Tuesday, September 15, 2020

தன்மானம் இழந்த தமிழர்கள் வளர்ந்த தமிழ்நாடு? (2)


'நோஞ்சான்' தமிழ்நாட்டில், 

பெரும் பணக்காரர்கள் உருவான இரகசியங்கள்?

 

தமது கிராமத்தில், ஊரில், தெருவில் பொதுப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் இளைஞர்களில் பலருக்கு அவரவர்களுக்கான எலும்புத்துண்டுகளை (குவார்ட்டர், பிரியாணி, செலவுக்கு பணம்) வினியோகித்து, தமது எடுபிடிகளாக்கி, எவ்வாறு குறுக்கு வழிகளில் அதிவேகப் பணக்காரர் ஆவது? என்ற இரகசியங்களை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.(https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

அதன் மூலமாக, அதிக பட்சம் ரூ100 கோடிக்குள் உள்ள பணக்காரர்கள் பட்டியலில் தான் இடம் பிடிக்க முடியும். அதை விட பெரும் பணக்காரர்கள் ஆவது எப்படி? என்பது தொடர்பான இரகசியங்களை இங்கு பார்ப்போம்.‌

உலக அளவில் உள்ள புலமையாளர்கள் பாராட்டும் அளவுக்கு, நமது புலமையை நாம் வளர்க்க வேண்டுமானால், நோஞ்சான் புலமையாளர்களிடமிருந்தும், நோஞ்சான் புலமை ரசிகர்களிடம் இருந்தும் ஒதுங்க வேண்டும், என்பது எனது அனுபவமாகும். அப்போது தான், நமது ஆய்வுகளில் உள்ள குறைபாடுகள் நமது பார்வைக்கு வந்து, நம்மை வளர்த்துக் கொள்ள முடியும்.

நமது ஆய்வுகளை எடைபோட்டு குறைகளைச் சுட்டிக்காட்டும், நிறைகளைப் பாராட்டும் புலமையாளர்களின் சமூக வட்டத்தில் நாம் இடம் பெற முடியும்.

அது போலவே, ரூ100 கோடிக்குள் உள்ள பணக்காரர்களை நமக்கு வாலாட்ட வைத்து, அவர்களுக்கு வாலாட்டும் நோஞ்சான் தமிழர்களை எல்லாம் 'நியுசென்ஸ்' என ஒதுக்கி, அவர்களை எல்லாம் தமக்கு நெருக்கமான சமூக வட்டத்திற்கு வெளியே வைக்க வேண்டும்.

ரூ 1000 கோடிக்கும் அதிகமான பணக்கரர்களுக்கும், அந்த சமூக வட்டத்தில் நம்மை அனுமதிக்க உதவும் மத்திய ஆட்சியின் அதிகார பீடத்தில் உள்ள அல்லது பணி ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கும், 'எந்த வகையிலும்'(?) நமது தகுதி திறமைகளைப் பயன்படுத்தி வாலாட்ட வேண்டும். நமக்கு வாலாட்டும் எடுபிடி பணக்காரர்கள் மூலமாக‌, தமிழ்நாட்டில் நோஞ்சான் தமிழர்கள் மத்தியில் நாம் வளர்த்து வரும் செல்வாக்கும் அதற்கு உதவும்.

தமிழ்நாட்டில் நோஞ்சான் புலமையாளர்களும் நோஞ்சான் தமிழர்களும், 1969 முதல் ஒரே சமூக செயல்நுட்பத்தின் மூலமாக வளர்ந்தவர்கள் ஆவார்கள்.

திராவிட ஆளுங்கட்சித் தலைவர்களில் யார்? யார்? தமிழர்களையும், தமது கட்சிக்காரர்களையும் 'பதர்' போல‌ இரண்டாம் தரத்தினராக நடத்தி, தம்மை தேடி வரும் வடநாட்டு/வெளிநாட்டு முதலாளிகளையும், வடநாட்டு கட்சிகளைச் சார்ந்தவர்களையும், வாசல் வரை வந்து வழியனுப்புபவர்கள்? அந்த தலைவர்களின் 'எடுபிடிகளான பெரியார் சமூக கிருமிகள்' யார்? யார்? என்பது அந்தந்த கட்சிகளில் மேல் மட்டங்களில் உள்ளவர்களுக்கு தெரியும்; மீடியா வெளிச்சத்திற்கு வராமல்.

தமிழ்நாட்டில் விவரமானவர்களுக்கு பொருள் ரீதியிலும், ஏமாந்தவர்களுக்கு உணர்ச்சிபூர்வ ரீதியிலும் 'தீனி' போட்டு, தொண்டர்களை 'வளர்த்து', அவ்வப்போது 'பொது பிரச்சினைகளை' வைத்து, போராடி வரும் 'வாழ்வியல் புத்திசாலி(?) தலைவர்கள்' எல்லாம், வருமானம் ஈட்ட, பல பல புதிய வழிகள் உருவாகி வருகின்றனவா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (https://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html )

இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, ஈ.வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

ஆனால் ஈ.வெ.ரா-வின் கணிப்புக்கு மாறாக, இந்திய விடுதலையில் வடநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் கூலிகளாக வேலை பார்க்க படையெடுத்து வருகிறார்கள். அது மட்டுமல்ல, இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும். (https://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post.html)

தமிழ்நாட்டில் 1969க்கு முன்னும் பின்னும் என்று ஒரு கட்டமாகவும், 1991க்கு முன்னும் பின்னும் என்று இரண்டாவது கட்டமாகவும், பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் கைப்பற்றியுள்ள சொத்து மற்றும் தொழில் வியாபாரங்கள் தொடர்பான உண்மையான தகவல்கள் எல்லாம் அரசு வசம் உள்ள புள்ளி விபரங்களில் வெளிப்பட்ட வாய்ப்பில்லை. (‘பெருநிலக்கிழார்களின் முதுகெலும்பை உடைத்ததா திராவிட இயக்கம்? உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் நிச்சயம் அடிமைப்பட்டே ஆக வேண்டும்’; https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_26.html )

அந்த அளவுக்கு பினாமி மற்றும் அந்நிய செலாவணி மோசடி மூலமாக இந்தியாவிலும் வெளிநாட்டுகளிலும் சொத்துகள் வாங்கும் சமூக செயல்நுட்பம் அதிகரித்து விட்டது.‌ அது மட்டுமல்ல, இந்தியாவையே 'திராவிட' ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது, என்பது மோடி ஆட்சியிலும் வெளிப்பட்டுள்ளது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

எனவே தமிழ்நாட்டில் அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (Maximum Social Range from poor people to very rich people) வாழ்பவர்கள் மட்டுமே தத்தம் அறிவு மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் ஓரளவு யூகிக்க முடியும்.

தமிழ்நாட்டில் வசதியில், வாய்ப்புகளில், சொத்துகளை வாங்கி குவிப்பதில், யார் முன்னணியில் இருக்கிறார்கள்? என்ற ஆய்வின் மூலமே, தமிழர்கள் தமிழ்நாட்டில் 'வளர்ந்து' வருகிறர்களா? 'வீழ்ந்து' வருகிறார்களா? தமிழ்நாடு 'பணக்கார'(?) நாடாகி வருவதற்கு காரணமான 'சமூக செயல்நுட்பத்தில்'(?), தமிழர்கள் சீரழிந்து, இயற்கை வளங்களும் சீரழிந்து, தமிழ்வழிக் கல்வியும் (என‌வே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளனவா? (https://tamilsdirection.blogspot.com/2016/09/1967.html )

என்பது போன்ற ஆராய்ச்சிகளில் ஆர்வமுள்ளவர்கள் ஈடுபடலாம்.

அறிவிலோ உடலிலோ நோஞ்சான்களாக இருக்கும் மனிதர்கள், விரும்பினால் கடும் முயற்சிகள் மூலமாக, அறிவிலும் உடலிலும் வலிமை மிக்கவர்களாக வளர முடியும். அதற்கு மாறாக, தாம் நோஞ்சானாக இருப்பதை மறுத்து, வாய்ப்பேச்சு வீரர்களாக பிறரை ஏமாற்றி, ஒட்டுண்ணிகள் போலவும் வாழ முடியும். அவ்வாறு ஒட்டுண்ணிகள் போல வாழ்பவர்கள் எல்லாம், தத்தம் 'நேர்மை வழிகாட்டியை' தன்மானக்கேடான திசையில் அவ்வப்போது திருத்தி பயணிப்பதையும் தவிர்க்க முடியாது.

குடும்பமாக இருந்தாலும், பணியாற்றும் இடமாக இருந்தாலும்,  கட்சியாக இருந்தாலும், நாடாக இருந்தாலும் அங்குள்ள சூழலானது நோஞ்சான்களை வலிமை மிக்கவர்களாக வளரத் தூண்டும் வகையில் இருக்கலாம்; அல்லது ஒட்டுண்ணிகள் போலவும் வாழத் தூண்டும் வகையிலும் இருக்கலாம்.

இந்தியாவில் 'நோஞ்சான் தமிழர்கள்' வளரும் போக்கில்‌ தமிழ்நாடு இருப்பதானது, தமிழ்நாட்டிற்கும் கேடாகும்; இந்தியாவிற்கும் கேடாகும்.

தலித் முதல் பிராமணர்கள் வரை தத்தம் சாதிகளில் 'பெரிய' மனிதர்களாக வலம் வந்தவர்கள் எல்லாம், கருணாநிதி, ஜெயலலிதா, சசிகலா கால்களில் விழுந்த பின்னரும், 'அதே' செல்வாக்குடன் தத்தம் சாதிகளில் உலா வந்து, அந்தந்த சாதி அமைப்புகளில் 'நோஞ்சான்' நோயைப் பரப்பி வருகின்றனர்.  (https://tamilsdirection.blogspot.com/2020/06/depoliticize.html )

கூட்டுக்குடும்பத்தின் வலிமையானது அக்குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் வலிமையைப் பொறுத்ததாகும்.  உறுப்பினர் எவரும் நோஞ்சானாக இருக்கும் பட்சத்தில், அவர் விரும்பினாலும் மற்ற வலிமையான உறுப்பினர்களுக்கு உள்ள மரியாதை கிடைக்காது. அதே நேரத்தில், கூட்டுக்குடும்பத்தில் அதீத வலிமையுள்ள உறுப்பினருக்கு சிறப்பு மரியாதையே கிடைக்கும்.

நோஞ்சான் கட்சிகளை தமிழ்நாடு அனுமதிக்கும் வரை, யார் பிரதமராக இருந்தாலும், மத்தியில் உள்ள ஆட்சியின் நலன்களுக்காக தமிழ்நாட்டைக் காவு கொடுக்கும் துணிச்சல் வெளிப்படுவதைத் தவிர்க்க முடியாது. (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )

தமிழ்நாடானது நோஞ்சான் கட்சிகளில் செல்வாக்கில் இருப்பதானது, இந்தியாவில் வலிமையான மாநிலங்களில் ஒன்றாகிய கர்நாடக மாநிலத்திற்கு எவ்வளவு சாதகமானது? என்பதை மேலுள்ள பதிவில் விளக்கியுள்ளேன்.

மகராட்டிர மாநில மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் அங்குள்ள பா.ஜ.க உள்ளிட்ட அனைத்து தேசியக்கட்சிகளும் போட்டி போடுகின்றனர். (‘Marathas should get concessions till quota in jobs, educations is restored: BJP’;  https://www.newindianexpress.com/nation/2020/sep/10/marathas-should-get-concessions-till-quota-in-jobs-educations-is-restored-bjp-2195078.html )

கோவாவில் தாய்மொழிவழிக்கல்வி பிரச்சினையில் போதுமான ஆர்வம் காட்டவில்லை என்ற அடிப்படையில் பா.ஜ.கவும் ஆர்.எஸ்.எஸும் உடைந்திருக்கிறது.

தமிழ்நாடு நோஞ்சான் கட்சிகளில் செல்வாக்கில் சிக்கியதால், தனித்தமிழ்நாடு கோரிக்கையானது, எவ்வாறு பொதுவாழ்வு வியாபார முதலில்லாத மூலதனமானது? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_25.html )

நோஞ்சான் கட்சிகளிடமிருந்து தமிழ்நாடு விடுதலையாகாமல், இந்தியாவில் கர்நாடகம், மகராட்டிரம், கோவா போன்ற மாநிலங்களுக்கு உள்ள மதிப்பு தமிழ்நாட்டிற்கு கிடைக்காது. 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' (புறநானூறு)

தமிழர்கள் நோஞ்சான்களாக இருக்கும் வரையில், நோஞ்சான் கட்சிகளின் ஆதிக்கத்தில் தான் தமிழ்நாடு நீடிக்கும். தமிழ்நாட்டின் கனிவளங்கள் ஊழல் பெரும்பசிக்கு இரையாகும். ஊழல் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில், தமிழின் மரணப்பயணமும் தொடரும்.

ஒரு நாட்டில் ஊழல் என்பதானது நிர்வாகப் பிரச்சினை அல்ல.

ஊழல் மூலமாக கண்ணுக்கு தெரியும் அறிகுறிகளையும் தாண்டி,

ஒரு அரசின் சட்டபூர்வ நியாயத்துடனும் (legitimacy of the state), அரசியல் சக்தியானது வெளிப்படும் வடிவ அமைப்புடனும் (the patterns of political power), சிவில் சமூகத்தின் பங்களிப்பின் யோக்கியதையுடனும் (the engagement of civil society) தொடர்புகள் கொண்டதாக அரசியல் விஞ்ஞானிகள் அணுகுகின்றனர். (https://tamilsdirection.blogspot.com/2020/09/1.html)

தமிழ் வலிமையாக வாழ வேண்டுமானால், தமிழர்கள் வலிமையாக வாழ வேண்டும். தமிழர்களின் வலிமையானது அவர்களின் அகத்தின் வலிமையைப் பொறுத்ததாகும்.

தமிழ்நாடு ஊழலற்ற சட்டத்தின் ஆட்சியில் இருந்தால் தான், தமிழர்கள் அகத்தின் வலிமையில் புறத்திலும் வலிமையாக வளர முடியும்.

தமது அக வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும் இருப்பதை, விளம்பரமின்றி தமது புற வாழ்வில் வெளிப்படுத்துப‌வர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும்நன்கு படித்த இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்து வருவதை, பல‌ அனுபவங்கள் எனக்கு உணர்த்தி வருகின்றன. (https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

எனவே தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியானது, நம்பமுடியாத அளவுக்கு விரைவில் சாத்தியமாக வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment