Thursday, April 7, 2016



'பெரியார் சமூக கிருமிகள்' மூலம், தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான சமூகவியல் ஆய்வு? (2)


'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை' மீட்க முடியுமா, ஆர்.எஸ்.எஸ் துணையுடன்?


1944இல் திராவிடர்கழகம் தோன்றுவதற்கு முன், ஈ.வெ.ரா தலைமையில் செயல்பட்டது 'சுயமரியாதை இயக்கமாகும்'.  அந்த இயக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம், சமூகத்தில் 'சுயமரியாதைக்காரன்' என்ற அழைக்கப்பட்டு, 'அடையாளப்படுத்தப்பட்டார்கள்'.  அவர்க‌ள் பின்பற்றிய‌ கொள்கைகளுக்கு, 'எதிர் கொள்கையில்' இருந்தவர்களும், தனிமனித அளவில் அவர்களை மிகவும் மதித்தார்கள்; சு.ம.காரனின் கொள்கைகளை, 'உணர்ச்சிபூர்வமாக' குறைகூற/இழிவுபடுத்த 'அஞ்சினார்கள்'. அந்த அளவுக்கு சுயமரியாதைக்காரனின்,  அந்த செல்வாக்கு வளர்ந்ததற்கு காரணமான,  'சமூக செயல்நுட்பம்' (Social Mechanism) வருமாறு:

இன்றும் கூட‌, நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், சொந்த வாழ்வில் உண்மை, நேர்மை, சகமனிதர்களிடன் 'சுயநலக்கள்வர்' நோக்கமற்ற இயல்பான அன்பு, போன்றவற்றுடன் வாழ்பவர்களிடம் தான். 'உண்மையான சுயமரியாதை' வெளிப்படும். அத்தகையோர் வாழுமிடத்திலும், பணியாற்றுகிற இடத்திலும், சாதி, மத, கொள்கை வேறுபாடுகளைத் தாண்டி, மற்றவர்களால் மதிக்கப்படுவார்கள். கூடுதலாக தாம் வாழுமிடத்திலும், பணியாற்றுகிற இடத்திலும் வெளிப்படும் 'அநீதிகளை' எதிர்த்து செயல்படும்போது, அவர்களின் மதிப்பின் செல்வாக்கு கூடுவதோடு, அவர் பின்பற்றும் கொள்கைகளையும், 'எதிர் கொள்கையில்' இருப்பவர்கள் மதிப்பார்கள்; 'உணர்ச்சிபூர்வமாக' குறைகூற/இழிவுபடுத்த 'அஞ்சுவார்கள்'. பொதுப்பிரச்சினைகளுக்காக, அத்தகையோர் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு, பொதுமக்களிடமிருந்து நம்பமுடியாத அளவுக்கு ஆதரவும் வெளிப்படும்.

தாம் பிறர் தயவின்றி (Physically & mentally independent)  நடமாடியது வரை, மேலே குறிப்பிட்டதற்கு 'இலக்கணமாக', ஈ.வெ.ரா வாழ்ந்ததால் தான், கட்சி, கொள்கை வேறுபாடுகளுக்கப்பால், அவர் மிகவும் மதிக்கப்பட்டார். 1944க்கு முன் அவர் தலைமை தாங்கிய போராட்டங்களுக்கு, பிராமணர்கள் உள்ளிட்டு, சுயலாப நோக்கற்ற சமூக அக்கறையுள்ள அனைவரும் ஆதரவு நல்கினார்கள்; பங்கேற்றார்கள்.

அவ்வாறு அவர் வாழ்ந்ததன் காரணமாகவே;

வைக்கம் போராட்டமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமும், மற்றவர்களால் துவக்கப்பட்டு, அடுத்த கட்டத்திற்கு முன்னேற 'தடுமாறிய' நிலையில், ஈ.வெ.ரா தலைமை ஏற்று, இடையில் தடைகளுக்கு பயந்து, 'தமக்கு தொடர்பில்லை' என்று ( 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நடந்தது போல,)  ஒதுங்காமல், இறுதி வரை போராடி வெற்றி ஈட்டினார்.

பலரின் முயற்சிகளால் துவக்கப்பட்ட 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமானது, அடுத்த கட்டத்தில் ஈ.வெ.ரா தலைமையில் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக, பொதுச்சொத்துக்களுக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பின்றி, ஆனால், அரசே 'மிரண்டு' கட்டாய இந்தியை'  பள்ளிகளில் ஒழித்து, ஆணை பிறப்பிக்கும் அளவுக்கு, வலிமையுடன் வளர்ந்து, இலக்கை எட்டியது.

விரும்பினால் பள்ளிகளில் இந்தி படிக்க இருந்த அந்த வாய்ப்பினை, கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகும். போராட்டத்தின் 'பண்பு'ரீதியிலும், போராடியவர்களின், தலைமை ஏற்றவர்களின் 'பண்பு'ரீதியிலும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்திலிருந்து, அது எவ்வாறு வேறுபட்டிருந்தது என்பதையும், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் 'பங்கேற்காத பாவத்திற்காக' ஈ.வெ.ரா அவமானப்படுத்தப்பட்டதையும் ஏற்கனவே பார்த்தோம். ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html)

1944 வரை ஈ.வெ.ராவின் உழைப்பால் உருவாகியிருந்த சமூக ஆற்றலானது, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள குழப்பங்களுடன், தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்ட சமூக ஆற்றல் மூலங்களிடமிருந்து அந்நியமாகி, பயணித்ததன் விளைவாக, 'தி.மு.க' பிரிவினையில் விரயமான பகுதி போக; எஞ்சிய பகுதியும், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் மூலம், ஈ.வெ.ராவிடமிருந்து பறி போனதா? ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html ) என்ற ஆய்வின் மூலமும், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகள்' எவ்வாறு சிறைபடுத்தினார்கள்? என்பதற்கான விடையையும் பெற வாய்ப்புள்ளது. பொதுவாழ்வில் மனம் வெறுத்து, 'முனிவராக ஒதுங்கி' விட விரும்புவதாக, ஈ.வெ.ரா, அன்றைய முதல்வர் அண்ணாதுரையிடம் தெரிவித்த‌தற்கு அடிப்படை காரணங்கள் யாவை? என்ற ஆய்வும், அதற்கு துணை புரியலாம்.

1944இல்,  தமிழில் இருந்த' இனம்' என்ற சொல்லானது, பொருளில் திரிந்து, அந்த திரிதலில் 'திராவிடர்' அரங்கேறி, அதன்பின் 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பத்துடன் கூடிய‌,  உணர்ச்சிபூர்வ போக்குகளின் வளர்ச்சியில், அறிவுப்புலத்தில் வீழ்ச்சி தொடங்கி, பழந்தமிழ் இலக்கியங்களில் புதைந்துள்ள அறிவுச் செல்வத்தை அறிந்து கொள்வதும், ஆராய்வதும் வீழ்ச்சிக்குள்ளாகி, அந்த வீழ்ச்சிப் போக்கில், அவையெல்லாம் கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாகி (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html ), 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என்று, உரிய அறிவுபூர்வ எதிர்ப்பின்றி, பொது அரங்கேறி, அந்த ‘வீழ்ச்சியின் வளர்ச்சிப்போக்கில்’, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், உணர்ச்சிபூர்வ போக்குகள் உச்சமடைந்து, சமூக கிருமிகள் 'ஆதிக்கம்' பெற்று, அதன் விளைவான,  'வீழ்ச்சியின் உச்சத்தில்', ஈ.வெ.ரா மனம் வெறுத்து, பொதுவாழ்விலிருந்து 'முனிவராக' ஒதுங்க முயன்றதானது,  அதன் தொடர்ச்சியா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பலனாக, 1967இல் தொடங்கிய 'திராவிட' ஆட்சியில், 1969 முதல் சாகும் வரை, 'இன(?) நலத்திற்காக' என்று எண்ணிக்கொண்டு, ஈ.வெ.ரா 'விரும்பி' அனுபவித்த அவமானங்களை, இதுவரை எவரும் பதிவு செய்ததாக தெரியவில்லை. 

உதாரணமாக, 1969க்குப்பின் ஒரு நிதியளிப்பு கூட்டத்தில், மேடையில் தரையில் மூத்திரப்பையுடனும், வாலியுடனும் அமர்ந்திருந்த ஈ.வெ.ராவிடம், குனிந்து காசோலையை கொடுக்க மறுத்த, 'திராவிட' ஆளுங்கட்சித் தலைவர், " 'பணம்' என்று ஈ.வெ.ராவிடம் சொல்லுங்கள், அவர் உடனே எழுந்து நிற்பார்" என்று வலியுறுத்த, தயங்கியபடியே அதை ஈ.வெ.ராவிடம் சொல்ல, ஈ.வெ.ராவும் மற்றவர்கள் தாங்கிப் பிடிக்க, 'அம்மா, அம்மா' என்று வலியுடன் முணகியவாறே, எழுந்து நின்று, அந்த காசோலையை பெற்றார். அதனை அக்கூட்டத்தில் பங்கேற்ற, 'பெரியார்' ஆதரவாளர் என்னிடம், மனம் நொந்து, தெரிவித்தார். அண்ணாவிற்கு பின், சாகும் வரை, அண்ணா கொடுத்த முக்கியத்துவம் இன்றி, அவமானங்களை பற்றி கவலையின்றி, 'அய்யா' ('பெரியார்') வாழ்ந்து மறைந்ததாக, மறைந்த தி.க.பொருளாளர் கா.மா.குப்புசாமி என்னிடம் தெரிவித்தார்.

தமது கடைசி காலத்தில் லெனின் 'அனுபவித்த' அவமானங்களுடன், ஈ.வெ.ரா சந்தித்த அவமானங்களை ஒப்பிட்டு, அந்த அவமானங்களை 'ஏற்படுத்திய' சமூக செயல்நுட்பங்களை (Social Mechanism)  ஆராய்வதன் மூலம், பொதுவாழ்வில் 'புரட்சி, சீர்திருத்தம்' போன்றவற்றை முகமூடிகளாக பயன்படுத்தி, 'சமூக கிருமிகள்' எவ்வாறு வளர முடிந்தது? 'பெரியார் முகமூடியில்', பொதுவாழ்வு 'வியாபாரத்திற்கு', 'முதலில்லா மூலதனமாக' பயன்பட்ட, 'பார்ப்பன எதிர்ப்பு, சாதி ஒழிப்பு' வரிசையில் 'ஊழல் ஒழிப்பு' எப்போது சேர்ந்தது? திருடர்களே திருட்டை ஒழிப்பதாக கூறி, திருடும் 'சமூக செயல்நுட்பம்'(Social Mechanism) ஆனது, தமிழ்நாட்டில் எப்போது 'விதைக்கப்பட்டு', இப்போது 'அறுவடை'யில் உள்ளது? அதில் 'அந்நிய சூழ்ச்சி வலை' எப்போது இணைந்தது? என்பதற்கான விடைகளை பெறலாம். 
(http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'வளர்ந்த' சமூக கிருமிகள் காரணமாக, நான் நம்பமுடியாத இழப்புகளையும், அவமானங்களையும், அந்த சமூகவியல் ஆய்வு நோக்கிலேயே, சமூகவியல் பரிசோதனை ஆய்வு (Sociological Experiment)   'ஆர்வத்தில்', 'அனுபவித்து' வருகிறேன்; மோடி ஆட்சியில் 'ஊழல் ஒழிப்பு', குறிப்பாக மத்திய அரசு துறைகளில், எந்த அளவுக்கு வலிமையாக/பலகீனமாக உள்ளது? என்ற 'கூடுதல்' ஆய்விற்கும் உட்படுத்தி. ஊழல் ஒழிப்பில் வெற்றி பெறாமல், மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலை, 'நம்பிக்கையுடன்' சந்திக்க முடியுமா? மத்திய அரசு துறைகளில் ஊழலை ஒழிக்காமல், மாநிலங்களில் ஊழல் பெருச்சாளிகளை ஒடுக்க முடியுமா? தமிழ்நாட்டில் 1967 ஆட்சி மாற்றத்திற்குப்பின், ஊழல் வளர்ந்த வேகத்தில், வளர்ந்த 'பெரியார்' சமூக கிருமிகளின் ஆட்டமானது, ஊழல் ஒழியாமல், அடங்குமா? ஊழல் ஒழிப்பு வெற்றி பெற்றால் தான், 'பெரியார் முகமூடியில், ' ஊழல் வழிகளில் 'வளர்ந்த' சமூக கிருமிகள் எல்லாம், சட்டத்தின் பிடியில் சிக்குவார்கள்; 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து, ' ஈ.வெ.ராவின் சுயமரியாதையும்' 'விடுதலை' பெறும். இப்பதிவின் இறுதியில் வெளிப்பட்டுள்ள சான்றுகளின் அடிப்படைகளில், நவீன கால தேவைகளுக்கேற்ற மாற்றங்களுடன் பயணிக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆதரவோடு, மோடி அரசானது, ஊழல் ஒழிப்பில் வெற்றி பெறுமானால், அந்த வெற்றியின் மூலமாக, 'பெரியார்' 'சமூக கிருமிகளிடமிருந்து', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை' மீட்க வாய்ப்பிருக்கிறது; மோடியின் ஆட்சிக்கு 'உணர்ச்சிபூர்வ' தடைகளை அவ்வப்போது ஏற்படுத்திவரும், இந்துத்வா அமைப்புகளில் உள்ள மோடி எதிர்ப்பு சக்திகள், தோல்வியைத் தழுவினால்; அந்த 'உணர்ச்சிபூர்வ' தடைகளை, 'மூலதனமாக' பயன்படுத்தி, மோடியை எதிர்த்துவரும் இந்துத்வா எதிர்ப்பு அமைப்புகளும், தோல்வியை தழுவினால்.

ஈ.வெ.ரா தன்னையும், அவர் வழியில் என் போன்ற எண்ணற்றோரையும், நம்ப முடியாத அவமானங்களையும், துன்பங்களையும், 'அனுபவிக்க' செய்ததற்கு காரணமான, 'பெரியார் சமூக கிருமிகள்' எந்த சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism)  வளர்ந்தார்கள்?

“தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும் எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும் பாதகமாகவே முடியும். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய‌ வைத்தியமாகிவிட்டது. தாய்மொழி வழிக் கல்வி பற்றிய உலக ஆய்வுகளை, ஓரங்கட்டி, பண்பாட்டு ஒழுக்கம்/படைப்பாற்றல்/சுய உருவாக்கம் ஆகியவற்றை இழந்து, ஆங்கில வழிக் கல்வி என்ற சூது, தமிழ்நாட்டைக் கவ்விய விளைவில் அது முடிந்தது.

மேலே சொன்னபடி, தனிமனித ஓழுக்கத்தில் பெரியவர்களான பெரியார், ராஜாஜி (தி.மு.க ஆட்சியைப் பிடிப்பதற்கும், கருணாநிதி முதல்வராவதற்கும் துணையானவர்) தொண்டுகளின் விளைவாக, இந்தியாவிலேயே, ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில், 'ஆங்கில வழி' சூதுக்கு இரையாகி, பிற மாநிலங்களுக்கு 'தவறான முன்னுதாரணமாக' விளங்கி வருவது, தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை, 'அதிவேகமாக‌'  இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.

அதன் விளைவாக, அறிவு நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஓரங்கட்டி, யாரை ஏணியாகப் பயன்படுத்தி அதிக செல்வம், செல்வாக்கு பெறுவது என்ற ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு செயல்நுட்பஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆக உடலுழைப்பு, அறிவு உழைப்பு போன்றவற்றில் தமிழரல்லாதாரை நம்பி இயங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு வந்து விட்டது. திருக்குறளில் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்) அதிகாரம் விளக்கும் செயல் நுடபமே இது. 

'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் பெரும்பான்மையார்களாக வாழ்வதை 'சூது கவ்வும்' திரைப் படமாக வெளிப்படுத்திய இளைஞர்களும், அதை "குற்றங்களே குணங்களாகிவிட்டன!" என்று அடையாளம் காட்டிய பழ.கருப்பையா அவர்களும், பாராட்டுக்குரியவர்களே.

1944க்கு முன், தமிழ்நாட்டில் சுயமரியாதை இயக்கம் மூலமாக வளர்ந்த, துவக்கத்தில் விளக்கப்பட்ட சுயமரியாதை தொடர்பான சமூக செயல்நுட்பமானது, இன்று எந்த நிலையில் உள்ளது? என்பதை மேலே பார்த்தோம்.

1944 முதல் 'உணர்ச்சிபூர்வ' போக்குகள் வளர்ந்த வேகத்தில், 'சுயமரியாதையை' காவு கொடுக்கும் போக்குடன், 'உயர்வு மனப்பான்மை, தாழ்வு மனப்பான்மை' நோயும் வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் இருக்கிறதா? என்ற ஆய்வும் அவசியமாகும்; அதன் தொடர்விளைவான‌  'பெரியார் சமூக கிருமிகளிடம், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதை' சிக்கி சீரழிந்ததா? என்பதற்கான விடையைப் பெற.

“உயர்வு மனப் பான்மையும், தாழ்வு மனப்பான்மையும் ஒரே நாணயத்தின் ‍ - நோயின் -  இரு பக்கங்களாகும்."We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex." (Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 260).) எனவே பேராசிரியர்கள் துணை வேந்தர்கள் முதல் அரைகுறையாகப் படித்த அடிமட்டத் தொண்டர் வரை, 'காரியம்' சாதிக்க, தலைவர்களின் கால்களில் விழுந்து வணங்குவதும், தலைவர்கள் அதை 'ரசிப்பதும்' ஒரே நோயின் இரு பக்கங்கள் என்பது தெளிவாகிறது. அப்படிப்பட்ட தமிழ்நாட்டு 'நோயாளிகளின்' ஆதரவைப் 'பலமாக' நம்பி, பயணித்த 'தமிழ் ஈழ முயற்சிகள்' சாண் ஏறி முழம் ச‌றுக்கினக் கதையானதில் வியப்புண்டோ? தமிழ்நாட்டில் இந்த 'நோய்' திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் தான் அரங்கேறியது என்பதை எவராலும் மறுக்கமுடியுமா? தமக்கான பாராட்டையும், புகழையும், தமது சமூக வட்டம் மூலம், தாமே ஏற்பாடு செய்து கொண்டு, 'மகிழும்' மனநோயாளித் தலைவர்களை குறை சொல்லியவர்களில், யார் யார் தமக்கு 'வசதி வாய்ப்புகள்' கிடைத்ததும், அது போன்ற 'மகிழ்ச்சிகளில்' திளைத்தவர்கள்? என்று ஆராய்ந்தால், நமக்கு தெரிந்தவர்களில், நாம் உள்ளிட்டு, எத்தனை பேர்?, அந்நோயில் சிக்காதவர்கள் என்பது மிகக் குறைவாக வெளிப்பட்டால், வியப்பில்லை.”; ‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html

'திராவிட மனநோயாளிகள்', எவ்வாறு, நேர்மையான சுய சம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகளின்றி, மனித மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, 'பெரியார்' முகமூடியை எப்படியெப்படி பயன்படுத்தி, எந்தெந்த 'குறுக்கு வழி'களில், சமூகத்தை சீரழித்து, 'செல்வம், செல்வாக்கு' ஈட்டி, அந்த 'பலத்தில்' உதவிகள் மூலம், 'எடுபிடி முற்போக்குகளை' வளர்த்து வருகிறார்கள்?, என்பதை, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் அடையாளம் கண்டு, நம்பமுடியாத விலை கொடுத்து, தனித்துவமான (Unique) 'சமூகவியல் பரிசோதனைகள் (Sociological Experiments)' மூலம், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகள்' எவ்வாறு சிறை பிடித்துள்ளார்கள்? என்று கண்டுபிடித்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

நேர்மையான சுய சம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகளின்றி, மனித மதிப்பீடுகளை (Human Values) காவு கொடுத்து, சுயலாப கள்வர்களாக, பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்) அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது.  அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்' (திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. எனவே தமிழ்நாட்டில் நமது சமூக வட்டத்தில், 'வரைவில் மகளிர்', மற்றும் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்' யார்? யார்? என்று, அவர்கள் பொருள் ஈட்டும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு, அடையாளம் கண்டு, அகற்றினால் தான், ஈ.வெ.ராவின் 'சுயமரியாதையை', 'பெரியார் சமூக கிருமிகளிடமிருந்து',  மீட்கும் முயற்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க முடியும்.
 

ஈ.வெ.ரா தன்னையும், அவர் வழியில் என் போன்ற எண்ணற்றோரையும், நம்ப முடியாத அவமானங்களையும், துன்பங்களையும், ஏற்க வைத்தது எதற்காக? 'பெரியார் சமூக கிருமிகளிடம்', ஈ.வெ.ராவின் 'சுயமரியாதை' சிக்கி சீரழிவதற்காகவா?

'பெரியார் சமூக கிருமிகளிடம், சிக்கி, சீரழிந்து வரும், 'ஈ.வெ.ராவின் 'சுயமரியாதை'யை மீட்கத் தவறினால்;

‘ஈ.வெ.ரா தன்னையும், அவர் வழியில் என் போன்ற எண்ணற்றோரையும், நம்ப முடியாத அவமானங்களையும், துன்பங்களையும், ஏற்க வைத்தது, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சீரவிற்கே’,  என்பது வரலாற்றில் இடம் பெறுவதை தடுக்க முடியுமா?

“எனவே, கடைசி ‘பெரியார் மீட்பு முயற்சியாக, 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை' விட்டு விலகி, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் பெரியாரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், 'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்குட்படுத்தி மறு ஆய்வு செய்து, உரிய திருத்தங்களை பகிரங்கமாக அறிவித்து பயணிப்பதே, ஒரே வழியாகும். தமிழ்மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான மறு ஆய்வையும் உரிய திருத்தங்களையும் தாமதப்படுத்துவது என்பது, பெரியாரின் வரலாற்று மரணத்தை வேகப்படுத்துவதாகிவிடும்.” ( ‘தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, பெரியாரின் வரலாற்று மரணம் முன் நிபந்தனையாகி விடுமா?’; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none_15.html) 'பெரியார்' ஆக சிறையுண்டு, ஈ.வெ.ரா அந்த போக்கில், தமக்கு சிலை வைக்க அனுமதித்து, 'கடவுளை' போல 'எடைக்கு எடை' நிகழ்ச்சிகளிலும் 'பயணித்து',  அந்த போக்கிலேயே, கீழ்வரும் 'தாவோ'(Tao) செயல்நுட்பத்திற்கிணங்க, பலியானாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தலைவர்கள் 'சூப்பர் ஸ்டார்களாக' மாறும்போது, தாம் கற்பித்ததையும் மீறி, 'வெளிச்சம்' பெறுவார்கள். புகழானது புகழை வளர்க்க, அவர்கள் அவற்றின் மூலம் தூக்கிச் செல்லப்படுவார்கள். நீண்டகாலம் ஆகும் முன்பே,  அவர்கள் தமது நடுநிலையிலிருந்து 'பறந்து', வீழ்ச்சியைத் தழுவார்கள்.” ( “When leaders become superstars, the teacher outshines the teaching…… Fame breeds fame, and before long, they get carried away with themselves. Then they fly off centre and crash” Page 17; ‘Tao of Leadership’ by John Heider)
மேலே குறிப்பிட்ட போக்கில், ஈ.வெ.ரா 'பலியானாரா'? என்ற ஆய்வுடன், அவ்வாறு 'புகழில்' சிக்கி பலியாகாமல், இலக்கை நோக்கி, வெற்றிகரமாக, நமக்கு சரியான முன்னுதாரணமாக, ஏக்நாத் ரானடே பயணித்தாரா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ( The Story of the Vivekananda Rock Memorial’ –As told by Shri Eknath Ranade; Vivekananda Kendra Prakashan Trust- Email: vkpt@vkendra.org)


ஆர்.எஸ்.எஸ் இயக்கமானது, மேற்கத்திய வழிபாட்டுடன் பிணைந்த, ஆங்கிலவழிக்கல்வி ஆதிக்கத்திலிருந்து, இந்தியாவை மீட்க, 'தாய்மொழிவழிக்கல்வி', 'சாதி, மத அடிப்படைகளில் உள்ள பாரபட்சத்தை' அகற்றுதல்,  போன்றவை மூலம், ஆர்.எஸ்.எஸ் ஆனது, நவீன கால தேவைகளுக்கேற்ற மாற்றங்களுடன், வியக்கும் வகையில் பயணிக்கிறது. (‘Is The RSS Making Peace With Modernity? It Certainly Seems So’; http://swarajyamag.com/ideas/is-the-rss-making-peace-with-modernity-it-certainly-seems-so & http://www.firstpost.com/politics/modi-ambedkar-and-rsss-ultimate-unifier-a-fresh-attempt-at-social-engineering-2728642.html ). இந்துத்வா ஆதரவாளர்களில், உணர்ச்சிபூர்வ போக்குகளை தவிர்த்து,அறிவுபூர்வ விவாதங்களை  ராஜிவ்மல்கோத்ரா உள்ளிட்ட பல அறிஞர்கள் முன்னெடுத்து வருகிறார்கள். (‘அறிவுபூர்வ விவாதத்தில் 'இந்துத்வா' ; ராஜிவ் மல்கோத்ராவும், செல்டன் பொல்லாக்கும்’; http://tamilsdirection.blogspot.in/2016/02/normal-0-false-false-false-en-us-x-none_15.html  ) உரிய மாற்றங்களின்றி பயணிக்கும் கொள்கைகளும், இயக்கங்களும், கால ஓட்டத்தில் 'சருகாகி', உதிர்ந்து போவதை தடுக்க முடியுமா? என்பதை 'பெரியார்' கட்சிகள் அறிவார்களா? 

குறிப்பு: எனது பதிவுகள் தொடர்பாக, அறிவுபூர்வ விவாதத்தை வரவேற்கிறேன். (‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

No comments:

Post a Comment