Tuesday, June 23, 2020


அமாவாசைகளுக்கும் தேர்தல் வியூக வல்லுநர்களுக்கும் இடையே


'சபாஷ், சரியான போட்டி' துவங்கி விட்டது 



...தி.மு. மற்றும் தி.மு. ஆகிய கட்சிகளில் 'சுயலாபத்திற்காக' இருப்பவர்கள் எல்லாம்;

"இன்னும் எவ்வளவு காலம் நாம் சம்பாதிக்கும் அளவுக்கு, இந்த கட்சி நீடிக்கும்?" என்ற ஆய்வினையும்;

தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி பற்றி, சுயலாப நோக்கற்ற அக்கறை உள்ளவர்கள் எல்லாம்;

சோனியா குடும்ப நிறுவனமாகி மூழ்கும் நிலையில் உள்ள காங்கிரசைப் போல, தமிழ்நாட்டில் ஆதாய அரசியலில் பயணிக்கும் கட்சிகளும் மரணத்தைத் தழுவ வாய்ப்புள்ளதா? என்ற ஆய்வினையும்;

மேற்கொள்ள வேண்டியது அவசியமாகி விட்டது; அவசரமுமாகி விட்டது.
(‘பாராளுமன்ற தேர்தலில், இந்தியாவில் தோற்ற காங்கிரசும், தமிழ்நாட்டில் வென்ற தி.மு.-வும் ஒரே பாணியிலான‌ 'பிராண்ட் மதிப்பு' (Brand Value)  வீழ்ச்சியில்?’; 

மோடி முதல் முறையாக பிரதமராக உதவிய பாராளுமன்ற தேர்தலில் பா..கவின் வியூக வல்லுநராக (strategist) இருந்த பிரசாந்த் கிஷோரை, அடுத்த வந்த பாராளுமன்ற தேர்தலில் தமது வியூக வல்லுநராக ராகுல் காந்தி நியமித்தார்; ராகுலுடன் கூட்டு சேர்ந்த .பி முதல்வர் அகிலேஷ் யாதவ்வும் பிரசாந்த் கிஷோரை தமது வியூக வல்லுநராக நியமித்தார். ஆனால் தேர்தல் முடிவுகள் ராகுல் காந்தியின் பிரதமர் கனவைக் கானல் நீராக்கி, காங்கிரஸ் கட்சியின் எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டது. முதல்வர் பதவியை இழந்த அகிலேஷ் யாதவ் இனி மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லாத அளவுக்கு தமது கட்சியைப் பலகீனமாக்கிக் கொண்டார்.

ஏற்கனவே பா..கவுக்கு வியூக வல்லுநராக இருந்திருந்தால் என்ன? முதல்வர் பழ்னிச்சாமியைச் சந்தித்து வியூக வல்லுநராக முயற்சித்திருந்தால் என்ன? என்பதைப் பற்றிய கவலையின்றி, தி.மு. தலைவர் ஸ்டாலின் தம‌து வியூக வல்லுநராக பிரசாந்த் கிஷோரை நியமித்துக் கொண்டார்.

2019 நவம்பர் வரையில் ஸ்டாலினின் வியூக வல்லுநராக இருந்த சுனில் கினுகொலுவை (Sunil Kinugolu) தம‌து வியூக வல்லுநராக முதல்வர் பழனிச்சாமி நியமித்துக் கொண்டார்.
The All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) has roped in poll strategist Sunil Kinugolu. With one year left in office, the government and the party is desperately looking for face-saving measures, after its pandemic control efforts have failed. Sunil had worked with the Bharatiya Janata Party in elections.The strategist was also associated with DMK till the end of November 2019.; 

பா.. மற்றும் கமல்ஹாசலின் .நீ. போன்ற சிறிய கட்சிகளும் கூட வியூக வல்லுநர்களின் ஆலோசனையில் செயல்பட்ட செய்திகளும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. (Tamil Nadu getting ready for professional poll strategists ahead of 2021 elections; 

ஆக தேர்தல் வியூக வல்லுநர்களை நம்பியே, வரும் சட்டமன்ற தேர்தலை பெரிய மற்றும் சிறிய கட்சிகள் சந்திக்க உள்ளன.

ஆனால் இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் அனுபவித்திராத புதிய பாணி தலை வலி, திருகு வலி போன்ற அனுபவ‌ங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் வியூக வல்லுநர்களுக்கு காத்திருக்கிறது.

கருணாநிதியும் ஜெயலலிதாவும் நடராஜனும் இல்லாத‌ சூழலில், மேற்குறிப்பிட்ட அனுபவங்களைத் தர வல்ல‌ தமிழ்நாடானது,

எவ்வாறு அமாவாசைகளின் புரட்சியில் சிக்கியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

சத்யராஜ் - மணிவண்ணன் ஜோடியின் புகழ்பெற்ற 'அமாவாசை காமெடி'யானது (கீழே) 1967க்கு முன் வெளிவந்திருந்தால், ரசிக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

(1967க்குப்பின் 'அமாவாசை சமூக செயல்நுட்பம்' வெளிப்பட்டு (விதைத்தது 1944?), இன்று உச்சத்தில் உள்ள சமூக சூழலில், இன்றைய 'அமாவாசைகளின்குடும்பங்களில் உள்ள மாணவர்களில் பலர், தமது சமூக வட்டத்தில் சந்தித்து வரும் 'அவமானங்களும்', 'நெருக்கடிகளும்', தொடர்பான காமெடி திரைப்படங்கள் வந்ததாக தெரியவில்லை; இனி வரலாம்.)

தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு. தலைவர் ஸ்டாலின், பா.. ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல‌ தலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்த‌ கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 

1967க்குபின் தேசியக் கட்சிகளை ஓரங்கட்டி அரங்கேறிய கீழ்வரும் வலைப்பின்னலையும், அந்த வலைப்பின்னலானது, 'அரசியல் அமாவாசை செயல்நுட்பத்தில்' செல்லரித்து, இன்று திராவிடக் கட்சிகளிடமிருந்து கிராமம் முதல் நகரம் வரை விலகி, 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, திராவிடக் கட்சிகளின் மேல் மட்டத் தலைவர்களை கோமாளிகள் ஆக்கி வரும் போக்கினையும் புரிந்து கொள்ள வேண்டும்.

1967க்குப்பின் அரசு துறைகளில் எந்த அளவுக்கு லஞ்சம் வளர்ந்துள்ளதோ, அந்த அளவுக்கு, அரசை மட்டும் நம்பாமல், 'செல்வாக்குள்ள' நபரின் தயவுடனேயே தான், கிராமம் வரை வாழ முடியும் என்ற நிலையில் தமிழ்நாடு உள்ளது. 

தமிழ்நாட்டில் தரகர்கள், வக்கீல்கள், நீதிபதிகள், நேர்மையற்ற வழக்காடிகள் (unscrupulous litigants) அடங்கிய 'நன்கு மசகிடப்பட்ட (ஊழல்) எந்திரம்' (well-oiled machine), 'பெரிய அளவில்' (mega racket), செயல்பட்டு வருவதை, சென்னை உயர்நீதிமன்றம் கண்டுபிடித்து, அம்பலப்படுத்தியுள்ளது

'அமாவாசை சமூக செயல்நுட்பத்தில்', அது போன்ற ஊழல் எந்திரங்கள் செயல்பட்டு, ஆட்சியில் தலைமையில் இருப்பவர்களுக்கு 'அதிக லாபங்களுடனும்', அடுத்தடுத்த கீழ் மட்டங்களுக்கு 'அந்தந்த தகுதிக்கான' லாபங்களுடனும், உலகிலேயே 'தனித்துவமான ஊழல் பிரமீடு' தமிழ்நாட்டில் செயல்படுகிறதா

தமிழ்நாட்டில் பிராமணர் - ‍பிராமணரல்லாதோர், தமிழர் - தமிழர் அல்லாதோர், தமிழர் - இந்தியர், போன்ற பரிமாற்ற பகைமைகள் எல்லாம், 'திராவிட அரசியல் ஊழல் குடும்பங்களின் பாதுகாப்பு கவசங்களாக நீடிப்பதற்கு தேசியக்கட்சிகளின் மறைமுக ஒத்துழைப்பும் ஒரு முக்கிய காரணமாகும்.

பிரதமராக மன்மோகன் சிங் ஆண்ட காலத்தில் சென்னையில் சட்ட விரோதமாக 323 தொலைபேசி இணைப்புகள் கொண்ட இணைப்பகம் செயல்பட்டது தொடர்பாக,  கடந்த ஆட்சியில் சி.பி. வழக்கு விசாரணையைத் துவங்கி,  விசாரணை மந்தமாக முன்னேறியது தொடர்பாக தயாநிதி மாறன் வெளிப்படுத்திய கருத்தும் 

அதே பாணியில் (சசிகலா) நடராஜன் வெளிப்படுத்திய கருத்தும்

பா.. ஆட்சியில் திராவிட ஊழல் பாதுகாப்பு மையங்கள் உள்ளனவா? என்ற ஐயத்தை எழுப்பியது.

திராவிட மனநோயாளித் தலைவர்கள் ஊக்குவித்து வளர்த்த 'திராவிட அமாவாசைகள்எல்லாம் புரட்சி செய்து, அசைக்க முடியாத சக்தியாக இருந்த பிரதமர் மோடிக்கே, தமிழ்நாட்டு அரசியல் சதுரங்கத்தில் 'செக்' வைத்து விட்டார்கள்: ஆட்டம் இன்னும் முடியவில்லை; உச்சக்கட்ட காட்சியில் (Climax) முடிவு தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை. (‘1944-இல் முளை விட்டதானது முடிவுக்கு வருகிறது; தமிழ்நாட்டில் அமாவாசைகளின் புரட்சியானது தொடங்கி விட்டது’; 
https://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none.html)

தமது கட்சியில் ஊடுருவியுள்ள 'அமாவாசைகளை' எவ்வாறு அடையாளம் கண்டு, அகற்றி, கடந்த சட்டமன்ற தேர்தலை சந்தித்த வலிமையுடன், அடுத்து வரும் தேர்தலை ஸ்டாலின் சந்திப்பார்? என்பதைப் பொறுத்தும்;

தமிழ்நாட்டின் 'திராவிட லல்லுக்களை' எவ்வாறு சிறைக்கு தள்ளி, தமிழ்நாட்டின் ஊழல் பிரமீட்டை பிரதமர் மோடி தகர்க்கப் போகிறார்? என்பதைப் பொறுத்தும்;

'கரணம் தப்பினால் காமெடி பீஸ்' என்ற உச்சக்கட்ட காட்சியில் (Climax), தி.மு. தலைவர் ஸ்டாலினும், பிரதமர் மோடியும் சிக்கியிருப்பதாக, எனக்கு படுகிறது. 

இனிவரும் தேர்தல்களிலும் பணக்கஷ்டத்தில் வாழ்பவர்கள் எல்லாம் அதிக பணம் தரும் நபருக்கும், பணத்தேவை இல்லாதவர்கள் எல்லாம்  வாக்களிப்பதைத் தவிர்க்கலாம் அல்லது 'நோட்டாவிற்கும்' தான் வாக்களிப்பார்கள்

ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தரக்கூடியவர்கள் என்று செயல்பூர்வமாக நிரூபிக்கும் கட்சியானது அரசியல் வானில் வெளிப்படும் வரை

அது ரஜினியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும்.

திருமங்கலம் ஃபார்முலாவை வெற்றி பெற செய்த அதே வாக்காளர்கள் தான், அந்த ஃபார்முலாவை நம்பி பயணித்த தி.மு.கவை அடுத்த சட்டமன்ற தேர்தலில் தோற்கடித்தார்கள்;

என்பதும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றாகும். 

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize) கோலோச்சும் சூழலில், எதிர்பாராத‌ பிரமிக்க வைக்கும் வெற்றிகள் எல்லாம், கொள்கை என்ற 'அரசியல் கயிறு' அறுந்து, சமூக வானில் பறக்கும் 'அரசியல் பட்டங்கள்' ஆகும். குறுகிய காலத்தில் பிரமிக்க வகையில் வெளிப்படும் வெற்றிகளும், 'அந்த வெற்றிக்கான காற்று' அடங்கும் போது, சமூக வானில் இருந்து விழுவதும் பிரமிக்க வைக்கும் வகையிலேயே இருக்கும்; தினகரன் கட்சியைப் போலவே.  ('கற்றோர்க்கு சென்ற இடமெல்லாஞ் சிறப்பு' – ஒளவையார்

அரசியல் பரமபதத்தில் 'புரோக்கர்க்கு சென்ற கட்சியெல்லாஞ் சிறப்பு' - புதிய‌ ஒளவையார்

ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu; https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் தி.மு., பா.. உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் அரங்கேறி வருகிறது

சிறையில் இருக்கும் சசிகலா விடுதலை ஆன பின், தமிழ்நாட்டில் பெரிய மாற்றங்கள் நிகழும்;

என்று சுப்பிரமணியசுவாமி அறிவித்துள்ளார். சிறை செல்லும் முன் தமது காலில் விழுந்த ஆளுங்கட்சி முக்கிய நபர்கள் மீண்டும் சசிகலா காலில் விழுந்து ஆட்சியை அவரிடம் ஒப்படைக்க மாட்டார்கள்;

அடிமட்ட ...தி.மு. தொண்டர்களின் மனநிலையைப் புரிந்து, ஜெஜெ பாணியில் விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி இடைத்தேர்தல்களில்  பிரமிக்க வைக்கும் வெற்றிகளை ஈட்டிய பின்னர்.

எனவே சசிகலா மூலமாக ...தி.மு. பிளவுபடுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதன்பின் சசிகலா கட்சி தி.மு.கவிடம் பேரம் பேசி, தி.மு. அணியில் சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கவும் வாய்ப்பிருக்கிறது. 

இமாலய வெற்றி பெற்ற 'எங்க வீட்டுப் பிள்ளை' திரைப்பட துவக்க காட்சிகளில் வில்லன் நம்பியாருக்கு பயந்த கோழையாக இருந்த எம்.ஜி.ஆர் கிளைமாக்ஸ் காட்சிகளில் வீரத்துடன் வெளிப்பட்டு நம்பியாருக்கு உரிய பாடம் புகட்டுவார். அது போல கூவத்தூரில் சசிகலாவுக்குப் பயந்த கோழைகளாக இருந்தவர்களில் யார், யார், சசிகலா மீண்டும் வரும்போது, வீரமானவர்களாக வெளிப்படப் போகிறார்கள்? என்று நாம் ஆவலுடன் காத்திருப்போம்; வீரமான எம்.ஜி.ஆர்களைப் பாராட்டுவதற்காக

சாதாரண மனிதர்களும் கூட பணத்தாசையில், நிலை தடுமாறும் சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி, பெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படம் ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ 

நிகழ்கால தமிழ்நாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள் எல்லாம், அவரின் மர்மமான மருத்துவ சிகிச்சைக்கும், மரணத்திற்கும் உரிய விசாரணை கோராமல், மரணத்திற்குப் பின் சசிகலாவின் காலில் போட்டி போட்டு விழுந்ததும்;

பல கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் சசிகலாவை 'தரிசித்து' ஆதரவு தெரிவித்ததும், 'இந்தியா டுடே' உள்ளிட்ட ஊடகங்கள் கொடுத்த 'திடீர்' முக்கியத்துவமும்;

பின் சசிகலா சிறை சென்றதும், அவரை ஒதுக்கி ஆட்சியில் 'பலன்' பெற முயற்சிப்பதும்;

மேற்குறிப்பிட்ட 'திடீர்' முக்கியத்துவத்தின், 'திடீர்' மறைவும்;

அவரவருக்கு கிடைக்கும் ஆதாய அடிப்படையில், சசிகலா குடும்ப அரசியலை ஆதரித்தும், ஆதாயத்தை கூட்ட எதிர்த்தும், பின் அதிகரித்த ஆதாயத்தில் ஆதரித்தும், ஊடக எழுத்தாளர்களும், கட்சிகளின் தலைவர்களும் போடும்  'குட்டிக்கரணங்கள்'; 

மேலே குறிப்பிட்ட பின்புலத்தில், தமிழ்நாட்டில் 'திடீர்' பணக்காரர்களுக்கு, அவர்களின் குடும்பத்திலும், சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் கிடைக்கும் 'திடீர்' மரியாதை, 'திடீர்' பணக்காரர்களின் முதுகுக்குப் பின்னால், 'அதே' சுற்றத்திலும், நட்பு வட்டத்திலும் 'கிசு கிசுக்கப்படும்' கிண்டல்கள், சசிகலா நாம் பணியாற்றும் சிறைக்கு வர மாட்டாரா? என்று சிறை அதிகாரிகள் ஏங்கும் காட்சிகள்
(http://tamil.oneindia.com/news/india/there-are-5-rooms-prison-sasikala-prison-289858.html)

ஊழலை ஒழிப்பதாக பிரதமர் மோடி பேசிய பின்னணியுடன், தமிழக பா.. தலைவர்கள் மு. அழகரியைச் சந்தித்து ஆதரவு கேட்டது போன்ற‌ இன்னும் பல சம்பவங்களை எல்லாம்;

பல வருடங்களுக்கு முன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சென்னை 'ரவுடி' வீரமணி, சென்னை மாநிலக்கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில்,  'தலைமை விருந்தினராக' (Chief Guest) கலந்து கொண்ட பின்னணியில்,

(கற்பனையாக) அரசியலில் நுழைந்து அமைச்சராகி, 'காசுக்காக' துதி பாடும், 'அறிவு விபச்சார' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் புகழ் பாட, 'தமிழ்ப் புரவலராகவும்' வலம் வரும் நகைச்சுவை காட்சிகளை எல்லாம்;

சிறையில் இருந்து விடுதலை ஆன சசிகலாவையும் ஸ்டாலினையும்  இந்துத்வா எதிர்ப்பு கட்சிகள் 'புரட்சி' என்று முழங்கிக் கொண்டு ஆதரிக்க, அவர்கள் இருவரும் பா.. மேலிடத்தில் 'சரண்டர்' ஆகி, ஊழலில் சம்பாதித்த சொத்துக்களை பாதுகாக்கவும், மத்திய அரசுக்கு ஒத்துழைத்து மீண்டும் ஆட்சியில் அமர்ந்து அறுவடைக்கு தயாராகி வரும் காட்சிகளையும் கற்பனையாக உருவாக்கி;

நகைச்சுவை மிக்க மாலையாக கோர்த்து;

'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல அரங்கேறி வருகின்றன: 

மேற்குறிப்பிட்ட திரைப்படத்திற்கான  உச்சக்கட்ட காட்சிகள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

வரும் சட்ட மன்ற தேர்தல் போர்க்களத்திற்கு, தி.மு. மற்றும் ...தி.மு. உள்ளிட்ட கட்சிகள் நியமித்துள்ள தேர்தல் வியூக வல்லுநர்கள் தத்தம் திறமைகளை பட்டை தீட்டி வருகிறார்கள்.

கட்சிகளிடமிருந்து கிராமம் முதல் நகரம் வரை விலகி, 'புத்திசாலி' உள்ளூர் மேய்ப்பர்களிடம் சிக்கி, திராவிடக் கட்சிகளின் மேல் மட்டத் தலைவர்களை கோமாளிகள் ஆக்கிய அமாவாசைகள் எல்லாம் தங்களுக்கான பலன்களை எல்லாம் சேதாராமின்றி பெறுவதற்கு,

எழ வாய்ப்புள்ள தடைகளை எல்லாம் தகர்க்க முன்கூட்டியே சுதாரித்து வருகிறார்கள், கொரோனாவால் விளைந்த சூழலையும் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு.

தேர்தல் வியூக வல்லுநர்கள் வகுத்துள்ள திட்டங்களை எல்லாம் கொரோனா சீர்குலைத்து வருகிறது.

வேறு எந்த மாநிலத்திலும் அனுபவித்திராத புதிய பாணி தலை வலி, திருகு வலி போன்ற அனுபவ‌ங்கள் எல்லாம், தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில் தேர்தல் வியூக வல்லுநர்களுக்கு காத்திருக்கிறது.

அமாவாசைகளுக்கும் தேர்தல் வியூக வல்லுநர்களுக்கும் இடையே

'சபாஷ், சரியான போட்டி' துவங்கி விட்டது.

தமிழ்நாட்டில்.திருமங்கலம் ஃபார்முலாவை வெற்றி பெற செய்த அதே வாக்காளர்கள் தான், அந்த ஃபார்முலாவை நம்பி பயணித்த தி.மு.கவை அடுத்த சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியாகக்கூட ஆக முடியாத அளவுக்கு  தோற்கடித்தார்கள். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சசிகலாவின் படத்தைத் தவிர்த்துப் போட்டியிட்ட தினகரனிடம் முடிந்த வரை 'அறுவடை' செய்து வெற்றி பெறச் செய்து, தி.மு.கவை டெபாசீட் இழக்கச் செய்து, பா..கவை நோட்டாக்கட்சியாக்கினார்கள்

வெற்றியின் பின்னணியில் பாடம் கற்று சுதாரிக்காமல், தமிழ்நாடெங்கும் சசிகலாவுடன் தமது படத்தையும் சேர்த்து பேனர்களாக்கி, அடுத்து வந்த பாராளுமன்ற தேர்தலைச் சந்தித்த‌ தினகரனை ஆர்.கே.நகர் தி.மு.கவாக மாற்றிஅண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, பெற்ற வெற்றிகளை எல்லாம் பின் தள்ளி, ஸ்டாலினுக்கு பெரும் வெற்றி தந்தனர். பா..கவுடன் கூட்டணி சேர்ந்த ..அதி.மு.கவைப் பாராளுமன்ற தேர்தலில் தண்டித்தார்கள்.

பின் பா..கவை ஓரங்கட்டி, விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களை ஜெஜெ பாணியில் சாமான்ய வேட்பாளர்களை ...தி.மு. நிறுத்திய போது, ஜெஜெ பாணி வெற்றியைக் கொடுத்து, பா..கவிற்கும் தி.மு.கவிற்கும் பாடம் புகட்டினார்கள்.

குடும்ப ஊழல் கட்சிகளை ஒழிக்க வாய்ப்பு கிடைக்கும் வரையில், தமிழக வாக்காளர்கள் முடிந்த அளவுக்கு தேர்தல்களில் அறுவடை செய்வார்கள். வாய்ப்பு கிடைத்தால், மிகுந்த புத்திசாலித்தனத்துடன் ஊடகங்களையும் கருத்துக் கணிப்புகளையும் முட்டாள்களாக்கி கணக்கு தீர்ப்பார்கள்.


ஸ்டாலினாலும் சசிகலாவானாலும் அவர்களின் ஊழலைப் பற்றி பேசும் துணிச்சலின்றி கட்சி ஆரம்பித்துள்ள கமல்ஹாசன் ஆனாலும், மோடியானாலும், வேறு யாரானாலும், தமிழ்நாட்டு வாக்காளர்களின் மேற்குறிப்பிட்ட கணக்கில் இருந்து தப்ப முடியாது.

அந்த வகையில் தான், கொரோனா போல, யாரும் எதிர்பாராத வியப்பூட்டும் அதிர்ச்சியான முடிவே,

'it’s a Mad Mad Mad Tamilnadu' திரைப்படத்தின் முடிவுக்காட்சியாக இருக்கும்.

No comments:

Post a Comment