Thursday, September 24, 2020

தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் (2)


'சமூக காங்கிரின் நோயில்' தமிழ்நாட்டை சிக்க வைக்கும் 'சமூக வினையூக்கியாக’?

ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு ?

 

1925 முதல் வெளி வந்த குடிஅரசு இதழ்களைப் படித்தவர்களுக்கு, அண்ணா மீது கோபம் வரவில்லை என்றால் தான் ஆச்சரியம். அந்தக் காலக்கட்டத்தில் அவரிடம் அந்த அளவுக்கு நம்ப முடியாத குறைகள் வெளிப்பட்டிருந்தன.‌

1967 முதல் சாகும் வரை பிரமிக்கும் வகையில் அண்ணா வாழ்ந்து மறைந்ததை, நான் 'பெரியார்' இயக்கத்தை விட்டு விலகிய பின் தான் அறிந்தேன். அந்த அளவுக்கு, வெறுப்பு அரசியலில் 'குருட்டுப் பகுத்தறிவாளராக',  நான் பயணித்திருந்ததும் தெளிவானது.

ஈ.வெ.ரா மறைந்த பின், எவ்வாறு நான் 'பெரியார்' கொள்கையாளராக மாறினேன்? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

1970களின் பிற்பகுதியில் தஞ்சையில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில், ஈ.வெ.ரா அவர்களைப் பற்றி அதிகம் தெரியாமல், தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், (பிற்காலத்தில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு நெருக்கமான) தஞ்சை இரத்தினகிரியைச் சந்தித்தேன். அவர் தந்த ஆனைமுத்துவின் 3 தொகுதிகளையும் ஆழ்ந்து படித்தேன். ஈ.வெ.ராவுக்கு நெருக்கமாக வாழ்ந்தவர்களுடன் உரையாடும் வாய்ப்புகளும் கிட்டின. 1925 முதல் வெளிவந்த குடிஅரசு இதழ்களையும், கோவை அய்யாமுத்து போன்ற ஈ.வெ.ராவுடன் பயணித்து பின் பிரிந்தவர்கள் எழுதிய நூல்களையும் படித்தேன்.

அந்த போக்கில் அண்ணாதுரை மீதும், தி.மு.க மீதும் கோபமும், வெறுப்பும் என்னுள் வளர்ந்தது. அந்த காலக்கட்டத்தில் நான் பழகிய 'பெரியார்' இயக்க அறிவுஜீவிகள் பலரும் அதே மனநிலையில் இருந்தார்கள்‌.

உதாரணமாக நான் சென்னை பெரியார் திடலில் நாட்குறிப்பு பணிக்காக தங்கியிருந்த போது, தி.மு.க தலைவர் கருணாநிதி இன்னும் சில நேரத்தில் அங்கு வரப் போகிறார் என்று அறிந்தவுடன்;

"ஆசிரியர் (கி.வீரமணி)  தப்பித்தவறி நம்மை அழைத்து, அவரிடம் அறிமுகப்படுத்தி விடுவாரோ?' என்று கருதி, அந்த 'சங்கடத்தில்' இருந்து விடுபட, நான் பெரியார் திடல் வளாகத்தை விட்டு வெளியேறி, அவர் பெரியார் திடலை விட்டு போன பின் தான், உள்ளே நுழைந்தேன்.

ஈ.வெ.ராவின் 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் சாராம்சத்தை அகவயப்படுத்தி, அண்ணாவையே இழிவான நபராக கருதி பயணித்த 'பெரியார் கொள்கையாளர்களில்' ஒருவராக நான் இருந்தேன். அப்படி பயணித்தவர்களில் பலர், தி.மு.க ஆட்சியில் 'தமக்கான பலன்களுக்காக' முதல்வர் கருணாநிதிக்கு நெருக்கமாகி, 'முரசொலி'யில் 'துதிபாடி', 'அறிவாலயத்தில்' செல்வாக்குடன் வலம் வந்ததையும் நான் அறிவேன்.

'உலகத்தோடு ஒட்ட ஒழுகி' வாழ்ந்த 'அந்த வாழ்வியல் புத்திசாலிகளை'(?), நான் குறை சொல்லவில்லை; இன்றும் அவர்கள் எல்லாம் 'இந்துத்வா எதிர்ப்பு அலங்கார பொம்மைகளாக' பவனி வந்தாலும். (https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

அவர்களில் பலர், எம்.ஜி.ஆர் மறைந்து கருணாநிதி முதல்வரான பின், அறிவாலயத்துக்கு நெருக்கமானார்கள். பின்னர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சங்கமனான கட்சிகளின் தலைவர்களாலும் பெரிதும் மதிக்கப்பட்டார்கள்.

ஆனால் நான் (என்னைப் போன்ற இன்னும் சிலரும் இருக்கக்கூடும்) 'கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களுடன் நெருங்கிப் பயணிப்பது தன்மானக்கேடான வாழ்க்கையாகி விடும்' என்ற புரிதலுடன், தன்மானத்துடன் வாழ்வதற்கான விலைகளைத் தயக்கமின்றி கொடுத்து வாழ்கிறோம்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா சங்கமம் மூலமாக, தன்மானம் இழந்த தமிழர்கள் தமிழ்நாட்டில் எவ்வாறு வளர்ந்தார்கள் ? (https://tamilsdirection.blogspot.com/2020/09/1995.html )

ஒரு நாட்டில் ஊழல் என்பதானது நிர்வாகப் பிரச்சினை அல்ல.

ஊழல் மூலமாக கண்ணுக்கு தெரியும் அறிகுறிகளையும் தாண்டி,

ஒரு அரசின் சட்டபூர்வ நியாயத்துடனும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்புடனும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையுடனும் (the engagement of civil society) தொடர்புகள் கொண்டதாக அரசியல் விஞ்ஞானிகள் அணுகுகின்றனர்.

தமிழ் வலிமையாக வாழ வேண்டுமானால், தமிழர்கள் வலிமையாக வாழ வேண்டும். தமிழர்களின் வலிமையானது அவர்களின் அகத்தின் வலிமையைப் பொறுத்ததாகும்.

தமிழ்நாடு ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியில் இருந்தால் தான், தமிழர்கள் அகத்தின் வலிமையில் புறத்திலும் வலிமையாக வளர முடியும்.

தமது அக வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும் இருப்பதை, விளம்பரமின்றி தமது புற வாழ்வில் வெளிப்படுத்துப‌வர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும், நன்கு படித்த‌ இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்து வருவதை, பல‌ அனுபவங்கள் எனக்கு உணர்த்தி வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2.html )

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும்.

மேற்குறிப்பிட்டதன் அடிப்படையிலேயே, தாய் நாட்டிற்கும் தாய்மொழி நாட்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் இயக்கத்தன்மையில்(Dynamic), அந்தந்த காலக்கட்டத்தைப் பொறுத்து, நட்பாகவும் அல்லது பகையாகவும் இருக்கும்.

அந்த புரிதலின்றி, நிரந்தர பகையாகக் ‌கருதி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது.

இதே போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் சவலைப்பிள்ளையாகி, ராஜபட்சே பாணி குடும்ப அரசியலில் நிரந்தரமாக சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html )

தமிழ்நாட்டில் 1969க்கு முன்னும் பின்னும் என்று ஒரு கட்டமாகவும், 1991க்கு முன்னும் பின்னும் என்று இரண்டாவது கட்டமாகவும், பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கைப்பற்றியுள்ள சொத்து மற்றும் தொழில் வியாபாரங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் எல்லாம் அரசு வசம் உள்ள புள்ளி விபரங்களில் வெளிப்பட்ட வாய்ப்பில்லை. 

அந்த அளவுக்கு பினாமி மற்றும் அந்நிய செலாவணி மோசடி மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டுகளிலும் சொத்துகள் வாங்கும் சமூக செயல்நுட்பம் அதிகரித்து விட்டது.‌ அது மட்டுமல்ல, இந்தியாவையே 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது, என்பது மோடி ஆட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. (‘அரசியல் கொள்ளையர்களுக்கு எதிரான மத்திய அரசின் சோதனைகள்; தமிழ்நாட்டு மக்களிடையே, மோடி அரசுக்கு ஒரு நம்பிக்கை நெருக்கடி?’; https://tamilsdirection.blogspot.com/2017/11/panamapapers-2015.html )   

தமிழக மக்களின் நாடித்துடிப்புகளிடமிருந்து அந்நியமாகி, திராவிட ஊழல் தலைவர்களுக்கு நெருக்கமாகிப் பயணித்த, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், தமிழக மக்களின் அவநம்பிக்கைக்கு பிரதமர் மோடி உள்ளாகியுள்ளார். அதன் விளைவாக, அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியலில் பயணித்து வரும் தமிழ்நாடானது 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html)

பிரபாகரன் மற்றும் அவரின் விடுதலைப்புலி ஆதரவாளர்களின் மூலமாக, எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு',  

இலங்கையில் எவ்வாறு அரங்கேறி, இலங்கையை 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்க வைத்து, ராஜபட்சே குடும்ப ஆட்சி அபரீதமான வெற்றியுடன் அரங்கேற வழி வகுத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

முள்ளிவாய்க்கால் அழிவிற்குப் பின், விடுதலைப் புலிகளை எச்சரித்த 'திருச்சி பெரியார் மையம்' வெளியீடுகளை, 'பெரியார்' கட்சியின் தலைவர் ஒருவர் ஆழ்ந்து படித்தாகக் கேள்விப்பட்டேன்.

அதே ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு  சிக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன. எனது அபாய எச்ச‌ரிக்கையை இனியும் புறக்கணித்து பயணித்தால்,  ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு சிக்குவதைத் தவிர்க்க முடியாது.

ராஜபட்சே குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இலங்கை சிக்கியது போலவே, தமிழ்நாடும் ஒரு குடும்பத்தின் முழுக்கட்டுப்பாட்டில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறதா? அவ்வாறு சிக்கிய பின், இலங்கையில் உள்ள தமிழர்களைப் போலவே, தமிழ்நாட்டுத் தமிழர்களும் சுப்பிரமணிய சுவாமியின் மூலமாகவே உதவிகள் பெறுவதும் தவிர்க்க இயலாததாகி விடும். அதற்கு அவர் மீது பழியைப் போட்டு தப்பிக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html )

'சமூக காங்கிரின் நோயானது' வெளிப்படுவதற்கு முன்னரே, பல முன் அறிகுறிகள் சமூகத்தில் வெளிப்படும். துல்லிய சமூக உணர்விகள் (Minute Social Sensors) மூலம், திருக்குறள் (573) வழியில், எனது ஆய்வில் வெளிப்பட்ட சமூக அறிகுறியையும் இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்திய பாணியானது, இந்துத்வா ஆதரவு முகாம்களில், அதே தி.மு.க பாணி துணிச்சலுடன் இன்று வெளிப்பட்டு வருவதும், 'சமூக காங்கிரின் நோய்' தொடர்பான சமூக அறிகுறியாகும்.

காமராஜரின் அரசியலானது, தி.மு.கவின் வெறுப்பு அரசியலிடம் தோற்றது போலவே, தமிழக பா.ஜ‌.கவிற்குள் எல்.முருகன் - அண்ணாமலை கூட்டணியின் அரசியலானது, பா.ஜ‌.கவிற்குள் தி.மு.க பாணி வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்களிடம் தோற்கும் வாய்ப்பும் இருக்கிறது.

சென்னையில் பல வருடங்களுக்கு முன், ஒரு குறிப்பிட்ட சாதி அமைப்பின் சார்பில் ஒரு விழா நடந்தது. அவ்விழாவில் 'அந்த சாதியை'ச் சேர்ந்த 'கம்யூனிஸ்ட், திராவிட, முற்போக்கு, ஆன்மீக'  புலமையாளர்களாக இருந்த, 'முற்போக்கு, பிற்போக்குகள்' எல்லாம் கெளரவிக்கப்பட்டார்கள்.

அந்த அளவுக்கு 'இரட்டை வேட' 'சீர்திருத்த' 'புலமையாளர்கள்' தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். வேறு (பெரும்பாலும் தம்மை விட மேலான) சாதியில் திருமணம் செய்து, நல்ல வசதி வாய்ப்புகளுடன் பேராசிரியர்களாகவும், மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் இருப்பவர்கள் தமக்கும், தமது பிள்ளைகளுக்கும் கல்வியில் வேலையில் இட ஒதுக்கீடு பலன்களை (தமது சாதியில் முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளின் வாய்ப்புகளை அபகரித்து) அனுபவித்து வாழ்பவர்களில் பலர், 'சாதி ஒழிப்பு'  வீரர்களாகப் பாராட்டப்படும் நிகழ்வுகளும் தமிழ்நாட்டில் உண்டு.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்று வந்த போக்கு, திராவிடர் கழகம் உருவானபின் மாறி, உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெறத் துவங்கியதானது, 'ந‌ன்கு வளர்ந்து'(?), இன்று மேலேக் குறிப்பிட்ட‌ இரட்டை வேட முற்போக்குகள்' செல்வாக்குடன் அறிவுப் புலத்திலும் ஆதிக்கம் செலுத்தும் விளைவை உண்டாக்கியதா? என்பதும் ஆய்விற்குரியது.” (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் ஊழல் ஒழிப்பு வெற்றி பெற வேண்டுமென்றால்,

அந்தந்த மாவட்டத்தில் உள்ள 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரிகள் யார்? யார்? என்று அடையாளம் கண்டு,

அவர்கள் இடம் பெற்றுள்ள அரசியல் கொள்ளை வலைப்பின்னலையும்  (டிஜிட்டல்-Digital-யுகத்தில், அரசுக்கு மனமிருந்தால், எளிதில் சாத்தியமான‌) கண்காணித்து, பின் பாரபட்சமற்ற சட்டபூர்வ விசாரணை மூலம், அவர்களையும், அவர்களின் 'பார்ப்பன எதிர்ப்பு எடுபிடிகளையும்' தண்டனைக்குட்படுத்த வேண்டும்.

அத்தகைய பாரபட்சமற்ற விசாரணை வளையத்தில், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரிகளை எல்லாம், சட்டத்தின் பிடியில் இருந்து காப்பாற்றிய, ஊழல் பாதுகாப்பு கவசமாக செயல்பட்ட பிராமணர்களும் சிக்குவார்கள்.‌ இந்துத்வா எதிர்ப்பு மற்றும் ஆதரவு தலைவர்கள் எல்லாம் சங்கமமான, திராவிட  ஊழல் வலைப்பின்னலையும் ஒழிக்க முடியும்.

தமிழ்நாட்டின் அரசியல் கொள்ளையர்களின் அடித்தளமானது, அதன் மூலம் நிர்மூலமாகும். தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீள வழி கிடைக்கும்.

மோடி ஆட்சியில் அது சாத்தியமாவதற்கு உள்ள 'திராவிட தடைகள்' பற்றியும் ஏற்கனவே பார்த்தோம்.

கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களின் அரசியலோடு ஒட்டிப் பயணித்து, இந்துத்வா எதிர்ப்பானது, சமூக சோளக்கொல்லை பொம்மையாகி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

வேறு வழியின்றி, 'திராவிட தடைகளை' தமது எடுபிடிகளாக்கி, ராஜபட்சே பாணி சர்வாதிகார‌ ஆட்சியில் தமிழ்நாடு  சிக்க வைக்கும் முயற்சிகளின் தொடக்கமே ஜெயலலிதாவின் மர்ம மரணமா? என்ற கேள்விக்கும் இடம் இருக்கிறது.

சுய பலமின்றி, கருணாநிதி அல்லது சசிகலா குடும்பங்களுடன் ஒட்டிப் பயணித்த கட்சிகள் எல்லாம், சமூக காங்கிரின் நோய்க்கு 'சமூக வினையூக்கியாக' (Social Catalyst) பங்களித்து, தமிழ்நாட்டை நோஞ்சான் நாடாக மாற்றியதன் வெளிப்பாடாகவே,

ராஜபட்சே பாணி சர்வாதிகாரத்தில் எளிதில் தமிழ்நாடு சிக்கும் தகுதியை வெளிப்படுத்தி, 

பிரதமர் மற்றும் ஆளுநரின் கண்களில் மண்ணைத் தூவி, ஊழல் திமிங்கிலங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக அனுமதித்து, பல மாதங்கள் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் மாநில முதல்வரையே பலியாக்கிய அவமானத்தைத் தமிழ்நாடு சந்திக்க நேர்ந்தது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_22.html)

சாதி, மத, கொள்கை வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, நாம் ஒவ்வொருவரும் 'தனிமனித இராணுவமாக', குடும்பம், நட்பு, பணி உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் இருக்கும் சமூக கிருமிகளை எதிர்த்து, போராடுவதன் மூலம், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான முன்னோட்ட படையானது ('sappers and miners')  உருவாக, வழி வகுப்போம்.

வ.உ.சி உள்ளிட்டு 'தேசிய' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும், நீடாமங்கலம் அ.ஆ உள்ளிட்டு 'திராவிடர்' போக்கில் பயணித்த எண்ணற்றோரின் தியாகங்களுக்கும்;

நமது வாழ்வில் செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் குறைந்த பட்ச மரியாதையே அதுவாகும்.

அதுவே தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 'சமூக காங்கிரின் நோயில்' இருந்து, தமிழ்நாட்டை மீட்கும் சமூக மருந்தாகும்.

பிறந்த போது எதையும் கொண்டு வராத நாம், இறக்கும் போதும், நல்ல/தீய வழிகளில் சம்பாதித்த சொத்து எதையும், எடுத்துச் செல்லப் போவதில்லை. நமது இயல்பை ஓட்டிய தகுதி, திறமைகளை வளர்த்து, உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழ்பவர்களே, மரணத்தை மன நிறைவுடன் தழுவ முடியும்.

நமது இயல்பைத் தொலைத்து, காலனி ஆட்சிப் பாதிப்பில் இன்றும் உழலும் மனநோயாளிகளாக வாழ்பவர்கள் எல்லாம், வாழும் போது,

இரவில் படுத்தவுடன் தூங்க முடியுமா? 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா? (https://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html )

Wednesday, September 23, 2020

 முதல்வர் ஈபிஎஸ்ஸுக்கு மட்டும் அவமானமல்ல


பிரதமர் மோடிக்கும் தமிழ்நாட்டுக்குமே முதல் அவமானம்




இந்த படம் முதல்வர் ஈபிஎஸ்ஸுக்கு மட்டும் அவமானமல்ல.

பிரதமர் மோடியின் ஆட்சியில் வெளிப்பட்ட கரும்புள்ளியாகி,

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் விசுவாசிகள் மத்தியிலும், சட்டத்தின் ஆட்சியை (Rule of Law) விரும்புபவர்களின் மத்தியிலும், மோடியின் செல்வாக்கினை வீழ்த்திய அவமானமாகும். அதற்கான காரணம் வருமாறு:.  

முதல்வர் ஜெயலலிதாவால் ஊடக வெளிச்சத்துடன் கொலைக்குற்றத்திற்கு உள்ளானவர்களின் மேற்பார்வையில், பல மாதங்கள்  அப்பொல்லோவில் நடந்த  மர்ம சிகிச்சைக்கும் மர்ம மரணத்திற்கும் மெளனசாட்சியாக பிரதமர் மோடி வெளிப்பட்டுள்ளார்.

2005 முதல் இன்று வரை நான் மோடி ஆதரவாளன். மன்மோகன்சிங், தேவ கவுடா உள்ளிட்ட எந்த ஆட்சியிலும் நடந்திருக்க வாய்ப்பில்லாத கூத்து இது. இந்தியாவின், தமிழ்நாட்டின் குடிமகன் என்ற அடிப்படையில் நான் வெட்கி தலைகுனிந்த கூத்து அது.

அந்த கூத்து முடிந்து, அதன் தொடர்ச்சியான நிகழ்ச்சியில் தான் மேற்குறிப்பிட்ட புகைப்படம் எடுக்கப்பட்டது.

சொந்த பந்தங்களை ஒதுக்கி, அந்த குற்றவாளிகள் சூழ இருந்த ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, சசிகலாவையும், நடராஜனையும் மோடி வணங்கிய வரலாற்று அவமானத்திற்குப் பின், எடுக்கப்பட்ட புகைப்படம் அது.

சுப்பிரமணிய சுவாமி ஆளுநரைச் சந்தித்து, சசிகலாவை முதல்வராக்க வற்புறுத்திய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம். ராஜாத்தி அப்பொல்லோவில் சசிகலாவைச் சந்தித்த பின், எடுக்கப்பட்ட படம். எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், அப்போல்லோ வாசலில் ஊடக வெளிச்சத்துடன், மர்ம மருத்துவ சிகிச்சைக்கு ஒத்து ஊதிய பின் எடுக்கப்பட்ட படம். 

எனவே நான் உள்ளிட்டு பிரதமர், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகள் உள்ளிட்டு, தமிழ்நாடே வெட்கித் தலைகுனிய வேண்டிய புகைப்படம் அது.

நானறிந்த வரையில் முதன் முதலாக மேடையில் காலில் விழும் பண்பாட்டைத் துவக்கியவர் முரசொலி மாறன் ஆவார். 1967இல் அண்ணா முதல்வராகி, தமது தென்சென்னை எம்.பி பதவியை ராஜினாமா செய்தார். அந்த இடத்தில், கட்சியில் மூத்தவர்களை எல்லாம் பின் தள்ளி முரசொலி மாறனை வேட்பாளாராக்கினார். எம்.பியான முரசொலி மாறன் பொதுக்கூட்ட மேடையில் அண்ணா காலில் விழுந்து வணங்கினார். தமது காலில் விழ முயன்றவர்களைக் கண்டித்து தடுத்த ஈ.வெ.ரா மற்றும் துக்ளக் சோ போல, அண்ணா தமது காலில் விழுந்த முரசொலி மாறனை கண்டித்ததாக நான் கேள்விப்படவில்லை. ‌

தன்மானம் இழந்து காலில் விழுந்து, தத்தம் தகுதிக்கும் மீறிய பணம், பதவி, பட்டங்கள் பெறும் 'நோஞ்சான்' நோயானது 1967இல் முளை விட்டது.

அதன்பின் தி.மு.க கருணாநிதியின் குடும்பக் கட்சியானது. தி.மு.கவில் வளர, கருணாநிதியின் காலில் விழுவது முன் நிபந்தனையானது.

கருணாநிதியை விஞ்சும் அளவுக்கு, ஜெயலலிதாவின் ஆட்சியில், அது இன்னும் மோசமானது.

1995இல் தஞ்சையில் நடந்த உலகத்தமிழ் மாநாடு நடந்தது. அம்மாநாட்டின் போது, மிகவும் குறைந்த விலையில் தரமான உணவு வழங்கப்பட்டதால், பலர் வீடுகளில் சமைக்காமல், அந்த உணவையே வாங்கி சாப்பிட்டார்கள்; உலகின் கவனத்தை ஈர்த்த 'அம்மா உணவகத்திற்கு' முன்னோடியாக. அது போல, நான் கேள்விப்பட்ட கீழ்வரும் தகவலும் எனக்கு மறக்க முடியாததானது.

அம்மாநாட்டிற்காக ஜெயலலிதா தஞ்சைக்கு ஹெலிகாப்டரில் வந்தார். தஞ்சை அரசு மக‌ளிர் கல்லூரி அருகே இறங்கு தளம் அமைக்கப்பட்டிருந்தது. மக‌ளிர் கல்லூரியின் மொட்டை மாடியில் மாணவிகள் ஜெயலலிதாவைப் பார்க்க குவிந்திருந்தனர்.

ஜெயலலிதா ஹெலிகாப்டரில் இருந்து இறங்கியதும், அங்கிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், வி.ஐ.பிக்கள் எல்லாம் ஜெயலலிதா காலில், அந்த மண் தரையில் விழுந்தனர். ஜெயலலிதா அவர்கள் காலில் விழுந்ததைக் கவனிக்காமல், நடக்க, ஜெயலலிதாவின் பின்னே, தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறினர்.

உடனே கல்லூரியின் மொட்டை மாடியில் இருந்த மாணவிகள் அனைவரும் பலமாக சிரித்த ஒலி அந்த பகுதியை அதிர வைத்தது.

மறுநாள் சென்னையில் இருந்து கல்லூரி முதல்வரை தொலைபேசியில் அழைத்து கண்டித்துள்ளார்கள். சில காலம் கழித்து, அங்கு பணியாற்றிய பேராசிரியையுடன் உரையாடுகையில், அவர் அந்த தகவலை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

அது போலவே, ஜெயலலிதா மறைந்த பின்னர், முதல்வர் ஆக முயற்சித்த சசிகலாவின் காலில் கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் காலில் விழுந்தார்கள். அவை தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, மேற்குறிப்பிட்ட கல்லூரி மாணவிகளைப் போலவே, தமிழ்நாடெங்கும் அக்காட்சியைக் கண்டவர்கள் எல்லாம் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.

நான் கல்லூரி முதல்வராக இருந்த போது, அருகில் உள்ள மாவட்ட தலைநகரில் நடந்த பொது நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பங்கேற்றார். அப்போது துணைவேந்தராக இருந்தவர் மேடையில் கருணாநிதியின் காலில் விழுந்து வணங்கியதை அறிந்த மாணவர்களும் பேராசிரியர்களும் எவ்வாறு சிரித்தார்கள்? என்று எனக்கு தெரியாது. ஆனால் அவர்கள் மத்தியில் கல்லூரி முதல்வர் பதவிக்கு மரியாதை கிடையாது என்பதையும், அந்த பதவியில் எந்த அளவுக்கு நான் உண்மையாகவும், நேர்மையாகவும் பங்களித்தேன்? என்ற அடிப்படையில் தான், எனக்கு மரியாதை கிடைக்கும் என்பதையும் அனுபவபூர்வமாக அறிந்தேன்.

கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா ஆகிய அம்மூவரில் இருந்தும் வேறுபட்டு எம்.ஜி.ஆர் பயணித்திருக்கிறார். முதல்வர் கருணாநிதியால் அவமதிக்கப்பட்ட புலமையாளர்களை மிகவும் மதித்து ஆலோசனைகள் பெற்று, எம்.ஜி.ஆர் ஆட்சி நடத்தினார். கி.ஆ.பெ விஸ்வநாதன் போன்றவர்களை வழி அனுப்பும் போது, அவர்களை காரில் உட்கார வைத்து, கதவை எம்.ஜி.ஆரே மூடி வழி அனுப்பி வைத்திருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் ஆணையில், டார்பிடோ ஜனார்த்தனத்தை தேடி, குடிசை மாற்று வாரிய வீட்டில் குடி இருப்பதை, பச்சையப்பன் கல்லூரி பேரா.தாண்டவன் (பின்னாள் சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர்) கண்டுபிடித்தார். அவர் சென்ற மோட்டர்சைக்கிளின் பின்புறத்தில் தாமாகவே டார்பிடோ ஜனார்த்தனம் உட்கார்ந்து பயணித்தார். தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறை முன் உள்ள பெஞ்சில் அவரை உட்கார வைத்து, உள்ளே சென்று முதல்வர் எம்.ஜி.ஆரிடம் தாண்டவன் அதைச் சொன்னார். எம்.ஜி.ஆர் அதிர்ந்து, 'அவ்வளவு பெரிய மனிதரையா வெளியில் உட்கார வைத்தாய்' என்று தாண்டவனைக் கடிந்து, எம்.ஜி.ஆரே வெளியில் வந்து, அவரை வணங்கி உள்ளே அழைத்துச் சென்றார். பின் அவரை ராஜ்ய சபா எம்.பி ஆக்கினார்.

எம்.ஜி.ஆர் ஆட்சியில் இந்திய அளவிலும் உலக அளவிலும் புகழ் பெற்ற நிபுணர்களை  துணை வேந்தர்களாக்கினார்.

ஜெயலலிதா (சசிகலா) மற்றும் கருணாநிதி ஆட்சிகளில் துணைவேந்தர் பதவிகள் ஏலத்தில் போன குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.

அது வளர்ந்து முற்றி, துவக்கத்தில் குறிப்பிட்ட தவளை போல காலில் விழுந்தவர்கள் தத்தி முன்னேறி, அதன் தொடர்ச்சியாகவே, சசிகலாவின் காலில், கட்சியின் வி.ஐ.பிக்கள் மட்டுமின்றி, துணைவேந்தர்கள் உள்ளிட்ட பிரபலங்களும் விழுந்தார்கள்.  (‘கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா சங்கமம்; தன்மானம் இழந்த தமிழர்கள் வளர்ந்த தமிழ்நாடு? https://tamilsdirection.blogspot.com/2020/09/1995.html )

மோடி பிரதமராக இருந்த காலத்தில், ஆளுநர் மற்றும் பிரதமர் மோடியின் கண்களில் மண்ணைத் தூவி, எந்த அளவுக்கு சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக (Extra Constitutional Authority) செயல்பட்டார்? என்பதும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. உதாரணமாக,

The last 75 days of political management, attributed to Sasikala and possibly her supposedly estranged husband M Natarajan, has won her considerable respect among AIADMK party managers. She moved along with Jayalalithaa to Apollo and, with the help of Jayalalithaa’s close advisors, took charge of the hospital surroundings and ensured that only messages she crafted went out to the public. It is now almost certain that none of Jayalalithaa’s cabinet colleagues had any knowledge of what was going on inside the hospital. Even constitutional functionaries like the Governor could not ascertain the exact health condition of Jayalalithaa. (https://swarajyamag.com/politics/tamil-nadu-politics-at-the-crossroads-where-does-it-go-from-here )

ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.” (http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-men-upset-over-sasikala-s-relatives-rajaji-hall-269130.html  )

முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளி வந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? https://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html

ஊழல் திமிங்கிலங்களை சிறையில் அடைத்து, அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப் பயப்படும் அளவுக்கு, இந்தியாவிலேயே எளிதாக ஊழலற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற முடியும்;

என்பதானது இந்திராகாந்தியின் நெருக்கடி கால ஆட்சியில் வெளிப்பட்டது.

பிரதமர் மற்றும் ஆளுநரின் கண்களில் மண்ணைத் தூவிஊழல் திமிங்கிலங்களை சட்டத்திற்கு அப்பாற்பட்ட அதிகார பீடமாக அனுமதித்து, பல மாதங்கள் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும் மரணத்திற்கும் மாநில முதல்வரையே பலியாக்கிய அவலமானது;

பிரதமர் மோடியின் ஆட்சியில் வெளிப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டில் 1969க்கு முன்னும் பின்னும் என்று ஒரு கட்டமாகவும், 1991க்கு முன்னும் பின்னும் என்று இரண்டாவது கட்டமாகவும், பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கைப்பற்றியுள்ள சொத்து மற்றும் தொழில் வியாபாரங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் எல்லாம் அரசு வசம் உள்ள புள்ளி விபரங்களில் வெளிப்பட்ட வாய்ப்பில்லை.

அந்த அளவுக்கு பினாமி மற்றும் அந்நிய செலாவணி மோசடி மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டுகளிலும் சொத்துகள் வாங்கும் சமூக செயல்நுட்பம் அதிகரித்து விட்டது.‌ அது மட்டுமல்ல, இந்தியாவையே 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது, என்பது மோடி ஆட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

தமிழக மக்களின் நாடித்துடிப்புகளிடமிருந்து அந்நியமாகி, திராவிட ஊழல் தலைவர்களுக்கு நெருக்கமாகிப் பயணித்த, தமிழக பா.ஜ.கவின் தவறான வழிகாட்டுதலால், தமிழக மக்களின் அவநம்பிக்கைக்கு பிரதமர் மோடி உள்ளாகியுள்ளார். அதன் விளைவாக, அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியலில் பயணித்து வரும் தமிழ்நாடானது 'சமூக காங்கிரின் நோயில்' (Social Gangrene) சிக்கும் ஆபத்தும் அதிகரித்துள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2020/07/2019.html )

சுய பலமின்றி, கருணாநிதி அல்லது சசிகலா குடும்பங்களுடன் ஒட்டிப் பயணித்த கட்சிகள் எல்லாம், அந்த நோய்க்கு 'சமூக வினையூக்கியாக(Social Catalyst) பங்களித்து வருகிறார்கள். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html) ‌

குடும்பமாக இருந்தாலும், பணியாற்றும் இடமாக இருந்தாலும்கட்சியாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் அங்குள்ள சூழலானது நோஞ்சான்களை வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் இருக்கலாம்; அல்லது ஒட்டுண்ணிகள் போலவும் வாழத் தூண்டும் வகையிலும் இருக்கலாம்.

இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்.

தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த பின்னரும், 'அதே' செல்வாக்குடன் தத்தம் சாதிகளில் உலா வந்து, அந்தந்த சாதி அமைப்புகளில் 'நோஞ்சான்' நோயைப் பரப்பி வருகின்றனர். 

கூட்டுக்குடும்பத்தின் வலிமையானது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வலிமையைப் பொறுத்ததாகும்.  உறுப்பினர் எவரும் நோஞ்சானாக இருக்கும் பட்சத்தில், அவர் விரும்பினாலும் மற்ற வலிமையான உறுப்பினர்களுக்கு உள்ள மரியாதை கிடைக்காது. அதே நேரத்தில், கூட்டுக்குடும்பத்தில் அதீத வலிமையுள்ள உறுப்பினருக்கு சிறப்பு மரியாதையே கிடைக்கும்.

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/2.html )

இந்தியாவில் தமிழ்நாடானது, எந்த அளவுக்கு நோஞ்சான் நாடாகப் பயணித்தது? என்பதற்கு, மேற்குறிப்பிட்ட புகைப்படமே வரலாற்றில் சாட்சியான ஆவணமாக இடம் பெறத் தக்கதாகும்.

குறிப்பு: தமிழ்நாட்டில் உள்ள முரண்பாடுகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_21.html)

Monday, September 21, 2020

தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் (1)


ஓரணியில் திரள்வதில் உள்ள சிக்கல்கள்?

 

பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி) 'இன்று யாருக்காகப் பெரியார்' என்ற தலைப்பில், ஈ.வெ.ராவின் பிறந்த நாளினை முன்னிட்டு, 17.09.2020 வியாழக்கிழமையன்று முகநூலில் வெளிவந்த பதிவானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

அந்த பதிவில், 'தனித்தமிழ்நாடு' கோரிக்கைக்கு செயல்பூர்வமாக ஈ.வெ.ராவின் பங்களிப்பானது, எவ்வாறு மற்றவர்களின் பங்களிப்பை விட, அதிகமான துணிச்சலுடன் தொடர்ந்து வெளிப்பட்டது? என்பது சரியாக வெளியிடப்பட்டுள்ளது. 'தமிழ்த்தேசியம்' என்ற பேரில் ஈ.வெ.ராவை எதிர்ப்பது எவ்வாறு அபத்தமானது? என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மேற்குறிப்பிட்ட பதிவின் கடைசியில் உள்ள கீழ்வரும் பகுதியானது, ஆழ்ந்த விவாதத்திற்கு உரியதாகும்.

இந்தியப் பேராதிக்கத்தை, வல்லரசியச் சூறையாடல்களை, ஆரியப் பார்ப்பனியத்தை, சாதிய கொடுநெறியையெல்லாம் வீழ்த்திப் புதிய தமிழகம் காணவேண்டும் எனும் நோக்கமுடையோர் அனைவரையும் சிந்தாமல் சிதறாமல் கூட்டிட வேண்டுமானால் தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் ஓரணி திரண்டாக வேண்டிய நெருக்கடியான காலத்தில் உள்ளோம் என்பதை விளங்கியாக வேண்டும்.

இந்த அறிதலின்றி தங்களுக்குள் குத்துதல், குடைதல் செய்து ஒற்றுமையைக் குலைப்போரைத் தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில் அக்கறை அற்றோர் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

தமிழ்த் தேசம் காக்க ஒன்றிணைவோம் வாருங்கள்.. 

முதலில், தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், அம்பேத்கரியக் கருத்தாளர்களுக்குள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.

மொழிவாரி மாநில பிரிவினைகளை ஆதரித்த அம்பேத்கார், அந்தந்த மாநிலங்களில் ஆட்சி மொழியாக மாநில மொழிகளை அனுமதிக்கக் கூடாது என்றும், சமஸ்கிருதமே ஆட்சி மொழியாக வேண்டும் என்றும், அதுவரை இடைக்காலத்தில் ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பின் சமஸ்கிருதம் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில், இந்தி ஆட்சி மொழியாக இருக்க ஒத்துக்கொண்டார். அது தொடர்பான சான்றுகள் கீழே; 

Ambedkar had 3 points in the proposal which was entrusted to the Jawaharlal Nehru government. The first was Sanskrit should be the language of the Indian Union. The second proposal was that for the first 15 years of independence, English could be used as an official language, but Sanskrit should be used as its parallel official language. After 15 years, Sanskrit has been made the official language of the Union. The Parliament should be made the law of taking English to work for only 15 years; it was the third point of the proposal.

Ambedkar’s suggestion was for the amendment of that proposal, in which the National Language System Council had given its three proposals to the government in August 1949. In his proposals, the Council had decided that Hindi should be distinguished in place of English, which does not take more than ten years. Different territories of the Indian Union will be free to use their regional languages. However, the teaching of 2 Indian languages ​​in the teaching method of these provinces will be necessary. The Council also decides that the Indian Union should use Sanskrit in the places of ideal sentences, titles, and as a Motto. https://thearticle.in/story-hub/babasaheb-sanskrit-language-can-mitigate-indias-linguistic-differences/

Dr. Ambedkar was a strong proponent of the creation of linguistic states, but asserted that the linguistic states so created must use Hindi as their official language (instead of the language of the state itself). This, he held, was necessary to prevent India from becoming "the medieval India consisting of a variety of States indulging in rivalry and warfare".

“How can this danger be met? The only way I can think of meeting the danger is to provide in the Constitution that the regional language shall not be the official language of the State. The official language of the State shall be Hindi and until India becomes fit for this purpose English. Will Indians accept this? If they do not, linguistic States may easily become a peril.” Dr. Ambedkar  http://karnatique.blogspot.com/2009/09/dr-b-r-ambedkar-on-indias-language.html

எனவே தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகவும், மத்திய அரசின் ஆட்சி மொழியாகவும் இந்தி இருக்க வேண்டும் என்பதும், வருங்காலத்தில் இந்திக்குப் பதிலாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என்பதும், அம்பேத்காரின் நிலைப்பாடு ஆகும்.

அம்பேத்கரியக் கருத்தாளர்கள் அம்பேத்காரின் மேற்குறிப்பிட்ட நிலைப்பாட்டை ஏற்றுக்கொண்டால், அது பொழிலன் முன் வைக்கும் தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு உடன்பட்டதாகுமா? தமிழ்த் தேச விடுதலையை ஆதரிக்கும் அம்பேத்கரியக் கருத்தாளர்கள் எல்லாம், மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் மற்றும் இந்தி தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொள்வது முரண் ஆகாதா?

மேற்குறிப்பிட்ட சமஸ்கிருதம் மற்றும் இந்தி தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகளைக் காரணம் காட்டி, அம்பேத்காரை தமிழ்த் தேச விடுதலையின் எதிரி, என்று முடிவு செய்வதும் அபத்தமாகும். சமூக இரட்டை இலக்க சிறையில் சிக்கியவர்கள் தான், அவ்வாறு முடிவு செய்வார்கள்.

சமூகத்தில் எதையும் கறுப்பு வெள்ளையாகவே, அல்லது வெற்றி தோல்வியாகவே, இரட்டை இலக்க அணுகுமுறையில் (Binary) பார்ப்பதானது, நமது வாழ்க்கையையே அந்த சமூக இரட்டை இலக்க சிறையில் (Social Binary Prison) சிக்க வைத்துவிடும். (https://tamilsdirection.blogspot.com/2020/04/fixed-mindset-growth-mindset.html )

அவ்வாறு சிக்கிய பின், நமக்கு தெரியாமலேயே, சமூக ஒட்டுண்ணிகள் நமது சமூக வட்டத்தில் ஊடுருவி, சமூகத்தை சீரழிக்கும் சமூகக்கிருமிகளாக‌ வளர்ந்த 'சமுக ஆற்றல் உறிஞ்சி செயல்நுட்பம்' பற்றியும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

பாரதி, பாரதிதாசன், ஈ.வெ.ரா, அண்ணா, காந்தி, கோட்சே உள்ளிட்டு எவரையுமே சமூக இரட்டை இலக்க சிறையில் அணுகுவதானது, நம்மை அந்த சிறையில் சிக்க வைத்து, நமது வாழ்வை முடக்கி விடும்.

நாம் சரியென்று ஏற்றுக்கொண்டவைகள் தொடர்பாக, உலக அளவில் வெளிப்பட்டு வரும் ஆய்வுகளை எல்லாம் தேடி, அதன் வெளிச்சத்தில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அந்த மறுபரிசீலனையின் மூலமே, உரிய திருத்தங்களுடன் சரியான திசையில் நாம் பயணிக்க முடியும். (https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_12.html )

சமஸ்கிருதம் தொடர்பான அம்பேத்காரின் நிலைப்பாடுகள் அவரின் ஆழ்ந்த ஆராய்ச்சியின் முடிவாகும். அந்த ஆராய்ச்சியின் முடிவில் நான் மாறுபட்டாலும், சமுக நலன் நோக்கில் தான் அந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன, என்பதில் எனக்கு சிறிதும் ஐயமில்லை. சமூக நலன் நோக்கில் முன் வைக்கப்படும் கருத்தினை தவறானது என்று கருதி ஏற்காமல் இருக்கலாம். அக்கருத்தினை எதிரிக்கருத்தாக கருதி வெறுப்பது சரியல்ல.

அவ்வாறு வெறுப்பு அரசியலில் சிக்கி பயணிக்கும் மனிதர்களும் கட்சிகளும் காலப்போக்கில் பலகீனமாகி மரணிப்பது சமூக இயற்கையின் போக்கு ஆகும்.

தமிழ்நாட்டில் உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு ஊக்குவிக்கப்பட்ட போக்கில், அதற்கு துணை புரிந்த நோஞ்சான் புலமையாளர்களும் ஊக்குவிக்கப்பட்டார்களா? பழந்தமிழ் இலக்கியங்களிலோ, கல்வெட்டுகள் போன்ற தொல்லியல் சான்றுகளிலோ, 'சமஸ்கிருத எதிர்ப்பு' இருந்ததற்கு சான்றுகள் உண்டா? காலனி ஆட்சியில் தமிழர்கள் நோஞ்சான்களாக வளர்ந்து, தமிழானது சமஸ்கிருத கலப்பில் வீழ்ந்ததா? அதன் தொடர்ச்சியாகவே, இன்று தமிழ் ஆங்கிலத்திடம் வீழ்ந்து வருகிறதா? 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு) மறந்து, வெறுப்பு அரசியலில் நோஞ்சான்களாகப் பயணிப்பது இனியும் தொடரலாமா? ‌என்ற விவாதத்திற்கும் இடம் இருக்கிறது. (‘சமஸ்கிருதம் செத்த மொழி என்பது அபத்தம்; தமிழ்நாட்டில் தமிழ் சாகும் மொழி?’; https://tamilsdirection.blogspot.com/2020/09/blog-post_9.html )

அடுத்து, தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், மார்க்சிய நெறி உணர்வாளர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பார்ப்போம். அவர்கள் விளங்கிக் கொண்டுள்ள மார்க்சிய நெறி தொடர்பாக, கீழ்வரும் பகுதியானது இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

தமிழ்நாட்டில் ஜீவானந்தம் தொடங்கி, தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தை வளர்த்தவர்களில், எவராவது மார்க்சியம் தொடர்பான 'அறிஞர்களாக', தம்மை அடையாளம் காண உதவும் புத்தகங்களையோ, ஒலிப்பதிவுகளையோ வெளிப்படுத்தி இருந்தால், அதைத் தெரிவிப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை எனது ஆய்வுக்கு உட்படுத்த இயலும். மார்க்சியம் தொடர்பான புலமையையும்,  வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் இருந்த சமஸ்கிருத  நூல்களை, மார்க்சிய பார்வையில் ஆராய்ந்தது தொடர்பான புலமையையும்,  வடநாட்டு மார்க்சிய அறிஞர்கள் போன்று, தமிழ்நாட்டில் எவரேனும் புத்தகங்கள் வெளியிட்டிருந்தால், அவற்றையும் எனது ஆய்வுக்கு உட்படுத்த விழைகிறேன்.

மார்க்சியம் தொடர்பான புலமை என்பது, சமூகத்தின் பொருள் உற்பத்தி முறை (mode of Production), உற்பத்தி விசைகள் (productive Forces), உற்பத்தி உறவுகள் (Production Relations) , இரண்டிற்கும் இடையிலான உறவுகள், உபரி உற்பத்தி (Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of the Surplus Product), முரண்பாடுகள் (contradictions), அடித்தளம்(base), மேற்கட்டுமானம் (Super structure) , அவற்றிற்கு இடையிலான முரண்பாடுகள், போன்றவை பற்றியதாகும்……………………..இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், மேலேக் குறிப்பிட்ட புலமையுடன், தமிழ்நாட்டைப் பற்றிய எனது அறிவு அனுபவ அடிப்படையில், மார்க்சிய பார்வையில் இருந்த ஒரு சீரான பொருள் உற்பத்தி முறைக்கு (homogeneous mode of production) மாறாக, ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறையில் (heterogeneous mode of production ) இந்திய சமூகம், குறிப்பாக தமிழ்நாடு, இருந்தது எனது ஆய்வில் வெளிப்பட்டது. இதனை அந்த காலக் கட்டத்தில் என்னுடன் தொடர்பில் இருந்த மார்க்சிய, மார்க்சிய‍ லெனினிய அமைப்புகளில் இருந்தவர்களுக்கு தெரிவித்த போது, எவரும் ஆர்வம் காட்டவில்லை. எனவே அத்தகைய விவாதத்திற்கு தமிழ்நாட்டில் வாய்ப்பில்லை, என்ற புரிதலுடன் நான் இசை ஆராய்ச்சியில் ஈடுபட‌த் தொடங்கினேன். (https://tamilsdirection.blogspot.com/2016/04/normal-0-false-false-false-en-in-x-none_22.html )

எனவே அம்பேத்கரியக் கருத்தாளர்கள் அம்பேத்காரின் சமஸ்கிருதம் தொடர்பான‌ நிலைப்பாட்டை, தமிழ்த் தேச விடுதலை நோக்கில் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதைப் போலவே,

மார்க்சிய நெறி உணர்வாளர்களும், தமிழ்நாட்டின் சமூகத்திற்கு தாம் விளங்கிக் கொண்ட மார்க்சிய நெறியையும் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.

அடுத்து, தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில், பெரியாரியக் கருத்தாளர்களுக்கு உள்ள சிக்கல்களைப் பார்ப்போம்.

முதலில், தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது, 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா? என்பது தொடர்பாக நான் முன்வைத்துள்ள சான்றுகளை பெரியாரியக் கருத்தாளர்கள் கணக்கில் கொள்ளாமல், தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு சரியான முறையில் பங்களிக்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

இசை இயற்பியல்'  (Physics of Music) அணுகுமுறையில் எனது ஆய்வில் பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தியதன் விளைவாக, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து  பயணித்ததில் வெளிப்பட்ட தவறுகளை எல்லாம்;

கடந்த சுமார் 20 வருடங்களாக உரிய சான்றுகளின் அடிப்படையில் நான் சுட்டிக்காட்டியும், அதை எந்த பெரியார் கட்சித் தலைவர்களும் பரிசீலித்து மறுப்பு வெளியிட்டதாக தெரியவில்லை. ஆனால், நானறிந்தவரையில் சுயலாப நோக்கின்றி வாழும் 'பெரியார்' ஆதரவாளர்களில் சிலர், அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, ஈ.வெ.ராவின் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் செய்ய‌ அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்துவதிலும், ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள். (https://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

எனவே 'பார்ப்பன சூழ்ச்சி' பற்றியும், தமிழ் பற்றியும், ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை எல்லாம், பெரியாரியக் கருத்தாளர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்தாமல், தமிழ்த் தேச விடுதலை எழுச்சிக்கு சரியான முறையில் பங்களிக்க முடியாது.

கடைசியாக, தமிழிய அற உணர்வாளர்களும் மேற்குறிப்பிட்ட மூன்று பிரிவினர் முன்னெடுக்கும் மறு ஆய்வுகளை ஊக்குவிப்பதன் மூலமே தமிழ்த் தேச விடுதலை எழுச்சியில் உள்ள குறைபாடுகளை எல்லாம் களைந்து முன்னேற முடியும்.

ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது கொல்வால்கரின் ''Bunch of Thought'  நூலினை மறு ஆய்வுக்கு உட்படுத்தி, இன்றைய காலக்கட்டத்திற்கு ஒத்து வராத பகுதிகளை எல்லாம் துணிச்சலுடன் அகற்றியுள்ளது. (https://timesofindia.indiatimes.com/india/parts-of-golwalkars-bunch-of-thought-not-valid-anymore-rss-chief-mohan-bhagwat/articleshow/65877873.cms )

அது போல, தமிழிய அற உணர்வாளர்களும், மார்க்சிய நெறி உணர்வாளர்களும், பெரியாரியக் கருத்தாளர்களும், அம்பேத்கரியக் கருத்தாளர்களும் தத்தம் நிலைப்பாடுகளை எல்லாம்;

ஈ.வெ.ரா வலியுறுத்திய 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தியாக வேண்டும். மறுத்தால், கால ஓட்டத்தில் செல்லாக்காசாக மாறுவதைத் தவிர்க்க முடியாது.

காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாடானது பல மன்னர்களின் ஆட்சிகளில் இருந்தது. தாய்மொழி நாடான தமிழ்நாடானது, தமிழர்களுக்கு ஒரே தாய்நாடாக இல்லை.

காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற பின், இன்று தமிழ்நாடானது, தமிழர்களின் ஒரே தாய்மொழி நாடாக இருப்பதும், அந்த தமிழ் தாய்மொழிநாடானது, இந்தியா என்ற தாய்நாட்டில் இருப்பதும், காலனி ஆட்சிக்கு எதிரான போக்கில், வெளிப்பட்ட ஒற்றுமையால், வரலாற்றில், சிற்சில குறைபாடுகளுடன், ஏற்பட்ட விளைவாகும்.

ஒரு தாய்மொழிநாடானது தனி தாய்நாடாக இருப்பதும், அல்லது ஒரே தாய்நாட்டில் உள்ள பல தாய்மொழி நாடுகளில் ஒன்றாக இருப்பதும்;

அந்த ஒற்றுமைக்கான வரலாற்று ரீதியிலான பாரம்பரிய, பண்பாட்டு கூறுகளையும், சர்வதேச அரசியல் தொடர்பான வரலாற்றுப் போக்குகளையும் பொறுத்த ஒன்றாகும். (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html)

மேற்குறிப்பிட்டதன் அடிப்படையிலேயே, தாய் நாட்டிற்கும் தாய்மொழி நாட்டிற்கும் இடையில் உள்ள முரண்பாடுகள் இயக்கத்தன்மையில்(Dynamic), அந்தந்த காலக்கட்டத்தைப் பொறுத்து, நட்பாகவும் அல்லது பகையாகவும் இருக்கும்.

அந்த புரிதலின்றி, நிரந்தர பகையாகக் ‌கருதி, ஈ.வெ.ரா, பெருஞ்சித்திரனார் உள்ளிட்ட இன்னும் பலர் பயணித்ததாலேயே, தமிழ்நாடு ஆதாய அரசியலில் சிக்கி நோஞ்சான் தமிழர்கள் அதிகரித்து, இந்தியாவிலேயே பலகீனமான நோஞ்சான் தாய்மொழிநாடாக தமிழ்நாடு மாறி வருகிறது. (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html). 

இதே போக்கு நீடிக்குமானால், இந்தியாவின் சவலைப்பிள்ளையாகி, ராஜபட்சே பாணி குடும்ப அரசியலில் நிரந்தரமாக சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

தமிழ்நாட்டில் நோஞ்சான் கட்சிகள் தொடர்வதும், அந்த கட்சிகள் மூலமாக சிரமமின்றி எளிதில் தமிழ்நாட்டை கையாளலாம் என்ற திசையில் மத்தியில் ஆளும் கட்சிகள் பயணிப்பதும் தமிழ்நாட்டிற்கும் நல்லதல்ல; இந்தியாவிற்கும் நல்லதல்ல. (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )


குறிப்பு: தொடர்புள்ள பதிவுகள்

What is wrong with importing Euro-centric nationalism to India?

A criticism on Romila Thapar’s ‘ON NATIONALISM’ ; https://tamilsdirection.blogspot.com/2016/07/what-is-wrong-withimporting-euro.html

 

அரசியல் கட்சிகளும், நிறுவனங்களும்; நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும்,       தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (1); https://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html

நிறுவன கட்டமைத்தல்(System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான(Nation Building) சீர்குலைவும் (2); நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?; https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html

நிறுவன கட்டமைத்தல் (System Building) பலகீனமாதலும், தேச கட்டுமான (Nation Building) சீர்குலைவும் (3); 1967க்கு முன்பு தமிழ்நாட்டில் கட்சியிலும் ஆட்சியிலும், 'பில்டிங் ஸ்ட்ராங்க், பேஸ்மெண்ட் ஸ்ட்ராங்க்' மீண்டும்  வருமா? ரஜினி மூலமாக நடக்குமா?; https://tamilsdirection.blogspot.com/2019/09/systembuilding-nationbuilding-3-1967.html

எதிரியாக தம‌து வலிமையை தமது எதிரிக்குத் 'தானம்' செய்து, தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (1); https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post_8.html

தாமாகவே தோற்ற 'ஜுஜுட்சு'வாக பிரபாகரனும் விடுதலைப்புலி ஆதரவாளர்களும் (2); ராஜபட்சே பாணி குடும்பத்திடம் தமிழ்நாடு சிக்கும் ஆபத்து இருக்கிறதா?; https://tamilsdirection.blogspot.com/2020/08/2.html

Sunday, September 20, 2020

பிராமண துவேசம், பிரிவினை வளர்ச்சிக்கு பங்களித்த‌ 


'proactive - நேர்வினை' ராஜாஜியும்

'reactive - எதிர்வினை' ஈ.வெ.ராவும்

 

'மிக நல்ல பதிவு‍ ராமசாமி நாயக்கர் அயோக்கிய பயல் என்பதை தெளிவாக உள்ளது.',

'இந்த முட்டாள் பிரிட்டிஷ் அடிவருடி ஒழுக்கம் கெட்ட ஈ.வே. ராமசாமி நாயக்கனைப் போயி பெரியார் என்று கும்பிடும் ஈனக் கூட்டம் திராவிடக் கட்சிகள். த்தூ...' ,

'ஒரு நாள் வரும்., அந்த திருநாளில் இந்த அயோக்கியன் பெரியாரின் சிலைகளும் உருவ படங்களும் தூக்கி எறியப்படும்.... இதற்கு ஒரே வழி பிஜேபி தமிழகத்தில் ஆட்சி அமைக்க வேண்டும்...',

'மகளை மணமுடித்த காமாந்தகன் சொறியார்',

'முருகன் இதற்கு நீங்கள் பா ஜ க வில் இருக்க தேவையில்லை.  இப்போவே போய் திருட்டு திராவிட கழகத்தில் சேர்ந்து விடுங்கள். உங்களை டாஸ்மாக் மாநில பா ஜ க தலைவர் ஆக்கினார்களே மோடியும் அமித்ஷாவும் அவர்களை சொல்லவேண்டும்.'

மேலுள்ளவை எல்லாம் கீழ்வரும் காணொளியின் கீழுள்ள பதிவுகள் ஆகும்.

https://www.youtube.com/watch?v=dhdk5MvH_cE&feature=youtu.be

முகநூலிலும் மேற்குறிப்பிட்டது போன்ற கருத்துப் பதிவுகள் வெளிவந்துள்ளன.

பிராமண துவேசம், பிரிவினை வளர்ச்சிக்கு 'proactive - நேர்வினை'யாக‌ ராஜாஜி எந்த அளவுக்கு பங்களித்துள்ளார்? என்பது புரிந்த பின், மேற்குறிப்பிட்ட அதே பாணியில், ராஜாஜியையும் கண்டிப்பார்களா?

இல்லையென்றால், அது என்ன பாணி துவேசம்? என்பதானது, மேற்குறிப்பிட்ட பாணியில் ஈ.வெ.ராவைக் கண்டித்தவர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

ஈ.வெ.ரா, காமராஜர், ராஜாஜி போன்ற தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் இழிவு செய்து கண்டிப்பதானது, கருணாநிதி அறிமுகப்படுத்‌திய சமூக நோயாகும். கருணாநிதி அறிமுகப்படுத்திய‌ ஆளுயரமாலை, மலர்க்கிரீடம் போல, அந்த தி.மு.க பாணி நோயில் தமிழக பா.ஜ.க சிக்கியிருப்பது ஆபத்தான அறிகுறியாகும்.

இதில் இன்னொரு வினோதமும் உண்டு. ஈ.வெ.ராவைக் கண்டித்த இந்துத்வா பிரபலங்கள் எல்லாம், கருணாநிதி, மு.க.அழகிரி, சசிகலா நடராஜன் ஆகிய ஊழல் குடும்பங்களிடம் சரணடைந்தவர்கள் ஆவர். அவ்வாறு சரணடைந்தவர்களின் ஆதரவாளர்களுக்கும், அந்த ஊழல் குடும்பங்களின் ஆதரவாளர்களுக்கும் தரத்தில் வேறுபாடு இருக்க முடியுமா?

1949 முதல் 1967 வரை முரசொலியில் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி வெளிவந்தவைகளைப் படித்தால், தி.மு.கவை விட தரம் தாழ்ந்து, இன்று பா.ஜ.க ஆதரவாளர்கள் பயணிப்பது தெளிவாகும்.

சேலம் நகராட்சித் தலைவராக ராஜாஜி இருந்த போது, ராஜாஜியின் ஆருயிர் நண்பர் ஈ.வெ.ரா ஈரோடு நகராட்சித் தலைவர் உள்ளிட்டு சுமார் 29 பதவிகளில் (29 such as - Honorary Magistrate , District Board, Taluk Board, Urban Bank, Religious Davasthanam (Trust), Public Library, War Recruitment Committee, Association of Agriculturists, Association of Merchants, Mahajana School Committee... etc.) இருந்தார்.

ராஜாஜியின் தூண்டுதலின் பேரில், 1919இல் காங்கிரசில் சேர்ந்த போது, மேற்குறிப்பிட்ட அனைத்து பதவிகளையும் ராஜினாமா செய்தார்.

1919 முதல் 1925 இல் காங்கிரசில் இருந்து வெளியேறும் வரை, ஈ.வெ.ராவின் பேச்சுக்களில் பிராமண துவேசம் வெளிப்படவில்லை. 

சென்னை மாகாண காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வெ.ரா, 1924இல் வைக்கப் போராட்டத்தை தோல்வியில் இருந்து காப்பாற்ற, காந்தியின் அறிவுறுத்தலில் ஈடுபட்டார். அப்போது ராஜாஜி உள்ளிட்ட பல தமிழ்நாட்டு பிராமணர்களும் அப்போராட்டத்திற்கு பல வழிகளில் பங்களித்துள்ளனர். அப்போராட்டத்தில் ஈ.வெ.ராவின் மனைவி நாகம்மையாரும், அவரின் சகோதரியும் பிரமிக்கும் வகையில் பங்களித்துள்ளார்கள். காந்தி ஈ.வெ.ரா குடும்பத்தின் பங்களிப்பைப் பாராட்டி, தமது 'ஹரிஜன்' பத்திரிக்கையில் எழுதி, அது தொகுப்பு நூல்களிலும் வெளிவந்துள்ளது. சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகளை எதிர்க்கும் இன்றைய ஆர்.எஸ்.எஸ் பாணி தேசியவாதியாகவே, ஈ.வெ.ரா வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றார். 

உதாரணமாக,

'இந்து மதம் வேகமாக மறைந்து வருகிறது. மற்ற மதங்கள் எல்லாம் மக்கள் தொகையில் 5, 10, 15 சதவீதம் வளர்ந்து வருவதாகப் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்து மக்கள் தொகை 6 சதவீதம் குறைந்து விட்டது, கடந்த 10 ஆண்டுகளில். இது இந்துக்கள் கலியாணம் செய்து கொள்ளவில்லை, குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளவில்லை என்பதைக் காட்டுகிறதா? இந்துக்களில் ஒரு பகுதியினரை நடத்தும் மோசமான முறை அவர்களை மற்ற மதங்களில் சேரத் தூண்டுகிறது.இந்த நிலைமை நீடிக்குமானால் இந்துக்கள் இல்லாமல் போய்விடுவர்.'-  ஈ.வெ.ரா (பக்கம் 94, வைக்கம் போராட்டம், பழ.அதியமான்)

மேற்குறிப்பிட்ட தகவல்களுக்கான சான்றுகள் 'வைக்கம் போராட்டம்' (பழ.அதியமான்) நூலில் உள்ளன.

காங்கிரசில் ஈ.வெ.ரா முன்னெடுத்த வகுப்புரிமை தீர்மானமானது, பிராமணர்கள் உள்ளிட்டு சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினருக்கும் அவரவர் விகிதாச்சாரத்திற்கேற்ற வகையில் வேலைவாய்ப்புகள் கோரும் வகையில் இருந்தது. சாதி அடிப்படையிலான ஏற்ற தாழ்வுகளை எதிர்க்கும் நோக்கத்தில் தான், அத்தீர்மானத்தை காங்கிரஸ் மாநாடுகளில் முன்னெடுத்தார். அத்தீர்மானம் நிறைவேறி இருந்தால், காங்கிரசை விட்டு ஈ.வெ.ரா வெளியேறி இருக்க மாட்டார். தி.க, தி.மு.க போன்ற கட்சிகள் வந்திருக்காது. 

இன்று பிராமண துவேசம், பிரிவினை  போன்ற திசையில், ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்துக்கக்ளுக்கும் இடம் இருந்திருக்காது.

ராஜாஜி, சத்தியமூர்த்தி, திரு.வி.க உள்ளிட்ட தலைவர்கள் எல்லாம் சமூக நேர்மையில் இருந்து தடம் புரண்டு, எவ்வாறு ஒவ்வொரு காங்கிரஸ் மாநாட்டிலும் (பெரும்பான்மை மூலம் நிறைவேற வாய்ப்பிருந்தும்) அத்தீர்மானத்தை தோற்கடித்தார்கள்?

வ.உ.சி ஈ.வெ.ராவை தமது தலைவராக ஏன் அறிவித்தார்? அவ்வாறு அறிவித்த போதும், பெரியார் படத்தை திறந்து வைத்து வ.உ.சி ஈ.வெ.ராவைப் பாராட்டி பேசியபோதும், அந்த புகழ்ச்சியை எவ்வாறு ஈ.வெ.ரா கண்டித்தார்? என்பதை, உண்மையை அறியும் ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். எனக்கு நேரம் கிடைக்கும் போது, அதற்கான சான்றுகளை எல்லாம் தொகுத்து வெளியிடும் எண்ணமும் உள்ளது.

அகில இந்திய மாநாடுகளில் ராஜாஜி வகுப்புரிமை தீர்மானத்தை ஆதரித்த தகவல்களை எல்லாம் வெளிப்படுத்தி, தமிழ்நாட்டில் மட்டும் அதற்கு ராஜாஜி எதிர்ப்பு தெரிவித்த இரட்டை வேடப் போக்குகளையும் ஈ.வெ.ரா அம்பலப்படுத்தி இருக்கிறார்.

உதாரணமாக,

காக்கிநாடா காங்கிரசிலும் சீமான் தாஸும், கல்கத்தா முகமதியர்களும் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையே முக்கியமாகக் குறித்து சீமான் ராஜகோபாலாச்சாரியார் அவர்களால் பிரேரேரிக்கப்பட்டு இருக்கிறது.' குடிஅரசு 17 01 1926

எனவே சமூக நேர்மையில் இருந்து தடம் புரண்டு, சமூக நீதி கோரிய தீர்மானத்தை காங்கிரசில் தோற்கடிப்பதில் ராஜாஜி 'proactive - நேர்வினை'   பங்களித்திருக்கிறார். அதற்கு , 'reactive - எதிர்வினை'யாகவே,  ஈ.வெ.ரா 1925இல் காங்கிரசை விட்டு வெளியேறினார்.

அதன்பின் 1925இல் குடிஅரசு இதழைத் துவக்கி, தமது பக்கமுள்ள நியாயங்களை வெளிப்படுத்தினார். அதன் பின்னும்  காங்கிரஸ் திருந்தி பயணிக்கவில்லை. 

ஒருவரின் குறைகளை குறிப்பிட்டு அதையும் மீறி அவரைப் பாராட்டுவதற்கான நிறைகளையும் குறிப்பிட்டு ஈவெரா பாராட்டியது; ஒருவரின் நிறைகளைக் குறிப்பிட்டு அதையும் மீறி அவரின் குறைகளை வெளிப்படுத்தி ஈவெரா கண்டித்தது, 1944க்கு முன் வெளிவந்த குடிஅரசு இதழ்களில் படித்து வியந்திருக்கிறேன். அது போல, தமது நிலைப்பாட்டினை எதிர்த்தவர்களின் கருத்துகளையும் குடிஅரசு வெளியிட்ட பெருமை தமிழ்நாட்டில் ஈ.வெ.ராவிற்கு மட்டுமே இருந்தது. ஈ.வெ.ராவிற்குப் பின் துக்ளக் சோ அவ்வாறு பயணித்ததையும் எனது பதிவுகளில் வெளியிட்டிருக்கிறேன். உதாரணமாக, விடுதலைப் புலிகளை எதிர்த்த சோ, தமது துக்ளக் இதழில் விடுதலைப்புலிகளை ஆதரித்து பழ.கருப்பையா எழுதிய கட்டுரையை வெளியிட்டார்.

அவ்வாறு பிரமிக்கும் வகையில் பயணித்த ஈ.வெ.ரா, அண்ணாவின் தொடர்புக்குப் பின், பாதகமான மடை மாற்றத்திற்கு உள்ளானார். உணர்ச்சிபூர்வமான துவேச பாணியில் தமது கருத்துக்களை வெளியிட ஆரம்பித்தார். (‘ராஜாஜி, ஈ.வெ.ரா, அண்ணா மூன்று முக்கிய குற்றவாளிகள்’; https://tamilsdirection.blogspot.com/2019/04/normal-0-false-false-false-en-us-x-none_3.html)

காஷ்மீரில் பிரிவினைக்காக‌ வெளிப்படும் வன்சக்தியை (Hard Power) விட வலிமையாக‌, தமிழ்நாட்டில் பிரிவினைக்காக வளர்ந்ததே, இன்று 'திராவிட ஊழல் பாதுகாப்புக் கவசமான' மென்சக்தியாகும் (Soft Power) என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

ஒரு மாநில முதல்வரைக் கொல்ல சதி செய்ததாக ஊடக வெளிச்சத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மேற்பார்வையில், மத்திய அரசை மெளன சாட்சியாக்கி, பல மாதங்கள் மர்மமான முறையில் சிகிச்சை பெற்று மர்மமாக தமிழ்நாட்டில் மரணித்த அவலமானது, காஷ்மீரில் நடந்திருக்க முடியாது.

ஈ.வெ.ரா 'தமிழ்நாடு தமிழருக்கே' என்ற கோரிக்கையுடன், 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை முன்னெடுத்ததன் விளைவாகவே, மேற்குறிப்பிட்ட மென்சக்தி அபாயமாக வளர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் பிரிவினை கோரிக்கையின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும், ராஜாஜி 'proactive - நேர்வினை'   பங்களித்திருக்கிறார். அதற்கு , 'reactive - எதிர்வினை'யாகவே,  ஈ.வெ.ராவும் பங்களித்துள்ளார். அதனை அடுத்து வரும் பதிவில் பார்ப்போம்.