Saturday, April 11, 2020

பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்ட சமூகப்புழுதிகளான மனிதர்கள்?


தமிழ்நாட்டின் மீட்சிக்கு பங்களிக்கும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள்



கல்லூரியில் படித்த காலத்தில், எம்.ஜி.ஆர் ரசிகனாகப் பயணித்த என்னாலேயே, எவ்வாறு ராஜாஜியும், .வெ.ராவும், அண்ணாவும் தோற்ற இடத்தில், வெற்றி பெற வாய்ப்புள்ள திசையை எம்.ஜி.ஆர் அடையாளம் காட்டினார்? என்பதை விளங்கிக்கொள்ள முடியாத;

மார்க்சிய லெனினிய பெரியாரியல் புலமையாளனாகவே நான் வாழ்ந்து வந்தேன்; இசை ஆராய்ச்சியில் நான் ஈடுபடுவதற்கு முன்.

1917- இல் வெளிவந்து மீண்டும் மறுபதிப்புகளுக்குள்ளான  'ON GROWTH AND FORM ‘ BY  D'ARCY WENTWORTH THOMPSON என்ற நூலின் அடிப்படையில், தமிழ்நாட்டின் சமூகவியல் தொடர்பாக நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளை ஏற்கனவே பகிர்ந்துள்ளேன்

அந்தநூலின் அடிப்படையில், 'சமூக வளர்ச்சி மற்றும் வடிவம்'- ‘ON SOCIAL GROWTH AND FORM’ பற்றிய ஆய்வினையும், அந்த ஆய்வில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆய்வினையும் பிணைத்து, நான்  ஆய்வு மேற்கொண்டு வருவதையும் வெளிப்படுத்தியுள்ளேன்

முதல்வர் .பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்;

'பெரியார்' .வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.'

என்பதையும் மேற்குறிப்பிட்ட பதிவில் வெளிப்படுத்தியிருந்தேன்.

அதன் தொடர்ச்சியாகவே, தமிழ்நாட்டில் சாமான்யர்களின் மத்தியில், 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களின் எண்ணிக்கையானது அதிகரித்து வருவதை, நான் அடையாளம் கண்டேன்.

எம்.ஜி.ஆர் தி.மு.கவில் சேருவதற்கு முன் காங்கிரசில் இருந்தவர். தி.மு. எதிர்க்கட்சியாக இருந்த போதே, காமராஜரைப் பாராட்டி, தி.மு.கவில் இருந்த சிலரின் எதிர்ப்புக்கு உள்ளானவர். அவர் முதல்வராக இருந்த காலத்தில், தமிழ்நாட்டில் கட்சி அரசியலில் சிக்காத வகையில், தமிழுக்கு உண்மையான வளர்ச்சி ஏற்பட்டது. புலமையாளர்களும் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு மதிக்கப்பட்டார்கள். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் பிரிவினை போக்குகளை ஆதரிக்காமல், இந்திய தேசியத்திற்கு இணக்கமாகவே பயணித்தார்கள். அதன் காரணமாகவே, 'ஆரிய‍  - திராவிட' வாதத்தினை முன்வைத்து, கருணாநிதியையும் சசிகலாவையும் ஆதரித்த 'பெரியார்' கட்சிகளின் தலைவர்கள், அதே வாத அடிப்படையில், எம்.ஜி.ஆரையும் ஜெயலலிதாவையும் எதிர்த்தார்கள்.

'தமிழ் உணர்வு, இந்துத்வா எதிர்ப்பு' என்ற பெயரில் உணர்ச்சிபூர்வ முட்டாள்களை வளர்த்து, 'கோழை இரட்டை வேடப் போக்கில்' வைரமுத்து போன்றவர்கள் பயணித்து, பணத்திலும், செல்வாக்கிலும் 'வளர்ந்து'(?) வந்துள்ளார்களா? அந்த வளர்ச்சிப் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமளிக்காத 'அறிவு ரவுடித்தன போக்கு' வளர்ந்து, நக்கீரன் போன்ற புலமையாளர்கள் எல்லாம் அஞ்சியும், மீடியா வெளிச்சமற்ற இருட்டிலும், வாழும் அளவுக்கு;

தமிழும், தமிழ்நாடும் சீரழிந்துள்ளதா? ஊழல்வாதிகளின் அரவணைப்பில் வளர்ந்த 'இந்துத்வா எதிர்ப்பானது' இன்று மக்களின் வெறுப்புக்கும், கண்டனத்திற்கும் உள்ளாகி, இந்துத்வாவை தமிழ்நாட்டில் பிரமிக்கும் அளவுக்கு வளர்த்து விட்டுள்ளதா?

வேறு வழியின்றி, இயற்கையின் போக்கில், தமிழின் தமிழ்நாட்டின் மீட்சியை முன்னெடுக்கும் பணியானது, இந்துத்வா மூலமே நடைபெற தொடங்கியுள்ளதா? என்பது தொடர்பாக, ஏற்கனவே விவாதித்துள்ளேன்

சமூகத்தில் வாழும் மனிதர்களை தோற்றுவாயாகக் கொண்டு வெளிப்படும் சமூக ஆற்றல்கள்(Social Energy) எல்லாம்;

எந்த சமூக இயக்கவியல் தொழில்நுட்பத்தில் (Social Dynamics Mechanism) தொகுவிசைகளாக (Resultant Forces) வெளிப்படும்?

என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.                 (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_14.html)

இன்று கருணாநிதி இல்லாத நிலையில், அவரின் தொகுவிசையின் பின்னணியாக இருந்த கூறுகள் வளர்வதானது, தமிழ்நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? அது போல ஜெயலலிதா என்ற தொகுவிசையின் பின்னணியாக இருந்த கூறுகள் வளர்வதானது, தமிழ்நாட்டுக்கு நல்லதா? கெட்டதா? என்பது தொடர்பான எனது ஆய்வில்;

முந்தையது தமிழ்நாட்டிற்குக் கெட்டது. ஏனெனில் 1967இல் முதல்வரான (கருணாநிதி அரசியல் வாரிசாகும் வகையில் கட்சி நடத்திய) அண்ணா, தமது கட்சியின் ஊழலைக் கட்டுப்படுத்த முடியாமல், விரைவில் மரணமடைய விரும்பியதைப் பதிவு செய்துள்ளார். அதனை தமிழ்நாட்டு புலமையாளர்கள் எவரும் விவாதிக்கக் கூட அனுமதிக்காத திசையிலேயே, கருணாநிதி பயணித்தார்.

நல்லவேளையாக, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி, அழகிரி உள்ளிட்டு கருணாநிதி குடும்பத்தினரே, கருணாநிதி என்ற தொகுவிசையின் கூறுகளை அதிவேகமாக அழித்து விடுவார்கள்.

பிந்தையது தமிழ்நாட்டின் மீட்சிக்கு உதவக் கூடியது. ஏனெனில் ஜெயலலிதா அரசியல் வாரிசாகும் வகையில் கட்சி நடத்திய எம்.ஜி.ஆர் ஆட்சியானது எவ்வாறு தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் நல்ல திசையைக் காட்டியது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்

கருணாநிதி எதிர்ப்பு அலையில் எம்.ஜி.ஆர் ஆட்சியைப் பிடித்தார். இன்று ரஜினி எதிர்பார்க்கும் அலை யாரை எதிர்த்து? தி.மு. ஸ்டாலினை எதிர்த்தா? சசிகலாவை எதிர்த்தா? இருவரையும் செல்லாக்காசாக்கி ஆட்சி செய்யும் ஈபிஎஸ்‍ -ஓபிஎஸ்ஸை எதிர்த்தா? எம்.ஜி.ஆர் முன்னெடுத்த கருணாநிதி எதிர்ப்பு அலையின் பணி முடியாமல், அடுத்த அலைக்கு சாத்தியம் உண்டா?

தமிழகத்தில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகவும், மக்களுக்காகவும் உங்கள் குரல் இன்னும் நிறைய நாட்கள் ஒலித்திடஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள்”;

என்று தி.மு. தலைவர் ஸ்டாலினுக்குப் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த சாதாரண காமெடியனாக கோமாளியாக அரசியலில் கமல்ஹாசன் பயணிப்பது நிச்சயமாகி விட்டது.  
(https://tamilsdirection.blogspot.com/2020/04/its-mad-mad-madtamilnadu-20-2017.html)


ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்து;     

ஜெயலலிதாவும் அதை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து:

பின் தனது மரணத்தை தானே வரவழைக்கும் போக்கில், ஜெயலலிதா சசிகலாவை தனது வீட்டுக்குள் அனுமதித்து:

மரணத்திற்குப் பின், ராஜாஜி அரங்கத்தில், அவர் பிணத்தைச் சுற்றிஅந்தகுற்றவாளிகள் நின்றதும், 'சாமான்ய மக்கள் என்ன நினைப்பார்கள்?' என்ற கவலையின்றி, நாட்டின் தலைவர்கள் எல்லாம் 'அந்த' குற்றவாளிகளை வணங்கி அஞ்சலி செலுத்தியதும், அதன் உச்சக்கட்டமாக பிரதமர் மோடியும் அவர்களை வணங்கியது மட்டுமல்லாமல், தமிழக பா.. தலைவர்களில் ஒருவர் (நேரடி ஒளிபரப்பாவது தெரிந்தும்) வற்புறுத்தி நடராஜனை வணங்க வைத்ததும்;

இந்தியாவையே ஊழலுக்கு 'சலாம்' போட வைக்கும் வலிமையானது தமிழ்நாட்டிற்கு இருக்கிறது;

என்பதை உலகுக்கு அறிவித்தது.
(http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

ஜெயலலிதாவின் மரணத்தின் மூலமாக, சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்து, தமிழ்நாட்டின் வரலாற்றில் தலைக்குனிவான சாதனையானது. சசிகலா மட்டுமின்றி, ஆதாய அரசியலில் பயணிக்கும் அனைத்து தலைவர்களுக்கும், எச்சரிக்கை தரும், வரலாற்று பாடமாகி விட்டார் ஜெயலலிதாதிருக்குறள் (471) நெறி மறந்து, ஜானகி எம்.ஜி.ஆர் வழியில், அவர் சந்தித்ததை விட, இன்னும் மோசமான விளைவுகளை சந்திக்க உள்ள திசையில், சசிகலாவின் அரசியல் பயணமானது, துவங்கி விட்டது
(2 னவரி 2017-http://tamilsdirection.blogspot.com/2017/01/blog-post.html)  

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலா குடும்ப அரசியல் செல்வாக்கில், அனைத்து கட்சிகளும், ஊடகங்களும் கோழைகளான நிலையில், ...தி.மு.வில் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகளே 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களாக வளர்ந்து வருகிறார்கள்

நாம் இப்போது வாழ்ந்து வரும் நிலையில் இருந்து, வசதி வாய்ப்புகளை உயர்த்திக்கொள்ள சில வாய்ப்புகள் நம் கண் முன்னே தோன்றலாம். அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முன்னேற, நமது தன்மானத்தை இழக்கும் அபாயமும் வெளிப்படலாம். நாம் இழிவாகக் கருதும் நபரைப் பாராட்டி, அவருக்கு வாலாட்ட வேண்டிய வகையில், அந்த அபாயம் உருப்பெறலாம். அவ்வாறு தன் மானத்தை இழக்காமல், வசதி வாய்ப்புகளை அந்த வழியில் உயர்த்திக் கொள்ளாமல் வாழும் சாமான்யர்களே  மைக்ரோஉலகத்தில் செல்வாக்குடன் வலம் வர முடியும்; 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களாக

ஆதாயத்திற்காக சிலரை தமக்கு வாலாட்ட வைத்து, செல்வாக்குடன் வலம் வந்த பிரமுகர்கள் எல்லாம் கேலிக்குள்ளாகி வருகிறார்கள். பல மாதங்களுக்கு முன், மேற்குறிப்பிட்ட ஹீரோக்கள் வாழும் ஒரு கிராமத்தில், 'அதிவேக பெரிய' பணக்காரர் தமது மகன் திருமணத்திற்கு வெளியூர் செல்ல ஏற்பாடு செய்திருந்த பேருந்தில், பயணிக்க, அந்த கிராமத்தில் சுமார் 30 பேர்களுக்கு மேல் ஆட்களை கூட்ட முடியாமல், அந்த பேருந்து பயணித்தது
   
மேக்ரோஉலகத்தில் ஊடக செல்வாக்குடன், 'எந்தப் பக்கம் செல்வாக்கு காற்று அடிக்கிறது? என்று 'நுகர்ந்து'(?) அந்தப்பக்கம் ஒட்டிப்பயணித்த, 'சமூகப்புழுதி' மனிதர்கள் தொடர்பான  எனது அனுபவங்களும், மைக்ரோஉலகத்தில் வெளிப்பட்ட 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களை நான் அடையாளம் காண உதவியது.

1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் உள்ள பொதுமக்கள் கரம், கிராமம் என்ற வேறுபாடின்றி, தாமாகவே கொதித்தெழுந்து, பல வாரங்கள் அந்த கொதிப்பு நீடித்ததை நேரில் அனுபவித்தவன் நான். அந்த கொதிப்பில் உருவான ஆதரவாளர்கள் பலத்துடன், விடுதலைப் புலிகள், PLOTE, EPRLF, TELO, EROS      போன்ற பல ஈழ விடுதலைக்குழுக்கள்தமிழ்நாட்டை தததம் ஆதரவு மண்டலங்களாகக் கூறு போட்டுக் கொண்டனர். அத்துடன் ஆயுதப்பயிற்சிகள், புத்தகங்கள், இதழ்கள் வெளியிடுதல், கண்காட்சிகள் நடத்துதல் உள்ளிட்டு பலவேறு வழிகளில் தம்மைப் பலப்படுத்திக் கொண்டனர். அக்குழுக்களின் தமிழ்நாட்டு ஆதரவாளர்களிடையே ஆங்காங்கு மோதல்கள் நடந்த சம்பவங்களும் உண்டு

மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் தலைவர்களை துதிபாடி, தமிழ்நாட்டு அறிவுஜீவிகளும் அவ்வாறே பல முகாம்களாக பிரிந்து பயணித்தனர். பின் விடுதலைப் புலிகள் மற்ற குழுக்களின் தலைவர்களையும், ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி ஒழித்து, அந்த போக்கில் பயந்து தமது குழு நோக்கி வந்த 'போராளிகளை' சேர்த்து, ஈழவிடுதலையில் ஏகபோக செல்வாக்கு சக்தியாக வெளிப்பட்டனர். மற்ற முகாம்களில் அந்தந்த தலைவர்களை துதி பாடியவர்கள் எல்லாம், கொஞ்சமும் கூச்சமின்றி, பிரபாகரனைத் துதி பாடி பிழைக்கத் தொடங்கினார்கள். அப்போது நெடுமாறனின் துதிபாடியாக பயணித்த அறிவுஜீவிகளில், பிரபாகரனிடம் வைகோவின் செல்வாக்கு உயர்ந்ததை 'நுகர்ந்து', நெடுமாறனை விட வைகோவிற்கு முக்கியத்துவம் கொடுத்து, நெருங்க முயற்சித்தவர்களும் உண்டு.

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் காலில் விழுந்தவர்கள், பின் கருணாநிதியின் காலில் விழுந்தார்கள். சசிகலாவின் காலில் விழுந்தவர்கள், ஸ்டாலின் காலில் விழுந்தார்கள்.

அத்தகைய 'எந்தப் பக்கம் செல்வாக்கு காற்று அடிக்கிறது? என்று 'நுகர்ந்து'(?) அந்தப்பக்கம் ஒட்டிப்பயணித்த, 'சமூகப்புழுதி' மனிதர்களை எல்லாம் ஊக்குவித்த தலைவர்களின் கடைசி காலமானது, சமூகத்தின் சாபத்திலிருந்து தப்ப முடியாத தண்டனைகளை அனுபவிக்க நேரிடும்;

என்பதற்கு நிகழ்காலத்தில் சாட்சிகள் வெளிப்படும் படலமும் தொடங்கி விட்டது.

பிரபாகரனை 'மாவீரன்' என்று அழைத்தார் வைகோ. பிரபாகரன் முள்ளிவாய்க்கால் போரில் மடிந்தார். பின் ஜெயலலலிதாவின் மரணத்திற்குப் பின், சசிகலா முதல்வராவார் என்று எதிர்பார்த்து, அவரை 'வீரமங்கை வேலு நாச்சியார்' என்று பட்டம் கொடுத்து பாராட்டினார். அதன்பின் சசிகலா சிறைக்கு சென்றார். சிறையில் அவரை வைகோ சந்தித்ததாக செய்திகள் இல்லை. அடுத்து ஸ்டாலின் முதல்வராவார் என்று எதிர்பார்த்து, அவரின் தீவிர ஆதரவாளராகியுள்ளார். அடுத்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு. ஆட்சியைப் பிடிக்கவில்லை என்றால், 'கொங்கு நாட்டு சிங்கம்' என்று முதல்வர் .பி.எஸ்ஸை வைகோ பாராட்டினாலும் வியப்பில்லை. ஆனால் அதற்கு இடம் கொடுக்காமல், பிரபாகரன், சசிகலா, ஸ்டாலின் வரிசையில் ஏமாறாமல், முதல்வர் .பி.எஸ் தப்பிக்கவும் வாய்ப்பிருக்கிறது.

உத்திரபிரதேசத்தில் அன்றைய முதல்வர் அகிலேஷ் யாதவ்  2017 சட்டசபை பொதுத்தேர்தலை பிரசாந்த் கிஸோரின் ஆலோசனையுடன் சந்தித்தார்
(https://www.financialexpress.com/elections/uttar-pradesh-assembly-elections-2017/uttar-pradesh-elections-poll-strategist-prashant-kishor-to-campaign-for-akhilesh-yadav-and-rahul-gandhi/519360/) வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலுக்குப் பின், தமிழ்நாட்டு அகிலேஷ் யாதவாக ஸ்டாலின் வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

ஜெயலலிதாவை 'பால்கனி பாவை' என்று இன்னும் ஆபாசமாக வர்ணித்து, பின் பிழைப்பிற்காக ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக இருந்த, (மரணம் அடைந்ததால், சிறைத் தண்டனையிலிருந்து தப்பித்துள்ள) காளிமுத்துவும்; (http://www.thehindu.com/news/cities/chennai/Five-sent-to-jail-in-33-year-old-Robin-Mayne-case/article14028554.ece?homepage=true?w=alstates) விடுதலைப் புலிகளுக்கு உதவியவர்களில் ஒருவர் ஆவார். அதாவது தமிழ்நாட்டை ஊழல் மூலம் சூறையாடியவர்களின்,(சுயலாப அரசியல் கணக்கு, அல்லது தனித்தமிழ்நாடு போதையில் உணர்ச்சிபூர்வ வன்முறை வழிபாட்டு போக்கு காரணங்களால் வெளிப்பட்ட‌) 'உதவியையும்' (பாவத்தில் பங்கையும்), பெறுவதில் உள்ள பழியைப் பற்றிய புரிதலின்றி பயணித்தது விடுதலைப் புலிகள் இயக்கம். (http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html)


தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், மலைகள் உள்ளிட்ட கனிவளங்களை ஊழல் பேராசையில் சூறையாடி, கொலை மற்றும் அச்சுறுத்தல் மூலம் தனியார்ச்சொத்துக்களை அபகரித்த அநியாயங்களை எதிர்க்காமலும், வாய்ப்பு கிடைத்தால் அக்கொள்ளையர்களுடன் நேசமான உறவு கொண்டு, வெளியில் தெரிந்தும் தெரியாமலும் 'உதவிகள்' பெற்றும், இன்றும் தமிழ்நாட்டில் விடுதலைப்புலி ஆதரவு கட்சிகள் எல்லாம், அதே பிரபாகரன் வழியிலேயே பயணிக்கிறார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம்.

பிரபாகரன், ஜெயலலிதா, கருணாநிதி, சசிகலா, ஸ்டாலின் போன்றவர்களால் ஊக்குவிக்கப்பட்ட சமூகப்புழுதிகளான மனிதர்கள், மேக்ரோஉலகத்தில் செல்வாக்குடன் வலம் வந்தது போல, மைக்ரோஉலகத்தில் வலம் வர முடியாது. தப்பித்தவறி, அவர்கள் மைக்ரோஉலகத்தில் வெளிப்படும்போது, இப்போது கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகி வருகிறார்கள். வரும் காலத்தில் அவர்களும் அவர்கள் குடும்பத்தாரும் வெளியில் தலை காட்ட வெட்கப்படும் சூழலும் உருவாகி வருகிறது.

மைக்ரோஉலகத்தில் சுயலாப நோக்கின்றி செயல் அளவில் நல்லது செய்பவர்களே போற்றப்படுகிறார்கள்

மைக்ரோஉலகத்தில் சாதிப்பற்றுடன் சுயலாப நோக்கில் வாழ்ந்து கொண்டு, மேக்ரோஉலகத்தில் 'சாதி எதிர்ப்பு முற்போக்காளர்களாக வலம் வர தமிழ்நாட்டில் முடியும்;

என்று நிரூபித்து பலர் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கொலை, கொள்ளை, தனியார் சொத்து அபகரிப்பு உள்ளிட்ட ஊழல் தாதாக்களை உரசாமல், அக்கொள்ளையர்களில் சிலர் ஊழல் பணத்தில் 'தமிழ்ப்புரவலராக' வேடம் போட உதவும் வகையில், 'தமிழ்த்தேசிய, பகுத்தறிவு, ஆன்மீக, இன்னும் பல' கட்சிகளின் தலைவர்கள் எல்லாம் ஊடக வெளிச்சத்தில் மேக்ரோஉலகில் வெளிச்சம் போட முடியும். ஆனால் மைக்ரோஉலகில் அவர்களை கேலிப்பொருளாகக் கருதுவதும், அந்த ஊடக வெளிச்சத்தில் ஏமாந்தவர்களுக்கு தெரியுமா?

நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதை நாம் பணியாற்றுமிடம் மற்றும் வாழுமிடம் போன்ற மைக்ரோஉலகத்தில் மறைத்து வாழ்வது கடினம் ஆகும்.

எனவே மைக்ரோஉலகத்தில் சுயலாபக் கள்வர்களாக வாழ்ந்து கொண்டு, யோக்கியர்களாக வேடம் போடுவது கடினமாகும். எனவே சமூகப்புழுதிகளான மனிதர்கள் செல்வாக்குடன் வலம் வர வாய்ப்பின்றி, 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள் எண்ணிக்கையில் வளர்ந்து வரும் உலகமாக மைக்ரோஉலகம் இருக்கிறது.

மேக்ரோஉலகத்தின் கண்ணுக்குத் தெரியாமல், மைக்ரோஉலகத்தில் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்களின் பிரமிப்பூட்டும் பங்களிப்பானது, கீழ்வரும் எறும்புகள் பற்றிய ஆராய்ச்சியுடன் ஒப்பிடத்தக்கதாகும்.

பல எறும்புகள் சேர்ந்து மிகப்பெரிய உணவுக்கட்டியை எவ்வாறு தமது  இலக்கு நோக்கி நகர்த்துகின்றன? தனி ஒரு தலைவரின்றி, அந்தந்த கட்டத்திற்கு தலைமை தாங்கி, தமது பணி முடிந்தவுடன், ஒதுங்கி, அடுத்த நகர்வுக்கான தலைக்கு இடம் விட்டு, எவ்வாறு அந்த காரியம் நிறைவேறுகிறது? என்பவை எல்லாம் ஆராய்ச்சிகள் மூலமாக வெளிப்பட்டுள்ளன.

"When ants are moving huge objects, one of the things that people have noticed… is how chaotic it can appear, with ants randomly joining a group and then leaving it again," Prof Franks told the BBC.
"What this study shows really beautifully is that those ants that join in briefly can be the informed ones that know which way the object should be going - so they give a little bit of steerage periodically, and keep things more or less on track.

"I think this very quantitative and beautiful approach illuminates a curious bit of natural history that we didn't previously understand."; 

மேற்குறிப்பிட்ட ஆய்வுகளின் முடிவுக்கு ஏற்ப, தமிழ்நாட்டின் போக்குகளில், எறும்பைப்போல அவ்வப்போது பங்களித்து, அப்பங்களிப்பு மூலமாக வரக்கூடிய பாராட்டு மற்றும் வசதி வாய்ப்புகளுக்கு பலியாகாமல் ஒதுங்கி, மீண்டும், மீண்டும் அவ்வாறே சமூகத்தில் வெளிப்படும் சிக்னல்களை எறும்பு போல நுகர்ந்து, நான் பங்களித்து வந்துள்ளதும் என்னை வியப்பில் ஆழ்த்தியது
(http://tamilsdirection.blogspot.com/2016/07/blog-post.html)

என்னைப் போன்ற சமூக எறும்புகளின் மூலமாக, தமிழ்நாடானது உரிய பலன்கள் பெற முடியாமல் எது தடுக்கிறது? சாகும் வரை தலைவர்களாக உள்ள கட்சிகளும் ஒரு முக்கிய காரணமாகும். ஆதாய அரசியல்  மற்றும் அரசியல் நீக்கம் காரணமாக, அக்கட்சிகள் எல்லாம், தமிழ்நாட்டில் செல்லாக்காசாகி வருவதும் நல்ல அறிகுறியாகும்.

என்னைப் போலவேதமிழ்நாடானது மீட்சி திசையில் பயணிக்கும் வகையில், ஆங்காங்கே கல்லூரி மாணவர்களும், இளைஞர்களும் கட்சி சார்பின்றி சமூக எறும்புகளாகப் பங்களித்து வருகிறார்கள்அதிகம் படிக்காத சாமான்யர்கள் மத்தியில் வளர்ந்து வரும் 'எங்க வீட்டுப் பிள்ளை' எம்.ஜி.ஆர்கள், அவற்றின் தொகு திசையினை (Resultant direction) வளர்த்து வரும் அதிசயமும் தமிழ்நாட்டில் நிகழ்ந்து வருகிறது

சற்றும் எதிர்பாராத வகையில், அந்த அதிசய நிகழ்வுக்கு துணை புரியும் திசையில்;

'கொரோனா தடுப்பு' நோக்கத்திற்காக, அரசு அமுல்படுத்தியுள்ள‌ 'சமூக ஒரீஇ' செயல்நுட்பம் மூலமாக‌, தமிழ்நாட்டில் 1967க்கு முன் இருந்த சுய பொது ஒழுக்கம் மீண்டும் நடைமுறைக்கு வருவதானது நல்ல சமூக அறிகுறியாகும்
(https://tamilsdirection.blogspot.com/2020/03/blog-post_27.html)


அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, .வெ.ராவால் எப்படி கெட்டது? என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். 

பிரிவினைக்கான சமூக ஆற்றல்கள் எல்லாம், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவின் காரணமாகவும், .வெ.ராவின் 'தமிழ் அடையாள அழிப்பு' மூலமாகவும், தி.மு.கவின் 'சமூகப்புழுதி உருவாக்கம்' செயல்நுட்பத்திற்கு பயன்பட்டது, என்பது எனது ஆய்வு முடிவாகும்



ஒரு சமூகமானது தாய்மொழி பாரம்பரியம் தொடர்பான  சமூக ஆணி வேர்களை அழிக்கும் 'சமூக வேர்க்கொல்லி' நோயில் சிக்கி விடுமானால், அந்த சமூகத்தில் வெளிப்படும் அழிவுகளிலும், குற்றங்களிலும், பிற பாதிப்புகளிலும், அக்கிருமிகளால் ஏற்படும் சமூக நோய்களின் 'வலிமை' வெளிப்படும்.


இந்தியாவில் தமிழ்நாடானதுவித்தியாசமானதிசையில் பயணித்து,

இன்று உலக அளவிலான 'தேசக்கட்டுமானச் சிக்கல்கள்' (Nation Building Crisis) பற்றிய ஆய்வுகளுக்கு வெளிச்சம் காட்டும்சிக்னல்கள்’, தமிழ்நாட்டில் வெளிப்படுவதையும் பதிவு செய்துள்ளேன்
(http://tamilsdirection.blogspot.com/2019/01/3.html)

No comments:

Post a Comment