Sunday, March 18, 2018


                            'பெரியார்' புழுதி ஒழிப்பு (1)


‘சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!’   என்று சொன்னது பகுத்தறிவா? அறியாமையா?


'பெரியார்' ஈ.வெ.ரா, 'மகாத்மா' காந்தி, வீர்சவர்க்கார், குரு கொல்வால்கர் உள்ளிட்ட இன்னும் பல திராவிடர்/திராவிட, தேசிய, இந்துத்வா ஆதரவு தலைவர்களை இன்று நாம் நினைவு கூறுவதற்கு கீழ்வருவதே முக்கிய‌ காரணமாகும்.

அவர்களில் யார்? யார்? சுயலாப நோக்கில் பொதுவாழ்வு வியாபாரிகளாக வாழ்ந்தார்கள்? யார்? யார்? சமூக அக்கறையில் இழப்புகளை சந்தித்து பிரமிக்கும் வகையில் வாழ்ந்தார்கள்? என்ற ஆராய்ச்சியானது, அவர்களை தனிப்பட்ட முறையில் எடை போட்டு, நல்ல முன்மாதிரியாக வெளிப்படுபவைகளை எல்லாம் நம்மை வளர்த்துக் கொள்ளவும், மோசமான முன்மாதிரியாக வெளிப்படுபவைகளை எல்லாம் நாமும் தவிர்த்து, இன்று சுயலாப நோக்கில் வாழும் தலைவர்களை எல்லாம் அடையாளம் கண்டு ஒதுக்கவும், பயன்படுத்திக் கொள்ளலாம். 

உதாரணமாக, அகத்தில் சுயலாப கணக்குகளின்றி, தடைக‌ளைக் கண்டு அஞ்சி ஒதுங்காமல், முன்னேறி அரிய சாதனை படைத்த பின்னும், பாராட்டு, புகழ் போன்றவற்றை தவிர்த்து, தன்முனைப்பின்றி நல்ல முன்மாதிரியாக வாழ்ந்து மறைந்தவர் ஏக்நாத் ரானடே ஆவார். ('கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை; இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு வரும் உண்மைகள்'; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

இன்று நாம் வாழும் சமுகத்தில் உள்ள நல்ல மற்றும் தீய விளைவுகளும், அழிந்து வரும், முளை விடும், வளர்ந்து வரும் கொள்கைகளும், அத்தகையோர் எல்லாம் கடந்த காலத்தில் பொதுவாழ்வில் செல்வாக்கு செலுத்தி வாழ்ந்ததன் விளைவுகள் ஆகும். அவற்றை அடையாளம் கண்டு ஏற்கவும், ஒதுக்கவும் மேற்கொள்ளப்படும் ஆய்வானது, மேலே குறிப்பிட்ட ஆய்வினின்றும் வேறுபட்டதாகும்.

மேலே குறிப்பிட்டவாறு கடந்த கால தலைவர்களை எல்லாம் தனிப்பட்ட முறையில் எடை போடுவதற்கும், அவர்களின் கொள்கைகளை 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தி எடைபோடுவதற்கும், உள்ள வேறுபாட்டினை மறந்து;

இரண்டும் கெட்டானாக எடை போட்டு, அவர்களை பாராட்டுவதும், தூற்றுவதும் அறிவுபூர்வ அணுகுமுறையாகாது. தமிழ்நாட்டில் அந்த அறிவுபூர்வ அணுகுமுறையின்றி, உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் இருப்பதால் தான், விமர்சனம் என்ற பெயரில், சுயலாப நோக்கின்றி, இழப்புகளை சந்தித்து வாழ்ந்த தலைவர்களை எல்லாம் தூற்றும் போக்கும் தொடர்கிறது. அவ்வாறு தூற்றுபவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும், அவர்களை ஒதுக்காமல், அந்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டில் வளர முடியாது. சுயலாப நோக்கில் பொதுவாழ்வு வியாபாரிகளாக வாழ்ந்த/வாழும் தலைவர்களின் 'பாதுகாப்பு கேடயங்களாக',  'அவ்வாறு' தூற்றுபவர்கள் எல்லாம், தெரிந்தும், தெரியாமலும் பங்களித்து வருகிறார்கள்.

எந்த கட்சியாக இருந்தாலும், தாம் ஏற்றுக் கொண்ட தலைவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் 'காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தாமல் நீண்ட காலம் பயணித்தால், 'புழுதிகளை' அவ்வப்போது  அகற்றாத வீடுகளைப் போல, அந்த கட்சிகள் எல்லாம் புழுதிக் குவியலில் சிக்கி, அதன் பின்னும் விழிக்கவில்லையென்றால், அந்த புழுதிக்குவியலே, அக்கட்சிகளின் கல்லறை ஆகி விடும் அபாயத்தை தவிர்க்க முடியாது.

'இசை இயற்பியல்'  (Physics of Music) அணுகுமுறையில் எனது ஆய்வில் பழந்தமிழ் இலக்கியங்களை உட்படுத்தியதன் விளைவாக, ஈ.வெ.ரா அவர்கள் தாய்மொழிவழிக்கல்வி, தமிழ், தமிழ் இலக்கியங்கள் ஆகியவற்றை கண்டித்து இழிவுபடுத்தி, ஆங்கிலவழிக்கல்வியை ஆதரித்ததோடு, ஆங்கிலத்தையே வீட்டு மொழியாக்கும் வகையில் பிரச்சாரம் செய்து  பயணித்ததில் வெளிப்பட்ட தவறுகளை எல்லாம்;

கடந்த சுமார் 20 வருடங்களாக உரிய சான்றுகளின் அடிப்படையில் நான் சுட்டிக்காட்டியும், அதை எந்த பெரியார் கட்சித் தலைவர்களும் பரிசீலித்து மறுப்பு வெளியிட்டதாக தெரியவில்லை. ஆனால், நானறிந்தவரையில் சுயலாப நோக்கின்றி வாழும் 'பெரியார்' ஆதரவாளர்களில் சிலர், அதை பரிசீலித்து ஏற்றுக்கொண்டு, ஈ.வெ.ராவின் கொள்கைகளில் உரிய மாற்றங்கள் செய்ய‌ அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்துவதிலும், ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

'பெரியார்' கட்சிகள் எல்லாம் 'பெரியார் புழுதிக்குவியல்கள்' கல்லறையாகி, தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு காரணமான 'முதன்மை குற்றவாளி ஈ.வெ.ரா' என்று வரலாற்றில் இடம் பெறுவதிலிருந்தும், 'பெரியார்' என்ற வழிபாட்டுச் சிறையிலிருந்தும், ஈ.வெ.ரா அவர்களை, மேலே குறிப்பிட்ட 'பெரியார்' ஆதரவாள‌ர்களின் முயற்சிகள் எல்லாம் மீட்கவும் வாய்ப்பிருக்கிறது.

அந்த நோக்கில் இந்த தொடரை எழுதத் தொடங்கியுள்ளேன்.


'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிவேகமாக அதிகரித்து வருவது பற்றி ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html  ) 'பெரியார் சிலை' உடைப்பிற்குப் பின், அரசியலில் குட்டிக்கரணம் அடித்த, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான, சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து பேரை கெடுத்துக் கொண்ட, கட்சித்தலைவர்கள் எல்லாம் 'உரத்த குரலில்' உணர்ச்சிபூர்வமாக‌ வெளிப்படுத்திய 'பெரியார் ஆதரவு' பேச்சுக்கள் காரணமாக, அவர்களின் பார்வையில் 'யார் அவர்?' என்ற புதிய ஆர்வம் எந்த அளவுக்கு அவர்கள் மத்தியில் வெளிப்பட்டிருக்கிறது? என்பதை நான் ஆராய முயற்சிப்பேன். அவர்களின் பார்வையில், தமிழின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு காரணமான 'முதன்மை குற்றவாளி ஈ.வெ.ரா' என்று பதிவாவது; அல்லது 'பெரியார்' என்ற வழிபாட்டுச் சிறையிலிருந்தும், ஈ.வெ.ரா மீள்வது; ஆகிய இரண்டில் ஒன்று விரைவில் நடக்கப்போவதும் நிச்சயமே.

"பெரியார் ஈ.வெ.ரா பற்றி சர்ச்சை எழுந்துள்ளதால், அவரது கருத்துகள் சிலவற்றை நினைவுபடுத்தியிருக்கிறோம்." என்று துக்ளக் இதழில் குறிப்பிட்டு வெளியிட்டுள்ளவைகளில், "சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!"  என்ற உட்தலைப்பில் வெளியிட்டதையே, முதலாவதாக கொண்டு, இத்தொடரை எழுதுகிறேன்.

ஈ.வெ.ரா அவர்கள் தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி சிலப்பதிகாரம் தொடர்பாக வெளிப்படுத்திய கருத்தினை துக்ளக் ( 17.03.2018 )  வெளியிட்டு (கீழே குறிப்பில்) ;

"மேற்படி கருத்துகளை, அவரது வழி வந்தவர்கள் என்று பெருமையுடன் கூறிக் கொள்வோர் ஏற்கிறார்களா என்பதை தெளிவுபடுத்த வேண்டும்." என்ற அறிவுபூர்வ விவாதத்திற்கான நெருக்கடியைக் கூட்டியுள்ளது.


தமது அறிவுவரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய தெளிவுடன் இருந்தால் தான், நமது புரிதலில் உள்ள குறைபாடுகள் எல்லாம் நமக்கே விளங்கும். ‘ ஈகோ’ (Ego) சிக்கலின்றி, அவற்றை துணிச்சலுடன் ஒப்புக்கொண்டு, சரியான புரிதலுக்கான புலமையை வளர்ப்பதில் ஆர்வமும் உழைப்பும் இருந்தால் தான், எந்த துறையிலும் புலமையாளனாக முடியும். எனது ஆய்வு வெற்றிகளின் இரகசியமும் அதுவேயாகும். (‘கோயம்புத்தூர் PSG Tech, Electronics & Communication Engineering (ECE) dept சார்பில், பல கல்லூரிகளிலும் பணியாற்றும் பொறியியல் ஆசிரியர்களுக்கான‌, Faculty Development Programme-இல், கடந்த 06 – 08 -  2016 அன்று, "Research Perspectives in Music Signal Processing" என்ற தலைப்பில்,  ஒரு நாள் கருத்தரங்கு நிகழ்ச்சியில் செயல் விளக்க உரையாற்றினேன்…… 'முனைவர் பட்டம் பெறுதல்', 'பதவி உயர்வு பெறுதல்' போன்றவற்றை தாண்டி, ஆய்வுகளில் ஈடுபடுதலில் இன்பம் உணர்வதே (Experiencing Joy), ‘எனது ஆய்வுகளின் வெற்றிகளின் இரகசியம் என்பதையும் அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html   & http://tamilsdirection.blogspot.com/2015/11/normal-0-false-false-false-en-us-x-none.html) வாழ்வதற்கு பணம் தேவையே. ஆனால் 'வாழ்வதே பணத்திற்காக' என்ற போக்கானது, நம்மை 'மனித நாய்களாக' மாற்றி விடாதா? (http://tamilsdirection.blogspot.com/2013_10_01_archive.html )


பங்கேற்ற ஆசிரியர்கள் காட்டிய ஆர்வமும்,  துறைத் தலைவரும், பேராசிரியர்களும் வெளிப்படுத்திய ஆர்வமும், எனக்கு  'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறையின் அரங்கேற்றத்தில் நம்பிக்கை தந்தது.( http://musictholkappiam.blogspot.in/ & http://tamilsdirection.blogspot.com/2016/08/linguistics-musical-linguistics.html  )


எனது இசை ஆராய்ச்சியின் துவக்க காலத்தில், தாளம் பற்றிய நூல்களை படித்து விளங்கிக் கொள்வதில் சிரமப்பட்டேன். பின் எனது முனைவர் பட்ட நெறியாளரின் அறிவுரையை ஏற்று மிருதங்க ஆசிரியரிடம் ஒரு வருடம்  முறையாக மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் உலகில் எல்லா மொழிகளிலும் இசைக்கப்படும் பாடலுக்கு தாளக்கருவிகளில் எழுப்பப்படும் கொட்டொலிகளை பொருத்துவது தொடர்பான உலக தாள இலக்கணத்தை நான் சிலப்பதிகாரத்தில் கண்டு பிடித்து, அந்த ஆய்வுக்கட்டுரையானது அமெரிக்காவில் நடந்த சர்வதேச ஆய்வரங்கில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ( “Percussion Grammar in Ancient Indian Music”  (International Conference on Arts & Humanities, HawaII, USA, Jan, 2006)

இந்தியாவில் இப்போது கர்நாடக இசை, இந்துஸ்தானி இசை உள்ளிட்ட இசைகளுக்கு சுருதி சேர்க்க உதவும் சுருதிப்பெட்டியானது, மேற்கத்திய இசைக்கான சர்வதேச சுருதித் தீர்மானிப்பின் (world Pitch Standard) அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும். வெள்ளைக்காரர் வருகைக்கு முன், இந்திய இசைகளில் என்ன சுருதித் தீர்மானிப்பு (Pitch Standard) இருந்தது? என்பதை எனது முனைவர் பட்ட ஆய்விற்கு உட்படுத்தினேன். விபுலானந்த அடிகளின் 'யாழ் நூலில்' அவர் மேற்கொண்ட கணக்கீடுகளில் இருந்த தவறுகளை எல்லாம் அடையாளம் கண்டு, சிலப்பதிகாரத்தின் துணையுடன் உரிய சான்றுகளின் அடிப்படையில் சரியாக கணக்கிட்டபோது, இன்றுள்ள உலக சுருதித் தீர்மானிப்பு மதிப்புக்கு நெருக்கமாக இருந்ததானது எனக்கே நம்பமுடியாத அதிசயமாக தெரிந்தது.

அது மட்டுமல்ல சுர இசைக் கருவிகள் மட்டுமின்றி, தாளக் கருவிகளையும் எவ்வாறு சுருதி சேர்ப்பது? என்ற வழிமுறைகளையும் சிலப்பதிகாரத்தில் கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன். சுருதி சேர்த்தல் என்பது 'நல்லிசை நிறுத்தல்' என்று அழைக்கப்பட்டதும் அந்த கண்டுபிடிப்புகளில் அடங்கும். (‘தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள் ' – 2009; சேகர் பதிப்பகம் சென்னை) இசையில் 'நிறுத்தல்' என்றால் என்ன? என்பதை தமிழ் இசையியல் (Tamil Musicology) துணையின்றி தமிழ்ப்புலமையாளர்களால் விளங்கிக் கொள்ள முடியாது. 
 
சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் துணையுடன் உலகில் எந்த மொழியிலும் இசைக்கப்படும் பாடலின் சுரங்களை இணைக்கும் 'இசை இழை' (Musical Thread) பற்றி கண்டுபிடித்து வெளியிட்டுள்ளேன். ( ‘Sangeet Natak’ VolXLII, Number 3 , 2008) கணினி இசை தொடர்பான ஆய்வுகளுக்கு இக்கண்டுபிடிப்பு மிகவும் உதவக்கூடியதாகும்.

சிலப்பதிகாரம் விளக்கியுள்ள 'சீர்', 'தூக்கு', 'பட்டடை' போன்ற இசையியல் (Musicology)  சொற்கள் எல்லாம், ' திருக்குறளில் இசையியல்' (Musicology in Thirukkiural) பற்றிய எனது ஆய்வுக்கு திறவுகோல்கள் போல் துணை புரிந்துள்ளன.

சிலப்பதிகாரத்தில் வரும் 'ஆய்ச்சியர் குரவை'யின் துணையுடன், பெரியபுராணத்தில் இடம் பெற்ற ஆனாயநாயனார் புராணத்தில் குழலைப் பற்றிய பிரமிப்பூட்டும் இசையியல் (Musicology) தகவல்கள் துணையுடனும், ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளரின் உதவியுடன், தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் சிவன் கோவிலில் 'நமசிவாய' தொடர்புள்ள கல்வெட்டானது, இசைக் கல்வெட்டு என்பதையும், அந்த ஐந்து எழுத்துக்களும் மோகன ராகத்தில் வரும் ஐந்து சுரங்களுடன் தொடர்புடையவை என்பதையும், சுருதி சுத்தமான வாய்ப்பாட்டு பயிற்சிக்கு அந்த கல்வெட்டு துணை புரியும் என்பதையும் வெளியிட்டுள்ளேன்.
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2447 )

அறிவியல் தொழில்நுட்ப துறைகளில் உள்ளவர்கள் எல்லாம் பழந்தமிழ் இலக்கியங்களில் புதையலை எவ்வாறு தேடுவது? என்ற இரகசியத்தையும் நான் வெளிப்படுத்தியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2444   )  

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களில் இருந்து, புதிய தொழில் வியாபார வாய்ப்புகளை உருவாக்கவல்ல கண்டுபிடிப்புகள் எல்லாம் வெளிப்பட்டு வரும் காலம் இதுவாகும். (http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

தமிழில் மட்டுமே புலமையுள்ளவர்களால் மேலே குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளை விளங்கிக் கொள்ள முடியாது;

சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களிலும் புராணங்களிலும் மூடநம்பிக்கைகள் இருப்பதாக .வெ.ரா அவர்கள் வெளிப்படுத்தியதை எல்லாம் மறுஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியத்தையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html & 'மேற்கத்தியப்பகுத்தறிவு' (Western Rationalist) அணுகுமுறையின் வரைஎல்லைகள் (Limitations)’; http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

தமிழில் 'இனம்' என்ற சொல்லின் பொருளானது காலனிய சூழ்ச்சியில் திரிந்தது தெரியாமல், அதில் சிக்கி,.வெ.ரா அவர்கள் பயணித்ததால், அவரது அணுகுமுறை எவ்வாறு தவறானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.com/2016/01/ ) அந்த 'ஆரியதிராவிடர்’ அணுகுமுறையே, சிலப்பதிகாரம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் தொடர்பான அபத்தமான முடிவுகளை, அவர் வெளியிட காரணமானது.

எனது ஆராய்ச்சிகள் மூலம் புதிய வியாபார வேலை வாய்ப்புகள் உருவாவதற்கும்,  பழந்தமிழ் இலக்கியங்களை நோக்கி உலகில்  உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாம் ஆய்வுப் படையெடுப்பு தொடங்குவதற்கும்;

'பெரியார்' பிம்ப வழிபாட்டை ஊக்குவித்து, 'பார்ப்பன எதிர்ப்பு', 'தமிழ் உணர்வு' போன்றவைகள் எல்லாம் பொதுவாழ்வு வியாபாரிகளின் முதலில்லாத மூலதனங்களாக்கி ;

வாலாட்டி, அடிவருடும் போக்குகளை ஊக்குவிக்கும்,, அரசில் செல்வாக்குள்ள ஊழல்வாதிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவிக்கும், தலைவர்கள் ஆதிக்கத்தில் இருந்து, தமிழ்நாடானது விடுதலை பெற்றாக வேண்டும்.

அந்த விடுதலைக்கு 'பெரியார் புழுதிகளை' அகற்றுவதே முதல் படியாகும்.

அந்த பொதுவாழ்வு வியாபாரிகளாக இன்று நம்மிடையே வாழ்பவர்கள் யார்? யார்? என்று கண்டுபிடிக்க, .வெ.ரா தந்துள்ள திறவுகோலை பொதுஅரங்கேற்றுவதும் அந்த முயற்சிக்கு பரிமாற்ற (Complimentary) உதவி புரியும். (http://tamilsdirection.blogspot.com/2016/10/blog-post.html )

'பெரியார்' ஆதரவாளர்களில் தங்கள் குழந்தைகளின் ரம்பக்கல்வியை ஆங்கிலவழியில் படிக்க வைத்து, அந்த குழந்தைகளின் இயல்பான புலன் அறி திறன் வளர்ச்சியை (Cognitive Skills Development) கெடுத்த 'முட்டாள்கள்' எல்லாம், (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html) 'பெரியார் புழுதி'யில் சிக்கியவர்களே என்று எச்சரித்து, அந்த சமூக தற்கொலைப் போக்கிலிருந்து, அவர்களை மீட்பதும், இத்தொடரின் விளைவுகளாக வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

குறிப்பு:  சிலப்பதிகாரம், தேவடியாள் மாதிரி!

“ ...இந்த சிலப்பதிகாரம் எப்படி அமைந்திருக்கிறது என்றால், ஆபாச மூட நம்பிக்கை ஆரிய கருத்துக்களைக் கொண்டு, நல்ல தமிழ் அமைப்பு உடையதாகக் கொண்டு தேவடியாளுக்குச் சமமாக - அதாவது தேவடியாள் எப்படி பார்ப்பதற்கு அலங்காரமாய் இருப்பாளோ, ஆனால் உள்ளே போய் பார்த்தால் உள்ளமெல்லாம் வஞ்சகம் நிறைந்தும், உடலெல்லாம் நோய் கொண்டும், வளையல் அணியால் மக்களை ஏய்த்துப் பிழைப்பதாகக் காணப்படுகின்றாளோ - அதுபோலத்தான் இந்த சிலப்பதிகாரம் ஆகும். “ - ‘விடுதலை’ (28.7.51)



மனித உரிமை, பெண் உரிமை தொடர்பான மேற்கத்திய குறிப்பாயத்தில் (Western Paradigm) சிக்கி, .வெ.ரா அவர்களும், இன்றைய முற்போக்காளர்களும் பயணிக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html)  மேற்கத்திய சமூக வரலாற்றில் பெண்களின் நிலைக்கும், காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண்களின் நிலைக்கும் இருந்த வேறுபாடுகள் பற்றிய சான்றுகளை அறியாமல், விடைக்கு கணக்கை உணர்ச்சிபூர்வமாகசரி செய்யும் தவறான போக்கில் இனியும் பயணித்தால், இன்றைய மாணவர்களின் படித்த இளைஞர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதை தவிர்க்க முடியுமா?

No comments:

Post a Comment