Saturday, November 28, 2020

 

தமிழ்நாட்டின் சமூக முதுகெலும்பினை முறித்த கருணாநிதியும் பிரபாகரனும் சசிகலாவும்;


'பெரியார்' மண்ணுமல்ல; 'இந்துத்வா' மண்ணுமல்ல; 'தமிழ் மண்'ணுமல்ல;


தமிழ்நாடு 'நோஞ்சான் மண்'?

 

தமக்கும் தமது குடும்பத்துக்கும் ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறு நீதி என்று பயணிப்பவர்கள் எல்லாம், தனிமனித நேர்மை வழிகாட்டியில் (individual ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள் ஆவார்கள்.

பொது அரங்கில் பாராட்டுவதற்கும் கண்டிப்பதற்கும் தமக்கு பிடித்த தலைவர்களுக்கு ஒரு அளவு கோல், தமக்கு பிடிக்காத தலைவர்களுக்கு வேறு அளவு கோல், என்று பயணிப்பவர்கள் எல்லாம் சமூக நேர்மை வழிகாட்டியில் (social ethical compass) இருந்து தடம் புரண்டவர்கள் ஆவார்கள்.

1967இல் நடந்த ஆட்சி மாற்றத்தில், சமூக நேர்மை வழிகாட்டியை 'அறிவியல் ஊழல்' மூலமாக சீர் குலைத்து, தனிமனித நேர்மை வழிகாட்டியில் இருந்து தடம் புரண்டவர்களே ஆட்சியின் அரவணைப்பில் வளர முடியும், என்பதானது எழுதப்படாத விதியானது.( https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_25.html)

அவ்வாறு தடம் புரண்டவர்கள் எல்லாம் சமூக முதுகெலும்பு முறிந்தவர்களே ஆவார்கள். எனவே கருணாநிதியின் குடும்ப அரசியல், சசிகலா நடராஜனின் குடும்ப அரசியல், விடுதலைப்புலிகளின் தமிழ்நாட்டு அரசியல், போன்ற பின்புல வலிமையுடன் தான் அவர்களால் எந்த பிரச்சினையிலும் போராட முடியும். 

உதாரணமாக, கடந்த மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இன்று அதே தவறு மோடி ஆட்சியில் வெளிப்பட்டால், தமிழ்நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கும்.

கீழடி முதல் கேந்திர வித்யாலயாவில் தமிழ் வரை மன்மோகன் சிங் - தி.மு. கூட்டணி ஆட்சி காலத்தில் மெளனமாக இருந்து விட்டு, அதை மறைத்து, முன்னெடுத்த 'மோடி எதிர்ப்பு' போராட்டங்களின் விளைவாக, மோடி அரசு சுதாரித்து, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்ல பலன்கள் கிடைத்து வருகின்றன. காங்கிரஸ் தி.மு. ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு கிடைத்த பலன்களோடு ஒப்பிடுவது 2021 தேர்தலில் குவியமாகி, பா.. அணி பெரிய வெற்றி பெற்றால், அதற்கு சமூக முதுகெலும்பு முறிந்து மோடி எதிர்ப்பில் பயணித்தவர்களின் பங்களிப்பானது முக்கிய இடம் பெறும். வரும் 2021 தேர்தலில் உதயநிதி தி.மு.கவின் கதையை முடித்து விடுவார்; என்ற எனது கணிப்பு சரியானால், அந்த பெரிய வெற்றி பிரமிக்க வைப்பதாகவும் வெளிப்படலாம். சசிகலா சார்பில் பா.. அணி பயணித்தால், 2021 தேர்தலானது 1952 தேர்தலைப் போலவே முடியும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_25.html)

அவ்வாறு தமிழ்நாட்டின் சமூக முதுகெலும்பினை முறித்த புண்ணியவான்கள்

கருணாநிதியும் பிரபாகரனும் சசிகலாவும் ஆவார்கள். அதனை எவ்வாறு செய்தார்கள்? என்பதை இங்கு சுருக்கமாகப் பார்ப்போம்.

1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்த பின் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது எவ்வாறு ஒடுக்கப்பட்டது? என்பதை அறிந்தவர்களுக்கு (https://tamilsdirection.blogspot.com/2020/08/1967-1967.html ),

அதே துணிச்சலில் தான் தமிழ்நாட்டின் பொது அரங்கில் சிவில் சமூகத்தின் முதுகெலும்பை முறித்தே, கீழ்வரும் துயர சம்பவங்கள் முதல்வர் கருணாநிதியின் ஆட்சியில் எவ்வாறு அரங்கேறின? என்பதும் விளங்கும்.

திருச்சி தெப்பக்குளம் அருகே இருந்த St.Joseph’s College-இன்   கிளைவ் மாணவர் விடுதிக்குள் போலீஸ் புகுந்து காட்டுமிராண்டித் தாக்குதல் நடத்தியதில் பல மாணவர்களின் கை கால்கள் உடைந்தன. அந்த விடுதியில் இருந்து கல்லூரி செல்லும் வழியில் ஒரு ஆளுங்கட்சி முக்கிய புள்ளியின் துணைவி (?) குடும்பம் இருந்தது. அந்த வீட்டில் இருந்த ஒரு இளம்பெண்ணை மாணவர்கள் சிலர் கேலி கிண்டல் செய்ததால், அந்த முக்கிய புள்ளியின் தூண்டுதலால் அந்த தாக்குதல் நடந்ததாகக் கேள்விப்பட்டேன்.

அதே காலக்கட்டத்தில், முதல்வர் கருணாநிதி 'டாக்டர்' பட்டம் வாங்க, அநியாயமாக அண்ணாமலைப்பல்கலைக்கழக மாணவர் உதயகுமார் பலியாகி, 'இறந்தது என் மகனல்ல' என்று அவரின் தந்தையை நீதி மன்றத்தில் சொல்ல வைத்த அநியாயம் அரங்கேறியது.

1967இல் தி.மு. ஆட்சிக்கு வந்த பின் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டமானது ஒடுக்கப்பட்ட மேற்குறிப்பிட்ட பாணியிலேயே, பொது அரங்கில்  தி.மு. ஆட்சிக்கு எதிரான விமர்சனங்களை தி.மு. ஆதரவாளர்கள் ஒடுக்கினர். 'யோக்கியமாக' வாழ்ந்த தி.மு.கவினர் எல்லாம் அதற்கு மெளன சாட்சிகளாயினர். எனவே தி.மு.கவை ஆதரித்தவர்கள் என்னைப் போன்றவர்களின் சமூக வட்டத்தில் இடம் பெறவில்லை, நான் 1970களின் பிற்பகுதியில் 'பெரியார்' ஆதரவாளராக மாறும் வரையில். அவ்வாறு 'பெரியார்' இயக்கத்தில் பயணித்ததன் மூலமாகவே, .வெ.ராவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பாதகமான 1944 சமூக மடைமாற்றம் பற்றிய கண்டுபிடிப்பும் வெளிப்பட்டது. (https://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

1971-இல் M.Sc முடித்து பணியில் சேர்ந்தது முதல் இன்றுவரை நான் பணியாற்றிய கல்லூரிகளில் நியாயத்திற்கான போராட்டத்தினை (சமூக முதுகெலும்புடன்) முன்னெடுத்தவர்கள் எல்லாம் என்னைப் போன்ற எந்த கட்சி அரசியலில் சிக்காதவர்களே ஆவார்கள்.

நானறிந்தவரையில் தமிழ்நாட்டில் முதல் முதலாக, 1970களின் துவக்கத்தில் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பிரமிக்கும் வகையில் சிறையை நிரப்பும் போராட்டத்தினை பள்ளி ஆசிரியர்கள் நடத்தினார்கள். போராடிய ஆசிரியர்களுக்கு நெருக்கமான சக பேராசிரியர்கள் என்னிடம் போராட்ட செய்திகளை அவ்வப்போது தெரிவித்தார்கள். போராட்டம் துவங்கியவுடனேயே, கருணாநிதி ஆட்சியில் அப்போராட்டம் வெற்றி பெறாது என்று (1967 மற்றும் 1968 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்கியதை அனுபவித்த‌) நான் கணித்ததை அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. கடைசியில் அரசின் ஒடுக்குமுறையைத் தாக்குப் பிடிக்க முடியாமல், மன்னிப்பு மடல் கொடுத்து சிறையில் இருந்த ஆசிரியர்கள் விடுதலை ஆனார்கள். அதன்பின் எம்.ஜி.ஆர் முதல்வராகும் வரை, அது போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை.

ஏம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசு கல்லூரிகளில் பணிபுரிந்த பேராசிரியர்கள் நெடுஞ்செழியன், சக்குபாய், பொன்முடி நான் உள்ளிட்ட இன்னும் சிலரும், பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்த பேரா.சபாபதி மோகன் உள்ளிட்ட பேராசிரியர்கள் எல்லாம் தி. மேடைகளில் முதல்வர் எம்.ஜி.ஆரை விமர்சித்து பேசினோம். எங்கள் மீது எந்த பழிவாங்கும் நடவடிக்கையும் முதல்வர் எம்.ஜி.ஆர் மேற்கொள்ளவில்லை. 1989இல் கருணாநிதி முதல்வரான போது, தி. கருணாநிதியை ஆதரித்ததால், எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் பா.. ஆதரவு பேரா. தீரன் முதல்வர் கருணாநிதியை விமர்சித்தபோது, பழிவாங்கும் நடவடிக்கைக்கு உள்ளாகி பணி நீக்கம் செய்யப்பட்டார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்று 3 முறைகளுக்கு மேல் நான் சிறை சென்றுள்ளேன்.  எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராட்டங்கள் அந்த கலைஞர் பாணியில் ஒடுக்கப்படவில்லை என்பதோடு, நாங்கள் பங்கேற்ற போராட்டங்களும், இட ஒதுக்கீட்டில் 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து, தி. உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெற்ற வெற்றிகளை, கலைஞர் ஆட்சியில் பெற்றிருக்க முடியாது. எளிதில் அப்போராட்டங்கள் கலைஞர் ஆட்சியில்  ஒடுக்கப்பட்டிருக்கும். ஆனால்   M.S.S. பாண்டியன் தமது 'M.G.Ramachandran in film and politics- The Image Trap’ நூலில் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தான் போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக கீழ்வருமாறு எழுதியுள்ளார்.

“Snuffed out even the mildest form of dissent from the working people, whether they were workers, poor peasants, or professionals, such as school teachers, and government employees”(page 12)

அந்த புத்தகம் இன்று வரை செல்வாக்குடன் வலம் வருகிறது, தி.மு. ஆதரவு இடதுசாரி முற்போக்குகளின் பாராட்டுடன்.

அதாவது தமிழ்நாட்டில் பொதுஅரங்கில் தமக்கு எதிரான போராட்டங்களை ஈவிரக்கமின்றி ஒடுக்கி, அநீதியைத் தட்டிக் கேட்கும் சமூக முதுகெலும்பினை முறித்த கருணாநிதியை ஜனநாயகவாதியாகவும், எம்.ஜி.ஆரை கொடுங்கோலனாகவும் சித்தரித்து, அந்த பிரச்சாரமானது செல்வாக்கு பெற்றது.

மேற்குறிப்பிட்ட M.S.S.பாண்டியன் பாணியில், 'பெருநிலக்கிழார்களின் முதுகெலும்பை திராவிட இயக்கம் உடைத்ததாகவும்' இன்று பிரச்சாரம் நடைபெறுகிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_26.html)

தமிழ்நாட்டில் சமூக முதுகெலும்பினை முறிக்கும் போக்கில் கருணாநிதியின் அறிவியல் ஊழல் வளர்ச்சியின் அடுத்த கட்டமாக, 1970களில் ஊழலின் ஒரு பகுதியாக ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது முளை விட்டு அதி வேகமாக வளர்ந்தது. அதன் விளைவாக, சமூக முதுகெம்பு முறியும் போக்கையும் தீவிரப்படுத்தும் வகையில், கீழ்வரும் சமூக நோய்களும் வளர்ந்தன.

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)

1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே, வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (https://tamilsdirection.blogspot.com/2016/07/fetna.html )

மேற்குறிப்பிட்டவாறு சமூக முதுகெம்பு முறியும் போக்கில் சிக்கிய தமிழ்நாட்டில், 1980களில் அரங்கேறிய ஈழ விடுதலை ஆதரவுப் போக்கானது, தனித்தமிழ்நாடு கனவுகளில் மிதந்த 'சமூக முதுகெம்பு முறிந்த சூரர்களை' எல்லாம் பிரபாகரன் மூலமாக அடையாளம் காட்டியது.

1980களில் பிரபாகரன் எதிர்த்த புளோட் உமா மகேசுவரனை பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் ஆதரித்தார்கள். பெரியாரிஸ்ட்களான கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களின் ஆதரவே விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பிரபாகரன் புளோட் உமா மகேசுவரன் உள்ளிட்ட பிற குழுக்களின் தலைவர்களையும் ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற போது, பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் அதை விமர்சிக்காமல் மெளன சாட்சிகளாகப் பயணித்து, பின் பிரபாகரன் தீவிர ஆதரவாளர்கள் ஆனார்கள். (‘பெரியார்', இந்துத்வா, முஸ்லீம், தலித், தமிழ்த் தேசியம், கிறித்துவ அமைப்புகளின் தலைவர்கள்; சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, ஊழலுக்கு உதவும் வெறுப்பு அரசியலை வளர்த்தார்களா?’; https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html)

ஈழ விடுதலை ஆதரவுப் போக்கானது, தனித்தமிழ்நாடு கனவுகளில் மிதந்த 'சமூக முதுகெம்பு முறிந்த சூரர்களை' எல்லாம் பிரபாகரன் மூலமாக அடையாளம் காட்டியதை,

கருணாநிதியின் பாசறையில் பயின்ற (சசிகலா) நடராஜன் பயன்படுத்தி, ஈழவிடுதலை மூலம் தமிழ்நாட்டை முட்டாளாக்கி, கருணாநிதியின் அறிவியல் ஊழலை அடுத்த கட்டத்திற்கு வளர்த்தெடுத்தார். கருணாநிதியின் அறிவியல் ஊழலில் தப்பித்திருந்த மலைகள், தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் மட்டுமின்றி, கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலமாக கங்கை அமரன், அமிர்தாஞ்சன், பாலு ஜிவல்லரி, .ஆர்.ரகுமான், தஞ்சாவூர் முஸ்லீம் பெரும்புள்ளி, முதல் சத்யம் தியேட்டர்ஸ் வரை  எண்ணற்ற தனியார்ச் சொத்துக்களும் ஊழல் பெரும்பசிக்கு இரையாகின.

தமிழ்நாட்டின் சமூக முதுகெலும்பினை முறித்த போக்கின் மூலமாக, 'தான் உழைக்காமல், உழைப்பின் மூலம் உயராமல், ஒரு தலைவரையே நம்பிப் பிழைப்பு நடத்தும் அரசியல் கலாச்சாரம்' ('துக்ளக்' 01 - 02 - 2017  கேள்வி - பதில்) அதிவேகமாக வளர்ந்ததும் பிரபாகரனின் வளர்ச்சிக்கு சாதகமானது.

தமிழ்நாட்டில், அவ்வாறு பிழைப்பு நடத்தும் தலைவர்களின் 'உதவியையும்' பெற்று பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கமாகும். உதாரணமாக, ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள காளிமுத்துவும்; (http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstatesm) அவ்வாறு விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம்.' (https://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html)

'2021 தேர்தலில் குவியமாகி, பா.. அணி பெரிய வெற்றி பெற்றால், அதற்கு சமூக முதுகெலும்பு முறிந்து மோடி எதிர்ப்பில் பயணித்தவர்களின் பங்களிப்பானது முக்கிய இடம் பெறும்.' என்பதைத் துவக்கத்தில் பார்த்தோம்.

அவ்வாறு சமூக முதுகெலும்பு முறிந்து மோடி எதிர்ப்பில் பயணித்தவர்களின் பங்களிப்பானது, அதே போக்கில் தொடருமானால், என்ன நடக்கும்? என்பதை அடுத்து பார்ப்போம்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_25.html)

1991 முதல் கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச் சொத்துக்கள் அபகரிக்கப்பட்ட போக்கானது, தமிழ்நாட்டின் சிவில் சமூகத்தை கேலிப்பொருளாக்கி வருகிறது.

சிவில் சமூகம் (Civil society) என்பது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள், சாதிகள், மதங்கள், மனித உரிமை, பெண் உரிமை போன்ற சமூகப் பிரிவுகளின் அடிப்படைகளிலான‌‌ அமைப்புகள், தொழிற்சங்கங்கள் போன்ற இன்னும் பல அமைப்புகளை.க் கொண்டதாகும். (Civil society includes charities, development NGOs, community groups, women's organizations, faith-based organizations, professional associations, trade unions, social movements, coalitions and advocacy groups.; https://www.who.int/social_determinants/themes/civilsociety/en/)

தங்களுக்கு எதிரான விமர்சனங்களை விலை போன ஊடகங்களின் துணையுடனோ அல்லது அச்சுறுத்தியோ இருளில் சிக்க வைப்பத்தில் கருணாநிதி, பிரபாகரன், சசிகலா ஆதரவாளர்கள் சங்கமமானார்கள். அந்த சங்கமத்தின் வலிமையில், தமிழ்நாட்டில் செல்வாக்குள்ள‌, படித்த வசதியுடன் வாழும் சிவில் சமூகமானது கோழையாக இருந்ததாலேயே, மேற்குறிப்பிட்ட தமிழக முதல்வரின் மர்மமான மருத்துவ சிகிச்சையானது பல மாதங்கள் நடந்து, மர்மமான மரணத்தில் முடிந்தது. சம்பிரதாயங்களுக்கும் பொது ஒழுக்கத்திற்கும் கேடான வகையில் இறுதிச்சடங்கும் நடந்தது.

ஜெயலலிதா இறந்தது முதல், சிறை செல்லும் வரை, எந்த அரசு பதவியிலும் இல்லாத சசிகலாவை தரிசித்த தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், அறிவுஜீவிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டவர்களில் எவராவது, சிறையில் இருக்கும் சசிகலாவை தரிசித்தார்களா? தரிசிக்கவில்லையென்றால், ஏன் தரிசிக்கவில்லை? சசிகலா தண்டனை காலம் முடிந்து வெளியே வந்து, மீண்டும் அதே செல்வாக்கினை வெளிப்படுத்த முடிந்தால், வெட்கமில்லாமல் மீண்டும் அவர்கள் எல்லாம் சசிகலாவை தரிசிப்பார்களா? 'அடுத்த முதல்வராவார்' என்ற நம்பிக்கையில், 'போட்டி போட்டு' ஸ்டாலினை இன்று தரிசிப்பவர்களில் யார், யார், அடுத்து வரும் பொதுத்தேர்தலில், ஆர்.கே.நகர் பாணியில் தி.மு. தோல்விகளை சந்திக்க நேர்ந்தால், ஸ்டாலினை கைவிட்டு, அடுத்த முதல்வராகும் வாய்ப்புள்ளவருக்கு 'வாலாட்டி' நெருக்கமாக முயல்வார்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை எழுப்பும் அளவுக்கு, 'யோக்கியதை'(?) உள்ள தலைவர்கள், பத்திரிக்கை அதிபர்கள், அறிவுஜீவிகள், தமிழ்நாட்டில் எண்ணிக்கையில் மிகுந்துள்ள அளவுக்கு, இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருக்கிறார்களா? என்ற ஆய்வானது; 'இல்லை' என்ற விடையை வெளிப்படுத்தினால் வியப்பில்லை.( https://tamilsdirection.blogspot.com/2018/12/narcissistic-personality-disorder.html )

அவ்வாறு கோழையாக தமிழ்நாட்டின்  சிவில் சமூகம்  இனியும் நீடித்தால், அதுவே சர்வாதிகார ஆட்சியை ஏதாவது ஒரு வழியில் வரவழைத்து விடும். அந்த சமூக இயற்கையின் போக்கில் இருந்து தமிழ்நாடு தப்பிப்பது கடினமே. (https://tamilsdirection.blogspot.com/2020/10/ruleof-law-httpstamilsdirection.html)

முதல்வர் ஜெயலலிதா மர்மமான முறையில் போயஸ் கார்டனில் இருந்து அப்போல்லோ மருத்துவமனைக்கு கொண்டு சென்று போனபோது, இந்திராகாந்தி பிரதமராக இருந்திருந்தால், மேற்குறிப்பிட்ட அபாய எச்சரிக்கையானது அமுலாகியிருக்கும்.

இந்திராகாந்தியாக மோடி இல்லாத காரணத்தால் அது தாமதமாகி வருகிறது.

அந்த கால இடைவெளியில் 'சமூக முதுகெம்பு முறிந்த சூரர்கள்' பொது அரங்கை விட்டு தாமாகவே வெளியேறி விடுவது நல்லது.

தமிழ்நாடு இன்று 'பெரியார்' மண்ணுமல்ல்; 'இந்துத்வா' மண்ணுமல்ல; 'தமிழ் மண்'ணுமல்ல;

தமிழ்நாடு 'நோஞ்சான் மண்ணாக' இருப்பதை திருக்குறள் (573) வழியில் பார்க்கத் தெரியாமல் மறுப்பவர்கள் எல்லாம் நோஞ்சான்களாகவே இருந்தால் வியப்பில்லை.

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க வேண்டுமானால், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் நோஞ்சான்களாக உள்ள தமிழர்களை எல்லாம் அடையாளம் கண்டு திருத்தி, திராவிட ஊழல் குடும்பங்களிடம் சோரம் போகாத அக வலிமையுள்ள தமிழர்களாக மாற்ற வேண்டும். அவ்வாறு திருந்த மறுப்பவர்களை எல்லாம், ஓரங்கட்டி சமூகக் குப்பைகளாகக் கருதி ஒதுக்க வேண்டும். (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html)

அது தாமதமாகுமானால்,  தமிழ்நாடானது சமூக காங்கிரின் நோயில் மீட்சிக்கு வழியின்றி சிக்குவதையும் தவிர்க்க முடியாது. (‘மோடியின் ஆட்சியில் இந்தியாவின் சமூக காங்கிரீனாக மாறி வரும் தமிழ்நாடு; https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)