Thursday, November 12, 2020

 

'பெரியார்', இந்துத்வா, முஸ்லீம், தலித், தமிழ்த் தேசியம், கிறித்துவ அமைப்புகளின் தலைவர்கள்;


சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, ஊழலுக்கு உதவும் வெறுப்பு அரசியலை வளர்த்தார்களா?

 

முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தானது, எனது கவனத்தினை ஈர்த்தது.

"யாராவது ஒருவர் இந்தத் திருட்டுப் பூனைகளுக்கு மணி கட்டித்தான் ஆக வேண்டும் -

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர்கள் -

இங்கே, 15% மட்டுமே இருக்கும் முஸ்லிம்கள் தான் என்றால் அது ஒன்றும் பொய்யல்ல -

நான் எழுதிய தகவல்கள் மீது சந்தேகம் இருந்தால் நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தகவல்களைப்பெறலாம் "                 (முழுவதும் கீழே குறிப்பில்)

மேற்குறிப்பிட்ட கருத்து தொடர்பாக, முகநூலில் கீழ்வரும் கருத்தினை நான் பதிவு செய்தேன்.

‘தவறு செய்யும் முஸ்லீம்களை அடையாளம் கண்டு தண்டிப்பதை ஊக்குவிக்காமல், அனைத்து முஸ்லீம்களையும் (அப்துல் கலாமும் முஸ்லீம் தான்) எதிரிகளாக அணுகுவதும்,

தவறு செய்யும் சிங்களவர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதை ஊக்குவிக்காமல், அனைத்து சிங்களவர்களையும் எதிரிகளாகக் கருதி, தஞ்சை பெரிய கோவிலுக்கு வந்த சுற்றுலாப் பயணிகளைத் தாக்கியதும்,

தவறு செய்த (சென்னை ஐ.ஐ.டியில் விஞ்ஞானி வசந்த கந்தசாமிக்கு கெடுதல் செய்தவர்களைப் போன்ற) பிராமணர்களை அடையாளம் கண்டு தண்டிப்பதை ஊக்குவிக்காமல், அனைத்து பிராமணர்களையும் எதிரிகளாக அணுகுவதும், ((Madras HC slams IIT-M’s gross irregularities in selection of professors; https://www.deccanchronicle.com/nation/in-other-news/230816/madras-hc-slams-iit-ms-gross-irregularities-in-selection-of-professors.html )

ஒரே பாணி வெறுப்பு அரசியலாகும். 

இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி வலிமை பெறுவதன் மூலமே வெறுப்பு அரசியலுக்கு இடம் இல்லாமல் செய்ய முடியும்.’

மேற்குறிப்பிட்ட எனது கருத்துக்கு, கீழ்வரும் பின்னூட்டங்கள் முகநூலில் வெளிவந்தன.

“வரவேற்கிறேன். மிகச் சரியான பதிவு. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது ஏட்டளவில். ஆனால் நடைமுறையில் அப்படி இல்லை. அது தான் இங்கு, இந்நாட்டில் இது தான் பிரச்சினை.”

“இந்திய கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்த திரு.அசாருதீன் சூதாட்டக்காரர் என்று நிரூபணமாகிய போது அவர் தன்னை சிறுபான்மையினத்தவர் என்று கூறி தப்ப முயற்சித்தார். அவருக்கு அரசியலில் புகலிடம் வழங்கியிருப்பது அகில இந்திய காங்கிரஸ் கட்சி.

பதிவில் கூறியுள்ள குற்றங்களை செய்பவர்கள் பிடிபட்டால் தம்மை சிறுபான்மை இனத்தவர் என்பதும், அவர்களுக்கு சில அரசியல் கட்சிகளும் கொடுக்கும் ஆதரவுமே அவர்கள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு முக்கிய காரணம்.”

மேற்குறிப்பிட்ட எனது கருத்துக்கு, கீழ்வரும் பின்னூட்டங்கள் முகநூலில் வெளிவந்தன.

‘சட்டத்தின் ஆட்சி வலிமையாக இருந்திருந்தால் அது சாத்தியம் ஆகாது, சிங்கப்பூரில் உள்ளதைப் போல. சட்டத்தின் ஆட்சி வலிமையாக இருந்தால், சோனியா, ஸ்டாலின் போன்றவர்கள் சிறை சென்றிருப்பார்கள். தமிழ்நாட்டில் 1967க்குப் பின், ஊழல் வளர்ந்த வேகத்தில் சமூக நேர்மை வழிகாட்டி -social ethical compass- சீர் குலைந்தது. பெரியாரிஸ்டுகளும் இந்துத்வா பிரபலங்களும் தமிழ்த்தேசியர்களும் முஸ்லிம் தலைவர்களும் தலித் தலைவர்களும் கருணாநிதி சசிகலா நடராஜன் குடும்பங்களுக்கு நெருக்கமாகி, தமிழ்நாடு ஊழல் சுனாமியில் சிக்கியதை எதிர்க்கவில்லை. சமூக நேர்மை வழிகாட்டி புத்துயிர் பெறாமல் சட்டத்தின் ஆட்சி வலிமை பெறாது. வெறுப்பு அரசியலில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெறாது. தங்களுக்கு வேண்டியவர்கள் பாதிக்கப்படும் போது மட்டும் முணகுவது தொடரும்.’

அடுத்து தமிழ்நாட்டில் சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, ஊழலுக்கு உதவும் வெறுப்பு அரசியலை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறு வளர்த்தார்கள்? என்பதற்கு கீழ்வருபவை விளக்கம் தரும்.

ஈ.வெ.ரா அவர்களின் ஆய்வு முடிவுகளும் தவறானவையே, என்பதை எனது ஆய்வுகள் மூலமாக வெளிப்படுத்தியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2020/05/blog-post_30.html )

தம் மீதான விமர்சனத்தை ஒட்டாமல், வெட்டாமல், அப்படியே வெளியிட்டு, அதனருகே தமது விளக்கத்தை வெளியிடுவதற்கு ஒரு அசாத்திய துணிச்சல் வேண்டும்.

தாம் பாராட்டும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது பாராட்டுதலுக்கான நியாயத்தை வெளியிடுவதற்கும்;

தாம் கண்டிக்கும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள பாராட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது கண்டனத்திற்கான‌ நியாயத்தை வெளியிடுவதற்கும்;

அசாத்திய துணிச்சல் வேண்டும்.

அதெல்லாம் சாத்தியமா? என்று ஐயப்படுபவர்கள் எல்லாம், 1944இல் திராவிடர் கழகம் துவங்குவதற்கு முன்;

1925 முதல் 1944 வரை வெளிவந்த‌ 'குடிஅரசு' இதழில் ஈ.வெ.ரா அவர்கள் எழுதி வெளிவந்தவைகளை படிக்கலாம்.

உலக அளவில், நானறிந்தது வரையில், எந்த தலைவரும் அந்த துணிச்சலை வெளிப்படுத்தவில்லை. அது தவறு என்று எவரும் உரிய சான்றுகளின் அடிப்படையில் அறிவித்தால், திருத்திக் கொள்வேன். (https://tamilsdirection.blogspot.com/2017/12/blog-post.html )

மறைமலை அடிகள், திரு.வி.க ம.பொ.சி உள்ளிட்டு பெருஞ்சித்தரனார் வரையில் எந்த தமிழ்த்தேசியத் தலைவரும் அந்த அளவுக்கு சமரசமற்ற சமூக நேர்மை வழிகாட்டி முன்னுதாரணமாகப் பயணிக்கவில்லை. அதனை உரிய சான்றுகளுடன் மறுப்பதை நான் வரவேற்கிறேன். தவறு வெளிப்பட்டால், அதனைப் பகிரங்கமாக அறிவித்து திருத்திக் கொள்வதிலும் எனக்குத் தயக்கமில்லை. அதற்கும் ஈ.வெ.ராவே சிறந்த முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியுள்ளார். (‘தனது அறிவுக்கு 'தவறென' பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்'  ஈ.வெ.ரா’; https://tamilsdirection.blogspot.com/2017/09/blog-post_20.html  )

ஒரு தமிழ்த்தேசியர் கீழ்வரும் கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

"ஈவேரா வை தமிழ் தேசியவாதிகள்; நான் உட்பட விமர்சிப்பதற்குக் காரணம் கண்டிப்பாக அவரின் தனிப்பட்ட வாழ்க்கை அல்லவே அல்ல. அவரின் திராவிடக் கொள்கையால் என் தமிழ் இனத்துக்கு தமிழ் அடையாளத்துக்கு, தமிழ் மெய்ஞானத்திற்கு நேர்ந்து விட்ட படுபாதகத்தினால் தான் என்பது மட்டுமே உண்மை. இதே ஈவேரா அவர்களை நான் தமிழன் அல்லாத தமிழ் நாட்டு தெலுங்கராகவோ, மலையாளியாகவோ, கன்னடராகவோ இருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு கொண்டாடுவேன் அன்றோ. காரணம் அவரின் திராவிடக் கொள்கையால் இவர்களுக்குக் கிடைத்த அனுகூலங்கள் பலவாகும்."

ஈவெராவின் தொண்டுகளால் எவ்வாறு மலையாளிகளும் கன்னடர்களும் தெலுங்கர்களும் பலனடைந்தார்கள்? என்பதை உரிய சான்றுகளுடன் எந்த தமிழ்த்தேசியராவது விளக்கினால் நன்று.

மேற்குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்தியவர், பிரபாகரனையும் பெருஞ்சித்தரனாரையும் உயர்த்தி ஈவெராவைத் தாழ்த்தியுள்ளார்.1980களில் பிரபாகரன் எதிர்த்த புளோட் உமா மகேசுவரனை பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் ஆதரித்தார்கள். பெரியாரிஸ்ட்களான கோவை இராமகிருட்டிணன், கொளத்தூர் மணி உள்ளிட்டவர்களின் ஆதரவே விடுதலைப்புலிகளின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். பிரபாகரன் புளோட் உமா மகேசுவரன் உள்ளிட்ட பிற குழுக்களின் தலைவர்களையும் ஆயுதப்பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமின்றி சுட்டுக்கொன்ற போது, பெருஞ்சித்தரனார் உள்ளிட்ட தமிழ்த்தேசியர்கள் அதை விமர்சிக்காமல் மெளன சாட்சிகளாகப் பயணித்து, பின் பிரபாகரன் தீவிர ஆதரவாளர்கள் ஆனார்கள். (https://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html  )

இப்போது தமிழ்த்தேசியர்கள் பிரபாகரனையும் பெருஞ்சித்தரனாரையும் உயர்த்தி, ஈவெராவைத் தாழ்த்தி வருகிறார்கள். இனியாவது  பிரபாகரன் பெருஞ்சித்தரனார் போன்றவர்களை அறிவுபூர்வ விமர்சனத்திற்கு பெரியார் கட்சிகளின் தலைவர்கள் உட்படுத்துவார்களா? அல்லது பெரியார் பிம்ப வழிபாட்டில் ஈவெராவை தமிழ்த்தேசியர்கள் தாழ்த்தி வருவதை உரிய எதிர்ப்பின்றி அனுமதிக்கப்போகிறார்களா?

பொதுவாக தமிழ்நாட்டில் பேச்சை விட செயலுக்கே தகவல் பரிமாற்ற வலிமை அதிகமாகும். 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் முதல் தமிழக எல்லை மீட்பு உள்ளிட்டு தமிழ்நாட்டின் நலன் காக்க நடந்த போராட்டங்களில் செயல்பூர்வமாக ஈவெரா பங்களித்த அளவுக்கு திரு.வி.க, மபொசி, பெருஞ்சித்தரனார் உள்ளிட்டு தமிழ்த்தேசியவாதிகள் போற்றும் எவரும் ஈவெரா அளவுக்கு பங்களிக்கவில்லை, என்பதை வாலாசா வல்லவன் போன்றவர்கள் உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தி உள்ளார்கள். அதை தமிழ்த்தேசியர்கள் மறுப்பதை நான் வரவேற்கிறேன்.

கட்சிகளின் தலைவர்களை மெளன சாட்சிகளாக்கி சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, வெறுப்பு அரசியலை மூலதனமாக்கி வளர்ந்த ஊழல் பெரும்பசிக்கு தமிழ்நாட்டின் ஏரிகள், ஆறுகள், மலைகள், தாது மணல், காடுகள், அச்சுறுத்தல் மூலமாக தனியார்ச் சொத்துக்கள் எல்லாம் இரையாகின அந்தப் போக்கில் தான், 1970களில் ஆங்கிலவழிக் கல்வி ஊழல் வியாபாரமானது வளர்ந்து, தமிழ்வழிக்கல்வியின், எனவே தமிழின் மரணப்பயணத்தைத் தூண்டுவித்தது.

'பெரியார்', இந்துத்வா, முஸ்லீம், தலித், தமிழ்த் தேசியம், கிறித்துவ அமைப்புகளின் தலைவர்களில் அதற்கு மெளன சாட்சிகளாகப் பயணித்தவர்கள் யார்? ஊழல் பிதாக்களுடன் நெருக்கமாகிப் பயணித்தவர்கள் யார்? பாரபட்சமின்றி அதை எதிர்த்தவர்கள் யார்? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து உண்மையை உணரலாம்.

தமிழ் தொடர்பான ஈவெராவின் நிலைப்பாடுகள் தமிழ் அடையாளம் சிதைவிற்கு வழி வகுத்ததை எனது பதிவுகளில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

ஆனாலும் தமிழ் அடையாள மீட்சிக்கு சுயலாப நோக்கின்றி பயணிக்கும்.பெரியாரிஸ்ட்களையே நான் எதிர்பார்க்கிறேன். அவர்களில் பலர் செயல்பூர்வமாக தாய்மொழி தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு உதவி வருகிறார்கள். பெரியாரிஸ்டுகளில் சமூகக் கிருமிகளை நான் அடையாளம் கண்டிருந்தாலும், எனது அனுபவத்தில், ஒப்பீட்டில் சுயலாப நோக்கற்ற சமூகப்பற்று உடையவர்களும், சமூக நேர்மையுடன் வாழ்பவர்களும் தமிழ்த்தேசிய முகாம்களை விட, பெரியார் முகாம்களில் அதிகமாகும். 

குக்கிராமங்கள் வரை விளையாட்டுப் பள்ளிகள் ஊடுருவி இன்று கல்லூரி மாணவர்களில் தமிழில் சரளமாக எழுதவும் படிக்கவும் தெரியாதவர்கள் எண்ணிக்கையில் அதிவேகமாக அதிகரித்து வருகிறார்கள். முன்னுதாரணமாக இருக்க வேண்டிய தமிழ் ஆர்வலர்களின் குடும்பப் பிள்ளைகளும் அதே போக்கில் தமிழ் வேரழிந்தவர்களாக இருக்கிறர்களா? இல்லையா? என்ற ஆராய்ச்சியை, அண்மையில் தமிழ்நாடு கொடி அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற குடும்பங்களில் இருந்து தொடங்கலாம்.

அமெரிக்காவில் இருப்பது போல, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கொடி இருக்கலாம். இந்தியாவில் கர்நாடகம் வலிமையான மாநிலம் என்பதும், தமிழ்நாடு நோஞ்சான் மாநிலம் என்பதும் எனது கருத்தாகும். (https://tamilsdirection.blogspot.com/2020/06/blog-post_29.html )

எது சரியான தமிழ்நாடு கொடி? என்பதில் கருத்து வேறுபாடுகள் இருப்பது போல, கர்நாடக கொடியில் கருத்து வேறுபாடுகள் உண்டா? 'காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணைகள் கட்ட ஆட்சேபணை இல்லை' என்று 1969 இல் சட்டசபையில் முதல்வர் கருணாநிதி அறிவித்த போது யார் எதிர்த்தார்கள்? அது போல, கர்நாடக சட்டசபையில் கர்நாடக முதல்வரும் தமது மாநில உரிமைக்கு எதிராக பேசியபின் அரசியலில் நீடித்திருக்க முடியுமா?  தீதும் நன்றும் பிறர் தர வாரா

கூடுதலாக, இந்திய விடுதலைக்குப்பின், தேசிய கட்சியில் தமிழ்நாட்டில் தமிழ் அடையாள மீட்சியை, தமிழக பாஜகவில் எல்.முருகன் அண்ணாமலை துவங்கி இருக்கிறார்கள், என்பது எனது கருத்தாகும்.

தமிழக பா.ஜ.க மட்டுமின்றி, தமிழின் மீதும், தமிழ்நாட்டின் மீதும் உண்மையான அக்கறையுள்ள கட்சிகளில் எல்லாம், கருணாநிதி மற்றும் சசிகலா குடும்பங்களோடு ஒட்டிப் பயணித்திராத புதிய இளைஞர்கள் தலைமைப் பொறுப்புகளுக்கு வர வேண்டும். அப்போது தான் சீர்குலைந்துள்ள சமூக நேர்மை வழிகாட்டியானது புத்துயிர் பெறும். அதன்பின் தான் ஊழலை ஒழித்து, ஊழல் சொத்துக்களை பறிமுதல் செய்து, சாதி மத பாரபட்சமற்ற ஆட்சியின் மூலமாக, தமிழும் தமிழ்நாடும் நல்ல திசையில் பயணிக்க முடியும்.

இன்றைய சர்வதேச அரசியல் சூழலில் பிரிவினை முயற்சிகள் சுயலாப சூழ்ச்சி வலைகளில் சிக்கி, சாண் ஏறி முழம் சறுக்கின கதையாகி வருவதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன். (https://tamilsdirection.blogspot.com/2017/07/ )

சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, ஊழலுக்கு உதவும் வெறுப்பு அரசியலில் இருந்து தமிழ்நாடு விடுதலை பெற்று,

தாய்மொழி தமிழ்வழிக்கல்வி உள்ளிட்ட தமிழ் அடையாள மீட்சிக்கான ஒற்றுமை முயற்சிக்கு, 'பெரியார்', இந்துத்வா, முஸ்லீம், தலித், தமிழ்த் தேசியம், கிறித்துவ அமைப்புகளில் சுயலாப நோக்கற்றவர்கள் எல்லாம்,  முக்கிய பங்காற்றும் காலம் நெருங்கி வருகிறது.

தம் மீதான விமர்சனத்தை ஒட்டாமல், வெட்டாமல், அப்படியே வெளியிட்டு, அதனருகே தமது விளக்கத்தை வெளியிடும்,

தாம் பாராட்டும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது பாராட்டுதலுக்கான நியாயத்தை வெளியிடும்,

தாம் கண்டிக்கும் நபர் மீது, பொது அரங்கில் வெளிப்பட்டுள்ள பாராட்டுகளை எல்லாம் அப்படியே குறிப்பிட்டு, அதையும் மீறி தமது கண்டனத்திற்கான‌ நியாயத்தை வெளியிடும்,

அசாத்திய துணிச்சல் உள்ள தலைவர்களையே, அவர்கள் எந்த கொள்கையாளராக இருந்தாலும், நாம் ஆதரிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும்.

சமூக நேர்மை வழிகாட்டியை சீர் குலைத்து, ஊழலுக்கு உதவும் வெறுப்பு அரசியலை வளர்ப்பவர்களை எல்லாம், 'நம்மாளு' என்ற அடிப்படையில் ஆதரிக்கும் தவறை, இனியும் நாம் தொடர்வதைத் தவிர்ப்போம்.


 குறிப்புகீழ்வரும் கருத்தானது முகநூலில் வெளிவந்தது.

"யாராவது ஒருவர் இந்தத் திருட்டுப் பூனைகளுக்கு மணி கட்டித்தான் ஆக வேண்டும் -

இந்த நாட்டின் வளர்ச்சிக்கு மிகப் பெரிய தடையாக இருப்பவர்கள் -

இங்கே, 15% மட்டுமே இருக்கும் முஸ்லிம்கள் தான் என்றால் அது ஒன்றும் பொய்யல்ல -

நான் எழுதிய தகவல்கள் மீது சந்தேகம் இருந்தால் நீங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டு தகவல்களைப்பெறலாம் -

முதலாவதாக, பர்மா பஜார் போன்ற பல பஜார்களில் -

வெளிநாட்டுப் பொருட்களை கடத்தி வந்து வரியில்லாம் விற்பவர்கள் இவர்கள்தான் -

செல்ஃபோன் முதல் செண்ட்பாட்டில்கள் வரை எதை வேண்டுமானாலும் இவர்களிடம் வரி இல்லாமல் பெறமுடியும் -

இது பல ஆண்டு காலமாக நடந்து வரும் பொருளாதாரத் தாக்குதல் -

அடுத்தாக, மிக முக்கியமாக தங்கம் கடத்தி வருவது, தங்கத்தை கருப்புச் சந்தைகளில் விற்பது என்று அனைத்துமே இவர்கள் கைவரிசைதான் -

மூன்றாவதாக, நீங்கள் எல்லா முக்கிய நகரங்களிலும் பழைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்களை விற்பனை செய்பவர்கள் பெரும்பாலும் இவர்கள் தான் -

அதில், பாதிக்கும் மேல் திருட்டு வாகனங்களின் உதிரி பாகங்கள் -

மிகப் பெரிய நெட்வொர்க் இது-

திருடி வந்த வாகனங்களை கண் இமைக்கும் நேரத்தில் பிரித்து உதிரி பாகங்களாக்கி விடுவார்கள் -

நீங்கள், புதுப்பேட்டை, மதுரை சிம்மக்கல், பெரியார் நிலையம் போன்ற இடங்களுக்குச் சென்றால் நேரடியாகக் காணலாம் -

ஒரு வருடம் கூட ஓடாத புதிய வாகனங்களின் பாகங்கள் கூட கிடைக்கும் _

இதுவும், முறைப்படுத்தப்படாத மிகப் பெரிய மோசடி, மற்றும் திருட்டு ஆகும் -

இதைச் செய்பவர்களில் 70% ற்கும் மேல் பாய்கள்தான் -

அடுத்தாக, மிக முக்கியமானது -

கருப்புப் பணம், கள்ள நோட்டு ஹவாலா -

இதை இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் செய்பவர்கள் இவர்கள் மட்டும் தான் -

உலகின் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் இவர்களால் பணப்பரிமாற்றம் செய்ய முடியும் -

பெரும்பாலான நம் திருட்டு அரசியல்வாதிகளின் கருப்புப் பண பாதுகாவலர்கள் இவர்கள்தான் -

(இப்பொழுது புரிகிறதா இவர்களை பல கொள்ளைக்கார கட்சிகள் கூட்டுச் சேர்ந்து ஆதரிப்பதன் ரகசியம்)

இவர்களால் இங்கிருக்கும் பணத்தை எந்த ஒரு வெளிநாட்டிற்கும் மாற்றித்தர முடியும் -

(சிவாஜி படத்தில் ஷங்கர் தெளிவாகச் சொல்லி இருப்பார்)

அடுத்தது, பாக்கிஸ்தான் அரசு பல ஆண்டுகளாக தனது நாட்டு கரன்ஸியை விட நமது இந்திய ரூபாய்களைத் தான் அதிகமாக அச்சிட்டு வருகிறது -

அதை கருப்புப் பணப் பேர்வழிகள் "பாக்"கரன்ஸி என்று அழைப்பார்கள் -

அதை எப்படி அடையாளம் காண்பது என்றால் -

காணவே முடியாது என்பதுதான் வேதனை _

ஒரு mm கூட வித்தியாசம் இருக்காது -

அது, நமது நாடு அச்சடித்த கரன்ஸியின் மதிப்பை விட பல மடங்கு அதிகம் -

இதைத்தான் இங்குள்ள தீவிரவாத அமைப்புகளுக்கும், காஷ்மீரில் கலவரத்தைத் தூண்டவும், கல்லெறியவும் பயன்படுத்தி வருகிறது -

இந்தப் பறி மாற்றங்கள் எல்லாம் நடப்பது இங்குள்ள இஸ்லாமியர்கள் மூலம் தான் -

மோடி அவர்கள் Demonitization கொண்டு வந்ததே இவர்களுக்காகத்தான் -

1000, 500 நோட்டுக்கள் நாம் அச்சடித்தது வெறும் 15.49 லட்சம் கோடி மதிப்புக்குத் தான் -

ஆனால், இவர்கள் புழக்கத்தில் விட்டது அதைவிட சில மடங்குகள் அதிகம் -

மேலும், 50, 100 ரூபாய்களும் கணக்கிட முடியாத அளவிற்கு கள்ள நோட்டுப்புழக்கம் உள்ளது -

அடுத்ததாக, திருட்டு DVD விற்பது -

ATM கார்டுகளை ஹேக் செய்து திருடுவது -

போன்ற சில்லரைத் திருட்டுகளும் இவர்களது சேவைப் பிரிவில்தான் வருகிறது -

பொதுவாக, இந்தியாவில் மட்டுமல்ல உலகில் எல்லா நாடுகளிலும் இதுதான் இவர்களது குலத்தொழில் -

அரபு நாடுகளில் கடுமையான சட்டங்கள் இருந்தாலும் அங்கேயும் இவர்கள் தொடர்ந்து செய்து தான் வருகிறார்கள் -

ஆனால், நமது நாட்டில் குறிப்பாக தமிழகத்தில் இவர்களது குற்றங்கள் அதிகம் -

இதுதான், நமது நாட்டை முன்னேற விடமால் செய்து கொண்டிருப்பது -

முக்கியமாக, GST-யும், Demonitization - ம் இவர்களுக்காகத் தான் கொண்டு வரப்பட்டது -

இன்னுமொரு Demonitization கூட 2000, 100, ரூபாய் நோட்டுகளின் மீது கட்டாயம் தேவை -

மேலும், பர்மா பஜார், பழைய மார்க்கெட் போன்ற இடங்களில் அதிரடி நடவடிக்கைகள் தேவை -

நாட்டின் மீது உண்மையான அக்கறை இருப்பவர்கள் இவர்களை ஆதரிக்கக் கூடாது -"

No comments:

Post a Comment