் ஆகாதா?

தமிழ்நாட்டில் முன்வைக்கும் பெண்ணுரிமையானது, தமிழ்நாட்டின் வரலாற்றில் காலனியத்திற்கு முன் இருந்த பெண்ணுரிமை பற்றிய புரிதலின்றி, காலனிய மனநோயில் சிக்கி முன்வைக்கப்படும் பெண்ணுரிமை ஆகும்

.வெ.ரா அவர்களின் பெண்ணடிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை இனி பார்ப்போம்.

இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்............மனித சமூக வளர்ச்சிக்கு இரு பாலார் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது." 'பெண் ஏன் அடிமையானாள்?' பக்கம் 23 – 24

பெரியார் மேலே எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகளில் சில கீழே உள்ளன.

How Men's Brains Are Wired Differently than Women's?

male brains had more connections within hemispheres, whereas female brains were more connected between hemispheres;

male brains may be optimized for motor skills, and female brains may be optimized for combining analytical and intuitive thinking; 

‘Data from this study and previous research supports the notion that males and females rely on different brain networks to perform the same function, with the implications must notable in the academic realm. Halpern and colleagues (2007) suggest that we can use this knowledge to teach female and male students ways to solve problems that correspond to their most efficient cognitive process (i.e. verbal versus visuospatial solution strategies) to allow more flexibility in their problem solving and positively impact performance overall.’ (‘Gender differences in working memory networks: A Brain Map meta-analysis’; 

செவிலியர் (nursing) பணியில் பெண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, ஆண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகளில் ஆண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, பெண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; என்பது என் கருத்து

அடுத்து, விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் பயின்று, இன்று கல்லூரிகளில் படிக்கும் பெரும்பாலான மாணவர்களுக்கு தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாது. அவ்வாறுதமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறி வருவதை எதிர்த்து, என்னால் இயன்ற முயற்சிகளை நான் மேற்கொண்டு வருகிறேன். அதே நோக்கில் கீழ்வரும் கோரிக்கையையும் முன்வைத்தேன்.

'இசை இயற்பியல்' (Physics of Music) அணுகுமுறையில், பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்னை பாராட்டி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தமது நிலைப்பாடு தவறு என்று துணிச்சலுடன் அறிவித்து, திருத்திய நிலைப்பாடு எடுத்து, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்திருப்பார்;

என்று உண்மையில் நான் நம்புவதாலும்;

காலம் தாழ்த்தாமல், இன்று திராவிடர் கழக தலைவராக இருக்கும் கி.வீரமணி அவர்களை, .வெ.ரா வழியில் துணிச்சலுடன், என்னை பாராட்ட மனமில்லையானாலும், தமிழ் இலக்கியங்கள் பற்றிய நிலைப்பாட்டினை .வெ.ரா வழியிலேயே மாற்றிக் கொண்டு, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுக்குமாறு நான் கோருகிறேன்.

'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையானது, இந்திய விடுதலைக்கு முன்,  .வெ.ரா அவர்களும், ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கப்பட்டு, நிறைவேறவில்லை.

ஆனால் தமிழ்வழிக்கல்வி மீட்சியில். அது போல 'பெரியார்' ஆதரவாளர்களும்;

ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;

ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;

வரும் 2018 சூன் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும்;

என்று நான் நம்புகிறேன்.

2018 மார்ச்சில் முன்வைக்கப்பட்ட எனது கோரிக்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை. 2019 மார்ச்சில் இந்த பதிவில், அதே கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன்.

சமூக வண்ணக் குருட்டு நோயில் .வெ.ரா அவர்கள் சிக்கியிருந்தால்;

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றதும்;

இந்திய விடுதலைக்கு முன், 'திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்கு' ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவினைக் கோரி பெற்ற்தும்;

நடந்திருக்குமா? எனவே மேலே குறிப்பிட்ட கோரிக்கையானது தாமதமின்றி செயல்வடிவம் பெற எந்த தடைக்கும் நியாயம் கற்பிக்க முடியாது

2020 மே மாதத்தில் இந்த பதிவிலும், அதே கோரிக்கையை மீண்டும் முன்வைக்கிறேன். இது எனது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அண்மையில் கீழடி அகழாய்வுக்கு பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்தார்கள். அதன் விளைவாக, தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சிகள் புத்துயிர் பெற்றுள்ளன; மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆதரவில். அது போல, அவர்கள் எல்லாம் நான் முன் வைத்துள்ள பிரச்சினையில் விரைவில் குரல் கொடுப்பார்கள், என்று எதிர்பார்க்கிறேன்; தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு மாறிவரும் போக்கினைத் தடுப்பதற்காக.

மேற்குறிப்பிட்டவாறு .வெ.ராவின் சமூகம் தொடர்பான ஆய்வுமுடிவுகள் எல்லாம், அவரின் மறைவிற்குப் பின் வெளிப்பட்ட சான்றுகளின் அடிப்படைகளில் எவ்வாறு தவறானவை? என்று நான் விளக்கியுள்ளதைப் போலவே;

தமிழிசை தொடர்பானஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் எல்லாம் எவ்வாறு தவறானவை? என்று விளக்கியுள்ளேன்.

மம்மது, அமுதா பாண்டியன் உள்ளிட்ட இன்னும் பல தமிழிசை ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் எல்லாம், அது தெரியாமல் அல்லது அதை இருட்டில் தள்ளியே பயணித்து வருகிறார்கள்;

'பெரியார் கட்சிகள்' எல்லாம் .வெ.ரா அவர்கள் தொடர்பான எனது ஆய்வு முடிவுகளை எல்லாம், அது தெரியாமல் அல்லது அதை இருட்டில் தள்ளியே பயணித்து வருவதைப் போலவே.

ஊடக நேர்மை தொடர்பாக, நான் எழுப்பியுள்ள சவாலான கேள்விகளும் மேற்குறிப்பிட்ட இருட்டடிப்புகளுக்குக் காரணமா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

ஆபிரகாம் பண்டிதர் இன்று உயிரோடிருந்தால், மேற்குறிப்பிட்ட போக்குகளை எல்லாம் கண்டித்திருப்பார். ஏனெனில் அவர் தமது ஆய்வுமுடிவுகளை விளங்கிக் கொள்ளாமல் உணர்ச்சிபூர்வமாக பாராட்டுபவர்களிடமே முன்வைத்து, முட்டாள்த்தனமான பாராட்டு மழையில் பயணிக்கவில்லை. இந்திய அளவில் உள்ள இசைப்புலமையாளர்கள் முன்னிலையிலேயே தமது ஆய்வுகளை முன்வைத்தார். அவர்கள் தமது ஆய்வுகளுக்கு எதிராக முன்வைத்த விமர்சனங்களை எல்லாம் மிகவும் மதித்தார். அந்த விமர்சனங்களுக்கு உரிய பதில் தரும் முயற்சிகள் மூலமாகவே, அவரின் ஆய்வுகள் வளர்ந்தன. அவருக்கு 'இசையின் இயற்பியல்' (Physics of Music) தெரிந்து கொள்ளும் வாய்ப்பு அந்த காலத்தில் அவருக்கு கிட்டவில்லை. கிட்டியிருந்தால், நான் கண்டுபிடித்துள்ள பல ஆய்வுமுடிவுகளை அவரே கண்டுபிடித்திருப்பார்.

அறிவியல் உலகில் நியூட்டன் உள்ளிட்ட எந்த பெரிய விஞ்ஞானியின் ஆய்வு முடிவுகளும், அடுத்து வந்த ஆராய்ச்சியாளர்களால் தவறு என்று நிரூபிக்கப்பட்டதானது, அறிவியலின் வளர்ச்சியாகத் தான் கருதப்பட்டதே ஒழிய, அவை தொடர்பான விஞ்ஞானிகளுக்கு இழுக்காகக் கருதப்பட்டதில்லை. அதை இழுக்காகக் கருதி தாமதப்படுத்தியவர்கள் தான், பின்னர் இழுக்கைச் சுமக்க நேரிடும்.

இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தால், எனது ஆய்வுகளை படித்து, ஐயங்களை தெளிவுபடுத்திக் கொண்டு, தமிழ் மொழி மற்றும் இலக்கியங்கள் தொடர்பான, தனது கொள்கைகளை தவறு என்று பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டிருப்பார்;

என்பதையும் ஏற்கனவே கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்
(‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  .வெ.ரா’; 

மேற்குறிப்பிட்ட பதிவுகளை வெளியிட்ட நான், இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், 'பெரியார்' இயக்கத்தில் 'மார்க்சிய - லெனினிய - பெரியாரியல்' பலமையாளனாக பங்களித்தவன். விடுதலை, உண்மை, The Modern Rationalist ஆகிய இதழ்களில் கட்டுரைகள் எழுதியவன். 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு', 'வஞ்சிக்கப்பட்ட விவசாயம்' உள்ளிட்ட பல புத்தகங்களை வெளியிட்டவன்.

அத்தகைய பின்னணியுள்ள நான் எழுதிய பதிவுகளைப் புறக்கணித்து, 'பெரியார்' கட்சிகள் பயணித்து வருவது சரியா? .வெ.ரா இருந்த காலத்தில், அவரின் கருத்தினை எதிர்த்து வந்த வெளியீடுகளை இது போல புறக்கணித்திருக்கிறாரா? மாறாக, 1944 இல் தி. ஆரம்பித்ததற்கு முன்னர், தம்மை எதிர்த்த ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு போன்றவர்கள் எழுதியதை, தமது 'குடிஅரசு' இதழில் .வெ.ரா இடம் கொடுத்து,அவற்றிற்கு மறுப்புகள் வெளியிடவில்லையா?

அண்ணாதுரையின் தூண்டுதலால் 1944இல் நீதிக்கட்சியை திராவிடர் கழகமாக மாற்றி, பின்னர் அவருக்கு எதிராக அண்ணா குழுவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கும் தமது இதழ்களில் மறுப்பு வெளியிடவில்லையா?

எனது ஆய்வு முடிவுகள் சரியா? தவறா? என்பது பாரபட்சமற்ற அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலமாகவே தெளிவாகும். தவறு என்று உரிய சான்றுகளின் அடிப்படையில் வெளிப்படுவதை தயக்கமின்றி ஏற்றுக்கொண்டு உரிய திருத்தங்களுடன் பயணிப்பதே எனது ஆய்வுகளின் வெற்றிகளின் இரகசியமாகும்.

பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா..மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார். எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை.

எனவே எனது ஆராய்ச்சிகளின் பலன்களானபதிவுகளில், எவரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. மேற்குறிப்பிட்ட புத்தகத்தை .மார்க்ஸ் கண்டித்தது போல, எனது பதிவுகளையும், கண்டித்து எழுதுவதை வரவேற்கிறேன். அவை நிச்சயமாக, என்னை மேலும் நெறிப்படுத்திக் கொள்ள உதவும்

பாதுகாக்கப்பட வேண்டியது; .வெ.ராவின் திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் கேள்விகள் கேட்கும் ஆராய்ச்சியே; 'உணர்ச்சிபூர்வ' எதிர்ப்புகளை, 'அறிவுபூர்வமாக' சந்தித்த அணுகுமுறைகளே; 

'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாத அவரது கொள்கைகளையல்ல; மேலுள்ள பதிவின்படி, 'பெரியார்' மூலம், 'சமூக கிருமி'களாக, 'வளர்ந்து'ள்ளவர்களையுமல்ல‌. 

சமூகத்தின் ஆணி வேர்களாகிய, தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு ஆகியவையே, சமூக வளர்ச்சிக்கான ஆற்றல்களின் ஊற்றுக்கண்கள் ஆகும். அவற்றில் தாய்மொழி கூறானது பலகீனமாகி, மற்றவை வேகமாக வளரும் போக்கும் தமிழ்நாட்டில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரங்கு நிரம்பி வழியும் அளவுக்கு தமிழில் நகைச்சுவை பொங்க பேசும் பட்டிமன்ற நிகழ்ச்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்பவர்கள் எல்லாம் பெற்றோர்களே. ஆனால் மாணவர்களாக இருக்கும் அவர்களின் பிள்ளைகளோ (1960களில் மாணவர்களை ஈர்த்தஅண்ணா அன்பழகன் நெடுஞ்செழியன், கருணாநிதி போன்றோருக்குப் பதிலாக) ரஜினி, கமல், அஜித், விஜய் போன்றவர்களின் பேச்சைக் கேட்க ஏங்குபவர்களாக இருக்கிறார்கள்.

அவர்களில் பெரும்பாலோர் 'பெரியார் யார்?' என்று தெரியாமலும், தெரிந்து கொள்வதில் ஆர்வமின்றியும் பயணிக்கிறார்களா? என்ற ஆய்வுக்கான முகாந்திரம் உள்ளது.         

1950களிலும் 1960களிலும் கோவில்களில் கூடிய மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எண்ணிக்கை குறைவாகவும், தி.மு. கூட்டங்களுக்கு தாமாகவே கூடியவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இருந்தது. இன்று தலைகீழாக நம்பமுடியாத அளவுக்கு கோவில்களில் கூடும் மாணவர்கள், இளைஞர்கள், மற்றும் பொதுமக்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது. பக்தர்களின் நன்கொடைகளில் இலவச உணவு, இலவச கண் சிகிச்சை உள்ளிட்ட பல உதவிகள் தமிழ்நாடெங்கும் உள்ள கோவில்களில், குறிப்பாக சீரடி சாய்பாபா கோவில்களில், நடைபெற்று வருகின்றன

தாய்மொழி தொடர்பான கூறானது பலகீனமாகி வரும் போக்கில், தமிழ்நாட்டில் தமிழர்களும் பலகீனமாகி வரும் போக்கும் வெளிப்பட்டுள்ளது
(‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’; 
    
தாய்மொழி தொடர்பான கூறானது வறண்டு வரும் போக்கானது, 'வறட்சி சுனாமி'யாக மாறுவதற்கு முன் தடுக்கப்படாமல், தமிழும், தமிழரும் மீள முடியாது. அது எனது வீண் பயமாக/கற்பனையாக, இருந்தால் மகிழ்ச்சியே. இல்லையென்றால், 'பெரியார்' மூலம் உருவான‌ 'சமூக கிருமி'களின் பங்களிப்பால், வரலாற்றில் .வெ.ரா குற்றவாளியாகவேஅவரின் சுயநலம் பாரா உழைப்பும், தியாகமும் பயன்பட்டதாகக் கருதப்படாதா?

மிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவர்கள் அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும், வசதியிலும் செல்வாக்கிலும் வளர்ந்து வரும் போக்கில்
(http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html)

.வெ.ரா அவர்களின் சாதனையாக, தமிழர்களில் பெரும்பாலோர் தரகர்களாகவும் திருடர்களாகவும் தன்மானம் இழந்த அடிவருடிகளாக அதிகரிக்கவும், தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரிக்கவும், அதன் மூலமாகதமிழ்  வேரழிந்த நாடாகவும் தமிழ்நாடு மாற வேண்டுமா?  

.வெ.ரா என்ற செயலாற்றியின்(processor) திறனை மேம்படுத்தி, கால ஓட்ட வழக்கொழிந்த(outdated)  'கொள்கைகள்' என்ற 'ஹார்ட் டிஸ்க்'(Hard  Disc) பாகத்தை புதுப்பித்து, பயன்படுத்துவது தாமதமானால், அந்த மதிக்கத்தக்க சமூக கணினி, தனது வாழ்வை முடித்து, 'சமூக  அருங்காட்சியகத்திற்கு' போவதை தடுக்க முடியுமா, கால ஓட்டத்தில்