Sunday, June 28, 2020


இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது,


தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்




'அரசியல் நீக்கம்' (depoliticize) வளர்ந்துள்ள தமிழ்நாட்டில், சாமான்யத் தமிழர்களால் 'நோஞ்சான்' கட்சிகளாகவே, தமிழ்நாட்டில் முற்போக்கு மற்றும் பிற்போக்கு கட்சிகளில் பல‌ பார்க்கப்படுகிறதா? என்பது தொடர்பான, எனது அனுபவங்களில் ஒன்றில் இருந்து, இந்த பதிவைத் தொடங்குகின்றேன்.

பல வருடங்களுக்கு முன், தெருவில் இருந்தவர்கள் கூர்ந்து பார்க்கும் அளவுக்கு விலை உயர்ந்த பெரிய கார் ஒன்று எனது வீட்டு வாசலில் வந்து நின்றது. இசை தொடர்பான தமது தேவை தொடர்பாக, என்னைச் சந்திக்க‌ வந்திருந்தவரிடம் சிறிது நேரம் விவாதித்த பின்னர் அவர் விடை பெற்று சென்றார். மறு நாள் எனது   R & D Project ஆய்வுக்குழுவினருடன் உரையாடுகையில், மேற்குறிப்பிட்ட சந்திப்பை விவரித்தேன். அவர்கள் வெளிப்படுத்திய கூடுதல் தகவல்கள் தமிழ்நாட்டைப் பற்றிய ஆய்விற்கான அரிய உள்ளீடு (input) ஆகியது.

கொஞ்சமும் கூச்சமின்றி மான அவமானங்களைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் இழிவான முறையில் அதிவேகப்பணக்காரர் ஆனவர் அவர். அந்த ஊரில் உள்ள சாமான்யர்களுக்கு அது தெரியும். அது போன்ற நபர்களை நான் சந்திப்பதைத் தவிர்ப்பது நல்லது என்று ஆலோசனை கூறினார்கள். அதற்குப்பின் அந்த சந்திப்பு தொடரவில்லை. அது போன்ற நபர்கள் (எனது உற்றமாக சுற்றமாக இருந்தாலும்) என்னை சந்திக்கவும் நான் அனுமதித்ததில்லை.

ஆனால் அந்த ஊரில் உள்ள முற்போக்கு மற்றும் பிற்போக்கு கட்சிகளுக்கு அவ்வப்போது உதவி, அவர்களால் (அந்த ஊரில் வாழும் சாமான்யர்கள் பார்வையில் கேலிக்குள்ளாகும் அளவுக்கு) பெரிதும் மதிக்கப்பட்டவர் தான் மேற்குறிப்பிட்ட என்னைச் சந்தித்த நபர் ஆவார்.

அத்தகைய நபர்களை எல்லாம் நான் மதிக்கத் தொடங்கினால், எனது  R & D Project-இல் உள்ள இளம் ஆண்களும் பெண்களும் அதே திசையில் பயணிக்கத் தூண்டும் சமூகக்கிருமியாகவே நான் வாழ்வதாகி விடும். 'தமிழ், பகுத்தறிவு, தனித்தமிழ்நாடு, இந்துத்வா' உள்ளிட்ட இன்னும் பல நிலைப்பாடுகளின் தலைவர்களில் பலர் அவ்வாறு சமூகக்கிருமியாகவே பயணிப்பதை, தமிழ்நாட்டு சாமான்யர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் கருணாநிதி மற்றும் சசிகலா - நடராஜன் குடும்பங்களுக்கு நெருக்கமாகி பயணித்த‌ இந்துத்வா ஆதரவு கட்சிகளும், இந்துத்வா எதிர்ப்பு கட்சிகளும் சாமான்யர்கள் பார்வையில் நோஞ்சான் கட்சிகளே ஆகும்.

அறிவிலோ உடலிலோ நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள், விரும்பினால் கடும் முயற்சிகள் மூலமாக, அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர முடியும். அதற்கு மாறாக, தாம் நோஞ்சானாக இருப்பதை மறுத்து, வாய்ப்பேச்சு வீரர்களாக பிறரை ஏமாற்றி, ஒட்டுண்ணிகள் போலவும் வாழ முடியும். அவ்வாறு ஒட்டுண்ணிகள் போல வாழ்பவர்கள் எல்லாம், தத்தம் 'நேர்மை வழிகாட்டியை' தன்மானக்கேடான திசையில் அவ்வப்போது திருத்தி பயணிப்பதையும் தவிர்க்க முடியாது.

குடும்பமாக இருந்தாலும், பணியாற்றும் இடமாக இருந்தாலும்,  கட்சியாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் அங்குள்ள சூழலானது நோஞ்சான்களை வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் இருக்கலாம்; அல்லது ஒட்டுண்ணிகள் போலவும் வாழத் தூண்டும் வகையிலும் இருக்கலாம். 

குடும்பமாக இருந்தாலும் சரி, பணியாற்றும் இடமாக இருந்தாலும் சரி,  கட்சியாக இருந்தாலும் சரி, நாடாக இருந்தாலும் சரி,

நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள் எல்லாம்;

அந்த குடும்பத்தின், பணியாற்றும் இடத்தின், கட்சியின் , நாட்டின் வளர்ச்சிக்கு சரியாக பங்களிக்க முடியாத சுமையாகவே இருக்க நேரிடும்.

நோஞ்சான்களை வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் உள்ள கூட்டுக்குடும்பங்கள், பணியாற்றி வரும் நிறுவனங்கள், கட்சிகள், நாடுகள் போன்ற அமைப்புகள் எல்லாம் ஏமாந்து, ஒட்டுண்ணிகளாக வாழும் நோஞ்சான்களை அனுமதித்தால்,

அவர்கள் அந்த அமைப்புகளில் 'நோஞ்சான்' நோயைப் பரப்பி, அதன் மூலமாக காலப்போக்கில், அந்த அமைப்புகளே 'நோஞ்சான்' அமைப்புகளாக மாற்றி விடும் அபாயமும் உண்டு.

எனவே எந்த ஒரு அமைப்பும் 'நோஞ்சான்' நோயில் சிக்கி விடுமானால், அதுவே அந்த அமைப்பின் மரணத்திற்கான 'வேர்க்கொல்லி' நோயாகி, அந்த அமைப்பின் வேர்களான அடித்தளங்களையே சீர்குலைத்து விடும்.

அத்தகைய வேர்க்கொல்லி நோயில் சிக்கி, 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருக்கிறதா ? என்ற விவாதத்திற்கான நேரமும் வந்து விட்டதாகக் கருதுகிறேன்.

தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களில், தமது அறிவுக்கு தெரிந்த நோய்களை குணமாக்குவதற்கு பதிலாக, அந்த ஆணிவேர்களையே 'நஞ்சாக' கருதிய .வெ.ராவின் அணுகுமுறையானது, 'பெரியார்' மூலம் சிற்றினம் குருட்டுப் பகுத்தறிவுடன்  'கிண்டல்'கள் திறமைகளை வளர்த்து, தீ இனமாக‌ ஊழல் வழிகளில் ஆதிக்கம் பெற்று, 'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்றவற்றை சிதைத்து, 'தமிழ்வேரற்ற' தமிங்கிலீசர்கள் தமிழ்நாட்டில் வளர காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்

இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்.

இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்துக்கட்சிகளிலும் இருந்த தலைவர்களில் எவரும் ஊழல் வழிகளில் சொத்து சேர்த்தவர்கள் அல்ல. மாறாக தங்களின் சொந்த பணத்தையும் உழைப்பையும் பொதுநலனுக்காக செலவழித்தவர்கள் ஆவார்கள்.

இன்று தமிழ்நாட்டில் அது போன்று எந்தக்கட்சித் தலைவரையும் உதாரணமாகக் காட்ட முடியுமா? கருணாநிதி மற்றும் சசிகலா குடும்ப ஊழல்களை எதிர்க்க முடியாமல் தான், தனிப்பட்ட முறையில் எளிமையாக நல்லக்கண்ணு வாழ்ந்தார். அது மட்டுமல்ல, சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்து, நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டது, இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன பாடத்தை வெளிப்படுத்தும்? (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_18.html)

பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்ட சமூகப்புழுதிகளான மனிதர்கள், மேக்ரோஉலகத்தில் செல்வாக்குடன் வலம் வந்தது போல, மைக்ரோஉலகத்தில் வலம் வர முடியாது. தப்பித்தவறி, அவர்கள் மைக்ரோஉலகத்தில் வெளிப்படும்போது, இப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார்கள். வரும் காலத்தில் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் வெளியில் தலை காட்ட வெட்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது.
(https://tamilsdirection.blogspot.com/2020/04/blog-post_11.html)

தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த பின்னரும், 'அதே' செல்வாக்குடன் தத்தம் சாதிகளில் உலா வந்து, அந்தந்த சாதி அமைப்புகளில் 'நோஞ்சான்' நோயைப் பரப்பி வருகின்றனர்

நேர்மையான சுய சம்பாத்தியம் இன்றி, தெரிந்தும் தெரியாமலும், உள்நாட்டில் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் கிடைக்கும் நிதிகளின் வலிமையில்,

'தமிழ் உணர்வு, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' உள்ளிட்ட இன்னும் பல உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில், தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனி வளங்களும் குடும்ப ஊழல் பேராசைக்கு இரையானதை கண்டு கொள்ளாத அளவுக்கு குடும்ப ஊழல் பாதுகாப்பு அரண்களாகப் பயணித்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், இந்தியாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்க இயலாத நோஞ்சான் கட்சிகள் ஆகும்.

திராவிட ஆட்சிகளின் சமூக, குறிப்பாக கிராம அதிகார அமைப்பில், நட‌ந்துள்ள' மாற்றங்கள் 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை) சரியான திசையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்ததா? வந்ததை சீர்குலைத்து, ஆதாய அரசியலுக்கு சமூகத்தை அடிமையாக்கி, 'வர்க்கப்போராட்டம், தொழிற்சங்கம்' தீண்டமுடியாத நிலத்திமிங்கிலங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் தமிழர்களில் பெரும்பகுதியினரைப் பதர்களாக்கும் விளைவில் முடிந்ததா? (‘பெருநிலக்கிழார்களின் முதுகெலும்பை உடைத்ததா திராவிட இயக்கம்? உழைக்க தயாரில்லாத மக்கள்  தேசம் நிச்சயம் அடிமைப்பட்டே ஆக வேண்டும்’; 
https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_26.html)

தம்மிடம் ஏமாந்த அமைப்பில் இருந்து ஆற்றலை உறிஞ்சி அச்சுறுத்தும் அளவுக்கு பூதாகாரமாகக் காட்சி தரும் நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அந்த ஆற்றல் உறிஞ்சும் தொடர்பைத் துண்டித்தவுடனேயே, காற்று போன பலூன் போல, தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு விரைவில் சுருங்கி விடுவார்கள்மத்தியில் தாமதமின்றி ஊழலை ஒழிக்கும் அரசு செயல்படுமானால்,தமிழ்நாட்டு நோஞ்சான் தலைவர்கள் எல்லாம், அவ்வாறு தமது சுய நோஞ்சான் தோற்றத்திற்கு சுருங்கி சமூக குப்பைத்தொட்டியில் ஒதுங்கி விடுவார்கள்

நல்ல தலைவர்கள் வெளிப்படுவதற்கான தடைகளும் நீங்கும்.

தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள பலர் நோஞ்சான்களாகி வரும் சூழலில், இரண்டு எதிரெதிர் முகாம்களிலும் வலிமையாகி வருபவர்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பிற மாநிலத்தவரா? தமது வாழ்வியல் நலன்களுக்காக தமிழையும் தமிழ்நாட்டையும் காப்பாற்றும் முயற்சியில் அத்தகையோர் பங்களிக்கத் தொடங்கி விட்டார்களா

என்ற ஆராய்ச்சியில் ஈடுபட விரும்புபவர்களின் பார்வைக்கு:

1. ‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’;

2. ‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’;

மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சிகளில் ஈடுபடுபவர்களில் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம், கீழ்வரும் எனது ஆய்வு முடிவினையும் கருத்தில் கொள்ளலாம்.

சமூகத்தில் ரசனை வீழ்ச்சியானது எவ்வாறு புலமை வீழ்ச்சிக்கும், நேர்மை வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது? 'பெரியார், அண்ணா' பாசறைகளில் பயின்று தரகு, அரசு நிதித்திருட்டில் விற்பன்னர்களாக‌ வளர்ந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் எவ்வாறு சிரழிக்க முடிந்தது? என்ற சமூகவியல் ஆராய்ச்சிகுகந்த நாடாக தமிழ்நாடு மாறிவிட்டது

தமிழ் வலிமையாக வாழ வேண்டுமானால், தமிழர்கள் வலிமையாக வாழ வேண்டும். தமிழர்களின் வலிமையானது அவர்களின் அகத்தின் வலிமையைப் பொறுத்ததாகும்.

தமிழ்நாடு ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியில் இருந்தால் தான், தமிழர்கள் அகத்தின் வலிமையில் புறத்திலும் வலிமையாக வளர முடியும்

தமிழர்களின் அக வலிமையை சீர் குலைத்த போக்கில் பயணித்து, தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனி வளங்களும் குடும்ப ஊழல் பேராசைக்கு இரையானதை கண்டு கொள்ளாத அளவுக்கு குடும்ப ஊழல் பாதுகாப்பு அரண்களாகப் பயணித்த கட்சிகள் இருந்ததால் தான்;

அன்றைய பிரதமர் இந்திரா காந்தி தமது அரசியல் சுயலாபத்திற்காக, தமிழ்நாட்டின் பொது நலனைக் காவு கொடுத்து, சர்க்காரிய கமிசன் ஊழல் குற்றவாளிகளை எல்லாம் தண்டனையில் இருந்து காப்பாற்ற முடிந்தது.

'சர்க்காரியா கமிசன்' பரிந்துரைத்த ஊழல் குற்றவாளிகள் எல்லாம், உரிய நீதிமன்ற விசாரணை மூலம், கடுமையாக தண்டிக்கப்பட்டிருந்தால், கருணாநிதியின் 'அறிவியல் ஊழலில்' தப்பித்திருந்த தமிழ்நாட்டின் மலைகள், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்கள் எல்லாம், 1991 முதல் இன்று வரை ஊழலுக்கு இரையாகியிருக்காது. 

தமிழர்களில் அகத்தில் பலகீனமான நோஞ்சான்கள் நீடிப்பதாலேயே, கீழ்வரும் நெருக்கடியில் இன்று தமிழ்நாடு சிக்கி விட்டது.

சர்க்காரியா கமிசன் வழக்கை இந்திராகாந்தி வாபஸ் வாங்கிய பாணியில் இருந்து வேறுபட்டு;

'பலகீனமான புராசிகியூசன்' (Weak Prosecution) மூலமாக திராவிட ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகும் வகையிலும், ஆமை வேகத்தில் வழக்குகள் நகரும் வகையிலும் பிரதமர் மோடி ஆட்சி செய்தால், தமிழ்நாட்டு மக்களின் கோபக்குவியத்தில் அவர் சிக்குவதைத் தவிர்க்க முடியாது.

'சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறைத்தண்டனை பெற்று, பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, ஆகஸ்ட், 14ல் விடுதலையாவார்' என, பா.., பிரமுகர் ஆசீர்வாதம் ஆச்சாரி, 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டுள்ளார். (https://www.dinamalar.com/news_detail.asp?id=2564736 )

கீழ் வரும் வாச‌கர் கருத்துக்களும் எனது கவனத்தினை ஈர்த்தன.

'திஹார் ஜெயிலில் இருந்த வந்த மாதர் குல தெய்வம், மங்கையர் திலகம் எங்கள் கனிமொழி ராசாவுக்கு கொடுத்த மாதிரி தடபுடலா வரவேற்பு கொடுப்பார்களா திரகரன் கும்பல்'

'மத்தியில் உள்ள ஆளும் கட்சிக்கு சாதகமாக நடந்தால் இந்த நாட்டில் எதுவும் செய்வார்கள் என்பதையே சிறை தண்டை விடுதலை கோடிக்கணக்கில் சம்பாதித்ததை கண்டுகொள்ளாதது போன்ற எதுவும் நடக்கும்.'

'இவர் சீக்கிரமாகவே விடுதலை ஆகி வந்தால் அதை விட கேவலம் , பா வுக்கு இல்லை.'

'மோடிஜி சாதனையில் இதுவும் ஒன்று.

(‘தேசிய அரசியலில் தமிழ்நாட்டைக் காவு கொடுத்த பிரதமர் இந்திரா பாணியில்; பிரதமர் மோடியும் பயணிக்கிறாரா? தமிழ்நாட்டை இந்தியாவில் இருந்து துண்டிக்கச் செய்யும் வாய்ப்பு கூடுகிறதா?’; https://tamilsdirection.blogspot.com/2020/06/14.html)

இந்தியாவானது 'சிதறலுக்கு' உள்ளாகும் காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில், உலக ஆதிக்க சக்திகளுக்கு 'நெருக்கமான', 'உணர்ச்சிபூர்வ' அரசியல் வியாபாரிகள்' ஆட்சியானது, ‘வளர்ச்சியில்' வாழ்பவர்களுக்கு- பிற மாநில மற்றும் வெளிநாட்டின மக்களுக்கு- சாதகமாகவும், 'வீழ்ச்சி' போக்கில் சிக்கியுள்ள தமிழர்களுக்கு பாதகமாக, இன்றைய தென்னாப்பிரிக்காவில் உள்ளது போல, தமிழ்நாட்டில் சூரியன் மறைந்ததும், இரவில் 'திருடி' பிழைப்பவர்களில் பெரும்பாலானவர்கள், தமிழர்களாக இடம் பெறும் அளவுக்கு மோசமாக‌வும் இருந்தால், வியப்பில்லை.

எனவே திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களின் ஊழல் வலைப்பின்னலிலிருந்து தமிழ்நாட்டை மீட்டு, 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு இணக்கமான போக்கில், 'இந்தியர்' என்ற அடையாள அடிப்படையில், 'தேச கட்டுமானம்' (Nation Building) சரியாக வளர்த்தெடுக்கப்படுவதில் தான், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு வாய்ப்பிருக்கிறது, என்பதும் எனது ஆய்வுமுடிவாகும். (https://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க வேண்டுமானால், இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் நோஞ்சான்களாக உள்ள தமிழர்களை எல்லாம் அடையாளம் கண்டு திருத்தி, திராவிட ஊழல் குடும்பங்களிடம் சோரம் போகாத‌ அக வலிமையுள்ள தமிழர்களாக மாற்ற வேண்டும். அவ்வாறு திருந்த மறுப்பவர்களை எல்லாம், ஓரங்கட்டி சமூகக் குப்பைகளாகக் கருதி ஒதுக்க வேண்டும்.

No comments:

Post a Comment