Monday, December 28, 2015



              ஈ.வெ.ராவும் , பாவ்லோ பிரையரும்


"பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தில் பாவ்லோ பிரையரை நான் கொண்டுவரக் காரணம், வெறும் கல்விச் சிந்தனையாளர் மட்டுமே அல்ல அவர்; பெரியாரைப் போலவே அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தங்களது இறுதிமூச்சு வரை பேசினார், அவர்களுக்குக் கற்பித்தார் என்பதுதான்."
'பெரியார் எனும் கல்வியாளர்!' பூ. மணிமாறன்

மேற்குறிப்பிட்ட கட்டுரையை படித்தபோது, 'கல்வி' தொடர்பாக, உலக அளவில் புகழ் பெற்ற, பாவ்லோ பிரையரை, நான் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' (மே 1981) என்ற நூலில், கீழ்வரும் வரிகளில், ('பெரியார்' ஆதரவாளர்களின் பார்வைக்கு) முன்வைத்ததானது, ஞாபகத்திற்கு வந்தது.

"சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவன், உண்மை நிலையினை சுரண்டலை உணரும்போது, அதனைத் தீர்க்க நடைபெற வேண்டிய, சார்பிலா நடைமுறை மாற்றம், தன் நலனையோ, தான் சார்ந்துள்ள வர்க்க நலனையோ, பாதிக்குமென்றால், அவன் மனநோயாளி போன்று நடப்பான்.' என்று  Paulo Freire தனது 'Pedagogy of the oppressed' என்ற நூலில் சொல்கிறார். Paulo Freire. "
'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' பக்கம்19,

கல்லூரியில் பேராசிரியராகவும் (எனவே சராசரி மனிதரைவிட, அறிவு நிலையிலும், வாழ்வு நிலையிலும் சற்று மேல் நிலையில் இருந்த; பாவ்லோ பிரையரின் கருத்துப்படி, 'சமூக அக்கறை' என்ற பேரில் 'மனநோயாளிகள்' அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழ, அதிக வாய்ப்புள்ள‌), இன்று அதைவிட மேலான, திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ஆய்வுத்திட்ட ஆலோசகராக ( Project Consultant to R & D Project) பங்களித்து வரும் நான், என்னை தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட அளவுகோல் அடிப்படையிலான சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி வாழ்ந்து வருவதால், 'பாராட்டு, புகழ், செல்வம், செல்வாக்கு' அதிகரிப்பிற்காக, அத்தகையோருக்கு வாலாட்டும் நாயாக வாழாமல்,( http://tamilsdirection.blogspot.com
/2013_10_01_archive.html ) அதனால் வரும் 'இழப்புகளையும், அவமானங்களையும்' ஏற்று, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுக்கும்(Passions), சமூக அக்கறைக்கும் இணக்கமான (Harmonious) வாழ்வுமுறையில், வாழ முடிகிறது.

"மக்களுக்காக தங்களை உண்மையாக அர்ப்பணிப்பவர்கள் எல்லாம், தம்மை தொடர்ந்து சுயவிமர்சனதிற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்."
" Those who authentically commit themselves to the people must re-examine themselves constantly." 'Pedagogy of the oppressed' , P60

ஆனால் 'பெரியார்' ஆதரவாளர்களில் யார், யார், பாரதியைப் போல;
(வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html),
'சமூக மனநோயாளிகளாக' வாழ்ந்து வருகிறார்கள்? அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழகிறார்கள்? என்ற ஆய்வினை தாமதப்படுத்துவது என்பதானது, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக மட்டுமின்றி,ஈ.வே.ராவை வரலாற்றில் குற்றவாளியாக்கிவிடும், அபாயத்திலும் முடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

அதாவது ஒரு சமூகத்தை மாற்ற முயலும் அமைப்பில் உள்ளவர்கள் எல்லாம், தமது செயலை, தமது அமைப்பை, எங்கிருந்து? எப்படி பயணித்து? இன்று என்னை நிலையில்? எதை  நோக்கி?, என்று எடை போட துணை புரியும், அமைப்பின் ஒழுக்க நெறிகளை, புரிந்து செயல்படுவதன் அவசியத்தை,  பாவ்லோ பிரையர் சுட்டிக்காட்டியுள்ளார். 
(Such an organization does need, as Freire often suggested, an ethic that people understand and can use to judge what they do, what the organization is, where they have been, and where they are headed.   http://richgibson.com/freirecriticaledu.htm)


தனது அகத்தில், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில், திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சமூக மாற்றதிற்கான போராட்டத்தை, முன்னெடுக்கும் மனிதர்,  சந்திக்க வேண்டிய ஆபத்துகளை, நன்கு விளக்கி, வழிகாட்டியுள்ள நூல் 'Pedagogy of the oppressed'. 

அதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது 'பாதுகாப்பு வளையத்தை' (comfort Zone) மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளவாறு, இழிவான சமரசங்களுடன் உறுதி செய்து, 'புறத்தில்' முற்போக்கு வேடமிட்டவர்கள் முன் நின்றதே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதும் என் கருத்தாகும்.


அடுத்து, தனது தொண்டர்கள் ஆனபின்,  தனது தலைமையில் 'முட்டாள்களாக' இருக்க வேண்டும் என்று,  1948 தூத்துக்குடி மாநாட்டில் ஈ.வெ.ரா அறிவித்ததானது,  எந்த அளவுக்கு, "பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை."  என்று எழுத அனுமதிக்கும்?' என்பது விவாதத்திற்குரியதாகும்.

ஈ.வெ.ரா தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பாதக விளைவுகள் பற்றிய எனது ஆய்வுகளை விளங்கிக்கொள்ள, 'Pedagogy of the oppressed' என்ற நூலை ஆழ்ந்து படிப்பது துணை புரியும். பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் புராணங்கள் தொடர்பாக, தனது வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை,  நான் வெளிப்படுத்தியுள்ளேன்.


ஈ.வெ.ராவுக்கு இருந்த வரைஎல்லைகள்(limitations) இல்லாததாலேயே, பாவ்லோ பிரையர் தான் சார்ந்திருந்த, கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் இருந்த குறைபாடுகளை ஆராய்ந்து, வெளிப்படுத்தி, மேல்நாட்டில் கிறித்துவர்கள் தமது சமூக மாற்றத்திற்கு, பங்களிப்பு வழங்க துணை புரிந்துள்ளார்; ஈ.வெ.ரா வைப் போல, அவை தொடர்பான இலக்கியங்களை, புராணங்களை முற்றிலுமாக கண்டித்து, வெறுக்காமல். (Freire's method helped Christians rediscover the prophetic call to social change that not only was part of their biblical heritage but had, in fact, been an integral part of the history of adult education in the United States (Clare, 2000); http://www.talbot.edu/ce20/educators/catholic/paulo_freire/#contributions; In Freire's work, the world and the mind exist, but finally as territory in the mind of a god.
For Freire, filled with a lifetime of radical Roman Catholicism, the material world is subordinate to, and plays itself out in, the world of ideas and religion;  http://richgibson.com/freirecriticaledu.htm )

ஈ.வெ.ராவின் வரைஎல்லைகள் காரணமாகவே, வேதங்களுக்கு எதிரான நூல்களும் இருந்த, உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35  ), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுக்கும் போக்கு வந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அது மட்டுமல்ல, பாவ்லோ பிரையரின் எழுத்துக்களை, 'வேத வாக்காக' கருதாமல், அவர் பற்றி வெளிவந்துள்ள அறிவுபூர்வமான விமர்சனங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ,  பாவ்லோ பிரையர் வழியில், சமூக மாற்றங்களுக்கு ஏன் வழியில்லை? என்பது பற்றிய விமர்சனம்;

"Discourse analysis in the tradition of the idealist Freire will not supply the social forces necessary to make change." ; http://richgibson.com/freirecriticaledu.htm 

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சிக்கல்களுக்கு, அவர் கருத்துக்கள் எந்த அளவுக்கு தொடர்புள்ளவை, தொடர்பற்றவை, என்பது போன்ற அவரின் வரை எல்லைகள் பற்றிய புரிதலும் அவசியம். உதாரணமாக 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளிலின்றி, சங்க இலக்கியங்களில் வரும் 'இனம்' என்ற சொல்லின் பொருள் பற்றி, பாவ்லோ பிரையருக்கு தெரிந்திருந்தால், அவரின் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ள தவறுகள் ஆனவை, அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்காது என்பதும் என் கருத்தாகும். பாவ்லோ பிரையரின் ஆய்வுகளில், திறனாய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்து, வளர்க்கும் முயற்சிகளுக்கு துணைபுரியக் கூடியது, கீழ்வரும் பதிவாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

Sunday, December 27, 2015



ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2)


அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?


புலமையிலும், செல்வத்திலும், ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த பிராமண‌ர்களையும், பிராமணரல்லாதோரையும் உள்ளடக்கிய நீதிக்கட்சியில், அவர்கள் எவரும் பொதுவாழ்வில், சாமான்ய மனிதர்கள் வாழ்வு நிலைக்கு இறங்காத  நிலையில், காந்தியே வியந்து மலைக்கும் அளவுக்கு, தனது செல்வ வாழ்வு நிலையில் இருந்து, தமது குடும்பத்தினருடன் கீழிறங்கி, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், தனித்துவமாக பயணித்தவர் ஈ.வெ.ரா.  

பிராமணர்களும் அமைச்சர்களாக‌ இருந்து ஆட்சி செய்த‌,  நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவரும், அதனை அங்கீகரித்தே, சிறையிலிருந்த ஈ.வெ.ராவை, 'ஏகமனதாக', தமிழ்நாட்டை காப்பாற்ற, நீதிக்கட்சித்தலைவராக்கினார்கள்.

இது தொடர்பாக; 'சிந்தனையாளன்' இதழில் வெளிவந்த கீழ்வரும் பகுதி கவனிக்கத்தக்கதாகும்.

"ஒரு கட்டத்தில் நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரையும் பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் சேர்க்கலாமா என்பது பற்றி யோசிக்க தலைப்பட்டனர். சுமார் 10 ஆண்டு காலம் அந்த போராட்டம் நீடித்தது. இன்னொரு கட்டத்தில் கோவை மாநாட்டில் 1927 சூலையில் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசிலேயே சேர்ந்து விடலாம் என்று தீர்மானமே போட்டனர். ஈ.வெ.ரா அதை ஆதரித்து பேசினார். இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகி விடும் என்று ஒவ்வொரு கட்டத்திலும் இளைஞர்கள் கருதினர்."
'சிந்தனையாளன்' (மார்ச் 1988 பக்கம்13)

நெல்லூர் மாநாடு நடந்த வருடம் 1929. கோவை மாநாடு நடந்த வருடம் 1927. நெல்லூர் மாநாட்டிற்குப்பின் கோவை மாநாடு நடந்ததாக பொருள் கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் வெளிப்பட்ட தவறு பெரிதல்ல. ஆனால், அம்மாநாடுகளில் ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை குறை சொல்லி, 'இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகிவிடும்' என்று தெரிவித்த கருத்து, ஆய்விற்குரியதாகும். 

இது தொடர்பாக, 'குடி அரசு' 3.7.1927; 10.7.1927; இதழ்களில் வெளிவந்துள்ளவையானது, 'தோழர் பெரியாரைக் கொச்சைப்படுத்திய தோழர் ஆனைமுத்துவுக்கு மறுப்பு' என்ற தலைப்பில், திருச்சி 'பெரியார் மையம்' சிறுநூல் (மார்ச் 1990) வெளிவந்தது.

மேலே 'சிந்தனையாளன்' கட்டுரை விவாதித்துள்ள காலக்கட்டத்தில், த‌மிழ்நாட்டில் 'திராவிடர் கட்சி' இருந்ததா?  1944 இல் 'திராவிடர் கழகம்' தொடங்கும் முன், அன்றைய சென்னை மாகாணத்தில், 'திராவிட மொழிகள்' பேசிய மக்களை உள்ளடக்கி தான்,  'திராவிட' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை' உள்ளடக்கிய, 'திராவிடர்' என்ற சொல், 1944க்கு பின் தான், அரசியல் புலத்தில் இடம் பெற்றதா? அந்த 1944 திசை திருப்பலானது, தனிநாடாக 'திராவிட நாடு' பிரிய இருந்த வாய்ப்பை கெடுத்ததா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை, அடுத்து பார்ப்போம்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா, 1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தவர்,1938இல் தான், அக்கட்சிக்குள் இடம் பெற்ற தலைவரானார்.  

நீதிக்கட்சி துவக்கப்பட்ட வருடம் 1916. அக்கட்சியானது,1920இல் முதலாவதாக நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து, அன்றைய‌ சென்னை  மாகாணத்தில் 17 வருடங்கள் ஆட்சி நடத்திய 5 அமைச்சரவைகளில், நான்கு நீதிக்கட்சி அமைச்சரவையாக இருந்தது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி படு தோல்வி அடைந்தது. 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், ஈ.வெ.ராவின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, நீதிக்கட்சி ஆதரித்தது. ஈ.வெ.ரா, ஏகமன‌தாக, நீதிக்கட்சியின் தலைவராக,  29.12. 1938இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா,1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தார்.

அவ்வாறு நிதிக்கட்சியை ஆதரித்து,1938இல் அதன் தலைவரான பின்,17.12.1939 இல் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பிரிட்டனில் உள்ள அரசு செயலரின் நேரடிக் கட்டுப்பாட்டில், 'தனி திராவிட நாடு' கோரி, தீர்மானம் நிறைவேறியது; 1939இல் அந்த கோரிக்கைக்காக மட்டுமே ஒரு மாநாடு நடத்தினார்.

அதன்பின் 1942இல், பிரிட்டனிலிருந்து வருகை புரிந்த கிரிப்ஸ் குழுவிடம் (Cripps Mission), அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சட்டசபை தீர்மானம் மூலமோ, அல்லது பொது வாக்கெடுப்பு மூலமோ, அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று வெள்ளையர் அரசின் பிரதிநிதி ஆலோசனை வழங்கினார். 

இம்முயற்சிகளில் முன்னுக்கு நின்ற, நீதிக்கட்சித்தலைவர்கள், காங்கிரஸ் ஆதரவுடன், 1940 மற்றும் 1942இல் நீதிக்கட்சி  ஆட்சிக்கு வர முயன்றதானது, ஈ.வெ.ராவின் எதிர்ப்பால், தோல்வியடைந்தது. பின் 1944இல் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி, மேற்குறிப்பிட்ட நீதிக்கட்சித்தலைவர்களையும், நீதிக்கட்சியில் இருந்த பிராமணர்களையும் புண்படுத்தி வெளியேற்றி, 'திராவிடர் கழகமாக' ஈ.வெ.ரா மாற்றியதானது, அன்றைய சென்னை மாகாணம், 'திராவிட மொழிகளை' பேசிய மக்கள், அடிப்படையில் , 'தனி திராவிட நாடாக' மாற இருந்த வாய்ப்பினை, அதனால், எந்த அளவுக்கு கெடுத்த‌து? மேற்கத்திய மொழியில் இருந்த 'ரேஸ்' (Race) என்ற சொல்லின் பொருளில், தமிழில் வேறு பொருளில் வழங்கி வந்த 'இனம்' சொல்லாக, 'பொருள் திரிபு' செய்து, ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை முன்னிறுத்தியன் மூலமாக,  (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html ), அந்த 'திராவிட நாடு' கோரிக்கைக்கான, சமூக ஆதரவு ஆற்றல்கள் எந்த அளவுக்கு குறைந்தன? என்பவை ஆய்விற்குரியனவாகும்.

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகள், இந்திய விடுதலைக்கு முன், 'முழு வீச்சில்' செயல்பட்டது தொடர்பான தகவல்கள் ங்கில ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளதை, ஏற்கனவே பார்த்தோம். நீதிக்கட்சியில் இருந்த பிராமண, பிராமணரல்லாத தலைவர்களின் முயற்சியில் வளர்ந்து, பிரிட்டன் அரசின் பிரதிநிதி, 'சட்டசபை தீர்மானம் மூலம் அல்லது பொது கருத்து வாக்கெடுப்பு மூலம் தனிநாடாக ஆலோசனை' கூறியிருந்த நிலையில், அந்த திசையில் பயணிக்காமல், திசை திரும்பி, 'திராவிட நாடு பிரிவினை' கானல் நீரானதில், அந்த உளவு அமைப்புகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கு, அந்த அமைப்புகள் வசம் உள்ள கோப்புகள், 'இரகசிய நீக்கத்திற்கு' (Declassify) உள்ளாகும்போது, விடைகள் தெரியும்.

ஈ.வெ.ரா யாருடைய செல்வாக்கில், 'திசை திரும்பி', தனிநாடு கோரிக்கைக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு வழங்கிய நீதிக்கட்சித் தலைவர்களையும், ஒட்டுமொத்த பிராமணர்களையும் எதிரியாகக் கருதி, ஒதுக்கி, 'திராவிடர் கழகம்' தொடங்கி, சுய‌சம்பாத்தியம் அற்ற, நீதிக்கட்சித்தலைவர்கள் அளவுக்கு புலமையிலும், ஒழுக்கத்திலும் ஒப்பிடமுடியாதவர்களை, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் வலிமையாக்கினார்? அதனால் தமிழ்நாட்டின் புலமைக்கும், நேர்மையான முறையில் சம்பாதிக்கும் செல்வத்திற்கும், ஒழுக்கத்திற்கும், மனித மாண்புகளுக்கும், ஏற்படப்போகும் ஆபத்துகளை, 'தீர்க்கதரிசி' போல, 1948 தூத்துக்குடி மாநாடு உரையில் வெளிப்படுத்திய ஈ.வெ.ரா;

 அதே ஆபத்து சூழ்ச்சிவலையில் மீண்டும் விழாதிருந்திருந்தால்;

தமிழ்நாட்டில் 'ஊழல் கோரப்பசி'க்கு இரையாகி;
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளும்; 
கிரானைட், தாது மணல், ஆற்றுமணல், சந்தன மரக்காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும்;
தமிழ்வழிக்கல்வி ( எனவே தமிழ்) சமூக அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதும் நடந்திருக்குமா?

மேலும், ஈ.வெ.ராவின் மூளை செயல்பாட்டில், மேற்குறிப்பிட்ட 'திசை திருப்பம்' ஏற்படுத்தியதன் தொகுவிளைவாக, அவரின் இயக்கம் மூலம் 'சமூக உளவியலில்'(Social Psychology)  பாதகமான திசை திருப்பம்  ஏற்பட்டதா? 

அந்த திசை திருப்பல் மூலம் அரங்கேறிய, 'திராவிட, திராவிடர், தமிழர்' அடையாள குழப்பங்களால், தமிழர்களிடம் ஏற்பட்ட‌  அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) அதன் தொடர்விளைவாக,  தமிழர்களின் மூளை செயல்பாட்டின், 'தேவைகளில்' (Needs) மற்றும் ஈடுபாடுகளில்' (Interests) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாற்றங்கள் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் என்னென்ன சீர்குலைவுகள் ஏற்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, வன்முறை, திருட்டு போன்றவையெல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதும், கட்சி, கொள்கைகளிடமிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதும், அதன் தொடர்விளைவுகளா? அதனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இன்றுள்ள சீரழிவுகள் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே, 'மீட்சிக்கான' வழிகளை காட்டும்.

(வளரும்)

Thursday, December 24, 2015



ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (1)


வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்',

இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும் வாய்ப்பிருந்ததா?



ஈ.வெ.ராவின் பேச்சுக்களையும், எழுத்துக்களையும் 'தொகுத்து' வெளியிட்டு வருபவர்களும், அதனை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருபவர்களும் பாராட்டுக்குரியவர்களே ஆவர். ஆனால் இது போன்ற முயற்சிகளுக்கு முன்னர், உலக அளவில் ஆய்வாளர்களுக்கு உதவி வந்தது, திரு.வே.ஆனைமுத்து தலைமையில் கூட்டுமுயற்சியாக வெளிவந்த 'ஈ.வெ.ராவின் சிந்தனைகள்' கூட்டுத்தொகை நூல்களாகும்.

ஈ.வெ.ரா, அவர் வழியில் 'எளிமையை கைவிடாமல்' வாழ்ந்த வே.ஆனைமுத்து, மற்றும் காந்தி, நேரு, பிரபாகரன், கோட்சே உள்ளிட்ட தலைவர்களை, அவர்களின் சொந்தவாழ்வு அடிப்படையில், அவர்களை பாராட்டுவதையும்/கண்டிப்பதையும், அவர்களின் பொதுவாழ்வால்,  சமூகத்துக்கு ஏற்பட்ட விளைவுகளை பாராட்டுவதையும்/ கண்டிப்பதையும், குழப்பிக்கொள்ள வேண்டியதில்லை, என்பதை எனது பதிவுகளில் ஏற்கனவே தெளிவுபடுத்தியிருக்கிறேன்.

1970களில் "புற்றீசல் போல் ஆங்கிலவழிப் பள்ளிகள் தொடங்கப் பட்ட காலத்தில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் எதிர் நீச்சல் போடுவதற்குப் பதிலாக, அந்த தமிழ்வழிக்கல்வி வீழ்ச்சி ஓட்டத்திலேயே,  தங்கள் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்ததும், குற்ற உணர்வின்றி அவர்களுக்கு 'தமிழறிஞர் கோட்டா'வில் எம்.பி.பி.எஸ்,பி.ஈ படிக்க வைத்ததும் சீரணிக்க முடியாத தவறுகள் ஆகும். அந்த காலக் கட்டத்தில் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து போராடியது போல, தொடர் போராட்டங்கள் நடத்தியிருந்தால், அந்த ஆணையை நீக்கி இட ஒதுக்கீட்டை உயர்த்தியது போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் 'ஆங்கில வழி புற்றீசலை' ஒழித்திருப்பார்."  என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

மேலே குறிப்பிட்ட காலக்கட்டதில், பெரும்பாலான தமிழ்/திராவிட இயக்க அறிஞர்கள், பேராசிரியர்கள் எல்லாம் பயணித்த போக்கில், நான்  'எதிர் நீச்சலில்', எனது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைத்து, அவர்கள் வளர்ந்த பின் , மற்ற பெரியார்/தமிழ் ஆதரவாளார்கள் தத்தம் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்தது அறிந்து, என் மேல் கோபமும்/வெறுப்பும் கொள்ள;

'பெரியார் முகமூடியில்' 'சுயநல கள்வராக' இருந்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வலுவாகி, 'ஒழுக்கக்கேடான' குறுக்கு வழிகளில், 'செல்வர் ஆகி', தனது பிள்ளையை ஆங்கில வழியில் படிக்க வைத்து, அந்த போக்கில் 'வளர்ந்த' சமூக கிருமிகளை, எனது 'சமூக வட்டத்தில்' அனுமதித்த 'பாவத்தின்' விளைவாக‌, அந்த கிருமிகள் மேற்குறிப்பிட்ட 'கோபத்தையும் வெறுப்பையும்' (அதன் நியாயங்களை நான் உணர்ந்து, ஆனால் விளக்க முடியாதிருந்த நிலையில்) பயன்படுத்தி, தமது 'செல்வம், செல்வாக்கு' வெளிச்சத்தில் 'ஏமாற்றி', என் குடும்பத்தின் 'மதிக்கத்தக்க வாழ்வியல் புத்திசாலி' முன்மாதிரியாக (Role Model);

'செல்வத்திற்கும், செல்வாக்கிற்கும்' வாலாட்டுபவர்கள் குடும்பமாயிருந்தாலும், நட்பாயிருந்தாலும்,  'கிருமிகளே' என்ற நிலைப்பாட்டில்; கிருமிகளின் வாடையின்றி, ஒதுங்கி, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடனும்(Passions), வணங்கத்தக்க மனிதர்களை எனது சமூக வட்டமாகக் கொண்டும், வாழ்கிறேன்; கொள்கை வேடங்களில் ஏமாந்து, 'சமூக கள்வர் தடைகளின்றி',  நாம்  பயணிப்பதில் உள்ள ஆபத்துகள் பற்றிய தெளிவுடன்; இயல்பில் சிற்றினமானவர்கள் நம்மிடம் எவ்வளவு வருடங்கள் பழகியிருந்தாலும், வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாக' வெளிப்படுவார்கள் என்ற 'பாடம்' கற்று.

 'பெரியார் கள்வர்களை' எனது சமூக வட்டத்தில் அனுமதித்ததன் காரணமாக, எனக்கு தெரிந்து உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து வந்தவர்கள், அந்த 'பெரியார் கள்வர்கள்' போட்ட 'செல்வ, செல்வாக்கு' வெளிச்சத்தில் சிக்கி, தமது 'மூளை செயல்பாட்டை (Brain processing) ' திசை திருப்பலுக்குள்ளாக்கி, 'பெரியார் கள்வர்கள்' போல் , பயணிப்பதை, அறிந்து, சமூகத்தில் எனது சமூக வட்டத்தையே பாதித்துள்ள, அந்த நோய், எப்போது? எப்படி பரவியது? என்று, எனது இசை ஆய்வு முயற்சிகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி, மேற்கொண்ட ஆய்வின் வெளிப்பாடே,  இந்த பதிவு உள்ளிட்ட,  எனது பதிவுகளாகும்.

'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த நிலையில், " திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட (குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல‌' - இறந்தது காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு அமைப்பு MI5   கோப்புகள்  declassify-இரகசிய நீக்கமாகும்போது-   தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது என் கருத்து. " என்பதை, முன்பு பார்த்தோம்.

1944இல் ஈ.வெ.ரா,  'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' , இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்குமா? என்பது தொடர்பான தகவல்களை அடுத்து பார்ப்போம்.

1944க்கு முன் நீதிக்கட்சியிலும், காங்கிரசிலும் இருந்தவர்களில், பிராமணர்கள் உள்ளிட்டு அனைத்து சாதிகளிலும் இருந்த படித்த, நேர்மையான, சொந்த பணத்தை பொதுவாழ்விற்கு செலவழித்து, அரசியல் மூலம் பிழைக்க வேண்டிய அவசியமில்லாதவர்கள் எல்லாம், அவரவர் அறிவு, அனுபவத்தில், சமூக நீதி நோக்கில், சாதி அடிப்படையில் பின்தங்கியிருந்தவர்களை, முன்னேற்ற எடுத்த, பிரமிப்பூட்டும் முயற்சிகள் பற்றி, ஆய்வதற்கான தொடக்க சான்றுகளை (prima facie evidences)  ஏற்கனவே பதிவிட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) அத்தகையோரை முற்றிலுமாக ஒதுக்கி, எல்லா பிராமணர்களையும் எதிரிகளாக கருதி, அரசியலை வைத்து பிழைக்க வேண்டியவர்களை முன்னிறுத்தி, ஈ.வெ.ரா மேற்கொண்ட பயணத்தில், ஆக்கபூர்வமான சமூக ஆற்றல்கள் இழப்பு எவ்வளவு ஏற்பட்டன? (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html)

அதையும் மீறி, 'தேசிய அரசியலில்', 'வடநாட்டு தலைவர்கள்' செல்வாக்கின் கீழ், தமிழக தலைவர்கள் செயல்பட வேண்டிய நெருக்கடியை உணர்ந்திருந்த எதார்த்தத்தில், தமிழ்நாட்டின் நலன்களைப் புரிந்து, ராஜாஜியும் அவர் சார்பு பிராமணர்களும் திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ஆதரித்தது; (பொதுவாக ராஜாஜியின் 'வால்' போல, செயல்பட்ட ம.பொ.சி,  இதில், ராஜாஜியை ஆதரித்தாரா? எதிர்த்தாரா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கியிருந்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.)

விடுதலைக்குப்பின் இந்திய அரசியல் நிர்ணயசபை விவாதங்களில் சென்னை மாகாண பிரதிநிதிகள் ஆற்றிய உரைகள்;

மற்றும் இந்திய விடுதலைக்குப் பின், 1952 பொது தேர்தலில் காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலம் பெற முடியாத அளவுக்கு, பிரிவினைக்கு ஆதரவு வெளிப்பட்டது;

போன்றவற்றையெல்லாம், கணக்கில் கொண்டால், 1944இல் ஈ.வெ.ராவின் திசை திரும்பலால், ஏற்பட்ட சமூக ஆற்றல் இழப்பு எவ்வளவு? என்ற ஆய்வின் முக்கியத்துவம் புலப்படும்.

அது மட்டுமல்ல, அந்த 1944 திசை திருப்பலிலிருந்து,  1949இல் அண்ணாதுரை விலகி, பிராமண‌ர்களை தி.மு.கவில் சேர்க்கும் கொள்கை திருத்தம் செய்தது;  அதன்பின் ராஜாஜி ஆதரவுடன் தி.மு.க வளர்ந்த வேகத்தில், தி.கவானது,  இளைஞர்களை விட்டு விலகி பலகீனமானது; போன்றவையும், அந்த ஆய்வில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டியதாகும். 

நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்த போது, அது தொடர்பாக, ஈ.வெ.ரா என்ன நிலைப்பாடுகள் எடுத்திருந்தார்? பின் அண்ணாதுரையின் அல்லது வேறு எவரின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு, அதிலிருந்து நழுவி, 1944இல் ஒட்டு மொத்த பிராமணர்கள் அனைவரையும் எதிர்க்கும் நிலைப்பாடு மேற்கொண்டார்? 

அந்த ஆய்வுக்கு மிக முக்கிய பங்களிக்கும், ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னலை',  ஏற்கனவே பார்த்தோம்.

திரு.ஆனைமுத்து அவர்கள், "1988-இல் தனது 'சிந்தனையாளன்' இதழில், நீதிக்கட்சி காலத்தில் பெரியாரின் நிலைப்பாடுகள் பற்றி தவறான தகவல்களை வெளிப்படுத்தி, அந்நிலைப்பாடுகளைக் குறை கூறியிருந்தார். ;குடிஅரசு' இதழ்களை அடிப்படையாகக் கொண்டு, அவரின் தகவல்களும், விமரிசனமும் தவறு என்று நிரூபித்து, 'சிந்தனையாளன்' முகவரிக்கு , 'திருச்சி பெரியார் மையம்' சார்பில் விளக்கம் அனுப்பப்பட்டது. பதில் ஏதும் இல்லாத நிலையில், அதை சில நூறு படிகள் உருட்டச்சு ( அப்போது  Xerox  கிடையாது) செய்து, பெரியார் தொண்டர்களின் பார்வைக்குக் கொண்டு சென்றோம்.ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த பதிலும் வரவில்லை. பின் அதையே 1988 மே மாதத்தில் சில ஆயிரம் படிகள் அச்சிட்டு, ரூ 1 ந்ன்கொடை என்று விநியோகிக்கப்பட்டது. அனைத்தும் தீர்ந்து போன நிலையில், 1989 டிசம்பரில் இரண்டாவது பதிப்பாக சில ஆயிரம் படிகள் அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்டது. 'ஆனைமுத்துவுக்கே மறுப்பா' என்று வியப்புடன் அதை வாங்கிச் சென்றவர்கள் கூட, அப்புத்தகம் பற்றிய தங்களின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தவில்லை.


அதன்பின் அவரின் 'மார்க்சிய பெரியாரிய பொதுவுடமைக் கட்சியின் சார்பில், வெளியிடப்பட்ட 'கொள்கை விளக்கமும் விதி முறைகளும்' என்ற புத்தகம் எனது பார்வைக்கு வந்தது. பெரியாரியல் நோக்கில் அப்புத்தகத்தில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் விளக்கி,அந்நூலின் மீது 'பெரியார் மையத்தின் விமர்சனம்' என்ற தலைப்பில் சிறு நூலை சில ஆயிரம் படிகள் அச்சிட்டு,நன்கொடை 50 காசுகள் என்று விநியோகிக்கப்பட்டது.

நான் திருச்சி பெரியார் மையத்திற்கு பங்களிப்பு வழங்கிய காலம் வரை, மேலேக் குறிப்பிட்ட இரண்டு புத்தகங்களுக்குமே எந்த மறுப்பும் வரவில்லை.அதன்பின் மறுப்பேதும் வந்துள்ளதா என்பது பற்றி எனக்கு ஏதும் தெரியாது."

மேலேக்குறிப்பிட்ட 'சிந்தனையாளன்' கட்டுரையில், நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை ஆதரித்து, ஈ.வெ.ரா தவறு புரிந்ததாக ஐயம் எழுப்பியிருந்தது. திருச்சி பெரியார் மையத்தில், 'பெரியார் போதையில்', அதை மறுத்து விளக்கம் வெளியிட்டிருந்தோம்; ஒரு  சமூகவியல் முக்கியத்துவம் வாய்ந்த, (நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, ஈ.வெ.ரா ஆதரித்திருந்த‌)  'சிக்னல்' அதில் வெளிப்பட்டுள்ளதை கவனிக்காமல்; திராவிட நாடு பிரிவினை கோரிக்கையை ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் 1947இல் ஆதரித்திருந்த பின்னணியில். 

நீதிக்கட்சியில் பிராமணர்கள் இருந்ததை, 'ஈ.வெ.ரா ஆதரித்தது தவறு', என்ற தொனியில் 'சிந்தனையாளன்' வெளியிட்ட கட்டுரையில் இருந்தது. அது சமூக மீட்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி,  'ஈ.வெ.ரா மேற்கொண்ட சாதுர்யமான தந்திரம்' என்று, 'பெரியார் மையம்' வெளியீட்டில், ஈ.வெ.ராவை நியாயப்படுத்தியிருந்தோம். ஆனால் அது, பின்னர் 1944இல், 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பாக'  திசை திரும்பியதானது, நடைமுறையில்,  சமூக வீழ்ச்சிக்கான 'திசைதிருப்பம்' நோக்கி முடிந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அதன் காரணமாகவே, 'சென்னை மாகாணம்' தனிநாடாக, பிரிய இருந்த வாய்ப்பானது, சீர் குலைந்ததா? ன்ற கேள்வியை எழுப்ப, அந்த 'சிந்தனையாளன்' 'சிக்னல்' துணை புரிந்துள்ளது. எந்த நோக்கத்திற்காக ஒரு உண்மை தகவலானது, ஒரு கட்டுரையில் வெளிப்பட்டிருந்தாலும், அந்த நோக்கத்திலிருந்து, அந்த உண்மை தகவலை பிரித்து, அந்த தகவல் வெளிப்பட்ட சூழலையும், இன்றைய சிக்கலையும் கருத்தில் கொண்டு, ஆய்வதற்கு வாய்ப்புள்ளதற்கும், அந்த 'சிந்தனையாளன் சிக்னல்', ஒரு உதாரணமாகும்.

அதே போல தமிழ்மொழி, பாரம்பரியம்,பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களாகிய, சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து விலகி,  ஈ.வெ.ரா பயணித்ததும், 1944க்கு முன்னும், பின்னும் என்ற கோணத்தில் ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. 

அவ்வாறு சமூக ஆற்றல் மூலங்களையும், அனைத்து பிராமணர்களையும் பகையாக மக்களுக்கு அறிவித்து பயணித்ததும், அதற்கு முரணாக திராவிட நாடு பிரிவினை கோரிக்கைக்கு ஆதரவாக,  ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களின் ஆதரவை கோரி பெற்றதும், ஈ.வெ.ரா விரும்பிய திசைக்கு, எதிரான திசையில் அவர் இயக்கத்தைப் பயணிக்க செய்து, தமிழ்நாட்டில் அகத்தில் பலகீனமானவர்களின், மூளை செயல்பாட்டை (Brain processing), 'சுயநல கள்வராகும்' திசை திருப்பலுக்குள்ளாக்கி, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும், இன்றுள்ள பாதகங்களில் முடிந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது 1944 திசை திருப்பலின் மூலம், அரசியலை வைத்து பிழைக்க வேண்டியிருந்த  சிற்றினமானது,  'செல்வாக்கான தீ இனமாக' வளர்ந்த போக்கில், 'சமூக தூண்டல்' (Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process)  மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளைகளையும், தமது மூளை போல, எனது சமுக வட்டத்தில் இயல்பில் பலகீனமானவர்களிடம் வெளிப்பட்டது போல‌, 'சிற்றினமாக' செயல்பட வைத்ததன் தொகுவிளைவுகள் தான், வெள்ள பாதிப்புகளாகவும், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், சந்தன மரம் உள்ளிட்ட காடுகள் ஆகிய இயற்கை வளங்களை சூறையாடியுள்ளதாகவும், அந்த போக்கில் தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தை தூண்டி,  வெளிப்பட்டுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1944இல் ஈ.வெ.ரா 'திராவிடர் கழகத்தை' துவக்கி, தவறான திசையில் பயணிக்காமல் இருந்திருந்தால், ஈ.வெ.ராவின் பயணத்தில் நீதிக்கட்சியில் இருந்த பிராமணர்களின் ஆதரவுடன், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுகளும், அவற்றால் ஏற்பட்ட பாதிப்புகளுமின்றி, (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html ) காங்கிரசில் இருந்த ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்கள் ஆதரவுடன், தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை உயிராய் நேசித்த தமிழர்களின் ஆதரவுடன், பெருக்கெடுத்திருக்கும் சமூக‌ ஆற்றல் வெள்ளத்தில்; 

வேறு வழியின்றி, அன்றைய 'சென்னை மாகாணம்' இந்திய விடுதலையின் போது, தனிநாடு ஆகியிருக்கவும் வாய்ப்பிருந்திருக்கிறது; இரண்டாம் உலகப்போரின் முடிவில், இந்தியாவை விட்டு, 'அவசரமாக' வெளியேற வேண்டிய நெருக்கடியில் பிரிட்டன் அரசு சிக்கியிருந்த சூழலில். 

தமிழ்நாட்டுக்கு பாதகமான 1944திசை திருப்பலில், கணிசமான சமூக ஆற்றல் விரயப் போக்குகள் ஆனவை,  'வீரியமாக' வளரத்தொடங்கியிருந்த சூழலில், ஈ.வெ.ரா பயணித்தபின், "நல்லவேளை, திராவிடநாடு பிரியவில்லை":
http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html


1944இல் 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பு' என்ற 'திசை திருப்பல்' மூலம் முளைவிட்டு, வளர்ந்து, பின் 1949இல் 'பிராமணர்களை' ஏற்றுக் கொண்டு, ஆனாலும் 'இரட்டைக்குழல் துப்பாக்கி' என்று 'முழங்கி', ஈ.வெ.ராவின் இணையற்ற தியாக வாழ்வால், அவர் வழியில் எண்ணற்றோரின் தியாகங்களாலும், உருவான 'சமூக ஆற்றல்களை' கபளிகரம் செய்து,  ஈ.வெ.ராவையே வீழ்த்தி,  வளர்ந்து, இப்போது உச்சத்தில் உள்ள, சமூக தூண்டல்' (Social Induction) எனும் சமூகவியல் வினை(Sociological Process)  மூலம், இயல்பில் பலகீனமானர்களின் மூளை செயல்பாட்டை(Brain processing) , சீரழிக்க காரணமான;


புறத்தில் 'பெரியார்' ஆதரவாளர்களாகவும், அகத்தில் 'சுயநல கள்வராக' சீரழிந்து, வாய்ப்பு கிடைக்கும்போது, 'ஒழுக்கக்கேடான' முறையில், 'அதிவேகமாக' செல்வம் ஈட்ட,  மனிதப்பண்புகளை இழந்து, 'சுயநல மிருகமாகவும்', அந்த நோயைப்பரப்பும் சமூக கிருமிகளாகவும் இருப்பவர்களிடம், சுயநலநோக்கின்றி 'பெரியார் ஆதரவாளர்களாக' இருப்பவர்கள் எல்லாம், இனியும் தொடர்ந்து ஏமாறப்போகிறர்களா? அல்லது தம்மிடமுள்ள உணர்ச்சிபூர்வ போக்குகளை ஓரங்கட்டி, அறிவுபூர்வமாக ஏன், எப்படி, எவ்வாறு தவறு நடந்தது? என்று ஆய்ந்து, தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கப்போகிறார்களா, வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக 'இடம்' பெறப்போவதை தடுப்பதற்காக? இனி எவ்வாறு செயல்பட்டால், மீட்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்?
 
(வளரும்)