Monday, July 31, 2017

 

தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன்  இடம் பெறுவாரா? (1)

 

அறிவுபூர்வமான விவாதத்திற்கு உட்படுத்தியாக வேண்டும்;

காஷ்மீர் பிரிவினை கோரிக்கைக்கு, கமல்ஹாசன் ஆதரவா?


'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்: கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா?’ என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )

கமல்ஹாசன் தொடர்பாக, அண்மையில் ஊடகங்களில் வெளிவந்த செய்திகளில்;

கீழ்வரும் செய்தியானது மிகுந்த கவலை தந்தது. அறிவுபூர்வமான விவாதத்திற்கு அதனை உட்படுத்த வேண்டியது அவசியமாக, எனக்கு பட்டது.
 
கமல் " 'காஷ்மீர் விவகாரத்தில் முஸ்லீம்களுக்கு பிரியமில்லை என்றால் பிரிந்து போகட்டுமே'  என்று அப்போது எழுதியதைப் பார்த்து, சோ இந்த மாதிரி விஷயங்களில் அவசரப்படாதே என்று எச்சரித்தார்." (பக்கம் 04,  தமிழக அரசியல், 26.07.2017)

கருத்துரிமை என்பது எந்த நெருக்கடியுமில்லாத சமூக சூழலில் மட்டுமே, சாத்தியமாகும். ஆயுதப்போராட்டத்தில் சிக்கிய எந்த பகுதியிலும் வாழும் மக்களுக்கு, அந்த சமூக சூழல் கிடையாது. 

பாகிஸ்தான் என்ற நாடு, காலனிய சூழ்ச்சியில் உருவாகாமல் இருந்திருந்தால், இந்தியாவுடன் 1975இல் இணைந்து, சுயநல தேசியக் கட்சி அரசியலில் சிக்காமல், முன்னேறியுள்ள சிக்கிமைப் போல், காஷ்மீரும் இன்னொரு சிக்கிமாக வளர்ந்திருக்கக் கூடும். (https://en.wikipedia.org/wiki/Sikkim )

ஜின்னாவை பிரதமராக்க நேரு சம்மதித்திருந்தால், பாகிஸ்தான் தனிநாடாக பிரிந்திருக்குமா? என்பதும் விவாதத்திற்குரியதாகும்.

வல்லபாய் படேல் இந்திய பிரதமராகி, இருந்தால், காஷ்மீரில் ஒரு பகுதி, பாகிஸ்தானுக்கு போயிருக்குமா? மேலே குறிப்பிட்ட பாதகமான சமூக சூழலில், பிரிவினைக்குழுக்களுக்கும், இந்திய ராணுவத்திற்கும் இடையிலான மோதலில், காஷ்மீர் மக்கள் சிக்க நேரிட்டிருக்குமா? வல்லபாய் படேல் அன்று உள்துறை அமைச்சராக இரும்பு மனிதராக செயல்பட்டிருக்காவிட்டால், இன்று இந்தியாவில் சுமார் 50க்கும் அதிகமான காஷ்மீர்கள் உருவாகியிருந்து, ஆப்பிரிக்கா போல, இந்தியா சீரழிந்திருக்குமா, சீரழிவுக்கு காரணமான 'மக்கள் போராட்டங்களின்' தலைவர்களும், அவர்களின் குடும்பங்களும், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும், 'பாதுகாப்பான' வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து கொண்டு(‘நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை’ ; http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

என்பது போன்ற கேள்விகளை, தமது மனசாட்சிக்குட்பட்டு, கமல்ஹாசன் எழுப்பி, விடைகள் காண வேண்டும்.

அது போன்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை, அடுத்து சுருக்கமாக பார்ப்போம்.

‘உலகமயமாக்கலுக்குப் பின்,  'தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’) என்பது, பெற்று வரும் வேகமான மாற்றங்கள் குறித்து, பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'உலகமயமாக்கலுக்குப் பின் ‘சாவரினிட்டி (‘sovereignty’) என்பது கதையாகப் (fictional. ) போய்விட்டது', என்று ஜான் எச் ஜாக்சனும் (பக்கம் 784), கடந்த காலத் தடயமாக வரலாற்று நூலகத்திற்குச் செல்ல வேண்டியது என்று பேரா.என்கினும் (பக்கம் 789),  சர்வ தேசச் சட்டங்கள் பற்றிய அமெரிக்க ஆய்வு நூலில் (The American Journal of International Law  ) கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது தனிநாடுகளாக உள்ளவற்றின் 'சாவரினிட்டிக்கே', இந்த கதி என்பதை, பிரிவினை இயக்கங்கள் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனவா?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை.

1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் ந‌கரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, தாமாகவே கொதித்தெழுந்து, பல வாரங்கள் அந்த கொதிப்பு நீடித்ததை நேரில் அனுபவித்தவன் நான். அந்த கொதிப்பில் உருவான ஆதரவாளர்கள் பலத்துடன், விடுதலைப் புலிகள், PLOT, EPRLF, TELO, EROS      போன்ற பல ஈழ விடுதலைக்குழுக்கள்,  தமிழ்நாட்டை தததம் ஆதரவு மண்டலங்களாகக் கூறு போட்டுக் கொண்டனர். அத்துடன் ஆயுதப்பயிற்சிகள், புத்தகங்கள், இதழ்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் உள்ளிட்டு பலவேறு வழிகளில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களிடையே ஆங்காங்கு மோதல்கள் நடந்த சம்பவங்களும் உண்டு.

அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் எம்.ஜி ஆரின் ஆதரவில், அதிக பலன் பெற்றவர்கள் விடுதலைப் புலிகள். அன்று மிகவும் வலிமையுடனும், செல்வாக்குடனும், இருந்த டெலோ தலைவரையும், நூற்றுக்கணக்கான ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகளையும், விடுதலைப் புலிகள் இலங்கையில் சுட்டுக் கொன்றனர். அதிலும் கைகளைத் தூக்கி சரணடைந்தவர்களையும் கொன்றனர். அதே போல்  EPRLF   போராளிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். தமிழ்நாட்டில் அந்த அமைப்புகளுக்கு எவ்வளவு ஆதரவாளர்கள் இருந்தனர்? அவர்கள் மனநிலையில் என்னென்ன பாதிப்புகள் விளைந்தன? என்பது பற்றி, எனக்குத் தெரிந்து தமிழ்நாட்டில் விவாதம் நடக்கவில்லை. என்னைப் போன்று, அன்று விடுதலைப்புலி ஆதரவாளர்களாக செயல்பட்டவர்கள் தங்களுக்குள் வருத்தத்தைப் பரிமாறிக் கொண்டோம். ஒரு பெரிய இலட்சியத்திற்காகப் போராடும் இயக்கத்தில், இது போன்று நடக்கும் தவறுகளை, சகித்துக் கொள்வதைத் தவிர வேறு , என்று 'அன்று' இருந்த ‘அறிவில்(?)  சமாதானம் சொல்லிக் கொண்டோம். 'விடுதலைப் புலிகள் மீண்டும் ஏமாறப் போகிறர்களா?' (மார்ச் 1988} உள்ளிட்ட பல (திருச்சி பெரியார் மையம்) வெளியீடுகளின் அபாய எச்சரிக்கைகள் காரணமாக, விடுதலைப்புலிகள் என்னை வெறுக்கத் தொடங்னார்கள்……..1944இல் 'பெரியார்' ஈ.வெ.ரா திசை திரும்பியதைப் போல, பிரபாகரனும் பாதகமாக திசை திரும்பினாரா? என்ற ஆய்வுக்குதவும் தகவல் வருமாறு:

தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி, பிரபாகரன் 'திசை திரும்ப' தொடங்கிய காலத்தில், அது பற்றி ஆன்டன் பாலசிங்கம், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம், நான் உள்ளிட்ட நால்வரும் விவாதித்தோம். பிரபாகரனை 'கவனமாக' கையாண்டு நெறிப்படுத்தலாம், என்று பாலசிங்கம் கருத்து தெரிவித்தார். அதை ஏற்றுக்கொள்ளாமல், பேராசிரியர்கள் நிர்மலா, நித்தியானந்தம் இருவரும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை விட்டு வெளியேறினர். அதன்பின் நிர்மலா, திருச்சியிலிருந்த எனது இல்லத்திற்கு வந்து, 'விடுதலைப்புலிகளை ஆதரிப்பது தவறு' என்று கோபமாக பேசினார். பின், எனது முயற்சியில், சென்னை பெரியார் திடலில் கோவை.இராமகிருட்டிணனை சந்தித்து, அவர் பேச ஏற்பாடு செய்தேன். அவரிடமும் நிர்மலா கோபமாக பேசியதை கோவை.இராமகிருட்டிணன் மறந்திருக்கமாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் கடைசியாக, ஆண்டன் பாலசிங்கத்தை சந்தித்த போது, சர்வதேச அரசியல் சூழலில், 'தனி ஈழம் சாத்தியமில்லை' என்று நான் விளக்கியபோது, அதற்கு தகுந்த மறுப்பு சொல்லாமல், மொட்டையாக 'ஆனாலும் வாங்கி விடுவோம்' என்றார். அந்த சந்திப்பில் கூட இருந்த விடுதலை இராசேந்திரன், அதை மறந்திருக்க மாட்டார் என்று நம்புகிறேன். அதன்பின் இசை ஆராய்ச்சியில், நான் திசை திரும்பினேன்.

நிர்மலாவின் தங்கையான, யாழ் பல்கலைக்கழக மனித உரிமை அமைப்பின் நிறுவனருமான,  பேரா.முனைவர்.ரஜனி திரநாகமா, விடுதலைப்புலிகளை விமர்சித்து, 21 செப்டம்பர் 1989இல் ' The Broken Palmyra' என்ற புத்தகத்தை வெளியிட்டார். அடுத்து சில வாரங்களிலேயே அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
https://en.wikipedia.org/wiki/Rajini_Thiranagama & Rajini Rajasingham Thiranagama: Unforgettable Symbol of Sri Lanka’s Tamil Tragedy

பின் பல வருடம் கழித்து,'ஏன் தமிழ்நாடு தனிநாடாக வேண்டியதில்லை?' என்று விளக்கிய, கீழ்வரும் பாலசிங்கம் பேட்டி, என் கண்களுக்கு பட்டது." " There is a state government of its own there. There are political parties. The state is prospering. Why should Tamilnadu separate from India? There is no need to do so" said Balasingham." Page 127; Frontline December 24, 1999. பிரபாகரனை 'கவனமாக' கையாண்டுவந்த , ஆண்டன் பாலசிங்கம் 2006 டிசம்பரில் மறைந்தார். ‘ (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

‘உதவிகளை வழங்குபவரைப் போலவே, உதவிகள் பெறுபவருக்கும், சுயலாப கணக்கிலான உள்நோக்க ஈடுபாடு இருக்குமானால், அப்படிப்பட்ட நபர்களிடம் ஏமாந்து, அவர்களை பொதுவாழ்வில் தலைவர்களாகவும், தொண்டர்களாகவும் செயல்பட அனுமதித்த சமூகமானது, அந்த உதவிகளால் விளையும் ஆபத்திலிருந்து தப்பவே முடியாது.

1980கள் தொடக்கம் வரை இலங்கையில் மலையகத்தமிழர் பிரச்சினைத் தவிர, வேறு எந்த பிரச்சினை பற்றியும், தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்கு ('பெரியார்' இயக்கத்தில் கொள்கை புலமையாளனாக (Theoretician) பயணித்த நான் உள்ளிட்டு) தெரியாது. மே 19 1982   சென்னை பாண்டி பஜாரில்  மோட்டர் சைக்கிளில் (விடுதலைப் புலிகள் இயக்க தலைவர்) பிரபாகரன் ஓட்ட, பின்னால் அமர்ந்து பயணித்த‌ ராகவன்,  ( 'புளோட்' - PLOT-  இயக்க) தலைவர் உமா மகேசுவரனையும்,  அவரது உதவியாளர் ஜோதீஸ்வரனையும் சுட்டதில் அவர் தப்பித்து, பின் நால்வரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட செய்தி மூலமே, பொது அரங்கில், 'ஈழப் பிரச்சினை' பெரும்பாலோரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியது.

இன்றைக்கு சுமார் 55 வயதுக்கும் அதிகமானவர்களுக்கு அது தெரியும்.

இந்திராகாந்தி பிரதமராக இருந்த அந்த காலக்கட்டத்தில், ஈழ விடுதலை குழுக்களுக்கு, ‘அபரீதமான உதவிகள்எங்கிருந்து, எதற்காக வந்தன? தமிழ்நாடெங்கும் அந்த குழுக்கள் எல்லாம் 'ஆயுத பயிற்சிகளும்', 'கண்காட்சிகளும்', ''பத்திரிக்கைகளும்', கொலைகளும், சித்திரவதை முகாம்களும் செயல்பட்ட அளவுக்கு, சம்பந்தப்பட்ட சட்டங்கள் எல்லாம் 'கண்களை' மூடிக் கொண்ட அளவுக்கு, மத்திய அரசு ஏன் ஒத்துழைப்பு வழங்கியது? போன்ற கேள்விகள் எல்லாம், அந்த காலக்கட்டத்தில், விடுதலைப் புலிகளை ஆதரித்து பயணித்த, திருச்சி 'பெரியார் மையத்தில்' விவாதிக்கப்பட்டது. அந்த காலத்தில் திருச்சி பெரியார் மாளிகையில், விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராக இருந்த, புலவர் இமயவரம்பனிடம், 'காஷ்மீர், மற்றும் இந்தியாவின் வடகிழக்கு மாகாணங்களில் 'தனி நாடு' கோரும் ஆயுதப் போராட்டங்களை ஒடுக்கி வரும், இந்திராகாந்தியின் உதவியை விடுதலைப் புலிகள் பெறுவது, சரி என்றால், நாம் ஏன் (அன்றைய இலங்கை அதிபர்) ஜெயவர்த்தனேயிடம் தனித் தமிழ்நாட்டிற்கு ஆதரவும், உதவியும் பெறக்கூடாது?" என்று நான் கேட்ட போது, அவரால் உரிய விளக்கம் தர முடியவில்லை.

'உதவிகள்' தொடர்பான புரிதலும், ஆய்வும் இன்றி, 'ஈழ விடுதலை' முயற்சிகள் பயணித்து, முள்ளிவாய்க்கால் பேரழிவானது, எவ்வாறு வரலாற்று சான்றாகி விட்டது? என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.’ (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_27.html )

உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது. அதன் பின் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது, அவ்வப்போது அந்நிய துருப்புகள் உள்நுழைந்து அமைதி உருவாக்க வேண்டிய தேவை என்ன? தனிநாடு கோரிக்கையில்லாமலேயே, சீனர் பெரும்பான்மையாயுள்ள சிங்கப்பூரை, மலேசியா ஏன் தனிநாடாகத் துண்டித்தது? அப்போது மலேசிய நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவாகவும், ஊழலில் மோசமாகவும் இருந்த சிங்கப்பூர், உலகே வியக்கும் அளவுக்கு எவ்வாறு முன்னேறியது?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை.

புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தனிநாடு, மனித உரிமை, பெண்ணுரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்டு உலகில் நடைபெறும் பலவகையான அமைப்புகளையும், போராட்டங்களையும், 'பொம்மலாட்டமாக' மாற்றி, தமது வலையில், உலக ஆதிக்க சக்திகள், எவ்வாறு சிக்க வைக்கின்றன, என்ற செயல்நுட்பத்தை, விளக்கும் நாவல் The Aquitaine Progression by Robert Ludlum ( 1984).

குறிப்பாக சட்டபூர்வமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ஆயுத உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளுக்கு, அவர்களுடைய வியாபார நலன்களுக்காக, உலகில் பல இடங்களில் போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி வியாபாரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. 1998 - 2003 காலக் கட்டத்தில், உலக ஆயுத வியாபாரத்தில் பாதி அமெரிக்கா வசம் இருந்தது. அதில் 2/3 பங்கு வியாபாரம் வளரும் நாடுகளுக்கான ஆயுத விற்பனையாக இருந்தது. அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் சட்டவிரோதமான ஆயுத வியாபரத்தைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் கூட்டு முயற்சி மேற்கோள்ளும் யோச‌னையை முன் வைத்தபோது, அமெரிக்கா அதை நிராகரித்தது.  ( Pages 97-98,  Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அதே நேரத்தில் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் பிழைப்பிற்கே ஆபத்தாகும் வகையில், உலகப் பொருளாதாரம் சீர்குலையாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமநிலைக்குக் கட்டுப்பட்ட வகையிலேயே போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெறுவதற்காகவே, அச்சக்திகள் அவ்வப்போது சமாதான முயற்சிகளிலும், ஒத்து வராத அரசுகளை கவிழ்ப்பதிலும், தாமே, தமது சுயநலனுக்கு வளர்த்த, ஆயுதக் குழுக்களை, 'பயங்கரவாத எதிர்ப்பு' என்ற போர்வையில், அழிப்பதுமான, செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

திறந்த மனதுடனான, அறிவுபூர்வமான விமர்சனங்களைத் துரோகமாகக் கருதி ஒழித்து, உணர்ச்சிபூர்வ போதையில் பயணிக்கும் ஆயுதப் போராட்டங்கள், இந்த சூழ்ச்சி வலையிலிருந்து தப்புவது கடினமே.’ (http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

மேலே குறிப்பிட்ட பின்னணியில்;

'தமிழ்நாட்டில் முளை விட்டு ' தடம் புரண்ட‌' பிரிவினை போக்கும், இலங்கையில் 'ஆயுதப் போராட்டமாக' 'பாதை மாறிய' பிரிவினைப் போக்கும்;

1980களில் சங்கமமான சமூக செயல்நுட்பத்தினை ஆராய்வதும் அவசியமாகி விட்டது.' (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post_19.htmlTELO, PLOT, EPRLF ஆகிய குழுக்களின் தலைவர்களையும், போராளிகளையும், ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற விடுதலைப்புலிகளை கண்டிக்காமல், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாக பயணித்த‌, அந்த குழுக்களின், தமிழ்நாட்டு ஆதரவாளர்களுக்கும், ஜெயலலிதாவை காலில் விழுந்து வணங்கி, பின் ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சசிகலாவின் காலில் விழுந்து வணங்கியவர்களுக்கும், வேறுபாடு உண்டா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், தமிழ்நாட்டிற்கு மீட்சி உண்டா? 'தமிழ்நாடும், தமிழும், தமிழர்களும் வீழ்ந்து வருகிறார்கள்; தமிழ்நாட்டை சீரழித்த 'சாபத்தில்' (Curse) பங்கும், தண்டனையும் அனுபவித்துக் கொண்டு.' (http://tamilsdirection.blogspot.in/2017/07/blog-post_16.html ) தமிழ்நாட்டிற்கு வந்து, அந்த சமூக செயல்நுட்பத்தில் சிக்கிய 'ஈழ விடுதலை' முயற்சியும், அந்த 'சாபத்தில்' (Curse) அதற்கான‌ பங்கும், தண்டனையும் அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியுமா? அந்த சமூக செயல்நுட்பத்திலிருந்து விடுதலை ஆகாமல், 'ஈழத்' தமிழர்களுக்கும் மீட்சி உண்டா?  

ஈ.வெ.ராவை 'பெரியார்' பிம்பத்தில் உணர்ச்சிபூர்வமாக சிறைப்படுத்தி, 'தனித்தமிழ்நாடு போதையில்' பயணித்தவர்களின் பலத்தில், அதை விட மோசமான 'பலூன் பிம்பத்தில்' பிரபாகரன், ஈ.வெ.ராவைப் போலவே, தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி சிறைபட்டதே, முள்ளிவாய்க்கால் பேரழிவை நோக்கிய திசையில், விடுதலைப் புலிகளை பயணிக்க செய்தது, என்பது எனது ஆய்வு முடிவாகும். 'பெரியார்' பிம்பமானது, உடையத் தொடங்கியுள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளதை, கீழ்வரும் முகநூல் தகவல் உணர்த்துகிறது.

"ம. வெங்கடேசனின் ‘ஈவேராவின் மறுபக்கம்என்ற புத்தகம் தி.க காரர்களால் இன்னமும் பதில் சொல்லப்படாமல் இருக்கிறது. ஈ.வே.ரா வின் பெயரைச் சொல்லி அரசியல் நடத்தும் புரோக்கர்களை புரட்டிப்போட்ட புத்தகம் அது." (http://vijayabharatham.org/?p=148அப்புத்தகத்திற்கு அறிவுபூர்வமான மறுப்பு ஏதும் வெளிவந்திருந்தால், தெரிவிக்கவும்; நன்றியுடன் ஆய்வுக்கு நான் உட்படுத்த இயலும். இது போன்ற புத்தகங்களுக்கும், எனது பதிவுகளுக்கும் அறிவுபூர்வமாக, 1944க்கு முன் 'குடி அரசு' பயணித்த பாணியில், பதில் சொல்வதைத் தவிர்த்து, பயணிக்கும் 'பெரியார்' கொள்கையாளர்கள் எல்லாம், திராவிட அரசியல் கொள்ளையின் அடிவருடிகளாகவே பயணிக்க முடியும். ‘தமக்கு இப்போதிருக்கும் செல்வம், செல்வாக்கு, வசதிகளுடன் தமது காலத்தை பெரியார் கட்சிகளின் தலைவர்கள் கழித்து விடலாம். ஆனால் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணத்தை முன்நிபந்தனையாக்கிய குற்றவாளிகளாக அவர்கள் வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியாது. எனது ஆய்வுகள் அடிப்படையில் தெளிவு பெற்று, 2005 முதல் நான் மட்டுமே, நானறிந்த வரையில், தனி ஆளாக எதிர்நீச்சல் போட்டு வரும் அடிப்படையில்,  இந்த அபாய அறிவிப்பை முன் வைக்கிறேன்.’;( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html1950களில் 'காந்தி பொம்மையை உடைத்தல், படங்களை' எரித்தல் போராட்ட பிரச்சாரங்களை, 'பெரியார்' ஈ.வெ.ரா மேற்கொண்டபோது, மக்களிடம் அது எடுபடவில்லை; போராட்டமும் நடக்கவில்லை. (ஆனால் 'பெரியார் உடைத்தல், படங்களை' எரித்தல் போராட்ட பிரச்சாரங்களை இன்று மேற்கொண்டால், அதை வரவேற்கும் அறிகுறிகள் வெளிப்பட தொடங்கியுள்ளன. (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_5.html )

'பெரியார் பிம்பமும்', 'பிரபாகரன் பிம்பமும்', ஜெயலலிதாவின் மர்ம சிகிச்சை/மரணம் குறித்து, பாரபட்சமற்ற நீதி விசாரணை கோராமல், சங்கமமாகி விட்டதா? தமிழ்நாட்டில் பிரபாகரனின் 'பலூன் பிம்பம்' உடைவதை, 'பணம், மீடியா' பலத்தால் தாமதப்படுத்த முடியுமே தவிர, தவிர்க்க முடியாது. 'பெரியார்', ' பிரபாகரன்', 'மார்க்சியம்', ' தமிழ்த்தேசியம்' ஆகிய பிம்பங்களின் வழிபாட்டில் சிக்கியவர்கள் எல்லாம்;


தாம் 'நேசிக்கும்' நிலைப்பாட்டிற்கு எதிராக, விவாதத்தில் நாம் முன்வைக்கும், வெளிவந்த ஆய்வு கட்டுரைகளை படிக்கும் ஆர்வமின்றி, தமது 'நிலைப்பாடு போதையில்' பயணிப்பவர்களை, நான் 'அனுபவித்திருக்கிறேன்'. எனவே அத்தகையோரை சந்திப்பதையும், தற்செயலாக சந்திக்க நேர்ந்தால், அவர்களுடன் விவாதிப்பதையும், இயன்ற அளவு தவிர்த்து வருகிறேன்; 'கர்நாடக இசை உயர்வு போதை', 'தமிழ் இசை உயர்வு போதை'யாளர்களை தவிர்த்து வருவது போலவே.  


காலனிய மனநோயில் சிக்கிய இந்தியர்கள் எல்லாம், ஒரு வகை தாழ்வு மனப்பான்மையில் 'மேற்கத்திய அங்கீகாரத்திற்கு' ஏங்கியவர்களாக  பயணித்து வரும் சூழலில்;

தமிழ்நாட்டில் தனித்துவமாக (Unique), ஆங்கிலம் தெரியாமல், தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, சாராசரி பொது அறிவின் அடிப்படையில், தமிழ் இலக்கியங்களையும் கேலி, கிண்டல் செய்து, 'அதி புத்திசாலிகளாக' பயணித்தவர்கள்,( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ) மற்றும் 'தனித்தமிழ்நாடு போதையில்'  உணர்ச்சிபூர்வமாக பயணித்தவர்கள் எல்லாம் (http://tamilsdirection.blogspot.in/2016/07/fetna.html  ), 'ஊதி' பெருக்க வைத்த, மேலே குறிப்பிட்ட பிம்பங்களின் 'அதீத' செல்வாக்கில்;

தமிழ்நாட்டின் தாய்மொழிவழிக் கல்வியும், கனிவளங்களும் 'ஊழல் சுனாமி'யில் சூறையாடப்பட்டு, அந்த சமூக குற்றவாளிகளை, 'புரவலராக' கொண்டு, கடந்த சுமார் 30 வருடங்களில் நடைபெற்ற 'தமிழ் உணர்வு' நிகழ்ச்சிகளையும், 'பாராட்டப்பட்ட' அறிவுஜீவிகளையும்;

அடையாளம் கண்டு அம்பலப்படுத்தும் பணியை, கமல் ரசிகர்கள் செய்தால், தமிழ்நாட்டின் மீட்சி வரலாற்றில் கமல்ஹாசன் நிச்சயம் இடம் பெறுவார்.

காஷ்மீரில் கடந்த வருடம் வெள்ளம் சூழ்ந்த போது, இந்திய‌ இராணுவத்தின் மீட்பு முயற்சிகளில், பொதுமக்க‌ள் மட்டுமின்றி, பிரிவினைக் குழுக்களின் ஆதரவாளர்களும் காப்பாற்றப் பட்டனர். இராணுவத்தின் அத்துமீறல்களை கண்டிக்கும், மனித உரிமைத் தலைவர்கள் எல்லாம், ஆயுதக் குழுக்களின் அத்து மீறல்களை இதுவரை கண்டித்தார்களா? இனிமேலாவது கண்டிப்பார்களா? இராணுவமாக இருந்தாலும், ஆயுதக்குழுக்களாக இருந்தாலும், அப்பாவி மக்களை துன்புறுத்துவதை கண்டித்தாக வேண்டும்.   

அத்தகைய பாரபட்சமற்ற போக்கில், கமல்ஹாசன் போன்றவர்கள் குரல் எழுப்பினால், அது  காஷ்மீர் மக்களின் துயரங்களை குறைக்க உதவும். ஊழலற்ற, பாரபட்சமற்ற போக்கில் செயல்பட்டு வரும் பிரதமர் மோடியால், வடகிழக்கு மாநிலங்களில், பிரிவினை போக்குகள் வலுவிழந்து, வளர்ச்சி நோக்கி, அம்மாநிலங்கள் பயணிக்கத் தொடங்கியுள்ளன. அந்த திசையில் காஷ்மீர் மக்களும் பயணிப்பதை ஊக்குவிக்க வேண்டும். தமிழ்நாடு அந்த திசையில் பயணிப்பதற்கு, தமிழக பா.ஜ.கவில் உள்ள தடைகளை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

சர்வதேச அரசியல் பொருளாதாரத்தில், ஆயுத/போதைப் பொருள் வியாபார முதலைகளின் நலன்களில், தனிநாடு, மனித உரிமை போராட்டங்கள் சிக்கி, பயங்கரவாதம் அச்சுறுத்தி வரும் சூழலில், மக்கள் நலனுள்ள அரசுகள் எல்லாம்;

சுதந்திரத்திற்கும், கட்டுப்பாட்டிற்கும் இடையில் கவனமாக பயணித்தாக வேண்டும்.
“Knowing that security is a prerequisite for freedom, a trade-off must be accepted in order to keep the people safe”. ( ‘Terrorism: Freedom vs. National Security’ ; http://newsactivist.com/en/news-summary/flacks-ethics-winter-2015/terrorism-freedom-vs-national-security )

அவ்வாறு இந்திய அரசு கவனமாக பயணிக்க வேண்டுமானால்;

வெளிநாட்டு நிதி உதவியில், மக்கள் பிரச்சினைகளை பகடைக்காய்களாக்கி பயணிக்கும் அமைப்புகளையும், தலைவர்களையும் அம்பலப்படுத்தும் பணியை, தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்கள் எல்லாம் பெரும்பாலும் தவிர்த்து வரும் நிலையில் (http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html), கமல்ஹாசன் போன்றவர்கள் செய்வது, நாட்டுக்கு நல்ல பலன் தருவதாக அமையும். பா.ஜ.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தேசியக் கட்சிகள் எல்லாம்,  பிராந்திய தீவிரவாதங்களுக்கு, சுயநல அரசியலில், துணை போகும் போக்குகளை எல்லாம், ஆதாரங்களுடன் சுட்டிக்காட்டி, கண்டிக்கும் பணியை, நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் செய்தாக வேண்டும். (‘Caution: BJP's support to strengthen the regional chauvinism, at the cost of the Indian unity?’; http://tamilsdirection.blogspot.in/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

Tuesday, July 25, 2017

தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (13)


சமூக‌ நச்சு விவசாயத்தின் வேலிகளாக, 'நச்சுப் புல்' மனிதர்கள்


‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம், தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரே அவர் பொருட்டு
எல்லார்க்கும் பெய்யும் மழை’ – ஔவையார்

சமூக விவசாயத்திற்கான சமூக நீராக,  சமூக ஆற்றல் (Social Energy) பயன்படுகிறது.

நல்ல சமூக விவசாயத்தில் சமூக ஆற்றலானது, நல்ல சமூக நீராகவும், சமூக நச்சு விவசாயத்தில், சமூக ஆற்றலானது, தீய சமூக நீராகவும் பயன்படுகிறது. நல்ல சமூக விவசாயத்தில், 'நெல்'லாக, நல்லின‌ மனிதர்களும், இயல்பில் பலகீனமான 'புல்'லாக சிற்றின மனிதர்களும், அந்த 'புல்' மனிதர்களில், 'நஞ்சாக' தீயின மனிதர்களும் இருப்பார்கள். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்  (Social Fibers & Social Bonds); https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html  )

'பொசிதல்'  என்றால், கசிதல் ஆகும்.

ஒரு நல்ல சமூகத்தில் நல்ல சமூக விவசாயமானது நடைபெறும்போது;

சமூக நீரில் பெரும் பகுதியை பெற்று வளரும், 'நெல்'களாக, நிறைய 'நல்' மனிதர்களும்;

'பொசிதல்' மூலம பலன் பெற்று, எண்ணிக்கையில் குறைவாகவே 'புல்' மனிதர்களும் இருப்பார்கள். அதிலும் 'நச்சுப் புல்' மனிதர்கள் இன்னும் குறைவாக இருப்பார்கள். தமிழ்நாடானது 1967க்கு முன் அவ்வாறு தான் இருந்தது; இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் நம்பத் தயங்கும் அளவுக்கு. (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தமிழ்நாட்டில் தமிழர்களில் இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம், 'திரிதல்' நோய்க்கு உள்ளாகி, சமூக நச்சு விவசாயத்தில் சிக்கி, 'நச்சுப் புல்களின்' ஆதிக்கத்தில்', 'நெல்' மனிதர்களை தேட வேண்டிய நெருக்கடியில், தமிழ்நாடு சீரழிந்துள்ளது. அகத்தில் சாதிப் பற்றுடன், புறத்தில் சாதி வேறுபாடற்ற தமிழர் பற்றுடன் 'காட்சி' தந்த, 'புல்' மனிதர்கள் எல்லாம், அந்த நெருக்கடியை வளர்த்து விட்டுள்ளார்கள். 

‘எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உற்சாகமாக நான் ஆராய்ந்து வரும் சொற்கள் 'இயல்பு', மற்றும் (திராவிடக் கட்சிகளின் 'தமிழர்', 'திராவிடர்', 'திராவிட', குழப்பங்களுக்குள்ளாகியுள்ள,) 'இனம்' போன்றவையாகும். தொல்காப்பியம், திருக்குறள் உள்ளிட்டு பழந்தமிழ் இலக்கியங்களில், இந்த சொற்கள் இடம் பெற்றுள்ள பகுதிகள், என்னை மிகவும் ஈர்த்து வரும் பகுதிகளாகும்.

உதாரணமாக 'இயல்பு' என்ற சொல் கீழ்வரும் திருக்குறளில் இடம் பெற்றுள்ளது.

இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை -  திருக்குறள் - 47

இல்வாழ்க்கையின் பண்பும் பயனும் பற்றி கீழ்வரும் திருக்குறள் விள‌க்குகிறது.

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது  -திருக்குறள்  - 45

இன்று தமிழ்நாட்டில் உள்ள‌ குடும்பங்கள் பற்றி, எனது அறிவு, அனுபவ அடிப்படையில், என்ன 'பண்பும் பயனும்' உள்ளன? என்றும் ஆராய்கிறேன். அப்பா, அம்மா, கணவன், மனைவி, சகோதரன், சகோதரி, மகன், மகள் உள்ளிட்ட குடும்ப உறவுகளில், எந்த அளவுக்கு 'அன்பும் அறனும்' செல்வாக்கு செலுத்துகின்றன‌? என்பதும், அந்த ஆராய்ச்சியில் அடக்கம். 'அன்பும் அறனும்' பலகீனமாகி, குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனித உறவுகளில், 'லாப நட்டம்' பார்த்து பழகும் 'பண்பும்', அதன் மூலம் கிடைக்கும் 'செல்வம், செல்வாக்கு' ஆகிய பயன்களும் பெறுவது என்பதும், 'வாழ்வியல் புத்திசாலித்தனம்' ஆகிவிட்டது.’ (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_11.html )

சீரழிவின் உச்சக்கட்டமாக;

தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF    ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.htmlஆங்கில வழிக் கல்வி மேற்கத்திய மோகத்தில், அரங்கேறி வரும் தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழின் தகவல் பரிமாற்ற வலிமையானது சீரழிவதும், திரைப்பட நகைச்சுவை காட்சிகளுக்கு மூலமாகி (Sources) வருகின்றன. பொதுவாழ்வில் எளிமையின் இலக்கணமாக போற்றப்படும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, ஜெயலலிதாவின் மர்மமான மருத்துவ சிகிச்சை/மரணம் பற்றியும், கிரானைட் ஊழல் பற்றியும் மூச்சு விடாமல், முதல்வராக முனைந்த சசிகலாவை சந்தித்து ஆதரவு தெரிவித்து, அந்த திரைப்படத்திற்கான கோமாளிகள் வரிசையில் இடம் பெற்றுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html  )

இன்று 'சமூக நச்சு அறுவடையை' சந்தித்துள்ள தமிழ்நாட்டில், அடுத்த சமூக விவசாயம் தொடங்க உள்ள கட்டத்தில்;

மேலே குறிப்பிட்ட திரைப்படத்திற்கான நகைச்சுவை காட்சிகள் அரங்கேறிவருகின்றன.

‘1944-இல் திராவிடர் கழகம் உருவான பின், பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் ஆனவை, உணர்ச்சிபூர்வமாக தடம் புரண்டதன் காரணமாக, எவ்வாறு திராவிட மனநோயாளித்தனம் உருவாகி;

வசதியில் குறைந்த நிலையில் வாழும் 'இயல்பில் திரிந்தவர்கள், 'குறுக்கு வழியில்' வசதியாக வாழ‌, 'வாய்ப்பு'க் கிடைத்தால், எவ்வளவு இழிவாக வாழ்வார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள, 'திருச்சி பெரியார் மையம்'  உள்ளிட்டு,  இது போன்ற பல அனுபவங்கள், 'மதிப்பு வாய்ந்த' உள்ளீடுகளாக (Valuable inputs) அமைந்தன,’ (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

இன்று தமிழ்நாடு சந்தித்து வரும் சமூக நச்சு விவசாய அறுவடையின் தோற்றுவாயாக, தமிழில் 'இனம்' திரிந்து, 1944-இல் சமூக ஆற்றலானது, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில், சமூக நச்சு விவசாயத்திற்காக, காலனிய சூழ்ச்சியில், திசை திருப்பப்பட்டதா? என்ற அறிவுபூர்வ விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது.

‘திறமைமிக்க விவசாயிகள் விதையையும், அதை விதைத்து பராமரிக்கும் முறையையும் வைத்தே, அறுவடை எப்படி இருக்கும்?  என்று கணித்து விடுவார்கள். அது போல சமூகத்தில் புதியவை முளைவிட்டு, வளரும் போக்கானது, அதற்கான 'அறுவடையில்' முடிவதைத் தடுக்க முடியாது………………..இயற்கையில் 'அறுவடை' முடிந்தபின், அடுத்த விவசாயத்திற்கான விதைகள் தயாராகி விடும். மனிதர்கள் தொடர்பின்றி, வளரும் காடுகளிலும் முதிர்ந்த மரங்கள் மரணமடையும் போது, புதிய மரங்கள் வளர்ந்து காடுகளை அழியாமல் காக்கும் இயற்கையும் அப்படியே.

அப்படியென்றால், தமிழ்நாட்டில் முளை விட்டுக்கொண்டிருக்கும் 'புதிய விதைகள்' யாவை? அவற்றில் 'நல்ல விதைகள் யாவை? நச்சு விதைகள் யாவை? நச்சு விதைகளை அடையாளம் கண்டு, முளையிலேயே அகற்றாவிட்டால், தமிழ்நாடு மீண்டும் ஒரு நச்சு அறுவடையை சந்தித்தாக வேண்டும். அந்த நச்சு  அறுவடை நடைபெறும்போது, தமிழும், பாரம்பரியமும்,பண்பாடும் தமிழர்களிடையே மறைந்து, தமிழ் வேரற்ற தமிங்கீலிசர்கள் நாடாக தமிழ்நாடு மாறி விடும். தமிழ்நாட்டில் அறிவிலும், உழைப்பிலும், பிற மாநிலத்தவர் செல்வாக்குடன் வாழ, அவர்களை நத்தி பிழைக்கும் தரகர்களும், திருடர்களுமாக அந்த வேரற்ற தமிங்கீலிசர்கள் வாழ்வார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

எனவே நல்ல விதைகளாக வாழும் 'நெல்' மனிதர்கள் எல்லாம், மிகுந்த எச்சரிக்கையுடன் வாழ வேண்டிய கட்டம் இதுவாகும்; மீண்டும் தமிழ்நாட்டில் சமூக நச்சு விவசாயம் தொடங்குவதை, தடுக்க வேண்டும் என்றால்.

தமிழ்நாட்டில் தமதளவில் மனசாட்சிக்கு கட்டுப்பட்டு, நேர்மையாக வாழ்பவர்கள் எல்லாம் எச்சரிக்கையுடன் வாழவில்லையென்றால், அந்த 'கவனக் குறைவுக்கு' விலையாக, நம்ப முடியாத இழப்புகளை சந்தித்தாக வேண்டும். அவ்வாறு 'அனுபவித்து', மிகுந்த எச்சரிக்கையுடன் வாழும்போதும், வித்தியாசமான சிக்கலையும் சந்திக்க நேரிடுகிறது.

ஊழல் மூலம் அதிக வருமானம் ஈட்ட வாய்ப்பிருந்தும், நேர்மையாக பணியாற்றி வருபவர்களையெல்லாம் மதித்து, நமது சமூக வட்டத்தில் அனுமதிப்பதிலும் ஆபத்து இருக்கும் நாடாக, தமிழ்நாடு சீரழிந்துள்ளது.

அவர்களில், பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு இருப்பவர்களை, நமது சமூக வட்டத்தில் அனுமதித்தால், அதன் விளைவாக, நல்ல 'நெல்' மனிதர்களாக வாழும் நம்மைப் போன்றவர்கள் எல்லாம், அந்த 'சமூக நச்சு' வாடையில், 'மலட்டு விதைகளாக' மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

‘மேல் நடுத்தட்டு, பணக்காரர்களில் பெரும்பாலோர், 'காரியம் சாதிக்க' தமக்கு வாய்த்திருந்த 'செல்வாக்கு' நபர்கள் எல்லாம், 'கோமாளிகளாக' வலம் வருகையில், அந்த நகைச்சுவைகளை ரசிக்க முடியாத அளவுக்கு,  காரியம் சாதிக்க அடுத்து நமக்கு யார் 'செட்' ஆவார்கள்? என்ற தேடலில்,  குழம்பி தவிக்கிறார்களா?

நமது குடும்பப்பிள்ளைகளை நல்ல பள்ளியில்/கல்லூரியில் சேர்க்க வேண்டுமே?
 +2 தேர்விலும், அடுத்து அடுத்து வரும் தேர்வுகளிலும், கமுக்கமாக வெளியில் தெரியாமல், குறுக்கு வழிகளில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமே?

அதே போல அரசு வேலைகள் அல்லது நல்ல தனியார் கம்பெனிகளில், குறுக்கு வழிகளில்,வேலை பெற வேண்டுமே? என்பது போன்ற இன்னும் பலவற்றில் மூழ்கி;

ஊழல் சாம்ராஜ்யத்தில் மவுலிவாக்க அடுக்குமாடிகள் மழையில் விழுந்தால் என்ன?
ஏரிகள், ஆறுகள், தாதுமணல், கிரானைட், ஆற்று மணல் கொள்ளை போனால் என்ன?
கொலை, கொள்ளை, ஊழல் குற்றவாளிகள் தப்பிக்க துணை போனால் என்ன?

அத்தகையோரின் செல்வாக்கு நமக்கு லாபம் என்றால், நல்லது தானே;

என்ற மன நிலையில் வாழ்பவர்கள் எல்லாம், பெரும்பாலும் 'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவுமே இருக்கிறார்கள்; பொதுவாழ்வு வியாபாரிகளின் சமூக முதுகெலும்பாக வாழ்ந்து கொண்டு.

இவ்வாறு ‘புத்திசாலித்தனமாக(?) வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், வெளியில் சொல்ல முடியாத, வெவ்வேறு வகையிலான தண்டனைகளையும் அனுபவிக்கத் தொடங்கியுள்ளார்கள்; தமிழ்நாட்டிற்கு பெரும்பாலும் புதிதாக; 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமானதன் பலனாக.’ (http://tamilsdirection.blogspot.com/2017/07/blog-post_16.html )

'திராவிட' அரசியல் கொள்ளைக்காரர்கள் எல்லாம், தேசிய, இந்துத்வா, கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களான‌ அடிவருடிகள் துணையுடன் முன்னெடுத்த சமூக விவசாயத்தின் வேலிகளாக வலம் வரும்;

உணர்ச்சிபூர்வ கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், ஆகிய‌ 'நச்சுப்' புல் மனிதர்களை எல்லாம்;

நல்ல 'நெல்' மனிதர்களாக வாழ்பவர்கள், தத்தம் சமூக வட்டத்தில், அவர்களை அனுமதித்தால்;

அந்த 'சமூக நச்சு' வாடையில், அந்த சமூக வட்டமே, 'மலட்டு விதைகளாக' மாறிவிடும் ஆபத்தும் இருக்கிறது.

'எந்த வழியிலாவது மேல்தட்டு' வாழ்க்கைக்கு ஏங்கும் நடுதரவாசிகளாகவும், மேல் தட்டு, பணக்காரர்களுமாகவும் இருப்பவர்களில் பலரும் அந்த வகையில் சமூகத்திற்கு ஆபத்தானவர்களே ஆவர். தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, வருத்தம் கூட‌ தெரிவிக்காமல், அதனையும் மறைத்து, தமிழ்வழிக்கல்வி புரவலராகவும், ஆதரவாளராகும் வலம் வருபவர்கள் எல்லாம், மிகுந்த ஆபத்தான, வீரியம் மிக்க நச்சு விதைகள் ஆவர்.

மாறாக, தமிழ்வழிக் கல்வி ஆதரவாளர்களாக இருந்துகொண்டு, தமது குடும்பப் பிள்ளைகளை அரசு அல்லது அரசு உதவி பெறும் தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைத்தவர்கள் எல்லாம், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நல்ல விதைகள் ஆவர்; இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்ட‌ எந்த கொள்கையின் ஆதரவாளராக இருந்தாலும்.

‘நடுத்தர ஏழை மக்கள் மட்டத்தில் தொடங்கி, இன்று சசிகலாவை குவியமாகக் கொண்டு, 'சுனாமியாக' வளர்ந்துள்ள 'குடும்ப அரசியல் ஊழல் எதிர்ப்பு அலையை' உணர்ந்து, 'படித்த தமிழர்கள்' எல்லாம் அந்த அலையோடு, தமிழின், தமிழரின் அடையாள 'காவி மீட்பு'  நோக்கில், நெறிப்படுத்தும் வாய்ப்பினை தவற விட்டால், தமிழ் 'இன்னொரு பாலி' மொழியாகி (https://en.wikipedia.org/wiki/Pali  );

தமிங்கிலீசர்கள் (பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும்) வாழும் நாடாக, தமிழ்நாடு சீரழியும் வாய்ப்பும், எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.(‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html   )

சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், சீரழிவுக்கான 'வித்துக்களை', திறந்த மனதுடன் தேடி அழிக்க தயங்கினால், மீட்சிக்கு வழியில்லை என்பதும், கவனிக்கத் தக்கதாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2017/04/depoliticize12-social-energy.html )

இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்ட‌ எந்த கொள்கையின் ஆதரவாளராக இருந்தாலும், தனது அளவிலும், தனது சமூக வட்டத்திலும் தீய போக்குகளுடன் சமரசமாகி, வெளியே 'வீரர்களாக' விதை, பேச்சு, எழுத்து மூலமாக வலம் வந்தவர்களே, சமூக நச்சு விவசாயத்தின் முதுகெலும்பாக பங்களித்து வருகிறார்கள்; 

அடி மட்டத்தில் (Micro level), தாம் பிறந்த, வாழ்ந்த/வாழும், பணியாற்றும் இடங்களில், தம்மை அருகில் இருந்து கவனிக்கும் வாய்ப்புள்ளவர்களிடம், த‌மது 'சுயரூபம்' அம்பலமாயிருந்தாலும், அதனால் பாதிப்பின்றி, மேல் மட்டத்தில் (Macro level)  மீடியா வெளிச்சத்துடன் வலம் வந்து கொண்டு. ‌(‘Why Karl Marx on castes in India, Noam Chomsky on Nandigram and Amartya Sen on Modi, were wrong?’ ; http://veepandi.blogspot.com/2017/06/why-karl-marx-on-castes-in-india-noam.html 

அடி மட்டத்திற்கும், மேல் மட்டத்திற்கும் இடையில் இருந்த தடையானது (insulation), சாதாரண மக்களிடம் நீங்கி, 'நிர்வாணமாகி' வரும் கட்சிகளும், தலைவர்களும், 'ஆதாய தொண்டர்கள்' மூலம் பயன்படுத்திய 'அமாவாசை திரையும்' (http://tamilsdirection.blogspot.in/2017/04/1967.html), ஜெயலலிதாவின் மரணத்தின் மூலம் கிழிந்து, 'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற திரைப்படத்திற்கான, சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.( https://tamilsdirection.blogspot.com/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html  )

‘எந்த கட்சியும் கொள்கையும் சாராத, சாதாரண மக்களிடம் வெளிப்படும் 'சுயலாப நோக்கற்ற'  இயல்பான அன்பு, நேர்மை போன்றவை, ஒப்பீட்டளவில், கட்சி/கொள்கை ஆதரவாளர்களிடம் குறைவு என்பதும் எனது அனுபவமாகும். அது எந்த அளவுக்கு ‘அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்குடன் தொடர்புடையது? 'கொள்கைக்காக' மனிதர்களை மதித்த காலம் மாறி, ‘அரசியல் நீக்கம்' போக்கில், அவர்களை எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக', சாதாரண மக்களில் பெரும்பாலோர் கருதுகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.’(https://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.htmlபொதுவாழ்வு வியாபாரத்திற்கான சமூக ஆற்றலானது, சாதாரண மக்களிடமிருந்து (சமூக ஆற்றல் மூலங்கள்) வெளிப்படுவதானது, வற்றி வருகிறது.

மீட்சிக்கான நல் விதைகளாக வாழும் மனிதர்கள் எல்லாம், சமூகத்திற்கு கேடான நச்சு விதைகளாக வாழ்பவர்களை எல்லாம், தத்தம் சமூக வட்டத்தினின்று அகற்றினால்;

சமூக நீரின்றி, அந்த நச்சு விதைகள் எல்லாம் தாமாகவே அழிந்து விடுவார்கள்.

சமூகத்தில் 'நல்லார்' பெருகினால் தான், தமிழ்நாட்டில் எல்லார்க்குமான 'மழை பெய்யும்'. மழை நீர் கேகரிப்புகளான ஏரிகள், குளங்கள், ஆறுகள் எல்லாம் 'ஊழல்' தீயினத்தின் பிடியிலிருந்து மீளும். தமிழ்நாட்டில் நீர் வறட்சியும், 'நல்' மனிதர்கள் வறட்சியும் நீங்கும்.

Friday, July 21, 2017

'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படம்:

கமலஹாசன் நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? (1)


தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF   ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.

'it’s a Mad Mad Mad Tamilnadu'  என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html   )

அவ்வாறு அரங்கேறிவரும் போக்கில், அந்த திரைக்கதைக்கு கூடுதலாக வலு சேர்க்கும் வகையில், நடிகர் கமலஹாசன் உள் நுழைந்திருக்கிறார்.

அதில் அவரின் பாத்திரமானது நடுவில் காணாமல் போய்விடும் காமெடியனா? அல்லது கதாநாயகனா? என்பதை தெளிவுபடுத்தும் சம்பவங்கள் அடுத்து அரங்கேற உள்ளன?


அதில் கமலஹாசனின் கீழ்வரும் கவிதையும் இடம் பெற வாய்ப்புண்டு.


மேலே குறிப்பிட்ட கவிதை தொடர்பாக;
எச்.ராஜாவின் கீழ்வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாகும்.
‘செய்தியாளர்களிடம் பேசிய எச். ராஜா, அரசின் மீது நடிகர் கமலஹாசன் மட்டும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கும் விமர்சிக்கும் உரிமை உள்ளது என்றார். தொடர்ந்து பேசிய அவர், அரசியலுக்கு வருவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு, முதல்வராக கனவு காண்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு என்றார்.
ஆனால் கமல் முதல்வராக தகுதி உள்ளதா? ஏனெனில் விஸ்வரூபம் படம் வெளியிடும்போது பல அமைப்புகள் போராட்டம் நடத்தியதற்கு பயந்து நடுங்கி அழுதார், நாட்டை விட்டே செல்கிறேன் என்று கூறினார்.
இதற்கே இப்படி செல்கிறார் என்றால் இவர் முதல்வரானால் ஏதாவது ஒரு பிரச்சினை என்றால், அதை சமாளிக்க முடியாமல் வெளிநாட்டுக்கே சென்று விடுவார். அதன் பிறகு தமிழ்நாட்டு மக்களின் கதி என்ன? கமல் ஒரு முதுகெழும்பே இல்லாத கோழை. முதுகெலும்பு அற்றவர் முதல்வராக ஆசைப்படக்கூடாது என்றும் எச். ராஜா கூறியுள்ளார்.’ ( http://tamil.oneindia.com/news/tamilnadu/h-raja-hits-hard-on-kamal-haasan/articlecontent-pf253113-290060.html )
கமலஹாசனுக்கு ஆதரவு என்ற பெயரில், எச்.ராஜாவை உணர்ச்சிபூர்வமாக கண்டித்தவர்களில், எவராவது, மேலே குறிப்பிட்ட கருத்தினை, அறிவுபூர்வமாக மறுத்திருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன், அதனை ஆய்வுக்கு உட்படுத்த இயலும். 'எச். ராசாக்களுக்கு வயிற்றுப் போக்கை', கமலஹாசன் ஏற்படுத்தியுள்ளதாக 'கண்டுபிடித்து', சசிகலா அரசியல் கும்பலுடன் சேர்ந்து பயணித்த நபர்களை எல்லாம் குறிப்பிட்டு, அவர்களுடன் 'கூடி பேசி, கூட்டாக இயங்க முயற்சிக்கலாம்' என்று சுப. உதயகுமாரன் என்பவர் ஆலோசனை கூறும் நகைச்சுவை காட்சியும் அரங்கேறி வருகிறது. (http://tamil.oneindia.com/news/tamilnadu/sp-udayakumaran-comments-on-actor-kamal-hassan/articlecontent-pf253523-290360.html )

கமல்ஹாசன் இனி விரும்பினாலும், பின் வாங்க முடியாத திசையில் பயணிக்க தொடங்கி விட்டாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தி எழுப்பியுள்ளது.
‘கமல் ஹாஸன் ட்விட்டரில் அரசியல் பேச ஆரம்பித்தார். தமிழக அரசுக்கு எதிராக பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார் கமல். அரசின் அமைச்சர்கள் கமலுக்கு எதிராக களமிறங்கி, ஆதாரம் காட்டுங்க என்று கேட்டதும், கமல் எந்த ஆதாரமும் தரவில்லை. மாறாக ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்துள்ளார். அடுத்து இன்று நீட் தேர்வின் கொடுமை, டெங்கு காய்ச்சலைத் தடுக்க முடியாதது என பிரச்சினைகளைக் கையிலெடுத்து, இந்தப் பிரச்சினகளைத் தீர்க்க முடியாத தமிழக அரசு விலகிக் கொள்ளட்டும் என ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதன் மூலம் மக்கள் பிரச்சினைகளை தொடர்ந்து கமல் பேசப் போகிறார் என்பது உறுதியாகியுள்ளது. ‘

தமிழக அரசின் ஊழல் தொடர்பான‌  ஆதாரங்களைத் திரட்டி அரசுக்கு அனுப்புங்கள் என்று கமலஹாசன் தன் ரசிகர்களிடம் வேண்டுகோள் வைத்தபின்;
யார்? யார்? என்னென்ன ஆதாரங்களை, எந்த வழிகளில் சேகரித்து அனுப்பினார்கள்? அவை தொடர்பாக, அடுத்து என்ன மேல் நடவடிக்கைகளுக்கு கமலஹாசன் திட்டமிட்டுள்ளார்? அவற்றை தொகுத்து எம்.ஜி.ஆரை போல, ஆளுநரை சந்தித்து புகார் பட்டியலை ஆதாரங்களுடன் கொடுத்து, சர்க்காரியா கமிசன் அமைக்கும் நெருக்கடியை எம்.ஜி.ஆர் உருவாக்கியது போல, தொடர்ந்து, தொடர் நடவடிக்கைகளில் ஈடுபடப்போகிறாரா? அல்லது சிவாஜியைப் போல தேர்தலில் ஆழம் தெரியாமல் காலை விட்டு, அசிங்கப்படப் போகிறாரா?
என்பதை, அடுத்து அரங்கேற உள்ள காட்சிகள் தெளிவு படுத்தும்.
இன்று கமலஹாசன் பேசும் வசனங்களை, ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, ஏன் பேசவில்லை? கீழ்வரும் கேள்விகளை ஏன் கேட்கவில்லை? என்று கமலஹாசன் மீது, நான் குற்றம் சுமத்தப் போவதில்லை.
1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;
கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:
'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;
மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;
அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?
மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா?
மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு, கமலஹாசன் மட்டுமல்ல;
நான் உள்ளிட்டு தமிழ்நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் ஒவ்வொருவரும், தத்தம் மனசாட்சிக்குட்பட்டு,விடைகள் கண்டு, நேர்மையாக பயணிக்க துணை புரியும் கேள்விகள் அவையாகும்.
‘பாரதி வழியில் (‘உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும், அச்சமில்லை’) வாழ்வதை விட, திருக்குறள்('அஞ்சுவது அஞ்சாமை பேதமை' ;428) வழியில் வாழ்வதை, பகிரங்கமாக ஒத்துக் கொண்டு யார் வாழ்ந்தாலும், அது பாராட்டுதலுக்குரியதே ஆகும். …..‘'அரசனைப் பார்த்த மாத்திரத்தில் எல்லோர் முன்பும் கைக்கொட்டிச் சிரித்தானே, அந்தச் சிறுவனை நான் தேடிக்கொண்டிருக்கிறேன்!' என்று வாஸந்தி தெரிவித்துள்ள கருத்தானது;
ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை பற்றியும், ஜெயலலிதாவின் மரணம் பற்றியும், எழுத பயப்படும் எழுத்தாளர்களுக்கும், இதழ்களுக்கும் சரியாக இருக்கலாம். தமிழ்நாட்டில் மேல் நடுத்தர, வசதியான குடும்பங்களிலும் பலர் இருக்கலாம். 
ஆனால் சாதாரண மக்களிடையிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும், 'கைக்கொட்டிச் சிரிப்பதானது', மிக பலமாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. ( https://en.wikipedia.org/wiki/The_Emperor's_New_Clothes )
பா.ஜ.க உள்ளிட்ட தேசிய, திராவிட கட்சிகளும், தலைவர்களும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு நீதி விசாரணை கோராமல், ஒதுங்கியுள்ள சூழலில்; 'ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம்' என்று சொன்னவர்கள், 'ஆதாயம்' பெற்று அடங்கி வரும் சூழலில்; ‘ (http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_12.html )
கமலஹாசனாயிருந்தாலும், ரஜினியாயிருந்தாலும், பா.ஜ.கவாக இருந்தாலும், தமிழ்நாட்டில் உருவாகியுள்ள அரசியல் வெற்றிடத்தை நோக்கி பயணிப்பவர்கள் எல்லாம்;
அடிமட்டத்தில் தமிழ்நாட்டின் நிலையை விளங்கி, திட்டமிட, கீழ்வருவது துணை புரியலாம். ஜெயலலிதா மறைவிற்குப் பின்னும், சட்டமன்றத்திலும், பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள இயலாத அளவுக்கு, உடல்நலக் குறைவில், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதியும் சிக்கி உள்ள நிலையில்: 
கீழே குறிப்பிட்டுள்ள, அந்த இரண்டு கட்சிகளின் வலைப்பின்னல்கள் எல்லாம், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும்' பேராசையில், ஆட்டம் கண்டு வரும் போக்கில்; 
எனது அறிவு, அனுபவம் அடிப்படையில், எந்த முறையில் தமிழ்நாட்டு அரசியலில் தலை எடுத்து, ஆட்சியை பிடிக்க முடியும்? என்று கீழே உள்ள பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்.
‘அண்மையில் வெளிவந்து, அபார வெற்றி பெற்றுள்ள, 'பாபநாசம்' திரைப்படம் உணர்த்தும், சிற்றினம் தொடர்பான, 'சிக்னல்' வருமாறு.
நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த பள்ளி மாணவியை 'ஆபாசமாக' படம் எடுத்து, மிரட்டி, தனது காமத்துக்கு, தீனீயாக்க முயற்சிக்கிறான், போலீஸ் ஐ.ஜி.யின் மகன்.அத்திட்டத்தை அக்குடும்பம் எவ்வாறு முறியடித்தது? என்பதை, அற்புதமாக வெளிப்படுத்தியுள்ள திரைப்படம் அது. நடைமுறையில் அச்சிக்கலை சந்திக்கும் குடும்பங்களில், எத்தனைக் குடும்பங்களின் பெற்றோர்கள், தமது மகளை, 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள தூண்டி, தமது செல்வத்தையும், செல்வாக்கையும் அதிகரித்துக் கொள்வார்கள்? அது போன்ற போக்கில் வாழும் 'வாழ்வியல் புத்திசாலிகள்'(?) தான், தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களின் சமூக முதுகெலும்பா? தமிழ்நாட்டில் அந்த போக்கானது, 'அபரீதமாக' அதிகரித்து வருவதே, அதற்கு எதிர்நீச்சல் போட்ட 'பாபநாசம்' வெற்றி பெற காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944இல் முளைவிட்ட அடையாளச் சிதைவின் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளை, மனசாட்சியின்றி, 'பணம், செல்வாக்கு, சம்பாதிக்க', திராவிட மனநோயாளித்தன போக்கில், 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' காவு கொடுக்கும் 'சிற்றினம்' ஆனது, இன்று தமிழ்நாட்டில் உச்சக்கட்ட செல்வாக்குடன் உள்ளதா? உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ விரும்பும்  சாதாரண தமிழர்களின் வாழ்வுரிமைகளை பாதுகாக்கும் வலிமையை, அந்த சிற்றின மனிதர்களின் சுயநலத்திற்காக, அரசும், சட்டமும் இழக்கும் அளவுக்கு சீர் குலைத்துள்ளார்களா? ‘  (http://tamilsdirection.blogspot.sg/2015/07/normal-0-false-false-false-en-us-x-none_9.html )
‘1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. 
பிறப்பு சான்றிதழ், பள்ளியில் சேர்த்தல், சாதி சான்றிதழ், வேலையில் சேர்தல், தொழில்/கடை தொடங்குதல், தெரு ஓரம் வியாபாரம், இறப்பு சான்றிதழ், காவல் நிலையம், நீதிமன்றம் என்று ஒரு மனிதர் பிறந்தது முதல் இறக்கும் வரை, இறந்து இறுதி சடங்கை நிறைவேற்றும் வரை, அந்தந்த காரியங்களுக்கு உதவும்  'செல்வாக்கான' நபரின்,  தயவு தேவைப்படுகிறது.
அப்படிப்பட்ட 'செல்வாக்கான' நபர்கள் தெரு/கிராமம். வட்டம், மாவட்டம், மாநிலம் என்ற அடிப்படையில் வலைப்பின்னல் கொண்ட இரண்டு கட்சிகள் தி.மு.க மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகும். அந்த கட்சிகள் தேர்தலுக்கு செலவழிக்கும் பணத்தை போல், பல மடங்கு பணத்தை வைத்திருக்கும் கட்சி கூட, அது போன்ற வலைப்பின்னலின்றி, அந்த பணத்தை வாக்குகளாக மாற்ற முடியாது…….. ஊழல் பெருச்சாளிகள் தண்டிக்கப்படாமல், மேலே குறிப்பிட்ட ஊழல் வலைப்பின்னலிலிருந்து, தமிழ்நாட்டை மீட்க முடியாது. அவ்வாறு மீட்காமல், வாக்குகளுக்கு பணம் கொடுப்பதையும், வாங்குவதையும் ஒழிக்க முடியாது. நமது குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட சமூக வட்டத்தில் உள்ளோர், 'அந்த வலைப்பின்னலில்' இடம் பெற்று, நாமும் அதன் மூலம் பலன் பெற்று வாழ்ந்து கொண்டு, 'வாக்குக்கு பணம் வாங்குவது தவறு' என்றும், 'வாக்களிக்காதது தவறு' என்றும் சொல்லும் அருகதை நமக்கு உண்டா? எனவே மேலே குறிப்பிட்ட ஊழல் செயல்பாடுகளை ஒழிக்காமலும், அடிமட்டத்தில் உள்ள பொதுப்பிரச்சினைகளில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொடர்ந்து துணை புரிந்து, அப்பிரச்சினைகளை தீர்ப்பதில் தமக்குள்ள சுயலாபநோக்கற்ற சமுக அக்கறையை நிரூபிக்காமலும், பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியும், இனி தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாது.’(http://tamilsdirection.blogspot.sg/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html