Tuesday, November 8, 2016


'ஆனந்த விகடன்'  ப.திருமாவேலனும்; ஈ.வெ.ராவை, 'பெரியார்' பிம்ப சிறையில் நீட்டிக்க செய்கிறாரா?(2)

 

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்னோட்ட படை ( 'sappers and miners') ?

 

Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.

“ஈ.வெ.ராவின் 'குடிஅரசு' இதழில் தொடர்ந்து விளம்பரங்கள் செய்து வந்த பெருமையானது, ‘ஆனந்த விகடன்’ நிறுவனர் எஸ்.எஸ்.வாசனைச் சாரும். அதே போல, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் காவல் துறையை கிண்டல் செய்து, கார்டூன் வெளியிட்ட காரணத்திற்காக, மன்னிப்பு கேட்காமல் சிறை சென்ற பெருமையும், பின் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து, வெற்றி பெற்று, கிடைத்த 'செக்'கை 'பிரேம்' மாட்டி வைத்த பெருமையும்,எஸ்.எஸ்.வாசனின் மகன் எஸ். பாலசுப்பிரமணியத்தைச் சாரும். இவர்கள் போன்ற மனிதர்கள் அரிதாகி வரும் காலம் இது; ஈ.வெ.ரா மறைவிற்குப்பின், 'பெரியார்' பிம்பம் மூலமாக,  பொது வாழ்வு வியாபாரிகளான, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்துள்ள‌ சூழலில்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none_5.html)

“இன்று நிலைமை எப்படி உள்ளது? சென்னையில் சில வருடங்களுக்கு முன் ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த ' கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள். அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன்,  விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்று வந்த போக்கு, திராவிடர் கழகம் உருவானபின் மாறி,  உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெறத் துவங்கியதானது,  'ந‌ன்கு வளர்ந்து'(?), இன்று மேலேக் குறிப்பிட்ட‌  'இரட்டை வேட முற்போக்குகள்' செல்வாக்குடன் அறிவுப் புலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் விளைவை உண்டாக்கியதா? என்பதும் ஆய்விற்குரியது.”
(‘'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

திருச்சி 'பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து'(?), அரசியல் கொள்ளை வலைப்பின்னலில் இடம் பெற்று, ஒழுக்கக்கேடான குறுக்கு வழிகளில் 'அதிவேக பணக்காரர்' ஆனவரிடம், எனது உறவினர் ஒருவர். 'எப்படி பணக்காரர் ஆனீர்கள்?' என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர் 'நான் கள்ளர் சாதி என்பதால், தஞ்சை மாவட்டத்தில்  கிரிமினல் வழக்குகளில் சிக்கிய கள்ளர்களின் வழக்குகள் நிறைய என்னைத் தேடி வந்ததால், நான்  பணக்காரர் ஆனேன்' என்று சொல்லியிருக்கிறார். அவர் உண்மையில் அகமுடையார் சாதியைச் சேர்ந்தவர்.

அவர் எந்தெந்த ஒழுக்கக் கேடான, சட்டவிரோத வழிகளில், பணம் சம்பாதித்தார்? என்பதை வெளியே சொன்னால், 'கெளரவமாக' சமூகத்தில் வலம் வர முடியுமா? அதிலும் 'பெரியார்' முகமூடியில் பயணித்தவர், 'கெளரவமான' பொய் சொல்ல, சாதி அடையாளத்தை பயன்படுத்தியுள்ளதும், முக்கியமான சமூக 'சிக்னல்'  (signal)ஆகும்.

இன்றும் அவர் 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தை நிறுத்தவில்லை. ஈ.வெ.ரா அவர்கள், 'பெரியார்' பிம்ப சிறை’யிலிருந்து, விடுதலை ஆகாமல், இந்த வியாபாரமானது ஒழியாது என்பதும் என் கருத்தாகும். 

சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சத்தை எதிர்த்தும், தாய்மொழிவழிக்கல்வியை ஆதரித்தும் ஆர்.எஸ்.எஸ் மேற்கொண்டு வரும் பிரச்சாரமானது, செயல்பூர்வமாக வெளிப்படும் வேகத்திற்கு ஏற்ப,( http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/ & https://www.quora.com/What-is-Rashtriya-Swayamsevak-Sanghs-RSS-take-on-casteism-How-is-RSS-trying-to-root-out-the-problem-of-casteism & ‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil?; http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) 'பெரியார் பிம்பமும்' கரையும்; 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரமும் படுத்து விடும்.
 
தமிழ்நாட்டில் ஊழல் அரங்கேறிய வேகத்தில்;

ஆங்கில வழிக் கல்வி வியாபாரம் மூலமாக, தமிழ்வழிக் கல்வியும் (எனவே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளது;
 

தமிழ்வழிக் கல்வி மாணவர்களை ஓரங்கட்டி, சமூக நீதியும் 'திரிந்து' வருகிறது;

தமிழ்நாட்டில்  ஏரிகள், கால்வாய்கள், கிரானைட், தாது மணல், உள்ளிட்ட இன்னும் பல கனி வளங்கள் கொள்ளை போகின்றன; 

'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரம் வளர்ந்த சூழலில், ஊழல் துணிச்சலில், சட்டத்தின் மீது பயமின்றி, கொலை, கொள்ளை, மோசடி குற்றங்கள் 'அதி வேகமாக' அதிகரித்து வருகின்றன;

அரசியல் கொள்ளையர்களின் தவறான சமூக தூண்டலில்(Social Induction) சிக்கி, தமிழர்களில் தரகு நோய் அதிகரித்து, அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் 'பதர்கள்' அதிகரித்து வருகின்றன (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/1967.html ).

தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, மேற்கத்திய 'ரேஸ்'(Race) என்ற பொருளில் திரிந்து, 'திராவிடர்' அரங்கேறிய போக்கில், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரமானது, முளை விட்டு, 'அதி வேகமாக', ஈ.வெ.ரா அவர்களையே ஓரங்கட்டி, வளர்ந்தது.
ஆயிரக்கணக்கான வருடங்களாக கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களில் பெரும்பான்மையினரைக் கல்வி கற்க விடாமல் செய்தவர்கள் 'பார்ப்பனர்கள்', என்ற தவறான நிலைப்பாட்டில், 1944இல், ஈ.வெ.ரா அவர்கள் 'திராவிடர் கழகம்' தோற்றுவித்து, அறிவுபூர்வ போக்கிலிருந்து, தடம் புரண்டு, 'உணர்ச்சிபூர்வ' போக்கில் சிக்கியது தான், அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) 

திருச்சி பெரியார் மையத்தில், நான் பங்களிப்பு வழங்கிய காலக்கட்டத்தில், எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம் ஆகியவற்றை செலவழித்து, (உண்மையில் 'சிற்றினம்') தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' போதையாளர்களை,   'பெரியார் கொள்கையாளர்' என்று நானே ஏமாந்து, உழைத்து, அதன் மூலம் ‘வலுவானவர்கள்'(?) (http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html );

மேற்குறிப்பிட்ட 'தடம் புரண்டது' தொடர்பான பதிவை, சுயமாக படித்து விளங்கிக் கொள்ள முடியுமா?

திருச்சி 'பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து'(?), மேற்குறிப்பிட்ட  'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'தொடந்து' ஈடுபட்டு வரும் நபரோ, அவருக்கு துணையாக பயணிப்பவர்களோ, அதை இதுவரை விவாதத்திற்கு உட்படுத்தினார்களா? இல்லையென்றால், திருச்சி பெரியார் மையம் ஆனது, சமூகத்திற்கு மிகவும் கேடான சமூக கிருமிகளை வளர்த்து விட்டிருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமிழ் மொழியின் 'இனம்' திரிந்து, 'திராவிடர்' அடிப்படையில், 1944இல் 'பார்ப்பன எதிர்ப்பு' என்ற 'புதிய போக்கானது' அரங்கேறி; 

சமூக உளவியலில்(Social Psychology) ஏற்பட்ட பாதிப்பானது;

சமூகத்தில் நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திற‌மைகள் இல்லாத, 'சிற்றின' மனிதர்களில், 'அதி புத்திசாலிகள்'(?) எவ்வாறு, அந்த அளவுக்கு புத்திசாலித்தனம்(?) இல்லாதவர்களை, தமது 'எடுபிடுகளாக்கி', அந்த ‘புதிய போக்கையே’ கேடயமாக்கி, சுயலாப நோக்கற்ற மற்றவர்களின் அறிவு உழைப்பையும் ( தேவைப்பட்டால் 'எடுபிடி' உதவியாளராக நடித்தும் கூட), உடல் உழைப்பையும், எண்ணற்ற தியாகங்களையும், 'இலாவகமாக' 'சுரண்டி', வளர்ந்து, மேற்குறிப்பிட்ட சீரழிவில்;

தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சிக்க வைத்தார்கள்? என்ற எனது சமூகவியல் ஆய்வுக்கு;

திருச்சி பெரியார் மையம் மூலம் வளர்ந்து, 'உலா' வரும் சமூக கிருமிகள் எல்லாம், திறவுகோல் ஆனார்கள். காலனி ஆட்சியில் சிக்கி, விடுதலையான நாடுகள் எல்லாம் 'காலனிய மனநோயில்' சிக்கி சீரழந்து வருவது பற்றிய ஆய்வுகளின் பின்னணியில், தமிழ்நாட்டில் மட்டுமே;

தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட ஆணிவேர்களை சிதைத்து, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளையே சுயலாபத்திற்கு காவு கொடுக்கும், 'திராவிட மனநோயாளிகள்' எவ்வாறு உருவானார்கள்? என்ற ஆய்வுக்கு, அந்த திறவுகோல் பெரிதும் உதவி வருகிறது.( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html ) 

இன்று 'பெரியார் முகமூடி'களுடன் யார்? யார்? எந்தெந்த அரசியல் கொள்ளைக் குடும்பத்துடன் 'நெருக்கமாகி', எந்தெந்த வழிகளில் 'பணம்' ஈட்டி, எந்தெந்த 'எடுபிடிகளுடன்', 'வளர்ந்து' வருகிறார்கள்? என்ற ஆராய்ச்சியை, சுயலாப நோக்கற்ற சமூக பற்றாளர்கள் தொடங்கலாம். தமக்கு கிடைக்கும் தகவல்களை, விருப்பமிருந்தால், எனக்கு அனுப்பி வைக்கலாம். அவை மேற்குறிப்பிட்ட சமூகவியல் ஆய்வுக்கு உள்ளீடாக(input) பயன்படும்.

சட்டத்தின் மூலம் அவர்கள் தண்டனை பெறுவது என்பது, மத்திய புலனாய்வு அமைப்புகளும், நீதி மன்றங்களும், எந்த அளவுக்கு, பொது நல நோக்கில், நேர்மையாக செயல்படுகின்றன? என்பதை பொறுத்ததாகும்.

சாதாரண மக்கள் மீது நம்பிக்கை வைத்து, சுயலாப நோக்கற்ற சமூகப் பற்றுடன் மக்கள் மன்றத்தில் பயணிப்பவர்கள் முயலும் போது, மேற்குறிப்பிட்ட சட்டபூர்வ விசாரணையும், தண்டனையும், வேறு வழியின்றி, பின் தொடர வேண்டிய நெருக்கடியை, அம்முயற்சி உண்டாக்கும் என்பதற்கு, நிகழ்காலத்திலேயே, உலக அளவில், பல சான்றுகள் அரங்கேறி வருகின்றன. 

ரூ 1000, ரூ 500 நோட்டுகளை ஒழித்து, மாற்றாக உயர் தொழில் நுட்ப‌ நோட்டுகளை, மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளதானது, தமிழ்நாட்டின் அரசியல் கொள்ளைக் குடும்பங்களின், அவர்களை நத்தி பிழைத்து வரும் 'பெரியார் முகமூடி' சமூக கிருமிகளின், ஆட்டம் அடங்குவதற்கான, சாவு மணியாக இருந்தால், வியப்பில்லை. 1996 ஆட்சி மாற்றத்தின் போது, தமிழ்நாட்டில், பணம் நிரம்பிய சாக்கு மூடைக்களை ஆற்றில் வீசிய செய்திகள் ஊடகங்களில் வெளிவந்தன. நம்பிக்கைக்கு பாத்திரமான, காவல்துறை சந்தேகிக்க இடமில்லாத ( அல்லது புதிதாக ஆட்சிக்கு வந்த தி.மு.க புள்ளிகளின் பாதுகாப்பு கவசம் இருந்த) நபர்களிடம் அம்மூட்டைகளை ஒப்படைத்து, பின் நெருக்கமான அரசியல் கொள்ளை வலைப்பின்னல்கள் பற்றி, ஊடகங்களில் வெளிவந்ததாக தெரியவில்லை. இந்த முறை, அதற்கும் வாய்ப்பில்லாத வகையில்,ரூ 1000, 500 நோட்டுகள் செல்லாக்காசாகி விட்டன. (‘ sacks full of burnt notes were found in Bareilly in Uttar Pradesh; http://www.ndtv.com/india-news/sacks-full-of-burnt-500-and-1-000-rupee-notes-in-uttar-pradesh-1623440) ஆனாலும் வெளிநாட்டிலும், உள்நாட்டிலும் பதுக்கி வைத்துள்ள சொத்துக்களை 'பறிமுதல்' செய்யாமல், பொதுவாழ்வு வியாபாரிகளின் செல்வாக்கை ஒழிக்க முடியாது.

தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வெற்றி பெற வேண்டுமென்றால், அந்தந்த மாவட்டத்தில் உள்ள 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரிகள் யார்? யார்? என்று அடையாளம் கண்டு, அவர்கள் இடம் பெற்றுள்ள அரசியல் கொள்ளை வலைப்பின்னலையும்  (டிஜிட்டல்-Digital-யுகத்தில், அரசுக்கு மனமிருந்தால், எளிதில் சாத்தியமான‌) கண்காணித்து, பின் பாரபட்சமற்ற சட்டபூர்வ விசாரணை மூலம், அவர்களையும், அவர்களின் 'பார்ப்பன எதிர்ப்பு எடுபிடிகளையும்' தண்டனைக்குட்படுத்த வேண்டும். தமிழ்நாட்டின் அரசியல் கொள்ளையர்களின் அடித்தளமானது, அதன் மூலம் நிர்மூலமாகும். தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீள வழி கிடைக்கும்.

மோடி ஆட்சியில் அது சாத்தியமாவதற்கு உள்ள 'திராவிட தடைகள்' பற்றியும் ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

எனவே அதற்காக நாம் காத்திருக்க வேண்டியதில்லை. சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, நாம் ஒவ்வொருவரும் 'தனிமனித இராணுவமாக', குடும்பம், நட்பு, பணி உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் இருக்கும் சமூக கிருமிகளை எதிர்த்து, போராடுவதன் மூலம், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்னோட்ட படையானது ( 'sappers and miners')  ருவாக, வழி வகுப்போம். 

வ.உ.சி உள்ளிட்டு 'தேசிய' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும், நீடாமங்கலம் அ.ஆ உள்ளிட்டு 'திராவிடர்' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும்;

நமது வாழ்வில் செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் குறைந்த பட்ச மரியாதையே அதுவாகும். 

பொது வாழ்வு வியாபாரிகள் ஆதிக்க காலக்கட்டத்தில் வாழ்ந்து வரும் நாம், கடந்த காலத்தில், தத்தம் அறிவு, அனுபவ அடிப்படைகளில், தமக்கு சரியென்று பட்ட கொள்கைக்காக, தியாக வாழ்வு வாழ்ந்தவர்களை அடையாளம் கண்டு மதிக்க வேண்டும்.

No comments:

Post a Comment