Wednesday, August 29, 2018

'பாபநாசம்' சிக்னலின் அடுத்தக்கட்ட வளர்ச்சியாக 'கோலமாவு கோகிலா'? (4);



.வெ.ராவும், ராஜாஜியும் தோற்ற இடத்தில், நாம் வெற்றி பெறுவோம்



காலனி ஆட்சியில் இந்தியாவில் காந்தி, நேரு உள்ளிட்டு வேறு எந்த தலைவரும் அனுபவித்திராத சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர் .. சிதம்பரம் பிள்ளை ஆவார். இன்று தி.மு. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியானது, ..சி மறைந்த போது, இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்ற மறுத்த தகவலை, .பொ.சி தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார். அந்த அளவுக்கு, தமிழ்நாட்டில் காந்தியின் நிலைப்பாட்டினை விமர்சித்தவர்கள் எல்லாம் அவமதிக்கப்பட்டனர்.

1944இல் திராவிடர் கழகம் தொடங்குவதற்கு முன்பேயே, .வெ.ரா அவர்கள் தமது 'குடி அரசு' இதழில் காந்தியின் இரட்டை வேடப் போக்குகளை அம்பலப்படுத்தி நிறைய‌ கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறார். அதே .வெ.ரா அவர்கள், காந்தியின் மறைவின் போது, அவரை வானளாவ புகழ்ந்து வானொலியில் பேசினார். பின் காந்தி பிம்பமானது, பொதுவாழ்வு வியாபாரிகளின் முதலில்லாத மூலதனம் ஆனதை எதிர்த்து, 'காந்தி பொம்மைகளை உடைத்தல், படங்களை எரித்தல்' தொடர்பான பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

இன்று 'பெரியார்' பிம்பமானது, இன்னும் மோசமான பொதுவாழ்வு வியாபாரத்திற்கு துணை புரிந்து வருவதானது, மேற்குறிப்பிட்ட விசாரணையில் வெளிப்பட்டால்;

இன்று 'பெரியார் பொம்மைகளை உடைத்தல், பெரியார் படங்களை எரித்தல்' போராட்ட அவசியம் குறித்து பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியம் வெளிப்பட்டாலும், வியப்பில்லை. ஒருவரை தனிப்பட்ட முறையில் பாராட்டுவதற்கும், கண்டிப்பதற்கும், சமூக நோக்கில் பாராட்டுவதற்கும், கண்டிப்பதற்கும் இடையில் உள்ள வேறுபாடுகள் பற்றிய தெளிவு உள்ளவர்கள் எல்லாம்;

அவ்வாறு சமூக கேடான பிம்பங்கள் தொடர்பான, 'பொம்மைகளை உடைத்தல், படங்களை எரித்தல்' ஆகிய போராட்டங்களை, அந்த தனிநபர்களுக்கு எதிரான போராட்டங்களாக குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.’; (http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post_5.html

'தமக்கும், தமது குடும்பத்துக்கும் சொத்து சேர்க்கவே அரசியலில் இருந்தார்கள்' என்று தமது கொள்கை எதிரிகளால் கூட குற்றம் சாட்ட முடியாதஅளவுக்கு, தனிமனித ஓழுக்கத்தில் பெரியவர்களான .வெ,ரா மற்றும் ராஜாஜி, ஆகியோரின் 'தொண்டுகளின்' விளைவாக, தமிழ்நாடு எவ்வாறு சீரழிந்தது? என்பதை கீழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.

இந்தியாவிலேயே , ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில் 'ஆங்கில வழி' சூதுக்கு இரையாகி, பிற மாநிலங்களுக்கு 'தவறான முன்னுதாரணமாக' விளங்கி வருவது, தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை 'அதிவேகமாக‌' இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.

அதன் விளைவாக, அறிவு நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஓரங்கட்டி, யாரை ஏணியாகப் பயன்படுத்தி அதிக செல்வம், செல்வாக்கு பெறுவது என்றவெற்றிக்கான எலும்புத் துண்டு செயல்நுட்பஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆக உடலுழைப்பு, அறிவு உழைப்பு போன்றவற்றில் தமிழரல்லாதாரை நம்பி இயங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு வந்து விட்டது. திருக்குறளில் (பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் விளக்கும் செயல் நுடபமே இது

'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் பெரும்பான்மையார்களாக வாழ்வதை 'சூது கவ்வும்' திரைப் படமாக வெளிப்படுத்திய இளைஞர்களும், அதை " குற்றங்களே குணங்களாகிவிட்டன!" என்று அடையாளம் காட்டிய பழ.கருப்பையா அவர்களும் பாராட்டுக்குரியவர்களே.’ (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

‘ஈ.வெ.ராவால் தனது 'ஆருயிர் நண்பர்' என்று அடையாளம் காட்டப்பட்ட ராஜாஜியின் இறுதி சடங்கு நிகழ்ந்த போது:

மயானத்தில், மூத்திரப்பையுடன் தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியுடன் தம்மை தூக்கச் சொல்லி, மூன்று முறை வலம் வந்து இறுதி சடங்கில் பங்கேற்றவர் ஈ.வெ.ரா ஆவார்.


தனிமனித அளவில் நம்பமுடியாத அளவுக்கு ஈ.வெ.ரா அவர்களுக்கும் பிராமணர்களுக்கும் இருந்த நெருக்கமான‌ தொடர்பு பற்றிய‌ தகவல்களும்; (தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட 'பெரியார்'ஈ.வெ.ரா (1); http://tamilsdirection.blogspot.in/2017/09/blog-post_20.html  )


1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தை ஆதரித்து பங்கேற்ற பிராமணர்கள் பற்றிய தகவல்களும்;


பின் 1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, ஈ.வெ.ரா முன்வைத்த 'திராவிட நாடு பிரிவினை'கோரிக்கையை ராஜாஜி ஆதரித்ததோடு மட்டுமின்றி;


காலனி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் ஆட்சி நிர்வாகப் பொறுப்பை ஏற்குமாறு ஈ.வெ.ராவை ராஜாஜி கேட்டதும், அதை ஈ.வெ.ரா மறுத்ததும் தொடர்பான தகவல்களும்;


இன்று 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா'வில் பயணிக்கும் 'பெரியார்' ஆதரவாளர்களுக்கும்;


"பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன்' என்று அறிவித்து, உணர்ச்சிபூர்வமாக பயணிக்கும் பா.ஜ.க தலைவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்; (‘தமிழ்நாட்டின் செருப்பு அரசியல்?’; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none.html)
நம்பமுடியாத அதிர்ச்சியாக இருந்தால் வியப்பில்லை. (http://tamilsdirection.blogspot.com/2018/01/normal-0-false-false-false-en-us-x-none.html )


1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னால்,' அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? (‘சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்;'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’; http://tamilsdirection.blogspot.in/2016/12/blog-post.html) பின் 1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகி, பின் மதுவிலக்கை ஒழித்த போது, ராஜாஜியும் மனமுடைந்தார்.


ஆக 'திராவிட தேர்தல் அரசியலானது' ஆட்சியைப் பிடித்து, ஈ.வெ.ரா அவர்களும், அண்ணாவும், ராஜாஜியும் ஏன் மனமுடைந்தார்கள்? என்ற கேள்வியை பொது அரங்கில் எழுப்பி, சமூக பொறுப்புடன் விவாதிக்க வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன். (http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )


அதே
நேரத்தில், ஈ.வெ.ராவும், ராஜாஜியும் சரியான திசையில் பயணித்திருந்தால், தமிழ்நாடு எந்த அளவுக்கு முன்னேறியிருக்கும்? என்பது தொடர்பான எனது ஆய்வு முடிவினையும் அடுத்து குறிப்பிட விரும்புகிறேன்.

தனிப்பட்ட முறையில் .வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையே இருந்த நட்பின் மூலமாகவே, ராஜாஜியின் தூண்டுதலால் காங்கிரசில் சேர்ந்தார் .வெ.ரா. .வெ.ரா அவர்கள் பணக்கார வாழ்வு நிலையிலிருந்து நம்ப முடியாத அளவுக்கு 'சாமான்ய' வாழ்வு நிலைக்கு இறங்கி, தமிழ்நாட்டின் மைக்ரோ உலகத்தோடு ஒட்டிப் பயணித்து அபரீதமான சமூக ஆற்றலை வளர்த்து வந்த போக்கில், அதை சரியாக கணித்து .வெ.ராவுடன் ஒட்டி மைக்ரோ உலகத்தில் பயணிக்காமல், மேக்ரோ உலகத்தில் இருந்தபடியே நினைத்ததை சாதிக்க முடியும் என்ற தவறான அணுகுமுறையில், இந்திய விடுதலைக்குப் பின், .வெ.ராவிற்கு எதிரான திசையில் தி.மு. மீதும், கலைஞர் கருணாநிதி மீதும் செல்வாக்கு செலுத்தி பயணித்தார் ராஜாஜி.

.வெ.ராவிற்கும் ராஜாஜிக்கும் இடையில் இருந்த தனிப்பட்ட நட்பானது சாகும் வரை நீடித்ததைப் போலவே, பொதுவாழ்விலும் நீடித்திருந்தால், பரிமாற்ற முறையில் இருவரிடமும் வெளிப்பட்டிருந்த குறைபாடுகள் நீங்கி, திராவிடக்கட்சிகளின் ஆட்சிகளில் தமிழ்நாடு சிக்கியிருக்காது; தமிழ்வழிக்கல்வியானது மரணப்பயணத்தில் சிக்கும் அவலமும் நிகழ்ந்திருக்காது; இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்திருக்கும்;

என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

இன்று .வெ.ரா அவர்களும், ராஜாஜி அவர்களும் உயிரோடு இல்லை. ஆனால் விருப்பு வெறுப்பின்றி, அறிவு நேர்மையுடன், சுயலாப நோக்கின்றி, உண்மையான சமூகப்பற்றுடன், அந்த இருவரின் நிறை குறைகளை ஆராய்ந்து, உரிய பாடங்கள் கற்று, நாம் முயன்றால், இந்தியா எதிர்நோக்கியுள்ள சவால்களை எல்லாம் முன்னுதாரணமாக செயல்பூர்வமாக வெற்றி கொண்டு, இந்தியா மட்டுமின்றி, உலகே வியக்கும் அளவுக்கு முன்னணி மாநிலமாக தமிழ்நாடு மாறும் வாய்ப்புகள் பிரகாசமாகி வருகின்றன.

அந்த நம்பிக்கையின்றி, தோல்வி மனப்பான்மையுடன் பயணிப்பவர்கள் எல்லாம் பெரும்பாலும் 60 வயதைத் தாண்டியவர்களே ஆவார்கள். தமிழ்நாட்டில் மிகுந்த நம்பிக்கையுடன், கல்லூரி மாணவர்களும், படித்த இளைஞர்களும், விளம்பரமின்றி கிராமங்களுக்கும், ஏழை மாணவர்களுக்கும் உதவி வரும் போக்குகள் எல்லாம்; (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post.html  )

சமூக அடித்தளம் இழந்து, ஊழல் வழிகளில் சேர்த்த பண பலத்தில், வாலாட்டும் 'தொண்டர்கள்'(?) சூழ, வனி வரும் கட்சிகளையும், தலைவர்களையும், மலேசியா வழியில் தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்யும், 'சரியான வாய்ப்புக்கு' அவர்கள் எல்லாம் காத்திருக்கிறார்கள்;

என்பதை உணர்த்தும் அறிகுறிகள் ஆகும்.

'அந்த சரியான வாய்ப்புக்கான' சமூக சூழலை விரைவில் உருவாக்க;

.வெ.ரா மற்றும் ராஜாஜி ஆகியோரின் நிறை குறைகளை ஆராய்ந்து, உரிய பாடங்கள் கற்று, நாம் முயன்றால், அது எளிதில் சாத்தியமாகும்.

அந்த முயற்சியில், நம்மை அச்சுறுத்தும் சவால்களை எல்லாம், நமது வாழ்வில் எவ்வாறு சந்திப்பது? என்பதற்கான திறவுகோல்களை எல்லாம், 'கோலமாவு கோகிலா' குடும்பத்தினர் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

'கோலமாவு கோகிலா' குடும்பத்தினர் சவால்களை எவ்வாறு சந்தித்தனர்? என்று, அந்த திரைப்படத்தில் வந்த சம்பவங்களை ஆராய்ந்தால், அதில் கீழ்வரும் சூட்சமம் வெளிப்படும்.

சவால்களை சந்திக்கும் போது, நீ இப்போது உள்ளதை விட, இன்னும் வலுவாக வேண்டும். புதிய கண்ணோட்டங்கள்(new perspectives), புதிய திறமைகள் (new skills),  எல்லைகளை அதிகரித்தல்(pushing boundaries.) ஆகியவற்றை உருவாக்க வேண்டும். உன்னை எதிர்நோக்கியுள்ள சவால்களை வெற்றி கொள்ள, உனது புரிதலை விரிவாக்க வேண்டும்.

‘When you are challenged, you are asked to become more than you were. That means creating new perspectives, acquiring new skills and pushing boundaries. In other words you have to expand your understanding in order to be able to overcome the obstacles facing you.’  (https://medium.com/personal-growth/dont-take-the-path-of-least-resistance-5dc7ec3f2892 )

தமிழ்நாட்டில் தன்மானக்கேடான குறுக்கு வழிகளைத் தவிர்த்து வாழும், சாமான்யர்களின் குடும்பங்களில்  எல்லாம், தாம் சந்திக்கும் சவால்களை எல்லாம், மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில், தத்தம் அறிவு, அனுபவ அடிப்படைகளில், சந்தித்து வருகிறார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

எவ்வாறு மைக்ரோ உலகத்தில் தி.மு. வேர் பிடித்து வளர்ந்து வருகிறது? என்று தெரியாமல், தமது மேக்ரோ உலக பலத்தில் காங்கிரஸ் கட்சியானது, ஏமாந்து பயணித்தது? என்பதனை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

‘1949 இல் தி.மு. தோன்றி, மைக்ரோ உலகத்தில் மாணவர்கள் மற்றும் இளைஞர் மத்தியில் வேர் பிடித்து, அவரவர் சொந்த காசை செலவு செய்து தி.மு. வளர்ந்தது. அவ்வாறு தி.மு. வளர்ந்த போக்கில், காங்கிரஸ் கட்சியானது, மேக்ரொ உலகில் இருந்த தமது செல்வாக்கானது, மைக்ரோ உலகில் தி.மு.கவின் வளர்ச்சி மூலம் ஆபத்துக்குள்ளாகும் அபாயம் பற்றி சுதாரிக்காமல் இருந்ததாலேயே, தமிழையும், தமிழ் உணர்வையும் தி.மு.- வானது தமது சுயநல அரசியலுக்காகசிறை பிடித்து, தேசியத்திற்கு எதிராக வளர்க்க முடிந்தது. அதன் தொடர்ச்சியாகவே, 1967இல், ராஜாஜியின் துணையுடன், தி.மு.  ஆட்சியைப் பிடித்தது.  அதன்பின் தொண்டர்களுக்கு குவார்ட்டர், பிரியாணி, பணம், கட்சியில் கீழிருந்து மேல் வரை, சர்க்காரியா குறிப்பிட்ட 'அறிவியல் ஊழல்' வழிகளில் பணம் சேர்த்தல் உள்ளிட்டஆதாய அரசியலில்  தி.மு. சிக்கியது. அந்த போக்கில்,, 1967க்கு முந்தைய காங்கிரசை விட இன்னும் மோசமாக மேக்ரோ உலகிலேயே ஆதாய அரசியல் பலத்தில் பயணித்தது;’ (http://tamilsdirection.blogspot.com/2018/08/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தி.மு. உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும், அக்கட்சிகள் எல்லாம், அடித்தளம் செல்லரித்த கட்டிடங்கள் பூமிக்குள் புதைவது போல, புதைபடும் காலமும் நெருங்கி வருகிறது. .வெ.ரா மற்றும் ராஜாஜி அகியோரின் நிறைகுறைகளில் இருந்து பாடங்கள் கற்று, மேலே குறிப்பிட்டவாறு நாம் முயற்சித்தால்

பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதம் அதிகமின்றியும், விரைவிலும் அது நடக்கும். இன்று ஊழல் குற்றவாளிகளை தண்டித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, லேசியாவில் நடப்பது போல‌, அப்போது தமிழ்நாட்டிலும் நடக்கும்.

(வளரும்)

No comments:

Post a Comment