Thursday, October 22, 2020

தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை 'பெரியாரிஸ்டுகள்' எதிர்ப்பதானது, பகுத்தறிவா? குருட்டுப் பகுத்தறிவா? (2)
 
சரஸ்வதி பூஜையை தமிழரின் கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் புத்துயிர் கொடுக்கும் தினமாகவும்,

ஆயுத பூஜையை தமிழரின் தொழில்நுட்பப் புதுப்பிப்புக்கு புத்துயிர் கொடுக்கும் தினமாகவும் கொண்டாடுவோம்.   

 

ஈ.வெ.ரா அவர்கள் தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கண்டித்ததும், 'தாய்ப்பால் பைத்தியம்' என்று தமிழை ஒதுக்கியதும், தமிழ்நாட்டின் சமூக ஆற்றல் மூலங்களில் இருந்து அவரை அந்நியப்படுத்தி தி.மு.க வளர எவ்வாறு  உதவியது? என்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/blog-post_19.html )

திராவிடர் கழகம் தமிழ்நாட்டில் பண்டிகைகளை எதிர்த்ததானது, எந்த அளவுக்கு தி.மு.க வளர உதவியது?

என்ற ஆய்விற்கு அண்ணாவின் கீழ்வரும் மேற்கோள் உதவும்.

கீழ்கண்டவாறு பேசி, தி.கவில் இருந்த இளைஞர்களை ஈர்த்து 1949இல் அண்ணா தி.மு.கவைத் துவக்கினார். 1957இல் தேர்தலில் போட்டியிடத் தொடங்கியதும் அவ்வாறு தி.க பாணியில் இரட்டைக்குழல் போல பேசியதைக் குறைத்தார். 1960 களில் அவ்வாறு பேசியது வற்றியது. ஈ.வெ.ராவுடன் சேர்ந்து கண்டித்த அண்ணா 1967இல் ஆட்சியைப் பிடித்த பின்,  கம்பர்  உள்ளிட்ட தமிழ்ப்புலவர்களுக்கு சிலைகள் வைத்தார்.

அண்ணா மீது எந்த அறிவுபூர்வ விமர்சனத்தையும் முன் வைக்காமல், இன்று கம்ப ராமாயணம் தொடர்பான 'தீ பரவட்டும்' நூலின் நிலைப்பாட்டினை அண்ணாவின் நிலைப்பாடாகவும், கீழ்வரும் ஆயுத‌ பூசைக்கு எதிரான நிலைப்பாட்டினை அண்ணாவின் நிலைப்பாடாகவும் முன் நிறுத்துவது சரியா?



மேற்கத்திய வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில், தமிழ் பற்றியும் தமிழர் பற்றியும் தமிழ்நாடு பற்றியும் தாழ்வு மனப்பாமையை ஏற்படுத்தும் வகையில் அண்ணா வெளிப்படுத்திய மேற்குறிப்பிட்ட கருத்தை ஒட்டியே, கீழ்வரும் ஈ.வெ.ராவின் கருத்தும் வெளிப்பட்டுள்ளது.

"தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்" (தாய்ப் பால் பைத்தியம்என்ற நூலிலிருந்து)

மேற்கத்திய வழிபாட்டை ஊக்குவிக்கும் வகையில், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை போன்ற பண்டிகைகளை ஈ.வெ.ரா, அண்ணா போன்ற தலைவர்கள் கண்டித்ததன் காரணமாக, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நிகழ்காலத்திலும் பாதிப்புகள் எவ்வாறு தொடர்கின்றன? இன்று இங்கு பார்ப்போம்.

சென்னை மத்திய தோலாய்வு நிறுவனத்தில் (Central Leather Research Institute) விஞ்ஞானியாகப் பணியாற்றிய முனைவர் என், சோமநாதன் தனது தமிழார்வத்தால் இரண்டாவது முனைவர் பட்ட ஆய்வினைச் சுமார் 20 வருடங்களுக்கு முன் சென்னை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மேற்கொண்டார். அதில் பழந்தமிழ் இலக்கியங்களில் தோல் பதனிடும் தொழில் நுட்பம், தோல் இசைக் கருவிகள் பற்றிய தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளார். (http://nsomanathan.tripod.com/) அந்த ஆய்வின் நகல் அங்குள்ள நூலகத்தில் உள்ளது. அரசியல் 'செல்வாக்குள்ள' தமிழ் அறிஞர்கள்' 'பிடியில்' தமிழ்நாடு சிக்கியதால், இத்தகைய ஆய்வுகள் நூலாக வெளிவரவில்லை. எனவே அந்த ஆய்வின் அடிப்படையில் உயிர் இணக்க (Bio-friendly) தோல் தொழில்நுட்ப/தோல் இசைக் கருவிகள் பற்றிய‌ ஆய்வுகள், அதன் தொடர்ச்சியாக‌  'இயல்பாக' மேற்கொள்ளப்படும் சந்தைப்படுத்தும் பொருள் உருவாக்க‌ (marketable product development) முயற்சிகளும்,  இன்று வரை தமிழ்நாட்டில் நடைபெறவில்லை. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

நோவாம் சோம்ஸ்கி உள்ளிட்ட உலக அளவில் புகழ் பெற்ற 'மொழியியல்' புலமையாளர்கள் எல்லாம், 'நவீன மொழியியல்'(Modern Linguistics))  என்ற துறையில் சமஸ்கிருத மொழியின் பங்களிப்பினை அங்கீகரித்து பாராட்டி வருகிறார்கள்.

அவ்வாறு நோவாம் சோம்ஸ்கி பாராட்டியதை சமஸ்கிருத ஆர்வலர்கள் எல்லாம் பெருமிதத்துடன் உலகு எங்கும் பரப்பி வருகிறார்கள். இத்தனைக்கும் நோவாம் சோம்ஸ்கி இந்துத்வா எதிர்ப்பாளார். அவரின் மொழியியல் ஆராய்ச்சியை பாராட்டுபவர்களும், அவரின் அரசியல் நிலைப்பாட்டை கண்டுகொள்வதில்லை.

ஆனால் தமிழ்நாட்டின் 'திராவிட' சாபமாக, ஈ.வெ.ராவை அண்ணாவை கருணாநிதியை பிரபாகரனை விமர்சிக்கும் என்னைப் போன்ற ஆராய்ச்சியாளர்களின் முடிவுகளால் தமிழ் வளர்வதைக் கெடுக்கும் வகையில், அந்த ஆய்வு முடிவுகள் வெளிச்சத்திற்கு வராமல், மேற்குறிப்பிட்ட தலைவர்களின் ரசிகர்களான ஆதரவாளர்களும், அவர்களின் செல்வாக்கில் அதிகாரத்தில் இருப்பவர்களும் கடந்த சுமார் 20 வருடங்களாக தாமதப்படுத்தி வருகிறார்கள்.

அவ்வாறு என் போன்றோரின் ஆய்வுகளால் தமிழ் வளர்வதைத் தாமதப்படுத்தி,

ஈ.வெ.ராவை அண்ணாவை கருணாநிதியை பிரபாகரனை துதித்த காரணத்தால் ஊக்குவிக்கப்பட்ட‌  நோஞ்சான் புலமையாளர்களின் ஆய்வுகள் எல்லாம், ஊடக பலத்தில் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும், எந்த நேரத்திலும் அறிவுபூர்வ விமர்சனம் என்ற ஊசியின் மூலம் வெடித்து சிதற காத்திருக்கும் பிம்ப பலூன்களே ஆகும். (‘'நோஞ்சான் நோயில்' சிக்கிய தமிழ்ப்புலமை?’; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post.html )

நோவாம் சோம்ஸ்கி தொல்காப்பியம் தொடர்பான எனது ஆய்வினைப் பாராட்டியுள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html )

'மொழியியல்' அடிப்படையில், 'Natural Language Processing -NLP’ மூலமாக 'speech -to- text; text-to- speech; spell check; grammar check; etc' போன்ற மென்பொருட்கள் உலகில் பல மொழிகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

நவீன மொழியியலில் (Modern Linguistics) சமஸ்கிருத மொழியின் பங்களிப்பானது உரிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு பாராட்டப்பட்டு வருகிறது. சமஸ்கிருதத்தின் துணையுடன், உலக மொழிகளுக்கான‌ 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையானது, தொல்காப்பியம் மூலமாக துவங்கும் வாய்ப்பினையும்  சுட்டிக்காட்டியுள்ளேன்.

தொல்காப்பியத்தின் ' இசை மொழியியல்' அடிப்படையில், 'lyrical text to music – to song; music to lyrical text; musical grammar check; etc' போன்ற மென்பொருட்களை உருவாக்க முடியும்.

தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணத்தில் வரும் அசையானது, யாப்பிலக்கண விதிகளுக்குட்பட்டு உருவான இசைப்பாடலுக்கான அசையாகும். அதனை எனது ஆய்வின் மூலமாகக் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன்.

‘Musical Phonetics in tholkAppiam’ in December 2013, in the journal from the International Institute of Tamil Studies, (Taramani, Chennai; http://www.ulakaththamizh.in/journal  )

இசைக்கும் மொழிக்கும் இடையிலான இணைத் தொடர்பு பற்றிய 'லாஜிக்' (logic) தொல்காப்பியத்தில் இருப்பதும், அக்கண்டுபிடிப்பின் மூலமாக வெளிப்பட்டுள்ளது.

தொல்காப்பியத்தில் வெளிப்பட்டுள்ள யாப்பிலக்கணமானது, உலகில் எந்த மொழியிலும், அசைகளின் அடிப்படையில் இசைக்கப்படும் இசைப்பாடலுக்கான‌  'உலகப் பொது இசைப்பாடல் இலக்கணம்' (Universal Grammar for musically rendered poems) ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2020/10/prosody-in-english-prosody.html )

இந்தியாவிலும் வெள்ளையர் ஆட்சிக்கு முன் கல்வியிலும், தொழில்நுட்பத்திலும்,நாகரிகத்திலும் பின்தங்கியிருந்ததாக படித்த இந்தியரில் பெரும்பாலோர் நம்பும் அளவுக்கு அவர்கள் மனதிலேயே வெற்றிகரமாக விதைத்த சூழ்ச்சி பற்றி ஆய்வு செய்து, தரம்பால் என்ற அறிஞர் ஆய்வு நூல்கள் வெளியிட்டுள்ளார்.

(DHARAMPAL • COLLECTED WRITINGS  - Distributed by Other India Bookstore, Above Mapusa Clinic, Mapusa 403 507 Goa, India.) அப்புத்தகத்திற்கு  ‘Making History.  என்ற தலைப்பில், புகழ்பெற்ற மனித உரிமையாளர் கிளாடிஸ் ஆல்வாரிஸ் - Claude Alvares - எழுதியுள்ள முன்னுரையானது, இந்நூலில் உள்ள ஆதாரங்கள் பற்றியும், ஆய்வின் முக்கியத்துவம் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.

வெள்ளைக்காரர் வருகைக்கு முன் இந்தியா கல்வியிலும், தொழில்நுட்பத்திலும், உலக வர்த்தகத்திலும் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருந்தது என்பது பற்றி, உலகில் நடந்துள்ள ஆய்வுகளின் அடிப்படையில், திரு.குருமூர்த்தி உள்ளிட்ட அறிஞர்கள் பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளனர்.

கடந்த சுமார் 20 வருடங்களாக பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள இசை அறிவியல் நுட்பங்களை, எனது ஆய்வின் மூலம் கண்டுபிடித்து, சந்தைப்படுத்தக்கூடிய தொழில்நுட்பங்களை நான் வெளிப்படுத்தி வந்துள்ளேன்; (https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

தமிழை 'காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, பழந்தமிழ் இலக்கியங்களை தமிழர்களுக்கு கேடானவையாக பிரச்சாரம் செய்து வரும் செல்வாக்கான 'திராவிட மன நோயாளிகள்எல்லாம், எனது ஆய்வின் பலன்களால் தமிழும், தமிழ்நாடும் வளர தடைகளாக உள்ளார்கள், என்பதையும், அதன் மூலம் கண்டுபிடித்துள்ளேன்.

இந்தியாவில்  இந்தியர்கள் தமது பாரம்பரியம், பண்பாடு, கல்விமுறை, தொழில்நுட்பம், ஆகியவற்றைக் கீழாகவும், வெள்ளைக்காரர்களைப் பற்றி உயர்வாகவும் எண்ணுவது தவறு என்று விளக்கும் அறிவுபூர்வமான ஆய்வுகளையெல்லாம், 'இந்துத்வா' என்று அச்சுறுத்தி, இருட்டில் தள்ளும் வேலையை, 'முற்போக்கு', மதச் சார்பின்மை' என்ற போர்வைகளில் செய்கிறார்களா? அல்லது அவற்றை அறிவுபூர்வமாக விமர்சித்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

 'எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு.’ (திருக்குறள் 423)

என்பதைக் கவனத்தில் கொள்ளவில்லையென்றால், இழப்பு யாருக்கு? (https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் உயர்ந்திருந்த தமிழ்நாடானது காலனி ஆட்சியில் காலனிய சூழ்ச்சியில் சிக்கியதால் வந்த கேடுகளை அறியாமல் (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html  )

ஈ.வெ.ராவும் அண்ணாவும் மேற்கத்திய வழிபாட்டு போதையை ஊக்குவித்ததே ,   தமிழும் தமிழ்நாடும் சீரழிய வழி வகுத்தது.‌

எனவே சரஸ்வதி பூஜையை தமிழரின் கல்விக்கும் தமிழ்வழிக்கல்விக்கும் புத்துயிர் கொடுக்கும் தினமாகவும் , 

ஆயுத பூஜையை தமிழரின் தொழில்நுட்பப் புதுப்பிப்புக்கு புத்துயிர் கொடுக்கும் தினமாகவும் கொண்டாடுவோம்.    

Tuesday, October 20, 2020

 

தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை 'பெரியாரிஸ்டுகள்' எதிர்ப்பதானது,

பகுத்தறிவா? குருட்டுப் பகுத்தறிவா?(1)

 

தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கொண்டாடுவதை ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்த போது எதிர்க்கவில்லை; 1925இல் காங்கிரசில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் தொடங்கிய போதும் எதிர்க்கவில்லை.

1925 முதல் 1944 வரை, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு முக்கிய மூலங்களாக (sources), மேற்கத்திய உலகில் நாத்திகம் மற்றும் கம்யூனிசம் தொடர்பாக வெளிவந்த நூல்கள் முக்கிய இடம் பெறுகின்றன.

ஈ.வெ.ராவிற்கு ஆங்கிலம் எழுதப்படிக்கத் தெரியாது. எனவே அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களில் ஆங்கில அறிவுள்ளவர்கள் தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவைகளின் அடிப்படையிலேயே, 1925 முதல் 1944 வரை, ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

அது போலவே, ஈ.வெ.ராவிற்கு சமஸ்கிருதம் தெரியாது. எனவே தமிழில் மொழிபெயர்த்துக் கொடுத்தவைகளின் அடிப்படையிலேயே ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளில் மாற்றங்கள் ஏற்பட்டன.

உலகில் தொன்மை மொழிகளில் அறிவுபூர்வ விவாதங்களை வெளிப்படுத்தும் நூல்கள் மிகுந்த மொழி சமஸ்கிருதம் ஆகும். தொன்மை மொழிகளில் நாத்திகம் பற்றிய அதிக நூல்கள் உள்ள மொழியாக சமஸ்கிருதம் இருப்பதை, இந்துத்வா எதிர்ப்பாளராகிய‌ அமர்தியா சென் வெளிப்படுத்தியுள்ளார்.  ( Page 35, 'Identity and Violence' by Amartya Sen)

மேற்குறிப்பிட்ட தக‌வலானது, ஈ.வெ.ராவின் பார்வைக்கு வந்திருந்தால், ஆங்கில மொழியைப் போலவே, சமஸ்கிருத மொழியையும் பாராட்டியிருப்பார்.

மேற்கத்திய உலகில் வெளிப்பட்டவைகளையும், சம்ஸ்கிருத நூல்களில் வெளிப்பட்டவைகளையும், இரண்டும் கெட்டானாகப் புரிந்து கொண்ட ஈ.வெ.ரா அவர்களின் 'நாத்திகம்' தொடர்பான நிலைப்பாடானது, சமஸ்கிருதத்தில் இருந்த பொருளை திரித்தது மட்டுமின்றி, அவ்வாறு திரிதலுக்கு உள்ளான சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள, கடவுள் மறுப்பு தொடர்பான‌ 'எதீஸ்ட்' (Atheist) என்ற சொல்லுடன் பொருத்தியதிலும் குறைபாடுகளை வெளிப்படுத்தியுள்ளன. அவற்றை எல்லாம் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ராவின் நாத்திகம்’; https://tamilsdirection.blogspot.com/2017/09/semanticdistortion.html)

அந்த பொருள் திரிதலுக்கும், அந்த திரிதலில் ஈ.வெ.ரா அவர்கள் பயணித்ததால், சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலுக்கும், உள்ள தொடர்பு பற்றியும், மேற்குறிப்பிட்ட பதிவில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஈ.வெ.ரா அவர்களின் 'நாத்திகம்' தொடர்பான நிலைப்பாடானது, எவ்வாறு இரண்டும் கெட்டானாக இருந்ததோ அது போலவே, தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி புஜை தொடர்பான நிலைப்பாடானது, இரண்டும் கெட்டானாக இருந்து, சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலையும் ஊக்குவித்தது.‌ இன்று நானறிந்த பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், 'நாத்திகர்' என்ற போர்வையில் வலம் வருவதற்கும் மேற்குறிப்பிட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலே முக்கிய காரணமாகும்.

1919 முதல் 1944 வரை  ஈ.வெ.ரா அவர்களும், அவர் வழியில் எண்ணற்றோரும், சேமித்து வளர்த்து வந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 1944இல் தமிழ்ச் சொல்லான 'இனம்' பொருளில் திரிந்து, 'திராவிடர் கழகம்' உருவான சமூக செயல்நுட்பத்தில் பொதுவாழ்வு வியாபாரப் போக்கானது முளை விட்டு, அந்த சமூக ஆற்றல்களை எல்லாம் உணர்ச்சிபூர்வ போக்கில் அபகரித்தது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( https://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

ஒரு சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் எல்லாம், சமுகம் மற்றும் பொருளாதாரம் சம்பந்தப்பட்ட முக்கியமானவையாகும்.

“Festivals have both social and economic angles. In the chaotic and stressful planet we inhabit, happiness is overshadowed by negativity and insecurity and so the need for something that could bring positivity has been felt time and again. Thus, festivals that give us the opportunity to forget all our worries and celebrate the positive side of life, even if it is for a few days, came into existence. “; Why festivals are important; https://www.thenews.com.pk/print/188562-why-festivals-are-important#

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையானது, ஏசுநாதர்  பிற‌ப்பதற்கு முன்பே, 'பாகன்என்ற பழங்குடி மக்களால் கொண்டாடப்பட்டு வந்த ஒரு பண்டிகையாகும்.

ஏசுநாதர் உண்மையில் டிசம்பர் 25 அன்று பிற‌ந்திருக்க வாய்ப்பில்லை, என்பதை வெளிப்படுத்தும் ஆய்வுகளும் வெளிவந்துள்ளன.

was Jesus really born on December 25?

The short answer is no. It is not believed Jesus was born on the day Christmas is globally celebrated. Instead, Christmas was chosen as a convenient celebratory day on the same day of a pagan holiday that celebrated the winter solstice, according to The History Channel.  https://www.newsweek.com/december-25-really-day-jesus-was-born-what-bible-says-1270667

பாகன் திருவிழா கொண்டாட்டத்தினை கிறிஸ்துமஸ் பண்டிகை என்று மாற்றியதும், கிறித்துவ மதம் ஐரோப்பா முழுவதும் பரவுவதற்கு உதவியது.

ஈ.வெ.ரா அவர்கள் தீபாவளிஆயுத பூஜைசரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளைக் கண்டித்ததும், 'தாய்ப்பால் பைத்தியம்என்று தமிழை ஒதுக்கியதும்தமிழ்நாட்டின் சமூக ஆற்றல் மூலங்களில் இருந்து அவரை அந்நியப்படுத்தி தி.மு.க வளர எவ்வாறு  உதவியதுஎன்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது. அந்த பலகீனம் மூலமாகபாகன் திருவிழாவை அபகரித்த சமூக செயல்நுட்பத்தில்தமிழ்நாட்டில் கிறித்துவ மதமாற்றங்களுக்கு துணை புரியும் வகையில், 'பெரியார்கட்சிகள் எவ்வாறு பயன்பட்டு வருகின்றனஎன்ற ஆய்வுக்கும் இடம் இருக்கிறது.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்க நாத்திகர் இங்கர்சால் எவ்வாறு கொண்டாடினார்? அவ்வாறு கொண்டாடுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் யாவை? என்பது தொடர்பான தகவல்கள் கீழ்வரும் இணைய தளத்தில் உள்ளது.

‘Christmas was not, nor did it have to be, a Christian holiday. He argued that “the good part of Christmas” was the secular, social part of it. He labeled it a “really human” tradition, and “a day to get acquainted with each other, a day to recall old memories, and for the cultivation of social amenities.” Ingersoll knew Christmas for what it is: a cultural ritual rooted in shared experience, not dated dogma.’

‘An Ingersoll Christmas’; https://nexuszine.wordpress.com/2008/12/03/an-ingersoll-christmas-by-writerlarge/

ஒரு சமூகத்தில் கொண்டாடப்படும் பண்டிகைகள் என்பவை பல பரிமாணங்கள் கொண்டவையாகும். அப்பரிமாணங்களில் அப்பண்டிகைகள் கொண்டாடுவதற்காக சொல்லப்படும் கதைகள் ஒரு பரிமாணம் மட்டுமே. சமூக வரலாற்றில் அந்த காரணங்கள் எவ்வாறு மாறக்கூடும்? என்பதை கிறிஸ்துமஸ் பண்டிகையாக மாறிய பாகன் பண்டிகையானது வெளிப்படுத்தியுள்ளது. அது போலவே, சமூகத்தில் பரம்பரியமாகக் கொண்டாடப்படும் பண்டிகையை நாத்திகர்கள் எவ்வாறு மதம் தொடர்பான காரணத்தை நீக்கி கொண்டாட முடியும்? என்பதற்கு இங்கர்சால் நல்ல முன்னுதாரணமாக உள்ளார்.

சரஸ்வதி பூஜை பண்டிகை அன்று, பெரியாரிஸ்டுகள் தமது இல்லங்களில் உள்ள புத்தகங்களை எல்லாம் சுத்தம் செய்து வணங்குவதும்,

ஆயுத பூஜை பண்டிகை அன்று, பெரியாரிஸ்டுகள் தமது வாழ்விற்கும் பொருள் ஈட்டுதலுக்கும் உதவிய கருவிகளை எல்லாம் சுத்தம் செய்து வணங்குவதும், 

ஈ.வெ.ரா பிறந்த தினத்தன்று பெரியார் சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து வணங்குவதை விட, மேலானதும் சமூக நல்லிணக்கத்திற்கு உதவுவதும் ஆகும்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை அமெரிக்க நாத்திகர் இங்கர்சால் எவ்வாறு கொண்டாடினார்? அவ்வாறு கொண்டாடுவதற்கு அவர் முன்வைத்த வாதங்கள் யாவை? என்பது ஈ.வெ.ராவின் பார்வைக்கு வந்திருந்தால்,

'தமிழர்களைத் தற்குறிகளாக்கியது பாரப்பனர்களே' என்று வெளிப்பட்ட காலனிய சூழ்ச்சியில் ஈ.வெ.ரா சிக்காமல் இருந்திருந்தால், (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

புராணங்கள் என்பவை எல்லாம் பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடாகும், என்பதும் ஈ.வெ.ராவிற்கு விளங்கியிருந்தால், (https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html)

தீபாவளி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை உள்ளிட்ட இந்துப் பண்டிகைகளை ஈ.வெ.ரா எதிர்த்திருக்க மாட்டார்;

என்பது எனது ஆய்வு முடிவாகும். அந்த ஆய்வு முடிவுக்கு எதிரான வாதங்களை, நான் ஆர்வமுடன் வரவேற்கிறேன்.

சாகும் வரையில், ஈ.வெ.ரா பொது சிவில் சட்டத்தினை ஆதரித்தார். அது எவ்வாறு தவறானது? என்று விளக்காமலேயே, இன்று பெரியார் கட்சிகள் பொது சிவில் சட்டத்தினை எதிர்க்கின்றனர்.

ஈ.வெ.ராவால் 'காலித்தனம்', 'சண்டித்தனம்' என்று கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களை, இன்று கையிலெடுக்கும், ஆதரிக்கும், 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களில் எவராவது, குறைந்த பட்சம் ஈ.வெ.ரா அவர்கள் அவ்வாறு கண்டித்தது தவறு என்று சொல்ல துணிச்சல் இல்லையென்றாலும், தாங்கள் இன்னும் 'பெரியார் வழியில்' 'பெரியார் தந்த புத்தியில்' பயணிப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடில்லையா? (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

தமது கொள்கைக்கு எதிரான புத்தகங்களை, திரைப்படங்களை தடை செய்யுமாறு கோராமல், அவற்றை எல்லாம் அறிவுபூர்வமாக மறுத்து தமது பிரச்சாரத்திற்கான வாய்ப்புகளாக கருதி பயணித்தவர் ஈ.வெ.ரா. ஆனால் இன்று பெரியார் கட்சிகள் எல்லாம், விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பாணியில் அச்சுறுத்தி 'மெட்ராஸ் கஃபே' போன்ற திரைப்படங்களை தடை செய்தும், முத்தையா முரளிதரன் வேடத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை எதிர்த்துக் கெடுத்தும் பயணித்துக் கொண்டு, தாங்கள் இன்னும் 'பெரியார் வழியில்' 'பெரியார் தந்த புத்தியில்' பயணிப்பதாக சொல்லிக் கொள்வது வெட்கக்கேடில்லையா?

அவ்வாறு 'பெரியார் தந்த புத்தியில்' இருந்து தடம் புரண்டு பயணிப்பவர்கள் எல்லாம், தீபாவளி, ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற இந்து பண்டிகைகளை எதிர்ப்பதானது, குருட்டுப் பகுத்தறிவா? அல்லது பொதுவாழ்வு வியாபாரமா? என்ற கேள்விகளுக்கான விடைகள் எல்லாம், அவ்வாறு பயணிக்கும் பெரியாரிஸ்டுகளின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.


குறிப்பு: முகநூலில் காளிங்கன் பதிவில்: 

"சமணம் உருவ வழிபாடற்ற மதம். சமணம் பௌத்தத்திற்கு மூத்த மதம். சமணர்களும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சில பௌத்த பிரிவினர் தீபாவளியை கொண்டாடுகிறார்கள். சீக்கிய சமயம் இந்து, இஸ்லாம், பௌத்தசமயக் கருத்துகளை உள்ளடக்கியது. சீக்கியர்களும் தீபாவளியை கொண்டாடுகிறார்கள்.

தென் இந்தியாவில் கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள தொல்தமிழ்ப் பழங்குடிகளிடம் ஒரு வழக்கம் உள்ளது. தொற்று நோய்க் காலங்களில் அந்த தீய சக்தி தன் வீட்டை அண்டாமலிருக்க வாசலில் விளக்குகளை ஏற்றி வைப்பது ஒரு வழமை. ஐப்பசி தமிழகத்தின் மழைமாதம். தென் இந்தியாவில் மிகப்பெரிய நோய்க்காலம். விளக்குகளை ஏற்றி வைப்பது கிராமங்களில் இன்றும் நீடிக்கிறது. தாலப்பொலி என்ற வடிவில் தட்டுகளில் தீபங்களை ஏந்தி அணிவகுப்பது. அதுதான் தொடக்கமாக இருக்க வேண்டும். தொன்மையான காலத்தில் இந்த வழமை வளர்ந்து பண்டிகையாக ஆகியிருக்கலாம். 

பௌத்தர்கள் இதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். சமணர்களும் அதை தங்கள் மதத்துக்குள் இழுத்துக்கொண்டார்கள். தங்களுக்கான விளக்கங்களை அளித்தார்கள்.

பின்னர் பெருமதங்களாக ஆன சைவமும் சாக்தமும் இப்பண்டிகையை தங்கள் கோணத்தில் விளக்கி உள்ளிழுத்தன. சைவத்தில் அது கார்த்திகைதீபமாகவும் சாக்தத்தில் தீபாவளியாகவும் ஆகியது. அடிப்படையில் பழங்குடியினர் அஞ்சிய அந்த நோய் அல்லது பீடையின் இன்னொரு வடிவமே நரகாசுரன். நரகாசுரனைப்பற்றிய வெவ்வேறு உருவாக்கங்களும் அழிவுச்சக்தி என்றே உருவாக்கம் பெற்றுள்ளன. 

பல இடங்களில் இன்று அது ஒரு முக்கியமான சமணப்பண்டிகை. சில இடங்களில் பழங்குடிப்பண்டிகை. சைவம் வைணவம் சீக்கியம் சமணம் பௌத்தம் எல்லா மதங்களுக்கும் தீபாவளிக்கு அவர்களுக்கான புராண விளக்கம் இருப்பதைப் பார்க்கலாம். "

Sunday, October 18, 2020

 

காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள்,


சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் ஈ.வெ.ரா?

 

காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கல் ஈ.வெ.ராவிற்கு ஏற்பட்டிருக்கிறது;

என்பதை பேரா.தா.மணி முகநூல் விவாதத்தில் வெளிப்படுத்திய கீழ்வரும் கருத்தானது எனக்கு உணர்த்தியது.

ஈவெராவின் வரலாற்றில் அனைத்துச் context சூழலிலும் (சந்தர்ப்பங்களிலும்) சிறிதும் பிறழாமல்,

1தமிழ் மொழி

2.தமிழ்க்கல்வி

3தமிழிலக்கியம்

4பண்பாடு

5.தமிழர் மெய்யியல்

6தமிழர் இன அரசியல்,

இயக்கங்கள்

அமைப்புகள்

போராட்டங்கள்

இவற்றுக்கு எதிரான கருத்துக்களையே ஒளிவுமறைவின்றி, தடுமாற்றமின்றிப் பதிவிட்டுள்ளார்.

மேற்கண்ட எவற்றிலும் முரணின்றிப் பேசியதுதான் அவரின் துணிவு(நேர்மை எனலாம்)

தமிழக எல்லைப்பிரிப்பில்கூட அவர் தமிழத்தின் உரிமையைப் பேசவில்லை. மாறாக தெலுங்க, கேரள சார்பாகவே பேசியதை மறுக்கமுடியாது.

(1938இல்தமிழ்நாடு, பின்னர்1944இல் திராவிட நாடு,1956 இல் மீண்டும் தமிழ்நாடு, என மாறி மாறிப்பேசியது தனிக்கதை)

ஈ.வெ.ராவின் 'தமிழ் தமிழர்' தொடர்பான கருத்தினை பேரா.தா.மணி அதன் மூலத்தினை சரிபார்க்காமல் ("தேடிக்கொண்டிருக்கிறேன்." பேரா.தா.மணி) வெளியிட்டது தொடர்பான விவாதத்தின் போது மேற்குறிப்பிட்ட கருத்து முகநூலில் வெளிவந்துள்ளது.

முகநூல் பதிவில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்த பல பொய்யான தகவல்கள் வெளிவரும் காலம் இதுவாகும். (‘நேர்மையான இந்துத்வா ஆதரவாளர்களின் பார்வைக்கு; இந்துத்வா முகாம்களிலும் 'கறுப்பர் கூட்டம்'?; https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_27.html )

அவ்வாறு வெளிவருவதை சரியான தகவலா? என்று ஆராயாமல் பயன்படுத்துபவர்கள் எல்லாம் நானாயிருந்தாலும் யாராயிருந்தாலும் அவர்களின் புலமையின் தர அடையாளம் (benchmark) கேள்விக்குறிக்கு உள்ளாகும் அபாயம் இருக்கிறது.

பேரா.தா.மணி மட்டுமின்றி, தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா ஆதரவு முகாம்களில் இருந்து ஈ.வெ.ரா மீது முன்வைக்கும் விமர்சனங்களுக்கு முக்கிய மூலமாக (source) இருப்பது ,   வே.ஆனைமுத்து தலைமையில் ஒரு குழு தொகுத்த 'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள்' ஆகும். அதன் வரைஎல்லைகள் (limitations) வருமாறு:

1. ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்த காலம் 1919–1925. அந்த காலக்கட்டத்தில் ஈ.வெ.ரா வெளிப்படுத்தியவை இதுவரை தொகுக்கப்படவில்லை. மேற்குறிப்பிட்ட தொகுப்பிலும் இடம் பெறவில்லை.

 

2. குடி அரசு மற்றும் விடுதலை ஆகிய இதழ்களில் வெளிவந்தவை பெரும்பாலும் ஈ.வெ.ரா பொதுக்கூட்டங்களில் பேசிய பேச்சுக்களே ஆகும். ஆனால் காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான தொகுப்புகள் எல்லாம் பெரும்பாலும் அவர்கள் எழுதிய கட்டுரைகள் ஆகும்.

 

3. ஈ.வெ.ராவின் வெளிவந்த பகுதிகளை முழுமையாக வெளியிடாமல் , தலைப்புகளுக்கு ஏற்றார்ப் போல சில பகுதிகள் மட்டுமே மேற்குறிப்பிட்ட தொகுப்பில் வெளிவந்துள்ளன. மேற்குறிப்பிட்ட தொகுப்பை மட்டுமே நம்பி ஈ.வெ.ராவை விமர்சிப்பதில் உள்ள வரைஎல்லைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால் ,   குடிஅரசு மற்றும் விடுதலையில் வெளிவந்தவைகளை முழுமையாகப் படிக்க வேண்டும்.   

 

4. த‌ற்குறிகள் மற்றும் அரைகுறை எழுத்தறிவுள்ளவர்கள் நிறைந்த பொதுக்கூட்டங்களில் ஈ.வெ.ரா பேசிய பேச்சுக்களுக்கும்,   குடி அரசு விடுதலை போன்ற இதழ்களில் ஈ.வெ.ரா எழுதிய தலையங்கங்கள் கட்டுரைகள் அறிக்கைகள் போன்றவற்றிற்கும் வேறுபாடு உண்டு. அவரின் நிலைப்பாட்டினைச் சரியாக விளங்கிக் கொள்ள பிந்தையதை முக்கியமாகக் கருத வேண்டும். அவை தரும் வெளிச்சத்தில் பேச்சுக்களில் உள்ள உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை ஒதுக்கி ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை ஆராய்ந்து அறியலாம்.

5. தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி, ஈ.வெ.ரா அவர்கள் தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதுவற்கான‌ நியாயங்களுக்கு ஈ.வெ.ராவே கார‌ணமாகியுள்ளார். நானறிந்த வரையில் தம்மை தவறாக அவ்வாறு புரிந்து கொள்ளும் வகையில் பேசிய, எழுதிய தலைவர் உலக அளவில் ஈ.வெ.ரா மட்டுமே ஆவார். (https://tamilsdirection.blogspot.com/2019/08/blog-post.html)

6. ‘தமிழர் அடையாளத்தை விட திராவிடர் அடையாளம் சரி என்பதற்கு ஈ.வெ.ரா முன்வைத்த வாதங்களை யார் வேண்டுமானாலும் மறுக்கலாம். கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றவர்கள் ஈ.வெ.ராவின் அந்த வாதத்தினை மறுத்திருக்கிறார்கள். கி.ஆ.பெ.விஸ்வநாதன் போன்றவர்களின் வாதங்களை ஏன் தாம் ஏற்க முடியாது? என்பதையும் ஈ.வெ.ரா தெளிவுபடுத்தி இருக்கிறார். அந்த வாதத்தினை இன்று முன்னெடுப்பதும் சரியே ஆகும். ஆனால் ஈ.வெ.ராவின் அந்த கருத்தின் அடிப்படையில், அவரின் நோக்கத்திற்கே களங்கம் கற்பித்து, ஈ.வெ.ராவை தமிழர்க்கு எதிரி என புரிந்து கொள்வது அபத்தமாகும்.

"தமிழ் தோன்றிய 3000 – 4000 ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும், தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழ் சமுதாயத்திற்கு என்ன நன்மை? என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்த புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால் இது வரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்" (தாய்ப் பால் பைத்தியம்என்ற நூலிலிருந்து) என்று ஈ.வெ.ரா முன்வைத்த வாதத்திற்கு அவர் வாழ்ந்த காலத்தில் எவராவது சரியான மறுப்பினை முன் வைத்தார்களா?

அவரின் சமூகநேர்மையை சந்தேகிப்பதானது அறியாமையா? அல்லது சுயலாப அடிப்படையிலான உள்மறைத்திட்டமா (hidden agenda)? என்ற கேள்விகளுக்கும் இடம் இருக்கிறது.

நானறிந்தது வரையில், உலகிலேயே தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை, பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்டவர்  ஈ.வெ.ரா மட்டுமே ஆவார். (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html )

கி.வீரமணி ஆதரவில் புலவர் இமயவரம்பன் அரவணைப்பில்  தஞ்சை இரத்தினகிரி மற்றும் மருதவாணன் மேற்பார்வையில் பேராசிரியர்கள் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் அரசு பணியாளர்கள் ஆகியோர் அடங்கிய குழுவின் மூலமாக,1983இல் திருச்சி பெரியார் மணியம்மை மேல்நிலைப்பள்ளி பள்ளி வளாகத்தில் ஈ.வெ.ராவின் எழுத்துக்களை ஆண்டுவாரியாக தொகுக்கும் முயற்சியானது மேற்கொள்ளப்பட்டது.

அம்முயற்சியிலும் குடிஅரசு விடுதலை ஆகிய இதழ்களில் புனைப்பெயரிலும் பெயரின்றி வெளிவந்தவைகளிலும் எவை எவை ஈ.வெ.ரா எழுதியதாக இருக்கக்கூடும்? என்பதை தஞ்சை இரத்தினகிரி மற்றும் மருதவாணன் ஆகிய இருவருமே முடிவு செய்தார்கள். அவ்வாறு தொகுக்கப்பட்டதில் விடுபட்டவைகளையும் தேடிக் கண்டுபிடித்து சேர்த்து கீழ்வரும் தொகுப்பினை கொளத்தூர் மணி தலைமையிலான பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளார்கள்.

http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51

'பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் 3 தொகுதிகள்' மூலமாக ஈ.வெ.ராவை விமர்சிக்க விரும்புபவர்கள் தமது வாதத்தில் வெளிப்படும் குறைகளைத் தவிர்க்க மேற்குறிப்பிட்ட தொகுப்பை படிக்க வேண்டியது அவசியமாகும்.

தவறான மற்றும் திரித்த தகவல்களின் தகவல்களின் அடிப்படையில், ஒரு தலைவரைப் பாராட்டுவதால், அவ்வாறு பாராட்டுபவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அதிக கேடு வராது.

ஆனால், எந்த ஒரு தலைவரையும் தவறான தகவல்கள் (உதாரணமாக, மணியம்மை ஈ.வெ.ராவின் வளர்ப்பு மகள்) மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் கண்டிப்பதன் காரணமாக, அவ்வாறு கண்டிப்பவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் கேடு விளைவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு கண்டிப்பவருக்கு அவர் வாழும் சமூகத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு கேடு விளையும். (‘1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில், மாரிதாஸ் உள்ளிட்டு பல பா.ஜ.க ஆதரவாளர்கள்?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/1949-1967.html )

"'Harijan’ மற்றும் ‘Young India’ ஆகிய இரண்டும் காந்தி நடத்திய இதழ்களாகும். அவை ஆண்டு ரீதியாகத் தொகுக்கப்பட்டு வெளிவந்துள்ளன. அது போலவே, ஈ.வெ.ரா 1925 முதல் வெளியிட்ட இதழ்களின் தொகுப்பு வெளிவர வேண்டும். ஈ.வெ.ராவையும், அவர் வாழ்ந்த தமிழ்நாட்டையும் விளங்கிக் கொள்ள அவை உதவும்..

ஈ.வெ.ரா பற்றியும் ஈ.வெ.ரா வாழ்ந்த தமிழ்நாட்டு சூழல் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டுமானால், குறைந்த பட்சமாக‌  ஈ.வெ.ரா, ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளியிட வேண்டும்.

அது தொடர்பாக, நான் மேற்கொண்ட முயற்சியானது1996இல் நடந்த ஆட்சி மாற்றம் மூலமாக எவ்வாறு தோல்வியில் முடிந்தது? என்பதை கீழ்வரும் பகுதியில் விளக்கியுள்ளேன்.

1996 ஆட்சி மாற்றத்துக்கு முன், கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமி, திருச்சி பெரியார் ஈ.வெ.ரா கல்லூரியில் பணி புரிந்த காலத்தில் எனக்கு நெருக்கமானவர். அப்போது 'பெரியார்' கொள்கையாளராக இருந்த எனது தலைமையில் தொகுக்கப்பட்டு, 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய நூல்களை தி.க வெளியிட்டதை அவர் அறிவார். 1989‍ - 1991 காலத்தில் அவர் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ. ஒவ்வொரு சட்டசபை கூட்டம் தொடங்குவதற்கு முதல் நாள், என்னை வீட்டில் சந்தித்து, பேச வேண்டிய குறிப்புகளை எடுத்துக் கொள்வார். முதல்வர் கருணாநிதியின் கவனத்தை ஈர்க்கும் அளவுக்கு, கச்சத்தீவு உள்ளிட்டு 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' தொடர்புடைய பிரச்சினைகளை சட்டசபையில் பதிவு செய்து, ஜெயலலிதாவின் பாராட்டைப் பெற்றார். எனவே 1991 அ.இ.அ.தி.மு.க தேர்தல் அறிக்கையை உருவாக்குவதில் அவர் முக்கிய பங்காற்றினார்.

தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு முகாம்களில் அரைகுறை தகவல்களுடன் விவாதிக்கும் போக்கினை நீக்குவதற்காக, 'பெரியார்', ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளியிடுவதும், அந்த தேர்தல் அறிக்கையில் என்னால் இடம் பெற்றது.

1991-க்குப்பின் ஜெயலலிதா ஆட்சியில் அவர் கல்வி அமைச்சரானார். கல்வி அமைச்சராக இருந்த பேரா.பொன்னுசாமியிடம் மேற்குறிப்பிட்ட 1991 தேர்தல் அறிக்கையை நினைவூட்டினேன்.

முதலில் பெரியாரின் கூட்டுத்தொகை நூல்வரிசையை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மூலமாக வெளியிடலாம்; நிதியைக் காரணம் காட்டி அதை நிராகரித்தால், அரசு அனுமதியுடன் உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் நன்கொடைகள் பெற்று அதனை வெளியிடலாம்; என்ற எனது ஆலோசனையை அவர் ஏற்றார். அத்தகவலை அந்நிறுவன இயக்குநர் இராமர்.இளங்கோவிடம் தெரிவித்தேன். அந்நிறுவனத்திற்கு கல்வி அமைச்சரே தலைவர். அடுத்து நடந்த அந்நிறுவனக் கூட்டத்தில், இராமர்.இளங்கோ மற்றும் பொன்னுசாமியின் பங்களிப்பால் அத்தீர்மானம் 1996இல் நிறைவேறியது. 1996இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

அதன்பின் அமைச்சரான தமிழ்க்குடிமகனிடம் மேற்குறிப்பிட்ட தீர்மானத்தை நினைவூட்டியபோது, உற்சாகமாக அதை வரவேற்று எனக்கு நம்பிக்கையைக் கொடுத்தார். அடுத்த முறை சந்தித்தபோது, அதை அரசு செய்வதை விட தனியார் செய்யலாம் என்று முதல்வர் கருணாநிதி கருதுவதாக தெரிவித்தார். 1996-இல் ஆட்சி மாற்றம் நடந்திருக்கவில்லை என்றால், பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் ஜெயலலிதா ஆட்சியில் வெளிவந்திருக்கும். கருணாநிதி ஆட்சியில் அவருக்கு முக்கியத்துவம் கொடுப்பவை மட்டுமே வெளிவந்தது. அவரின் முக்கியத்துவத்தைக் குறைக்கும் வகையில், பெரியார், அண்ணா ஆகிய இருவரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவர, கருணாநிதியே தடையாக இருப்பார், என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்தேன். (‘கருணாநிதியின் சுயநல அரசியலானது, தமிழைச் சீரழித்த சமூக செயல்நுட்பம் ?’; https://tamilsdirection.blogspot.com/2020/10/1996.html)

காந்தியின் தொகுப்பு நூல்கள் மத்திய அரசின் உதவியுடனும், அம்பேத்கரின் தொகுப்பு நூல்கள் மகராட்டிர மாநில அரசின் துணையுடனும் வெளிவந்திருக்கின்றன.

மேற்குறிப்பிட்து போன்ற திருக்குறள் தொடர்பான‌ முயற்சிகளுக்கு தடைகளாக‌ தி.மு.க ஆட்சியில் கருணாநிதியும், ஜெயலலிதா ஆட்சியில் சசிகலா நடராஜனும் இருந்தார்கள் என்பது எனது அனுபவங்கள் ஆகும். (‘தமிழ்நாட்டு திராவிடஅரசியலில் சிக்கிய திருக்குறள் ஆய்வுகள்’; https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தற்போது கருணாநிதி நடரான் ஜெயலலிதா ஆகியோர் மறைந்து விட்டார்கள். சசிகலா தொடர்பாக 2017 சனவரியில் கீழ்வரும் கணிப்பினை வெளியிட்டேன்.

'திருக்குறள் (471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது.

ஜெயலலிதாவை முன்னிறுத்தி, பயணித்தது வரை, நீரில்  முதலையாக இருந்த சசிகலா, பொதுச் செயலாளர் பதவி மூலம், நீரை விட்டு 'அதிக தூரம்' தரைக்கு வந்த முதலையாகி விட்டாரா?' (https://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post.html )

இமாலய வெற்றி பெற்ற எம்.ஜி.ஆரின்  'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்படத்துடன் ஒப்பிடும் நிலையில் தமிழ்நாடு இன்று பயணிக்கிறது. அந்தத் திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம்.ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக.’ (https://tamilsdirection.blogspot.com/2020/03/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

கருணாநிதி நடராஜன் ஜெயலலிதா ஆகியோர் மறைந்து நிலையில் பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவருவதற்கும், திருக்குறள் தொல்காப்பியம் உள்ளிட்ட தமிழ் தொடர்பான எனது ஆய்வுகள் மூலமாக தமிழ் வளர்வதற்கும், மேற்குறிப்பிட்ட தடைகளை ஏற்படுத்தும் வலிமைக்கு இடமில்லாத அளவுக்கு சசிகலா அரசியல் செல்லாக்காசாகி விட்டார்.

எனவே,  தி.மு.க  அ.இ.அ.தி.மு.க பா.ஜ.க உள்ளிட்ட முக்கிய கட்சிகளின் 2021  தேர்தல் அறிக்கைகளில்,  பெரியார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி' ஆகிய நால்வரின் பேச்சுக்களையும் எழுத்துக்களையும் ஆண்டு வாரியாக தொகுத்து, காந்திக்கு உள்ளதைப் போல, தொகுப்பு நூல்கள் வெளிவருவது இடம் பெற வேண்டும்.

ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக‌ விமர்சிக்க விரும்பும் தமிழ்த்தேசிய மற்றும் இந்துத்வா ஆதரவாளர்களும்,  அந்த விமர்சனங்களை அறிவுபூர்வமாக சந்திக்க விரும்பும் 'பெரியார்' ஆதரவாளர்களும், முயற்சிகள் மேற்கொண்டால், அது சாத்தியமாகும். எந்த கட்சி ஆட்சியைப் பிடித்தாலும், அது செயல்வடிவம் பெறும்.

அதன்பின் தான்,  காரல் மார்க்ஸ்,   ஏங்கல்ஸ்,   லெனின்,   காந்தி,   நேரு,   பாரதி போன்ற பிரபலங்கள் தொடர்பான விமர்சனங்கள் சந்தித்திராத தனித்துவமான (unique) சிக்கலில் இருந்து,  ஈ.வெ.ரா விடுதலை பெறுவதும் சாத்தியமாகும்.


குறிப்பு:

ஈ.வெ.ராவின்  'தகவல் பரிமாற்ற குறைப்பாட்டில்' இருந்து, நான் பாடம் கற்று பின்பற்றி வருவது கீழ்வருமாறு;

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்

உறவு கலவாமை வேண்டும்!

வள்ளலாரின் 'திருவருட்பா - (ஈ.வெ.ரா பின்பற்றியது)

 

சொல் ஒன்று சொல்லி பொருள் ஒன்று திரிந்து

புரிதல் திரியாமை வேண்டும்'- '

புதிய திருவருட்பா'- (ஈ.வெ.ரா பின்பற்றத் தவறியது)

https://tamilsdirection.blogspot.com/2019/08/blog-post.html

Saturday, October 17, 2020

 

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில்,


மாரிதாஸ் உள்ளிட்டு பல பா.ஜ.க ஆதரவாளர்கள்?
 

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் எந்த அளவுக்கு ஈ.வெ.ராவை இழிவு செய்தார்கள்? என்று தெரியாத புதிய தலைமுறைக்கு, அவற்றை நினைவூட்டும் வகையில்(https://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html

மாரிதாஸ் உள்ளிட்டு பல பா..க ஆதரவாளர்கள் அதே பாணியில்,  தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் ஈ.வெ.ராவை இழிவு செய்து வருகிறார்கள்.

எனது தலைமுறையைப் போல, தி.மு.க தலைவர்களின் பேச்சில் எழுத்தில் ஏமாந்த தலைமுறை அல்ல,  இன்றைய புதிய தலைமுறை. எனவே தி.மு.க பாணியில் தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் இந்துத்வா முகாம்களில் ஈ.வெ.ராவை இழிவு செய்து வரும் போக்கானது,  'இந்துத்வா பாணி தி.மு.க'வாகவே தமிழக பா.ஜ.கவை இன்றைய புதிய தலைமுறைக்கு அடையாளம் காட்டும். அதன் காரணமாக, பிராமணரல்லாத மாணவர்களும் இளைஞர்களும் இந்துத்வா எதிர்ப்பு முகாம்களை நோக்கி ஆர்வம் காட்டும் போக்கும் தொடங்கி விட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அடையாளச்சிக்கலும்,   'உட்குழு - வெளிக்குழு' சிக்கலும், அதற்கு சமூக வினையூக்கியாக (social catalyst) செயல்படுகின்றன.

இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உள்ள 'கறுப்பர் கூட்டங்கள்' எல்லாம், உணர்ச்சி பூர்வ பரிமாற்ற வெறுப்பு அரசியலில் சமூக நேர்மையைச் சீர்குலைத்துப் பயணிப்பதானது, 2014 முதல் வேகமெடுத்து வரும் ஆபத்தான சமூக சிக்னலாகும்.

அதன் தொடர்விளைவாக, 'கறுப்பர் கூட்டம்' பிராமண எதிர்ப்பு அமைப்புகளுக்கு ஆள் சேர்த்துக் கொடுக்கும் முகவர்களாக‌‌ (Recruiting agents) எவ்வாறு பிராமணர்கள் பங்களித்து வருகிறார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.’ (‘'தமிழர்' உட்குழுவாக, 'இந்தியர்' வெளிக்குழுவாக, பிராமணரல்லாதார் 'உட்குழுவாக', பிராமணர்கள் 'வெளிக்குழுவாக'; எதிரெதிர் முகாம்களின் 'கறுப்பர் கூட்டங்கள்'; தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் கேடாகும் வகையில் உள்மறை (Latent) சங்கமம்; https://tamilsdirection.blogspot.com/2020/08/latent.html)

தவறான மற்றும் திரித்த தகவல்களின் தகவல்களின் அடிப்படையில், ஒரு தலைவரைப் பாராட்டுவதால், அவ்வாறு பாராட்டுபவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் அதிக கேடு வராது.

ஆனால், எந்த ஒரு தலைவரையும் தவறான தகவல்கள் (உதாரணமாக, மணியம்மை ஈ.வெ.ராவின் வளர்ப்பு மகள்) மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில் கண்டிப்பதன் காரணமாக, அவ்வாறு கண்டிப்பவருக்கும் அவர் வாழும் சமூகத்திற்கும் கேடு விளைவதைத் தவிர்க்க முடியாது. அவ்வாறு கண்டிப்பவருக்கு அவர் வாழும் சமூகத்தில் எந்த அளவுக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த அளவுக்கு கேடு விளையும்.

இந்துத்வா பற்றாளர் தங்க.முத்துக்கிருஷ்ணன் எல். முருகன் அவர்களுக்கு  எழுதிய பகிரங்க கடிதமும், எனது பின்னூட்டமும் முகநூலில் வெளிவந்துள்ளது. ஈ.வெ.ராவின் வாழ்க்கை வரலாறு பற்றிய அறியாமையில், அதே பாணியில் இன்னொன்று:  

https://www.youtube.com/watch?v=dhdk5MvH_cE&feature=youtu.be 

ஏற்கனவே ராஜிவ் மல்கோத்ரா உள்ளிட்டவர்கள் ஈ.வெ.ரா பற்றி வெளியிட்டு வரும் தவறான கருத்துக்கள் பற்றியும் தெளிவு படுத்தியுள்ளேன். (‘Rajiv Malhotra – Prof. Vaidyanathan interview on ‘Dravidian Identity Politics EVRamaswamy’;  Why it may accelerate the breaking of Tamilnadu from India?; https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html) 

நேர்மறை சிந்தனைகளுடன் வாழ்பவர்கள் எல்லாம் தமது நிலைப்பாட்டிற்கு எதிரான மனிதரை வெறுக்க மாட்டார்கள். ஒரு கொள்கையை எதிர்ப்பதற்கும்,  அந்த கொள்கையாளரை எதிர்ப்பதற்கும் உள்ள வேறுபாட்டை  அவர்கள் அறிவார்கள். எனவே ஒரு கொள்கையை எதிர்க்கும் போது,  கொள்கையாளரையும்  சேர்த்து எதிர்க்கும் வெறுப்பு அரசியலில் அத்தகையோர் பயணிக்க மாட்டார்கள். எனவே உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வமான வாதத்தையே,  அத்தகையோர் முன்னெடுப்பார்கள்.

நானறிந்த  வரையில் தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் வெறுப்பு அரசியலில் பயணித்த முக்கிய நபர்கள் எல்லாம் கருணாநிதிஸ்டாலின்மு.க.அழகிரி,   சசிகலா, நடராஜன் ஆகிய குடும்பங்களில் குறைந்த பட்சமாக ஒன்றுடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நல்லுறவில் இருந்தவர்கள் ஆவார்கள். வெறுப்பு அரசியலை குடும்ப ஊழல் பாதுகாப்புக் கவசமாக வளர்த்த பெருமை(?) கருணாநிதியையேச் சாரும். (https://tamilsdirection.blogspot.com/2019/10/blog-post.html

இந்துத்வா முகாமில் ஈ.வெ.ரா பற்றிய விவாதத்தினை அறிவுபூர்வமாக முன்னெடுப்பதையே நான் ஊக்குவிக்க விரும்புகிறேன். 

எனது பதிவில் கீழ்வரும் பகுதியில் கோட்சேயின் பெயரையும் குறிப்பிட்டிருந்தேன்.

தி.மு.க எம்.பி 'ரவிக்குமார் போன்றவர்கள் எல்லாம், அறிவு நேர்மையில் தடம் புரண்டு, 'ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியா'  மனநோயில் சிக்கியுள்ளார்களா? என்ற கேள்வி எழுவதற்கும் வாய்ப்புள்ளது.

ஈ..வெ.ரா, கோட்சே, உள்ளிட்டு எந்த பொதுவாழ்வு மனிதரின் தியாகங்களைப் புறக்கணித்து, அறிவுபூர்வ விமர்சனப் பார்வையையிழந்து,  அவர்கள் மீது உணர்ச்சிபூர்வ வெறுப்பினை உமிழும் 'செனோபோபியா'' எழுத்தாளர்கள் எவராவது, நம்முடன் நல்லுறவில் இருந்தால், அவர்களை திருத்த வேண்டும்; இயலாதெனில் நமது சமூக வட்டத்தில் இருந்து அகற்ற வேண்டும்.' (‘பிராமண எதிர்ப்பு செனோபோபியாவும், ஈ.வெ.ரா எதிர்ப்பு செனோபோபியாவும்’; https://tamilsdirection.blogspot.com/2018/11/5.html  )

மேற்குறிப்பிட்ட பதிவில் கோட்சே பெயர் இடம் பெற்றது தொடர்பாக,  ஒரு 'பெரியார்' ஆதரவாளர் என்னிடம் கேள்வி எழுப்பினார்.

அதற்கு 'கோட்சே காந்தியைக் கொன்றது தவறு. ஆனால் அதை மட்டும் வைத்து அவரை எடை போடக்கூடாது. நானறிந்த தகவல்களின் அடிப்படையில்,  நான் காந்தியை விட கோட்சேயை உயர்வாக மதிக்கிறேன்.' என்று தெரிவித்தேன்.

மேற்குறிப்பிட்டது தொடர்பாக, கீழ்வரும் பகுதியானது கவனிக்கத்தக்கதாகும்.

Jayamohan's Tamil book on Gandhi, had refutable blunders. Few years before, I paid the price & got the book from Pudukkottai Gnanalaya Krishnamoorthy. I started marking the portions that I could refute with the evidences. Meanwhile Gnanalaya Krishnamoorthy got the book from me, and did not return it till now. Due to lack of time, I could not work on it.

My close friend in Pudukkottai, Thiru.Kodandapani had collected valuable references to expose Gandhi. (‘Was Mahatma Gandhi a hypocrite?’; http://www.dailyo.in/politics/mahatma-gandhi-subhas-bose-ahimsa-non-violence-british-raj-independence/story/1/4756.html) Hope both of us will find time to work on those evidences, to bring out a book against ‘Gandhi Mania’; reason weakening, emotion banking based ‘myth making’ of the Indian leaders (like Gandhi, Nehru, EVR, etc), fuel, all kinds of anti-social, divisive forces. Encouraging emotion free, open minded intellectual debates, may help to combat the mania (without ignoring – like Jayamohan w.r.t EVR-  their sacrifices), strengthening the soft power to unify the people & to rescue the country from the divisive forces.

The soft power is a double-edged weapon w.r.t unifying as well as disintegrating a country like India. The above mania, by encouraging emotions to dominate over reason, weaken the soft power for ‘unifying the country’, while strengthening the soft power for disintegrating the country. (https://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none.html )

நான் காந்தியை விட,  கோட்சேயை உயர்வாக மதிப்பது தவறு என்று உரிய சான்றுகளின் அடிப்படையில் எதிர்ப்பதை வரவேற்கிறேன். அந்த சான்றுகளை நான் ஆராய்வேன். அவற்றின் அடிப்படையில் காந்தி மற்றும் கோட்சே தொடர்பான எனது நிலைப்பாடு தவறு என்று வெளிப்பட்டால்,

அதை பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்வதில் எனக்கு தயக்கமில்லை. அவ்வாறு செயல்பட எனக்கு சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து மறைந்த தலைவர் ஈ.வெ.ரா ஆவார். (தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  ஈ.வெ.ரா; https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html)

1949 முதல் 1967 வரை கருணாநிதியும் முரசொலியும் தவறான தகவல்கள் மற்றும் திரித்த தகவல்களின் அடிப்படையில், ஈ.வெ.ராவை இழிவு செய்த பாணியில், இன்று இழிவு செய்து வரும் பா.ஜ.க ஆதரவாளர்கள் எல்லாம், அதற்கு வருத்தம் தெரிவித்து, திருந்தி பயணிப்பது அவர்களுக்கும் நல்லது. தமிழக பா.ஜ.கவிற்கும் நல்லது. இல்லையென்றால், அவர்கள் எல்லாம் பா.ஜ.கவிற்கு எந்த அளவுக்கு அனுகூல சத்ருவாகப் பங்களித்தார்கள்? என்பதை, வரும் 2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெட்ட வெளிச்சமாக்கி விடும்.  (https://tamilsdirection.blogspot.com/2020/07/blog-post_22.html)  

2014 முதல் தமிழ்நாட்டில் மோடியின் செல்வாக்கு எவ்வாறு தொடர்ந்து சரிந்தது? என்பதை எனது பதிவுகளில் வெளிப்படுத்தியுள்ளேன்.

எல்.முருகன் தலைமையில் மீட்சி திசையில், தமிழக பா.ஜ.க-வின் 'தமிழ் அடையாள அரசியல்' ஒரு நல்ல திருப்பம் ஆகும்.

இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக, தமிழ்நாட்டில் உள்ள அடையாளச் சிக்கலை தீர்க்கும் முயற்சியானது, மோடி ஆட்சியில் துவங்கி விட்டது. (https://tamilsdirection.blogspot.com/2020/10/1996-2011-2019.html)

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்திய பாணியானது, இந்துத்வா ஆதரவு முகாம்களில், தி.மு.க பாணி துணிச்சலுடன் இன்று வெளிப்பட்டு வருவதும், 'சமூக காங்கிரின் நோய்' தொடர்பான சமூக அறிகுறியாகும்

காமராஜரின் அரசியலானது, தி.மு.கவின் வெறுப்பு அரசியலிடம் தோற்றது போலவே, தமிழக பா.ஜ‌.கவிற்குள் எல்.முருகன் - அண்ணாமலை கூட்டணியின் அரசியலானது, பா.ஜ‌.கவிற்குள் தி.மு.க பாணி வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்களிடம் தோற்கும் வாய்ப்பும் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2-1925.html)  


குறிப்பு: தமிழக பா.ஜ.கவில் ஈ.வெ.ராவை அறிவுபூர்வமாக விமர்சிக்க விரும்புபவர்கள் எல்லாம், கீழ்வரும் குடிஅரசு தொகுப்பினை படிப்பது நல்லது.

குடிஅரசு இதழ் தொகுப்பு “ : http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-17/9820-2010-07-02-06-13-51