Friday, December 11, 2020

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (2)


தேவநேயப் பாவாணரின் ஆய்வுகளை வழிபடுவது  தொல்காப்பிய யாப்பிலக்கணத்திற்குக் கேடாகும் 

 

தொல்காப்பியத்தில் வரும் 'ஓசை' மற்றும் 'இசை' ஆகிய சொற்களின் வேறுபாடுகளைக் கணக்கில் கொண்டு, தொல்காப்பிய விதிகளைப் புரிந்து கொள்ளாமல், தேவநேயப் பாவாணர் மேற்கொண்ட ஆய்வுகளில் உள்ள குறைபாடுகளை எல்லாம் விவாதிப்பதை தாமதப்படுத்துவதானது,

தமிழுக்கு எவ்வாறு கேடாகவே முடியும்? என்ற ஆய்வில் துணிச்சலுடன் ஈடுபடுபவர்களின் பார்வைக்கு:

‘தமிழ் உரைகளில் உள்ள குறைபாடுகளும், புதிய ஆய்வுகளுக்கான வெளிச்சங்களும்’ ; https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html

குறிப்பாக, தமிழ் இசையியலுக்கு தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடுகள் பெரும் பாதிப்பினை எவ்வாறு விளைவித்தது? என்ற உண்மையை அறிவதில் ஆர்வமுள்ளவர்களின் பார்வைக்கு கீழ்வருபவது உரியதாகும்.

“தமிழில் எல்லாப் பொருள்களையும் வெளியிடத்தக்க எண்ணிறந்த சொற்களுள்ளன. ஆதலின் பிறமொழிச் சொற்களையேனும் எழுத்துகளையேனும் புதிதாய்ச் சேர்க்க எட்டுணையும் இடமின்று."

என்ற தேவநேயப் பாவாணர் நிலைப்பாடானது தொல்காப்பியத்தில் எழுத்தொலிகளின் அடிப்படையில் உருவாகும் இசை வண்ணம் பற்றிய அறியாமையில் வெளிப்பட்டுள்ளது.

தமிழ் மொழியின் எழுத்தொலிகளின் அடிப்படையில் இசை அழகியலில் (Musical aesthetics) உயரிய 'வண்ணங்கள்' தொல்காப்பியத்தில் வகைப்படுத்தப்பட்டிருப்பது எனது கவனத்தினை ஈர்த்தது. அந்த வண்ணங்களில் ஒன்று 'ஒரூஉ வண்ணம்' ஆகும்.

'ஒரூஉ வண்ணம் ஒரீஇத் தொடுக்கும்'

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டால், மேலே குறிப்பிட்ட வண்ணம் பற்றி சரியாக விளங்கிக் கொள்ள முடியாது. 'ஒரூஉ வண்ணம்' தொடர்பான ஆய்வே, என்னை 'ஒரீஇ' தொடர்பான ஆய்விற்கு வழி நடத்தியது. (https://tamilsdirection.blogspot.com/2019/05/normal-0-false-false-false-en-us-x-none_5.html)

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை போன்ற பாடல் கூறுகளின் இசையியல்(musicology) பரிமாணமானது தேவநேயப் பாவாணருக்கு தெரியாததால், மொழியும் இசையும் இணைந்ததே தொல்காப்பிய 'யாப்பிலக்கணம்' என்பதும் அவருக்கு விளங்கவில்லை. (https://tamilsdirection.blogspot.com/2018/09/4-social-comparison-infection-passions.html)

அசை, சீர், தூக்கு, தளை, அடி, தொடை 'நீர்' உள்ளிட்டவற்றின் இசையியல் பரிமாணங்களின் பின்னணியில், தொல்காப்பியத்தில் ஏழு உயிர் நெடில் எழுத்துக்களும், ஏழு இசைச்சுரங்களுடன் பொருந்தி ஒலிக்க, மெய்யெழுத்துக்கள் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட வரையறையில் ஒலிக்கும் முறையின் (Musical Phonetics) அடிப்படையிலேயே, உலக மொழிகளுக்கான ‘இசை மொழியியல் (Musical Linguistics) இலக்கணமாக, தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணம் அமைந்துள்ளது; 'Natural Language Processing (NLP)' துறையில் புதிய வியாபார, வேலை வாய்ப்புகளை உருவாக்கும் வகையில்.  

தமிழில் லெக்சிகனைப் போலவே, உரைகளுக்கும் அடிமையாகாமல், உண்மையைக் கண்டறியும் துணிச்சலுடனும், அறிவுபூர்வ சான்றுகளின் அடிப்படையில் தவறுகளைச் சுட்டிக்காட்டினால், திருத்திக் கொள்ளும் கூடுதல் துணிச்சலுடனும் பயணித்ததாலேயே, தொல்காப்பியத்தில் இசை மொழியியலைக் கண்டுபிடிக்க முடிந்தது. (https://tamilsdirection.blogspot.com/2019/01/4.html)

தொல்காப்பியத்தின் யாப்பிலக்கணமானது உலகில் உள்ள மொழிகளின் இசைப்பாடலுக்கான உலக இலக்கணமாகும். ( universal grammar for musically rendered poems)

Application of ‘Physics of Music’ to ancient Tamil grammar text ‘tholkAppiam’ and other ancient Tamil texts led to the discovery of ‘Musical Linguistics’ (‘Musical Phonetics in Tholkappiam’ in the journal of the international institute of Tamil studies; December 2013  http://www.ulakaththamizh.in/journal)

From the above discovery, the sound of letters had dual aspects; one serving the semantic goal in prose and speech, and the other serving the non-semantic musical goal in musically rendered song.

While linguistics is the scientific study of language, musical linguistics is the scientific study of the musical language employed in the musically rendered poems.

A poem can be rendered as a prosody or musical. In a musically rendered poem, musical structure-based encoding & decoding conveys the musical meaning. while simultaneous speech structure-based encoding & decoding conveys the language meaning.

In Musical Linguistics, the rules of joining the letters for composing the poems are non-semantic and hence language-independent, but musical structure dependent.

AI & NLP involving musical linguistics (https://musicdrvee.blogspot.com/2020/11/ai-nlp-involving-musicallinguistics.html)

உலக அளவில் முக்கியத்துவம் பெற்று வரும் மேற்குறிப்பிட்ட தொல்காப்பியம் தொடர்பான கண்டுபிடிப்பினை தமிழ்நாட்டில் உள்ள தமிழ்ப்புலமையாளர்களும் மொழியியல் புலமையாளும் சரி என்று ஏற்றுக் கொண்டார்களா? அல்லது அதில் உள்ள குறைகளை எல்லாம் சுட்டிக்காட்டினார்களா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து அவரவரின் யோக்கியதையைக் கண்டுபிடிக்கலாம். அத்தகையோர் தமக்குள்ள சமுகக்கடமையை நிறைவேற்றுவது தாமதாகும் வரையில், மேற்குறிப்பிட்ட கண்டுபிடிப்பால், தமிழும் தொல்காப்பியமும் உலக அளவில் பெற வேண்டிய முக்கியத்துவமும் தாமதமாகும்.

No comments:

Post a Comment