Friday, July 14, 2017

தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (4)


தமிழின் வளர்ச்சிக்கு தடையான வழிபாட்டுப் போக்கு?

முடிவுக்கு வருகிறதா?


சுமார் 15 வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்து  ‘சிங்கைச் சுடர்’ மாத இதழின் ஆசிரியர் தொலைபேசி மூலம் என்னுடன் தொடர்பு கொண்டார். தமிழிசை பற்றிய எனது ஆய்வுகளை அறிந்த அவர், தமது இதழில் தமிழ் இசை தொடர்பாக கட்டுரைகள் எழுதி அனுப்புமாறு வேண்டி கேட்டுக்கொண்டார். அவ்வாறு நான் எழுதிய பல கட்டுரைகள் அந்த இதழில் வெளிவந்துள்ளன.

அக்கட்டுரைகளில் ஒன்றில், தமிழில் எழுத்தின் ஒலிக்கும், இசைச் சுருதிக்கும் உள்ள தொடர்பினை, தொல்காப்பியம் மூலம் நான் கண்டுபிடித்ததை, விளக்கியிருந்தேன். தமிழில் வைரமுத்து போன்ற பாடலாசிரியர்கள் அதைப் பின்பற்றாமல், திரைப்பாடல்கள் எழுதுவதால் வரும் பாதிப்புகளையும் சுட்டிக் காட்டியிருந்தேன். சிங்கப்பூர் தமிழ் வாசகர்கள் மூலமாக, தமிழ்நாட்டில் ஒரு விவாதப்புயல் கிளம்பும் என்று எதிர்பார்த்தேன். எதுவும் நடக்கவில்லை.

பின் 'சுதேசி செய்தி' (மே, 2014) இதழில், 'திறவுகோல்' என்ற தலைப்பில், திரு. என்.சொக்கன் எழுதியுள்ள 'வண்ண வண்ண பூக்கள்' என்ற புத்தகம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் கீழ்வரும் பகுதி எனது கவனத்தை ஈர்த்தது.

" 'ஈரமான ரோஜாவே' பாட்டில் ஒரு வரி. 'தண்ணிரில் மூழ்காது காற்றுள்ள பந்து' என்று வரும்.யேசுதாஸ் ' தண்ணிரில் மூள்காது" என்று பாடினாராம்.
உடனே வைரமுத்து திருத்தியிருக்கிறார்." மூள்காது இல்லை, மூழ்காது"
யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.
ஆனால் இப்போதும் " மூழ்காது" வரவில்லை.'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம். 'சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்' என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ விடாமல் திருத்துகிறார். 'மூழ்காது'ன்னு அழுத்திப் பாடுங்க'.

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை திருத்திப் பாடி பார்த்தார்.முடியவில்லை.கடைசியில் அவருக்குக் கோபம், 'நான் சாகும் வரை திருத்துவீங்கள்களா?' என்று வைரமுத்து மேல் எரிந்து விழுந்தாராம்.
அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ' தமிழ் சாகாத வரைத் திருத்துவேன்' “
-'சுதேசி செய்தி' (பக்கம் 26: மே, 2014) 

மேலே குறிப்பிட்ட இலக்கணம் பற்றிய அறியாமையில், வைரமுத்து தவறு செய்து விட்டு, யேசுதாஸ் மீது கோபப்பட்டாரா? என்பதையே உதாரணமாக, மேலே குறிப்பிட்ட விளக்கத்தை கூடுதலாக தெளிவுபடுத்தி, பதிவு வெளியிட்டேன். (பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html  ) தெரிந்த பலருக்கும் ஈமெயில் மூலம் அனுப்பி வைத்தேன்.

வைரமுத்து எனக்கு அறிமுகம் கிடையாது. ஒருவேளை எனது நண்பர்கள் வட்டத்தில் அவர் இடம் பெற்றிருந்தால், அவரிடமே சுட்டிக்காட்டி திருத்தியிருப்பேன்; திருந்த மறுத்து தொடர்ந்து அதே தவறான போக்கில் பயணித்திருந்தால், அவர் எனது சமூக வட்டத்தில் நீடித்திருக்க முடியாது என்பதை;

என்னுடன் ஒரு காலத்தில் நெருக்கமாக பழகியிருந்த பேரா.அ.மார்க்ஸ், 'பெரியார்' கொள்கையாளர் 'விடுதலை' இராசேந்திரன், உள்ளிட்ட இன்றும் பிரபலமான இன்னும் பலர் அறிவார்கள்.

அது மட்டுமல்ல;

அறிவுபூர்வ பார்வையின்றி, சுயலாப‌ அல்லது பாரபட்ச அணுகுமுறையில், வாழ்பவர்கள் எல்லாம், சமூக பார்வையில் தவிர்க்கப்பட வேண்டியவர்கள், என்பது எனது அனுபவமுமாகும்.(குறிப்பு:http://tamilsdirection.blogspot.sg/2017/06/blog-post.htmlஅவ்வாறின்றி, 'தன்னை மதித்தால் போதும்' என்று தனதளவில் நேர்மையாக வாழ்ந்து கொண்டு, சமூகத்துக்கு கேடாக வாழ்பவர்களின் சமூக வட்டத்தில், 'செல்வாக்குடன்' வல‌ம் வரும் 'சீர்திருத்த/புரட்சியாளர்கள்' எல்லாம், சமூகத்தின் சீரழிவுக்கு பங்களித்தவர்கள், என்பதும் எனது ஆய்வாகும்.

வைரமுத்துவின் பார்வைக்கு, இதுவரை மேலே குறிப்பிட்ட கட்டுரைகள் போகவில்லையென்றால், அந்த அளவுக்கு 'தந்த கோட்டையில்'  (Ivory Tower) அவர் வாழ்ந்து வருகிறாரா? அவரின் சமுக வட்டத்தில் உள்ள எவரும் இந்த கட்டுரைகள் பற்றிய தகவலறிந்து, அவரின் பார்வைக்கு கொண்டு செல்லவில்லையென்றால், அத்தகையோரின் தொடர்புகள் எல்லாம் வைரமுத்துக்கு சாதகமா? பாதகமா?

மேலே குறிப்பிட்ட கேள்விகள் எல்லாம், 'மீடியா வெளிச்சத்தில்' வலம் வரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எல்லாம் தமது மனசாட்சிக்குட்பட்டு தமக்குள் எழுப்பி, விடைகள் கண்டு, தம்மை நெறிப்படுத்திக் கொள்ள துணை புரியும் கேள்விகள் ஆகும்.

தொல்காப்பியத்தில் வரும் 'இசை' என்ற சொல்லை, உரையாசிரியர்கள் எல்லாம் 'ஒலி' என தவறாக புரிந்து கொண்டு வெளிப்படுத்தியஅந்த உரைகளின் அடிப்படையில், தமிழாசிரியர்கள் எல்லாம், இசைமொழியியல் (Musical Linguistics) பரிமாணம் தெரியாமல், தவறாக யாப்பிலக்கணத்தை பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் கற்பித்து வருவது சரியா?

என்ற கேள்வியானது, 1996இல் தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) என்ற தலைப்பில்,1996இல் முனைவர் பட்டம் பெற்றது முதல், ஆய்வுரைகளிலும், கட்டுரைகளிலும் சுட்டிக்காட்டி, பலன் இல்லாத சூழலில் ( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html );

சுமார் 15 வருடங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறையில், எனது முயற்சியில், பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் முன்னிலையில் 'சிலைடுகளுடன்' (Slides), எனது மனைவியும், மகளும் உதவியாளர்களாக பணியாற்ற, செய்முறை விளக்க உரை நிகழ்த்தினேன். முடிவில் விதி விலக்கின்றி, எனது விளக்கத்தை ஏற்று பாராட்டினார்கள். “Assuming, during the last 15 years or more,  they had tried to rectify the damages in the teaching of yAppilakkaNam & music related ancient Tamil texts, did they fail, since Tamil development was imprisoned by the Dravidian politics, with a brief exception during the rule of MGR as the CM?   ( http://tamilsdirection.blogspot.in/2014_10_01_archive.html  )


Or were they more interested in their career development, than the development of Tamil?

Only they can clarify. Probably their clarifications may help to reintroduce the transparency & accountability in the TN Tamil domain, to undo the above mentioned damages, thus leading to the Tamil development, and the REAL Tamil scholars' development.

Are the Tamil related forums and the writers, in TN & abroad, aware of the above ongoing tragedy? 

Also I like to probe if any language, during any period of world history, had suffered this kind of damage to Tamil ;  imprisoning the development, probable demise of the Tamil Medium, & Tamils becoming Taminglishers within a period of around 40 years.(http://tamilsdirection.blogspot.sg/2015/08/normal-0-false-false-false-en-us-x-none_7.html) அப்படி பாராட்டியவர்களில் யார்? யார்? யாப்பிலக்கணம் கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை களைய முயற்சி எடுத்தார்கள்? என்பது தெரியாது. அவ்வாறு எவரும் முயற்சித்திருந்தாலும், பலன் இல்லாமல் போயிருந்தாலும் வியப்பில்லை.

பல வருடங்களுக்கு முன்  நடந்த ஒரு சம்பவம் தான், திராவிட அரசியலில் திருக்குறள் சிறைபட்டிருக்கிறதோ? என்ற ஐயத்தை எனக்கு ஏற்படுத்தியது. அந்த காலக் கட்டத்தில் ஒரு திரைப்பட இயக்குநரைச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு கிட்டியது. அவரிடம் எனது திருக்குறள் ( 821) ஆய்வில் உரையாசிரியர்கள் அனைவரின் உரைகளும் தவறு என்று வெளிப்பட்டிருப்பதைத் தெரிவித்தேன். உடனே அவர் தன் வீட்டில் இருந்த கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையை எடுத்துப் பார்த்தார். அவரது உரையும் தவறு என்று எனது ஆய்வில் வெளிப்பட்டது அவருக்கு ஏமாற்றமானது. ஆக கலைஞர் கருணாநிதியின் திருக்குறள் ( 821) உரையைத் தவறு என்று வெளிப்படுத்தும் ஆய்வு, கலைஞர் கருணாநிதிக்கு எதிரான ஆய்வாக அணுகும் போக்கு தமிழ்நாட்டில் இருக்கிறதா? என்ற ஐயம் எனக்கு ஏற்பட்டது. நியூட்டனின் பல ஆய்வுமுடிவுகள் அவருக்குப் பின் வந்த விஞ்ஞானிகளின் ஆய்வுகளில் தவறு என்று வெளிப்பட்டது நியூட்டனுக்கு எதிரான ஆய்வாக அறிவியல் உலகில் கருதப்படவில்லை. மாறாக அது அறிவியல் வளர்ச்சியாகவேக் கருதப் பட்டது. ஆனால்  திராவிட அரசியலில் சிக்கிய தமிழ்நாட்டில், அது உணர்வுபூர்வமாக, சம்பந்தப்பட்ட தலைவருக்கு எதிராகக் கருதப்படும் நிலை உள்ளதா? இல்லையா? என்பது ஆய்விற்குரியதாகும்.  'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' என்ற நூல் வெளியிட்ட தமிழ் அறிஞர், தான் சாகும் வரை, தமிழ் ஆர்வலர்களின் பாதுகாப்பில் வாழ்ந்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த ஆய்வுகள் பற்றி அறிந்து, என்னிடம் கேட்டு வாங்கிப் படித்த, கலைஞர் கருணாநிதியை துதி பாடி பிழைக்கும் தேவையில்லாத,  புரட்சிதாசன், அக்கட்டுரைகளை, தனது 'இசைத் தமிழ்' இதழ்களில் 1997 - 1998 கால‌க் கட்டத்தில் வெளியிட்டார். (‘தமிழ்நாட்டு ‘திராவிடஅரசியலில் சிக்கிய  திருக்குறள் ஆய்வுகள்’; http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

தமிழக முதல்வராயிருந்த ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், 'காற்றுள்ளவரை தூற்றிக் கொள்ளும் பேராசையில்', பொதுவாழ்வு வியாபாரிகள் எல்லாம், கட்சி, கொள்கை வேறுபாடுகளை ஓரங்கட்டி, பணம் ஈட்ட, 'ஓடும்' ஓட்டப்பந்தயம் போன்ற நிகழ்ச்சிகள் எல்லாம், ‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF  ) என்ற உலகப் புகழ் பெற்ற ஹாலிவுட் நகைச்சுவை திரைப்படத்தை நினைவு படுத்துகின்றன.


‘'it’s a Mad Mad Mad Tamilnadu' என்ற, உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய திரைப்படத்திற்கான‌  சம்பவங்கள் பல, தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன:’ (http://tamilsdirection.blogspot.sg/2017/07/blog-post_12.html )

தமிழ்நாட்டில் இப்போது நிலவும் சூழலில், மேலே குறிப்பிட்ட, தமிழின் வளர்ச்சிக்குக் கேடான, வழிபாட்டு போக்கினை சுயலாப நோக்கில், வளர்த்து வந்தவர்கள் எல்லாம், இனி அந்த போக்கில் பயணித்து பலன் பெறும் வாய்ப்புகள் எல்லாம் 'அதி வேகமாக' குறைந்து வருகிறது; எல்லா வகையிலுமான 'வெறுப்பு அரசியலுக்கு' விடை கொடுத்து, ஆக்கபூர்வ பங்களிப்பினை மாணவர்களும், இளைஞர்களும் வரவேற்று வரும் சூழலில்.

எனவே கீழ்வரும் எனது முயற்சியின் வெற்றியில், யாப்பிலக்கணம் கற்பித்தலில் உள்ள குறைபாடுகள் உள்ளிட்ட இருள் நீங்கி, வெளிச்ச திசையில், தமிழ் பயணிக்கும் காலம் நெருங்கி விட்டது.

‘எனது ஆய்வில் 15 ஆய்வுத் திட்டங்கள் (R & D Projects)  உள்ளன.

நானறிந்தவரையில், தமிழ்நாட்டில் எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த ஒரு துறையிலும் 'புதிய கண்டுபிடிப்புகள்' என்ற வகையில், இவ்வளவு திட்டங்கள் இன்று உள்ளதா? என்பது கேள்விக்குறியே ஆகும்.

மேலே குறிப்பிட்ட 15 ஆய்வுத் திட்டங்களில், தமிழ் இலக்கியங்கள் தொடர்பாகவும், புதிய வியாபார வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் உள்ளவற்றிற்கு உடனடி கவனம் செலுத்தி, அந்த வாய்ப்புகளை உருவாக்கி காட்டினால்,  புதிய வியாபார வேலை வாய்ப்புகளுக்காக, தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் நோக்கி, உலக அளவில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் ஆர்வம் காட்டத் தொடங்குவார்கள். உலகில் தொன்மை மொழிகளில் (ancient languages) அந்த திசையில் பயணிக்கும் முதல் மொழியாக தமிழ் வெளிப்படும். அதன் மூலம் சமஸ்கிருதம், கிரேக்கம்,சீனம் உள்ளிட்ட‌ மற்ற மொழிகளில் உள்ள தொன்மை இலக்கியங்கள் நோக்கியும், ஆய்வுப் படையெடுப்பு தொடங்கும்.’ ( ‘தமிழின்  அடுத்த கட்ட (Next Phase) புலமை? (3); ஐ.ஐ.டி(I.I.T), என்.ஐ.டி(N.I.T), சாஸ்திரா(SASTRA) போன்ற உயர்தர நிறுவனங்களில் பயின்றவர்கள்/பயில்பவர்கள் மீது, எனக்குள்ள‌ நம்பிக்கை ?’; http://tamilsdirection.blogspot.sg/2017/06/next-phase-3.html

No comments:

Post a Comment