Wednesday, March 21, 2018


                  'பெரியார்' புழுதி ஒழிப்பு (2)


இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க, 'ஆண்- பெண் உடலுறவு' போராட்டம் நடத்துவார்களா?

 

'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' உருவாக்கி, தமிழ்நாட்டை சீரழிக்க தான் .வெ.ரா அவதரித்தாரா?


மனித உரிமை, பெண் உரிமை தொடர்பான மேற்கத்திய குறிப்பாயத்தில் (Western Paradigm) சிக்கி, .வெ.ரா அவர்களும், இன்றைய முற்போக்காளர்களும் பயணிக்கிறார்களா? (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html)  மேற்கத்திய சமூக வரலாற்றில் பெண்களின் நிலைக்கும், காலனியத்திற்கு முன் தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண்களின் நிலைக்கும் இருந்த வேறுபாடுகள் பற்றிய சான்றுகளை அறியாமல், விடைக்கு கணக்கை உணர்ச்சிபூர்வமாகசரி செய்யும் தவறான போக்கில் இனியும் பயணித்தால், இன்றைய மாணவர்களின் படித்த இளைஞர்களின் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாவதை தவிர்க்க முடியுமா?’ என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html     

பெரியாரின் பெண்ண‌டிமை தொடர்பான கருத்துக்களையும், வெளிவந்துள்ள  (published)  அறிவியல் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில், ஆர்வமுள்ளவர்கள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?’; http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html )

இவ்வியாச விவகாரத்தின் ஜீவநாடி ஆண் உரிமை என்ன? பெண் உரிமை என்ன? இவ்விரண்டிற்கும் ஏன் வித்தியாசம் இருக்க வேண்டும்? என்பதேயாகும்.‍‍‍‍‍‍...........மனித சமூக வளர்ச்சிக்கு இரு பாலார் குணங்களும் சமமாக இருக்க வேண்டும் என்பதே நமது கருத்தாகும்.இருபாலாருக்கும் சமமாகவே இருக்க இயற்கையில் இடமும் இருக்கின்றது." 'பெண் ஏன் அடிமையானாள்?' பக்கம் 23 - 24

பெரியார் மேலே எழுப்பியுள்ள கேள்விகள் தொடர்பான அறிவியல் ஆய்வு முடிவுகளில் சில கீழே உள்ளன

மனிதர்களின் செயல்பாடுகளுக்கான ஊற்றுக்கண்களாக அவர்கள் உணரும் தேவைகள் (Needs), அந்த தேவைகள் எல்லாம் அவர்கள் மனதில் தூண்டும் நலன்கள் (Interests), அந்த நலன்கள் தூண்டும் அவர்களின் செயல்பாடுகள்;

ஆகியவை எல்லாம் மனிதர்களின் மூளையில் முளை விட்டு வளர்பவை ஆகும்.

ஆண்களின் மூளைக்கும் பெண்களின் மூளைக்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் எல்லாம் அறிவியல் ஆய்வுகள் மூலம் வெளிவரத் தொடங்கியுள்ளன.

How Men's Brains Are Wired Differently than Women's?
male brains had more connections within hemispheres, whereas female brains were more connected between hemispheres;
male brains may be optimized for motor skills, and female brains may be optimized for combining analytical and intuitive thinking;

The researchers surveyed 1,820 faculty, postdoctoral fellows and graduate students, men and women, from 30 disciplines at high-profile public and private research universities nationwide. The study, "Expectations of brilliance underlie gender distributions across academic disciplines," will be published Jan. 16 in the journal Science.
Researchers measured academics' belief that success in their own disciplines depended on raw brilliance. The researchers concluded that what they call "field-specific ability beliefs" ultimately put women at a disadvantage because of stereotypes that they lack innate intellectual talent, said Sarah-Jane Leslie, the study's lead author and the Class of 1943 Professor of Philosophy at Princeton. This emphasis on brilliance exists almost as a secret password that precludes the value of other traits, such as hard work, passion, dedication or diligence. In this video, Leslie discusses the study.
ஒரு அணுவில் உள்ள பல எலெக்ட்ரான்களில் ஒவ்வொன்றும் தனித்துவமானவை (Unique) என்பதையும், மற்ற எலெக்ட்ரான்களுடன் சமமற்றவை என்பதையும்;

குவாண்டம் எந்திரவியலில் (Quantum Mechanics) 'பவுலியின் ஒதுக்குத் தத்துவம்' (Pauli’s Exclusion Principle) தெளிவுபடுத்தியுள்ளது.

அது போல மனிதர்களிலும் எந்த இரண்டு மனிதர்களும் எல்லா வகையிலும் சமமாக இல்லை. இரட்டையராக பிறக்கும் குழந்தைகளிடையே கூட வேறுபாடுகள் இருப்பதானது ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன.

எனவே ஆண்கள் மற்றும் பெண்களிடையே மேலே குறிப்பிட்ட வேறுபாடுகள் மட்டுமில்லாமல்;

ஆண்களுக்குள்ளேயும், பெண்களுக்குள்ளேயும் எல்லா வகையிலும் சமமான இரண்டு ஆண்களோ, அல்லது இரண்டு பெண்களோ இருக்க முடியாது.

மனித சமத்துவம் என்பதானது பிறப்பு முதல் இறப்பு வரை சமமான வசதி வாய்ப்புகள் என்ற இலட்சிய நோக்கில் முன்வைக்கப்படுவது சரியே ஆகும்.

அறிவியலில் இலட்சிய எந்திரம் (Ideal Mechine) என்பதானது இதுவரை அடைய முடியாத இலட்சியமாக இருந்தாலும்;

அந்த இலட்சியத்தை நோக்கியே அறிவியல் ஆராய்ச்சிகள் முன்னேறி, செயல்திறன் (Efficiency)  அதிகரித்த எந்திரங்கள் உருவாகி வருகின்றன.

அந்த ஆராய்ச்சிகள் எல்லாம் தாம் சந்திக்கும் தடைகளை எல்லாம் அடையாளம் கண்டு, சாத்தியமான வழிகளையும் அறிவுபூர்வமாக கண்டு முன்னேறி வருகின்றன. மாறாக அந்த தடைகள் மீது கோபப்பட்டு, உணர்ச்சிபூர்வமாக அணுகி, 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில் முயற்சிகள் நடந்திருந்தால், அது பின்னேற்றம் ஆகவே முடிந்திருக்கும்.

அது போலவே மனித சமத்துவம் பற்றிய மேலே குறிப்பிட்ட இலட்சிய நோக்கில் முன்னேற வேண்டுமானால்;

அறிவியல் ஆய்வுகள் உணர்த்தியுள்ள இயற்கையான தடைகளை எல்லாம் அறிவுபூர்வமாக அடையாளம் கண்டு, அந்த தடைகள் மீது கோபப்படாமல்;

உணர்ச்சிபூர்வமாக அணுகி, 'எடுத்தேன், கவிழ்த்தேன்' என்ற பாணியில் முயற்சிகள் மேற்கொள்ளாமல்;

அறிவுபூர்வமாக முயற்சிகள் மேற்கொண்டால் மட்டுமே, உண்மையான முன்னேற்றம் காண முடியும்


உண்மை, நேர்மை, புலமை உள்ளிட்ட நற்பண்புகள் பற்றி எல்லாம் கவலைப்படாமலும், அகத்தில் 'சுயலாப கணக்குகளுடன் குறுக்கு வழி வாய்ப்புகளுக்கு அலையும் சிற்றின மனிதர்கள் யார்?' என்று ஆராயாமலும், 'மனித சமத்துவம்' என்ற பேரில் 'அனைவரையும்'(?) சமமாக நடத்தும் போக்கானது, அவ்வாறு நடத்தியமனிதருக்கும், சமூகத்திற்கும் நம்பமுடியாத அளவுக்கு தீங்காக முடியும்;


என்ற சமூகவியல் ஆய்வுக்கான சமூக பரிசோதனைக் கூடமாக தமிழ்நாடு உள்ளது. ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )
தமது அறிவுவரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி, .வெ.ரா அவர்கள் உணர்ச்சிபூர்வமாக, 'எடுத்தேன், கவிழ்த்தேன்' பாணியில் 'தீவிரமாக'(?) முயற்சிகள் மேற்கொண்டதால்;

இன்று 'இட ஒதுக்கீடில்' முன்னேறி மருத்துவராக, பொறியாளராக, பேராசிரியராக, ..எஸ், .பி.எஸ், இன்னும் பல உயர்பதவிகளில் உள்ளவர்களின் குடும்பப் பிள்ளைகளும், அடுத்த முதல் தலைமுறையின் வாய்ப்புகளை எல்லாம் மனசாட்சியின்றி, 'சமூக நீதி' என்ற பேரில் பறிப்பதோடு மட்டுமின்றி, ஆங்கில வழி 'விளையாட்டுப் பள்ளிகளில்' சேர்ந்து, 'மம்மி, டாடி' திரிந்த மேற்கத்திய பண்பாட்டில் சிக்கி, இன்று தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாத பள்ளி, கல்லூரி மாணவர்கள் 'அதிவேகமாக' அதிகரிக்க;

'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' உருவாக்கி, தமிழ்நாட்டை சீரழிக்க தான் .வெ.ரா அவதரித்தாரா? என்ற கேள்வி எழுவதை, அறிவுபூர்வமாக எவராலும் மறுக்க முடியுமா



கிரானைட், தாதுமணல், ஆறுகள் ஏரிகள் உள்ளிட்ட கனிவளங்கள் ஊழல் சுனாமியில் சிக்கியது பற்றி மூச்சு விடாமல், சீன இறக்குமதி உள்ளிட்ட வாழ்வாதாரங்களை ஒழிக்கும் போக்குகள் பற்றிய கவலையின்றி; வறட்டுத்தனமாக 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' என்று புறத்தில் வெளிச்சம் போடும், 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகள் எல்லாம்,  அந்த சீரழிவின் சாட்சிகளாக வலம் ருகிறார்களா? ( http://tamilsdirection.blogspot.in/2018/03/2.html  )


தமிழ்நாட்டின் வரலாற்றில் பெண் கல்வி, அரசவையில் அமைச்சர்களாக, புலவர்களாக பெண்கள் இருந்தது தொடர்பான சான்றுகளை, மேற்கத்திய வரலாற்றில் அவை தொடர்பான சான்றுகளுடன் ஒப்பிடுவதும் பலனளிக்கும். இன்றும் ஒரே பணியில் உள்ள ஆண்களுக்கும் பெண்களுக்கும் இந்தியாவில் ஊதியத்தில் வேறுபாடு கிடையாது. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இன்றும் அந்த பிரச்சினை எவ்வாறு உள்ளது? என்று ஆய்வதும் பலனளிக்கும்

செவிலியர் (nursing) பணியில் பெண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, ஆண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; மூட்டை தூக்குதல் போன்ற உடலுழைப்பு பணிகளில் ஆண்களுக்கு இப்போதுள்ள பெரும்பான்மை எண்ணிக்கையை, பெண்களுக்கு 50% அமுல்படுத்த குறைப்பது தவறு; என்பது என் கருத்து.

கட்டுப்பாடற்ற மனித உரிமை என்பது, நீண்ட வரலாற்றின் அடிப்படையில் உருவான மனித உரிமையின் வரையறையையும், வரை எல்லைகளையும் மீறியதாகும்.

ஒரு குடும்பத்தில் கணவன் மனைவி தமக்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது குடும்பத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; தமது சமூக வட்டத்திற்குள் மட்டும் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; பொதுவில் பேசிக் கொள்ளும் பேச்சுரிமை; என்று பேச்சுரிமை பல தளங்களில் செயல்படுவதாகும். அந்தந்த சமூக பாரம்பரிய, பண்பாடுகளின் அடிப்படையில் அவை செயல்படுவதாகும். .நாவின் மனித உரிமைகள்,  அந்த பாரம்பரிய, பண்பாடுகளைக் கணக்கில் கொண்டே, ஒவ்வொரு சமூகத்திலும் செயல்பட வேண்டும். மாறாக வேறொரு சமூகத்தின் வரை எல்லைகள் அடிப்படையில் செயல்படுவது என்பது, அந்த சமூகத்தின் மீதான மனித உரிமைத் தாக்குதலாகவே அமையும். மேற்கத்திய நாடுகளில் ' பூங்கா- park- ' போன்ற பொது இடங்களில் ஆணும் பெண்ணும் கட்டிப்பிடித்து புரள்வது அவர்களுக்குள்ள உரிமை. அதைப் பார்த்து, இந்தியாவில் அதை அனுமதிக்க முடியுமா? அந்த நோயில் சிக்கி, இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க, ஆண்- பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா? காலனியத்திற்கு முன் நமது பாரம்பரிய, பண்பாட்டு, கால வசதிக்குட்பட்ட 'இந்திர விழா' எவ்வாறு மறைந்தது? உலகமயமாதல் போக்கில், 'நுகர்வு கலாச்சாரத்தை' ஊக்குவிக்கும் ' வாலன்டை டே' என்ன சூழ்ச்சியில் 'காதலர் தினம்' என்று அறிமுகமானது?

அதன் வளர்ச்சிக்கும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் அதிகரித்து வரும் கீழ்வரும் நோய்களின் வளர்ச்சிக்கும் தொடர்பு உண்டா? 'காதல்' என்ற பெயரில் 'அனுபவித்து' விட்டு, கைவிடப்பட்டு, அது தொடர்பான கொலை, தற்கொலைகளில் சிக்காமல், குழந்தையுடன் ஏழ்மையில் உழல்பவர்கள் பற்றி, 'காதலர் தினம்' ஆதரவாளர்கள் கவலைப்பட்டு, ஏதேனும் நிவாரண முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்களா?அக்குற்றங்களில் ஈடுபட்ட 'அறிவுஜீவிகள்',  தமது திறமைகள் மூலம் 'கவிதை, கட்டுரை, கதைகள்' எழுதி, வசதியாக வாழ்ந்து, அந்த நோய்களின் வளர்ச்சிக்கு பங்காற்றி, 'எரிகின்ற குடிசை'யில் சிகிரெட்டை பற்றவைத்து,புகைத்து, இன்புறுகிறார்களா? அத்தகையோர் "தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணமும், நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள்,கிரனைட், தாது மணல், ஆற்று மணல் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்படுவது"ம் பற்றி கவலைப்பட்டு ஏதேனும் 'படைத்திருக்கிறர்களா'?

"பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே, தற்கொலை, கொலை, கொள்ளை,வன்முறை, குடும்பங்களில் கொலை, தற்கொலை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள், திருமணமான சில வருடங்களுக்குளேயே விவாகரத்து அதிகரிப்பு உள்ளிட்ட குடும்ப சீர்க்குலைவுகள் அதிகரிப்பு ஆகிய அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடைய சமூக நோய்கள் ஆகும். இவை தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றைப் பாதித்துள்ள கடுமையான நோயின் வெளிப்பாடுகள் ஆகும்" (:'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்';
உலகில் உள்ள சமூகங்கள் வெவ்வேறு பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் வெவ்வேறாக இருக்கும் போது, மனித உரிமைக்கான வரையறைகளும், வரை எல்லைகளும் வெவ்வேறாக இருப்பதில் வியப்பில்லை.  மேற்கத்திய கிறித்துவ உலகில், அந்த சமூக வரலாற்றில் உருவான 'மனித உரிமை' கோட்பாட்டை, இந்தியாவில் 'இறக்குமதி' செய்து, இந்திய சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில், இயற்கையுடனும், சமூகத்துடனும் ஒரு மனிதருக்குள்ள தொடர்பைத் துண்டித்து, 'மனித உரிமை' என்று முன் வைப்பது சரியா? என்பதும் ஆய்விற்குரியதாகும். https://www.youtube.com/watch?v=aEh43aEOoLI

காலனி ஆட்சியில் அடிமைப்பட்ட நாடுகளில், இரு வேறு நாடுகளின் வரையறைகளும், வரை எல்லைகளும் ஒரு வகையான மோதலில் சிக்க வாய்ப்புண்டு. இந்தியாவில் அந்த பாதிப்புகளே காலனிய மன நோயாளிகளையும், திராவிட மன நோயாளிகளையும் உருவாக்கியது பற்றி ஏற்கனவே பார்த்தோம். (’ 'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’;
'மாதொரு பாகன்' நாவலில், திருச்செங்கோடு பகுதியில், பெருமாள் முருகன் குறிப்பிட்ட தகவல்கள் ஆதாரபூர்வமானவையா? இல்லையா? என்பது ஆய்விற்குரியது. ஆதாரபூர்வமானவையென்று வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும், அதை நாவல் மூலம் வெளிப்படுத்தி, அங்கு வாழும் மக்களின் மரியாதைக்கும், கெளரவத்திற்கும் களங்கம் கற்பிப்பது, உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் மீறல் ஆகாதா? பெருமாள் முருகனின் எழுத்துரிமைக்கு, உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளின் வரை எல்லைகள் பொருந்தாதா?

இந்திய அரசியல் சட்டத்தில் அடிப்படை உரிமைகளுக்கான 'அறிவுபூர்வமான கட்டுப்பாடுகள்' (reasonable Restrictions),  மேலேக் குறிப்பிட்ட வரை எல்லைகளின் அடிப்படையிலேயே உருவானவை, என்பதை, அது தொடர்பான இந்திய அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் தெரிவிக்கின்றன.’ ( http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html )


மேற்கத்திய முற்போக்கு கூடாரமாக விளங்கும் புதுடெல்லி ஜேஎன்யூ  (JNU) பல்கலைக்கழகத்தில், ஆய்வு மாணவர்களான பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, சட்டபூர்வமாக தண்டிக்கப்பட்ட ஆசிரியர்களில் பலர், அங்கு படித்த காலத்தில் கம்யூனிஸ்ட் சார்பு மாணவர் சங்க பொறுப்பாளர்களாக இருந்துள்ளார்கள். (https://swarajyamag.com/politics/a-wave-of-sexual-harassment-and-assault-allegations-sweeping-the-communist-bastion-of-jnu  )

.வெ.ரா அவர்கள் மேற்கத்திய 'முற்போக்கு' அடிமையாகி, 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' ( சிலப்பதிகாரம்; அரங்கேற்று காதை 65) போக்கிலிருந்து தடம் புரண்டு, காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் சங்க காலம் முதல் வந்ததை எல்லாம் 'கேடென' கருதி, தாய்மொழி தமிழ், தமிழ் இலக்கியங்களை எல்லாம் இழிவுபடுத்தி ஒதுக்கியதன் தவிர்க்கவியலாத விளைவுகளே;

தமது கொள்கையில் சிக்கியவர்களை எல்லாம், தாய்மொழி அடிப்படையிலான‌ 'அடையாள இழப்புக்கு' உட்படுத்தி, அதன் விளைவான உலக ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளபலவகை போதைகளுக்கு ஆட்படும் வாய்ப்புகளைக் கூட்டி, அதன் தொடர்விளைவாக'திராவிட' ஊழல் திமிங்கிலங்களுக்கு 'ஒட்டுண்ணி பெரியார்' கவசங்களாகவும், 'பணத்துக்கு வாலாட்டி தன்மானம் இழந்து வாழ்வியல் புத்திசாலிகளாகவும்'(?), வாழும் தமிழர்கள் எல்லாம், ஆங்கிலவழிக்கல்வி வியாபார சமூக முதுகெலும்பாகி;

'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்கள்எண்ணிக்கையானது அந்த ஆங்கிலவழிக்கல்வி மூலமாக அதிவேகமாக அதிகரித்து, தமிழ் வேரழிந்த நாடாக தமிழ்நாடு வெகு சீக்கிரம் மாறும் அபாயத்தில் சிக்கி விட்டது; 'போர்க்கால' அடிப்படையில் 'தமிழ்வழிக்கல்வி மீட்பு' மூலம் 'தமிழ்வேரை மீட்கும்' அவசியத்தை உணர்த்தி.

'பெரியார்' .வெ.ரா போன்ற தலைவர்களின் பங்களிப்பினை, சமூக வளர்ச்சி நோக்கில் விருப்பு வெறுப்பற்ற அறிவுபூர்வமான ஆய்வுகளுக்கு உட்படுத்தி, உரிய பாடங்கள் கற்று முன்னேறுவதே புத்திசாலித்தனமாகும்.

'இன்று நாம் வாழும் சமுகத்தில் உள்ள நல்ல மற்றும் தீய விளைவுகளும், அழிந்து வரும், முளை விடும், வளர்ந்து வரும் கொள்கைகளும், அத்தகையோர் எல்லாம் கடந்த காலத்தில் பொதுவாழ்வில் செல்வாக்கு செலுத்தி வாழ்ந்ததன் விளைவுகள் ஆகும்.' என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_17.html     

அந்த நோக்கிலேயே;

இந்தியாவில்,  'முத்தப் போராட்டம்' நடத்துபவர்கள், அடுத்து பொது இடங்களில் எல்லோரும் பார்க்க, ஆண்- பெண் உடலுறவு போராட்டம் நடத்துவார்களா?

'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' உருவாக்கி, தமிழ்நாட்டை சீரழிக்க தான் .வெ.ரா அவதரித்தாரா?

என்ற கேள்விகளை எல்லாம் 'பெரியார்' கட்சிகள் இருட்டில் இனியும் தள்ளினால்;

'பெரியார் புழுதிக்குவியலே' அக்கட்சிகளின் கல்லறை ஆகி விடும் அபாயத்தை தவிர்க்க முடியாது.

ஏற்கனவே தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' மற்றும் 'சாதி' போன்ற சொற்கள், எந்த காலக்கட்டத்தில், காலனி சூழ்ச்சியில் பொருள் திரிதலுக்கு (Semantic distortion) உள்ளானது? அந்த பொருள் திரிதலுக்கும், அந்த திரிதலில் .வெ.ரா அவர்கள் பயணித்ததால், சமூகத்தில் ஏற்பட்ட பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass) திரிதலுக்கும், உள்ள தொடர்பு பற்றி, ஆர்வமும் உழைப்பும் உள்ள எவரும் முனைவர் பட்ட ஆய்வினை மேற்கொள்ள முயன்றால், அவருக்கும் நான், என்னால் இயன்ற உதவிகளை, புரிய இயலும்; 'திருச்சி பெரியார் மையம்' மூலம், நான் அடையாளம் கண்ட 'பெரியார் சமூக கிருமிகள்' வெளிப்படுத்தியுள்ள‌, அந்த தொடர்பு பற்றிய வெளிச்சமும் கிடைத்துள்ள பின்னணியில்.’ ( ‘பொருள் சிதைவில் (Semantic Distortion) சிக்கி பயணித்த; 'பெரியார்' .வெ.ராவின் நாத்தீகம்’; http://tamilsdirection.blogspot.in/2017/09/semanticdistortion.html )



'தமிழ்வழிக்கல்வி மீட்சி' என்பதானது, தாய்மொழி அடிப்படையிலான‌ 'அடையாள இழப்பில்' சிக்கிய தமிழர்களின் அடையாள மீட்பையும், அந்த அடையாள இழப்பின் காரணமாக விளைந்த சமூகத்தில் ஏற்பட்ட 'பொது ஒழுக்க திசை காட்டி (ethical compass)' திரிதலில் இருந்து தமிழ்நாட்டை மீட்பதையும் உள்ளடக்கியதாகும்.

குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளைக் காவு கொடுத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வரும், 'வாழ்வியல் வெற்றியாளர்களை' அடையாளம் கண்டு ஒதுக்கும் பொது விவாதத்தை, கவிஞர் தாமரை தூண்டியுள்ள 'விவாதத் தீ'யை உரிய முறையில் பயணிக்கச் செய்தால், தமிழ், தமிழர், தமிழ்நாடு ஆகியவற்றின் மீட்சிக்கான சமூக ஆற்றலானது, தவறான உள்மறை இரகசியத்தடைகளிலும், குடும்ப சீர்க் குலைவுகளிலும் விரயமாவதைத் தடுத்து, மீட்சி திசையில் பயணிக்க வழி ஏற்படும். தவறினால், அடுத்த சில வருடங்களில் அவ்விவாதத்தைத் தவிர்க்கும், 'தமிழ் உணர்வு, பகுத்தறிவு' அமைப்புகள் சுவடின்றி உதிர்ந்து போவதைத் தவிர்க்க முடியாது.



வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல  திருக்குறள் 4



தனக்கே தலைமை, செல்வம், செல்வாக்கு போன்ற விருப்பும்(desire), தனது சுயநலன்களுக்குப் பயன்படாதவர்கள் மீது வெறுப்பும், என்பது போன்ற தனிமனித பலகீனங்கள் இல்லாத பண்பினை அகவயபடுத்தியவர்களைக் (internalize)  கொண்ட  இயக்கமும், தலைமையுமே, இனி தமிழ்நாட்டில் எடுபட முடியும்.’ (http://tamilsdirection.blogspot.in/2015/03/12.html


குறிப்பு


‘'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்வுபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html )


எதிர் (Negative) உணர்வுபூர்வ போக்குகளுக்கு, 'அறிவுபூர்வ நியாயம்' கற்பிக்கும் அறிவு ஜீவிகளும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட அறிவுஜீவிகள், உண்மையில், தமிழ்வழிக்கல்விக்கு நேரும் ஆபத்துகள் பற்றி கவலைப்பட்டதுண்டா? அல்லது தமிழ் என்ற கப்பல் மூழ்கும்போது, தப்பிக்கும் 'எலிகள்' போல, 'தமிழ் வாழ்க; இனமானம் காப்போம்' என்று தப்பிக்கும் 'எலிகளின்' குரலில் 'ஊளை'யிடுகிறார்களா? என்ற ஆய்வுக்கும் தேவை எழுந்துள்ளது.’( http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html ) தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழி 'விளையாட்டுப்பள்ளியில்' சேர்த்து படிக்க வைத்து, மேற்கத்திய வழிபாட்டு போக்கில் நன்கு செட்டில் செய்து, பயணிக்கும் தமிழ் ஆர்வலர்களின் 'உணர்ச்சிபூர்வ' பேச்சுக்கள் எல்லாம், அந்த தப்பிக்கும் 'மனிதஎலிகளின்' நரித்தனமான‌ 'ஊளை'யாகாதா?

No comments:

Post a Comment