Sunday, April 22, 2018


ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்; 

 

'பெரியார்' சிறையிலிருந்து மீளும் .வெ.ரா? (1)



பிரபலமான நபர்களில் நானறிந்தது வரையில், தமது 'பிம்பத்தை' பற்றிய கவலையின்றி, தமது சுயசரிதையில், காந்தி தனது நிர்வாண பரிசோதனைகளை மறைத்தது போல மறைக்காமல், ஒளிவு மறைவின்றி தமது குறைபாடுகளை வெளிப்படுத்தியவர் பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆவார். நிகழ்காலத்தில் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர்களில் பவ்லோ கொயெல்கோவின் (https://en.wikipedia.org/wiki/Paulo_Coelho ) ஒத்துழைப்புடன் எழுதப்பட்ட வாழ்க்கை சரிதை நூலிலும் (Biography) அதனைக் கண்டேன். 

இந்தியாவில் தான் பொதுவாழ்வில் நுழைவதற்கு முன் 'அனுபவித்த' காமக் களியாட்டங்களை எல்லாம் ஒளிவு மறைவின்றி எழுதி வெளிப்படுத்திய ஒரே தலைவர் ஈ.வெ.ரா ஆவார். அது போல பொதுவாழ்வில் நுழைந்து, பின்னர் மேற்கத்திய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அங்கு இருந்து 'நிர்வாண சபை'கள் பற்றி அறிந்து கொள்ள, கூச்சமின்றி, அந்த சபையின் விதிமுறைகளுக்கு உட்பட்டு, நிர்வாணமாக சென்று புகைப்படம் எடுத்து, அந்த அனுபவத்தை மட்டுமின்றி, அந்த நிர்வாண சபையின் கொள்கைகள் பற்றி, தமது 'குடி அரசு' இதழில் தொடர்கட்டுரைகளும் வெளியிட்டுள்ளார்.

.வெ.ரா தொடர்பாக ஒப்பீட்டளவில் முழுவதும் அறிந்த புலமையுள்ள வெகுசிலரில் ஒருவராகிய தஞ்சை மருதவாணன் கீழ்வரும் தகவலை எனக்கு தெரிவித்தார்.

சென்னை பெரியார் திடலில் 'பெரியார் நூற்றாண்டு விழா' அரங்கில் பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்திருந்த தஞ்சை மருதவாணனிடம், அவருக்கு அருகில் இருந்த நபர், .வெ.ரா தொடர்பான ஒரு அபூர்வமான தகவலை தெரிவித்துள்ளார். அவர் தான் நடத்தி வந்த இதழில், .வெ.ராவின் இளமைப்பருவ காமக் களியாட்டங்களை எல்லாம் தொடர்கட்டுரையாக எழுதி, 'பிளாக்மெயில்' செய்து பணம் கறக்கும் நோக்கில் .வெ.ராவை சந்தித்து அந்த கட்டுரைகளை காண்பித்தாராம். அதற்கு .வெ.ரா, "நானும் படித்தேன். இன்னும் எழுது. எல்லாமும் எல்லாருக்கும் தெரிய வேண்டும்." என்று உற்சாகமாக சொன்னாராம். வந்தவர் அதிர்ச்சிக்குள்ளாகி, "இப்படி ஒரு மனிதர் உலகத்தில் இருக்க முடியுமா?" என்று வியந்து, அன்று முதல் 'பெரியார்' ஆதரவாளராக பயணிக்கத் தொடங்கினாராம்.

.வெ.ரா அவர்கள் எந்த அளவுக்கு எளிமையாக, வழிபாட்டுப் போக்கினை ஊக்குவிக்காமல் (உடலும் மனதும் பிறர் சார்பின்றி வாழ்ந்தது வரையில்; Physically & mentally independent) வெளிப்படையாக, கோபமூட்டும் கேள்விகளுக்கு உணர்ச்சி வசப்படாமல், பொறுமையாக வாழ்ந்தார் ( உதாரணமாக; கடவுள் இராமர் படத்தை செருப்பால் அடித்த உங்கள் பெயரில் 'ராமசாமி' என்று இருப்பது சரியா?" என்று கேட்ட போது, " அது என் பெற்றோர் வைத்த பெயர். அது உனக்கு பிடிக்கவில்லையென்றால், என்னை 'மயிறு' என்று உனக்கு பிடித்த பெயரில் கூப்பிடு. எனக்கு ஆட்சேபணையில்லை" என்று பதில் சொன்னார்) பயணித்தார் என்பதும்;

தமது கொள்கைக்கு எதிரான புத்தகங்களை, திரைப்படங்களை தடை செய்யுமாறு கோராமல், அவற்றை எல்லாம் அறிவுபூர்வமாக மறுத்து தமது பிரச்சாரத்திற்கான வாய்ப்புகளாக கருதி பயணித்தவர் என்பதும்;

மாணவர்களை போராட்டத்தில் ஈடுபடுத்துவதும், 'பந்த்', 'உண்ணவிரதம்' போன்றவைகள் எல்லாம் பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும், காந்தி அறிமுகப்படுத்திய 'காலித்தன, சண்டித்தன' போராட்டங்கள் என்றும் கண்டித்து, 'அரசியல் சட்ட எரிப்பு' உள்ளிட்டு கடும் தண்டனை பெறும் வாய்ப்புள்ள போராட்டங்களை பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் பொது அமைதிக்கும் கேடின்றி நடத்தி, கைதான போது 'எரித்தது சட்டமல்ல, வெறும் காகிதமே' என்று சொல்லி தப்பிக்காமல், எதிர்வழக்காடாமல், ஜாமினில் வெளிவராமல், அதற்கான சிறைத்தண்டனையை அவரும், அவரின் தொண்டர்களும் அனுபவித்த காரணத்தால், அவரின் கொள்கை எதிரிகளும் அவரை மதித்தார்கள்; என்பதும்;

அப்படிப்பட்ட .வெ.ரா அவர்களை 'பெரியார்' சிறையில் அடைத்து, 'பெரியார்' கட்சிகள் பயணித்து வருவதானது;

மேலே குறிப்பிட்ட .வெ.ராவின் பாதையிலிருந்து, தாங்கள் எந்த அளவுக்கு தடம் புரண்டு பயணிக்கிறார்கள்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் அறியும் தடைகளாகவா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும். அது மட்டுமல்ல, 'பெரியார்' சிறையிலிருந்து ஈ.வெ.ரா அவர்கள் விடுதலை பெறுவதை பொறுத்தே, 'பார்ப்பன எதிர்ப்பு' பொதுவாழ்வு வியாபாரத்தில் 'ருசி கண்ட பூனைகளின்' ஆட்டங்கள் அடங்கி (http://tamilsdirection.blogspot.sg/2018/03/2.html ) ;

தமிழும், தமிழ்நாடும் மீளும்; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.


தி. சார்பில் 'தாலி அகற்றும் போராட்டம்' அறிவிப்பதற்கு முன், நானறிந்தது வரையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான மாணவர்களின் நிலை எவ்வாறு இருந்தது? என்பதை கீழ்வரும் பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன்.

‘"பெரியாரைத் தெரியுமா?" " தாடியோடு, கறுப்புசட்டை போட்டிருப்பார். அதற்கு மேல் ஏதும் தெரியாது" சி.பி.எஸ். (CBSE) பள்ளியில் +1 படிக்கும் மாணவனின் பதில்.

'விவேகானந்தரைத் தெரியுமா?'  'தெரியாது சார். யார் அவர்? ' பாலிடெக்னிக் படிக்கும் மாணவரின் பதில்.

'பெரியார் தெரியுமா?' சற்று யோசித்து "சாமி இல்லைன்னு சொன்னவர். அதுக்கு மேல அவரைப் பற்றி எதுவும் தெரியாது." பி.எஸ்ஸி (கணினி அறிவியல்) பட்ட வகுப்பில் முதல் இரண்டு ரேங்க் மதிப்பெண்கள் வாங்கும் மாணவி.

"பொது அறிவை வளர்த்து கொண்டால் தானே, வேலைவாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி பெறலாம்." என்று நான் கூறினேன்." அப்போது அதற்கான புத்தகம் வாங்கிப் படித்துக் கொள்ளலாம். சார்' " என்று சொல்லி, இணையத்தில் 'கூகுள்' செய்திகள் படித்துக் கொண்டே, அடுத்து கேட்ட கேள்வி:" சிறிசேனா யார் சார்?". உடனே நான் ' ராஜபட்சே யார் என்று தெரியுமா?" என்றேன். அந்த பெண் " யார் சார் அவர்?" என்று கேள்வி எழுப்ப, அதிர்ந்து போனேன்.

ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்கள் தமிழையும் ஒரு பாடமாகப் படித்தாலும், தமிழ்ப் பத்திரிக்கைகளைப் படிக்கத் தெரியாது. பேருந்துகளில் உள்ள ஊர்ப்பெயர்கள் தமிழில் இருப்பதைப் படிக்க முடியும்.

ஆனால் இம்மாணவர்களில் பெரும்பாலோர் தமது கல்வி, தாம் பயன்படுத்தும் 'டிஜிட்டல்' கருவிகள்(digital devices), வேலைவாய்ப்பு, சினிமா, நடிகர்கள், கிரிக்கெட் போன்றவற்றில் 'லேடஸ்ட்'(latest) தகவல்களை, நுனிவிரலில் வைத்து அசத்துகிறார்கள்.

தமிழ்வழிக் கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக' வளரும் இது போன்ற மாணவர்களில், தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப் பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும் அரிதாகி வருகிறது. மீடியாக்களில் செல்வாக்குடன் வலம் வரும் ஆதாயத்தொண்டர்கள் கட்சித் தலைவர்களும், இது போன்ற மாணவர்களும், தமிழ்நாட்டிலேயே தனி தனித் தீவுகளில் வாழ்கிறார்கள்.

மேலேக்குறிப்பிட்டவை எனது அனுபவ உள்ளீடுகள் (experienced observation inputs). தமிழ்நாட்டில் இது தான் பொதுவான நிலைமை என்றால், அது மிகவும் கவலைக்குரிய அபாய நிலையாகும்.’ (  'தமக்கென வாழா மன நோயாளிகள் '; http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html )

தி. சார்பில் 'தாலி அகற்றும் போராட்டம்' அறிவிப்பிற்குப்பின், மேற்குறிப்பிட்ட பெரும்பாலும் ஆங்கிலவழிக்கல்வியில் பயின்று, மேற்கத்திய கிரிக்கெட் மோகமாணவர்கள், படித்த இளைஞர்கள் மத்தியில், 'பெரியார் யார்?' என்று அறிந்து கொள்ளும் ஆர்வத்தைத் தூண்டும் பணியை;

'பெரியார் வழிபாட்டு சிறை'யில் இருட்டில் இருந்த ஆதாரங்களை எல்லாம், 'பெரியாரை' இழிவுபடுத்துவதாக கருதி, 'அறிவுபூர்வமாக' தேடி, சமூக வலைதளங்களிலும், தங்கள் அமைப்புகளின் கூட்டங்களிலும் வெளிப்படுத்தி வரும் இந்துத்வா 'அறிவுஜீவிகள்' செய்து வருகிறார்கள்;(https://www.youtube.com/watch?v=Uz14gr5GBL0&t=1531s; அதில் இன்று 'பெரியார் சிலை' உடைப்புக்கு முதலைக்கண்ணீர் வடிப்பவர்களில் யார்? யார்? ஏற்கனவே அவரை இழிவுபடுத்தி எழுதினார்கள்? என்ற தகவல்கள் வெளிப்படுவதும் வரவேற்கத்தக்கதாகும்.)

என்பதை கீழ்வரும் அண்மை அனுபவம் எனக்கு உணர்த்தியது.

ஐரோப்பா சுற்றுப்பயணத்தின் போது, அங்கிருந்த நிர்வாண சபையில் .வெ.ரா நிர்வாணமாக இருந்த புகைப்படமானது, மேற்குறிப்பிட்ட முயற்சிகளில் முக்கிய இடம் பெற்று வருவது தொடர்பாக;

'பெரியார் வழிபாட்டுப் போதையில்' பயணிக்காத, விமர்சனங்களின் ஊடே, தனிப்பட்ட முறையில் .வெ.ராவை மிகவும் மதிக்கும், .டி (Information Technology) துறையில் பணியாற்றும் ஒரு இளைஞர் கீழ்வரும் கருத்தினை தெரிவித்தார்.

பெரியாரின் நிர்வாண புகைப்படமானது கல்லூரி மாணவர்களின் பார்வைக்கு வரும்போது, அதுவரை அவரை தெரியாதவர்களுக்கு எல்லாம், 'அவர் யார்?' என்ற ஆர்வம் மிகுந்து, அவரைப் பற்றிய சரியான தகவல்களை எல்லாம், தேட தொடங்குவார்கள்.

சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எல்லாம் பெரும்பாலும் தமக்குப் பிடித்த தலைவர்களின் 'வழிபாட்டுப் போதையில்' பயணிக்க, இன்றைய மாணவர்களில், அதிகம் படித்த இளைஞர்களில் பெரும்பாலோர் அத்தகைய போதையில் சிக்காமல், புதிய சான்றுகளின் அடிப்படையில் திறந்த மனதுடன் தங்களின் பழைய கருத்துக்களை எளிதில் மாற்றிக் கொண்டு பயணிக்கிறார்கள். எனவே இந்துத்வா ஆதரவு 'அறிவுஜீவிகளின்' பங்களிப்பால், 'புத்துயிர்' பெற்றுள்ள 'பெரியார் யார்?' என்ற தேடலானது, கீழ்வரும் நிலைப்பாட்டில் தான், அவர்களை கொண்டு சேர்க்கும்; என்பதும் எனது கணிப்பாகும்.

பெரியார்' .வெ.ராவின் உள்ளீடுகளை(inputs) இரண்டு வகையாகப் பிரித்துப் பார்ப்பது சாத்தியமே. அவரின் நேரடி அனுபவ உள்ளிடுகளை அவர் திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுட்னும் தனது அறிவு செயல்வினைக்கு( processing)  உட்படுத்திய முடிவுகள், இன்றும் 'மக்கள் நலத்தில்' உண்மையான அக்கறை கொண்ட கட்சிகளுக்கு அரிய பாடங்களாகும். (உதாரணத்திற்கு குறிப்பு 1) 

அதே நேரத்தில் அவருக்கிருந்த கல்வி வரை எல்லைகள்(limitations) காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும். அந்த இரண்டாவது வகை உள்ளிடுகளின் அடிப்படையில்,அவர் வெளிப்படுத்திய கருத்துகளே 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்றவை தமிழர்க்குக் கேடேன்று, நோய் பிடித்த தாவரத்தின் நோய் மூலமாக அதன் ஆணி வேர்களையே அடையாளம் கண்டு சிதைத்த முயற்சிகளுக்கு வழி வகுத்தன. (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  )

எனது இசை ஆய்வுகளின் முலம், 'பெரியார்' .வெ.ரா அவர்கள் செய்த பெருந்தவறை நான் அடையாளம் கண்டேன். பெரியார் இயக்கத்தில் தமது பிழைப்பிற்காக இல்லாமல், உண்மையான சமுகப்பற்றுடனும், பெரியாரைப் போலவே அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும் தமது தவறுகளை அடையாளம் கண்டவுடன் ஒத்துக் கொண்டு திருத்திக் கொள்ளும் இயல்புடையவர்கள் பார்வைக்காகவும், பின் தொடர் விவாதத்திற்காகவும், அவ்வாறு நான் அடையாளம் கண்டவை கட்டுரையாக, 2006 'தமிழர் கண்ணோட்டம்' பொங்கல் மலரில் வெளிவந்தது. (http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html) இன்று வரை அதை ஏற்றோ,மறுத்தோ ஒரு கருத்தையும் நான் சந்திக்கவில்லை. நேரில் என்னைச் சந்தித்த 'பெரியார்' ஆதரவாளர்கள் அவை சரி என ஒத்துக் கொண்டார்கள். அவர்களும் அந்த விவாதத்தைத் தொடர்ந்தார்களா? இல்லையா? என்பதும் எனக்குத் தெரியாது.(குறிப்பு 2)’ (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html )
ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால், .வெ.ரா அவர்கள் 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீண்டு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா அதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகளில் எல்லாம், 'பொதுவாழ்வு வியாபாரிகளாக பயணிப்பவர்கள் யார்?' என்று அடையாளம் கண்டு அகற்ற, .வெ.ராவின் திறவுகோலை அங்கீகரித்து, பாராட்டி, பயன்படுத்தும் காலமும், அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கருத்தாகும். (‘.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை'  எப்படி?’; http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

விவாதிப்பவரையே சாடும், இழிவுபடுத்தும், கண்டிக்கும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்களை குறைத்து, அறிவுபூர்வ விவாதங்களின் மூலமாக, அவ்வாறு 'பெரியார்' சிறையிலிருந்து .வெ.ரா அவர்கள் மீளும் வேகத்திற்கு ஏற்ப;

.வெ.ரா வலியுறுத்தியவாறு 'கால தேச வர்த்தமான மாற்றங்களுக்கு' அவரின் கொள்கைகளை உட்படுத்தி, உரிய மாற்றங்களுடன் ஆக்கபூர்வ திசையில் பயணிக்காத 'பெரியார்' கட்சிகள் எல்லாம் மரணிக்கும் வேகமும் அதிகரிப்பதை தவிர்க்க முடியாது. (http://tamilsdirection.blogspot.sg/2016/01/ )

தமிழ்நாட்டில் ஈ.வெ.ரா த‌லைமையில் 1938இல் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மறுபதிப்பாகவே:

மகராட்டிர மாநில விவசாயிகள் சுமார் 35,000 பேர் கடந்த மார்ச் 6 ஆ
ம் தேதி நாசிக்கிலிருந்து பேரணியாக சுமார் 200 கி.மீ தூரத்தினை 6 நாட்களில் நடந்து மும்பை வந்து சேர்ந்து, அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி, தங்களின் கோரிக்கைகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள்; பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களும் சேதமின்றியும், வழி நெடுக பொதுமக்களின் ஒத்துழைப்போடும், ஆதரவோடும். (http://www.business-standard.com/article/current-affairs/maharashtra-farmers-long-march-50-000-at-azad-maidan-top-10-developments-118031200108_1.html & https://www.hindustantimes.com/mumbai-news/maharashtra-farmers-march-live-agitators-to-lay-siege-to-vidhan-bhavan-in-mumbai/story-0jRFVD18oL0MBNzobImP5L.html )

மேலே குறிப்பிட்ட பின்னணியில், கீழ்வரும் செய்தியானது, எனது கவனத்தினை ஈர்த்தது.


‘தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டத்தில் குதிப்போரால், மக்கள் எரிச்சல் அடைந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக, சமூக வலைதளங்களில், எதிர்மறை கருத்துக்கள் பரப்புவதை பார்த்து, கடும் கோபம் அடைந்துள்ளனர். அவசியமற்ற போராட்டங்களால், அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதால், வெறுப்படைந்துள்ள மக்கள், அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்பார்க்கின்றனர்.’ (http://www.dinamalar.com/news_detail.asp?id=2004089 )


எனவே பொதுத்தொண்டருக்கான இலக்கணம், பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும், பொது அமைதிக்கும் ஊறு விளைவிக்காத, ஆனால் காரியம் சாதிக்கும் போராட்டம், ஆகிய இரண்டிலும் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவு மற்றும் எதிர்ப்பு அமைப்புகள் எல்லாம் ஈ.வெ.ரா செயல்பூர்வமாக முன்னிறுத்திய வழியில் பயணித்தால் மட்டுமே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி சாத்தியம், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

குறிப்பு: எச்.ராஜா மற்றும் எஸ்.வி.சேகர் போன்றோரின் கருத்துக்களுக்கு எதிரான பொதுமக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டங்களை எல்லாம், .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்தால், 'காலித்தனம், சண்டித்தனம்' என்று துணிச்சலாக கண்டித்திருப்பார்.

இன்று வெளிப்படும் அது போன்ற கருத்துக்களை எல்லாம், .வெ.ரா எப்படி எதிர் கொள்வார்? என்பதை மையமாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கக் கூடிய நகைச்சுவை திரைப்படம் உருவாக்க எவரும் முற்பட்டால், நான் அதற்கு திரைக்கதை உருவாக்கத்திற்கு உதவ முடியும்.

தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ள‌ சான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் ஈ.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா? (http://tamilsdirection.blogspot.sg/2014/09/ )

No comments:

Post a Comment