Thursday, August 30, 2018

'பாபநாசம்' சிக்னலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக 'கோலமாவு கோகிலா'? (5);

 


எவ்வாறு தமிழை 'அந்த' சிறையிலிருந்து விடுவிப்பதும், வெற்றிகரமாக முன்னேறி வருகிறது?




.வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று,  நாம் முயற்சித்தால்

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, லேசியாவில் நடப்பது போல‌, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும்.( http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_28.html ) அந்த ஊழல் ஒழிப்பு போக்கிலேயே தான், 'சுயநல அரசியல் சிறையிலிருந்து' தமிழை விடுவிக்க முடியும். அந்த ஊழல் ஒழியும் போக்கில், எவ்வாறு தமிழை 'அந்த' சிறையிலிருந்து விடுவிப்பதும், வெற்றிகரமாக முன்னேறி வருகிறது? என்பதை இங்கு பார்ப்போம்.

ஊழல் சுனாமியில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில், தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கியது; 'தமிழ், தமிழ்த்தேசியம்' ஆதரவாளர்களில் வசதியான செல்வாக்கான நபர்கள் எல்லாம், தாய்த்தமிழ்ப்பள்ளிகளின் புரவலர்கள் உட்பட, தத்தம் குடும்பப் பிள்ளைகளை எல்லாம், வெகுசில விதிவிலக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் ஆங்கிலவழிப் பள்ளிகளில் படிக்க வைத்து, அந்த மரணப்பயணத்திற்கு துணை போனார்கள்.

அந்த இரட்டைவேடப் போக்கில், சுயநல அரசியலுக்கு தமிழைச் சிறைப்படுத்திய போக்கில், தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வு வியாபாரமானது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ்நாட்டில் ஊழல் பேராசையில் கிரானைட், தாது மணல், ஆறுகள், ஏரிகள், காடுகள் எல்லாம் சூறையாடப்பட்டு, அச்சுறுத்தியும் கொலை செய்தும் தனியார் சொத்துக்களை அபகரித்து, ஊழல் சுனாமியில் ஆங்கிலவழி தனியார் பள்ளிகள் பெருகி, தமிழ்வழிக்கல்வியையும், தமிழையும் சீரழித்து, தமிழில் எழுதவும், படிக்கவும் தெரியாத மாணவர்கள் அதிகரித்து வரும் போக்குகளுக்கு காரணமான பிதாக்களே, தனித்தமிழ்நாடு கோரும் பிரிவினைக் கட்சிகளின் புரவலர்களாக இருந்திருக்கிறார்கள்;’ ( ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

'தனித்தமிழ்நாடு கோரிக்கையானது' எவ்வாறு பொதுவாழ்வு வியாபாரமாக மாறியதோ, அது போலவே, இந்துத்வா எதிர்ப்பானது 'சோளக்கொல்லை பொம்மை'யாகி விட்டதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன்

ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?

வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா?’ (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

தமிழ்நாட்டில் உள்ள 'பொர்க்கி' தமிழர் பற்றியசுப்பிரமணியசுவாமியின் கருத்தினை கண்டிக்காத‌, அவருக்கு நெருக்கமான;

தி.மு. தலைவர் ஸ்டாலினை 'பார்ப்பனப் பரம்பரைப் பகையை எதிர்கொள்ள' துணை புரியும் 'புரவலராக' கருதியும், 'பெரியார் தந்த புத்தியில்' அதே நோக்கில் 'சசிகலா தினகரன்' கட்சியையும், ஆதரிக்கும் 'இந்துத்வா எதிர்ப்பு வீரர்கள்'(?) தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்; ; 'இந்துத்வா எதிர்ப்பு' மற்றும் அதனை 'பேரமாக்கி' பா.ஜ.க ஆட்சியில் 'பங்கு', என்ற இரண்டு சிறகுகளின் துணையுடன்,  திராவிட அரசியலானது பயணித்து வருவது தெரிந்தும்.பேரத்திற்கான தேசிய/இந்துத்வா எதிர்ப்பு, பேரம் முடிந்த தேசிய/இந்துத்வா (காங்கிரஸ், பா.. ஆட்சிகளில் இடம் பெற்று 'பலன்கள்' அனுபவித்த‌) ஆதரவு இறக்கைகளில் பயணித்த, 'திராவிட அரசியல் ஊழல் எஞ்சினின்' 'மூல செயல்பாடு' நின்று போனாலும்; 

சிறையில் உள்ள லல்லு பொறாமைப்படும் அளவுக்கு, 'திராவிட லல்லுக்கள்' அடுத்து அடுத்த வழக்குகளில் விடுதலையாகி, இந்தியாவின் 'சட்டத்தின் ஆட்சியையே' (Rule of Law) சவாலுக்குள்ளாக்கி வரும் சூழலில்;

'காற்றுள்ள போதே' தூற்றிக்கொள்ளும் 'அரசியல் அமாவாசைகளின்' ஆட்டங்கள் எல்லாம், கையிருப்பில் உள்ள 'ஊழல் பலன்கள்' தீரும் வரை தொடர்வதையும் தவிர்க்க முடியாது.(http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

தமிழை திராவிட அரசியலில் சிறைப்படுத்தி, அதன் விளைவாக அரசியல் நீக்கத்தில் ஆதாய அரசியல் வலிமையில் பயணித்து வரும் கட்சிகள் எல்லாம், ஜெயலலிதா, கருணாநிதி மறைவிற்குப் பின் சருகாகி, 'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகள் இருப்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அவ்வாறு சிறைபடுத்தியதானது எவ்வாறு நிகழ்ந்தது? என்பதும் அப்பதிவில் வெளிவந்துள்ளது.

1949 இல் தி.மு. தோன்றி, மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு. வளர்ந்தது. அவ்வாறு தி.மு. வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது, மேக்ரொ உலகில் இருந்த தமது செல்வாக்கானது, மைக்ரோ உலகில் தி.மு.கவின் வளர்ச்சி மூலம் ஆபத்துக்குள்ளாகும் அபாயம் பற்றி சுதாரிக்காமல் இருந்ததாலேயே, தமிழையும், தமிழ் உணர்வையும் தி.மு.- வானது தமது சுயநல அரசியலுக்காகசிறை பிடித்து, தேசியத்திற்கு எதிராக வளர்க்க முடிந்தது.

'அந்த' சிறையிலிருந்து தமிழ் மொழியானது விடுதலையாகும் வாய்ப்புகள் எவ்வாறு உருவானது?

1967இல், ராஜாஜியின் துணையுடன், தி.மு.  ஆட்சியைப் பிடித்தது.  அதன்பின் தொண்டர்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, பணம், கட்சியில் கீழிருந்து மேல் வரை, சர்க்காரியா குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வழிகளில் பணம் சேர்த்தல் உள்ளிட்டஆதாய அரசியலில்  தி.மு. சிக்கியது. அந்த போக்கில்,, 1967க்கு முந்தைய காங்கிரசை விட இன்னும் மோசமாக மேக்ரோ உலகிலேயே ஆதாய அரசியல் பலத்தில் பயணித்தது; நேரு குடும்ப அரசியல் பாணியில் இன்னும் மோசமான குடும்ப அரசியலில் தி.மு. பயணித்தது. (‘நேரு குடும்ப வாரிசு அரசியல் சந்திக்காத சிக்கலில்; கருணாநிதி குடும்ப வாரிசு அரசியலானது, ஏன் சிக்க நேர்ந்தது?’; http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html)

மைக்ரோ உலகில் எவ்வாறு மாணவர்களையும், படித்த இளைஞர்களையும் ஈர்த்து, தமிழை தி.மு. வானது தமது சுயநல அரசியலுக்காக சிறை பிடித்ததோ;

அதே சமூக செயல்நுட்பத்தில் தமிழை அந்த சிறையிலிருந்து விடுவிக்கும் முயற்சிகளும், இன்று மைக்ரோ உலகத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் படித்த இளைஞர்களை ஈர்த்தே மேற்கொள்ள வேண்டும்.

தி.மு.க வளர்ந்த போக்கில், மாணவர்களையும் இளைஞர்களையும் ஈர்த்த அடுக்கு மொழி பேச்சுக்களும், எழுத்துக்களும், 'அந்த' தமிழும், தமிழுணர்வும், இன்று கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி வருகின்றன. (http://tamilsdirection.blogspot.com/2015/06/  ) பேச்சும், எழுத்தும், மைக்ரோ உலகத்தில் 'தகவல் பரிமாற்ற வலிமையை' இழந்து, செயல்களே தகவல் பரிமாற்ற வலிமை பெற்று வருகின்றன.

எனது ஆய்வுத்திட்டங்கள் மூலமாகவும், 'இசைத்தகவல் தொழில்நுட்பம்' (Music Information Technology) என்ற பாடத்தினை இந்தியாவிலேயே முதல் முறையாக பொறியியல் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தியதன் மூலமாகவும், மைக்ரோ உலகத்தில் மாணவர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகள் எனக்கு கிடைத்தன. அதன் பலனாகவே, கீழ்வரும் பதிவினையும் வெளியிட்டேன்.

இந்தியா எதிர்நோக்கியுள்ள சவால்களை எல்லாம் முன்னுதாரணமாக செயல்பூர்வமாக வெற்றி கொண்டு, இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு மாறும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.

அந்த நம்பிக்கையின்றி, தோல்வி மனப்பான்மையுடன் பயணிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் 60 வயதைத் தாண்டியவர்களே ஆவார்கள். தமிழ்நாட்டில் மிகுந்த நம்பிக்கையுடன், கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும், விளம்பரமின்றி கிராமங்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உதவி வரும் போக்குகள் எல்லாம்; (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post.html   )

தமிழ்வழிக்கல்வி மீட்சியில், 'பெரியார்' ஆதரவாளர்களும், ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html  )

ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;

அடுத்து வரும் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும்  (‘தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?’; http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none.html  )

மக்கள் தன்மானமிழந்தால், ஊழல்வாதிகளிடம் அரசு சிக்கி, அந்த நாடு அழியும்; மக்களுக்கு தன்மானம் வந்தால், அந்த ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் அந்த நாடும் வளரும்

என்பதை மலேசியா இன்று நிரூபிக்கிறது; நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_10.html  )

'நாளை தமிழ்நாடு நிரூபிக்கும்; தமிழ்நாட்டிலும் தன்மானம் இருக்கிறது என்று';

என்று எந்த துணிச்சலில் நான் கணித்தேன்?’ என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.(http://tamilsdirection.blogspot.com/search?updated-max=2018-08-15T02:24:00-07:00&max-results=7  )

தமிழர்கள் தன்மானமும் அறிவும் உள்ள புத்திசாலிகளாக மாறி வரும் போக்கில், ஆர்.எஸ்.எஸ் மற்றும் துக்ளக்கின் துணையோடு, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமானது தடுத்து நிறுத்தப்பட்டு, புத்துயிர் பெறும் போக்கும் துவங்கி விட்டது.’ (‘தமிழ்வழி மரணப் பயணம் பற்றி சோகமடைவதற்கும், கோபப்படுவதற்கும், நமக்குள்ளயோக்கியதை?’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

தொல்காப்பியத்தில் உள்ள 'இசை மொழியியல்'(Musical Linguistics) இலக்கணமானது, தமிழ் மட்டுமின்றி, மலாய், சீனமொழி உள்ளிட்டு உலகில் உள்ள அனைத்து மொழிகளுக்கான 'இசை மொழியியல் இலக்கணம்' ஆகும் என்பதையும் விளக்கினேன். அதன் மூலம் உலகில் உள்ள பல்கலைக்கழகங்களில் 'இசை மொழியியல்' என்ற துறையானது உருவாக வேண்டிய கட்டமானது நெருங்கி விட்டதையும் விளக்கினேன்.

அவ்வாறு அரங்கேறும் 'இசை மொழியியல்' துறை மூலமாக, நிறைய தொழில், வியாபார, வேலைவாய்ப்புகளை உருவாக்கி, கீழ்வரும் NLP பொருட்கள் சந்தைக்கு வரும் என்பதையும் விளக்கினேன்.

Lyric to Music; Music to Lyric; Music Grammar Check, etc will be future NLP products based on the Musical Linguistics in Tholkappiam’ (https://tamilsdirection.blogspot.com/search?updated-max=2018-07-31T20:40:00-07:00&max-results=7) என்பதையும்;

பழந்தமிழ் இலக்கியங்களிலும், சமஸ்கிருத இலக்கியங்களிலும் புதைந்துள்ள அறிவியல் தொழில்நுட்பங்கள் எல்லாம் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆனால் சமஸ்கிருத இலக்கியங்களில் இருந்து வெளிவரும் கண்டுபிடிப்புகள் போலின்றி, தமிழ் இலக்கியங்களில் நான் கண்டுபிடித்தவை எல்லாம் 'அபத்தமான' தடைகளை சந்தித்து வருவதையும் வெளிப்படுத்தியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.com/2018/07/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களிலும், ராமாயணம் உள்ளிட்ட சமஸ்கிருத இலக்கியங்களிலும், 'மயன் தொழில்நுட்பம்' பற்றிய சான்றுகள் பல உள்ளன.

'இராமர் பாலம்' தொடர்பான 'சர்ச்சையில்', தமிழ் மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வரும் 'மயன் தொழில்நுட்பமும்' சிக்கி கேலிக்குள்ளானது. அது எவ்வளவு பெரிய தவறு? என்பதை, 'இராமர் பாலம்' தொடர்பான கீழ்வரும் சான்றானது வெளிப்படுத்தியது.

‘A prehistoric land bridge between India and Sri Lanka has been discovered in a series of NASA ariel photographs……..The bridge usually named either Adam's Bridge or Rama's Bridge, is today a series of limestone shoals that once formed a complete path between the two countries and cannot be seen at ground level due to submergence.’ ; https://www.disclose.tv/nasa-discovered-a-17-million-year-old-ancient-bridge-between-india-and-sri-lanka-315585
 
 பெரிய புராணத்தில், ஆனாயநாயனார் குழல் இசையில் மோகன ராகத்தில் 'நமசிவாய' என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை இசைத்து, இறைவனோடு ஒன்றி, 'எல்லையில்லா  (infinite) மகிழ்ச்சி' என்றால் என்ன? என்பதை, எனக்கு புரிய வைத்தார்.( http://musicresearchlibrary.net/omeka/items/show/2447  )  என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன். (‘மயனின் 'ஐந்திறம்' தொழில்நுட்ப கண்டுபிடிப்பின் முழுப்பெருமையும், கணபதி ஸ்தபதியையேச் சாரும்’; http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_3.html )

உலகில் நாத்திகம் பற்றி, அதிகமான நூல்கள் உள்ள தொன்மை மொழிகளில் சமஸ்கிருதம் மற்றும் பாலி முதலிடம் வகிப்பதை, நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தெளிவுபடுத்தியது தெரியாமலும்; (http://tamilsdirection.blogspot.com/2015/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

உலகில் பல்கலைக்கழகங்களில் கற்பிக்கப்படும் 'மொழியியல'(Linguistics) சமஸ்கிருத இலக்கண நூலான 'அஷ்டதாயி'(Aṣṭādhyāyī of Pāṇini) அடிப்படையில் உருவானது தெரியாமல் (‘By teaching phonetics and grammar to the West, Sanskrit gave rise to modern linguistics’; http://www.indiapost.com/flipbook/epaper31-08-2018/31_AUG_2018/index.html#book/25 );

சமஸ்கிருதத்தினை 'செத்த மொழி' என்று அறிவித்து, தமிழை 'சாகும் மொழியாக’ 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவியாக' பங்களித்தும்(?);

வருபவர்களின் கண்களைத் திறக்கும் வகையிலும்;

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன்.

மைக்ரோ உலகத்தில் மாணவர்கள், படித்த இளைஞர்கள், கிராமத்தினர் ஆகியோரோடு, திருக்குறள் (140) வழியில் 'ஒட்டி' பயணித்து வரும் துணிச்சலில்;

'வெறுப்பு அரசியல்' மைக்ரோ உலகில் இனி எடுபடாது. இனி 'கோலமாவு கோகிலா' போன்ற திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளுக்கே அவை பயன்படும்'

என்று இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு முகாம்களில் உணர்ச்சிபூர்வமாக பேசி வரும் பேச்சாளர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், கவிஞர்களுக்கும் தெரிவிக்க விரும்புகிறேன்; இளையராஜாவின் 'ஓரம்போ' பாடலை நினைவூட்டி.

உலக அளவில் சமஸ்கிருதத்திற்கு இணையான இடம் நோக்கி, தமிழின் மீட்சிப் பயணமானது தொடங்கி விட்டது

இந்துத்வா ஆதரவானாலும் சரி, இந்துத்வா எதிர்ப்பானாலும் சரி,

'உணர்ச்சி பூர்வ செருப்பு அரசியல்' போக்கில் பயணிப்பவர்களை ஒதுக்கி;

அறிவுபூர்வமாக விவாதிக்க முன் வருபவர்களுக்கு எனது அறிவிப்பும் அது தான்.

'சரக்கு இருந்தால் அவிழ்த்து விடு; இல்லே, சலாம் போட்டு ஓடி விடு' (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_4.html


குறிப்பு: ஆஸ்திரேலியாவிலிருந்து திரு. மா அருச்சுனமணி அனுப்பிய பின்னூட்டம் (Feedback)


தாங்கள் குறிப்பிடும் தமிழ்வழிக் கல்வி மீட்சி விரைவில் தமிழகத்தில் வீறுநடை போடுவதைக் காணக் காத்திருக்கிறோம்

நாங்கள் வாழும் ஆத்திரேலியாவில் தமிழை H S C வரை ஒரு பாடமாகப் படித்துவருவது கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக தளர்வின்றித் தொடர்ந்து வருகிறது. New South Wales, Victoria ஆகிய இருமாதிலங்களில். இம்மாணவர்கள் தமிழை மேடைகளில் முழங்கவும் இலக்கிய பட்டிமன்றங்களில் கலந்து கொள்ளவும் தகுதி பெற்றவர்களாக மிளிர்ந்து வருகிறார்கள்.”