Friday, May 25, 2018

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (3);

 

ஸ்டெர்லைட் படுகொலையில், ‘ஆச்சாரப் பார்ப்பான், லௌகீகப் பார்ப்பான்' காண்பது குருட்டுப் பகுத்தறிவாகாதா?



1995 முதல் ஸ்டெர்லைட் ஆலை துவங்குவதற்கு தொடர்ந்து ஆணைகள் பிறப்பித்து உதவியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசு; 2006 - 2008  காலக்கட்டத்தில்; 80,000 மக்கள் ஸ்டெர்லைட் கழிவுகள் காரணமாக நோய்களுக்கு உள்ளானதை, திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி ஆய்வறிக்கையானது வெளிப்படுத்திய தகவலும் வெளிவந்துள்ளது.. (http://www.republicworld.com/india-news/politics/tuticorin-truth-exposed-explosive-documents-prove-congress-sanction-to-expand-controversial-sterlite-project-in-tuticorin )

‘மத்திய அமைச்சர் பதவியேற்கும் நாள் வரை, ஸ்டெரிலைட்டில் நிர்வாகம் சார இயக்குநராக .சிதம்பரம் இருந்து வந்தார்.’ என்ற தகவலும் முகநூலில்  வெளிவந்துள்ளது.

திராவிட கட்சிகளின் முக்கிய புள்ளிகள் ஸ்டெர்லைட் ஆலை ஒப்பந்தப்பணிகளில் 'பலன்கள்' பெற்று வந்துள்ளதும், முகநூலில்  வெளிவந்துள்ளது.

முகநூலில் வெளிவந்துள்ள கீழ்வரும் கோரிக்கையையும் நான் ஆதரிக்கிறேன்.

#ஸ்டெரிலைட் #தேவைமுழுவிசாரணை;


வன்முறை, அதற்கான அரசின் துப்பாக்கி சூடு எனும் எதிர்வினை இரண்டுமே கூட திட்டமிட்ட சதியாக இருக்கலாம். அரசு அதிகாரிகள் அனைவரும் யோக்கியர்கள் அல்ல. இருதரப்பிலும் முழுவிசாரணை தேவை.


மனித இழப்புகள் வேதனை தருவன. அதில் உருவாக்கப்படும் அரசியல் ஆபத்தானவை.


எனவே தேவை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல், போராட்டத்தின் உண்மை நிலை.”

ஊழல் வழிகளில் அரசு அதிகாரிகளானவர்கள் எல்லாம், அதே 'ஊழல் வழியில்' கிடைக்கும் 'எலும்புத்துண்டுகளுக்காக', அரசுக்கும், பொதுநலனுக்கும் 'கேடாகவும் பணியாற்றும்'(?) ஆபத்திலும் தமிழ்நாடு சிக்கியுள்ளது. எனவே தமிழ்நாட்டின் பொது அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புபவர்கள் எல்லாம், உணர்ச்சிபூர்வமாக எதிரெதிர் பகைமை உணர்ச்சிகளை தூண்டாமல், விசாரணை மூலமாக‌, பாரபட்சமின்றி போராட்டத்தில் பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊறு விளைவித்த வன்முறையைத் தூண்டியவர்களையும், அந்த வன்முறையை அடக்க வரம்பு மீறி மிருகத்தனமான நடந்த காவலர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கச் செய்வதில், கவனத்தை செலுத்தினால்;

மீண்டும் இது போன்ற கலவரங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்.

அந்த போராட்டத்தினை முன்னெடுத்த தலைவர்களும், அமைப்புகளும், கீழ்வரும் கேள்விகளுக்கு விடைகள் தரவேண்டியது, அவர்களின் சமூகக் கடமையாகும்.

“துப்பாக்கி சூட்டில் முடிந்த ஸ்டெர்லைட் போராட்ட  பேரணிக்கு தலைமை தாங்கியது யார்? பங்கு பெற்ற இயக்கங்ள் எவை? அமைப்பாளர்கள் யார் யார்?”

திருச்சியில் உயர்நிலைப்பள்ளி இறுதி வகுப்பு (SSLC ) மாணவனாக படித்த காலத்தில், 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் நடந்தபோது, தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு அரங்கேறியபோது, வடநாட்டு காவலர்கள் மீது, கற்களை வீசி, முக்கிய சாலையில் இருந்த சந்துகளுக்குள் புகுந்து, 'கண்ணாமூச்சி கல்வீச்சில்' ஈடுபட்டேன்

(எனது நினைவின்படி) திருப்பூரில் போராட்டத்தில் தனியாக மாட்டிக்கொண்டஒரு சப்இன்ஸ்பெக்டரை உயிரோடு எரித்த சம்பவம் நடந்த பின், துப்பாக்கி சூடுகள் தொடர, போராட்டம் இன்னும் தீவிரமானது.

அவ்வாறு தீவிரமான கட்டத்தில், போராட்டத்தைத் தூண்டிய தி.மு. தலைவர்கள் 'தங்களுக்கும் மாணவர்கள் போராட்டத்திற்கும்' தொடர்பில்லை என்று அறிக்கை விட்டார்கள்.

மாணவர் தலைவர்களாக முன் நிறுத்தப்பட்டவர்களில் யார்? யார்? 1967க்குப் பின், சட்டசபை உறுப்பினர்களாகவும், அமைச்சர்களாகவும், ..எஸ் அதிகாரிகளாகவும் ' பலன்கள்' பெற்று, அத்தோடு அடங்காமல், ஊழலிலும் திளைத்தார்கள்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராய்ந்து தெளிவு பெறலாம். மைக்ரோஉலகில் பிரமிக்கும் வகையில் வெளிப்படும் உரிமைக்கான போராட்டங்களின் பலன்களை எல்லாம், 'புத்திசாலித்தனமாக' மேக்ரோ உலகில் 'அறுவடை' செய்யும் போக்குகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( http://tamilsdirection.blogspot.sg/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_27.html ) அந்த போக்கிற்கு வழி வகுத்ததே, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டமாகும். 'வெள்ளைக்காலர் திருடர்களைப்' போல(https://en.wikipedia.org/wiki/White-collar_crime), தமிழ்நாட்டில் 'புறத்தில் சமூக நீதி' வேடத்தில், தமிழ்நாட்டை ஊழல் சூறையாடும், எளிதில் சிக்காத 'சமூக திருடர்கள்' உருவானதும், அதன் விளைவேயாகும்.

1965 போராட்டத்தில் சரியான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் எல்லாம் தண்டிக்கப்பட்டிருந்தால்;

தற்போது நடந்துள்ள தூத்துகுடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடுகள் வரை, எண்ணற்ற உயிரிழப்புகள் தமிழ்நாட்டில் நடந்திருக்காது, என்பது எனது ஆய்வு முடிவாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) “1944க்குப்பின், மேலே குறிப்பிட்ட இரண்டு போராட்டங்களையும் (1925 வைக்கம் போராட்டமும், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டமும் ) போன்ற போராட்டத்தினை, ஈ.வெ.ரா முன்னெடுக்காதது மட்டுமின்றி, 'இரட்டைக்குழல் துப்பாக்கியில்' 'ஒரு குழலான' தி.மு.க, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கும் பொதுச்சொத்துக்களுக்கும் ஊறு விளைவிக்கும் போராட்டத்தை அறிமுகப்படுத்தி, இன்றுவரை தமிழ்நாடு 'அந்த போராட்ட நோயிலிருந்து' மீள முடியாமல் தவிக்கிறது;” (http://tamilsdirection.blogspot.sg/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_18.html )

கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய காலங்களிலும், கல்லூரி ஆசிரியர் போராட்டங்களில் கலந்து கொண்டு பலமுறை சிறை சென்றுள்ளேன். உணர்ச்சி பூர்வ பேச்சுக்கள் எழுத்துக்கள் மூலமாக எதிரெதிர் சாதிகளிடையே 'சமூக எரிவாயு பகைமையை' நிரப்பி, சாதி மோதல்கள் நடைபெற்றதை (தோட்டக்குறிச்சி, நெய்குப்பை, ராஜபாளையம், போடி சாதிக் கலவரங்கள் தொடர்பான) ஆய்வுகள் மூலமாக கண்டறிந்தேன். (‘“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை”; http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post_19.html )

மேலே குறிப்பிட்ட பின்னணியில்;
'போராட்டம் எப்படி கலவரமாகிறது? என்பதை விளக்கும் கீழ்வரும் காணொளி எனது பார்வையில் பட்டது. அதனை அறிவுபூர்வமாக மறுத்து, ஏதேனும் வெளிவந்திருந்தால், அதனை காண்பதிலும் ஆர்வமாயுள்ளேன்.
 
சிக்னலுடன்(Signal) இரைச்சல்(Noise) அளவுக்கு மீறி கலந்து ஏற்பி(Receiver)  செயல்பாட்டினை சீர் குலைப்பது போலவே;

ஸ்டெர்லைட் போன்ற எதிர்ப்புகளுடன், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான திட்டங்களையும் சேர்த்து எதிர்க்கும் போக்கு தொடர்ந்தால், புதிய திட்டங்கள் வராமலும்; அதிக வேலைவாய்ப்புகளுடன் செயல்படும் தொழில்களும், தமிழ்நாட்டை விட்டு, வெளியேறும் அபாயமும் இருக்கிறது. அது போன்ற எதிர்ப்புகள் இருந்திருந்தால், திருச்சி பெல், துப்பாக்கித் தொழிற்சாலை, ஆவடி டேங்க் தொழிற்சாலை, போன்ற பல தொழிற்சாலைகள்/திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்குமா?
 

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக, 'தமிழர் மையம்' என்ற பெயரில் முகநூலில் வெளிவந்த கீழ்வரும் தகவல், எனது கவனத்தை ஈர்த்தது.

தினமலர் பச்சைப் பார்ப்பான் தெரிந்ததே!

தி இந்து தமிழ் லௌகீகப் பார்ப்பான் !!

இரண்டாமவனே ஆபத்தானவன்!!!

ஸ்டெர்லைட் படுகொலையில் இரண்டும் ஒரே நிலை.

எழுதும் முறைதான் வித்தியாசம்!!!!

"ஆச்சாரப் பார்பானைவிட லௌகீகப் பார்ப்பானே ஆபத்தானவன்"
:- பெரியார் ; https://www.facebook.com/tamilarmaiyam/
 
ஆட்சியில் இருந்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு அநீதியான முறையில் அனுமதி வழங்கி, அந்த ஆலையின் செயல்பாட்டில் ஒப்பந்தங்கள் மூலம் பலன்கள் பெற்ற காங்கிரஸ் தி.மு.க தலைவர்களில், முக்கிய புள்ளிகளில்;

'ஆச்சார பார்ப்பான், லெளகீக பார்ப்பான்' யார்?, யார்? என்பதை 'தமிழர் மையம்' தெளிவுபடுத்தினால், நல்லது.

“'பிராமணர்கள், பிராமணியம்' தொடர்பாக, ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் உள்ள அபத்தங்கள் பற்றிய, சான்றுகள் அடிப்படையிலான எனது பதிவுகளை படிக்காமலேயே பல கருத்துக்கள் வெளிப்பட்டுள்ளன. (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது;  'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html   ) இது போன்ற எனக்கு வரும் மடல்களில் வெளிப்படும் கருத்துக்களை எல்லாம் கவனத்தில் கொண்டே, துக்ளக்கில் எனது கட்டுரைத் தொடர் வெளிவரும்.” (http://tamilsdirection.blogspot.sg/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_18.html

மேலே குறிப்பிட்டுள்ள பதிவில், நேர்மையான சுயசம்பாத்தியத்துடன், மதிக்கத்தக்க முறையில் வாழ்ந்த 'பெரியார்' ஆதரவாளரை, 'பெரியார்' இயக்கத்தின் விளைவால் சிக்கிய 'குருட்டு பகுத்தறிவுவாதியாக' நான் அடையாளம் கண்டதை குறிப்பிட்டு;

அவ்வாறு அடையாளம் காண்பதானது, அவரை இழிவுபடுத்துவதாகாது; என்பதை விளக்கியுள்ளேன். தமிழை இழிவுபடுத்தும் நோக்கில், 'காட்டுமிராண்டி மொழி' என ஈ.வெ.ரா அவர்கள் குறிப்பிடவில்லை; 'காட்டுமிராண்டி' நிலையிலிருந்து, 'தமிழர்களின் வளர்ச்சிக்கு பயன்படும் மொழியாக, தமிழ் வளரவில்லை' என்பது அவரின் ஆய்வு முடிவாகும்; அவரின் அறிவு வரை எல்லைகள்(intellectual limitations) பற்றிய புரிதலின்றி, அவர் பயணித்ததற்கு சாட்சியமாக.

"தமிழ்நாட்டின் பொது அமைதியையும் வளர்ச்சியையும் விரும்புபவர்கள் எல்லாம், உணர்ச்சிபூர்வமாக எதிரெதிர் பகைமை உணர்ச்சிகளை தூண்டாமல், விசாரணை மூலமாக‌, பாரபட்சமின்றி போராட்டத்தில் பொதுச்சொத்துக்களுக்கும் பொதுமக்களுக்கும் ஊறு விளைவித்த வன்முறையைத் தூண்டியவர்களையும், அந்த வன்முறையை அடக்க வரம்பு மீறி மிருகத்தனமான நடந்த காவலர்களையும் அடையாளம் கண்டு தண்டிக்கச் செய்வதில் கவனத்தை செலுத்தினால்;

மீண்டும் இது போன்ற கலவரங்கள் நடக்காமல் தவிர்க்கலாம்." என்ற சமூக அக்கறையின்றி;

“'பிராமணர்கள், பிராமணியம்' தொடர்பாக, ஈ.வெ.ரா அவர்கள் முன்வைத்த கருத்துக்களில் உள்ள அபத்தங்கள் பற்றிய, சான்றுகள் அடிப்படையிலான எனது பதிவுகளை எல்லாம் அறிவுபூர்வமாக மறுக்காமல்;

"ஸ்டெர்லைட் படுகொலையில்" மேலே குறிப்பிட்ட நிலைப்பாடு எடுத்துள்ள 'தமிழர் மையம்' என்பதானது, குருட்டுப் பகுத்தறிவு திசையில் பயணிக்கும் மையமா? என்ற கேள்வியை எழுப்புவது தவறாகுமா? உலகில் எந்த நாட்டிலாவது, பிறப்பின் அடிப்படையில் குறிப்பிட்ட பிரிவு மக்களை 'எதிரிகளாக' சித்தரித்து, ஊழல் திமிங்கிலங்களை 'இனநலன்' என்று ஆதரித்து, 'பகுத்தறிவாளர்களாக' தம்மை அறிவித்துக்கொண்டு, வாழ்பவர்கள் இருக்கிறார்களா?

ஊழல் வழிகளில் அரசு அதிகாரிகளானவர்கள் எல்லாம், அதே 'ஊழல் வழியில்' கிடைக்கும் 'எலும்புத்துண்டுகளுக்காக', அரசுக்கும், பொதுநலனுக்கும் 'கேடாகவும் பணியாற்றும்'(?) ஆபத்திலும் தமிழ்நாடு சிக்கியுள்ளதை பாதுகாக்கும் 'சமூக திருடர்கள் கவசமாக', 'குருட்டு
ப் பகுத்தறிவு' பயன்படலாமா? 'குருட்டுப் பகுத்தறிவு' போக்கிலிருந்து, தமிழ்நாடு 'விடுதலை' பெறாத வரையிலும், ‘என்கவுண்டரில்’  சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) காணும் வாய்ப்பு தொடராதா? (http://tamilsdirection.blogspot.sg/2018/02/

அந்த 'சமூக திருடர்களும்', அவர்களின் 'குருட்டுப் பகுத்தறிவு கவச' மனிதர்களும், நாமும்;

பிறக்கும் போது எதையும் கொண்டு வரவில்லை; இறக்கும்போது எதையும் எடுத்துச்செல்லப் போவதுமில்லை; ஆனால் எந்த அளவுக்கு சமூகத்திற்கு நன்மையாக/தீமையாக வாழ்ந்தோமோ, அந்த அளவுக்கு நமது குடும்பமும், வருங்கால சந்ததியும், அதன் 'பலன்களை' அறுவடை செய்வதிலிருந்து தப்ப முடியாது. (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

No comments:

Post a Comment