Tuesday, November 29, 2016

      எனது சாதி அடையாளத்தை தொடருவதில், எனக்கு உடன்பாடில்லை (2)   

              

              எனது சமூக அடையாளம் 'சைவ பறையர்'


“இன்று நகரங்களில் ஊழல் வழிகளில் விரும்பிய 'சாதிச் சான்றிதழை' வாங்கி வருகிறார்களா? அந்த 'சாதிச் சான்றிதழை' சரி பார்க்கும்(verification) சார்பற்ற‌ சமூக செயல் நுணுக்கமும் (Objective Social Mechanism)  சீர் குலைந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குறியதாகும். 

அவ்வாறு நகர்ப் புறத்தில், ஊழல் வழிகளில், விரும்பிய சாதி அடையாளத்தில் வலம் வருபவர்களில் யார், யார், கிராமப்புறங்களில், 'அந்த' சாதியில் மணம் முடித்து, சாதி அடையாளம் சரிபார்க்கும் சமூக செயல்நுட்பத்தை, கிராமங்களிலும் சீர் குலைக்கும் போக்கிற்கு பங்களித்து வருகிறார்கள்? அதன் மூலம் காலனி ஆட்சியில், 'நிர்வாக நலன்களுக்காக', அவர்கள் அட்டவணைப்படுத்திய, சாதி அடையாளம் தொடர்பான, 'நிர்வாக அடையாள செயல்முறை'யும் சீர் குலைந்து வருகிறதா? இன்றைய சாதி அடையாளங்கள் எல்லாம், காலனி நிர்வாக நலன்களுக்காக, எவ்வாறு, 'தான் தோன்றித்தனமாக', சாதி அடையாளப்பட்டியலுக்குட்படுத்தப்பட்டது? என்பதை அடுத்து பார்ப்போம்.

'நத்தமான்', மலையமான், சுருதிமான்', 'கள்ளர், மறவர், அகமுடையார்', 'பள்ளர்' ஆகிய பிரிவினரை ஒரு குழு அடையாளத்திற்குட்படுத்தும் சான்றும் இருக்கிறது.

“ Pallis, Agambadiyars, Surudimans,Malaiyamans, Nattamans of the western hilly and forest area north of Kaveri, and Kallara and perhaps Maravars too of the semi-dry area south of the same river, seem to have composed the army during the Chola period “
Page130 ‘ South Indian Scoiety in Transition; Ancient to Medieval’
By Noboru Karashima- OXFORD University Press 2009

மலைகளிலும் காடுகளிலும் வாழ்ந்து வரவழைக்கப்பட்டவர்களில்;

சோழ அரசில் இராணுவத்தில் பணியாற்றிய;

'பள்ளர்' , காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌, தலித் சாதியினராக வலம் வருகின்றனர்;
'கள்ளர், மறவர், அகமுடையார்', காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌,  'முக்குலத்தோர்' சாதியினராக வலம் வருகின்றனர்;
'நத்தமான்', மலையமான், சுருதிமான்', ஆகிய பிரிவினர்,காலனிய சூழ்ச்சியின் தொடர்ச்சியான‌ இன்று   'உடையார்‍ பார்க்கவ குல'  சாதியினராக வலம் வருகின்றனர்.

அதாவது, இன்றைய சாதி சங்கங்களின் 'அணி வகுப்புகளின் அடையாளங்கள்' எல்லாம், காலனி சூழ்ச்சியின் தொடர்ச்சியா? என்ற, அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய கட்டம் வந்து விட்டது.

"சங்க காலத்தில், அனைத்து தொழிலும் ஈடுபட்டவர்கள் எல்லாம் பறை வகை இசை கருவிகளை இசைத்து, புறநானூறு (335:7) கூறும் இலக்கணப்படி, 'பறையராக', குடிமகனாக‌ (citizen) வாழ்ந்து வந்துள்ள பின்னணியில், 'பறை' எப்போது, 'தீண்டத்தகாத' தாள இசைக்கருவியானது? 'பறையர்' எப்போது தீண்டத்தகாத சாதியினராக 'அடையாள' படுத்தப்பட்டனர்?" என்பதையும்;

"இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா? என்ற கேள்வியை எழுப்பும் சான்றுகளை"யும்;( http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )” என்பதையும்;

1925இல் காங்கிரசிலிருந்து வெளியேறி, 'சுயமரியாதை' இயக்கம் தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள்;

'சாதி', 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சி வலையில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, பயணித்ததன் விளைவாக 1967இல் 'திராவிட முன்னேற்ற கழகம்' ஆட்சிக்கு வந்த பின், 'திராவிட' கட்சிகளின் ஆட்சிகளில், தமிழர்கள் தமது இயல்பான சுயமரியாதையையும் இழந்து, பணம் சம்பாதிக்க எவர் காலிலும், எப்போதும் விழ 'போட்டி போடும்', 'அவமரியாதை' தமிழர் நோயை வளர்த்த விளைவில் முடிந்துள்ளதா?

ஒழுக்கக்கேடான 'தரகு' மற்றும் 'குறுக்கு வழி' 'அதிவேக' பணக்காரர்களை 'மதித்து' நெருக்கமாகும் அசிங்கத்தில், படித்தவர்கள், பாமரர்கள் என்ற வேறுபாடின்றி, அது முடிந்துள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ள சமூக சூழலில்;


'பெரியார் சமூக கிருமிகளால்' எனது குடும்பத்தில் ஏற்பட்ட சீர்குலைவிற்குப்பின், (http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html );

என்னுடன் குடும்ப உறவில் தொடரும், சிங்கப்பூரில் வாழும் எனது மகனைத் தவிர்த்து;

சமூக நோயால் விளைந்த எனது குடும்ப சீர்குலைவை தனிப்பட்ட பிரச்சினையாக அணுகாமல், சமூக சீர்குலைவிற்கு எதிரான போரில் எனது பங்களிப்பாக:

தமிழ்நாட்டில், 'பெரியார்' இயக்கத்தில் 'சுயலாப' நோக்கின்றி, எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம், உள்ளிட்ட இன்னும் பல கஷ்ட நஷ்டங்களின் 'பலனாக', 'அவ மரியாதை' தமிழராக இருக்க விரும்பாததால், நான் 'குடும்ப உறவற்ற, சுயசம்பாத்தியத்தில், உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) வாழும், 'சுயமரியாதையுள்ள‌ அனாதை' என்று அடையாளம் பெறலாம்;(குறிப்பு கீழே) அல்லது இப்போது எனக்கு பாதுகாவலர்களாக இருப்பவர்கள் அடையாளத்தில், நான் 'பறையர்' என்ற அடையாளம் பெறலாம்; சாகும் போது, எனக்கு ஒரு அடையாளம் தேவை என்றால், அது 'இந்து சைவ‌ பறையர்' என்று இருப்பதையே நான் விரும்புவேன்; எனது இசை ஆராய்ச்சிகள் மூலம் பெற்ற அறிவின் காரணமாகவும்.( ‘Experiencing God, the Infinite,through Resonance’; http://veepandi.blogspot.in/ இக்கட்டுரை தொடர்பான அறிவுபூர்வ விமர்சனத்தை, ஆங்கில அறிவுள்ள 'பெரியார்' கொள்கையாளர்களிடமிருந்து வரவேற்கிறேன். Email:pannpandi@yahoo.co.in) மேற்கத்திய எழுத்தாளர்களும், கணிதத்திலும், 'பறையர்' என்ற சொல்லை தவறாக பயன்படுத்துவதை, உரிய சான்றுகளுடன் கண்டித்தும் பதிவு செய்துள்ளேன். (‘Can the ancient Tamil word ‘pariah’ be rescued from the misuse in the western world?’; http://tamilsdirection.blogspot.in/2016/09/can-ancient-tamil-word-pariah-be.html )

என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.( http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_58.html )

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்து'(?), வெளியில் தெரிந்தும், தெரியாமலும், திராவிட அரசியல் கொள்ளைக் குடும்ப வலைப்பின்னலில் இடம் பெற்று, 'அதிவேக பணக்காரராகி', அதோடு திருப்தி அடையாமல், 'சாதி', 'இனம்', தொடர்பான இது போன்ற ஆய்வுகளை படித்து விளங்கிக் கொள்ளும், விவாதிக்கும் அறிவில்லாமல், இன்னும் 'பார்ப்பன எதிர்ப்பு', 'ஊழல் எதிர்ப்பு' என்று பொது வாழ்வு வியாபாரங்களில் ஈடுபடும் போக்கானது, சமூகத்தில் சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை, ஊழல் உள்ளிட்ட சமூக நோய்களை ஒழிக்க, எந்த அளவுக்கு தடையாக இருக்கிறது? 1967க்கு முன், 'தேசியம்' என்ற முகமூடியுடன் இந்தியாவில் ஊழல் அரங்கேறியபோதும், ஊழலற்ற மாநிலமாக இருந்த தமிழ்நாட்டில், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, சமூக நீதி' என்ற 'திராவிட' முகமூடிகளுடன் அரங்கேறிய ஊழலானது, அதையும் விஞ்சி, எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்த 'பெரியார் சமூக கிருமி'களும், எவ்வாறு 'சங்கமமானார்கள்'? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மோடி ஆட்சியில், தமிழ்நாட்டில் பாரபட்சமற்ற ஊழல் ஒழிப்பு, எந்த அளவுக்கு வெற்றி பெறுகிறதோ, அந்த அளவுக்கே, அந்த சமூக நோய்களிலிருந்து, தமிழ்நாடு விடுபட வாய்ப்பிருக்கிறது. சமூக சீர்திருத்த முயற்சிகளில், ஊழல் எவ்வாறு ஊடுருவி, 'திரிதலை' தூண்டி, சமூகத்தை கெடுக்க முடியும்? என்பதற்கு, இந்தியாவிலும், உலகத்திலும் தனித்துவமான சமூக பரிசோதனை களமாக தமிழ்நாடு இருக்கிறது. (தமிழ்நாடு: தனித்துவமான சமுகவியல் ஆய்வு பரிசோதனைக் களம் ( Tamilnadu: Unique Sociological Research Experimental Laboratory)’; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html

இன்றைய இட ஒதுக்கீட்டில், 'பலன்' பெறுபவர்களில் பெரும்பாலோர் படித்த, வசதியான, ஊழல், செல்வாக்கு வழிமுறைகளில் திறமைசாலிகளின் குழந்தைகளா? அல்லது ஏழை, தற்குறி பெற்றோர்களின் குழந்தைகளா? என்ற ஆய்வே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் 'சமூக நீதி' வளந்துள்ளதா? அல்லது சமூகத்திற்கு கேடான, 'தமிழ்வேரழிந்த தமிங்கிலீசர்களை' வளர்க்கும், 'வீக்க' நோயாக, 'சமூக நீதி' திரிந்து விட்டதா? என்பதும் தெளிவாகும். அந்த திரிதலிலிருந்து, 'சமூக நீதியை' மீட்க, தமிழ்வழிக் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 'இட ஒதுக்கீட்டில் பலன் பெற வேண்டும்' என்ற சட்டத்திருத்தம் வேண்டி, தமிழ் ஆர்வலர்களும்/அமைப்புகளும்  கோரிக்கையாவது முன்வைப்பார்களா, போராடாவிட்டாலும்? (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

மேலே குறிப்பிட்ட பதிவு தொடர்பாக, எனது ஆய்வுகளை ஊக்குவித்து வரும், ஆஸ்திரேலியாவில் வாழும் திரு.மா.அருச்சுனமணி அவர்கள் அனுப்பியுள்ள, 'சாதி' தொடர்பான விளக்கம் கீழே உள்ளது.

'சாதி', 'இனம்' தொடர்பாக மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கிய மன அடிமைப் போக்கிலிருந்து நாம் விடுதலையாகி, அந்த சூழ்ச்சியிலிருந்து தமிழையும் விடுவிப்பதன் மூலமே;

அகத்திலும், புறத்திலும் நேர்மையுடன், நாம் சாதி உயர்வு, தாழ்வு, 'தீண்டாமை' ஆகியவற்றை ஒழிப்பதில் பங்களித்து; 

'சிற்றினத்தின்' ஆதிக்கத்தை வீழ்த்தி, தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும் என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

திரு.மா.அருச்சுனமணி அவர்கள் அனுப்பியுள்ள, 'சாதி' தொடர்பான விளக்கம்
சாதி பற்றிய சொல்லாய்வு 
========================

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி (http://www. tamilvu.org/library/dicIndex. htm) சாதி என்ற சொல்லிற்குத் தரும் பொருட்கள்.  

  1. தேக்கு
  2. திப்பிலி
  3. பிரம்பு
  4. பிரப்பம்பாய்
  5. ஆடாதோடை
  6. கள் (toddy)
  7. புழுகுச் சட்டம் - perfume sac of a civet cat
[சடாய்த்தல் = செழித்தல். சடாய் --> சதாய் --> சாதி ]

சாதி என்ற தமிழ்ச் சொல்லிற்கும் பிறப்பு, இனம், குலம், தொழில் என்பவற்றிற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என இதனால் தெரிகிறது.

தமிழர்களால் கிரந்தத்தில் (எட்டாம் நூற்றண்டளவில்) எழுதப்பட்ட சைவ ஆகமங்களில் ஜாதி (தமிழில் சாதி) என்ற சொல் உயிர்கள் (ஆன்மாக்கள்) எடுக்கக்கூடிய எழுவகை பிறப்புக்களை (தாவரம், விலங்குகள், பறவைகள், மனிதர் முதலியனவற்றை) குறித்தனவே அன்றி, மனிதருக்குள் உள்ள பாகுபாடுகளை அல்ல.

(உ-ம்)
பிராரப்த வினை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து பயனைக் கொடுக்கும். அந்தப் பிரிவுகள் ஜாதிப்பிரதம், ஆயுட்பிரதம், போகப்பிரதம் என கூறப்படும். பிரதம் என்றால் கொடுப்பது எனப் பொருள்.

ஜாதிப்பிரதம் என்பது உயிர், உடல் எடுப்பதற்கு உரிய பிறப்பு வகையைத் தீர்மானிப்பது. விலங்காகப் பிறக்க வேண்டுமா, பறவையாகப் பிறக்க வேண்டுமா, மானுட உடல் எடுக்க வேண்டுமா என முடிவு செய்வது இது. உலகில் எந்த இடத்தில் பிறக்கவேண்டும் எனத் தீர்மானிப்பதும் இதுவே. (முனைவர் சபாரத்தினம் சிவாசாரியார் அவர்களின் கன்ம மலம் எனும் கட்டுரையிலிருந்து)

ஆனால், இதே  ஜாதிப்பிரதம் என்ற சொல்லிற்கு, 19, 20ஆம் நாற்றாண்டுகளில் உரை எழுதியவர்கள் அது குடிப்பிறப்பு, குலம் முதலியவற்றைத் தீர்மானிக்கும் எனக் கூசாமல் எழுதுகிறார்கள். 

இது, வீரபாண்டியன் ஐயா அவர்கள் கூறுவதுபோல் காலனி ஆதிக்கத்தின்  விளைவாக  ஏற்பட்ட மாற்றமாகவே இருக்கவேண்டும்.

அன்புடன்
மா அருச்சுனமணி
சிட்னி, ஆத்திரரேலியா

குறிப்பு: பொதுவாழ்வில் தாம் ஏற்றுக்கொண்ட 'பெரியார்' கொள்கையால் கண்டிக்கப்பட்ட, பாரம்பரிய பண்பாடுகள் தொடர்புடைய குடும்ப மதிப்பீடுகளையும், சாதி உறவுகளையும், எதிர்த்து, 1967க்கு முன் சமூகத்தில் சொந்த வாழ்வில் இழப்புகளை சந்தித்த தியாகிகளை 'முட்டாள்களாக' கருதி;
 
அவ்வாறு எதிர்க்காமல், அந்த குடும்ப மதிப்பீடுகளையும், சாதி உறவுகளையும் பேணி, 'பாதுகாப்பு தடைகளுடன்' (Security Filters) ; 


அக்கொள்கையால் விளையும் சமூக நோய்களிலிருந்து, தம்மையும், தமது குடும்பத்தையும் பாதுகாத்துக் கொண்டு, அறிவுபூர்வ விமர்சன பார்வையின்றி பயணித்த, 'பெரியார்' கொள்கையாளர்களின் எண்ணிக்கையானது, 1967க்கு பின், 'அதிவேகமாக' வளர்ந்துள்ளதா? அதனால் உணர்ச்சிபூர்வ வழிபாட்டு போக்குகள் எல்லாம், 'பெரியார் சமூக கிருமிகளின்' அதிவேக வளர்ச்சிக்கு 'வினை ஊக்கி' (Catalyst) ஆனதா? அந்த போக்கிலிருந்து விலகி, 'அந்த முட்டாள்களின்' திசையில், நான் பயணித்துள்ளேனா? ஈ.வெ.ரா அவர்களும், அவரை முன்மாதிரியாக கொண்டு பயணித்தவர்களும், வரலாற்றில், 'சாதி'. 'இனம்' தொடர்பான காலனி சூழ்ச்சியில் சிக்கி  வாழ்ந்த முட்டாள்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமது மனசாட்சிக்குட்பட்டு, அறிவு நேர்மையுடனும் திறந்த மனதுடனும், தமது வரை எல்லைகள் (limitations) பற்றிய புரிதலுடனும், 'தவறு' என்று வெளிப்படுபவைகளை 'ஈகோ' (Ego) சிக்கலின்றி, ஈ.வெ.ரா அவர்கள் வழியில், பகிரங்கமாக ஒப்புக் கொண்டு திருத்தி, பயணத்தை நான் தொடர்வதால், 'அவர்களின் தியாகங்கள் 'பெரியார் சமூக கிருமி' வளர்ச்சிக்கான உரங்கள் அல்ல‌', என்று நிரூபிக்கும் திசையில் பயணிக்கிறேன். எனது ஆய்வுத் திட்டங்களில் (R & D Projects), நான் பெற்று வரும் வெற்றிகளின் இரகசியமும், அதே அணுகுமுறையாகும். ‘The Alchemist’  என்ற உலக புகழ் பெற்ற நாவலின் ஆசிரியர் பவுலோ கொயெல்கோ (Paulo Coelho; https://en.wikipedia.org/wiki/Paulo_Coelho ) தெரிவித்த கீழ்வரும் வெற்றியின் சூட்சமத்தை, நான் அனுபவபூர்வமாக உணர்ந்த வழிமுறையும் அதுவேயாகும். ("when we interact with birds, trees & inanimate things, we do not need to be as alert as we need to do with the ‘insecure’ human beings, to avoid the following pitfall of the infection of comparison. "- ‘Joyful Life: Do they, the inanimate, have life?’; http://veepandi.blogspot.in/2013/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

“நீ விரும்புவதை அடைய, அண்டத்தில் உள்ள அனைத்துமே உனது வெற்றிக்கு துணை நிற்கும்.”

"When you want something, all the universe conspires in helping you to achieve it."- Paulo Coelho

No comments:

Post a Comment