Friday, August 2, 2019


'ஆரியம்' திசையில் பயணிக்கும் 'பெரியார்' கட்சிகளும்,


'திராவிடம்' திசையில் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் இயக்கமும்



வள்ளலாரின் 'திருவருட்பா - தெய்வமணி மாலை'யிலில் இருந்த கீழ்வரும் வரிகள் உள்ள பாடலை, 'கொஞ்சும் சலங்கை' திரைப்படத்தில்எஸ்.எம். சுப்பையா நாயுடு இசையில் சூலமங்கலம் ராஜலட்சுமி பாடினார், என்ற தகவல் என்னை வியப்பில் ஆழ்த்தியது

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!’

இன்று .வெ.ரா அவர்களை கடுமையாக விமர்சித்து வரும் வரிசையில் இடம் பெற்றுள்ளஎச்.ராஜா, அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி ஆன எழுத்தாளர் ரவிக்குமார் போன்றவர்களும்;

.வெ.ராவிடம் வெளிப்படாத 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா நோயில் சிக்கி பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும்,

எந்த அளவுக்கு .வெ.ரா பற்றிய அறியாமையில் இருக்கிறார்கள்? என்ற கேள்விக்கானதிறவுகோலானது மேற்குறிப்பிட்ட வள்ளலாரின் வரிகளில் இருக்கிறது.

1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களைப் படித்தது, கல்லூரி மாணவராக ஒரு முறை திருச்சி பெரியார் மாளிகையில் .வெ.ரா அவர்களை சந்தித்தது, அவர் பேசிய இரண்டு பொதுக்கூட்டங்களைக் கேட்டது, அவருக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்களிடம் நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் உரையாடியது, அவரை சமூகத்தைக் கெடுக்க வந்த 'நஞ்சாக' கருதிய, கடைசி காலத்தில் .வெ.ராவின் மருத்துவராகி, அவருடன் பழகியஜான்சன் போன்ற, .வெ.ராவை சமூகக்கேடாக கருதியவர்கள் அவரைப்பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் போன்றவற்றின் அடிப்படையில்;

தமிழ்நாட்டில் சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும், தம்மை எதிரியாக பாவித்தவர்ககளும் தம்மை நேரில் சந்தித்த பின் வியக்கும் வகையில், 'உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல்', சாகும் வரை வாழ்ந்தவர் .வெ.ரா ஆவார்.

1949 முதல் 1967 வரை வெளிவந்துள்ள .வெ.ராவின் எழுத்துக்களையும், ஒலிப்பதிவுகளையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்தால், பிராமணர்களை விட மிகவும் மோசமாக .வெ.ராவின் கண்டனங்களுக்கு உள்ளானவர்கள் அண்ணாதுரை உள்ளிட்ட தி.மு. தலைவர்கள் ஆவார்கள் என்பதை உணரலாம். நம்ப முடியாத அளவுக்கு அண்ணதுரையை இழிவு செய்ததில், .வெ.ராவுடன் போட்டி போடக்கூடியவர் பாரதிதாசன் மட்டுமே. ஒரு வேறுபாடு

தம்மை 'பொற்கிழி விவகாரத்தில் ஏமாற்றினார்' என்றசொந்த கரணத்தால், அண்ணாதுரையை கடுமையாகசாடினார் பாரதிதாசன்; அது தொடர்பான கட்டுரைகளை பாரதிதாசன் பிரியர்கள் மறுபிரசுரம் செய்ய அஞ்சும் அளவுக்கு.

ஆனால் '.வெ.ரா தம்மை உள்நோக்கமின்றி சமூக அக்கறையில் தான் கடுமையாக சாடினார்', என்ற புரிதல், தி.மு.கவில் அண்ணா போன்ற தலைவர்களுக்கு இருந்தது.  1967இல் முதல்வரான பின், அண்ணா திருச்சி பெரியார் மாளிகையில் இருந்த .வெ.ராவை நேரில் சந்தித்து தமது அமைச்சரவையை அவருக்கு காணிக்கயாக்குவதாக அறிவித்தது, 'அந்த' அடிப்படையில் தான்.

அது போலவே பிராமணர்களில் ராஜாஜி, .வெ.ரா கட்சியின் பயிற்சி வகுப்புகளை தமது தோட்டத்தில் நடத்த அனுமதித்த .வெ.ராவின் பிராமண நண்பர் போன்ற பல பிராமணர்கள் பலர், .வெ.ராவின் நம்பிக்கைக்கு உரிய நெருக்கமான நண்பர்களாகவே கடைசி வரை நீடித்தனர்.

இன்று .வெ.ரா அவர்களை கடுமையாக விமர்சித்து வரும் எச்.ராஜா, அண்மையில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு எம்.பி ஆன எழுத்தாளர் ரவிக்குமார் போன்றவர்களும்;

.வெ.ராவிடம் வெளிப்படாத 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா நோயில் சிக்கி பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களும்;

தமிழ்நாட்டில் சொந்த வாழ்விலும், பொதுவாழ்விலும்;

'உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசாமல்', தம்மை எதிரியாக பாவித்தவர்களும் வியக்கும் வகையில் சாகும் வரையில் .வெ.ரா வாழ்ந்ததைப் போல வாழ்கிறார்களா? இல்லையா? என்பதானது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

எனக்குக் கிடைத்ததைப் போல,‌ ஈ.வெ.ரா பற்றிய உள்ளீடுகள் கிடைக்க வாய்ப்பில்லாதவர்கள் எல்லாம், 'பெரியார்' என்ற சிறையில் சிக்கியுள்ள ஈ.வெ.ராவை;

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதுவதிலும் நியாயங்கள் இருக்கின்ற.

தமது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழைக் காட்டுமிராண்டி மொழியாகக் கருதி, தமிழ்நாட்டில் 'குருட்டுப் பகுத்தறிவு வளர, .வெ.ரா எவ்வாறு பங்களித்தார்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்

அதில் முதல் காரணமாக நான் கருதுவது;

.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' .வெ.ராவின் கொள்கைகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தும் பகுத்தறிவின்றி, 'களப்பணி' ஆற்றி வரும் 'குருட்டு பகுத்தறிவாளர்கள்' முதல் காரணமாக இருக்கிறார்கள்.

இரண்டாவது காரணமாக கீழ்வருவதை நான் கருதுகிறேன்.

தகவல் பரிமாற்றத்தில், மூலமாக (Source) பங்களிப்பவரின் வாக்கியத்தில் உள்ள சொற்கள் வெளிப்படுத்தும் பொருளானது 'செமாண்டிக்ஸ்' (Semantics) ஆகும். அதனை எவ்வாறு புரிந்து (interpreting) என்ன வகையான யூகங்களுக்கு (inferences) ஏற்பியாக (Receiver) இருந்தவர் உள்ளாகிறார்? என்பது தொடர்பானது 'பிராக்மாடிக்ஸ்' (Pragmatics) ஆகும்.

According to one way of understanding the distinction, semantics is the study of how sentences of a language - or some suitable level of representation, such as logical forms - compositionally determine truth conditions, while pragmatics is the study of inferences that hearers draw on the basis of interpreting truth. 

தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி .வெ.ரா அவர்கள் பேசினார், என்பதற்கு அவரின் ஒலிப்பதிவுகளும், எழுதினார் என்பதற்கு அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளும் சான்றாக உள்ளன. உதாரணமாக;

'ஆரியம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிக்காதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது'

என்பது .வெ.ரா கொடுத்துள்ள விளக்கங்களில் ஒன்றாகும். நான் பெரியார் இயக்கத்தில் நுழைந்த காலத்தில், தஞ்சை இரத்தினகிரி என்னிடம் கொடுத்த சிறு வெளியீடுகள் ஒன்றில் இடம் பெற்று என்னை ஈர்த்த வாசகங்களில் அதுவும் ஒன்றாகும். அந்த காலக்கட்டத்தில், தகவல் பரிமாற்றத்தில் தாம் விரும்பியவாறு பொருள் திரிபு செய்து கருத்துக்களை வெளியிடுவதில் உள்ள அபாயங்கள் பற்றி எனக்கு தெரியாது.

பழந்தமிழ் இலக்கியங்களை எல்லாம் நான் 'இசையின் இயற்பியல்' (Physics of Music) ஆய்வுக்கு உட்படுத்தி வெளியான கண்டுபிடிப்புகள் மூலமாக, .வெ.ரா அவர்கள் எத்தகைய 'பொருள் திரிபு' (Semantic distortion) சூழ்ச்சியில் சிக்கி, தகவல் பரிமாற்றத்தின் அடிப்படை இலக்கணம் பற்றிய புரிதலின்றி, தாம் பயன்படுத்திய சொற்களிலும் அவ்வப்போது 'பொருள் திரிதல்' செய்து பயணித்தார்? என்பது எனக்கு விளங்கியது.

முதலில் 'திராவிடர்' என்ற சொல் தொடர்பான 'பொருள் திரிபு' சூழ்ச்சியில் .வெ.ரா சிக்கி பயணித்ததை பார்ப்போம்.

'மேலை நாடுகளில், ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்டபொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது.

தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக் கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக, மொழிபெயர்ப்புகளில், 'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தவறைவிட, மிக மோசமான தவறு, மேற்குறிப்பிட்டதாகும்.' 
(‘'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’; 

அவ்வாறு 'திராவிடர்' என்ற சொல் தொடர்பான 'பொருள் திரிபு' சூழ்ச்சியில் சிக்கி பயணித்த .வெ.ரா, 'ஆரியம்' என்ற சொல்லுக்கும், 'திராவிடம்' என்ற சொல்லுக்கும் கீழ்வரும் புதிய பொருளை அறிமுகப்படுத்தினார்.

'ஆரியம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிக்காதது; திராவிடம் என்றால் மாற்றிக் கொள்ள இடமளிப்பது'

.வெ.ராவின் கொள்கைகளை எல்லாம், 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாமல் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம் 'ஆரியம்' என்ற சொல்லின் மேற்குறிப்பிட்ட பொருளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது தமது கொள்கைகளை எல்லாம், 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி 'திராவிடம்' என்ற சொல்லின் மேற்குறிப்பிட்ட பொருளுக்கு இலக்கணமாக வாழ்ந்து வருகிறார்கள்.
(‘RSS Chief ‘Bhagwat said the Sangh acknowledges as valid only those parts of “Bunch of Thoughts” which remain relevant to the current circumstances and have been put together in an in-house publication, “Guruji: Vision and Mission”.’; https://timesofindia.indiatimes.com/india/rss-has-discarded-chunks-of-golwalkars-thoughts-mohan-bhagwat/articleshowprint/65879084.cms ‘- ‘Will 'Periyar' parties follow RSS to discard boldly EVR's wrong policy like anti-Tamil language & literature, etc, pointed out in my blog posts? - 'சோ.ராமசாமியும், .வெ.ராமசாமியும்'; 

ஒரு 'பெரியார்' ஆதரவாளர் வெளிப்படுத்தியுள்ள கருத்து:

'பாஜக அரசிடமிருந்து இப்படியொரு நல்லது வந்து விட்டதே, எப்படி வரலாம். இப்படி வந்தால் அது வளர்ந்து விடுமே என்ற எண்ணங்கள் சற்று தாழ்வானவை!!!

பாஜகவிடமிருந்து இது போன்ற பலவை வரவேண்டும்.

எல்லா கட்சிகளும் உயர் சிந்தனைகளால் நிறையவேண்டும் என்ற மனநிலை வரும் போது இவைகளெல்லாம் தானாக மறைந்துவிடும்.” (http://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html)

தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதும் நியாயங்களுக்கான முதல் காரண குற்றவாளிகளாக, .வெ.ராவின் கொள்கைகளை எல்லாம், 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாமல் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்கள் இருக்கிறார்கள்.

தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி .வெ.ரா அவர்கள் பேசினார், என்பதற்கு அவரின் ஒலிப்பதிவுகளும், எழுதினார் என்பதற்கு அவர் எழுதி வெளிவந்துள்ள கட்டுரைகளும் சான்றாக இருக்கிற சூழலில்;

'அந்த' குறைபாடுகளையே வேலியாக்கி, 'பெரியார்' சிறையில் .வெ.ரா சிக்கியுள்ளார்; .வெ.ராவிடம் வெளிப்படாத 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா நோயில் 'பெரியார்' ஆதரவாளர்களும் சிக்குவதற்கு காரணமாகி. 'அந்த பெரியார் சிறையில்' இருந்து .வெ.ரா-வை மீட்க, நான் முயற்சிப்பதை, எனது பதிவுகளை எல்லாம் தொடர்ந்து படிப்பவர்கள் அறிவார்கள். (‘'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? ‘; 

தாம் பயன்படுத்தும் சொல்லிற்கான பொருளை தாம் விரும்பியவாறு 'பொருள் திரிதலுக்கு' (Semantic distortion) உட்படுத்தி .வெ.ரா அவர்கள் தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'வரலாற்று குற்றவாளியாக' கருதுவற்கானநியாயங்களுக்கு .வெ.ராவே காரணமாகியுள்ளார். நானறிந்த வரையில் தம்மை தவறாக அவ்வாறு புரிந்து கொள்ளும் வகையில் பேசிய, எழுதிய தலைவர் உலக அளவில் .வெ.ரா மட்டுமே ஆவார்.

அதிலும் வினோதமாக, இன்று தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழிவில் இருந்து மீட்கும் முயற்சியில் ஈடுபட விரும்புபவர்களுக்கு என்ன யோக்கியதை வேண்டும்? என்ற அளவுகோலையும் அவர் தான் வழங்கியுள்ளார். (‘.வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி?’
; http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.htmlபெரியார்' .வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்து ஆராய்ந்து, 'அந்த' வினோதத்தினை எவ்வாறு புரிந்து கொள்வது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html)

இந்துத்வா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் உள்ளிட்டு எனது சமூக வட்டத்தில் ஒரீஇ சமூக செயல்நுட்ப வடிப்பான் மூலமாக

நான் எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழும் போக்கில்;

.வெ.ராவின் மேற்குறிப்பிட்ட 'தகவல் பரிமாற்ற குறைப்பாட்டில்' இருந்து, நான் பாடம் கற்று பின்பற்றி வருவது கீழ்வருமாறு;

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்!’ வள்ளலாரின் 'திருவருட்பா - (.வெ.ரா பின்பற்றியது)

சொல் ஒன்று சொல்லி பொருள் ஒன்று திரிந்து
புரிதல் திரியாமை வேண்டும்'- 'புதிய திருவருட்பா'- (.வெ.ரா பின்பற்றத் தவறியது)

Note:

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

Free Excerpt:

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

No comments:

Post a Comment