Tuesday, July 18, 2017

 'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' (1);


அறிவுபூர்வ விவாதத்திற்கு கேடாகும் உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள்


முகநூலின் வழியாக, கீழ்வருவது எனது கவனத்தை ஈர்த்தது.


"பார்ப்பானை பிராமணனாக்குவதும், தமிழர்களை சூத்திரனாக்குவதும் பூணூலே"  என்ற காரணத்துடன், 'பன்றிக்கு பூணூல் போடும் போராட்டம்' என்று 'தந்தை பெரியார் திராவிடர் கழகம்' விளம்பரம் முகநூலில் வெளிவந்துள்ளது.





அந்த போராட்டத்தை ஆதரித்தும், எதிர்த்தும் வெளிப்படுகின்ற உணர்ச்சிபூர்வ இரைச்சல்கள் எல்லாம்;

அறிவுபூர்வ விவாதத்திற்கு கேடாகி, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்பதற்காக உருவாகும் மக்கள் ஒற்றுமையை கெடுக்கும்;

என்று கவலைப்பட்டு, இப்பதிவை எழுதினேன்.

வேதகால நூல்களின் படி, குருவிடம் கல்வி பயிலும் மாணவர் சேர்க்கை தொடர்பான நிகழ்வே பூணூல் அணிவித்தல் என்பதும், சூத்திரர், பெண்கள் உள்ளிட்டு சமூகத்தில் அனைத்து பிரிவினரும் அந்நிகழ்வுகளில் பங்கேற்க முடியும் என்பதும், அந்நிகழ்வு தொடர்பாக பல தடைகள் நவீன காலத்தில் தான், அந்த நூல்களில் இடைச்செருகல் மூலம் இடம் பெற்றன‌ (the details and restrictions in the Upanayana ceremony is likely to have been inserted into ancient texts in a more modern era)  என்பதும் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ளன. (https://en.wikipedia.org/wiki/Upanayana  )

அது மட்டுமல்ல;

“தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்' காலனிய சூழ்ச்சியா? 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?” என்பது தொடர்பான எனது ஆய்வுகளையும் பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html )

மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் சுயலாப கணக்கின்றி பங்கேற்றவர்கள் எல்லாம் சாகச நோக்கில் பங்கேற்றார்களா? அல்லது அறிவுபூர்வமான சமூக நோக்கில் பங்கேற்றார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கு தான் தெரியும்.

தமிழ்நாட்டில் ஆங்கிலம் தெரியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற இளைஞர்கள் எல்லாம், சாகச நோயில் (adventurism)  சிக்கும் அபாயம் வளர்ந்துள்ளதையும், நான் எச்சரித்துள்ளேன்.

அந்த நோயின் வளர்ச்சிக்கு, தமிழ் மொழி, இலக்கியங்கள் தொடர்பான 'பெரியார்' ஈ.வெ.ராவின் பங்களிப்பும் அறிவுபூர்வ விவாதத்திற்கு உட்படுத்த வேண்டிய நேரம் வந்து விட்டதையும், மேலே குறிப்பிட்ட போராட்டமானது உணர்த்தியுள்ளது.

‘ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி, சாகசம், etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.” (http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html  ) 1967க்கு முன் இருந்ததை விட,  அதிகமாக சாதி வெறியும், சாதி மோதல்களும் அதிகரித்துள்ளதற்கும், மேற்குறிப்பிட்ட சமநிலை சீர்குலைவிற்கும் உள்ள தொடர்பும் ஆய்விற்கு உள்ளாக வேண்டும்.

இத்தகைய சமூக சூழலே, தமிழைச் சரியாக உச்சரிக்க தெரியாத நடிகர்கள் திரைத்துறையில், அதிக செல்வாக்குடன் வலம் வருவதற்கும், அபத்தமான எழுத்துப் பிழைகளுடன் கட்சிகளின்/திரை ரசிகர்களின், 'ஃப்ளக்ஸ் பேனர்கள்' பொது இடங்களில் இடம் பெறுவதற்கும் காரணமா? கட்சித் தலைவர்கள் மற்றும் நடிகர்களை, 'கடவுள்களாக' கருதி, 'கடவுளுக்கான வழிபாட்டு முறைகள்' எல்லாம் இடம் பெயர காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.(‘ தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும்,           'சுயநினைவற்ற'  பங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா? தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும் ; http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளானதன் காரணமாக;

தமிழ் இலக்கியங்களிலும், புராணங்களிலும் புதைந்துள்ள அறிவுச் செல்வங்கள் எல்லாம்:

'மூட நம்பிக்கைகள்' என்று 'குருட்டு பகுத்தறிவு' பிரச்சாரத்தில் சிக்கி: (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ; & http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

ஆங்கிலம் தெரியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற இளைஞர்களின் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி;

அவர்களில் சுயலாப கணக்கில் சிக்காதவர்கள் எல்லாம், சாகச நோயில் சிக்கி;

தமிழையும், தமிழ்நாட்டையும் சூறையாடியவர்களின் பொதுவாழ்வு வியாபாரத்தில் விட்டில் பூச்சிகளாக‌ பலியானவர்கள், அதிலிருந்து தப்பினாலும் தமது கல்வியையும், வேலை வாய்ப்புகளையும் இழந்து, வேறு வழியின்றி 'ஆதாய தொண்டர்களாகவும்' பிழைத்து வருபவர்கள் யார்? யார்?

தமிழரின் ஆணி வேர்களாகிய‌ அடையாளகூறுகளுக்கு இடையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளான பின்னணியில், 1970களின் பிற்பகுதிகளில் ஆங்கிலவழிக்கல்வி வியாபாரம் அறிமுகமாகி, அந்த போக்கிலான சமூக செயல்நுட்பமே 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக வழி வகுத்ததா? (http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html

என்பது பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

“சமஸ்கிருதத்தில் வேதங்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பல நூல்கள் வெளிவந்துள்ளன.

அவ்வாறு வெளிவந்துள்ள நூல்களில் ஒன்றே மனுஸ்மிரிதி ஆகும். இது போன்ற நூல்களில் உள்ளவையெல்லாம், அந்த நூலாசிரியரின் விருப்பங்களின் வெளிப்பாடுகள் தான் என்பதையும், அன்று நடைமுறையில் இருந்தவை அல்ல என்பதையும், குறிப்பாக ' சூத்திரர் வாயிலும், காதிலும் கொதிக்கும் எண்ணெயை ஊற்ற வேண்டும் என்பது போன்ற தண்டனைகளும், ஒரு மனவெறியரின் ஆலோசனைகள் மட்டுமே; அவை நடைமுறையில் வராதவை; என்பதையும் ஏ.எல்.பாஸம் என்ற அறிஞர் ' the wonder that was india' என்ற நூலில் விளக்கியுள்ளார்.( " The reader must always bear in mind  that in the texts on statecraft and Sacred Law the authors describe things not as they were in fact, but as they believed they ought to be................ Similarly the vicious punishments laid down by Manu for religious crimes (for example a sudra who " arrogantly teaches brahmans their duty" shall have boiling oil poured in his mouth  and ears" Page 81) இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பும் வெளிவந்துள்ளதாக அறிகிறேன்.

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் உள்ளிட்ட அரசர்கள் ஆண்டபோது, 'சூத்திரருக்கு' கல்வி மறுக்க பட்டது; மீறி படித்தவர்களுக்கு மனுநீதியில் உள்ள தண்டனைகள் அமுலானது'; குறித்து சான்றுகள் இருப்பதாக, எனது தேடலில் வெளிப்படவில்லை.” (http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

இந்து கடவுள்களில் பன்றியும் ஒன்று; அக்கடவுளுக்கு கோவிலும் உண்டு. (கடவுள் பன்றி உருவெடுத்த திருமுட்டம் பூவராகர் திருக்கோயில்; http://www.dinamani.com/religion/2017/jun/01 ) முஸ்லீம்களுக்கு பன்றி மத விரோதமான விலங்கு.  மேலே குறிப்பிட்ட போராட்டத்தில் பூணூல் போட, பன்றியை ஏன் தேர்ந்தெடுத்தார்கள்? அந்த காரணமானது, எந்த அளவுக்கு அறிவுபூர்வமானது? என்று எவராவது விளக்கினால், அந்த விளக்கத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த இயலும்.


பெங்களூர் குணாவின் நூல்களில், 'தமிழர்' என்ற அடையாளத்தில் இருந்து 'பெரியார் ஈ.வெ.ரா'வை நீக்கி, குழப்பியிருந்தது தெரியாமல்;

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்;

என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html )

எனவே 'பிராமணன்', 'பூணூல்', 'தமிழர்', 'பன்றி' ஆகிய சொற்கள் தொடர்பாக, அறிவுபூர்வ அணுகுமுறையில் மேலே குறிப்பிட்ட போராட்டம் திட்டமிடப்பட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

வன்முறை தவிர்த்து, பொதுச்சொத்துக்களுக்கு சேதமின்றி அறிவுபூர்வ போக்கில் நடந்து வெற்றி பெற்றது, 'பெரியார்' ஈ.வெ.ரா தலைமை தாங்கிய 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம். அதற்கு மாறாக, வன்முறை மிகுந்து, பொதுச் சொத்துக்கள் சேதமாக, உணர்ச்சிபூர்வ போக்கில் நடந்தது, 'பெரியார்' ஈ.வெ.ரா எதிர்த்த, ராஜாஜியும் அண்ணாவும் ஆதரித்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )


‘மனிதர் செயல்பாடு பொருளாதாரம்’ (‘Behavioural economics ) படி:
உலகில் அறிவுபூர்வ பார்வையின்றி பயணிப்பவர்கள் எல்லாம்;
தமது சார்பு நபர்களை ஒன்று சேர்த்து, அவர்கள் மீது கண்மூடித்தனமான நம்பிக்கை வைக்கும், மற்றவர்கள் மீது அவநம்பிக்கை வைக்கும் உள்ளார்ந்த சார்பு ( Implicit bias);
மற்றும் நாம் ஏற்றுக்கொண்ட நிலைப்பாடுகளுக்கு ஆதரவான தகவலை அப்படியே நம்பும் உறுதிப்பாடு சார்பு (Confirmation bias) :
ஆகிய இரண்டு சார்புகளிலும் சிக்கி, உலகில் பொய் செய்திகள் (fake news ) வலம் வர காரணமாகி, பலியாவார்கள்;
என்பதை கீழேயுள்ள‌ குறிப்பு தெரிவித்துள்ளது. அந்த போக்கில் சமூக வண்ணக்குருட்டு நோயில் (Social Colour Blindness),  அந்த நபர்கள் சிக்கும் வாய்ப்பையும் நான் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )   
அறிவுபூர்வ போக்கில், தவறு என்று வெளிப்பட்டதை பகிரங்கமாக ஏற்று, திருந்தி, பயணித்த 'பெரியார்' ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தோடு சேர்ந்து செயல்பட்டிருப்பார், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.htmlதாய்மொழிவழிக் கல்வி, கல்வி நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாகுபாட்டை எதிர்த்தல், போன்ற பிரச்சினைகளில், ஆர்.எஸ்.எஸுடன் சேர்ந்து செயல்படும் வாய்ப்புகளை புறக்கணித்து, மாணவர்களும், இளைஞர்களும் விரும்பாத வெறுப்பு அரசியல் போக்கில், அறிவுபூர்வ விவாதங்களை தவிர்த்து, உணர்ச்சிபூர்வ போக்கில், 'பெரியார்' கட்சிகள் இனியும் பயணிப்பதானது, புத்திசாலித்தனமா?

இந்துத்வா எதிர்ப்பு, ஆதரவு உள்ளிட்டு எந்த கொள்கையின் ஆதரவாளர்களாக இருந்தாலும்;

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது அக்கறை உள்ளவர்கள் எல்லாம்;

எந்த நபரையும், கொள்கையையும் இழிவு படுத்தும் நோக்கமின்றி, அறிவுபூர்வமாக, திறந்த மனதுடன், சுயலாப நோக்கமின்றி;

அறிவுபூர்வ விவாதத்தை ஊக்குவிப்பதில் ஓன்றுசேர வேண்டிய நேரம் வந்து விட்டது;

இந்துத்வா எதிர்ப்பு, ஆதரவு முகாம்களில் சுயலாப கணக்குடன் உணர்ச்சிபூர்வ போக்குகளை ஊக்குவிக்கும் கள்வர்களை எல்லாம் ஒர‌ங்கட்டி. 


குறிப்பு :

‘Behavioural economics suggests that the reason we fall for fake news is because these stories are designed to simultaneously play to our susceptibility to implicit bias as well as confirmation bias. Implicit bias is the human tendency to lump people together into categories of us and them where we implicitly trust members of our own group and distrust all those who are not. Confirmation bias, on the other hand, is our increased willingness to accept information that confirms what we already believe.
When both these biases are operating together, we are doubly vulnerable.’; http://www.livemint.com/Opinion/NvmUUoong1b2xYk9KGeFvI/Needed-A-FactRank-algorithm-to-flag-fake-news.html

No comments:

Post a Comment