Wednesday, March 10, 2021

பேராசிரியர் திரு செ.அ . வீரபாண்டியன் அவர்களுக்கும் ஆசிரியர் - கீழடி . வை. பாலசுப்பிரமணியத்திற்கும் ஏற்பட்ட உறவு ஊழ் செய்த செயலே.

 

2017 -டிசம்பர்  மாதத்தில் ஒரு நாள்,  சிலைமான் சாலையில்  இளைஞர்  ஒருவர்  என்னை இடைமறித்து “சார் - நீங்கள்தான் வை பாலசுப்ரமணியமா? எனக் கேட்டார். ஆம் உனக்கு  தெரியாதா எனக்  கேட்டேன். நான்  வேறு யாரோ  என எண்ணினேன், எனது  மாமா  திண்டுக்கல்  முருகானந்தம் உங்களிடம்  பேசவேண்டும்  எனச் சொன்னார், நம்பர் கொடுங்கள் என்றார். எதற்காக  எனது எண் அவர்க்கு வேண்டும்  என்றேன். அவருடைய நண்பர்  வீரபாண்டியன் என்பவர் உங்களிடம் பேசவேண்டுமாம், அதற்காக என்றார்.

 மறுநாள் இரவு திண்டுக்கல் அன்பர் அழைத்தார். அய்யா, எனது நண்பர் பேராசிரியர்  வீரபாண்டியன் தஞ்சையில் இருக்கிறார், கீழடி பற்றி உங்களிடம் பேச வேண்டும் என்றார். உங்கள் எண்ணை அவரிடம் கொடுக்கிறேன், அவர் உங்களிடம்  பேசுவார்  - பேசுங்கள்  என்றார்.

இரு நாட்கள் கழித்து புதிய அழைப்பு. அந்த  அழைப்புக்குரியவர்தான் பேராசிரியர்  செ.அ . வீரபாண்டியன். தன்னை  பற்றிச்  சொன்னார். என்னையும் அறிந்துகொண்டார். 

கீழடி  வெளிப்படுவதற்குக்  காரணமாக  இருந்தவன் நான், என்பதை அவரது நண்பர்  ஒருவர்  தெரிவிக்க, அதன்பின்  என்னைப் பற்றிய நேர்காணலைக் கண்டதாகவும் ஆகவே, பணியொன்றைச் செய்துவிட்டு  வெளிச்சம் போடாமல் இருக்கும் உங்களைப் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்ற அவா. அதனாலேயே பாடுபட்டு தங்களைக் கண்டேன், தொடர்ந்து பேசுவோம் என்றார்.

 மறுநாள் அழைப்பு வந்தது. பேரா. வீ. பேசினார். உங்களது  பணி  மறைக்கப்படுகிறது . அதை முறையாகப் பதிவு செய்யவேண்டும் எழுதுங்கள் என்றார். நான்  எழுத்துச் சோம்பேறி - பேசுவேன் - எழுத  வேண்டுமானால் ஏறாவது தூண்டிக்கொண்டே  இருக்க வேண்டும் என்றேன்.   அந்தப் பணியை  நானே  செய்கிறேன். நாள்  தோறும் நான்  இரவு  8 மணிக்கு  உங்களுக்கு தொலைத் தொல்லை கொடுப்பேன் என்றார். அய்யா  எழுதத் துவங்கி ஓராண்டு ஆகிவிட்டது. 4 பக்கங்கள் எழுதி  உள்ளேன் என்றேன். இனி உங்களை  எழுதச் செய்வது என் வேலை  என்று  உறுதிபடச் சொன்னார்.

மறுநாள் , அதற்கும் மறுநாள் என இரவு 8 மணிக்கு பேரா வீ. யின்  அழைப்பு வந்தது . 

எழுதத் தொடர்ந்தேன். 

அவர்க்கு சங்கடத்தை தவிர்க்க ஒரு கருத்தை முன்வைத்தேன். வரம் ஒரு முறை அவர் அழைப்பு - அதற்கு நான் எழுதியது பற்றிய விவரம் தருவது என  ஏற்பாடு செய்துகொண்டோம். அந்த நாள் ஒவ்வொரு புதன் கிழமையாக அமைந்தது.

 எழுத்துப் பணி மட்டுமல்லாது, தமிழ் சார்ந்த, வரலாறு சார்ந்த, சமூகம்  சார்ந்த கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டோம் .

எங்கள் இருவரது கருத்தோட்டமும் மன ஓட்டமும் இசைந்தன .

புதன் அழைப்பு தொடர்ந்தது. 2020 சனவரி 26 இல் நூல் வெளியீடு. இருவரும் சந்திக்க இயலவில்லை. நான் தஞ்சை கல்லூரியில் பேச வந்தபோது, அவர்  வெளி நாடு செல்ல அமைந்தது. சந்திப்பு நேரவில்லை . 

நூல்  வெளியிட வருவதாக இருந்ததும் அமையவில்லை.

“கீழடி அகழாய்வு ஒரு வரலாற்றுப் பார்வை”  என்ற நூல் பேரா. சாலமன் பாப்பையா அவர்களால் வெளியிடப் பட்டது.

பேரா. வீ. அவர்கள்  அப்போது சிங்கப்பூரில், சந்திப்பு நேரவில்லை .

தஞ்சைக்கு வந்தார் பேரா. வீ. ஆனால் கொரோனாவும் உடன் வந்தது எங்கள் சந்திப்பு வாய்க்கவில்லை.

ஆனால், எனது நூல்களில் 50 படிகள் பெற்றுக்கொண்டு, 10 படிகளைத் தனக்கு வைத்து மீந்தவற்றை கல்லூரி மாணவர்க்குக் கொடுக்கச் செய்தார். இளவல் முனைவர். பாரி மைந்தன் வழி அந்தப்பணி நடந்து நிறைந்தது.

புதன் அழைப்புத் தொடர்ந்தது. 2021 எமக்கு இனிமையானதாக இல்லை.

தமிழ்  இசை ஆய்வில் பேரா. வீ. மேற்கொண்ட பணிகளை உள்வாங்கும் அறிவும் ஆற்றலும் எமக்குக் குறைவு. இருப்பினும் ஓரளவு புரிந்து கொண்டேன் . எஞ்சியதை அறிய நேரில் பேசுவோம் என்றோம்.

அது நிகழவில்லை, காலம் இடைமறித்தது.

முகம் அறியா என்பால் கொண்ட அன்பால் கீழடி நூல் வாயிலாக உலகுக்கு அறிமுகம் செய்த கோண்மைக்கோ கோப்பெருஞ்சோழனந்த பேரா. வீ  அவர்கள்!

மறைக்க இயலா மாமனிதர்!

 

22-2-2021                                        கீழடி. வை. பாலசுப்பிரமணியம்

                                                                         சிலைமான் 







 

Wednesday, January 13, 2021

திருமிகு.செ.அ.வீரபாண்டியன் அவர்கள் 27.12.2020 இல் மறைவுற்றார் என்பதை மிகவும் வேதனையுடன் அறிவிக்கிறோம்.

 

வருந்துகிறோம்.

”தமிழர் திசை”  என்ற பெயரில்  இந்த பிளாக் கில்  எழுதி வந்த  ஓய்வு பெற்ற  இயற்பியல் பேராசிரியர் திருமிகு.செ.அ.வீரபாண்டியன் அவர்கள் தமிழ்நாடு-தஞ்சாவூரில் 27.12.2020 இல் மறைவுற்றார் என்பதை  மிகவும் வேதனையுடன் அறிவிக்கிறோம்.

26.12.20 வரை முகநூலிலும்,தனது பிளாக் கிலும் சமூக அக்கறையுடன் எழுதி வந்தார்.

இந்த பிளாக்கில் உள்ள கட்டுரைகள் குறித்த கருத்துகள் மற்றும் பேராசிரியர் குறித்த கருத்துகள்,அனுபவங்களை அனுப்பினால்  பிளாக்கில்  எந்த மாற்றமும் செய்யாமல் வெளியிட அணியமாக உள்ளேன்.

அவருடன் உடன்படும் கருத்துகள்  தொடர்பான கட்டுரைகளை அனுப்பினால் இதே பிளாக்கில் உங்கள் பெயரில்  வெளியிட விரும்புகிறோம்.

அவரது கருத்துகள்  சமூகத்திற்கு இன்னும் தேவையாய் இருப்பதாக நாங்கள் கருதுவதால் இந்த பிளாக் தொடர்ந்து மக்கள் பார்வைக்காக இருக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

இப்படிக்கு,
அவரது  மகன்

சேவியர் மகேந்திரன்

மின்னஞ்சல்: pannpandi@yahoo.co.in

 

 

கடைசியாக வெளிவந்த நூல்:


'
காலனியமனநோயாளிகளும்

'திராவிடமனநோயாளிகளும்

(தி பிரிண்டிங் ஹவுஸ்திருச்சி; ph: +91-0431-2420121; 
Email: tphtrichy@gmail.com;   www.theprintinghousetrichy.com

 திருப்பு முனையில் தமிழ்நாடுஎதிரெதிர் முகாம்களில் அறிவுபூர்வ அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்நூல்செ..வீரபாண்டியன் (வெற்றிமணி)

பொருளடக்கம்:

 

முன்னுரை                                                                                                                       

அத்தியாயம் 1 கறுப்பு – வெள்ளை (அல்லது சிகப்புபாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்

அத்தியாயம் 2. இசையில் ' தீண்டாமை'    காலனியத்தின் ‘நன்கொடையா?   

அத்தியாயம் 3.  புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'                     

அத்தியாயம் 4.  மூட நம்பிக்கையாபல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?

அத்தியாயம் 5. தமிழர்களில் 'தற்குறிகளைவளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?                                                                                                அத்தியாயம் 6.  1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா?  தவறா? (1)                                                                                        

அத்தியாயம் 7.  1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.வெ.ரா அவர்களின் நிலைப்பாடு சரியா?  தவறா? (2); 1938 & 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் வெளிப்பட்ட சமூக ஆற்றல்களுக்கு இடையில் இருந்த பண்பு வேறுபாடுகள்?                                                

அத்தியாயம் 8.  வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு                     

அத்தியாயம் 9.  மரணப்படுக்கையில் இருந்து, 'தமிழ்தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும்பாரதிதாசனும் (1)                              

அத்தியாயம் 10. 'தமிழ்தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும்பாரதிதாசனும் (2)

'தமிழ் அடையாள அழிப்பிற்குபாரதிதாசனின் பங்களிப்பு?       

அத்தியாயம் 11.  'தமிழ் தமிழர் அடையாள மீட்சி'; பாரதியும் பாரதிதாசனும் (3)

அறிவுபூர்வமாக விமர்சிப்பதில்பாரதிக்கு ஒரு நீதிபாரதிதாசனுக்கு வேறு நீதியா

அத்தியாயம் 12. 'காலனியமனநோயாளிகளும், 'திராவிடமன நோயாளிகளும்                             

பிற்சேர்க்கை -1.  எனது புரிதலில்விவாதத்தின் நோக்கங்கள்                                      

பிற்சேர்க்கை 2. 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடுஇன்று  எப்படி இருக்கிறது?                       

இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும்   என்ன வேறுபாடு?  

பிற்சேர்க்கை 3. Fringe Mechanism derailing the Indian Nation Building Process 

பிற்சேர்க்கை 4. 'அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி (Cognitive skills development) நன்றாக இருக்கும்உலக ஆய்வுகள் வெளிப்படுத்திய சான்றுகள்                                                                                                        

பிற்சேர்க்கை 5. மனித உரிமைகள்சட்டமும்சமூகமும்; 'மாதொரு பாகன்எழுப்பும் கேள்விகள்                                                                                                                                          

பிற்சேர்க்கை 6. பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைரமுத்துக்குத் தெரியாதா?    

                                                             

பிற்சேர்க்கை 7. தனித்தமிழ்நாடு கோரிக்கையும்பொதுவாழ்வு வியாபாரமும்                

பிற்சேர்க்கை 8. .வெ.ரா-வின் 'பொதுத்தொண்டனுக்கான’ அளவுகோலின்படிநமது ‘யோக்கியதை '         

பின் அட்டை:

பெரியார்’ .வெ.ரா பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார்அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும்முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும்பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும்முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும்பிறர் பார்வையில் உணர்தல்(empathy) என்ற போக்கைக் கடைபிடித்து அறிவுபூர்வ அணுகுமுறையை ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.”

 

– ‘1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடுஇன்று எப்படி இருக்கிறதுஇந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938க்கும் 1965க்கும்   என்ன வேறுபாடு? (நூலின் உள்ளே)

 

திருப்பு முனையில் உள்ள தமிழ்நாட்டில்எதிரெதிர் முகாம்களில் உள்ளவர்கள் இடையில் அறிவுபூர்வ விவாதங்கள் நடைபெறும் சூழலும் கனிந்து வருகிறதுஇசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன்நான் 'பெரியார்இயக்கத்தில் பங்களித்துள்ளேன். 'பெரியார்கட்சிகள்,, மார்க்சிய லெனினிய குழுக்கள்மனித உரிமை அமைப்புகள்விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அமைப்புகளுடன்எனது அளவுக்கு அறிவுஅனுபவம் உள்ளவர்கள் வேறு யாரும் தமிழ்நாட்டில் இல்லைநானறிந்தது வரையில்.  எனவே மேற்குறிப்பிட்ட அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கும் வகையில்இந்நூல் வெளிவருகிறது

 

செ..வீரபாண்டியன் (வெற்றிமணி),

இசைத்தகவல் தொழில்நுட்பப் புலமையாளர்,

(Music Information Technologist) http://drvee.in/

 


About Dr Vee: www.drvee.in

Prof.Dr.Vee is a Music Information Technologist from India, being the first Indian Doctorate in the interdisciplinary field of Physics, Music and Ancient Tamil Text. This is the official website of Dr.Vee, created by his son for the purpose of celebrating and supporting Dr.Vee’s work.   

His Inter-Disciplinary research included

  • Music Information Technology (MIT)
  • Musical Linguistics
  • Natural Language Processing
  • Ancient texts of Tamil & Sanskrit
  • Music in Building Architecture
  • Music Software/App Development

Currently Dr Vee is providing consultancy services for Music Related R & D projects, Music Composing and Music related workshops.

The Logic of Defreezing the Music from the Building Architecture, started from Vitruvius (80 -15 BC), and pursued by  Iannis Xenakis, among many others in the modern era, was finally discovered by Dr.Vee, as the Project Consultant of the on-going R & D project at National Institute of Technology, Trichy, India, with patent and published in SCI journal Multimedia Tools and Applications – Springer

  • On the discovery of ‘Musical Linguistics’ based on the ‘Musical Phonetics in Tholkappiam’

“Very intriguing.  I hope all of this can become part of an emerging discipline of ‘Musical Linguistics’ “ – Prof.Noam Chomsky (Emeritus at Massachusetts Institute of Technology)

  • On the discovery of ‘Musical Threads’ & ‘Muxel’

‘Musical Threads’ & ‘ MUXEL’ – A New Concept in Digital Music for Enhanced Aesthetics’ –  Like PIXEL in visual graphics, MUXEL in musical aural graphics, was the result of the convergence of the above discoveries with the  ‘Sruthi’ concept, and ‘MICROSOUND’.

“It (Musical Threads) sounds potentially interesting. Best wishes on your interesting research” – Curtis Roads, Professor and Chair, Media Arts and Technology, University of California.

  • On the discovery of ‘MUXEL’

“The concept of “Muxel” as opposed to “Pixel” has undoubtly a creative potential, which is worth to be further developed.”- Comment from Robert Peck, Editor in Chief, Journal of Mathematics and Music, SCI Journal.
—–
www.muxel.sg to publish and support the R & D of Dr Vee

 

அவர் எழுதி வெளிவந்துள்ள  நூல்கள்:




 

DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION

by Dr Vee | 22 June 2019




 

ANCIENT MUSIC TREASURES - EXPLORING FOR NEW MUSIC COMPOSING

by Dr Vee | 22 March 2019

 

His blogs

·        தமிழர் திசை - Tamils’ Direction

·        Music InfoTech

·        Living Secrets