Thursday, December 24, 2020

 

திரைப்பட இயக்குநர்கள் இசை அமைப்பாளர்களின் பார்வைக்கு;
 

'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' பாடல், இன்றைய தலைமுறையயும் ஈர்க்கும் என்பதானது, ஆர்.ஜே.பாலாஜியின் 'எல்கேஜி'  மூலமாக நிரூபணமானது.

பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் எழுதிய‌ 

“குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா”

https://www.youtube.com/watch?v=mNnPWhBr71A

மேற்குறிப்பிட்ட பாடலின் மெட்டை ஒட்டி, ஆனால் சற்று மாறுபட்டு கீழ்வரும் புதுப்பாடலை இசைக்கலாம்.

                                          பல்லவி

பலித்த வரையில் பார்ப்போம் என்பவன்

பிச்சைக் காரன டா     - இதில்

பணக்காரன் படித்தவன் பதவிக்காரன் என்ற

பேதம் இல்லையடா

                             சரணம் 1

இருக்கும் வரையில் பொறுக்கி பட்டம்

பதவிகள் பெறுவாரே    - அவர்

மேலே போனதும் புத்தரைப் போலே

போதனை புரிவாரே     - இவர்

பேச்சை எழுத்தை நம்பி மோசம்

போனவர் பல  பேரு      - மனிதன்

செயலை வைத்து ஆளை அளப்பது   

என்றும் தவறாது

 

                                         சரணம் 2

பல்லை இளிப்பதும் கூட்டிக் கொடுப்பதும்

காலில் விழுந்து காரியம் முடிப்பதும்

பிச்சை வழி கள டா   - அவர்

பெறுகிற பணம் பட்டம் பதவிகள் எல்லாம்

எச்சில் இலைகளடா   -  சமூக‌

எச்சில் இலைகளடா

                                      -----------------    

இன்றைய தலைமுறையில் போக்கினை ஒட்டி, திரை இசை ரசனையை நல்ல திசையில் வளர்க்கும் முயற்சி இதுவாகும். எனவே ஆர்வமுள்ள திரைப்பட இயக்குநர்கள் மற்றும் இசை அமைப்பாளர்கள் மேற்குறிப்பிட்ட பாடலைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அத்தகைய முயற்சிக்கு இசை ஆலோசனையையும் நான் வழங்க இயலும். புது எண்களில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நான் ஏற்பதில்லை. ஈமெயில் மூலமாக முதலில் தொடர்பு கொண்டால், அதன்பின் தொலைபேசியில் பேச இயலும்.  Email: pannpadini@gmail.com

Tuesday, December 22, 2020

 

'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை  சிக்க பங்களித்தவர்களா, 
 
எழுத்தாளர்கள் ஜெயமோகன், ப.திருமாவேலன், ரவிக்குமார், பிரபஞ்சன்?
 

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரையில்; 1925 முதல் 1939இல் நீதிக்கட்சியின் தலைவராகும் வரையில், 1939 முதல் 1944இல் திராவிடர் கழகம் துவங்கியது வரையில், 1944 முதல் 1949இல் தி.மு.க தொடங்கியது வரையில், 1949 முதல் 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது வரையில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து முனிவராகி விட ஈ.வெ.ரா விரும்பி, அண்ணாவும் காமராஜரும் அவரின் மனதை மாற்றியது முதல் 1973இல் சாகும் வரையில்;

என்று 'தமிழ், திராவிடர், ஆரியர், இந்தி' தொடர்பாக, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன? என்பது பற்றிய அறியாமையில், உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து எவ்வாறு கட்டுரை எழுத முடியும்? என்பதற்கான பாடப்புத்தகத்தில் இடம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட கட்டுரையினை ப.திருமாவேலன் எழுதியுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2020/12/blog-post_21.html )

தத்தம் சார்பு(Subjective) கண்ணோட்ட அடிப்படையில், ஈ.வெ.ராவின் எழுத்துக்களை அதன் பின்னணியிலிருந்து பிரித்து, பயன்படுத்தி அவரை பார்ப்பன எதிர்ப்பு/ஆதரவு, தமிழர் எதிர்ப்பு/ஆதரவு, தலித் எதிர்ப்பு/ஆதரவு, முக்குலத்தோர் எதிர்ப்பு/ஆதரவு, அம்பேதர்கார் எதிர்ப்பு/ஆதரவு  காந்தி எதிர்ப்பு/ஆதரவு, ராஜாஜி எதிர்ப்பு/ஆதரவு என்று இன்னும் பல எதிர்ப்பு/ஆதரவு கட்டங்களுக்குள், ஈ.வெ.ரா அவர்களை சிக்க வைத்து எவ்வாறு எழுதுவது?

என்று பயிற்சி வகுப்பு எடுக்க உதவும் பாடப்புத்தகத்தினை எழுத்தாளரும் தி.மு.க எம்.பியுமான ரவிக்குமார் உருவாக்கியுள்ளார். (https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

'பிரபல' எழுத்தாளர் ஜெயமோகன் அமெரிக்காவில் உள்ள ஃபெட்னா உள்ளிட்ட தமிழ் அமைப்புகளால் பாராட்டப்பட்ட மம்மதுவை எடுத்த பேட்டியில் வெளிப்பட்ட பல அபத்தங்களில் சில:

"இந்துஸ்தானி இசை தமிழிசையின் வளர்ச்சி நிலைதான்./செவ்வியல் என்பது சலனம் இல்லாமல் இலக்கணத்திற்குள் அடைபட்டு மக்களிடமிருந்து அன்னியப் பட்டு கிடப்பது. வாழும் இசை செவ்வியல் இசையாக இருக்க முடியாது. /இணை, கிளை, நட்பு, என்ற இந்த ‘பொருந்து சுவரக் காட்டங்கள்தான் ‘ஐரோப்பிய இசையில் (Harmonical Notes or Chords) என்று கூறப்படுகிறது. ஆக அடிப்படையில் இரு இசை மரபுகளும் ஒன்றே./";

(https://www.jeyamohan.in/459#.XKhsKfZuLIV  )

உலக இசை அறிஞர்கள் பார்வையில் தமிழ் இசையானது தாழ்வாகக் கருதப்படுவது பற்றிய எனது அனுபவங்களையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

உலகப்புகழ் பெற்ற செல்டான் பொல்லாக் போன்ற அறிஞர்கள் தமிழ் ஆய்வுகளைப் பற்றி மிகவும் கேவலமாகக் கருதியுள்ளது பற்றியும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2017/11/tamil-chair.html )

’’ எமதுள்ளம் சுடர் விடுக 34: தமிழர் இசையும் வாழ்வும்! என்ற தலைப்பில்  பிரபஞ்சன்  'தமிழ் இந்து' நாளிதழில் எழுதிய கட்டுரையைப் படித்த போது, கீழ்வரும் பகுதியானது எனது கவனத்தை ஈர்த்தது.

“இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு. ஆனால் அத்தனைச் சொற்களையும் வீழ்த்தி ‘ஸ்ருதி என்பது வழக்குக்கு வந்துள்ளதே !’’

கடந்த மார்ச் 22ஆம் தேதி அவருக்கு கீழ்வரும் மின்மடலை அனுப்பினேன்.

தங்களின் கட்டுரையில்;

இசையில் (சுருதி, ஸ்ருதி) சுதி என்று கூறும் சொல்லுக்குத் தூய தமிழ்ச் சொற்கள் 22 உண்டு."

எனது கவனத்தை ஈர்த்தது.

'அந்த 22 சொற்கள்' யாவை?" என்பதை அனுப்பினால், அவை மம்மதுவின் 'தமிழிசைப் பேரகராதி' நூலில் சரியாக 'புரிந்து' பதிவாகி உள்ளனவா? என்ற‌ எனது ஆய்வுக்கு உதவும்.”

இன்று வரை பதில் வரவில்லை. இனி வந்தாலும் வரவேற்பேன். (http://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none.html  ) பதில் தராமலேயே பிரபஞ்சன் மறைந்து விட்டதால், அதனைத் தெளிவுபடுத்த வேண்டியது மம்மதுவின் கடமையாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/01/6-10.html )

தேவநேயப் பாவாணரைப் போலவே, (https://tamilsdirection.blogspot.com/2020/12/3-researchmethodology-plato-b.html  )

மம்மதுவும் 'ஆய்வு வழிமுறை' (research methodology) பற்றிய தெளிவின்றி தமிழிசை ஆய்வுகள் மேற்கொண்டாரா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.

'நோஞ்சான் நோயில்' தமிழ்ப்புலமை  சிக்க பங்களித்தவர்களா, எழுத்தாளர்கள் ஜெயமோகன், ப.திருமாவேலன், ரவிக்குமார், பிரபஞ்சன்? என்ற கேள்வியானது கீழ்வரும் வரலாற்றுப் பின்னணியில் தான் எழுந்துள்ளது. 

தமிழின் தமிழ்நாட்டின் இன்றைய சீர்கேடுகளுக்கான சமூக செயல்நுட்பமானது வீரியத்துடன் வளர்ந்த காலக்கட்டம் 1949 முதல் 1967 வரையில் ஆகும். ஈ.வெ.ராவின் ‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்ன பகுத்தறிவுடன் (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html  ),

சிலப்பதிகாரத்தையும் உயர்த்தி, தி.மு.க‌ 'இரட்டைக்குழல் துப்பாக்கி'(?) வலிமையுடன்,

தமிழை தமது பொதுவாழ்வு வியாபார மூலதனமாக்கி வளர்ந்த காலக்கட்டம் அதுவாகும். அதே காலக்கட்டத்தில் 'வளர்ந்த' தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவருமே ஈ.வெ.ரா தமிழ் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை.

தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவராவது ஈ.வெ.ராவின் தமிழ் தொடர்பான‌ கேள்விகளுக்கு அறிவுபூர்வமான விளக்கம் தந்திருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவ்விளக்கத்தினை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

செல்டன் பொல்லோக்காக இருந்தாலும், "தீண்டாமை என்பது பழந்தமிழரால் உருவாக்கப் பட்டு கடைப் பிடிக்கப் பட்டதே என்று அறிவித்துள்ள‌ (தி.மு.க தலைவர் கருணாநிதியால் பாராட்டப்பெற்ற) ஜார்ஜ் ஹார்ட்டாக இருந்தாலும், டேவிட் டீன் சுல்மனாக இருந்தாலும், வேறு உலக அளவில் புகழ் பெற்ற அறிஞராக இருந்தாலும், தமிழ் தொடர்பான அவர்களின் தவறான ஆய்வு முடிவுகளுக்கு எதிரான சான்றுகள்,

அவ்வை நடராஜன், வைரமுத்து போன்ற கருணாநிதிக்கு நெருக்கமாகி ஊடகத்தில் செல்வாக்கு பெற்ற அறிஞர்களிடமிருந்து வெளிப்பட்டால் தான், அந்த தவறான ஆய்வு முடிவுகளால் தமிழுக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும். அந்த சமூகப் பொறுப்பினை அவர்கள் தட்டிக்கழித்தால்,

அவர்களும் 'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமையாளர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.

ஊடக பலத்தில் உயரப் பறக்கும் நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் என்ற பிம்ப பலூன்களை எல்லாம், இளம் ஆய்வாளர்கள் துணிச்சலுடன் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற வைக்கும் போக்கையும் ஊக்குவிக்க வேண்டும்.

அப்போது தான், 'நோஞ்சான் நோய்ச்சிறையில்' சிக்கியுள்ள‌ தமிழ்ப்புலமைக்கு விடுதலை கிடைக்கும். (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html )

ஒரு திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா பாடியவாறு,

தமிழ்நாட்டில் ஊடக பலத்தில் உயரப் பறக்கும் பிம்ப பலூன்களான பெரிசுகள் எல்லாம், 'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி' விட வேண்டிய காலமும் நெருங்கி விட்டது.

Monday, December 21, 2020

(முன்னாள் 'ஆனந்த விகடன்')  ப.திருமாவேலனின் கட்டுரை;

உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்தது சரியா?

 

‘ஈ.வெ.ராவைப் பாராட்டுவது’ என்ற பெயரில், அவரின் கொள்கை பற்றிய தவறான தகவல்களை உரிய சான்றுகள் இன்றி எவ்வாறு பிரபலமான நபர்கள் வெளிப்படுத்தி வருகிறார்கள்? என்ற ஆய்வுக்கு கீழ்வரும் கட்டுரையானது உதவும். 

(22.9.2019 அன்று அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன் மேரிலாந்தில், அமெரிக்க மனிதநேயர் சங்கம் நடத்திய மாநாட்டில் ஊடகவியலாளர் ப.திருமாவேலன் ஆற்றிய உரை எழுத்து வடிவத்தில்):

https://minnambalam.com/k/2019/09/27/34

ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!

எனவே, பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும்.

‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன் என்று பெரியார் எழுதியிருக்கிறார்……….. 

 ‘‘ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம். அதனால், நான் திராவிடர் கழகம் என்று பெயர் சூட்டுகிறேன்.

‘திராவிடர் கழகம்' என்று நான் பெயர் வைக்காமல் போயிருந்தால், வேறு என்ன பெயர் வைத்திருப்பேன் என்று சொன்னால், சூத்திரர் கழகம் என்று வைத் திருப்பேன்'' என்றார். இதுதான் தந்தை பெரியார்.” - மேற்குறிப்பிட்ட கட்டுரையில்

"ஆரியம் என்பதற்கு எது எதிர் என்றால், திராவிடம்!" என்று ஈ.வெ.ரா பயன்படுத்தியது உண்மையே.  ஆனால் "பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தவில்லை. அதில் முதலில் நமக்கே ஒரு தெளிவு வேண்டும். ‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை."

என்ற நிலைப்பாட்டிற்கு ஆதரவாக ப.திருமாவேலன் ஒரு சான்றினையும் காட்டவில்லை.

ஆனால் " "பெரியார் அந்த சொல்லை இனச்சொல்லாகவோ அல்லது மொழிச் சொல்லாகவோ ‘திராவிடம்' என்கின்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்" என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

உதாரணமாக, 

“தென்னாப்பிரிக்க வெள்ளையர் கொடுமையை விட அதிகமாக திராவிடர்களை ஆரியப்பார்ப்பனர் நடத்துகின்றனர்" தந்தை பெரியார்  பெரியார் ஆண்டு 107  - 108  நாட்குறிப்பு, பெரியார் திடல், சென்னை

“நாம் தமிழர்கள் திராவிடர்கள் -  ஆரியர் வேறு தமிழர் வேறு. இவ்விருவர்களுடைய நலனும் லக்ஷ்யமும் வேறு வேறு என்பதற்கும் ஆகவே இவற்றை இவ்வளவு வலியுறுத்திக் கூறுகிறேன்.”- ‘அறிவின் எல்லை  - பெரியாரின் எழுத்தும் பேச்சும்’;   குடி அரசு பதிப்பகம், ஈரோடு ;  ‘ திராவிடர் ஆரியர் உண்மை’ தலைப்பில் இருந்து.

“சில விஷயங்களில் மட்டும் நம்மைத் திராவிடர்கள் என்றும், திராவிடம் வேறு என்று சொல்லிக் கொண்டு வேறு அநேக விஷயங்களில் ஆரியத்திற்கு அடிமையாக நடந்து கொண்டால் இரண்டுங்கெட்ட இழிநிலையைத் தான் அடைகிறோமே ஒழிய வேறில்லை”   பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுதி 5 தத்துவம் 2, பக்கம் 4128

'திராவிடர் கழகம்' என்ற பெயரில் இருந்த 'ர்' என்ற எழுத்தினை அகற்றி, 'திராவிட முன்னேற்ற கழகம்' என்ற பெயரிட்டதற்கான காரணத்தை அண்ணா விளக்கியுள்ளார். அதனை 'தி.மு.க வரலாறு' நூலில் படித்த ஞாபகம் இருக்கிறது. "பெரியார் குறுகிய இன அடிப்படையில் திராவிட நாடு பிரிவினைக் கேட்கிறார். தி.மு.க 'திராவிட' என்ற புவியியல் அடிப்படையில் திராவிட நாடு' கேட்கிறோம் என்ற வகையில் அண்ணா விளக்கியுள்ளார்.

எனவே அத்தகைய அண்ணாவின் கருத்தினை ஈ.வெ.ராவின் நிலைப்பாடாக,

"‘திராவிட இனம்' என்று பெரியார் தன்னை அழைத்துக் கொள்ளவில்லை. திராவிட மொழிக் கூறுகளைச் சேர்ந்த நாம், திராவிட மொழி பேசுபவர்கள் என்பதற்காகவும் சொல்லவில்லை. திராவிடம் என்பதை நான் ஒரு அரசியல் சொல்லாகப் பயன்படுத்துகிறேன்" என்று ஈ.வெ.ரா தெரிவித்தது போல, ப.திருமாவேலன் பதிவு செய்திருப்பது பெரும் தவறாகும். 

அடுத்து ப.திருமாவேலன் கீழ்வரும் கருத்தினையும் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் பதிவு செய்துள்ளார்.

"திராவிடர் கழகத்திற்குத் திருக்குறள்தான் வழிகாட்டி, வேறு நூல் இல்லை'' என்று 1948 இல் சொன்னவர் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்"

கிழ்வரும் ஈ.வெ.ராவின் நிலைப்பாடு தெரியாமலேயே, மேற்குறிப்பிட்ட கருத்தினை ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

“வள்ளுவர் குறளையும், அந்தப்படியே அப்போது பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும் போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய் விட்டால் நமக்கு எதுதான் நூல்?’ என்று கேட்பார்கள். நான், இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது. அதை எடுத்து விடுஎன்று கூறினால் ‘அந்த இடத்தில் என்ன வைப்பது என்றா கேட் பது..?” என்று பதில் கூறுவேன்.- விடுதலை (1.6.50)யில் பெரியார்

உரிய சான்றுகள் இன்றி, கீழ்வரும் கருத்தினையும் ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

"தமிழும் ஒரு காலத்தில் உயர்ந்த மொழியாகத்தான் இருந்தது. இன்று அது வடமொழி கலப்பால், இடது கை போல பிற்படுத்தப்பட்டு விட்டது. இந்நோய்க்குக் காரணம், மதச்சார்புடையோரிடம் தமிழ் மொழி சிக்கிக் கொண்டதுதான். தமிழிலிருந்து சைவத்தையும், ஆரியத் தையும் போக்கிவிட்டால், நம்மை அறியாமலேயே நமக்குப் பழந்தமிழ் கிடைத்துவிடும் என்று சொல்லி, தனித்தமிழ் இயக்கத்தினுடைய சிந்தனையை தனது சிந்தனையாக சொன்னவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள்"

கிழ்வரும் ஈ.வெ.ராவின் நிலைப்பாடு தெரியாமலேயே, மேற்குறிப்பிட்ட கருத்தினை ப.திருமாவேலன் பதிவு செய்துள்ளார்.

“தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.. தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன்.”                  'பெரியார்' ஈ.வெ.ரா-  “தாய்ப்பால் பைத்தியம் என்ற நூலிலிருந்து.

"நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்து இன்றைக்கு 20வது ஆண்டு நடக் கிறது. 20 ஆண்டு சுதந்திர வாய்ப்பில் தமிழ் மக்கள் அடைந்த நிலை, ‘இங்கிலீஷ் வேண்டாம்; தமிழ்வேண்டும்.’ இதுதானா? அய்யோ பைத்தியமே தமிழை (பிற மொழிகளிலிருந்து மொழி பெயர் க்கப்படாத) தமிழ் மூல நூல்களை, தனித் தமிழ் இலக்கிய நூல் களில் எதை எடுத்துக்கொண்டாலும், அவற்றிலிருந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி என்பதான இலக்கணப்படி அமைந் த தமிழ் ‘சுவை அல்லாமல் அறிவு, பகுத்தறிவு, வாழ்க் கை அறிவு, வளர்ச்சி பெறுவதற்கான ஏதாவது ஒரு சாதனத்தை சிறு கருத்தை பூதக் கண்ணாடி வைத்து தேடியாவது கண்டு பிடிக்க முடியுமா? கண்டு பிடித்துப் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்று தமிழ் அபிமானிகளை வணக்கத்தோடு கேட்கிறேன். – தந்தை பெரியார்

தொல்காப்பியன் ஆரியக்கூலி. ஆரிய தர்மத்தையே தமிழ் இலக் கணமாகச் செய்துவிட்ட மாபெரும் துரோகி. திருவள்ளுவன் அக் காலத்திற்கு ஏற்ற வகையில் ஆரியக் கருத்துக்கு ஆதரவு கொடுக்கும் வகையில், பகுத்தறிவைப் பற்றிக் கவலைப்படாமல் நீதி கூறும்வகையில் தனது மத உணர்ச்சியோடு ஏதோ கூறிச் சென்றார்".- தந்தை பெரியார் ‘தமிழும், தமிழரும் நூலில்

காங்கிரசில் இருந்து வெளியேறும் முன், தமிழ் தொடர்பாக, கீழ்வரும் கருத்தினை ஈ.வெ.ரா வெளிப்படுத்தியுள்ளார்.

"ஒரு நாட்டிற் பிறந்த மக்களுக்கு வேண்டப்படும் பற்றுகளுக்குள் தலையாய பற்று மொழிப்பற்றேயாகும்.  மொழிப்பற்றிராதாரிடத்துத் தேசப்பற்றிராதென்பது நிச்சயம்........ தமிழ் மொழியின் பழமையையும், தமிழ் மக்கள் நாகரிகத்தையும் பழந்தமிழ் நூல்களிற் காணலாம்.தமிழரசர்கள் ய‌வன தேசம், ரோமாபுரி, பாலஸ்தீனம் முதலிய தேசங்களோடு வியாபாரம் செய்ததும், அவ்வியாபாரத்திற்கேற்ற தொழில்கள் நாட்டில் நிலைத்திருந்ததும் பிறவும் தமிழ்நாட்டின் முழுமுதற்றன்மையை விளங்கச் செய்யும். அத்தகைய தமிழ்நாடு இப்பொழுது  சீரும் சிறப்புமிழந்து அல்லலுறுகின்றது. தமிழ்நாட்டிற் பிறந்தவர்களுக்கு மொழிப்பற்று அவசியம்! அவசியம்! என்று சொல்கிறேன்." -  1924ஆம் ஆண்டு டிசம்பரில் திருவண்ணாமலையில் கூடிய 30வது காங்கிரஸ் மாநாட்டில் ஈ.வெ.ரா தலைமை தாங்கி முன்னுரையில் பேசியது. ( பக்கம் 135  136 ,தமிழர் தலைவர், சாமி.சிதம்பரனார் )

1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரையில்; 1925 முதல் 1939இல் நீதிக்கட்சியின் தலைவராகும் வரையில், 1939 முதல் 1944இல் திராவிடர் கழகம் துவங்கியது வரையில், 1944 முதல் 1949இல் தி.மு.க தொடங்கியது வரையில், 1949 முதல் 1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது வரையில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து முனிவராகி விட ஈ.வெ.ரா விரும்பி, அண்ணாவும் காமராஜரும் அவரின் மனதை மாற்றியது முதல் 1973இல் சாகும் வரையில்;

என்று 'தமிழ், திராவிடர், ஆரியர், இந்தி' தொடர்பாக, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன என்பது பற்றிய அறியாமையில், உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து எவ்வாறு கட்டுரை எழுத முடியும்? என்பதற்கான பாடப்புத்தகத்தில் இடம் பெறத் தகுதியுள்ள மேற்குறிப்பிட்ட கட்டுரையினை ப.திருமாவேலன் எழுதியுள்ளார்.

மேற்குறிப்பிட்ட ப.திருமாவேலனின் கட்டுரையில் உரிய சான்றுகள் இன்றி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளைத் திரித்து வெளிவந்துள்ளதை, 'பெரியார்' கட்சிகள் இதுவரை மறுக்கவில்லையென்றால், அது இன்றைய வரலாற்றில் தவறாகவே இடம் பெறும். 

குறிப்பு:

'பெரியாரைப் புரியாத பெரியாரிஸ்ட்டுகளும்... தமிழ் தேசியவாதிகளும்...!’ என்ற தலைப்பில்  ப.திருமாவேலன்  எழுதிய கட்டுரையானது எனது கவனத்தை ஈர்த்தது.

'நவம்பர் 1 - தமிழ்நாடு உருவான நாள்'  தொடர்பான  விவாதங்களில், பெரியாரிஸ்டுகளும், தமிழ்த் தேசிய சிந்தனையாளர்ளும்,  மேற்கொண்ட நிலைப்பாடுகளில் உள்ள  குறைபாடுகளை, இக்கட்டுரை சரியாக வெளிப்படுத்தியுள்ளது, என்பது என் கருத்தாகும்.

ஆனால், தாய்மொழியான தமிழ், பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களையே  நோய்களாக கருதி, வெறுத்து, முன்வைத்த இந்த கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வில் சுயநலக் கள்வர்கள் வளர வழி வகுத்தது? என்பது தொடர்பாக, கீழ்வரும் தொடர் உள்ளிட்ட‌, எனது பதிவுகளில், உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தியுள்ளேன்.

அவற்றை கணக்கில் கொள்ளாமல், ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற பிம்ப‌ சிறையில் சிக்க வைக்கும் போக்கிலேயே,  இக்கட்டுரையானது  வெளிவந்துள்ளது.’ (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_5.html)

Saturday, December 19, 2020

 

தமிழும் தமிழ்நாடும் சீரழிய, ஈ.வெ.ராவை விட அதிகம் பங்களித்தது தேவநேயப் பாவாணரா? (2)


தமிழரின் பாரம்பரியம் பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தேவநேயப்பாவாணர்?

 

'தமிழ்நாட்டில் ஊழலும் ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து உச்சமாகி, இன்று மாணவர்கள் உலகத்திலும் கொலை, தற்கொலை, (மேல்நடுத்தட்டு-upper middle class- குடும்பப்பிள்ளைகளும் கூட, அதிகவிலையுள்ள Smart Phone போன்றவைகளை) திருட்டு, (மது/போதை மாத்திரை, சினிமா போன்ற தேவைகளை மறைத்து பொய் சொல்லி) தெருவில் பிச்சை கேட்டல் போன்றவை எல்லாம் அதிகரித்துள்ள விளைவில் முடிந்துள்ளது.' (https://tamilsdirection.blogspot.com/2018/06/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

'தாய்ப்பால் பைத்தியம்' மூலம் ஈ.வெ.ராவால் தமிழரின் தாய்மொழி அடையாளத்திற்கு ஏற்பட்ட பாதிப்புகள், தமிழரின் பாரம்பரியம் பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தேவநேயப்பாவாணர் ஏற்படுத்திய‌ பாதிப்புகள் எல்லாம் சேர்ந்து, தமிழரின் 'சமூக உளவியலில்’ (social psychology) என்னென்ன பாதிப்புகளை விளைவித்தன? அதன் தொடர்விளைவாக, தமிழர்களின் செயல்பாடுகளின் பின்னணியில் உள்ள அவர்களின்  மனங்களின் தேவைகளும் (needs) ஈடுபாடுகளும் (interests) எவ்வாறு சீரழிந்தன? என்ற ஆய்வின் மூலமே, மேற்குறிப்பிட்ட நிலைக்கு தமிழ்நாடு எவ்வாறு வந்தடைந்தது? என்று கண்டுபிடிக்க முடியும்.

சமூகத்தில் தாய்மொழி, அதனுடன் பிணைந்த பாரம்பரியம், பண்பாடு போன்றவையெல்லாம் மனிதரின் மனங்களில் அவை தொடர்புள்ள தேவைகளையும் (Needs) , ஈடுபாடுகளையும் (Interests)  தோற்றுவித்து வளர்த்து, சமூக ஆற்றலுக்கு பங்களிப்பு வழங்கி, எவ்வாறு ஆக்கபூர்வமான சமூக வாழ்வுக்கு சமூக இழைகள்(social fibers)  போன்றும், சமூகப் பிணைப்புகள் (social bonds) போன்றும் செயல்படுகின்றன? (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ் தொடர்பாக ஈ.வெ.ரா முன்வைத்த கேள்விகளுக்கு (குறிப்பு கீழே) தகுந்த அறிவுபூர்வமான விளக்கம் தராத தேவநேயப் பாவாணர், மேற்குறிப்பிட்ட ஈ.வெ.ராவின் தவறான நிலைப்பாட்டிற்கு வலிவு சேர்க்கும் வகையில் எவ்வாறு செயல்பட்டார்? தமிழர்களின் சமயத்தைத் தாழ்த்தி, தமது கிறித்துவ மதத்தை உயர்த்தி, எவ்வாறு சமூக நேர்மையில் இருந்தும், அறிவு நேர்மையில் இருந்தும் தடம் புரண்டு பயணித்தார்? என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்தினால், தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு சீரழிவதைத் தடுக்க முடியாது.

அத்தகைய விவாதத்திற்கு துணை புரியும் வகையில்,

'நண்பர் திரு.மா.குமார் அவர்கள் தந்துள்ள பாவாணர் கருத்துகளுக்கு

விரிவாக இங்குத் தக்க சான்றுகளோடு பதில் அளிக்கப்பட்டுள்ளது.' முனனவர் இரா.சிவகுமார்' எழுதிய பதிவில் இருந்து,

கீழ் வருவதைக் கணக்கில் கொண்டாக வேண்டும். 

வேர்கனளக் கண்டால் தான் எந்த குடும்பத்னதச் சேர்ந்தது ஒரு சொல் என்பதை நிறுத்த முடியும்.

சுமேருத் தமிழ் இவர் ஆய்விற்கு பெரிதும் உதவி இருக்கும். ஆனால் இவர்

சில சுமேரிய சொற்கனள விவிலியத்தின் வழி ஆய்ந்தாரேத் தவிர மூல

சுமேரு இலக்கியங்கனளக் கற்றுத் தனது கருத்துகனளக் கூறவில்னல.

- உலகன்

Source: https://groups.google.com/g/vallamai/c/W7k8pVo_rL4

சுமேருத் தமிழ் தமிழின் தொன்மைக்கும் மாண்புக்கும் மிகப் பெரிய

அடித்தளம் என்பதனை அறிஞர் ஐயா கி.லோகநாதன் மட்டுமின்றி,

இரஷிய அறிஞரும் ஆய்ந்து கூறியுள்ளது கலைஞர் மு.கருணாநிதி

காலத்தில் உலகத்தமிழ்ஆராய்ச்சி மாநாட்டிலும் வெளிப்பட்டது. ஆனால்

இந்தத் தமிழின் மூலத்தைப் பாவாணர் அவர்கள் ஆழ்ந்து ஆராயாமல்

போனது அவரின் தமிழ்மொழி ஆய்வின் பெருங்குறையையே

காட்டுகிறது.

கிறித்துவ மதத்தில் இருக்கும் குறைபாடுகள் எதனையும்

சுட்டிக்காட்டி அதனை மாற்றி அமைக்கும் முயற்சியில் துணியாத அவர்,

மதத்தால் கிறித்துவராக இருந்தும் இந்து மதக் கருத்துக்களையும்

நனடமுறைகளையும் குறையுரைத்துள்ளார் என்பதற்கான சான்றுகளும் வெளிவந்துள்ளன.

பாவாணர் அவர்கள், இந்து சமயத்தில் அர்ச்சகர் அல்லது தரகர் கூடாது

என்று சொல்லும் அதே வேளையில் தேவாலாயத்தில் பாதிரியார் என்னும்

தரகர் கூடாது என்று சொல்லாதது வியப்பைத்தருகிறது!

‘தமிழர் திருமணம்என்று நூல் எழுதிய பாவாணர் அவர்கள் தம்

திருமணத்தையும் தம் மக்களின் திருமணத்தையும் கிறித்துவ

முறைப்படியே தேவாலாயத்தில் செய்திருக்கின்றார்.

'சிற்பம், ஓவியம், இசை, புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் என்பவை அவற்றை உருவாக்கியவர்களின் திறமைகளைப் பொறுத்து பல பரிமாணங்களை உள்ளடக்கியவை' என்பது தொடர்பான அறியாமையில் ஈ.வெ.ரா பயணித்தது போலவே (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  ),

கிறித்துவராகப் பிறந்து, மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (western paradigm) அடிமையாகி, தேவநேயப்பாவாணரும் பயணித்தாரா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.

தமிழர்களின் ஆணிவேர்களாக தாய்மொழித் தமிழும் பாரம்பரியப் பண்பாடும் இருக்கிறது. அதில் ஈ.வெ.ரா அவர்கள் தமது அறிவு வரைஎல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, தமிழ் தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில் தாம் கேகரித்த சமூக ஆற்றலைப் பயன்படுத்தி, பாதிப்புகளை விளைவித்துள்ளார்.

தேவநேயப்பாவாணர் ஈ.வெ.ராவின் பணியை எளிதாக்கும் வகையில், தமிழரின் பாரம்பரியம் (HERITAGE) பண்பாடு தொடர்பான ஆணிவேரை அழிக்கும் முயற்சியில், தாம் கேகரித்த 'தமிழ்த்தேசிய' சமூக ஆற்றலைப் பயன்படுத்தி, பாதிப்புகளை எவ்வாறு விளைவித்தார் ? என்ற விவாதத்தினை இனியும் தாமதப்படுத்தினால், தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு சீரழிவைதைத் தடுக்க முடியாது.

பொதுவாக கிறித்துவ முஸ்லீம் மதங்களைப் போல, தமிழர்களின் சமயத்தை ('இந்து' மதத்தையும்) அணுகுவதானது அறிவுபூர்வமாகாது. ஏனெனில், கிறித்துவ பைபிள், முஸ்லீம் குர்ரான் போன்று, தமிழர்களின் சமயத்திற்கு பொது நூல் கிடையாது. அது மட்டுமல்ல, உயிரற்ற மற்றும் உயிருள்ள பொருட்கள் உள்ளிட்ட எண்ணற்ற கடவுள்களில் எந்த கடவுளையும், தாம் விரும்பும் எந்த முறையிலும் வழிபடும் உரிமையானது தமிழர் சமயத்திலும் (இந்து மதத்திலும்) இருக்கிறது. கிறித்துவ முஸ்லீம் மதங்களில் ஏசுவையும் அல்லாவையும் மறுப்பவர்களுக்கு மதரீதியிலான தண்டனைகள் உண்டு. ஆனால் தமிழர் சமயத்திலும் (இந்து மதத்திலும்) நாத்திகராக விரும்பி வாழ்பவர்களுக்கு எந்த தண்டனையும் கிடையாது.

‘ஒரு மனிதன் தான் விரும்பும் கடவுளை, தான் விரும்பும் முறையில் வழிபடுவதற்கும், வழிபடாமல் இருப்பதற்கும், வழிபடும் கடவுளை மாற்றிக் கொள்வதற்கும், கடவுளை மறுப்பதற்கும், இன்று அதிகபட்ச விடுதலை வழங்கியுள்ள ஒரே மதம் இந்து மதமாகும்.

அது மட்டுமல்ல, ஒரு மனிதனின் சுய விடுதலையையும் (Self liberation), சமூகத்திற்கும், இயற்கைக்கும் தொடர்புள்ள வகையில், ஒரு மனிதனுக்கான மனித உரிமைகள் இருப்பதையும், ஊக்குவிக்கும் மதம் இந்து மதமாகும். கிறித்துவ மதப் போக்கிற்கு எதிராக வெடித்த கிளர்ச்சிகளின் போக்கில், மேற்கத்திய உலகில் முன்னிறுத்தப்பட்ட தனிமனித உரிமைகளின் வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழ்நாட்டில் அதனை இறக்குமதி செய்வதில் உள்ள ஆபத்துகளையும், நான் எச்சரித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2015/03/12.html  )

எனவே தான், பிரெஞ்சு நாட்டை சேர்ந்த நாத்திகர் ஜீன் பெர்ரி லேமான், உலக முன்னேற்றத்திற்கு உலக மதமாகும் தகுதியானது, இந்து மதத்திற்கு இருப்பதாக அறிவித்துள்ளார். (According to the atheist minded Western writer Jean-Pierre Lehmann , “  The planet needs a sense of moral order, spirituality and an ethical compass. The Indian religious and philosophical traditions can provide a great deal of all three.” In his article ‘The Dangers of Monotheism in the Age of Globalization’ . )

ஈ.வெ.ரா அவர்களின் நாத்திகப் போக்கானது, தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு சாதகமாகி, எந்த அளவுக்கு (ஈ.வெ.ரா அவர்களே வலியுறுத்திய) பொது ஒழுக்கத்தையும், பொது ஒழுக்கத்திற்கான திசை காட்டியையும், ஆன்மீகத்தையும் (“sense of moral order, spirituality and an ethical compass”) சீர்குலைத்தது? என்பது பற்றிய எனது ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளேன்.’ (‘பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி பயணித்த; 'பெரியார்' ஈ.வெ.ராவின் நாத்திகம்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/semanticdistortion.html )

தமிழின் தமிழ்நாட்டின் இன்றைய சீர்கேடுகளுக்கான சமூக செயல்நுட்பமானது வீரியத்துடன் வளர்ந்த காலக்கட்டம் 1949 முதல் 1967 வரையில் ஆகும். ஈ.வெ.ராவின் ‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’ என்று சொன்ன பகுத்தறிவுடன் (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html ),

சிலப்பதிகாரத்தையும் உயர்த்தி, தி.மு.க‌ 'இரட்டைக்குழல் துப்பாக்கி'(?) வலிமையுடன்,

தமிழை தமது பொதுவாழ்வு வியாபார மூலதனமாக்கி வளர்ந்த காலக்கட்டம் அதுவாகும். அதே காலக்கட்டத்தில் 'வளர்ந்த' தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவருமே ஈ.வெ.ரா தமிழ் தொடர்பாக முன்வைத்த கேள்விகளுக்கு அறிவுபூர்வமாக விளக்கம் தந்ததாகத் தெரியவில்லை.

தேவநேயப்பாவாணர், பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பல தமிழ்த்தேசிய புலமையாளர்களில் எவராவது ஈ.வெ.ராவின் தமிழ் தொடர்பான‌ கேள்விகளுக்கு அறிவுபூர்வமான விளக்கம் தந்திருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவ்விளக்கத்தினை நான் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.

வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாரபட்சமின்றி, பிறரின் ஆய்வுகளை விமர்சிப்பதும், தமது ஆய்வுகளையும் அவ்வாறு விமர்சிக்க ஊக்குவிப்பதுமே, புலமையின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். தமது ஆய்வுகளை அவ்வாறு விமர்சிப்பதை வெறுப்பவர்கள் எல்லாம் (நானாயிருந்தாலும், யாராயிருந்தாலும்)  நோஞ்சான் புலமையாளர்கள் ஆவார்கள்.

நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் எல்லாம், ஊடக பலத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், எந்த நேரத்திலும் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற காத்திருக்கும் பிம்ப பலூன்களே ஆகும். (‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை? ‘; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html )

தேவநேயப்பாவாணர் உருவாக்கிய 'தமிழ்த்தேசிய போதையில்' தி.மு.கவின் வளர்ச்சிக்கு உதவி, 1967 முதல் இன்று வரை தமிழ்நாட்டின் மலைகள், தாது மணல், ஏரிகள், ஆறுகள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் ஊழல் பெரும்பசிக்கு இரையானதையும், அச்சுறுத்தி, கொலை செய்து தனியார்ச்சொத்துக்களை அபகரித்ததையும் எதிர்க்காத அளவுக்கு 'பெரியார்' போதையும், 'தமிழ்த்தேசிய போதையும் சங்கமமானது. அந்த சங்கமமானது சமூக உளவியலில் ஏற்படுத்திய பாதிப்புகள் மூலமாகவே, தமிழ்நாட்டில் நோஞ்சான் தமிழர்கள் அதிவேகமாக வளர்ந்தார்கள்.‌ (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html )

தேவநேயப் பாவாணரின் ‘தமிழ்மொழி ஆய்வின் பெருங்குறையை’ மேலே பார்த்தோம். அவரின் தொல்காப்பிய ஆய்வில் உள்ள குறைபாடுகளையும் ஏற்கனவே கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

‘தேவநேயப் பாவாணரின் தொல்காப்பியம் ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடி?’; https://tamilsdirection.blogspot.com/2020/12/4.html

பழந்தமிழ் இலக்கியங்களில் ‘தமிழ் இசையியல்’ (Tamil Musicology) தொடர்பான சொற்களுக்கு தேவநேயப்பாவாணரின் சொல்லாராய்ச்சி சரியான விளக்கம் தரவில்லையா? என்ற ஆராய்ச்சிக்கு உதவும் வகையில், கிழ்வரும் இரு பதிவுகளை வெளியிட்டுள்ளேன்.

தமிழ் லெக்சிகனில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2018/12/3-tamil-musicology-musical-linguistics.html

 

தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளையும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html

மேலும் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு, கீழ்வரும் நூலும் முக்கியமானதாகும்.

‘DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION’ ; https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

மேற்குறிப்பிட்ட பின்னணியில், தேவநேயப் பாவாணரின் சொல்லாராய்ச்சியானது, எவ்வாறு தமிழ்ச்சொற்களை பொருள்திரிபுக்கு (semantic distortion) உள்ளாக்கிய காலனி சூழ்ச்சிக்குத் துணை போனது? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது?

(வளரும்)

 

குறிப்பு :

‘தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.. தாய்க்கு நல்ல உணவு இருந்தால்தானே அவளுக்கு பாலும் ஊறும்; அந்தப் பாலுக்கும் சக்தி இருக்கும்! தமிழில் நல்ல உணவு எங்கே இருக்கிறது? இப்படிப்பட்ட இந்தத் தாய்ப் பாலைக் குடித்து வளர்ந்த பிள்ளைகள், இந்நாட்டிலேயே நடைப்பிணமாய் இருப்பதைத் தவிர, அதுவும் மற்றவன் கை காலில் நடப்பதைத் தவிர, உழைப்புக்கு காரியத்துக்குப் பயன்படும்படியான, தன் காலால் தாராளமாய் நடக்கும்படியான பிள்ளை – ஒற்றைப் பிள்ளை தமிழ்நாட்டில் இருக்கின்றதா என்பதை அன்பர்கள் காட்டட்டுமே – என்றுதான் பரிவோடு கேட்கிறேன். இன்றைய தினம் கூட மேற்கண்ட தமிழ்த் தாயின் பாலை நேரே அருந்தி வளர்ந்த பிள்ளைகள், இங்கிலீஷ் புட்டிப் பாலை அருந்தி இருப்பார்களேயானால், இந்த அன்பர்கள் உட்பட எவ்வளவோ சக்தியும், திறமையும் உடையவர்களாக ஆகி, இவர்கள் வாழ்க்கை நிலையே வேறாக, அதாவது அவர்கள் நல்ல பயன் அடைபவர்களாக ஆகி இருப்பார்கள் என்பதோடு, மற்றவர்களுக்கும் பயன்படும்படியான நல்ல உரம் உள்ள உழைப்பாளிகளாகி இருப்பார்கள் என்று உறுதியோடு கூறுகிறேன். 

– 'பெரியார்' ஈ.வெ.ரா-  “தாய்ப்பால் பைத்தியம்என்ற நூலிலிருந்து.


'ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வு முடிவுகள் தவறானது போலவே; ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே'; 

https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html

Wednesday, December 16, 2020

 

தமிழும் தமிழ்நாடும் சீரழிய,


ஈ.வெ.ராவை விட அதிகம் பங்களித்தது தேவநேயப் பாவாணரா? (1)

 

தமிழ்வழிக்கல்வியின் மரண அறிவிப்பு நெருங்கி விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_23.html)

பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா? (https://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html)

தமிழும் தமிழ்நாட்டில் தமிழர்களும் சீரழிந்து வருவதை மேலுள்ள பதிவுகள் விளக்கியுள்ளன.  

2016 சனவரியில்,

'தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? ‘ (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

என்ற பதிவில், கீழ்வரும் கருத்தினை வெளியிட்டேன்.

'இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும் கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்?'

மேற்குறிப்பிட்ட பதிவிற்கு 'பெரியார்' கட்சிகளிடமிருந்து இன்றுவரை எந்த மறுப்பும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை. இனி வெளிவந்தாலும் வரவேற்பேன்.

கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளை விட சிறப்பாக அரசுப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி, மூடும் அபாயத்தில் இருந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஒதுக்கீடு செய்து, மேற்குறிப்பிட்ட சமூகநீதி திசையில் ஈபிஎஸ் ஆட்சி பயணிப்பதானது, நான் எதிர்பார்க்காத அதிசயமாகும். (குறிப்பு கீழே)

மேற்குறிப்பிட்டது உள்ளிட்ட எனது பதிவுகளில், தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, காலனிய ஆட்சியில் 'இனம், சாதி' பொருள் திரிபு (semantic distortion) சூழ்ச்சி பற்றிய தெளிவின்றி, 1944இல் ஈ.வெ.ரா 'திராவிடர் கழகம்' தொடங்கி, 1949இல் தி.மு.க தோன்றக் காரணமானார் என்பதையும்;

அதன் விளைவாக, தமிழரின் 'மானமும் அறிவும்' எவ்வாறு சீர்குலைந்து, இன்று தமிழ்நாடானது தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது? என்பதையும்; (https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post.html  )

ஏற்கனவே விளக்கியுள்ளேன். இசை ஆராய்ச்சிக்கு முன், 'பெரியார்' இயக்கத்தில் பங்களித்த காலத்தில், ஈ.வெ.ராவின் தமிழ் தொடர்பான‌ 'தாய்ப்பால் பைத்தியம்' நிலைப்பாட்டினை ஏற்று, நான் ''சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' திசையில் பயணித்தேன்.

ராஜிவ் கொலைக்குப் பின், தமிழ்நாடானது பொதுவாழ்வு வியாபாரிகளின் ஆதிக்கத்தில் சிக்குண்டு பயணித்ததும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளியிட்ட அபாய எச்சரிக்கை வெளியீடுகளை புறக்கணித்து, 'அரசியல் தற்கொலைப் போக்கில்'  ஈழ விடுதலை பயணித்ததும்;

எனக்குள் ஏற்படுத்திய வெறுப்பின் காரணமாக, அதுவரை பொழுதுபோக்காக ஈடுபட்டிருந்த நான்,  இசை ஆய்வில் முழுமையாக ஈடுபடத் தொடங்கினேன்.

இசை இயற்பியல் (Physics of Music) ஆய்விற்கு பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தினேன். தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவின்றி, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழி, தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் பற்றிய தவறான புரிதலில், 'தமிழ் அடையாள அழிப்பு' நோக்கி பயணித்தது எனக்கு தெளிவானது. 2005 முதல் இன்றுவரை அது தொடர்பாக முன்வைத்து வரும் கருத்துக்களுக்கு, கடந்த சில வருடங்களாக 'பெரியார்' ஆதரவாளர்களிடமிருந்து பின்னூட்டங்கள் வரத் தொடங்கியுள்ளதானது வரவேற்க வேண்டியதாகும். (https://tamilsdirection.blogspot.com/2017/12/1-music-informationtechnologist-inputs.html)

அது போலவே, தேவநேயப் பாவாணரை முன்நிறுத்தும் தமிழ்த்தேசியர்களிடம் இருந்தும் விமர்சனங்கள் வெளிவருவதை ஆவலுடன் வரவேற்கிறேன்.

1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பிராமணர்கள் பங்கேற்றதையும், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்கள் ஆதரித்ததையும், பிராமணர்கள் அமைப்பில் ஈ.வெ.ரா உரையாற்றியதையும் கணக்கில் கொண்டால், ஈ.வெ.ராவின் 'பார்ப்பன எதிர்ப்பு' என்பதானது, 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' ஆகாது. (https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html)

ஆனால் பெரும்பான்மையிரான தமிழ்த்தேசியர்கள் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா'வில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

ஈ.வெ.ராவை  எதிரியாக அணுகும் தமிழ்த்தேசியரின் தவறான கருத்தினையும், தமிழ்த்தேசியர்கள் சமூக முதுகெலும்பு முறிந்து பயணித்ததையும் கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

'ஒரு தமிழ்த்தேசியர் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

‘ "ஈவேரா வை தமிழ் தேசியவாதிகள்; நான் உட்பட விமர்சிப்பதற்குக் காரணம் கண்டிப்பாக அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லவே அல்ல. அவரின் திராவிடக் கொள்கையால் என் தமிழ் இனத்துக்கு தமிழ் அடையாளத்துக்கு, தமிழ் மெய்ஞானத்திற்கு நேர்ந்து விட்ட படுபாதகத்தினால் தான் என்பது மட்டுமே உண்மை. இதே ஈவேரா அவர்களை நான் தமிழன் அல்லாத தமிழ் நாட்டு தெலுங்கராகவோ, மலையாளியாகவோ, கன்னடராகவோ இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவேன் அன்றோ. காரணம் அவரின் திராவிடக் கொள்கையால் இவர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் பலவாகும்."

ஈவெராவின் தொண்டுகளால் எவ்வாறு மலையாளிகளும் கன்னடர்களும் தெலுங்கர்களும் பலனடைந்தார்கள்? என்பதை உரிய சான்றுகளுடன் எந்த தமிழ்த்தேசியராவது விளக்கினால் நன்று.

மேற்குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்தியவர், பிரபாகரனையும் பெருஞ்சித்தரனாரையும் உயர்த்தி ஈவெராவைத் தாழ்த்தியுள்ளார்.1980களில் பிரபாகரன் எதிர்த்த புளோட் உமா மகேசுவரனை பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் ஆதரித்தார்கள். பெரியாரிஸ்ட்களான கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களின் ஆதரவே விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பிரபாகரன் புளோட் உமா மகேசுவரன் உள்ளிட்ட பிற குழுக்களின் தலைவர்களையும் ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற போது, பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் அதை விமர்சிக்காமல் மெளன சாட்சிகளாகப் பயணித்து, பின் பிரபாகரன் தீவிர ஆதரவாளர்கள் ஆனார்கள்.' (https://tamilsdirection.blogspot.com/2020/11/blog-post_11.html )

காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான சிக்கலில் எவ்வாறு ஈ.வெ.ரா சிறைபட்டுள்ளார்? என்பதையும்,  கீழ்வரும் பேரா.தா.மணி முகநூல் விவாதத்தில் வெளிப்படுத்திய கருத்து தொடர்பான‌ கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியுள்ளேன்.

https://tamilsdirection.blogspot.com/2020/10/unique.html

தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழ்த்தேசியர்கள் 'வழிபடும்' தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளை எல்லாம் எனது ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளேன்.

நடுநிலைப்பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி, பின் உயர்நிலைப்பள்ளி, கல்லூரி ஆசிரியர் என்று உயர்ந்த தேவநேயப் பாவாணரின் ஆய்வுகள் 'ஆய்வு வழிமுறை' (Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்டவையா? என்ற கேள்விக்கான நியாயத்தையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/12/3-researchmethodology-plato-b.html)

எந்த மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்களும், அந்த மொழியையே எதிரியாகக் கருதும் செனோபோபியா நோயில் சிக்கமாட்டார்கள்.

உதாரணமாக, இன்று தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியையும், எனவே தமிழையும் மரணப்பயணத்திற்கு உள்ளாக்கி வரும் ஆங்கிலத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள், ஆங்கில மொழியையே எதிரியாகக் கருதினால், அது 'ஆங்கில எதிர்ப்பு செனோபோபியா' நோயாக மாறும் ஆபத்தும் இருக்கிறது.

'ஆய்வு வழிமுறை' (Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே மேற்கொள்ளப்பட்ட தேவநேயப் பாவாணரின் ஆய்வுகள் மூலமாக தமிழ்த்தேசியர்கள் மட்டுமின்றி, பெரியாரிஸ்டுகளும் 'சமஸ்கிருத எதிர்ப்பு செனோபோபியா' நோயில் சிக்கி விட்டதாகத்தெரிகிறது.

நான் மிகவும் மதிக்கும் பெரியாரிஸ்ட் வெளிப்படுத்திய கீழ்வரும் முகநூல் பதிவு அதற்கான உதாரணமாகும்.

"தோழர் வாலாச வல்லவன் அவர்களின் பதிவு:

தமிழுக்கும் சமற்கிருதத்திற்கும் இரண்டாயிரமாண்டு பகை இப்போது பகை உச்சகட்டத்தை அடைந்துள்ளது."

மேற்குறிப்பிட்ட பதிவின் கீழே, கீழ்வரும் கருத்தினை நான் பதிவு செய்தேன்.

'பழந்தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகளிலோ, 'சமஸ்கிருத எதிர்ப்பு' இருந்ததற்கு சான்றுகள் உண்டா?

காலனி ஆட்சியில் தமிழர்கள் நோஞ்சான்களாக வளர்ந்து, தமிழானது சமஸ்கிருத கலப்பில் வீழ்ந்ததா? அதன் தொடர்ச்சியாகவே, இன்று தமிழ் ஆங்கிலத்திடம் வீழ்ந்து வருகிறதா? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு) மறந்து, வெறுப்பு அரசியலில் நோஞ்சான்களாகப் பயணிப்பது இனியும் தொடரலாமா? என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது.

லத்தீன் மொழியின் ஆதிக்கத்தில் இருந்து ஐரோப்பிய மொழிகள் விடுதலை பெற்ற பின்னர், இன்று ஐரோப்பிய நாடுகளில் லத்தீன் மொழியில் உள்ள அறிவுப்புதையல்களை போற்றுகிறார்களா? தூற்றுகிறார்களா? என்று ஆராய வேண்டும். அப்போது தான், சமஸ்கிருத மொழியின் ஆதிக்கத்தை எதிர்ப்பதாகக் கூறி, சமஸ்கிருத மொழியையே இழிவுபடுத்தி கண்டிக்கும் தமிழர்கள், உலக அறிஞர்கள் பார்வையில் கேலிப்பொருளாகி வருவதும் புரியும். விழிக்கவில்லை என்றால், உணர்ச்சிபூர்வ முட்டாள்கள் என்ற முத்திரையில் தமிழர்கள் சிக்க நேரிடும்.' (‘சமஸ்கிருதம் செத்த மொழி என்பது அபத்தம்; தமிழ்நாட்டில் தமிழ் சாகும் மொழி?’; https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_9.html)

அரைகுறை சான்றுகளுடன் வெளிப்படும் 'பெருமைகள்' மூலமாக, தமிழும் தமிழ் இசையும் கேலிப்பொருளாகும் அபாயம் பற்றி ஏற்கனவே எச்சரித்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2019/09/blog-post_16.html )

அதைவிட இன்னும் மோசமாக, தமிழின் தமிழ் இசையின் வளர்ச்சியையேக் கெடுக்கும் அளவுக்கு ஆபத்தானதாக, தேவநேயப்பாவாணரின் தொல்காப்பியம் தொடர்பான ஆய்வுகள் வெளிப்பட்டுள்ளன. அது பற்றிய விவாதத்தினை முன்னெடுக்கவே, கீழ்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.

தேவநேயப் பாவாணரின் தொல்காப்பியம் ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய நெருக்கடி? https://tamilsdirection.blogspot.com/2020/12/4.html

தமிழும் தமிழ்நாடும் சீரழிய, ஈ.வெ.ராவை விட அதிகமாக எவ்வாறு தேவநேயப் பாவாணர் பங்களித்ததுள்ளார்? என்பதற்கான திறவுகோலை மேற்குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளேன்.

தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கு தேவநேயப் பாவாணரின் தொல்காப்பிய ஆய்வுகள் எந்த அளவுக்கு தடைகளாக நீடிக்கின்றன? என்பதை அடுத்த பதிவில் பார்ப்போம்.

(வளரும்)

குறிப்பு 

எம்.ஜி.ஆர் ரசிகர்களை கேலி செய்து எழுதி பாராட்டப் பெற்ற ஜெயகாந்தன் தமது கடைசி காலத்தில் கருணாநிதியின் அடிவருடி ஆனார். அவரை ஏற்கனவே பாராட்டியவர்கள் எல்லாம், அதற்காகஅவரைக் கேலி செய்யவில்லை.

நானறிந்தவரையில், (1967க்கு முன் தி.மு.கவிலும்) எம்.ஜி.ஆரைக் கேலி செய்தவர்களும் சிவாஜி ரசிகர்களாகப் யணித்தவர்களிலும் பெரும்பாலோர்,  சமூக முதுகெலும்பு முறிந்த சுயநலபுத்திசாலிகளா(?) வெளிப்பட்டார்கள்.

தி.மு.கவை கருணாநிதி தமது குடும்பக் கட்சியாக மாற்ற முடிந்ததற்கு அத்தகையோரும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும்;

அதற்கு எதிரான போக்கானது எம்.ஜி.ஆர் மூலமாக வெளிப்பட்டு, எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்தது வரையில், அந்த குடும்ப அரசியல் வீழ்ந்து கிடந்ததற்கு, எம்.ஜி.ஆர் ரசிகர்களும் (அவர்களின் ரசனையும்) ஒரு காரணம் என்பதும், எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html)

ஜெயலலிதாவின் மறைவிற்குப்பின்,  கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் பிடியில் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றப் போவதும் இன்று நம்மிடையே வாழும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/11/individual-ethical-compass.html )

'எங்க வீட்டுப் பிள்ளை'யில் கோழையான எம்.ஜி.ஆருக்கு வீரமூட்டியது கிராமப்புறச் சூழலே ஆகும். இன்றும் கிராமப்புற எம்.ஜி.ஆர்கள் மூலமாகவே, நகர்ப்புற கோழை எம்.ஜி.ஆர்களும் வீரர்களாக மாறும் சமூகத் தூண்டல் (Social Induction) அதிசயமும், தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது. முதல்வர் .பி.எஸ் தம்மால் இயன்ற அளவுக்கு தமது கிராமப்புற வேர்களுக்கு புத்துயிர் ஊட்டி வருகிறார். சுயலாப நோக்கின்றி, தன்மானத்துடன் வாழ்வதற்காக இழப்புகளை விரும்பி ஏற்று பயணிக்கும் புலமையாளர்களின் பங்களிப்பானது, அந்த அதிசயத்திற்கு சமூக வினையூக்கியாக (Social Catalyst) அமையும். (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_15.html)