Wednesday, November 13, 2013




                         இசையில் ' தீண்டாமை'
        காலனியத்தின் ‘நன்கொடை’யா?



எனது இசை ஆராய்ச்சியில் தேவாரப் பாடல்களில் பறை உடுக்கை போன்ற தாள இசைக் கருவிகள் முக்கிய இடம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தேன்.ஆனால் இன்று இசைக்கப்படும் தேவாரப் பாடல்களில் தாள இசைக் கருவிகளாக இவை இடம் பெறுவதில்லை.பறை, உடுக்கை போன்ற இசைக் கருவிகளுக்கான இத்தகைய 'தீண்டக்தகாத' நிலை ராஜராஜ சோழன் காலத்தில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை.



செவ்விசை (Classical Music),  நாட்டுப்புற இசை(Folk Music)  போன்ற பிரிவுகள் வெள்ளைக்காரர்கள் இங்கு வருவதற்கு முன் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. பெரிய புராணத்தில் வரும் ஆனாய நாயனார் காலம் வரை இத்தகைய பிரிவுகள் தமிழிசையில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.



சங்க காலத்தில் எவ்வாறு இருந்தது என்ற ஆய்வு பல வியப்பான தகவல்களை வெளிப்படுத்தியது.



இன்று நிலவி வரும் சாதிகள் சங்க கால சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விவசாயம்,மீன்பிடித்தல் உள்ளிட்டு அனைத்து பொருளீட்டல் துறைகளில் ஈடுபட்டிருந்த சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பறைவகை இசைக் கருவிகளை இசைத்தற்கு நிறைய சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்ல குடிமகனுக்கான(citizen)  வரையறையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வியப்பைத் தரவல்லதாகும்.



“ துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ”

புறநானூறு 335:  7 -  8



துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இசைப் புலமையுடன் வெவ்வேறு வகையிலான இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர்கள் ஆவர்.துடியன், பாணன், பறையன்,பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. கடம்பன் பற்றிய சான்றுகள் குறைவே.பறை என்பது குறிப்பிட்ட வகையிலான பல தாள இசைக்கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.



சங்க காலத்தில் குடிமக்கள் என்போர் ஏதாவது ஒரு வகை இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இசைத்தவர்கள் சாதி அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் இல்லை. செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளோ, அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ இருந்ததற்கான சான்றுகளோ இல்லை.



இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை. அத்தகைய சான்றுகள் இருப்பின், அவற்றை எனது கவனத்திற்கு யாரேனும் கொண்டு வந்தால்,  ந‌ன்றியுடன் அவரைக் குறிப்பிட்டு - acknowledge செய்து-  அதனை திறந்த மனதுடன் ஆராய்வேன்.



மேற்கத்திய இசை வரலாற்றில் செவ்விசை (Classical Music) தோன்றி உருவான காலக்கட்டம் கி.பி 1550 முதல் 1900 வரை உள்ள காலக் கட்டமாகும். (http://en.wikipedia.org/wiki/Classical_music ).பிரஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் கலை, இலக்கியத் துறைகள் அரசர்கள் - ‍ பிரபுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்று, புதிய திசையில் புதிய சிந்தனையில் மேற்கத்திய உலகில் செவ்வியல் காலம் (Classical Period) தோன்றி வளர்ந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் உருவான செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளை இந்திய சமூகத்திற்குள் புகுத்தி அணுகுவது எப்படி சரியாகும்?



செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகள் அதன்பின் இந்தியாவில்  காலனிய செல்வாக்கில் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. எனவே இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் இந்தியாவில் காலனியத்தின் ‘நன்கொடை’களாக இருக்கவும் வாய்ப்புண்டு.



வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இசைக் கொள்கை(Theory)  என்ற அளவிலும், செய்முறை இசை (Practical Music)  என்ற அளவிலும் இருந்தவை தொடர்பான சான்றுகளின் அடிப்படையில்,  திறந்த மனதுடன் சார்பற்ற ஆய்வினை மேற்கொண்டால், அந்த மூலங்களிலிருந்து இன்று உள்ள செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளும், இசையில் உயர்வு தாழ்வு, தீண்டாமை போன்றவையும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பது பற்றி, வியப்பூட்டும் அரிய தகவல்களும், அவை தொடர்பான சமூக இசை செயல்நுட்பமும் வெளிப்பட வாய்ப்புள்ளது.



காலனியத்தின் பாதிப்புகளில் சிக்கியுள்ள 'கர்நாடக இசை', மற்றும் 'தமிழ் இசை' பற்றிய புரிதலின்றி, அதன் ஆதரவாளர்கள்,  உயர்வு/தாழ்வு 'மோதலில்' ஈடுபட்டு வருவது சரியா? என்பதும் ஆய்வ்ற்குரியதாகும். ( http://musicresearchlibrary.net/omeka/items/show/2446)





Note:
My discovery on ‘Sounds of letters and their relation to music’ (http://musicresearchlibrary.net/omeka/items/show/2439 )  is in consonance (revealing the complimentary dimensions of Tamil & Sanskrit)  with the musical origin of Sanskrit from God Shiva’s Damaru as explained below. In the western inspired classical – folk divisions, Damaru might belong to folk percussion.



“ Shiv sutras are believed to be originated from Shiv's Tandav dance.

नृत्तावसाने नटराजराजो ननाद ढक्कां नवपञ्चवारम्।

उद्धर्त्तुकामः सनकादिसिद्धादिनेतद्विमर्शे शिवसूत्रजालम्॥

At the end of His Cosmic Dance,

Shiva, the Lord of Dance,

with a view to bless the sages Sanaka and so on,

played on His Damaru fourteen times,

from which emerged the following fourteen Sutras,

popularly known as Shiva Sutras or Maheshwara Sutras “


 


No comments:

Post a Comment