Thursday, June 18, 2020


எம்.ஜி.ஆர் என்ற தனித்துவமான சமூக இசை ? (3)


தமிழ், தமிழ்நாட்டின் மீட்சிக்கு எம்.ஜி.ஆர் ரசனையை வளர்த்தெடுக்கும் சமூக செயல்நுட்பம்?



'உதயகுமார் நம் குடும்பப் பிள்ளை' என்று 'ஏம்பதைஸ்' (empathize: understand and share the feelings of another) பண்ணாமல், எனது தலைமுறையில் பலர் தி.மு. ஆதரவாளர்களாகப் பயணித்தார்கள். இன்று அவ்வாறு பயணித்தால், பொதுமக்கள் காறித் துப்புவார்கள்;

மாணவர்களும், இளைஞர்களும், நடுத்தர மற்றும் ஏழைகளில் பெரும்பாலோரும் துணிச்சலாக வெளிப்படையாக‌வும், வசதியாக வாழ்பவர்களில் பெரும்பாலோர் மனதுக்குள்ளும்.
 (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_7.html)

'ஏம்பதைஸ்' பண்ணாமல், தமது நலனுக்கு ஒரு அளவுகோல், பிறர் நலனுக்கு வேறு அளவுகோல் என்று பயணித்தவர்கள் எல்லாம், தமது நேர்மை வழிகாட்டியை (Ethical Compass) சமூகத்திற்குக் கேடாகும் வகையில் திருத்திப் பயணித்தவர்கள் ஆவார்கள்அவ்வாறு பயணித்தவர்களின் பின் பலத்திலேயே, 'பெரியார், அண்ணா' பாசறைகளில் பயின்று, தரகு, அரசு நிதித்திருட்டில் விற்பன்னர்களாக‌ வளர்ந்து, தமிழையும் தமிழ்நாட்டையும் சிரழிக்க முடிந்தது.

அண்ணாமலைப்பல்கலைக்கழகம் மற்றும் திருச்சி கிளைவ் மாணவர் விடுதி சம்பவங்களின் போது, எனக்குள் ஒரு குற்ற உணர்வு எழுந்தது. அதனை ஜெயலலிதாவின் மர்ம மரணத்தின் போது மீண்டும் என்னுள் உணர்ந்தேன்.
(‘'தாசிகளின் மோசவலை அல்லது மதி பெற்ற மைனர்' வெளிப்படுத்திய கண்டுபிடிப்பு- சமூக வானிலை விற்பன்னர்கள் (Social weather experts) வளர்ந்த சமூக செயல்நுட்பம்’; 
https://tamilsdirection.blogspot.com/2020/04/social-weather-experts.html)

சமூக வானிலை விற்பன்னர்களைக் காறித் துப்பும், மேற்குறிப்பிட்ட நடுத்தர மற்றும் ஏழைகளில் பெரும்பாலோர் எம்.ஜி.ஆர் ரசனையில் பயணிக்கிறார்கள்.

மாணவர்களிலும், இளைஞர்களிலும் துணிச்சலாக பயணிப்பவர்களே 'LKG', 'சூது கவ்வும்' போன்ற இன்னும் பலஇளம் இயக்குநர்களின் குறைந்த பட்ஜெட் வெற்றிப் படங்களின் ரசனையில் பயணிக்கிறார்கள்.

இரண்டு வகை ரசனைகளும் சங்கமம் ஆகும் போது தான்;

தமிழ்நாடானது தன்மானம் மிக்கவர்களின் நாடாக வெளிப்படும். 'காலில் விழும் கலாச்சாரத்தை' ஊக்குவித்து வந்த‌ ஊழல்வாதிகள் ஒழிவார்கள்; 

ஊழல் சொத்துக்கள் பறிமுதல் மூலம் தமிழ்நாடு மீளும்
(தமிழ்நாடு தன்மான மீட்சிக்காகக் காத்திருக்கிறது’;

மேற்குறிப்பிட்ட குறைந்த பட்ஜெட் வெற்றிப்படங்களின் பாடல்களில் ஒரு புதிய போக்கு வெளிப்பட்டு வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில் நீதிக்கட்சி, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்டு அனைத்துக்கட்சிகளிலும் இருந்த தலைவர்களில் எவரும் ஊழல் வழிகளில் சொத்து சேர்த்தவர்கள் அல்ல. மாறாக தங்களின் சொந்த பணத்தையும் உழைப்பையும் பொதுநலனுக்காக செலவழித்தவர்கள் ஆவார்கள்.

இன்று தமிழ்நாட்டில் அது போன்று எந்தக்கட்சித் தலைவரையும் உதாரணமாகக் காட்ட முடியுமா? கருணாநிதி மற்றும் சசிகலா குடும்ப ஊழல்களை எதிர்க்க முடியாமல் தான், தனிப்பட்ட முறையில் எளிமையாக நல்லக்கண்ணு வாழ்ந்தார். அது மட்டுமல்ல, சசிகலா குடும்பத்திற்கு நெருக்கமாக இருந்து, நடராஜனின் படத்திறப்பு நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டது, இன்றைய மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன பாடத்தை வெளிப்படுத்தும்?

அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு

"உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு?" என்று ஒரு அடிமட்ட ...தி.மு. பெண் தொண்டர் எழுப்பியுள்ள கேள்வியானது;

சசிகலாவை ...தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த, அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி, கேட்கப்பட்ட கேள்வியாக மட்டுமே நான் கருதவில்லை. நான் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் ஒவ்வொருவரும், தமது மனசாட்சிக்குட்பட்டு பதில் தேட வேண்டிய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக கருதுகிறேன்; 'நமக்கேன் வம்பு?' என்று சமூகக்கேடான 'பாதுகாப்பு சிறையில்' வாழ்பவர்கள் மட்டுமே, இக்கேள்வியை புறக்கணிக்க முடியும். (‘திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா; முடித்து வைப்பவர் சசிகலாவா? ‘நாமெல்லாம் உப்பு போட்டுச் சாப்பிடலையா?’; 

தமிழ்நாட்டில் நன்கு படித்து உயர் பதவிகளிலும், செல்வம் மற்றும் செல்வாக்குகளுடனும் வாழ்பவர்களில் மனசாட்சி உள்ளவர்கள் எல்லாம், ‘நாமெல்லாம் உப்பு போட்டுச் சாப்பிடலையா?' என்ற கேள்வியைச் சந்தித்து வரும் சூழலில்;

மேற்குறிப்பிட்ட ரசனைகளுடன் பயணிக்கும் நடுத்தர மற்றும் ஏழைகளில் பெரும்பாலோரும், மாணவர்களிலும், இளைஞர்களிலும் துணிச்சலாக பயணிப்பவர்களும், ஆதாய அரசியலில் சிக்கியுள்ள தமிழ்நாட்டில் எத்தகைய சமூக மன அழுத்தத்தில் தமக்கு புரிந்த வழிகளில் கணக்கு தீர்க்கக் காத்திருக்கிறார்கள்? என்பதை அவர்களை ஈர்த்து வரும் திரைப்படங்கள் மூலமாகவும், பாடல்கள் மூலமாகவும் கணிக்க முடியும்.

குழாயில் அடைத்து அழுத்திவைக்கப்பட்ட நீரானது, தடை உடைந்து வெளிப்படும்போது, பீறிட்டு அடித்து, அதன்பின் தான், 'அந்த' குழாய்க்கான‌ சீரான ஓட்டத்தில் வெளிப்படும். எனவே அவ்வாறு பீறிட்டு அடிப்பதானது நல்ல அறிகுறியே ஆகும்.

தமிழில் அந்த' புதிய இசை மலரும் காலமும், ஆதாய அரசியல் மரணித்து, புதிய அரசியல் போக்கு மலரும் காலமும், பின்னிப்பிணைந்து நெருங்கி வருவதன் அறிகுறியாகவே, 'பரியேறும் பெருமாள்' திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக 'பீறிட்டு' வெளிப்பட்ட பாடல்கள் எல்லாம் நல்ல அறிகுறியாகவே எனக்கு பட்டது; பாடல்களின் எழுத்துக்களைத் தெளிவாகவும் உணர்ச்சிபூர்வமாகவும் உச்சரிக்கும் போக்கில்.

அதாவது 'அந்த' கதைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு பொருத்தமான சுர அமைப்புகளுடன் கூடிய இசை வடிவத்தை உருவாக்குவதில் சிரமம் இருந்திருக்கலாம். பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கானது, எவ்வாறு திரை இசையை வீழ்ச்சிப்பாதையில் பயணிக்க வைத்தது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கினை விட, திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய போக்கானது, வ‌ரவேற்கத்தக்க திருப்புமுனையான நல்ல அறிகுறியாகும். 
(‘'கொலைவெறி', 'பேட்ட' பின்னணி இசையான‌ பாடல்கள், 'பரியேறும் பெருமாள்' படப்பாடல்கள் வெளிப்படுத்திய 'சிக்னல்'’; 

தஞ்சை ராமையதாஸின் சுருதி சுத்தத்திற்கு இலக்கணமாகும் (எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது) பாடல்களில் ஒன்றாகிய 'எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' என்ற எம்.ஜி.ஆர் திரைப்படப்பாடலை பின்பலமாகக் கொண்டு வெளிவந்துள்ள வெற்றிப்படமே 'LKG' ஆகும். தமிழரின் தர அடையாளத்தின் (bench mark), புலமையின், ரசனையின் மீட்சிக்கு எம்.ஜி.ஆர் ரசனையை எவ்வாறு வளர்த்தெடுப்பது? என்ற திசையை 'LKG’ போன்ற திரைப்படங்கள் வெளிப்படுத்தி வருகின்றன

எம்.ஜி.ஆர் ரசனை தொடர்பான பாடல்களின் உள்ளடக்கத்தை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.

அதில் 'எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் ஹீரோயிசத்தை' முன் நிறுத்தாமல் சமூக அக்கறையை முன் நிறுத்திய,  'LKG' பயன்படுத்திய மேற்குறிப்பிட்ட பாடல்கள் தான், எம்.ஜி.ஆர் சினிமாவில் வளர்ந்த காலத்தில் வெளிவந்த முதல் வகையாகும்.

எம்.ஜி.ஆர் வளர்ந்த பின், 'எம்.ஜி.ஆர் என்ற தனிநபர் ஹீரோயிசத்தை' முன் நிறுத்திய 'வாங்கய்யா வாத்யாரய்யா' ('நம் நாடு') போன்ற பாடல்கள் இரண்டாவது வகையாகும். மேற்குறிப்பிட்ட இரண்டாவது வகைப் பாடல்களை இன்று திரைப்படங்களில் ஹீரோயிசத்தை கேலி செய்யும் நகைச்சுவைக் காட்சிகளில் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது.

சென்னை வெள்ள நிவாராண உதவிகளில், அரசியல் கட்சிகளை எல்லாம் வால்களாக்கி, உதவிய இளைஞர்களின் வரிசையில் இடம் பெற்றவர், 'LKG ' பட இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி, ஆவார். மேற்குறிப்பிட்ட முதல் வகை எம்.ஜி.ஆர் ரசனையானது, இன்றைய இளைஞர்களின் ரசனைக்கு ஏற்றதாக இருப்பதை இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது இசை ரசனையில், மேற்குறிப்பிட்டவாறு குழாயில் அடைத்து அழுத்திவைக்கப்பட்ட நீரானது, தடை உடைந்து வெளிப்படும்போது, பீறிட்டு அடித்து, அதன்பின் தான், 'அந்த' குழாய்க்கான‌ சீரான ஓட்டத்தில் வெளிப்படும். எனவே அவ்வாறு பீறிட்டு அடிப்பதானது, அடுத்து எவ்வாறு சீர் பெற்று பயணிக்கலாம்? என்ற திசையும் 'LKG' மூலமாக வெளிப்பட்டுள்ளது.

குழாயில் அடைத்து அழுத்திவைக்கப்பட்ட நீரைப் போல, திரை இசைத்தமிழானது எவ்வாறு பாடலில் எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பதானது, அழுத்தி வைக்கப்பட்டது? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டது.

.வெ.ராவின் 'காட்டுமிராண்டித் தமிழை' எதிர்க்காமல், கவர்ச்சித்தமிழில் 'கம்பரசம்' போன்றவை மூலமாக கட்சி அரசியல் நலனுக்காக தமிழைச் சிறை பிடித்து வளர்த்து, 1967இல் ஆட்சியைப் பிடித்து, பின் கம்பனுக்கு சிலை வைத்து, உணர்ச்சிபூர்வ போதையை ஊக்குவித்து;

'தமிழ் உணர்வு, சமஸ்கிருத எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' உள்ளிட்ட இன்னும் பல உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில் பயணித்த கட்சிகள் எல்லாம் தமிழ்நாட்டின் ஏரிகளும், ஆறுகளும், மலைகளும், தாது மணலும், பிற கனி வளங்களும் குடும்ப ஊழல் பேராசைக்கு இரையானதை கண்டு கொள்ளாத அளவுக்கு அந்த கட்சிகளை எல்லாம் ஊழல் பாதுகாப்பு அரணாக்கி;

தமிழ்நாட்டில் ஊழல் வலைப்பின்னலில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரத்தில் தமிழ் சீரழிந்த போக்கிற்கு;

'அறிவியல் ஊழலை' தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தி, ...தி.மு.கவும் தம்மிடம் அரசியல் பயின்ற நடராஜன் மூலமாக குடும்ப ஊழலில் சிறைபிடிக்கப்படுவதற்குக் காரணமான‌  தி.மு. தலைவர் மு.கருணாநிதி எந்த அளவுக்கு பங்களித்தாரோ, அதற்கு ஏற்றார்ப் போல, திரை இசைப்பாடல்களில் எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பதும் சீரழிந்த போக்கின் மூலமாக‌,

தி.மு. தலைவர் மு.கருணாநிதிக்கு நெருக்கமான வைரமுத்து மூலமாக, எவ்வாறு  இசைத்தமிழானது மூச்சுத்திணறலுக்கு உள்ளானது? இன்று மீட்சியை நோக்கிய திருப்பு முனையில் உள்ளது?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

தமிழ் வேரறுந்த உணர்ச்சிபூர்வ போக்கின் துணையுடன், மேற்கத்திய மோக ஆதிக்கத்தில்,  விளைந்த‌ ரசனை வீழ்ச்சி திசையில், 'ஹிட்' பாடல்கள் தொடர்ந்து கொடுத்து, வெற்றியாளர்களாக வலம் வந்த கவிஞர்களும், இசை அமைப்பாளர்களும், தொடர்ந்து தோல்வி திசையில் இன்று பயணித்தால், அது தமிழ்நாடானது ரசனையின் திருப்பு முனையில் இருப்பதன் வெளிப்பாடாகும். எனவே திரை இசைத் தமிழை மீட்பதற்கான காலமும் இதுவாகும்
(திரை இசை ரசனையானது, சுருதி சுத்தமான திசையில்  மீண்டும் பயணிக்குமா?’; 

பாடல்களில் எழுத்தொலிகளை ஆங்காங்கே சிதைத்து இசைக்கு சுருதி சுத்தமாக பாடிய போக்கினை விட, திரைப்படத்தில், இசையால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமூக யாதார்த்த அடிப்படையில் உணர்ச்சிபூர்வமாக பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடிய போக்கானது, 'பரியேறும் பெருமாள்', 'காக்கா முட்டை', 'சூது கவ்வும்' போன்ற இன்னும் பல குறைந்த பட்ஜெட்டில் உருவாகி வெற்றி பெற்ற படங்களில் எல்லாம் வெளிப்பட்டு வருவதானது, வ‌ரவேற்கத்தக்க திருப்புமுனையான நல்ல அறிகுறியாகும்.

வைரமுத்துவின் செல்வாக்கிற்கு இரையான திரை இசை ரசனையில், பாடல்களில் எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலிப்பது சீரழிந்தது. அந்த சீரழிவில் சிக்காமல் அவ்வாறு ஒன்றி ஒலிப்பதை, இன்று வரை பாதுகாத்து வருவது எம்.ஜி.ஆர் ரசனையாகும்.

எம்.ஜி.ஆர் ரசனையில் வெளிவந்த பாடல்களில் எழுத்தின் ஒலியும், அதற்கான சுருதியும் ஒன்றி ஒலித்தன. மேற்குறிப்பிட்ட சமூக அக்கறையை முன் நிறுத்திய முதல் வகை எம்.ஜி.ஆர் ரசனைக்கான பாடல் திசையை நோக்கியே, திரை இசைப் பாடல்கள் திருப்பு முனைக் கட்டத்தில் உள்ளன;

என்பதை 'LKG ' வெளிப்படுத்தியுள்ளது.

பாடல்களில் எழுத்தொலிகளின் சுருதி சுத்தம் பற்றிய கவலையின்றி, க‌தைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடக்கூடிய பாடல்களை எழுதி வரும் கவிஞர்களும் இசை அமைப்பாளர்களும் கீழ் வருவதை விளங்கி தம்மை வளர்த்துக் கொள்வதானது, அவர்களின் வளர்ச்சிக்கும் துணை புரியும். தமிழின் தமிழ்நாட்டின் மீட்சிக்கும் வழி வகுக்கும்.

தெளிவான உச்சரிப்பை சீர் குலைத்து, சுருதி சுத்தமாக பாட இயலாத எழுத்துக்கள் மூலமாக, அசையின் (syllable) இசை தெரியாமல், வைரமுத்து எவ்வாறு திரை இசையை சீர் குலைத்தார்

கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், தஞ்சை ராமையதாஸ் உள்ளிட்ட இன்னும் பல கடந்த கால கவிஞர்கள் எல்லாம்,

க‌தைக்களத்திற்கேற்ற கருத்து மற்றும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்து, தெளிவான உச்சரிப்புடன் பாடகர்கள் பாடக்கூடிய, சுருதி சுத்தமான எழுத்துக்களைக் கொண்ட‌ பாடல்களை எவ்வாறு இயற்றினார்கள்?

என்ற இலக்கணத்தினை நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தியுள்ளேன்

இன்று முன்னணி இசை அமைப்பாளர்களும், கவிஞர்களும் அதனைப் புரிந்து செயல்படுத்த என்னால் இயன்ற உதவிகளை வழங்க முடியும்.

குறைந்த பட்ஜெட்டில் வெற்றி பெறும் படங்களின் பாடல்களும் நீண்ட காலம் கேட்டு ரசிக்கும் அளவுக்கு வெற்றி பெறும்.

திரை இசை ரசனையில் மேற்குறிப்பிட்ட சங்கமம் சீக்கிரம் சாத்தியமாகும். தமிழும் தமிழ்நாடும் மீளும்.

No comments:

Post a Comment