Wednesday, May 27, 2020


பெருநிலக்கிழார்களின் முதுகெலும்பை 

உடைத்ததா திராவிட இயக்கம்?



உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் 



நிச்சயம் அடிமைப்பட்டே ஆக வேண்டும்




'பெருநிலக்கிழார்களின் முதுகெலும்பை உடைத்த திராவிட இயக்கம் | ஜெ. ஜெயரஞ்சன் | Jeyaranjan Economist' என்ற கீழ்வரும் காணொளியை;


.வெ.ரா தொடர்பான எனது நிகழ்கால நிலைப்பாடுகளை ஏற்றுக் கொள்ளாத, லண்டனில் வாழும் எனது நண்பர் தொல்காப்பியன் எனது பார்வைக்கு அனுப்பி வைத்தார்.

எனது தந்தை (1982இல் பணி ஓய்வு பெற்ற) தாசில்தார், விவசாய வருமான வரி அதிகாரி போன்ற பணிகளில் இருந்தவர். எனவே ஆய்வுரையில் வெளிப்படாத சில முக்கியமான தகவல்களை நான் அறிவேன். ஆய்வுரையில் இடம் பெற்றவைகளில், குறிப்பாக திரவியம் பரிந்துரைகளை (திமுகவையும் எம்.ஜி.ஆரையும் பிடிக்காத தேசிய சார்புள்ள எனது தந்தை தெரிவித்தபடி,) துணிச்சலுடன் செய்தவர் எம்.ஜி.ஆர். ஆனால் திமுகவையும் கருணாநிதியையும் குறிப்பிட்ட ஆய்வுரையில் கருணாநிதியை விட துணிச்சலாக செயல்பட்ட எம். ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் குறிப்பிடாதது பெரும் குறையாகாது. ஏனெனில் ஆய்வுரையில் வெளிப்பட்ட வருடங்களைக் கவனிப்பவர்களுக்கு அது தெளிவாகும். ரேசனைப் பயன்படுத்துவதில் புள்ளி விபரப்படி தமிழ்நாடு முன்னணியில் இருப்பதைத் தெரிவித்த ஆய்வுரையில் ரேசன் அரிசி வெளிமாநிலங்களுக்கு கடத்தப்படுவதில் தமிழ்நாடு நம்பமுடியாத அளவுக்கு முன்னணியில் இருப்பதைக் குறிப்பிடாதது முக்கிய குறையாகும்.

அரசு எந்திரங்கள் எல்லாம் ஆளுங்கட்சியின் ஊழல் எந்திரங்களாக எந்த அளவுக்கு சீர் குலைந்தன? என்பதை, அது போன்ற குறைகள் மூலமாகவே கண்டுபிடிக்க முடியும். ஊழலுக்கு துணை போன அதிகாரிகளின் விகிதாச்சாரத்தில் பிராமணர்களை சிறுமமாக்கி, பிராமணரல்லாதோர் அதிகமான 'சமூக நீதியை' முன்னிறுத்தி, அது போன்ற குறைகளை எல்லாம் மறைக்க முடியும். பிராமணரல்லாதோரில் தகுதிகளை நேர்மையாக உயர்த்திக்கொண்ட ஏமாளிகளை ஒதுக்கி, குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெற்று, ஊழல் வழிகளில் பணி நியமனங்கள் நடந்த 'சமூக அநீதி' போக்கையும் மறைக்க முடியும்.

இந்த ஆய்வுரையைக் கேட்ட பின், எனது முயற்சியில் தி. வெளியிட்ட 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' நூலைப் படிப்பது பலன் தரும்.

பழைய நிலக்கிழார்களை ஏமாளியாக்கி, காங்கிரஸ் ஆட்சியில் ஒழுங்காகச் செயல்பட்ட நிலச்சீர்திருத்தச் சட்டங்களை செல்லாக்காசாக்கி, நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் நிலமுள்ள புதிய நிலத்திமிங்கிலங்கள் உருவாகி வருவது, ஆய்வுரை நிகழ்த்தியவரின் பார்வைக்கு வராதது வியப்பைத் தருகிறது.

அந்த புதிய நிலத்திமிங்கிலங்கள் பட்டியலில் எந்தெந்த அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகள், அவர்களை 'ஒட்டி' புத்திசாலித்தனமாக'(?) பிழைத்த உயர் பதவிகளில் இருந்த அதிகாரிகள், அவர்களின் வலைப்பின்னலைப் பயன்படுத்தி அந்த பட்டியலில் இடம் பெற்ற பிற மாநில முதலைகள் பற்றி;

புள்ளி விபரங்களையும் கள ஆய்வுகளையும் நம்பி மேற்கொள்ளப்படும் ஆய்வுகளில் வெளிப்பட வாய்ப்பில்லை.

ஏனெனில் 1969இல் முளைவிட்ட 'அறிவியல் ஊழலானது', 1991 முதல் வீரியம் பெற்று வளர்ந்ததன் விளைவுகள் அவையாகும்.

நெருக்கடி கால ஆட்சியில் தான், 'சர்க்காரியா கமிசன்' மூலமாக, அறிவியல் ஊழல் வெளிப்பட்டது. அந்த குற்றவாளிகள் தண்டிக்கப்படிருந்தால், 1967க்கு முன்பிருந்த ஊழலற்ற ஆட்சி மீண்டும் தமிழ்நாட்டில் அரங்கேறியிருக்கும். பிரதமர் இந்திராகாந்தியின் சுயலாப அரசியலில் அந்த குற்றவாளிகள் தப்பித்தார்கள். அதன் விளைவே, மேற்குறிப்பிட்ட புதிய நிலத்திமிங்கிலங்கள் தமிழ்நாட்டில் வளர வழி வகுத்தது.

தமிழ்நாட்டில் நெருக்கடிகால ஆட்சியை அமுல்படுத்தி, 'சர்க்காரியா கமிசன்' பாணியில் விசாரணை நடந்தால் தான், அந்த பட்டியலில் உள்ளவர்களை எல்லாம் அடையாளம் கண்டு தண்டிக்க முடியும்.

சங்க காலம் முதல் பிறமொழி மன்னர்கள் ஆட்சி, காலனி ஆட்சி உள்ளிட்டு 1967 வரை தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், உள்ளிட்ட இயற்கை வளங்களுக்கு இருந்த சட்டபூர்வ பாதுகாப்பானது 1967 ஆட்சி மாற்றத்திற்குப் பின் சீர் குலைந்து, ஊழல் பெரும்பசிக்கு தீனியானதை இந்த ஆய்வுரை கணக்கில் கொள்ளாதது சரியா?


இந்திய விடுதலையை 'உரிமை மாற்ற' ஏற்பாடாக கருதி, .வெ.ரா வெளியிட்ட கருத்து வருமாறு:

"வடநாட்டு வணிக முதலைகள், மேல்நாட்டு வணிக வேந்தர்களுக்கு கங்காணிகளாகத் தென்னாட்டு மக்களைச் சுரண்டுவதற்கே திட்டமிட்டு, வேலை செய்யப்பட்டு, இதற்கு தேசியமுலாம் பூசப்படுகிறது." குடிஅரசு 27.12.1948

ஆனால் .வெ.ரா-வின் கணிப்புக்கு மாறாக, இந்திய விடுதலையில் வடநாட்டு மக்களே அதிகம் பாதிக்கப்பட்டு, தமிழ்நாட்டில் கூலிகளாக வேலை பார்க்க படையெடுத்து வருகிறார்கள். அது மட்டுமல்ல, இன்று 'வடநாட்டு வணிக முதலைகளை' மிரட்டி, தமது செல்வத்தையும், வியாபாரத்தையும் 'திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள்' பெருக்கி வந்துள்ளது தொடர்பான சான்றுகள், ஊடகங்களில் வெளிவரத் தொடங்கியுள்ளன. 'வார்டு' கவுன்சிலரே பலநூறு கோடி அதிபராகி வருகின்றனர். அதற்கு விலையாக தரப்பட்டதே தமிழுக்கும், தமிழருக்கும்  தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்ட இழப்புகளும் சேதங்களும் ஆகும்

திராவிட ஆட்சிகளின் சமூக, குறிப்பாக கிராம அதிகார அமைப்பில், நடந்துள்ள' மாற்றங்கள் 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (சிலப்பதிகாரம், அரங்கேற்று காதை) சரியான திசையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்ததா? வந்ததை சீர்குலைத்து, ஆதாய அரசியலுக்கு சமூகத்தை அடிமையாக்கி, 'வர்க்கப்போராட்டம், தொழிற்சங்கம்' தீண்டமுடியாத நிலத்திமிங்கிலங்களை உருவாக்கி, தமிழ்நாட்டில் தமிழர்களில் பெரும்பகுதியினரைப் பதர்களாக்கும் விளைவில் முடிந்ததா?

என்ற திசையில்   ஆராய்ச்சியாளர்கள் இனி பயணிக்க வேண்டிய நெருக்கடியை மேற்குறிப்பிட்ட ஆய்வுரையில் இடம் பெறும் ஆய்வுகள் தூண்டினால் வியப்பில்லை.

1967 வரை ஒழுங்காக படித்து, தலித்துகள்/பிற்படுத்தப்பட்டவர்கள் அய்..எஸ், .பி.எஸ் என்று உயர்பதவிகளில் அமர்ந்த போக்கில், அவர்களில் பெரும்பாலோர் சமூக சமத்துவ போக்கில் பயணித்தார்கள்.

1967க்குப்பின் குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், பதவிகளும் பெற்ற போக்கில், இரு சாராரிலும், 'சாதி வெறியை'த் தூண்டி, ‘செல்வம், செல்வாக்கு' 'பெரும்பசி'யாளர்கள் அதிகரித்தார்கள்; சாதித் தலைவர்களும் வளர்ந்தார்கள். சாதி மோதல்களும் வளர்ந்தனவா? என்பதும் மேற்குறிப்பிட்ட ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுகளில் இடம் பெற வேண்டும்
(http://tamilsdirection.blogspot.com/2016/06/blog-post_19.html)

மேற்குறிப்பிட்ட காணொளியில் வெளிப்பட்ட ஆய்வு முடிவுகளைப் பாராட்டுபவர்கள் எல்லாம், அவை தொடர்பான உண்மைகளை அறிய விரும்பினால்;

எனது முயற்சியில் தி. வெளியிட்ட 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' நூலைப் படிப்பதும், கீழ்வரும் பதிவுகளைப் படிப்பதும், அதைத் தொடர்ந்து பாரபட்சமற்ற விவாதத்தினை மேற்கொள்வதும் தமிழ்நாட்டின் மீட்சிக்கு துணை புரியும்.

1. ‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா? வீழ்ந்து வருகிறார்களா?’; 

2. ‘தமிழ்நாடு அறிவுத் துறையிலும், உடலுழைப்புத் துறையிலும் பதர்க்காடாக வளர்ந்து வருகிறதா?’; 

மேற்குறிப்பிட்ட காணொளியில் பாராட்டப்பட்டஎம்.எஸ்.எஸ். பாண்டியனின் ஆராய்ச்சி யோக்கியதையை ஏற்கனவே வெளிப்படுத்தியுள்ளேன்.

‘1994-இல் சென்னை மாநிலக்கல்லூரியில் பணியாற்றிய தொடக்க காலத்தில்.  திருவான்மியூரிலிருந்த 'விடுதலை' ராசேந்திரன் இல்லத்திற்கு அடிக்கடி செல்வேன். அப்போது ஒரு முறை அவர்   M.S.S  பாண்டியனை தமக்கு நெருக்கமான நண்பர் என்று சொல்லி அறிமுகப்படுத்தி, அவரின் '‘M.G.Ramachandran in film and politics- The Image Trap’ by M.S.S pandian (1992) என்ற புத்தகத்தைக் கொடுத்தார். பின் அதைப் படித்த போது, அதில் கீழ்வரும் தவறுகள் என் கண்களில் பட்டன.

1. எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் பற்றிய தவறான தகவல்கள் மற்றும் தவறான புரிதல்கள்

2. நீதிக்கட்சி, தி., தி.மு.கவில் அண்ணா காலம், கருணாநிதி காலம், எம்.ஜி.ஆரின் . .தி.மு. ஆட்சிகள் மற்றும் வரலாற்றுப் பின்னணி பற்றிய தவறான புரிதல்.

உதாரணமாக , எம்.ஜி.ஆர் ஆட்சியில் ஆசிரியர்கள் உள்ளிட்டு பல தரப்பினரும் நடத்திய போராட்டங்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டதாக M.S.S பாண்டியன் அந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். (“Snuffed out even the mildest form of dissent from the working people, whether they were workers, poor peasants,or professionals, such as school teachers, and government employees”(page 12, The Image Trap)

எம்.ஜி.ஆர் ஆட்சியில் கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள், பள்ளி, கல்லூரி ஆசிரியர் போராட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்று 3 முறைகளுக்கு மேல் நான் சிறை சென்றுள்ளேன். எம்.ஜி.ஆருக்கு முன் கலைஞர் ஆட்சியில் பள்ளி ஆசிரியர்கள் மிகப்பெரிய அளவில் போராடி, சிறை சென்றனர். M.S.S பாண்டியன் தெரிவித்துள்ள கருத்தானது, அந்த கலைஞர் ஆட்சியில் நடந்த  பள்ளி ஆசிரியர்கள்  போராட்டத்திற்கே பொருந்தும், என்பதும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் போராட்டங்கள் அந்த கலைஞர் பாணியில் ஒடுக்கப்படவில்லை என்பதோடு, நாங்கள் பங்கேற்ற போராட்டங்களும், இட ஒதுக்கீட்டில் 9000 வருமான வரம்பு ஆணையை எதிர்த்து, தி. உள்ளிட்ட கட்சிகள் நடத்திய போராட்டங்களும் எம்.ஜி.ஆர் ஆட்சியில் பெற்ற வெற்றிகளை , கலைஞர் ஆட்சியில் பெற்றிருக்க முடியாது. எளிதில் அப்போராட்டங்கள் கலைஞர் ஆட்சியில்  ஒடுக்கப்பட்டிருக்கும்.

மேலே குறிப்பிட்டுள்ளது போல், பல தவறுகள் அப்புத்தகத்தில் நான் கண்டுள்ளதாக‌, விடுதலை ராசேந்திரனிடமும்,  M S S பாண்டியனிடமும் தெரிவித்து, அவை பற்றி நான் அவர்களிடம் விவாதிக்க விரும்புவதாகவும் தெரிவித்தேன்.  M S S பாண்டியன் அதில் ஆர்வம் காட்டாததோடு, அதன்பின் என்னுடன் பேசுவதையும் தவிர்த்தது, அப்போது (அவருக்கு வயது என்னை விட குறைவு) அதை ஒரு  immature act ஆகக் கருதி விட்டு விட்டேன். ஆனால் அவரின் மறைவிற்குப்பின், அவரைப் பற்றி இதழ்களில் வெளிவந்துள்ள புகழுரைகளில், அந்த ‘The Image Trap’ ' என்ற புத்தகமே, அவரின் புலமைக்கு பெரும் சான்றாக போற்றப்பட்டுள்ளது.

ஆக கடந்த 20 வருடங்களாக அந்தப் புத்தகத்தில் உள்ள அபத்தமான தவறுகளை, என்னைத் தவிர, வேறு யாரும் சுட்டிக் காட்டவில்லை. அப்படி நான் சுட்டிக் காட்டினாலும் தமிழ்நாட்டில் அதை யாரும் கண்டு கொள்ள வாய்ப்பில்லை.

மேற்கத்திய ஆய்வு பாணியில் 'மிரட்டும்' Reference-களுடன், தமிழில் புத்தகங்கள் எழுதி, முற்போக்கு வட்டாரங்களில் செல்வாக்கு பெற்றவர் மறைந்த அரசு கல்லூரி பேரா. கோ. கேசவன் ஆவார். சுயமரியாதை இயக்கம் பற்றி அவர் எழுதி 'புகழ்' பெற்ற புத்தகத்தினை, நான் ஆர்வமுடன் படித்து, அதில் சுமார் 25 பிழைகள் கண்டுபிடித்து, விடுதலை ராசேந்திரனிடம் கொடுத்தேன். அது பற்றி அவர் 'விடுதலையில்' எழுதாததோடு, நான் கொடுத்த (என்னிடம் வேறு நகலில்லாத) பேப்பரையும் தொலைத்து விட்டார்.

மேற்குறிப்பிட்டது போன்ற அபத்தமான‌ ஆய்வுகளை வரவேற்று, அந்த ஆய்வுகளில் உள்ள குறைகளை வெளிப்படுத்திய மறுப்புகளை எல்லாம் இருட்டில் தள்ளி, அறிவுக்கு விரோதமான 'சுற்றுச்சூழல் அமைப்பு' (ecosystem) தமிழ்நாட்டில் இனியும் நீடிப்பது நல்லதா? டிஜிட்டல் உலகத்தில் விபரம் அறிந்தவர்கள் மத்தியில், மேற்குறிப்பிட்டது போன்ற ஆய்வுகள் எல்லாம் கேலிப்பொருளாகி வருவதை இருட்டில் தள்ள முடியுமா?

அன்றைய பிரதமர் இந்திராகாந்தி உதவியுடன் 'சர்க்காரியா' ஊழல் குற்றவாளிகள் தப்பித்துள்ள பின்னணியில்; தேசியக் கட்சிகளின் சுயநல அரசியலில், தமிழ்நாட்டின் ஊழல் ஒழிப்பானது, பலிகடா ஆகும் போக்கானது, கடந்த பா.. ஆட்சியிலும் தொடர்ந்தது. அதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் ஆதாய அரசியலும், கட்சிகளின் வெற்றிடமாக உள்ள மைக்ரோஉலகத்தில், உள்மறை வேலைத்திட்டத்துடன் (Hidden Agenda)  என்.ஜி.ஓக்களின் மோடி எதிர்ப்பும் சேர்ந்து உருவாக்கிய அரசியல் சூறைக் காற்றில், தினகரன் கட்சியும், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.கவும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளார்கள். மோடி அரசு விழிக்கும் வரை, தினகரன், ஸ்டாலின் என்று ஆட்கள் மாறினாலும், அதே போக்கில் தான் தமிழ்நாடு பயணித்தாக வேண்டும். (‘பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் தோற்ற காங்கிரசும், தமிழ்நாட்டில் வென்ற தி.மு.க-வும்; ஒரே பாணியிலான‌ 'பிராண்ட் மதிப்பு' (Brand Value)  வீழ்ச்சியில்?’; 
http://tamilsdirection.blogspot.com/2019/06/blog-post.html)


வாட்ஸ்அப் பகிர்வு:

"வடமாநில தொழிலாளர்கள் எல்லோரும் ஓடி விட்டார்கள்... இதுதான் சரியான சமயம்.. தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்.... தமிழ் தொழில்துறையின் அனைத்து வேலைகளையும் கைப்பற்றி , தொழில் துறையை தமிழர்கள் கைவசப்படுத்த வேண்டும்.. என்பதாய் ஒரு அன்பர் வெளியிட்டிருந்த காணொளி பதிவை காண நேர்ந்தது....

மிகுந்த ஆச்சர்யமாக இருந்தது அந்த பதிவு... ஆட்கள் பற்றாக்குறையாலோ, வெகு திறமையானவர்கள் என்பதாலோ வடஇந்திய தொழிலாளர்களை தமிழகம் சுவீகரித்துக்கொள்ளவில்லை....

தமிழகத்தில் இருப்பவர்கள் யாரும் உழைக்க தயாரில்லை.... வடஇந்திய தொழிலாளர்கள்  வாங்கும் கூலியை போல இருமடங்கு கூலி வேண்டும்... ஆனால்... வேலை நேரத்தில் எவ்வளவு தூரம் நழுவ முடியுமோ அப்படி நழுவி நேரம் கடத்த வேண்டும்....  தினக்கூலிக்கு வேலைக்கு கூப்பிட்டால் ஒருநாள் வேலையை மூன்றுநாளுக்கு இழுக்க வேண்டும்.. அதுவே இரண்டு ஆள் செய்து முடித்துவிட கூடிய வேலைக்கு ஐந்து ஆள் கூலி பேசி, மூன்று பேராக வந்து அரைநாளிலேயே வேலையை முடித்து விடலாம்.. என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்....

தனியாரிடம் வேலைக்கு போனால் உழைத்தே ஆகவேண்டும்.. அதைவிட ஏரிக்கரையிலேயோ , புளியமரத்தடியிலேயோ உட்கார்ந்தோ/படுத்தோ கதை பேசி நேரம் கடத்தும் 100 நாள் வேலைக்கு போனால் போதும்.... என்ற எண்ணமுள்ள தொழிலாளர்கள்...

அட்வான்ஸாக காசு வாங்கிக்கொண்டோ, ஏதாவது சாமான் வாங்கணும் என்று சொல்லி பணம் வாங்கிக்கொண்டோ கட்டிங் போட்டு மட்டையாகி, வேலை கொடுப்பவரை அலைய விடும் கொத்தனார்கள், ஆசாரிகள், எலெக்ட்ரீஷியன்கள், மெக்கானிக்குகள் ஒரு பக்கம்...

எல்லாவிதத்திலும் நேர்மையையும் , ஒழுக்கத்தையும் தொலைத்துவிட்ட தமிழக தொழிலாளர்கள் ஏற்படுத்திய வெற்றிடங்களில் தான் வடமாநில தொழிலாளர்கள் தங்களை பொ றுத்திக்கொண்டார்கள்.... அவர்கள் என்னவோ தமிழக வேலைவாய்ப்பை தட்டிப்பறித்து விட்டதாய் எப்படி நாக்கூசாமல் சொல்ல முடிகிறது??

உங்களிடம் இருந்து அவர்கள் பிடுங்கவில்லை.... நீங்கள் இலவசங்கள் பின்னால் ஓடுவதற்காகவும், கட்டிங் அடித்து மட்டையாகவும்மழுப்பி சம்பாதிக்கவும் தடை என்று நினைத்து தூக்கி வீசிய "உழைப்பை" அவர்கள் துடைத்து எடுத்து தன்வயமாக்கி கொண்டார்கள்...

உழைக்க தயாரில்லாத மக்கள் வாழும் தேசம் நிச்சயம் அடிமைப்பட்டே ஆக வேண்டும்.... * நமது தமிழகம் அவ்விடத்தை நோக்கிய பயணத்தை முடுக்கி வருடக்கணக்காயிற்று ......!!!"

மேற்குறிப்பிட்ட வாட்ஸ்அப் பகிர்வில் உள்ளவை எல்லாம் எனது அனுபவத்திலும் உண்மையே

'தமிழ், தமிழுணர்வு, சாதி, மத, மொழி, வட்டாரஉணர்வுகள் அடிப்படையில் செயல்பட்டு வரும் கட்சிகளில், தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் பலவகை திருட்டுத்தமிழர்களையோ, அவர்களைப் பாதுகாத்து வரும் வலைப்பின்னலையோ எதிர்த்து செயல்படாத கட்சிகளும், மேற்குறிப்பிட்ட பயணம் வெளிப்பட்டதற்கான காரணங்களில் ஒன்றாகும்.

தாய்மொழி தமிழ் அடையாள அழிப்பின் காரணமாகவே, 'தமிழகம் அவ்விடத்தை நோக்கிய பயணத்தை முடுக்கி வருடக்கணக்காயிற்று' என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.  

மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide), போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும்.'  
(http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm)

தமிழ் அழிவு சுனாமி அறிகுறிகள் பற்றிய கவலையின்றி, ‘நாமும், நமது குடும்பமும் பிழைத்தால் போதும் என்று வாழ்வதன் விளைவாக, இன்னும் 2 தலைமுறைகளில், நமது வாரிசுகள் எல்லாம், தமிழில் படிக்கவும், எழுதவும், பேசவும் தெரியாத, தமிழ் வேரழிந்த, உலக அகதிகளாக வாழ்வதைத் தவிர்க்க முடியுமா? 'தமிழ் எங்கள் இழிவுக்கு நேர்'? என்ற போக்கில், 'தாய்ப்பால் பைத்தியம்' நூலின் நிலைப்பாடு மூலம் .வெ.ரா மேற்கொண்ட சீர்திருத்தமானதுசமூக நீதியையும் காவு வாங்கிய 'தமிழ்வேர்க்கொல்லி'யாகி விட்டதா
(http://tamilsdirection.blogspot.com/2019/03/normal-0-false-false-false-en-us-x-none_16.html)

.வெ.ரா அவர்கள் குருட்டுப் பகுத்தறிவாளராகப் பயணிக்கவில்லை. ஆனால் இன்று அறிவு மஞ்சள் காமாலை நோயில் குருட்டுப் பகுத்தறிவாளர்கள் இருப்பதற்கு 'பெரியார் மூட நம்பிக்கையே' காரணமாகும்
(‘'காட்டுமிராண்டி' தமிழும், 'குருட்டு' பகுத்தறிவும்’’; 
http://tamilsdirection.blogspot.com/2018/12/blog-post.html)

இது போன்ற பதிவுகளை எதிர்த்து, 2018 சூனில், கீழ்வரும் பின்னூட்டம் (Feedback) வந்துள்ளது; 'பெரியார் போதை' எந்த அளவுக்கு ஆபத்தாக வளர்ந்துள்ளது? என்ற கேள்வியையும் எழுப்பி.

தங்கள் மாற்றம் தாய்மொழி, பராம்பரியம், மரபுகளைக் காப்பாற்றும் மீட்டெடுக்கும்  பழைமைப் போக்கில் உள்ளது (இதைப் பற்றியும் பெரியார் 'மலத்தில் அரிசி பொறுக்காதீர்கள்' என்று எச்சரித்துள்ளார். ஆனால் அதை நீங்கள் இப்போது ஏற்க மாட்டீர்கள் என்றே நினைக்கின்றேன்.)” - 'பெரியார்' ஆதரவாளரிடமிருந்து வந்த மடலில்.

தமிழ் இலக்கியங்களை எல்லாம் 'மலமாக' பார்த்த .வெ.ராவின் 'அறிவு மஞ்சள் காமாலை நோய்' என்பதானது,

(திருக்குறள்  573-இன் படி), தமது அறிவு வரை எல்லைகள்  (intellectual limitations) தெரியாமல், தமிழ் இலக்கியங்கள் மட்டுமின்றி, 'எதைப் பார்த்தாலும்' அது போன்ற நோயில், எவரும் சிக்குவதில் இருந்து தப்பிக்க முடியாது; என்பதற்கு மேலே குறிப்பிட்டதானது, முக்கியத்துவம் பெற்ற சான்றானது. 
(‘'திராவிடர், திராவிட' சிறையிலிருந்து, தமிழை எவ்வாறு மீட்க முடியும்?’; 
http://tamilsdirection.blogspot.com/2017/03/blog-post.html)

தமிழ் தொடர்பான 'அறிவு மஞ்சள் காமாலை' நோயினை எதிர்க்காமல், பிரபல பட்டி மன்ற பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் இனியும் மெளனமாக இருப்பதானது, தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் கேடாகாதா?

No comments:

Post a Comment