Saturday, November 2, 2013

புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'

 

தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தில்(Communication Technology)  பயனுள்ள தகவல்கள் 'சிக்னல்'களாகவும் (signal), மற்றவை இரைச்சலாகவும் (noise) பிரித்து உணரப்படும்.

ஒரு தேவைக்கு சிக்னலாக இருப்பது வேறொரு தேவைக்கு இரைச்சலாக இருப்பதும் உண்டு.

எனவே எது சிக்னல், எது இரைச்சல் என்பது தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பொறுத்தது.

மனிதரின் சிந்தனை மற்றும் திறமைகள் அடைப்படையில் வெளிப்படும் எழுத்து, ஓவியம், இசை,நாட்டியம், சிற்பம் போன்ற அனைத்துமே மனித சமூக வரலாற்றுத் தடயங்களாகும்.

வரலாற்றுத் தடயங்களை ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்கள், அவர்களின் ஆய்வு அணுகுமுறையில் வெளிப்படும்  தகவல்களைத் (signal) தவிர்த்து, மற்றவற்றை தேவையற்றவையாக ‍ இரைச்சலாக (noise)‍ தவிர்ப்பதும் இயல்பே.

பக்தி தொடர்பான புராணங்களும்,இலக்கியங்களும் அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் புதையல்கள். ('The Religious Literature of India is too vast. It includes the Vedas, the Upanishads, the great epics like the Ramayana and Mahabharata, and the Puranas of the Hindus. These are like mines of information about religious beliefs, social systems, people’s manners and customs, political institutions, and conditions of culture.'; http://www.historydiscussion.net/articles/sources-of-ancient-indian-history-archaeological-and-literary-sources/2336 )

அறிவுபூர்வமான சிக்னல்கள் தேடுபவர்களுக்கு சிக்னலும், 'இரைச்சல் மட்டுமே' தேடுபவர்களுக்கு இரைச்சலும் வழங்கும் அமுதசுரபியாக அவை இருக்கின்றன.('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?';
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html) அதனை எனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பின் மூலம் விளக்குவது சரியாக இருக்கும்.

உலகில் இன்று மொழியியல் (Linguistics) என்ற துறை உள்ளது. எனது ஆராய்ச்சி மூலம் இசை மொழியியல்(Musical Linguistics)  என்ற புதிய துறை வெளிப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் விளைவாக 'கணினி இசை மொழியியல்'(Computational Music Linguistics)  என்ற இன்னொரு புதிய துறையும் வெளிப்பட்டு, அவை மூலம் சந்தைப்படுத்தக் கூடிய ( marketable ) பல பயன்பாட்டு மென்பொருட்கள் (Application Software ) உருவாகும் வாய்ப்புகளும் வெளிப்பட்டுள்ளன. (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html)

மேலே குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளுக்கு எனது துணைபுரிந்த முக்கிய மூலங்களாக இருந்தவை சமஸ்கிருதத்தில் வாயு புராணம் (Vayu Puranam), தமிழில் சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட, பல பழந்தமிழ்  நூல்களாகும்.

இவற்றில் உள்ள 'சிக்னல்'களை நான் எவ்வாறு கண்டுபிடித்து பயன்படுத்தி மேலே குறிப்பிட்ட ஆய்வுமுடிவுகளைப்  பெற்றேன் என்பதைச் சுருக்கமாக அடுத்து பார்ப்போம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான பகுதிகளில் பல இடங்களில் உரைகள் சரியான விளக்கங்கள் தரவில்லை என்பதை எனது 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music ) என்ற முனைவர் பட்ட ஆய்வின் போது கண்டறிந்தேன்.( 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள் 2009 சேகர் பதிப்பகம், சென்னை78 + http://musicresearchlibrary.net/omeka/items/show/2444).

அதன்பின் திருக்குறள் 821‍இல் வரும் 'பட்டடை' என்ற சொல் இசையில் ‘ ச -  ‍ப ’ சுர உறவைக் குறிக்கும் சொல் என்ற புரிதலின்றி, உரையாசிரியர்கள் அனைவரும் இக்குறளுக்கு தவறாக விளக்கமளித்துள்ளார்கள். அவை எவ்வாறு தவறு என்பதைச் சுட்டிக்காட்டி, சரியான விளக்கத்தை எனது ஆய்வு மூலம் கண்டறிந்தேன்.
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2512 )

மேற்கண்ட ஆய்வில்,  'சீர்' என்பது வெறும் நேரசை மற்றும் நிரையசை என்ற இரண்டு வகையிலான அசைகளின் கூட்டு என்பது மட்டுமின்றி, அது பாலை நிலை, பண்ணு நிலை, தாளக்கூறுபாடு, வண்ணக்கூறுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாடலின் முக்கிய இசை உட்கூறு ( significant musical sub-structure)  என்பது தெளிவானது.

மேற்சொன்ன புரிதலுடன் திருக்குறள் 118-ஐ ஆய்ந்த போது, அதில் வரும் தூக்கு என்ற சொல் எனது கவனத்தை ஈர்த்தது. ஒன்று முதல் ஏழு சீர்கள் சேர்ந்து பாடலுக்கான தாள இசையில் ஏழு வகை தூக்குகளாக இடம் பெறும் என்பது நானறிவேன். எனவே 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்', உரையாசிரியர்கள் அனைவரும் தெரிவித்தபடி தராசாக இருக்க முடியுமா என்ற ஐயம் எழுந்தது. 

அப்போது சிலப்பதிகாரத்தில் வரும் தலைக்கோல் எனது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது பட்டமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பிலாலான கோல் என்ற விளக்கம் மட்டுமே உரையில் இருந்தது. அது என்ன குறிப்பிட்ட வடிவமைப்பு என்ற ஐயம் எழுந்தபோது, அது தொடர்பான ஒரு புராணக்கதை சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் காணப்பட்டது.
சிலப்பதிகாரம் :

அரங்கேற்றுக் காதை 1 - 3;      அரங்கேற்றுக் காதை 119 -120 ;

கடலாடு காதை       18 - 25;          நடுகற்காதை        100 - 101;

அந்த தலைக் கோல் வடிவம் இந்திரன் மகன் சயந்தனோடு தொடர்பு படுத்தப் பட்டிருந்தது.

எனக்கு தெரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் இது தொடர்பாக கேட்ட போது, இந்திரனுக்கு மகனே கிடையாது என்றும், சயந்தன் இந்திரனின் இன்னொரு பெயராக இருக்கக் கூடும் என்றும் உறுதியாகக் கூறினார். 

அந்த குழப்பத்திலிருந்து தெளிவு பெற சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத் தலைவர் முனைவர் ஆர்.தியாகராஜனை அணுகினேன். அவர் உடனே அவர் துறை நூலகத்திலிருந்த ‘ Puranic Encyclopaedia என்ற நூலை எடுத்து கொடுத்தார். அந்நூலில் இருந்த செய்திகள் எனது குழப்பத்தைத் தெளிவுபடுத்தியதுடன், மேலேக் குறிப்பிட்ட கண்டுபிடிப்புக்கும் திறவுகோலானது. 
(Puranic  Encyclopaedio -- VETTAM MANI  - Motilal Banarsidoss--1979   Patna)

இந்திரனுக்கும் அவர் மனைவி சசிதேவிக்கும் மகனாகப் பிறந்தவனே சயந்தன். (M.B. Adi Parva chap 112, Stanza 3 and 4).

தலைக்கோல் ஏன் சயந்தன் வடிவில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது.

ஒரு சமயம் இந்திர தர்பாரில் தலைமை விருந்தினராக அகஸ்தியர் இருக்கிறார். இந்திரன் அவரை கெளரவிக்க ஊர்வசியை நடனமாட ஏற்பாடு செய்கிறார். நடனத்தின் இடையே இந்திரன் மகன் சயந்தன் அரங்கிற்குள் நுழைகிறான்.சயந்தன் கண்களும் ஊர்வசியின் கண்களும் சந்திக்க காதல் அரும்பியது. அதனால் ஊர்வசியின் கால்கள் தாளத்தில் தடுமாறுகிறது. அதன் விளைவாய் நட‌னத்திற்க்கேற்றவாறு நாரதர் யாழில் வாசித்த இசை தடுமாறுகிறது. அகஸ்தியர் முதலில் சயந்தன் மீது கோபப்பட்டு அவனை பூமியில் மூங்கிலில் தலைக் கோலாக சாபமிடுகிறார். அடுத்தபடியாக ஊர்வசியைப் பூமியில் மாதவியாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். அதன்பின் நாரதருக்கு சாபமிடாமல், அவர் வாசித்த யாழ் பூமியில் மக்களின் யாழாகச் சாபமிடுகிறார்.

அதாவது சுர இசையையும் தாள இசையையும் சமன் செய்து வழி நடத்தும் தலைக் கோலாக , இந்திர சபையில் அந்த சமனைக் கெடுத்த சயந்தன் சாபமிடப்படுவது தான் இங்கு முக்கியமாகும்.

மேலேக் குறிப்பிட்ட தெளிவிற்குப் பின் மேலும் ஆய்வுகள் செய்து ' சமன் செய்து சீர் தூக்கும் கோல்' ஏன் தராசாக இருக்க முடியாது என்றும், அது சுர இசையையும், தாள இசையையும் சமன் செய்து நடனத்திற்கு வழி காட்டும் தலைக் கோலே என்றும் நிறுவியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2510 )

அதன்பின் தமிழில் எழுத்தின் ஒலிக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும் ஆய்வு செய்து வெளியிட்டேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2445)

ஆக வாயு புராணம், எனது 'இசை மொழியியல்' என்ற முக்கிய கண்டுபிடிப்புக்கான சிக்னலை எவ்வாறு வழங்கியது, என்பது தெளிவானது. அதேபோல் பெரிய புராணத்தில் வரும் ஆனாயநாயனார் புராணம் குழலைப் பற்றிய அரிய சிக்னல்களைக் கொண்டுள்ள ஒரு புதையலாகும்.

மேலை நாடுகளில் உள்ள நாத்திகர்கள் இத்தகையப் புரிதலுடனேயே கிறித்துவ மத நூல்களை அணுகினர் என்பதற்கான சான்றும் கீழே உள்லது.

we must remember that the Bible is a collection of many books written centuries apart, and that it in part represents the growth and tells in part the history of a people./ we must remember that the Old Testament is a natural production, that it was written by savages who were slowly crawling toward the light. We must give them credit for the noble things they said, and we must be charitable enough to excuse their faults and even their crimes. 
-Robert G. Ingersoll

Note: 'The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach'; 

http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html

2 comments:

  1. ​உங்கள் ஆய்வு மிக சிறப்பாக உள்ளது.

    ReplyDelete
  2. मुझे जानकारी है, धन्यवाद के लिए साझा करें, इसे बनाए रखें, मैं सराहना करता हूं।

    http://historytayari.com/arya-samaj/

    ReplyDelete