Tuesday, November 29, 2016

      எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (2)   

              

              எனது சமூக அடையாளம் 'சைவ பறையர்'


“இன்று நகரங்களில் ஊழல் வழிகளில் விரும்பிய 'சாதிச் சான்றிதழை' வாங்கி வருகிறார்களா? அந்த 'சாதிச் சான்றிதழை' சரி பார்க்கும்(verification) சார்பற்ற‌ சமூக செயல் நுணுக்கமும் (Objective Social Mechanism)  சீர் குலைந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 

அவ்வாறு நகர்ப் புறத்தில், ஊழல் வழிகளில், விரும்பிய சாதி அடையாளத்தில் வலம் வருபவர்களில் யார், யார், கிராமப்புறங்களில், 'அந்த' சாதியில் மணம் முடித்து, சாதி அடையாளம் சரிபார்க்கும் சமூக செயல்நுட்பத்தை, கிராமங்களிலும் சீர் குலைக்கும் போக்கிற்கு பங்களித்து வருகிறார்கள்? அதன் மூலம் காலனி ஆட்சியில், 'நிர்வாக நலன்களுக்காக', அவர்கள் அட்டவணைப்படுத்திய, சாதி அடையாளம் தொடர்பான, 'நிர்வாக அடையாள செயல்முறை'யும் சீர் குலைந்து வருகிறதா? இன்றைய சாதி அடையாளங்கள் எல்லாம், காலனி நிர்வாக நலன்களுக்காக, எவ்வாறு, 'தான் தோன்றித்தனமாக', சாதி அடையாளப்பட்டியலுக்குட்படுத்தப்பட்டது? என்பதை அடுத்து பார்ப்போம்.

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', 'கள்ளர், மறவர், அகமுடையார்', 'பள்ளர்' ஆகிய பிரிவினரை ஒரு குழு அடையாளத்திற்குட்படுத்தும் சான்றும் இருக்கிறது.

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;

சோழ அரசில் இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்' , காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌, தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;
'கள்ளர், மறவர், அகமுடையார்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌,  'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்;
'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர்,காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌ இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்.

அதாவது, இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்புகளின் அடையாளங்கள்' எல்லாம், காலனி சூழ்ச்சியின் தொடர்ச்சியா? என்ற, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய கட்டம் வந்து விட்டது.

"சங்க காலத்தில், அனைத்து தொழிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் பறை வகை இசை கருவிகளை இசைத்து, புறநானூறு (335:7) கூறும் இலக்கணப்படி, 'பறையராக', குடிமகனாக‌ (citizen) வாழ்ந்து வந்துள்ள பின்னணியில், 'பறை' எப்போது, 'தீண்டத்தகாத' தாள இசைக்கருவியானது? 'பறையர்' எப்போது தீண்டத்தகாத சாதியினராக 'அடையாள' படுத்தப்பட்டனர்?" என்பதையும்;

"இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளை"யும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )” என்பதையும்;

1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்;

'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?

ஒழுக்கக்கேடான 'தரகு' மற்றும் 'குறுக்கு வழி' 'அதிவேக' பணக்காரர்களை 'மதித்து' நெருக்கமாகும் அசிங்கத்தில், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி, அது முடிந்துள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள சமூக சூழலில்;


'பெரியார் சமூக கிருமிகளால்' எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவிற்குப்பின், (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html );

என்னுடன் குடும்ப உறவில் தொடரும், சிங்கப்பூரில் வாழும் எனது மகனைத் தவிர்த்து;

சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில் எனது பங்களிப்பாக:

தமிழ்நாட்டில், 'பெரியார்' இயக்கத்தில் 'சுயலாப' நோக்கின்றி, எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம், உள்ளிட்ட இன்னும் பல கஷ்ட நஷ்டங்களின் 'பலனாக', 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' என்று அடையாளம் பெறலாம்;(குறிப்பு கீழே) அல்லது இப்போது எனக்கு பாதுகாவலர்களாக இருப்பவர்கள் அடையாளத்தில், நான் 'பறையர்' என்ற அடையாளம் பெறலாம்; சாகும் போது, எனக்கு ஒரு அடையாளம் தேவை என்றால், அது 'இந்து சைவ‌ பறையர்' என்று இருப்பதையே நான் விரும்புவேன்; எனது இசை ஆராய்ச்சிகள் மூலம் பெற்ற அறிவின் காரணமாகவும்.( ‘Experiencing God, the Infinite,through Resonance’; http://veepandi.blogspot.in/ இக்கட்டுரை தொடர்பான அறிவுபூர்வ விமர்சனத்தை, ஆங்கில அறிவுள்ள 'பெரியார்' கொள்கையாளர்களிடமிருந்து வரவேற்கிறேன். Email:pannpandi@yahoo.co.in) மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html )

என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_58.html )

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து'(?), வெளியில் தெரிந்தும், தெரியாமலும், திராவிட அரசியல் கொள்ளைக் குடும்ப வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரராகி', அதோடு திருப்தி அடையாமல், 'சாதி', 'இனம்', தொடர்பான இது போன்ற ஆய்வுகளை படித்து விளங்கிக் கொள்ளும், விவாதிக்கும் அறிவில்லாமல், இன்னும் 'பார்ப்பன எதிர்ப்பு', 'ஊழல் எதிர்ப்பு' என்று பொது வாழ்வு வியாபாரங்களில் ஈடுபடும் போக்கானது, சமூகத்தில் சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை, ஊழல் உள்ளிட்ட சமூக நோய்களை ஒழிக்க, எந்த அளவுக்கு தடையாக இருக்கிறது? 1967க்கு முன், 'தேசியம்' என்ற முகமூடியுடன் இந்தியாவில் ஊழல் அரங்கேறியபோதும், ஊழலற்ற மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி' என்ற 'திராவிட' முகமூடிகளுடன் அரங்கேறிய ஊழலானது, அதையும் விஞ்சி, எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்த 'பெரியார் சமூக கிருமி'களும், எவ்வாறு 'சங்கமமானார்கள்'? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மோடி ஆட்சியில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற ஊழல் ஒழிப்பு, எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ, அந்த அளவுக்கே, அந்த சமூக நோய்களிலிருந்து, தமிழ்நாடு விடுபட வாய்ப்பிருக்கிறது. சமூக சீர்திருத்த முயற்சிகளில், ஊழல் எவ்வாறு ஊடுருவி, 'திரிதலை' தூண்டி, சமூகத்தை கெடுக்க முடியும்? என்பதற்கு, இந்தியாவிலும், உலகத்திலும் தனித்துவமான சமூக பரிசோதனை களமாக தமிழ்நாடு இருக்கிறது. (தமிழ்நாடு: தனித்துவமான சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களம் ( Tamilnadu: Unique Sociological Research Experimental Laboratory)’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html

இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும்  கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்? (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

மேலே குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, எனது ஆய்வுகளை ஊக்குவித்து வரும், ஆஸ்திரேலியாவில் வாழும் திரு.மா.அருச்சுனமணி அவர்கள் அனுப்பியுள்ள, 'சாதி' தொடர்பான விளக்கம் கீழே உள்ளது.

'சாதி', 'இனம்' தொடர்பாக மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கிய மன அடிமைப் போக்கிலிருந்து நாம் விடுதலையாகி, அந்த சூழ்ச்சியிலிருந்து தமிழையும் விடுவிப்பதன் மூலமே;

அகத்திலும், புறத்திலும் நேர்மையுடன், நாம் சாதி உயர்வு, தாழ்வு, 'தீண்டாமை' ஆகியவற்றை ஒழிப்பதில் பங்களித்து; 

'சிற்றினத்தின்' ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும் என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

திரு.மா.அருச்சுனமணி அவர்கள் அனுப்பியுள்ள, 'சாதி' தொடர்பான விளக்கம்
சாதி பற்றிய சொல்லாய்வு 
========================

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (http://www. tamilvu.org/library/dicIndex. htm) சாதி என்ற சொல்லிற்குத் தரும் பொருட்கள்.  

  1. தேக்கு
  2. திப்பிலி
  3. பிரம்பு
  4. பிரப்பம்பாய்
  5. ஆடாதோடை
  6. கள் (toddy)
  7. புழுகுச் சட்டம் - perfume sac of a civet cat
[சடாய்த்தல் = செழித்தல். சடாய் --> சதாய் --> சாதி ]

சாதி என்ற தமிழ்ச் சொல்லிற்கும் பிறப்பு, இனம், குலம், தொழில் என்பவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இதனால் தெரிகிறது.

தமிழர்களால் கிரந்தத்தில் (எட்டாம் நூற்றண்டளவில்) எழுதப்பட்ட சைவ ஆகமங்களில் ஜாதி (தமிழில் சாதி) என்ற சொல் உயிர்கள் (ஆன்மாக்கள்) எடுக்கக்கூடிய எழுவகை பிறப்புக்களை (தாவரம், விலங்குகள், பறவைகள், மனிதர் முதலியனவற்றை) குறித்தனவே அன்றி, மனிதருக்குள் உள்ள பாகுபாடுகளை அல்ல.

(உ-ம்)
பிராரப்த வினை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து பயனைக் கொடுக்கும். அந்தப் பிரிவுகள் ஜாதிப்பிரதம், ஆயுட்பிரதம், போகப்பிரதம் என கூறப்படும். பிரதம் என்றால் கொடுப்பது எனப் பொருள்.

ஜாதிப்பிரதம் என்பது உயிர், உடல் எடுப்பதற்கு உரிய பிறப்பு வகையைத் தீர்மானிப்பது. விலங்காகப் பிறக்க வேண்டுமா, பறவையாகப் பிறக்க வேண்டுமா, மானுட உடல் எடுக்க வேண்டுமா என முடிவு செய்வது இது. உலகில் எந்த இடத்தில் பிறக்கவேண்டும் எனத் தீர்மானிப்பதும் இதுவே. (முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார் அவர்களின் கன்ம மலம் எனும் கட்டுரையிலிருந்து)

ஆனால், இதே  ஜாதிப்பிரதம் என்ற சொல்லிற்கு, 19, 20ஆம் நாற்றாண்டுகளில் உரை எழுதியவர்கள் அது குடிப்பிறப்பு, குலம் முதலியவற்றைத் தீர்மானிக்கும் எனக் கூசாமல் எழுதுகிறார்கள். 

இது, வீரபாண்டியன் ஐயா அவர்கள் கூறுவதுபோல் காலனி ஆதிக்கத்தின்  விளைவாக  ஏற்பட்ட மாற்றமாகவே இருக்கவேண்டும்.

அன்புடன்
மா அருச்சுனமணி
சிட்னி, ஆத்திரரேலியா

குறிப்பு: பொதுவாழ்வில் தாம் ஏற்றுக்கொண்ட 'பெரியார்' கொள்கையால் கண்டிக்கப்பட்ட, பாரம்பரிய பண்பாடுகள் தொடர்புடைய குடும்ப மதிப்பீடுகளையும், சாதி உறவுகளையும், எதிர்த்து, 1967க்கு முன் சமூகத்தில் சொந்த வாழ்வில் இழப்புகளை சந்தித்த தியாகிகளை 'முட்டாள்களாக' கருதி;
 
அவ்வாறு எதிர்க்காமல், அந்த குடும்ப மதிப்பீடுகளையும், சாதி உறவுகளையும் பேணி, 'பாதுகாப்பு தடைகளுடன்' (Security Filters) ; 


அக்கொள்கையால் விளையும் சமூக நோய்களிலிருந்து, தம்மையும், தமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு, அறிவுபூர்வ விமர்சன பார்வையின்றி பயணித்த, 'பெரியார்' கொள்கையாளர்களின் எண்ணிக்கையானது, 1967க்கு பின், 'அதிவேகமாக' வளர்ந்துள்ளதா? அதனால் உணர்ச்சிபூர்வ வழிபாட்டு போக்குகள் எல்லாம், 'பெரியார் சமூக கிருமிகளின்' அதிவேக வளர்ச்சிக்கு 'வினை ஊக்கி' (Catalyst) ஆனதா? அந்த போக்கிலிருந்து விலகி, 'அந்த முட்டாள்களின்' திசையில், நான் பயணித்துள்ளேனா? ஈ.வெ.ரா அவர்களும், அவரை முன்மாதிரியாக கொண்டு பயணித்தவர்களும், வரலாற்றில், 'சாதி'. 'இனம்' தொடர்பான காலனி சூழ்ச்சியில் சிக்கி  வாழ்ந்த முட்டாள்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவு நேர்மையுடனும் திறந்த மனதுடனும், தமது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடனும், 'தவறு' என்று வெளிப்படுபவைகளை 'ஈகோ' (Ego) சிக்கலின்றி, ஈ.வெ.ரா அவர்கள் வழியில், பகிரங்கமாக ஒப்புக் கொண்டு திருத்தி, பயணத்தை நான் தொடர்வதால், 'அவர்களின் தியாகங்கள் 'பெரியார் சமூக கிருமி' வளர்ச்சிக்கான உரங்கள் அல்ல‌', என்று நிரூபிக்கும் திசையில் பயணிக்கிறேன். எனது ஆய்வுத் திட்டங்களில் (R & D Projects), நான் பெற்று வரும் வெற்றிகளின் இரகசியமும், அதே அணுகுமுறையாகும். ‘The Alchemist’  என்ற உலக புகழ் பெற்ற நாவலின் ஆசிரியர் பவுலோ கொயெல்கோ (Paulo Coelho; https://en.wikipedia.org/wiki/Paulo_Coelho ) தெரிவித்த கீழ்வரும் வெற்றியின் சூட்சமத்தை, நான் அனுபவபூர்வமாக உணர்ந்த வழிமுறையும் அதுவேயாகும். ("when we interact with birds, trees & inanimate things, we do not need to be as alert as we need to do with the ‘insecure’ human beings, to avoid the following pitfall of the infection of comparison. "- ‘Joyful Life: Do they, the inanimate, have life?’; http://veepandi.blogspot.in/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

“நீ விரும்புவதை அடைய, அண்டத்தில் உள்ள அனைத்துமே உனது வெற்றிக்கு துணை நிற்கும்.”

"When you want something, all the universe conspires in helping you to achieve it."- Paulo Coelho

Sunday, November 27, 2016



காலனி ஆட்சியின் நலன்களுக்காக, ‘செயற்கையாக’‌  அட்டவணைப்படுத்திய; 

எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (1)




NOTE: Due to blog tech problem, change 'in ' in the links to 'com' to open the links.

எனது சாதி 'நத்தமான்' என்றும், 'நத்தமான், மலையமான், சுருதிமான்'  ஆகிய மூன்று பிரிவினரும், இன்று 'உடையார்' என்ற அடையாளத்திலும், அவர்களோடு 'மூப்பனார்' என்ற பிரிவும் சேர்ந்து, 'பார்க்கவகுலம்' என்றும், இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்பில்' இடம் பெற்றுள்ளனர்; என்பது எனது (மறைந்த) தந்தை என்னிடம் தெரிவித்தவை ஆகும்: 

எனது சாதிச் சான்றிதழில் 'பார்க்கவ குல நத்தமார்' என்று உள்ளது; 'பாரி' என்ற மன்னருக்கும், 'பார்க்கவ குலம்' என்பதற்கும் உள்ள தொடர்பு பற்றி, ஏதும் சான்று இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை.

இன்று நகரங்களில் ஊழல் வழிகளில், விரும்பிய 'சாதிச் சான்றிதழை' வாங்கி வருகிறார்களா? அந்த 'சாதிச் சான்றிதழை' சரி பார்க்கும்(verification) சார்பற்ற சமூக செயல் நுணுக்கமும் (Objective Social Mechanism)  சீர் குலைந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', 'கள்ளர், மறவர், அகமுடையார்', 'பள்ளர்' ஆகிய பிரிவினரை ஒரு குழு அடையாளத்திற்குட்படுத்தும் சான்றும் இருக்கிறது.

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;

சோழ அரசில் இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான, தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;

'கள்ளர், மறவர், அகமுடையார்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான, 'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்;

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர், காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான,  இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்.

அதாவது, இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்புகளின் அடையாளங்கள்' எல்லாம், காலனி சூழ்ச்சியின் தொடர்ச்சியா? என்ற, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய கட்டம் வந்து விட்டது. 

"சங்க காலத்தில், அனைத்து தொழிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் பறை வகை இசை கருவிகளை இசைத்து, புறநானூறு (335:7) கூறும் இலக்கணப்படி, 'பறையராக', குடிமகனாக‌ (citizen) வாழ்ந்து வந்துள்ள பின்னணியில், 'பறை' எப்போது, 'தீண்டத்தகாத' தாள இசைக்கருவியானது? 'பறையர்' எப்போது தீண்டத்தகாத சாதியினராக 'அடையாள' படுத்தப்பட்டனர்?" என்பதையும்;

"இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளை"யும்;

ஏற்கனவே பார்த்தோம்.


1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்;

'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?


ஒழுக்கக்கேடான 'தரகு' மற்றும் 'குறுக்கு வழி' 'அதிவேக' பணக்காரர்களை 'மதித்து' நெருக்கமாகும் அசிங்கத்தில், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி, அது முடிந்துள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள சமூக சூழலில்;


'பெரியார் சமூக கிருமிகளால்' எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவிற்குப்பின், 



ஒரு மனிதரின், தராதரம், பாரம்பரியம், பண்பாடு பற்றிய கவலையின்றி, அவர் ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், 'அதிவேக' பணக்காரரானதைப் பாராட்டி, 'பணமே தெய்வம்' என்ற போக்கில், பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களை, சமூக செயல்நெறி மதகுகளை((Social Functional Checks) ) சீர் குலைக்கும்,  சமூக குற்றவாளிகளாக கருதி, ஒதுக்கி வாழ்கிறேன்.
 (http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html

'அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் உயிரிழந்த உதயகுமாரோ, அச்சுறுத்தல் மற்றும் கொலை மூலம் சொத்தையும் அல்லது கூடுதலாக‌ உயிரையும் இழந்த கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், ஏ ஆர் ரகுமான், நிகழ்காலத்தில் சத்யம் தியேட்டர்ஸ் வரை பாதிக்கப்பட்டவர்கள் வரிசையில், நமது குடும்பத்தினர் இல்லையே என்ற நோக்கில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'யோக்கியர்களாக'  வேடமிட்டு, ஆண்ட, ஆளும் கட்சிகளின் தலைவர்களை ஆதரித்த 'பெரியார்' ஆதரவாளர்களே, தமிழின் தமிழ்நாட்டின் சீரழிவிற்குக் காரணமான 'முதன்மை சமூகக் குற்றவாளிகள்' என்பதே, எனது ஆய்வு முடிவாகும்.

என்னுடன் குடும்ப உறவில் தொடரும், சிங்கப்பூரில் வாழும் எனது மகனைத் தவிர்த்து; 

சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில் எனது பங்களிப்பாக:

தமிழ்நாட்டில், 'பெரியார்' இயக்கத்தில் 'சுயலாப' நோக்கின்றி, எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம், உள்ளிட்ட இன்னும் பல கஷ்ட நஷ்டங்களின் 'பலனாக', 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் (Passions)  தமிழ்நாட்டில் வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' (De-linked from the blood relations in India) என்று அடையாளம் பெறலாம்; அல்லது இப்போது எனக்கு பாதுகாவலர்களாக இருப்பவர்கள் அடையாளத்தில், நான் 'பறையர்' என்ற அடையாளம் பெறலாம்; சாகும் போது, எனக்கு ஒரு அடையாளம் தேவை என்றால், அது 'இந்து சைவ‌ பறையர்' என்று இருப்பதையே நான் விரும்புவேன்; எனது இசை ஆராய்ச்சிகள் மூலம் பெற்ற அறிவின் காரணமாகவும்.( ‘Experiencing God, the Infinite, through Resonance’; http://veepandi.blogspot.com/ இக்கட்டுரை தொடர்பான அறிவுபூர்வ விமர்சனத்தை, ஆங்கில அறிவுள்ள 'பெரியார்' கொள்கையாளர்களிடமிருந்து வரவேற்கிறேன். Email:pannpandi@yahoo.co.in) மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’
http://tamilsdirection.blogspot.com/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html )

இன்று எனது பாதுகாவலர்களாக(guardians), நண்பர்களாக இருப்பவரில் எவரும் 'நத்தமான்' அடையாளத்தினராக இல்லை. "ஏன் இல்லை?" என்ற கேள்விக்கு,  எனது குடும்பம், உறவினர்கள் உள்ளிட்ட வட்டத்தில், எனது குடும்பத்தை சீர் குலைத்த, ஒரு 'பெரியார்' சமூக கிருமியின் பிரவேசத்தைத் தடுக்கும் வலிமையை, அது தொடர்பான சமூக செயல்நெறி மதகுகள் எவ்வாறு இழந்தன? என்ற எனது ஆய்வானது, விடையை வெளிப்படுத்தலாம்.

“ஒரு சமூகத்தில் 'செல்வாக்கான நபர்களில்' பெரும்பான்மையோரிடம் உள்ள 'இயல்பே', அந்த சமூகத்தின் இயல்பாக வெளிப்படும். சமூகத்தில் இயல்பில் 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும், சிறுமமாக (Minimum) இருக்கும் வரையில், அச்சமூகத்தில் ஊழலும், குற்றங்களும் சிறுமமாக இருக்க, ஓரளவு நிலையான சமநிலையில் (Stable Equilibrium), அச்சமூகமானது பயணிக்கும். 'சிற்றின' மனிதர்கள் எல்லாம், எண்ணிக்கையிலும் வலிமையிலும் அதிகரிக்க, சமூகத்தில் உள்ள 'நல்லின' மற்றும் 'சிற்றின' மனிதர்களின் இயல்புகளுக்கிடையே உள்ள சமநிலை சீர்குலைவும் (disrupted equilibrium), கொந்தளிப்பும்(turbulence), அச்சமூக இயல்பிலும் வெளிப்படும்.

சமூகத்தில்,  சமூகக் குற்றங்கள் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் (Threshold)  இருப்பின், அச்சமூகம் சமநிலையில் இருக்கும். வரை எல்லையை தாண்டிய பின், கொந்தளிப்பு (turbulence) உருவாகும். வரை எல்லைக்கு மேல் (Threshold)   தாண்டல் நெடுக்கம் ( range above the threshold)  அதிகரிக்க, குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை,கொலை, கொள்ளை, வன்முறை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் மூலமாக,  கொந்தளிப்பு அதிகரிக்கும். கொந்தளிப்புக் கட்டத்திற்கான (Turbulent phase)  வரை எல்லையை (Threshold)  அடைந்ததும், அடுத்த கட்ட சமநிலைக்கான மாற்றம் (Transition) துவங்கும் திருப்பு முனையை அடையும். இதற்கு மேலும் மோசமாக வாய்ப்பில்லை என்ற நிலையில், அந்த திருப்புமுனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருக்கிறது. “

( http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html) 

தமிழ்நாட்டில் அந்த கொந்தளிப்பு கட்ட உச்ச வரை எல்லையின்(Threshold) சிக்னலாக(signal);

"மனித உறுப்புகளில் 'அசிங்கம்' என்ற அணுகுமுறை  இல்லாத பழந்தமிழ் இலக்கியங்களை, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி அணுகி;

மேற்கத்திய குறிப்பாயத்திற்கு (Western Paradigm) அடிமையாகி, தமிழையும், தமிழ் இலக்கியங்களையும், தமிழர்க்கு கேடேன்று தவறாக கருதி, 'திராவிட' இயக்கங்கள்  பயணித்தன் விளைவுகளா, சிம்புவின் 'பீப்' பாடலும், அதற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளும்? என்பது ஆய்விற்குரியதாகும்." 
(http://tamilsdirection.blogspot.com/2016/08/blog-post.html )

மேலே குறிப்பிட்ட கொந்தளிப்பான காலக் கட்டத்தில், சமூக சீரழிவு போக்கில் பயணிப்பவர்களை அடையாளம் கண்டு, தமக்கு நெருக்கமான சமூக வட்டத்திலிருந்து அகற்றாவிடில், அந்த சீரழிவு போக்கிற்கு, எதிர் நீச்சல் போடுபவர்கள் எல்லாம், கடுமையான விலை கொடுக்க வேண்டியதிலிருந்து தப்ப முடியாது. எந்தப் பக்கம் 'பலம்' வளர்கிறது? என்று ஊன்றி கவனித்து, தாவும் 'சமூக கிருமிகளை' ஒதுக்கவில்லையென்றால், நமக்கு தெரியாமலேயே, 'ஒட்டுண்ணிகளாக', நமது பலத்தை 'உறிஞ்சி', நம்மை பலகீனமாக்கும் விளைவிலிருந்தும், நாம் தப்ப முடியாது. திருச்சி 'பெரியார் மையத்தில்' நேர்மையான சுயசம்பாத்தியம் மூலம் வாழ்ந்தவரிடம், எனது குடும்பத்தை சீர் குலைத்த, ஒழுக்ககேடான வழிகளில் பணம் ஈட்டி, 'அதிவேக பணக்காரரான' பெரியார் சமூக கிருமியும், கூட்டாளி சமூக கிருமியும், 'உதவி' என்று கேட்டு, பணம் வாங்கி ஏமாற்றியதானது, அந்த வகையைச் சாரும்.

தமிழ்நாடு 'கொந்தளிப்பான கட்டத்தில்' இருப்பதன் காரணமாகவே, எண்ணற்ற குடும்பங்களில் 'வெடிக்கும்' பிரச்சினைகள் காரணமாக, மோசடி, வன்முறை, கொலை, தற்கொலைகள்  'அபரீதமாக' அதிகரித்து வருகின்றன.

கல்லூரி ஆசிரியர் சங்கத்திலும், 'பெரியார்' இயக்கத்திலும் நான் பங்களித்த காலக்கட்டங்களில், பொதுநோக்கில், என்னை சுற்றியிருந்தோர் 'பிரமிக்கும்' அளவுக்கு, வன்முறையையும் தேவைக்கேற்ப, பிரயோகித்த நான், எனது சொந்த பிரச்சினை என்று வரும்போது, இழப்புகளை பற்றிய கவலையின்றி விட்டுக் கொடுத்தே வந்துள்ளேன்.


'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்த'(?) 'பெரியார் சமூக கிருமி'களையும், 'பணமே தெய்வம்' என்று வாழும் உறவினர்களையும், மேலே குறிப்பிட்ட 'கொந்தளிப்பான' காலக்கட்டத்தில், எனது குடும்பப் பாதுகாப்புக்கான வரை எல்லையைப் புரிந்து, அதற்கு அப்பால், அவர்களை வைக்காதது எனது தவறே ஆகும். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு;192) மனித உறவுகள் உள்ளிட்ட சமூகம் மற்றும் இயற்கையுடன் 'சுயலாப'நோக்கின்றி, பிறர் நம்மை 'ஏமாளி'யாக்கினாலும் கவலையின்றி, உண்மை, நேர்மை ஆகிய பண்புகளை 'எந்த கட்டத்திலும்' இழக்காமல் பயணிக்கும்போது, நாம் சந்திக்கும் துயரங்களும், அவமானங்களும், நம்மை அகத்திலும் புறத்திலும் 'நம்பமுடியாத' சிகரங்களை நோக்கி, பயணிக்கச் செய்யும், இயற்கையின் (கடவுளின், விதியின், 'டாவோவின்'-‘Tao’) சமூக செயல்நுட்பம் என்பதற்கு, எனது வாழ்க்கைப்பயணமே சாட்சியாகும்.
(http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html) 

அந்த பயணத்தில், 'நெருக்கடியான' கட்டங்களில், என்னை 'வலுவாக்கி'  கொள்ள, நான் நினைவு கூறும் குறள்:
'பற்றுக பற்றற்றான் பற்றினை; அப்பற்றைப்
 பற்றுக பற்று விடற்கு' (திருக்குறள் 350)


இந்த பதிவிற்காக, எனது பாதுகாவலர்களின், நண்பர்களின், அடையாளங்களை நினைவு கூர்ந்தால்;

'பறையர்', 'கோனார்', 'மருத்துவர்'(முன்பு சிகை அலங்காரம் தொழில் செய்த சாதி), 'பிராமணர்' (அதற்குள் எந்த பிரிவு என்பது தெரியாது), ரெட்டியார், 'தேவர்', செட்டியார், ஆசாரி ஆகியோரே எனது சமூக வட்டத்தில்; எந்த நேரத்திலும் என்னை தொடர்பு கொள்ள, சந்திக்க, நான் அனுமதித்துள்ள எனது பாதுகாவலர்கள், நண்பர்கள் ஆவர். வசதியிருந்தும் பொழுது போக்காக மாடு மேய்ப்பவர், பிரதமர் மோடிக்கு நெருக்கமான, புகழுடன் வாழ்ந்தாலும், தனக்கு வேண்டியவர்களின் தவறுகளையும், பொது அரங்கில் துணிச்சலுடன், நானறிந்த வரையில் கண்டித்த ஒரே எழுத்தாளர், மாநில அரசின் தலைமை செயலாளர்(Chief Secretary) மட்டத்தில் பணி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி முதல், அமெரிக்காவில் உயர்ந்த வேலை கிடைத்து, விமான நிலையம் வரை சென்று, பின் சொந்த மண்ணின் நினைவால், வெளிநாட்டு வாய்ப்புகளை ஒதுக்கி, 'முன்மாதிரியாக'(Role Model)  பிறருக்கு உதவிகள் புரிந்து தமிழ்நாட்டில் வாழும் நிபுணர்(Expert),  வரை, பல்வேறு சமூக மட்டங்களில் உள்ள அவர்கள் எல்லோரும், மனித உறவுகளில் 'சுயலாப கள்வர்' நோய் இல்லாத, இயல்பான அன்பும், உண்மையும் நேர்மையும் மிக்கவர்கள் ஆவர். அவர்கள் சுயலாப நோக்கின்றி, எனது ஆய்வுகளை (R & D Projects) ஊக்குவித்து, உதவியும் வருபவர்கள்  ஆவர். வெளிப்படுத்தி கொள்ளாமலேயே, ஒருவரையொருவர் கூர்ந்து கவனித்து, 'முன்மாதிரியாக'(Role Model) பிறரிடம் இருப்பதை அடையாளம் கண்டு, அகவயப்படுத்தி, ஒவ்வொருவரும் அகத்திலும் புறத்திலும் வளர்ந்து வரும் சமூக வட்டத்தில் நான் வாழ்கிறேன்.

காலனி ஆட்சியில், காலனி ஆட்சியாளர்களின் நலன்களுக்காக, அவர்கள் அட்டவணைப்படுத்தியதன், நிகழ்கால  தொடர்ச்சியே, 'பார்க்கவ குல நத்தமான்' என்ற, எனது பிற்படுத்தப்பட்ட சாதி அடையாளமாகும். அதை தொடருவதில் எனக்கு உடன்பாடில்லை. 'தமிழர்', 'சாதி எதிர்ப்பாளர்', என்று புறத்தில் வெளிப்படுத்திக் கொண்டு, அகத்தில் சாதி உணர்வுடன் குடும்பம், சுற்றம் என வாழும் போக்கில், எப்போதுமே இருந்திராத எனக்கு, சங்க கால தமிழரிடையே இல்லாத, காலனி சூழ்ச்சியில் இன்று தொடர்ந்து வரும், சாதி அடையாளத்தை தொடர்வதில் விருப்பமும் இல்லை.  எனக்கு சரியெனப்படுவதை, எவர் மீதும் எப்போதும், நான் திணித்ததில்லை. சங்க இலக்கியங்களில், இசையில் புலமையுள்ளவர்கள் 'பறையர்' என்ற அடையாளத்தில், குடிமகன்' (Citizen) என்பதற்கான இலக்கணத்தில் இடம் பெற்றனர்.(புறநானூறு 335:7-8; http://tamilsdirection.blogspot.in/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html) எனது இசை ஆராய்ச்சி மூலம், நானறிந்த சைவத்தைப் பின்பற்றி வாழ்வதால், 'சைவ பறையர்' என்பதே எனது வாழ்வு அடிப்படையிலான (ipso facto)  அடையாளம் ஆகும்.

“தமிழர்களிடையே 'பண்பின்' அடிப்படையில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரித்து, 'திராவிடர் கழகம்' தோன்றாமல் இருந்திருந்தால், 'திருச்சி பெரியார் மையம்' தோன்றி, 'இழிவுக்கு இலக்கணமான' மனிதர்கள் மூலம், எனது சமூக வட்டம் சீர்குலைந்திருக்குமா? அந்த கேள்வியை ஒதுக்கி,  'அந்த'  பாதிப்பினை எனது தனிப்பட்ட பிரச்சினையாக கருதும் 'பெரியார்' கொள்கையாளர்கள் இருந்தால், அவர்கள் எல்லாம் 'சுயலாப'  நோக்கில், தமது 'நேர்மை வழிகாட்டியை' முடக்கி, புறத்தில் 'யோக்கியர்களாக' பயணிக்கும், மேலே குறிப்பிட்ட 'முதன்மை சமூகக் குற்றவாளிகள்'  ஆக மாட்டார்களா?  தமிழ்நாட்டில் குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளில், 'பணத்துக்காக' சீர்குலைவுகள் அதிகரிக்கும் வேகத்தில், (திருச்சி 'அன்னை ஆசிரமம்' போன்ற நேர்மையான அமைப்புகள் மூலம் நானறிந்த வரையில்) முதியோர் இல்லங்களும், கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பங்களில் வன்முறை, கொலை, தற்கொலைகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவதும் உண்மையா? சுயலாபங்களுக்காக குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளை காவு கொடுக்கும் சமூக நோயில், இந்தியாவிலேயே, தமிழ்நாடு முன்னணியில் இருந்தால், அந்த நோயின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க வளர்ச்சிக்கும், தொடர்பு உண்டா? என்ற ஆய்விலும், நானும் ஈடுபட தூண்டியது.”
(http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

“வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில்,தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன. 
(http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post_19.html   )

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது. அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது. 
(http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

'சாதி' தொடர்பான காலனிய சூழ்ச்சி பற்றிய புரிதலின்றியே, ஈ.வெ.ரா அவர்கள் 'சாதி ஒழிப்பு' போராட்டத்தை முன்னெடுத்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( குறிப்பு கீழே) 1944இல் தமிழில் 'இனம்' என்ற சொல் திரிந்து, உருவான‌ 'திராவிடர் கழகம்' மூலம் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்களை பின் தள்ளி, உணர்ச்சிபூர்வ போக்குகள் அரங்கேறிய போக்கில், அரசியல் நீக்கத்துடன் (Depoliticize) அடையாளச் சிதைவும் விளைந்த சமூக செயல்நுட்பத்தில்;

தமிழ்நாட்டில் தமிழர்களிடையே சாதி வெறியும், அதனையும் மூலதனமாக்கிய பொதுவாழ்வு வியாபாரமும் வளர்ந்து
உச்சத்தை அடைந்து, 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து அந்நியமாகி, மாணவர்களும் இளைஞர்களும் பயணிக்கத் தொடங்கியுள்ள போக்கில், கடந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மூலம் மரணவாயிலை நெருங்கி விட்டனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.('தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது'

http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html

அறிவுபூர்வ விமர்சன போக்கைப் புறக்கணித்து, 'சுயலாப' நோக்கில் பயணித்து வரும் 'பெரியார்' கட்சிகளும், அந்த போக்கிலேயே 'மூழ்கி', அதே நிலையை அடைந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இனி மேலும் செலவு செய்வதில், அரசியல்ரீதியாக 'பலன்'(?) கிட்டாது என்று, அந்த போக்கில் பயணித்த தலைவர்கள் முடிவு செய்து, அதன் தொடர்ச்சியாக, ஆதாயத் தொண்டர்கள் பலத்தில் ஆடிய ஆட்டங்கள் எல்லாம், அடங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை. அதன் தொடர்ச்சியாக, அரசியல் நீக்கமானது (Depoliticize) முடிவுக்கு வந்து, 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எல்லாம் ஒதுங்க, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான,  மாணவர்களும், இளைஞர்களும் முன்னணி வகிக்கும் புதிய அரசியலானது துவங்கவும் வாய்ப்பிருக்கிறது. உலகில் பல நாடுகளில் நடந்து வருவது போல, தமிழ்நாட்டிலும் அரசியல் கொள்ளையர்களின் வலைப்பின்னலானது சட்டத்தின் பிடியில் சிக்கி, அவர்களின் சொத்துக்கள் பறிமுதலாகி, அவர்கள் தண்டனைகளுக்குள்ளாவதும் சாத்தியமானால், வியப்பில்லை.

தமிழில் இப்ப இருக்கிற சாதி என்பது, வெள்ளைக்காரன் திணித்தது; 

தமிழில் 'சாதி'ங்கிறது பற‌வைகளுக்கும், (பெரும்பாணாற்றுப்படை 229),  நீர்வாழ் மிருகங்களுக்கும் ( தொல்காப்பியம் பொருள் 9; 44) தான் இருந்தது.

இப்ப 'உயர்ந்த சாதி'ங்கிற நினைப்பில் வாழ்பவர்களும்;

'தாழ்ந்த சாதி'ங்கிற நினைப்பில் வாழ்பவர்களும்;

அந்த (காலனி சூழ்ச்சியில் முளை விட்டு, இன்று 'பெரியார் சமூக கிருமி'களின் கூட்டுடன், வெளிநாட்டு நிதி உதவி N.G.Oக்களின் சூழ்ச்சியில் தொடரும்) 'சதி'யில சிக்கின, உயர்வு - தாழ்வு மோதலில் சிக்கி, எதிரெதிராக 'காட்சி' தரும் பொது வாழ்வு வியாபாரிகளை வளர்த்து, இழப்புகளுக்கு உள்ளாகும்,  'ஏமாளிகள்' என்பதும், என் கருத்தாகும். ('“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை”;  
http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html )

குறிப்பு:

" 'பெரியார்' ஈ.வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும்." என்பதையும்;

"அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html )" என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம். 
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) 

ஈ.வெ.ரா அவர்களின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், மறுபரிசிலனை செய்ய வேண்டிய கட்டமும் வந்து விட்டது. 
(http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

Monday, November 21, 2016



அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்;

 

நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (1)


Note: Due to BLOGGER Tech problems, replace '.in' in the links to '.com', if the links failed to open in the new window.


நான் ஒரு கல்லூரியில் முதல்வராக பணியாற்றிய காலத்தில், வகுப்பறைகள், மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பயன்படுத்தும் கழிவறைகள் ஒழுங்காக சுத்தம் செய்யப்படுகிறதா? என்று தினமும் கண்காணித்து வந்தேன்; அந்த இரண்டிலும் மோசமாக இருக்கும் நிறுவனங்களும், மோசமாகவே இருக்கும் என்ற எனது புரிதலில். 

ஒரு நாள் மதியம் 2 மணி அளவில் சுற்றி வந்த போது, மாணவர்கள் இல்லாத ஒரு வகுப்பறையில் குப்பைகள் இருப்பதைப் பார்த்தேன். உடனே எனது உதவியாளரிடம், பெருக்குபவர்(Sweeper) மதிய உணவு சாப்பிட்டு, கல்லூரிக்கு வந்தவுடன், என்னை பார்க்கச் சொன்னேன். அந்த பணியாள் வந்தவுடன், அவருடன் சென்று வகுப்பறையைப் பார்த்தால், சுத்தமாக இருந்தது. எனது உதவியாளர் முன்கூட்டியே அந்த பணியாளுக்கு தகவல் கொடுத்து விட்டதால், அந்த பெண் தான் ஏற்கனவே வகுப்பறையை சுத்தம் செய்து விட்டுத்தான் மதிய உணவு சாப்பிட சென்றதாக பொய் சொல்லி, தப்பித்தார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டு, சுமார் 40 ஆசிரியர்கள் பணியாற்றிய கல்லூரியிலேயே, பணியில் வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நடைமுறைப்படுத்த, நான் மிகவும் சிரமப்பட்டேன்.

இன்று தமிழ்நாட்டில் பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், அரசியல் கட்சிகளிலும் கூட‌,  கீழ் மட்டங்களில் எவ்வளவு தவறுகள் நிகழ்ந்தாலும், அவை தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்கு உடனே தெரிய வாய்ப்பில்லை. அத்தவறுகளின் தொகு விளைவாக(Resultant), மறைக்க முடியாத பாதிப்பானது, அவர் பார்வைக்கு வந்தாலும், எந்த விசாரணை மூலமும், உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு, சுயநல அடிப்படையில், 'மபியா'(Mafia; https://en.wikipedia.org/wiki/Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், அந்த நிறுவனத்தின், கட்சியின், அடி மட்டத்திலிருந்து, மேல் மட்டம் வரை செயல்பாட்டில் உள்ளன. எனவே விசாரணையில் மாட்டி, தண்டனைக்குள்ளாகுபவர் பெரும்பாலும் உண்மை குற்றவாளியாக இருக்க மாட்டார். அந்த அளவுக்கு நிறுவன கட்டமைத்தல்(system building)  பலகீனமாக உள்ளது.

இந்திய விடுதலைக்கு முன், காலனிய ஆட்சியின் நலன்களுக்காக இருந்த நிறுவன கட்டமைப்பானது, அதை நிர்வகித்த காலனிய அதிகாரிகளின் பங்களிப்பால், காலனிய ஆட்சி சூழலில், வலிமையாக இருந்தது; இன்றும் கூட, வெள்ளைகாரனே ஆட்சியில் இருந்திருந்தால், இவ்வளவு மோசமாக ஊழலும், சட்ட ஒழுங்கு சீர் குலைவும் வந்திருக்காது என்றும் சிலர் இன்றும் பேசி வரும் அளவுக்கு.

இந்திய விடுதலைக்குப்பின் தேசக்கட்டுமானம்(Nation Building) எந்த அளவுக்கு சீர்குலைவு திசையில் பயணித்தது? என்பதை ஏற்கனவே பார்த்தோம். ( ‘Is BJP aware of the derailing of the Indian nation building process?’; http://tamilsdirection.blogspot.in/2016/07/normal-0-false-false-false-en-in-x-none_18.html  )

இந்தியாவில் நிறுவன கட்டமைத்தல்(system building) என்பது பலகீனமாகி வருவதற்கும், அதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அதாவது 'விதேசி' நலன்களுக்காக செயல்பட்ட‌ காலனிய நிறுவன கட்டமைத்தலானது, இந்திய விடுதலைக்குப் பின், 'சுதேசி' நலன்களை முன்னிறுத்தி, தேச கட்டுமானம் மூலம் சுதேசி நிறுவன கட்டமைத்தல் நோக்கி பயணிக்காமல், 'இரண்டும் கெட்டானாக' பயணித்து, இன்று பெரிய தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில், கட்டமைத்தல் சீர்குலைவுக்குள்ளாகி, பொது ஒழுக்கமும், ஊழல் மூலம் சட்ட ஒழுங்கும், சீர் குலைந்து வருகிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நான் கல்லூரி முதல்வராக இருந்த போது, எனக்கு காரோட்டியாக இருந்தவர், தனது பணியில் சிறப்பாக இருந்தார்.

தான் 'டி.வி.எஸ்' நிறுவனத்தில் பணியாற்றியதை பெருமையுடன் அடிக்கடி  சொல்வார். அந்த நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்புகள் எளிதில் கிடைத்தன. அதாவது 1967க்கு முன், தமிழ்நாட்டில், அது போன்ற் நிறுவனங்களில் நிறுவன கட்டமைத்தல்(system building) வலிமையாக இருந்ததால், பணியாளர்களிடம் நிறுவனத்தின் மீது உண்மையான பற்று இருந்ததா? இன்றும் அது போன்ற நிறுவனங்களுக்கும், 1967க்குப்பின் தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நிறுவனங்களுக்கும் இடையில், நிறுவன கட்டமைத்தல் நோக்கில், வேறுபாடுகள் இருக்கின்றனவா? என்பதும் ஆய்விற்குறியதாகும்.

அவ்வாறு வேறுபாடுகள் இருந்தால், அதற்கு திராவிட மனநோயாளிகளின் பங்களிப்பு எவ்வளவு? என்பதும் ஆய்விற்குரியதாகும்.சட்டத்தின் செயல்பாடு(Rule of Law) என்பது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு இருக்கும் வரை தான், வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) நிறுவன கட்டமைத்தலில் வலிவுடன் இருக்கும்.  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள்  தமக்குள்ள அதிகாரத்தை, தமது ஊழல் உள்ளிட்ட பலகீனங்களுக்கு சேவகம் செய்ய முயற்சிக்கும்போது, அவர்களை அகற்றும் அளவுக்கு அந்த வலிமை இருக்க வேண்டும். 

1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த 'சிக்னலை' உணர்ந்து, அவற்றை பொதுவிவாதத்திற்கு, அந்த காலக்கட்டத்தில் அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளவர்களும் ஈடுபட்டு, மீட்பு நடவடிக்கையில் இறங்கியிருந்தால், திராவிட மனநோயாளிகள் பங்களிப்பின் மூலமாக, இந்தளவுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் எல்லாம், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கு உள்ளாகியிருக்குமா? அதற்கு மாறாக, அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளதாக காட்டிக் கொண்டவர்களும், சொந்த வாழ்வில் இழப்புகளுக்கு அஞ்சியோ, அல்லது 'புதிய ஊழல் சூழலில்' 'வளமாக' விரும்பியோ, 'சமூகத்தின் முதுகெலும்பானது', 'ஊழல் அதிகாரத்திற்கு' வளையும் அளவுக்கு பங்களித்து, பயணித்து வந்துள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 


மாறாக, 1967க்குப்பின் 'வீரியமாக' வளர்ந்த 'சுயலாப கள்வர்' நோயின் போக்கில்;

அறிவு ஜீவிகளும், சமூக அக்கறையுள்ளவர்களாக 'காட்சி' தந்தவர்களும், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தமிழ் உணர்வு, ஆன்மீகம், மார்க்ஸ், லெனின், மாவோ, காந்தி, சே குவாரா, காம்ஸ்கி, பின் நவீனத்துவம்' உள்ளிட்டு உலக அளவில் முக்கியத்துவம் பெற்றவைகளையும், ‘ஜென்புத்தீசம், மனித உரிமை, பெண்ணுரிமை’ என்று 'புதிதாக' 'அறிவு பேஸனாக' வளர்பவைகளையும், தமிழில் எழுதி, பேசி; 

ஆனால் அரசியல் கொள்ளைக்காரர்களை எந்த வகையிலும் 'உரசாமல்' பாதுகாப்பாக, முடியுமானால், வெளியில் தெரியாமல் அவர்களுக்கு நேசமாகி, 'பலன்கள்' அனுபவித்து கொண்டே, அந்த அரசியல் கொள்ளையர்களை தமக்கு நெருக்கமான வட்டத்தில் கேலி செய்தும், கண்டித்தும், அந்த போக்கில் தம்மிடம் ஏமாந்த குப்பன் சுப்பு வீட்டுப் பிள்ளைகளை 'முற்போக்கு', 'புரட்சி' உசுப்பேத்தி 'காவு' கொடுத்து, ஆனால் தமது பிள்ளைகள் ஒழுங்காக படித்தாலும், படிக்கா விட்டாலும், இந்தியாவிலோ, அமெரிக்காவிலோ நன்கு செட்டில் செய்து, வாழ்ந்தவர்களும், வாழ்பவர்களும், நிறுவன கட்டமைத்தல் சீர்குலைவிற்கும், சமூக சீரழிவிற்கும் காரணமான முக்கிய சமூக குற்றவாளிகளா? அதாவது சுயலாப நோக்கற்ற இயல்பான அன்பையும், மதிப்பையும், 'துறந்து', எவரையும் லாபநட்ட கணக்கில் அணுகும் 'சமூக விபச்சாரிகளாக' வாழும், 'சமூக குற்றவாளிகளா' அவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதாவது தமிழ்நாட்டில் சமூக அளவில், ‘சீரழிவு சமூக ரத்த ஓட்டத்தில்’, சமூகத்தில் குடும்பம், கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கட்டமைத்தலில், சீரழிந்த சமூக இழைகளாகவும் (Social Fibres), பிணைப்புகளாகவும் (Social Bonds), மேலே குறிப்பிட்ட நபர்கள் பங்களித்து வருவதானது, இது வரை பொது அரங்கில் அறிவுநேர்மையுடனும், திறந்த மனதுடனும் விவாதிக்கப்படவில்லை என்பதும், அத்தகைய விவாதம் இன்றி மீட்சி இல்லை என்பதும் என் கருத்தாகும். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் 
(Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )  


அதன் தொடர்விளைவாக;

அரசு, தனியார் நிறுவனங்கள் மட்டுமின்றி, குடும்பம், இலக்கியம், ஆன்மீகம் உள்ளிட்ட சமூகத்தில் உள்ள நிறுவன கட்டமைத்தல் எல்லாம், அதே நோயில் சிக்கி, சீர் குலைந்து வருகின்றனவா? வயதான பெற்றோரை புதுச்சேரி பேருந்து நிலையத்தில் 'அனாதையாக' விட்டு விட்டு, தமது பொறுப்பில் இருந்து தப்பிக்கும் பிள்ளைகளும், விவாகரத்து, கொலை, தற்கொலை, துரோகம் உள்ளிட்ட நோய்களில் குடும்பங்கள் சீர் குலைந்து வருவதற்கும், குடியிருப்பு சங்கங்கள் உள்ளிட்டு, நிதி உள்ள அமைப்புகளில், பொறுப்பில் உள்ளவர்கள் கையாடல் செய்வதற்கும், அவ்வாறு சட்ட விரோத, ஒழுக்கக்கேடான வழிகளில் பணம் சம்பாதித்தவர்களை 'மதித்து' நட்பு கொள்வதற்கும், ஊழல்வழி ஊக்குவிப்பில் தமிழ்வழிக்கல்வியை (எனவே தமிழையும்) சீரழித்து, ஆங்கிலவழிக்கல்வி மூலம்,  கல்வியானது வியாபாரமாக வளர்வதும், உள்ளிட்ட அனைத்து சீர்கேடுகளுக்கும்;


1967இல்  'பிள்ளையார் சுழி' போடப்பட்டு விட்டதை உணர்ந்து, அதைத் தடுக்கும் வலிமையானது தமக்கு இல்லை என்பதையும் உணர்ந்து, அந்த இரண்டு தலைவர்களும் மனம் வெறுத்து, மறைந்தார்களா? என்பதை இனியாவது ஆய்வுக்குட்படுத்தாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் மீட்சியை நோக்கி பயணிக்க முடியுமா?

அதாவது 'எந்திரன்' திரைப்படத்தில் நல்ல விஞ்ஞானியின் பிடியிலிருந்து, தீய விஞ்ஞானியிடம் சிக்கிய 'எந்திரனின் மூளை செயலாக்கியை'(Brain Processor of the Human Robot) மாற்றியவுடன், சமூகத்திற்கு கேடாக 'எந்திரன்' பயணித்தது போல, தமிழ்நாட்டில் இயல்பில் பலகீனமான தமிழர்களில் பெரும்பாலோர் எல்லாம், தமது மூளையின் செயல்பாட்டை, 1967க்கு பின் அரங்கேறிய 'சுயலாப' கள்வர் நோயில் சிக்க வைத்து, 'சமூக விபச்சாரிகளாக' பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குறியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_17.html )

மத்திய அரசு தமிழ்நாடு தொடர்பாக எதற்கு முயற்சித்தாலும், தமிழ்நாட்டின் நலன்களுக்காக அதை எதிர்க்கும் துணிச்சலானது,1967க்கு முந்தைய காங்கிரஸ் அரசிடம் இருந்தது என்பதை, கன்னியாகுமரியில் விவேகானந்தர் சிலை நினைவகம் முயற்சியில் ஈடுபட்ட ஏக்னாத் ரானடேயின் நூல் தெளிவுபடுத்தியுள்ளது. பின் தி.மு.க ஆட்சியில் அத்திட்டமானது, தமிழ்நாடு அரசின் ஒத்துழைப்போடு, நிறைவேறியது.( 'The Story of the Vivekananda Rock Memorial’; vkpt@vkendra.org)  1967க்கு முன், மத்திய அரசு விரும்பியிருந்தாலும், கச்சத்தீவு தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து, இலங்கை வசம் போயிருக்க முடியாது என்பதையும், அதன் மூலம் விளங்கிக் கொள்ளவும் முடிகிறது.

கட்சிக்காக விரும்பி தியாகங்கள் புரிந்தவர்கள் பலத்தில் 'வளர்ந்த' திராவிடக் கட்சிகள் எல்லாம், ஆதாயத் தொண்டர்கள் பலத்தில்;

நேரு குடும்பமானது இந்திய அளவில் அறிமுகப்படுத்திய வாரிசு அரசியலில் சிக்கி, பயணிக்க தொடங்கிய பின், கட்சியின் கட்டமைத்தல்(Party Building) பலகீனமாகி, அதன் பலன்களை கட்சித் தலைமைகள் அனுபவித்து வருவதாலேயே;

கட்சியின் எல்லா மட்டங்களிலும், சுயநல அடிப்படையில், 'மபியா'(Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், செயல்பாட்டில் உள்ளனவா? எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும், கூட்டுக்கொள்ளையில் ஈடுபடும் அளவுக்கு, அந்த வலைப்பின்னல் அதிக நுட்பத்துடன் (More Complex) வளர்ந்துள்ளதா? எனவே விசாரணையில் மாட்டி, தண்டனைக்குள்ளாகுபவர் பெரும்பாலும் உண்மை குற்றவாளியாக இருப்பதற்கு வாய்ப்புகள் குறைவா? என்ற போக்கில் திராவிட கட்சிகள் பயணிக்கின்றனவா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

மேற்குறிப்பிட்ட பொதுவாழ்வு திருடர்களாக, நாம் இல்லையென்றாலும், நமது சமூக வட்டத்தில் அத்திருடர்களை நாம் அனுமதித்தாலும், அல்லது 'தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சி' போன்றவையும், அந்த திருடர்களின் துருப்புச் சீட்டுகள் ஆவதை அனுமதித்தாலும், நாமும் அந்த பொது வாழ்வு திருட்டுக்கு துணை போனவர்கள் ஆவோம்.  தமது அளவில், தமது செயல்பாடுகளில் வெளிப்படையும்(Transparency), பொறுப்பேற்பும்(Accountability) இருப்பதை தமது மனசாட்சிக்குட்பட்டு, அமுலாக்கி, தவறுகளை ‘ஈகோ’(Ego) சிக்கலின்றி ஒப்புக்கொண்டு, திருத்திக் கொண்டு, பயணிப்பவர்களால் மட்டுமே, சமூகத்தில் உளள சீர்கேடுகளை களையும் முயற்சியில் வெற்றி பெற முடியும். (குறிப்பு கீழே) அதற்கு ஒரே நேரத்தில் நமக்குள் நாமே, முதல் மனிதராகவும், நமது செயல்பாடுகளை கண்காணித்து மூன்றாம் மனிதராகவும் வாழ முடியும், என்பதை சிறப்பாக விளக்கியுள்ள நூல் ‘The Theory of Moral Sentiments’ ( by Adam Smith)  ஆகும். அந்த தகுதியுடன் ஆய்வில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு, கீழ்வருபவற்றை முன்வைக்கிறேன். 

பொதுவாக ஒரு மனிதர் ஒரு கட்சியில் பங்கேற்கும் போதும், அல்லது ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் போதும், தலைமையில் இருப்பவர்களின் நம்பிக்கையை எந்த அளவுக்கு பெறுகிறர்களோ, அந்த அளவுக்கு அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கும். அந்த முக்கியத்துவமானது அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் பார்வைக்கு வந்து விட்டால், அந்த நபர் அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில், ஒரு முக்கியத்துவ சிறையில் சிக்கி விடும் ஆபத்தும் இருக்கிறது. அவ்வாறு சிக்கியபின், அந்த கட்சியில், அந்த நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள் எல்லாம், அந்த நபருடன் உரையாடல் உள்ளிட்ட தொடர்பு கொள்ள வாய்ப்பு நேரிடும் போது,  அவருக்கு பிடித்த திசையிலேயே உரையாடல் நிகழ்த்துவார்கள்; காரியங்கள் செய்வார்கள். எனவே அந்த கட்சியின், நிறுவனத்தின் உண்மை நிலையை, அந்த நபர் எவ்வளவு முயன்றாலும், கண்டுபிடிக்க முடியாத சிக்கலானது அவர்களைச் சூழ்ந்து விடும். 

முக்கியத்துவ போதையில் சிக்கியவர்கள் எல்லாம் அந்த சிறையில் சிக்கும் வாய்ப்புகள் அதிகமாகும். அந்த முக்கியத்துவ போதையில் நான் எவ்வாறு சிக்காமல் தப்பித்தேன்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( ‘தமிழ்நாட்டு பொதுவுடமை முகாம்கள் உணர்ச்சி பூர்வ இரைச்சலில் கண்டுகொள்ளாமல் விட்ட 'சிக்னல்கள்',  ஆந்திராவில் அரிய பொக்கிசமாகக் கருதப்பட்டதை உணர்ந்தேன். கூடுதலாக 'முக்கியத்துவம்' என்பது , ஏமாந்தால், நம்மை போதையில் ஆழ்த்திவிடும் என்பதையும் உணர்ந்தேன். எனவே தப்பித்தவறியும் அதில் சிக்கிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை உணர்வுடன் இன்று வரை வாழ்ந்து வருகிறேன்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_12.html )

‘'பெரியார் இயக்கத்தில்' இருந்த போதும், அந்த காலக்கட்டத்தில், நான் உள்ளிட்டு 'தனித் தமிழ்நாடு' கனவுடன் பேராசிரியர்களும், எண்ணற்ற இளைஞர்களும், இருந்த திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே, என் மீது அவர் வெளிப்படுத்திய அன்பும், மதிப்பும் தெரியும் அளவுக்கு(http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) 'தனது சாதி' என்பதால் தான், ‘பேரா.செ.அ.வீரபாண்டியனுக்கு ஆசிரியர் (கி.வீரமணி) இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்' என்ற, முட்டாள்த்தனமான கிசுகிசுக்கள் 'மேல்மட்டத்தில் மட்டுமே உலா' வந்த அளவுக்கு ; சாதாரண தொண்டர்கள் மத்தியில், அவர்களில் ஒருவராகவே இருக்க முடிந்தது.

பின் கல்லூரி முதல்வராயிருந்தபோது, அலுவலக நேரத்தில் மிகுந்த கண்டிப்புடன், இருந்து கொண்டே;

வெளியில் நான் மதிக்கும் பண்புடையவர்களை மட்டுமே (அவர்களின் செல்வ/செல்வாக்கு நிலை மேலாக, கீழாக இருப்பது பற்றிய கவலையின்றி), எனது சமூக வட்டமாகக் கொண்டு, சாதாரண மனிதர்கள் போலே வாழ்ந்து வந்தேன்; அதன் மூலம் பலரின் கவனத்தை ஈர்த்து, 'சுயலாப' கள்வர் நோய்க்கு எதிரான போக்கிற்கு வலிவு சேர்க்கும், சமூக பொறியிய‌ல் (Social Enginnering) பரிசோதனையில், நான் வாழ்வதையும் உணர்ந்து.

அரசு கல்லூரிகளில் பிரச்சினைகள் அடிப்படையில், கல்லூரி முதல்வர்கள் உள்ளிட்டு, நான் எதிர்த்தவர்களும் கூட என்னை மதித்த அளவுக்கு , தனிப்பட்ட முறையில் எனக்கு எந்த குறையும், வருத்தமும் இன்றி, உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு வாழும் எனது வாழ்க்கைப் பயணத்தையே ஒட்டி, மாறுதல்களுக்கள்ளாகி (transfer of jobs);

இப்போது திருச்சி NIT வரை, ஆய்வுத் திட்ட ஆலோசகராக‌(Project Consultant to R & D Project) நான் பணியாற்றி வருகிறேன்: எனது 'நிறுவன ஆய்விற்கான' (Organization research) அரிய உள்ளீடுகளை, மேலே குறிப்பிட்ட பல்வேறு பணிகளின்/பொறுப்புகளின் ஊடே அனுபவங்களாக பெற்று; கீழ்வரும் ஆய்வுக்ளுக்கான கேள்விகளை எழுப்பி.

தமிழ்நாட்டில் நிறுவனங்களிலும், கட்சிகளிலும் உண்மையாகவும், நேர்மையாகவும் பணியாற்றுபவர்களை முட்டாள்களாக்கி, தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களின் 'பலகீனங்களுக்கு' தீனி போட்டு, வலிமையாகி வருபவர்களின் பங்களிப்பால், அந்த நிறுவனங்களும், கட்சிகளும் ஏற்கனவே இருந்த நிறுவன கட்டமைத்தலை, சீர் குலைவு மூலம் இழந்து வரும் போக்கில் சிக்கியுள்ளனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்நோயில் சிக்கிய க‌ல்வி நிறுவனங்களின் சூழலானது, மாணவர்களை எதன் மீதும் எவர் மீதும் மதிப்பற்ற, சுயநல மிருகங்களாக மாற்றி வருகிறது. கட்சிகளிலோ ஆதாயத் தொண்டர்கள் வளர்ந்து, சாதாரண மக்கள் எல்லாம் கட்சிகள் மீது நம்பிக்கை இழந்து, அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) உள்ளாகி வருகிறார்கள்.

1967க்கு முன் 'தேசிய' போக்கில் பயணித்தவர்களில் பலர் சிவாஜி கணேசன் ரசிகர்களாகவும், 'திராவிட' போக்கில் பயணித்தவர்களில் பெரும்பாலோர் எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் இருந்தார்கள்; காமராஜர், அண்ணா போன்ற கட்சித்த்லைவர்களின் செல்வாக்கிற்கு கட்டுப்பட்ட போக்கிலேயே; ஆதாயத் தொண்டர்களை விட, கட்சிக்காக சொந்த பணத்தையும், உழைப்பையும் கொடுத்து, தியாகங்களும் புரிந்த தொண்டர்களே 'தேசிய', 'திராவிட'  கட்சிகளில் அதிகமாக இருந்த போக்கில்.

இன்று கட்சியின் கட்டுமானங்கள் சிதைவுக்குள்ளாகி, கொள்கைகள் எல்லாம் செல்லாக்காசாகி, ஆதாய தொண்டர்கள் மற்றும் தலைவர்களிடம் சிக்கி, தமிழ்நாட்டு அரசியலானது சினிமா செல்வாக்கில் அடிமைப்பட்டு பயணிக்கிறதா? கட்சி கட்டுமான சிதைவு போக்கிற்கும், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, இந்தியாவிலேயே தனித்துவமாக தமிழ்நாட்டில், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக்குழப்பங்களின் ஊடே அதிக சிதைவிற்குள்ளான‌ போக்கிற்கும் தொடர்பு இருக்கிறதா? ( ‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

மேற்குறிப்பிட்ட‌வையெல்லாம் பெரும்பாலும் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடையில் மட்டுமே செல்வாக்குடன் உள்ள நிலையில்;

அவற்றிலிருந்து அந்நியமாகி, இன்றைய மாணவர்களும், இளைஞர்களும் எந்த அடையாள திசையில் பயணிக்கிறார்கள்? கட்சிகளில் உள்ளதைப் போன்ற, 'மபியா'(Mafia) சமூக செயல்நுட்பத்துடன் ஒப்பிடும் அளவுக்கு, வெளியில் தெரியாத, பாதுகாப்பு வளையங்கள், மாணவர்கள் மத்தியிலும் தொத்து நோயாக வளர்ந்து, திருட்டு, கொலை, கொள்ளை போன்ற குற்றங்களும் அவர்கள் மத்தியிலும் வளர்ந்து வருகின்றனவா?

அந்த நோய்களில் சிக்காத மாணவர்கள் மத்தியில், 'இந்தியர்' என்ற தேசக்கட்டுமானமானது, அவர்களிடம் முளை விட்டு வளர்ந்து வருகிறதா? தமிழும், தமிழ் உணர்வும் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெற்று வருகிறதா?( ‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7); தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

அடையாளச் சிதைவின் மூலமாக வளர்ந்த அரசியல் நீக்கம் முடிவுக்கு வந்து, தமிழ்நாடு எந்த திசையில் பயணிக்கும்? என்ற கேள்விக்கான விடை தெரிய, மேலே குறிப்பிட்ட கேள்விகளை ஆராய்வது என்பது அவசியமாகி விட்டது. 

குறிப்பு: 

எந்த திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பத்தின் வலைப்பின்னலில் இடம் பெற்று, ஒழுக்கக்கேடான, சட்ட விரோத வழிகளில், 'அதிவேகப் பணக்காரராகி', எனது மகளின் 'வாழ்வியல் புத்திசாலி முன்மாதிரியாகி(Role Model)(?) எனது குடும்பத்தை சீர்குலைத்த;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமியாக' வளர்ந்த(?) நபரை, அந்த வலைப்பின்னலை அணுகி, எனது குடும்ப வட்டத்திலிருந்து, அந்த நபரை நான் எளிதில் துவக்கத்திலேயே அகற்றியிருக்க முடியும். அதன்பின் அந்த வலைப்பின்னலை விமர்சிக்கும், கண்டிக்கும், தகுதி எனக்கு இருக்காது; இந்த வலைதளமும்(Blog), பதிவுகளும் வெளிவந்திருக்காது. அந்த 'இழிவான பணபலத்தில்', அந்த 'பெரியார் சமூக கிருமி', தமது எடுபிடிகளுடன், 'பார்ப்பன எதிர்ப்பு' மற்றும் 'ஊழல் ஒழிப்பு'(?) பொதுவாழ்வு வியாபாரங்களில் ஈடுபட்டதை நான் கண்டுபிடித்து, அவை எனது பதிவுகளுக்கு உள்ளீடாக(inputs) வந்திருக்காது.

ஏதோ 'வாழ்வியல் புத்திசாலித்துடன்'(?) தாம் பிழைக்க இருந்த வாய்ப்பினை நான் கெடுத்ததாக, 'பணமே தெய்வம்' என வாழும் எனது உறவினர் ஊக்குவித்தலில், பயணிக்கும், தமிழ்வழிக்கல்வியில் படிக்க வைத்ததால் என் மீது கோபத்தில் இருக்கும், எனது மகள், என் மீது 'இன்னும் அதிக கோபம்' கொள்ள வழியுண்டாகும். எனவே 'பட்டு திருந்தட்டும்' என்று, மூன்றாம் மனிதரைப் போல, ஒதுங்கி, சாட்சியாக பார்த்து, எனது வழியில் நான் வாழ்கிறேன்; மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பானது எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறது, என்பதையும் கண்காணித்து. (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்ட,  நமது வட்டத்தில் நாம் அனுமதிக்கும் நபர்கள் எல்லாம்;

அவரவர் இயல்பின்படி அவரவர் வாழ்வதால், யாரை எங்கே வைப்பது? என்ற 'வாழ்வியல் அறிவு' இன்றி வாழ்வதால், நாம் அனுபவிக்கும் இழப்புகளுக்கு, எவர் மீதும் கோபப்படுவத்தில் அர்த்தமில்லை; நம்மை திருத்திக் கொண்டு, மீண்டும் அதே தவறில் சிக்காமல் வாழ்வதே புத்திசாலித்தனம் என்பதும், நான் கற்று செயல்படுத்திவரும் பாடமாகும்.



"இனம் இனத்தோடு சேரும் என்ற இயற்கை விதியின்படி, சமூக ஒப்பீடு நோயில் சிக்காமல், நமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நாம் வாழும்போது, நமது சமூக வட்டமானது, அந்நோயாளிகளிடமிருந்து விலகி, நம்மைப் போன்றே வாழும் மனிதர்களை உள்ளடக்கிய சமூக வட்டமாக மாறுவதும், இயற்கை விதி போலவே நடைபெறுகிறது என்பதும், எனது அனுபவமாகும்."( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) சமூக மூச்சுத்திணறலிலிருந்து(Social Suffocation) விடுபட்டு, உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு ஒன்றி; 

கட்டிடத்தில் உறைந்துள்ள இசையைப் பிரித்தெடுக்கும்(De freezing the music from the architecture), கட்டிடம் கட்டுவது போலவே, இசை அமைத்தலுக்கான இசைக் கட்டிடம் கட்டும்(music composing as the music building) புதிய இசை நுணுக்கம் கண்டுபிடிக்கும், பாடலுக்கு கணினியே இசை அமைக்கும் (Text to Music Conversion), இசையறிவற்றவர்கள்(music illiterates) 'லேப்டாப்'(Laptop) மூலம் இசை கற்று, இசை அமைப்பாளர்களாகும்(music composers), போன்ற இன்னும் பல, கூடுதலாக ஈ.வெ.ரா மற்றும் அவர் வழி தியாகங்களை சீரழித்த சமூக செயல்நுட்பத்தையும், மீட்சிக்கான திறவுகோலையும் கண்டுபிடிக்கும்; 

நம்பமுடியாத, ஆனால் சாத்தியமாக்கிய, ஆய்வுகளோடு நான் பயணிக்கிறேன்.