Sunday, January 31, 2016

தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது;

'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?   

 

'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு

உட்படாமல்;         

 

பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?



'பார்ப்பனர் நலன்' என்ற கருத்தில், ஆயிரக்கணக்கான வருடங்களாக கல்வியில் ஆதிக்கம் செலுத்தி, தமிழர்களில் பெரும்பான்மையினரைக் கல்வி கற்க விடாமல் செய்தவர்கள் 'பார்ப்பனர்கள்', என்ற பெரியாரின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருந்தவன் நான், இசை ஆராய்ச்சியில் ஈடுபடத் தொடங்கிய பின்னும்.

எனது இசை ஆராய்ச்சி தொடர்பாக,தொல்பொருள் துறையில் (Archeology Dept)  ஒரு கல்வெட்டு ஆராய்ச்சியாளருடன் (Epigraphist)  உரையாட வாய்ப்பு கிடைத்த போது,மேலேக் குறிப்பிட்ட எனது நிலைப்பாட்டை விளக்கினேன். 

அபத்தமான கேள்வி கேட்ட ஒரு ஆரம்பப் பள்ளி மாணவரை, ஒரு கல்லூரி பேராசிரியர் பார்ப்பது போல, என்னைப் பரிதாபமாகப் பார்த்து, "சார், அது தி.க காரங்க சொல்றது. கல்வெட்டுகள் உள்ளிட்ட தொல்பொருள் சான்றுகளின் படி, வெள்ளைக்காரர் வருவதற்கு முன், இங்கு அதிகம் படித்தவர்களாக இருந்தவர்கள் 'கம்மாளர்கள்' என்று விளக்கினார். அது உண்மை என்பதைத் தெளிவுபடுத்திக் கொண்ட பின், தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது,  'பார்ப்பன சூழ்ச்சி',  என்று முன்வைக்கப்படும் கருத்துக்களை, அறிவுபூர்வமாக சான்றுகளின் அடிப்படையில்,  மறு ஆய்வுக்கு  உட்படுத்த வேண்டியத‌ன் முக்கியத்துவம் எனக்குப் புலனானது."பழங்காலத்தில் பிராமணர்களைவிட அதிக எண்ணிக்கையில் படித்தது சூத்திரர்களும் தலித்துகளுமே!";
http://www.dinamani.com/junction/azhagiya-maram/ 


இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை.

உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35  ), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுக்கும் போக்கானது, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கியது? என்பது ஆய்விற்குரியதாகும். சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் ஒன்றே மனுஸ்மிரிதி ஆகும். இது போன்ற நூல்களில் உள்ளவையெல்லாம், அந்த நூலாசிரியரின் விருப்பங்களின் வெளிப்பாடுகள் தான் என்பதையும், அன்று நடைமுறையில் இருந்தவை அல்ல என்பதையும், குறிப்பாக ' சூத்திரர் வாயிலும், காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது போன்ற தண்டனைகளும், ஒரு மனவெறியரின் ஆலோசனைகள் மட்டுமே; அவை நடைமுறையில் வராதவை; என்பதையும் ஏ.எல்.பாஸம் என்ற அறிஞர் ' the wonder that was india' என்ற நூலில் விளக்கியுள்ளார்.( " The reader must always bear in mind  that in the texts on statecraft and Sacred Law the authors describe things not as they were in fact, but as they believed they ought to be................ Similarly the vicious punishments laid down by Manu for religious crimes (for example a sudra who " arrogantly teaches brahmans their duty" shall have boiling oil poured in his mouth  and ears" Page 81) இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் உள்ளிட்ட அரசர்கள் ஆண்டபோது, 'சூத்திரருக்கு' கல்வி மறுக்க பட்டது; மீறி படித்தவர்களுக்கு மனுநீதியில் உள்ள தண்டனைகள் அமுலானது'; குறித்து சான்றுகள் இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை.

1960களில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 'எலி' கறி சாப்பிடுபவர்களாக, 'வளையர்' என்ற சாதியினரை, இழிவாக கருதி வந்ததை நான் அறிவேன். ஆனால் புதுக்கோட்டையின் வரலாற்றில், ஆதியில் அச்சாதியினரே மன்னர்களாக இருந்த சான்றுகளை அறிந்து, வியப்புற்றேன். புதுக்கோட்டை அரசராக தொண்டமான்கள் இடம் பெற்ற சான்றுகள் அதற்கப்புறம் தான் உள்ளன. 

அப்படியென்றால், அந்த ஆண்ட சாதியினர், எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில், 'எலிக்கறி' உண்ணும் வளையராக மாறினர்? குப்பையில் உணவு தேடி உண்ணும், அந்த கால கோழிக்கறியை விட, எலிக்கறி எந்த அடிப்படையில் இழிவானது ? 

இந்திய வரலாற்றில் வெற்றி பெற்ற அரசர்கள், தோற்ற மன்னர்களின் குடிமக்களை, குறிப்பாக இராணுவத்தினரை, அடிமை வேலைகள் செய்யும் பிரிவினராக்கிய சான்றுகள் உள்ளன.

தமிழ்நாட்டில் காலனி அரசானது, 'சாதி'யை நுழைத்து, சாதி அடையாள பட்டியல் புதிதாக உருவாக்கிய போது, அந்த காலக்கட்டத்தில், அடிமைப் பணிகளில் ஈடுபட்டிருந்தவர்களை, தனிப்பட்ட அட்டவணைக்குள்ளாக்கி, 'தீண்டத்தாகதவர்கள்' என பிரித்தனரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

சோழ அரசில்(  கீழ்வரும் சான்றின்  படி);
மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;
இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்' தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;

'கள்ளர், மறவர், அகமுடையார்', 'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்;

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர், இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்;

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

சோழ அரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, எந்தெந்த சிற்றரசர்களின் இராணுவத்தில் மேற்கண்ட பிரிவினர் பணியாற்றினர்?

அவர்களில் எந்தெந்த பிரிவினர், காலனி ஆட்சி காலக்கட்டதில்;

தோற்ற சிற்றரச இராணுவத்தினராக, அடிமைப் பணிகளில் இழிவு படுத்தப்பட்ட நிலையில் இருந்தனர்? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.
சங்க காலத்தில், அனைத்து தொழிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் பறை வகை இசை கருவிகளை இசைத்து, புறநானூறு (335:7) கூறும் இலக்கணப்படி, 'பறையராக', குடிமகனாக‌ (citizen) வாழ்ந்து வந்துள்ள பின்னணியில், 'பறை' எப்போது, 'தீண்டத்தகாத' தாள இசைக்கருவியானது? 'பறையர்' எப்போது தீண்டத்தகாத சாதியினராக 'அடையாள' படுத்தப்பட்டனர்?

இன்று ஒவ்வொரு சாதிகளிலும், தங்கள் சாதியினர் மன்னராக இருந்ததாக வெளிப்படும் சான்றுகளில், 'உணர்ச்சிபூர்வமாக மிகைப்படுத்தப்பட்ட' 'இரைச்சலை' தவிர்த்து, உண்மையான சான்றுகளை, ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும்.

இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளை அடுத்து பார்ப்போம்.

பிராமணர்களுக்கு தலைமையிடம் கொடுத்துள்ள சாதி அமைப்பானது,  காலனி ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டது, என்பதற்கான சான்று வருமாறு:

"colonialism in India produced new forms of civil society which have been represented as traditional forms; chief among these is caste itself.................
colonialism seems to have created much of what is now accepted as Indian "tradition," including an autonomous caste structure with the Brahman clearly and unambiguously at the head, village based systems of exchange, .  isolated ceremonial residues of the old regime state, and fetishistic competition for ritual goods that no longer played a vital role in the political system."
'THE INVENTION OF CASTE: CIVIL SOCIETY IN COLONIAL INDIA'
Nicholas B. Dirks (1988)

அந்த புதிய சாதி அமைப்பை காலனி நிர்வாகம் எவ்வாறு உருவாக்கியது? என்பதை விளக்கும் சான்று வருமாறு:

"the permeability of caste groups and the ability of castes and caste associations to react and adapt their caste identity in the relatively short term to their environment. Moreover, it clearly points to the role played by the British administration in the evolution of the caste system."
'British law and caste identity manipulation in colonial
India: the Punjab Alienation of Land Act.' by Guilhem Cassan (2009)

மேற்குறிப்பிட்ட முறையில், இன்றுள்ள சாதி முறையை காலனி ஆட்சியாளர்கள் தமது சுயநலனுக்கு உருவாக்கி, இந்தியர்களை கீழாகவும், 'தீண்டத்தகாதவர்களாகவும்' நடத்தி, சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Sickness), அந்த புதிதாக உருவாக்கப்பட்ட சாதியினரை சிக்க வைத்தனரா? அந்த சமூக ஒப்பீடு நோயில் சிக்கிய சாதியினர், தமக்கு 'கீழாக' கருதிய சாதியினரை இழிவாக, நடத்த, சாதி மோதல்களுக்கான விதையூன்றப்பட்டு, ஏற்கனவே இருந்து வந்த கல்வி, தொழில் முறைகளை சிதைத்து, புதிதாக அரங்கேறிய கல்வி, வேலை வாய்ப்புகளை 'தூண்டில் மீனாக' பயன்படுத்தி, வளர்க்கப்பட்டதா? இன்று வெளிநாட்டு நிதி உதவியில் என்.ஜி.ஓக்கள் அந்த வளர்ச்சி குன்றாமல், பாதுகாத்து வருகிறார்களா? காலனியத்திற்குப்பின் இன்று வரை நடந்து வரும் சாதிக்கலவரங்கள், காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் நடந்ததற்கு சான்றுகள் உண்டா?  சமூக உயர்வு/தாழ்வு, மற்றும் தீண்டாமை ஆகிய நோய்களை, காலனி ஆட்சியாளர்கள், இந்தியர்கள் மனதில் 'செயல்பூர்வமாக' விதைத்து;

அந்த சமூக உளவியல் செயல் நுட்பமானது ( Social Psychological Mechanism), 'இயல்பில்' பலகீனமானவர்களின் பங்களிப்பில், அக சீரழிவை வளர்த்து, தனித்துவமான(Unique)  சமூக சீர்குலைவு பிரிவினை நோயாக வளர்ந்துள்ளதா?


ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா? என்பவையெல்லாம் ஆய்வுக்கு உரிய கேள்விகளாகும்.

அது மட்டுமல்ல; தமிழில் மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வழங்கி வந்த 'இனம்' என்ற சொல்லை, ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்'(Race)  என்ற பொருளில் திரித்து, 'ஆரியர் -திராவிடர்'  என்ற இனச்சிக்கலை காலனிய நலன்களுக்காக உருவாக்கிய சூழ்ச்சிகள் பற்றிய சான்றுகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
'Genetic Evidence of Early Human Migrations in the Indian Ocean Region Disproves Aryan Migration/Invasion Theories'                                                                                     (http://www.academia.edu/7893126/Genetic_Evidence_of_Early_Human_Migrations_in_the_Indian_Ocean_Region_Disproves_Aryan_Migration_Invasion_Theories)
("sound observations shows a single physical types with minor variations pervading the whole of India from Cape Comorin to Afghanistan." DR K Loganathan Krishnan  From: https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/

மேற்கத்திய இறக்குமதியான, 'காஸ்ட்' - 'caste' - என்ற சொல்லானது, இந்திய மொழிகளில், எந்த சமூக செயல்நுட்பத்தில் நுழைந்தது? (The English word "caste" derives from the Spanish and Portuguese casta, which the Oxford English Dictionary quotes John Minsheu's Spanish dictionary (1599) to mean, "race, lineage, or breed".[10] When the Spanish colonized the New World, they used the word to mean a "clan or lineage." However, it was the Portuguese who employed casta in the primary modern sense when they applied it to the thousands of in-marrying hereditary Indian social groups they encountered upon their arrival in India in 1498https://en.wikipedia.org/wiki/Caste  )

'ரேஸ்' (Race) என்ற ஆங்கில சொல்லின் பொருளில், தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லின் பொருளை திரித்தது போல், இந்தியாவில் எந்தெந்த மொழிகளில் இருந்த 'ஜாதி' என்ற சொல்லை திரித்து, இன்றைய சாதி முறை அரங்கேறியது? 

தமிழில் 'சாதி' என்ற சொல்லானது, 'திரள்' என்ற பொருளில் இருந்ததற்கான சான்று வருமாறு:
" பறவைச் சாதி அன்ன"; பெரும்பாணாற்றுப்படை 229


அதே போல், 'சாதி' தொடர்பான இன்னொரு சான்று;

'நீர் வாழ் சாதியும்'; தொல்காப்பியம் பொருள் 9; 44

'இனம்' என்ற தமிழ்ச்சொல்லை, 'ரேஸ்'(Race)  என்ற ஆங்கில சொல்லின் பொருளில் திரித்தது போல, தமிழில் இருந்த 'சாதி' என்ற சொல்லானது, மேலே குறிப்பிட்ட காலனி சூழ்ச்சியில், இன்றுள்ள பொருளில் திரிக்கப்பட்டதா? அந்த சூழ்ச்சியில், தமிழர்களிடையே உயர்வு, தாழ்வு, தீண்டாமை நோய்கள் ஆனவை, புதிதாக, காலனி நிர்வாக வசதிக்காக உருவான 'சாதி' அடையாளங்கள் மூலம் அரங்கேறினவா?
 

அந்த சூழ்ச்சிகரமான அரங்கேற்றத்தில், காலனிய ஆட்சியின் நலன்களுக்காக இவ்வாறு 'புதிய சாதி முறை 'உருவாக்கத்தில், காலனி ஆட்சியில் கல்வி கற்று, வேலை வாய்ப்புகளில் முன்னேறிய பிராமணர்களில், அம்முயற்சிக்கு துணை நின்றவர்கள் பற்றியும், அந்த புதிய சமூகவியல் போக்கில் பின்தங்கியவர்களை முன்னேற்றும் முயற்சிகளில்,  பிராமணர்கள் உள்ளிட்டு பலர் பங்களிப்பு வழங்கியுள்ளது பற்றியும்,  ஆய்வுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அவ்வாறு 'சூழ்ச்சிகரமாக',  தமிழில்   ஏற்கனவே வழக்கில் இருந்த பொருளை திரித்து, 'இனம்', 'சாதி' ஆகியவை தமிழர்களிடையே நுழைந்த பின்னணியில்,  'திராவிடர்' என்ற இன ரீதியிலான சொல்லானது, காலனி கட்டத்தில் (Colony Phase)புதிதாக அரங்கேறியதா?

அதன் மூலம் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களுடன், திராவிட கட்சிகள் வளர்ந்தனவா?


அந்த அடையாள குழப்பங்களை சாதகமாக்கி,  இயல்பில் சிற்றின மனிதர்களாக இருந்தவர்கள் எல்லாம், செல்வாக்கான தீ இனமாக வளர்ந்த போக்கில், தமிழ்வழிக்கல்வியும் (எனவே தமிழும்)  மரணப் பயணத்தில் சிக்க, தமிழ் வேரழிந்த 'தமிங்கீலிசர்கள்', தமிழ்நாட்டில் வளர்ந்து வருகி
றார்களா? இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும்  கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்?

இவை போன்று புதிதாக வெளிப்படும் ஆய்வுமுடிவுகள் பற்றிய கவலையின்றி, 'உணர்ச்சிபூர்வ' போக்கில், கொள்கைகளையும், தலைவர்களையும் "மதிப்பதற்கும் வழிபடுவதற்கும் இடையில் உள்ள வேறுபாடு தமிழ்நாட்டில் மறைந்து விட்டதா?  இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே இந்த போக்கு தமிழ்நாட்டில் மட்டும் தான் இருக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இன்று தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதங்கள் உணர்ச்சிபூர்வ போக்குகளில் மூழ்கியுள்ளதும் அப்போக்குகளின் விளைவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். பெரியாருக்கு முன் தமிழ்நாட்டில் சமூகத்தளத்தில் நடைபெற்ற சீர்திருத்த முயற்சிகள் இருட்டில் போனதற்கும் அப்போக்குகள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்."                         (http://tamilsdirection.blogspot.com/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html)

காலனியத்திற்குப்பின் அறிமுகமான 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ், அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாதிகள் எல்லாம், சங்க கால‌ 'பார்ப்பார், பார்ப்பான், ஐயர், அந்தணர், ஆரியர்' ஆகிய சொற்களுடன் தொடர்புடையவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.(http://tamilsdirection.blogspot.com/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html)

வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியதும், இந்தியாவின் பாரம்பரியத்தை இந்தியர்களே கீழாக நினைக்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார்கள்.( அவர்களை விட உயர்ந்த தொழில் நுட்பமும், கல்விமுறையும் இந்தியாவில் இருந்ததை எப்படி சிதைத்தார்கள் என்பதை அரிய சான்றுகளுடன் வெளிப்படுத்திய புத்தகம் DHARAMPAL • COLLECTED WRITINGS Volume I  Claude Alvares முன்னுரையுடன்) இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு கட்டுரைகள் 'தினமணி' இதழில் வெளிவந்துள்ளன. வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex), வெற்றிகரமாக விதைத்தார்கள். ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்' ; 
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html )

மேற்குறிப்பிட்டவற்றை, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கிய சமூக பொறுப்புடனும் விவாதிக்க வேண்டுகிறேன். எதிராக வெளிப்படும் சான்றுகளை, உண்மையை அறிய விரும்பும் மிகுந்த ஆர்வத்துடன் வரவேற்கிறேன்; உரிய சான்றுகளின் அடிப்படைகளில், எனது கருத்துக்களில் திருத்தங்களை ஈ.வெ.ரா வழியில், கூச்சமின்றி வெளியிட்டு. 

அதற்கு மாறாக;
"தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " 
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html);
என்று என்னை இழிவுபடுத்த நடக்கும் முயற்சிகள் மூலம், எனது ஆய்வுகளை 'அறிவுபூர்வ' விவாதத்திற்குட்படுத்தாமல், 'உணர்ச்சிபூர்வ' இருட்டில் தள்ளுவதால், இழப்பு, எனக்கா? அல்லது 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி நோக்கிய முயற்சிகளுக்கா? அவரவர் அறிவு, அனுபவம், மனசாட்சி மூலம் விடைகள் பெறலாம். 'அகத்தில் சாதி வெறியுடனும்' (தமது சாதி தலைவர்களுடனும், அமைப்புகளுடனும், இதழ்களுடனும் -  தமது முற்போக்கு வட்டத்திற்கு தெரியாமல் -  உறவு கொண்டு), புறத்தில் 'சாதி ஒழிப்பு வீரர்களாகவும்', வலம் வரும் 'இரட்டைவேட' போக்கில், இது வரை வாழ வில்லை; இனியும் வாழப் போவதில்லை. தமிழ்வழிக்கல்வியையும் (எனவே தமிழையும்) மரணப்பயணத்திலிருந்து மீட்கவும், தமிழரின் தொழில் நுட்பங்கள், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை மேற்கத்திய வலையில் சிக்காமல் நவீனப்படுத்தி (modernization without westernization)  மீட்கவும், என்னால் இயன்றவரை முயற்சித்து வருகிறேன். அம்முயற்சிகள் வெற்றிபெற, ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் சேருவது பலன் தரும் என்று கருதினால், அதை பகிரங்கமாக அறிவித்து சேருவேன். தலைவர்களையும், கொள்கைகளையும் வழிபடாமல், அறிவு நேர்மையுடனும் திறந்த மனதுடனும் விமர்சித்து, சுயலாப நோக்கின்றி, தேர்தல் அரசியலில் சிக்காமல், பயணிக்கும் கட்சிகள் தமிழ்நாட்டில் இருந்தால், தெரிவிக்கவும். பரிசீலிக்கிறேன்.

பெரியார் கட்சிகள் எல்லாம்;
அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான(Transparency) , தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள் நடத்துவதை தவிர்த்து;

 முதுகுக்குப்பின்னால் 'கிசுகிசுக்கும்' நோயில் சிக்கியதன் வெளிப்பாடே, மேலே குறிப்பிட்ட என்னை இழிவுபடுத்தும் முயற்சிகளா? ஏற்கனவே 'பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்கள் அதிகரித்து வரும் சூழலில்

பெரியார் கட்சிகள், மரண வாயிலில் உள்ளனவா? என்பது பற்றியும் நான் ஆராய்ந்து வருகிறேன்; எனது ஆய்வுக்கு துணைபுரியும் நூல்களில் சில கீழே;
" why individuals no longer associate with a political challenger pursuing social change, why the ideas initially pursued by dissidents shift in fundamental ways, why the activities selected by challengers are altered, and why formal institutions cease to exist"
'How Social Movements Die' By Christian Davenport

"The existing social formation, within which the problem out of which a new social movement grows, is itself the overall outcome of the objectification and continuing activity of social movements which have originated in the past. So the point is that a social movement, as such, is the ‘middle phase’ of a process which begins in the conditions of a social formation, and ends with a new social formation in which it has merged with all the other subjects in the social formation."

'Jamison: the life and death of social movements';

கிறித்துவ, முஸ்லீம் போன்றவற்றிற்குரிய மதம்(Religion)  என்ற பொருளில், 'இந்து' மதம் என்று காலனிய நுழைவிற்குப்பின் அரங்கேறியதில் உள்ள தவறுகள் பற்றியும்; சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை ஒழிப்பு முயற்சிகளில் சாதிகளுக்கிடையிலான திருமணங்களை ஊக்குவித்தல் பற்றிய விவாதமும்; மேற்கத்திய வலையில் சிக்காமல், இந்தியாவை நேசிக்கும் இந்தியர்களை குறிக்க 'இந்துத்வா' என்ற சொல்லை பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய விவாதமும்;  வேறு சரியான சொல் பற்றிய தேடலும்,  தொடங்கிவிட்டதை , ஆர்.எஸ்.எஸ் இணைய தளம், ராஜீவ்மல்கோத்ரா இணைய தளம், உள்ளிட்ட கீழ்வரும் இணைய தளங்களில் ஆர்வமுள்ளவர்கள் படிக்கலாம்.
http://www.organiser.org/
http://rajivmalhotra.com/

http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/
http://www.quora.com/What-is-Rashtriya-Swayamsevak-Sanghs-RSS-take-on-casteism-How-is-RSS-trying-to-root-out-the-problem-of-casteism

இவை போல, ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும்,  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படுத்தி, பெரியார் கட்சிகளின் இணையதளங்களில் வெளிவந்திருந்தால், தெரிவிக்கவும்.

திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் 'குடிஅரசு' இதழை ஈ.வெ.ரா தொடங்கினார்.

தன்னை எதிர்த்து ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு உள்ளிட்டு பலர் அனுப்பிய மடல்களை அப்படியே 'குடி அரசு' இதழில் வெளியிட்டு, விளக்கம் கொடுத்து, பயணித்தவர், 1944 முதல் , அப்போக்கிலிருந்து திசை திரும்பி, உணர்ச்சிபூர்வமாக அண்ணாதுரையை விமர்சித்து பயணித்ததால், அண்ணாதுரை வலுவாகி;

1949இல் தி.மு.க, தோன்றியதும், அந்த உணர்ச்சிபூர்வ மோதலானது வீரியம் பெற்று, அதில் பாரதிதாசன், இன்றும் பிரசுரிக்க முடியாத அளவுக்கு, அண்ணாதுரை மீதும், ஜீவா மீதும் வசைமாரி 'எழுதி வெளியிட';

அதன் அடுத்த கட்டமாக, 'ஆபாச பேச்சாளர்களும், எழுத்தாளர்களும்' பொது அரங்கில் வலம் வர;

தமிழ்நாட்டின் பொது அரங்கில், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள் மறைய; அந்த போக்கில், அடிப்படைக்கல்வி முதல் பல்கலைக்கழகங்கள்  உள்ளிட்ட  அரசு துறைகளிலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய அரசு துறைகளிலும், ஊழல் வளர; 


மேற்குறிப்பிட்ட வரலாற்று பின்னணியில், அந்த உணர்ச்சிபூர்வ 'கிசுகிசு' இருட்டில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'முற்போக்கு' வேடமிட்ட, சுயலாப கள்வர்கள் வளர்ந்தார்கள்; திருச்சி பெரியார் மையம் அதில் சிக்கி, எனக்கு அதிர்ச்சியையும், நம்பமுடியாத இழப்புகளையும் ஏற்படுத்தி; அந்த 'சுயலாப கள்வர்' உருவான தோற்றம் பற்றிய ஆய்வில், என்னை ஈடுபட தூண்டி; மனித உறவுகளை காவு கொடுத்து பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது.  அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. சட்டத்தின் பிடியில் சிக்காமல், சமூகத்திற்கு கேடான ( விழுப்புரம் 3 கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம், தமிழ்நாட்டில் ஊழல் காரணமான வெள்ள பாதிப்புகள், மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்ற இன்னும் பல) ஊழல் வழிகளில் பணம் ஈட்டுவோரை 'வரைவில் மகளிர்' என்றும், 'அந்த' பணத்தின் பலன்களை அனுபவிக்கும், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சார்ந்த 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முற்போக்கு', 'பிற்போக்கு' அமைப்புகளில் உள்ளவர்களையெல்லாம் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்கள்' என்றும், திருக்குறள் 'பொருட்பாலில்' அடையாளம் காட்டியுள்ளது. ஊழல் ஒழிப்பு ஒழுங்காக நடந்தால், அவர்கள் எல்லாம் விசாரணை வளையத்திற்குள்  வந்தாக வேண்டும்.

வசதி குறைவில், காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு நோயில்' சிக்கிய‌ நபர்களுக்கு, மனித உறவுகளை காவு கொடுத்து, ஊழல் ஒழிப்பு ஒழுங்காக அமுலானால், சிறை செல்ல நேரிடும் சமூக கேடான வழிகளில் வருமானம் ஈட்டும்,  'குறுக்குவழி அதிவேக பணக்காரராகும்' ஏணியாக, 'திருச்சி பெரியார் மையம்' பயன்பட்டதா? அது போன்ற சமூக கிருமிகளை வெறுத்து ஒதுக்காமல், நத்தி பிழைத்தவர்களும், அதே நோயில் சிக்கியவர்களா? தமிழர்களிடையே 'பண்பின்' அடிப்படையில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, 'ரேஸ்' (Race) என்ற பொருளில் திரித்து, 'திராவிடர் கழகம்' தோன்றாமல் இருந்திருந்தால், 'திருச்சி பெரியார் மையம்' தோன்றி, 'இழிவுக்கு இலக்கணமான' மனிதர்கள் மூலம், எனது சமூக வட்டம் சீர்குலைந்திருக்குமா? தமிழ்நாட்டில் குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளில், 'பணத்துக்காக' சீர்குலைவுகள் அதிகரிக்கும் வேகத்தில், (திருச்சி 'அன்னை ஆசிரமம்' மூலம் நானறிந்த வரையில்) முதியோர் இல்லங்களும், கைவிடப்பட்ட குழந்தைகளும், குடும்பங்களில் வன்முறை, கொலை, தற்கொலைகள் 'அதிவேகமாக' அதிகரித்து வருவதும் உண்மையா? சுயலாபங்களுக்காக குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளை காவு கொடுக்கும் சமூக நோயில், இந்தியாவிலேயே, தமிழ்நாடு முன்னணியில் இருந்தால், அந்த நோயின் வளர்ச்சிக்கும், திராவிட இயக்க வளர்ச்சிக்கும், தொடர்பு உண்டா? என்ற ஆய்விலும், நானும் ஈடுபட தூண்டியது.

எனது இசை ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்பட்ட வெளிச்சத்தில், 2006 முதல் இன்றுவரை, கடந்த 10 வருடங்களாக,  அவ்வப்போது, தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு, உள்ளிட்டு ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும், நிலைப்பாடுகளிலும் உள்ள தவறுகளை, அறிவுபூர்வ விவாதத்தை எதிர்நோக்கி, வெளியிட்டு வருகிறேன்.

இதுவரை அவற்றை ஆதரித்தோ, எதிர்த்தோ, குறைகளை சுட்டிக்காட்டியோ, பெரியார் கட்சிகளிடமிருந்து எதுவும் வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. கொள்கை ரீதியில், ஈ.வெ.ரா வலியுறுத்திய 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல், பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருவதை, அது உணர்த்துகிறதா? என்பதும் ஆய்விற்குரியது. சுயலாப கள்வர்களை ஊக்குவிக்கும், அகச்சீரழிவில் சிக்கிய, சமூக இயக்கங்கள் மரணிப்பது என்பது,  தடுக்க இயலாத 'சமூக இய
க்கங்களின் இயக்கவியல்' (Social Movements Dynamics) என்பதையும் ஆய்வுகள் உணர்த்தியுள்ளன.


குறிப்பு:


தமது இதழின் 'வாசகர் நலன்களையே' முதன்மையாக கருதி, டிஜிட்டல் யுகத்தில், இதழியல் தரத்தில் உயர்ந்த இதழ்கள் எல்லாம், இந்தியாவிலும், உலக அளவிலும், பிற இதழ்களில்/இணையத்தில் வெளிவந்தவைகளை தேடி, உரிய பணம்/அங்கீகாரம் வழங்கி, பிரசுரித்துவரும் காலக்கட்டம் இதுவாகும். 'செ.கார்கி எழுதி வரும் கட்டுரையை (‘சாதிய மேல்நிலையாக்கமும் ஆண்ட பரம்பரையும்’;http://www.keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/33637-2017-08-09-04-11-46) படித்ததால், தனது கட்டுரையை வெளியிடவும் அதற்கு அவரிடமிருந்து பதிலையும் எதிர்பார்க்கிறார்.' என்று பொ.முருகானந்தம் 'கீற்று' இதழுக்கு, மேலுள்ள கட்டுரையை அனுப்பினார். ஏற்கனவே பதிவாக வெளிவந்தவற்றை, பிரசுரிக்க, 'கீற்று' விதிமுறையில் இடம் இல்லை என்று பதில் வந்துள்ளது. எழுத்தாளர் செ.கார்கியின் ஈமெயில் எனது தேடலில் கிடைக்கவில்லை. அவர் பார்வைக்கு சென்று, அவரின் மறுப்பு வெளிவரவேண்டும், என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

Thursday, January 28, 2016



ஈ.வெ.ராவின் 'மதுவிலக்கு எதிர்ப்பு'ம், 'பெரியாரின்' வரலாற்று மரணமும்


" கடந்த, 1963 ஜன., 21ல், மதுவுக்கு ஆதரவாக கும்பகோணத்தில், ஈ.வெ.ரா., மாநாடு நடத்தினார். அதே நாளான இன்று, மது விலக்கை அமல்படுத்த முடியாது என அமைச்சர், சட்டசபையில் அறிவித்துள்ளார். இதன்மூலம், ஈ.வெ.ரா., வழியில் நத்தம், எங்களுக்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளார். இந்த அறிவிப்பு மூலம், மது குடிப்போரின் ஒட்டு மொத்த ஆதரவை, அ.தி.மு.க.,வுக்கு அவர் பெற்று தந்துள்ளார்."

ஈ.வெ.ரா உள்ளிட்ட தலைவர்களின் நிலைப்பாடுகள் எல்லாம், எந்த காலக்கட்டத்தில், எந்த சமூக சூழலில் முன்வைக்கப்பட்டது? என்பதை விளக்காமல், இன்றுள்ள பிரச்சினைகளில், அந்த நிலைப்பாடுகளை முன்வைப்பதானது, சமூகத்திற்கு கேடாக முடிய வாய்ப்புள்ளது.

இந்திய விடுதலைக்கு முன், காங்கிரசில் இருந்தபோது, தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரச்சாரத்தில், முக்கிய பங்கு வகித்து, காந்தியால் பாராட்டப்பட்டவர், காங்கிரசிலிருந்து வெளியேறியபின், அதில் தலைகீழ்மாற்றமானது ஏன்? தமிழ்நாட்டில் இரண்டு முறை முதல்வராயிருந்தபோதும், ராஜாஜி 'மதுவிலக்கை' காரணம் காட்டி, வருமான இழப்பை ஈடுகட்ட, ஆயிரக்கணக்கான பள்ளிகளை மூடியதால், ஈ.வெ.ரா மதுவிலக்கு எதிர்ப்பில் தீவிரமானாரா?

அவர் இன்று இருந்திருந்தால், அதே நிலைப்பாட்டில் தொடர்ந்திருப்பாரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

மதுவிலக்கு அமுலில்லாத மற்ற மாநிலங்களை விட, தமிழ்நாட்டில், மிக அதிகமாக, குடியால் சீரழியும் குடும்பங்களும், பள்ளி/கல்லூரி மாணவர்களும் அதிகரித்து,வருவது உண்மையா? உண்மையென்றால், அதற்கான காரணங்கள் யாவை? 

தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களை, 'நஞ்சாக' கருதி, அவர் பயணித்ததன் விளைவுகளையே, தமிழ்நாடு இன்று அனுபவிக்கிறது;

மக்களின் மொழியும், அவர்களின் அடையாளமும், நெருக்கமான தொடர்புள்ளவையாகும். 

தமது மொழி பயனற்றது, என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm

எனவே தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களின் மீட்பும், 'டாஸ்மாக்' மது எதிர்ப்பும், ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாகும்.

இந்திய சமூகத்தில், காலனியத்திற்கு முன் இருந்த நிலை என்ன? வெற்றி பெற்ற அரசர், தோற்ற அரசரின் மக்களை அடிமை படுத்தியது; உள்ளிட்ட பலவகை சமூக பிரிவினைகள் ஆனவை, காலனி ஆட்சியில், சுயநல நோக்கில்,  எவ்வளவு சிக்கலான சமூக செயல்நுட்பத்தில்(complex sociological mechanism), இன்றுள்ள உயர்வு/தாழ்வு/தீண்டாமை நோய்கள் கொண்ட சாதி முறையானது; இந்திய சமூக வரலாற்றில், 'புதிதாக' அரங்கேறியது? என்பது தொடர்பாக, 

வெளிவந்துகொண்டிருக்கும் ஆய்வுகளை பற்றிய கவலையின்றி;

1944இல் முளை விட்டு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை,  'ரேஸ்' (Race)  என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளில் 'திரித்து', 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களையும் உருவாக்கி;

அதில் வளர்ந்த 'பெரியார்' போதையில், என்னைப் போன்றவர்கள், கிழ்வரும் அறிவுரையை கடைபிடிக்காமல், 'திருச்சி பெரியார் மையம்'  மூலம் பலியாகி; (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

‘மனத்தால் மறு இலரேனும், தாம் சேர்ந்த
இனத்தால் இகழப்படுவர்; - புனத்து
வெறி கமழ் சந்தனமும் வேங்கையும் வேமே
எறிபுனம் தீப்பட்டக்கால்.’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 10;


அகத்தில் சீரழிந்த மனிதர்களை,   'தோழர்'களாக கருதி, புறத்தில்  'விமர்சனம், சுய விமர்சனம்' போன்றவைகளின் மீது 'நம்பிக்கை' வைத்து, அணுகுவது என்பதானது, எவ்வளவு ஆபத்தானது என்பதை, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அன்றி, வேறு வழியில் நான் கண்டுபிடித்திருக்க முடியுமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

புலமையை வளர்த்துக் கொள்வதில் ஆர்வமற்ற, உலகில் புதிதாக வெளிவரும் சான்றுகள் பற்றிய 'அறியாமையுடன்', தாம் கையாளும் சான்றுகளின் வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலுமின்றி, சராசரி பொதுஅறிவின் அடிப்படையில்;

'உணர்ச்சிபூர்வ பகுத்தறிவு' பாதையில், முன்னெடுக்கப்பட்ட 'சாதி ஒழிப்பு' வழிகளில், பயணித்து;

இன்று, 1944க்கு முன் இருந்ததை விட, படித்தவர், படிக்காதவர், மாணவர்கள் உள்ளிட்ட எல்லா பிரிவுகளிலும்;

'சாதி வெறி' அதிகரிக்கும் விளைவில் முடிந்துள்ளதா?

'அகத்தில் சாதி வெறியுடனும்' (தமது சாதி தலைவர்களுடனும், அமைப்புகளுடனும், இதழ்களுடனும் -  தமது முற்போக்கு வட்டத்திற்கு தெரியாமல் -  உறவு கொண்டு), புறத்தில் 'சாதி ஒழிப்பு வீரர்களாகவும்', வலம் வரும் 'இரட்டைவேட' கூட்டம் உருவாகியுள்ளது, அதன் தொடர் விளைவா?

மேற்குறிப்பிட்ட ஆணி வேர்கள் மீட்பு முயற்சியில், ஈ.வெ.ராவின் (மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய) சாதி சிக்கலை, நுழைத்து, தடைகளை, உணர்ச்சிபூர்வமாக, 'பெரியார்' ஆதரவாளர்கள் ஏற்படுத்தி வருவது சரியா? 

இன்றைக்கு ஆபத்தை விளைவிக்க கூடிய, ஈ.வெ.ராவின் 'மதுவிலக்கு எதிர்ப்பு' நிலைப்பாட்டை முன்வைப்பது சரியா?

இது போன்ற முயற்சிகள் எல்லாம், தமிழின், தமிழரின் மீட்சிக்கு, 'பெரியாரின்' வரலாற்று மரணத்தை, முன்நிபந்தனையாக்கி விடாதா?

'உணர்ச்சிபூர்வ பகுத்தறிவு' போக்கில், 'சமுக கருத்து கறுப்பு - வெள்ளை நோயில்'  சிக்கி விட்டால்,  எதையும் சரியாகப் பார்க்கத் (‘கண் என்னாம்’ – குறள் 573) தெரியாமல் (ஆராயாமல்),  கருத்தை உருவாக்கிக் கொள்ளும் (‘தேரான் தெளிவும்’ – குறள் 510) நோய்க்கு (opinion sickness),  நாம் ஆளாக நேரிடும். ( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்குக் கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே, திட்டமிட்டு, வேலைசெய்யப்பட்டு, இதற்கு இந்திய தேசிய முலாம் பூசப்படுகிறது"
குடிஅரசு 27.12.1948

1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில், தமிழ்நாட்டின் கனிவளங்களை சூறையாடி, சமூக ஒழுக்கநெறிகளை சீர்குலைத்து, காவிரி, கச்சத்தீவு, முல்லை பெரியாறு உள்ளிட்ட உரிமைகளை காவு கொடுத்து, 'திராவிட வணிக முதலைகள்' தோன்றி, வளர இருக்கும் சமூக செயல்நுட்பம்(Social Mechanism)  பற்றிய அபாய அறிவிப்பை, ஈ.வெ.ரா வெளியிட்டது உண்மையா? பொய்யா?

இன்று ஈ.வெ.ரா உயிரோடிருந்தால்;

"திராவிட‌ வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்குக் கங்காணிகளாகத் தமிழ்நாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே, திட்டமிட்டு, வேலைசெய்யப்பட்டு, இதற்கு 'பெரியார்' முலாம் பூசப்படுகிறது"
 
என்று ஈ.வெ.ரா எச்சரித்திருப்பாரா? மாட்டாரா?

எனவே ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய, தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களின் மீட்பு, 'டாஸ்மாக்' மது எதிர்ப்பு, ஊழல் ஒழிப்பு  போன்றவற்றில், 'பெரியார்' கட்சிகள் கவனம் செலுத்துவார்களா?