Thursday, May 31, 2018

சுமார் 10 வருடங்களுக்கு மேலாக 'இதுவரை' சந்தித்த 'அமைதி'யால் வெளிவந்த 'துக்ளக்' அறிமுகம் (6);

 

'சபாஷ், சரியான போட்டி'; ஆர்.எஸ்.எஸுக்கும், 'பெரியார்' கட்சிகளுக்கும் இடையே



'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் பத்மினிக்கும், வைஜ‌யந்திமாலாவுக்கும் இடையில் நடந்த போட்டி நடனத்தை, 'சபாஷ், சரியான போட்டி' என்று பி.எஸ்.வீரப்பா பாராட்டியதை நினைவுகூறும் வகையில்; (https://www.youtube.com/watch?v=eOrY54-cKxY )

தமிழ்நாட்டில் சமூக அளவில் ஆர்.எஸ்.எஸுக்கும் 'பெரியார்' கட்சிகளுக்கும் இடையே ஒரு போட்டி துவங்கி விட்டதாக தெரிகிறது.

ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா ஆதரவு அறிவுஜீவிகளின் பங்களிப்பால்,  'பெரியார்' சிறையிலிருந்து  ஈ.வெ.ராவை காப்பாற்றும் முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் இறங்கி விட்டது;

என்று நான் கருதுவதற்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

அது போலவே, 'ஈ.வெ.ரா செயலாக்கியை' (EVR Processor) மேம்படுத்த முயலும் எனது முயற்சிகளை கெடுத்து, 'பெரியாரை' சமூக  காயலான் கடைக்கு ஒதுக்கும் திசையில், 'பெரியார் கட்சிகள்' இறங்கி விட்டது;

என்று நான் கருதுவதற்கான காரணங்களை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2018/03/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் பத்மினிக்கும், வைஜ‌யந்திமாலாவுக்கும் இடையில் நடந்த போட்டி நடனத்தில், வெற்றி, தோல்வி போன்ற முடிவுகளுக்கு வாய்ப்பின்றி, 'விளக்குகள்' அணைக்கப்பட்டு அரங்கம் இருளில் மூழ்கியது.

ஆனால் தமிழ்நாட்டின் சமூக அரங்கில் தொடங்கியுள்ள மேலே குறிப்பிட்ட போட்டியே, ஜெயலலிதாவின் மர்ம மரணம் வெளிப்படுத்திய 'சமூக வெளிச்சத்தில்' தொடங்கி இருப்பதால், 'உணர்ச்சிபூர்வ தமிழை வைத்து ஏமாற்றிய திராவிட இருளுக்கு' மீண்டும் வழியின்றி, போட்டியின் முடிவானது, எந்த குழப்பத்திற்கும் இடமின்றி வெட்ட வெளிச்சமாகும் காலமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

'திராவிட அரசியல் அமாவாசைகள் செயல்நுட்பத்திற்கு' 'பெரியார்' பெயரில் 'செயல்பட்ட' பாதுகாப்பு அரண்கள் எல்லாம் தகர்ந்து சாமான்ய மக்களின் ஏளனத்திற்கு உள்ளாகும் விளைவினை ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் ‘மர்ம‌ மரணமானது, தமிழ்நாட்டின் 'அரசியல் அமாவாசைகளுக்கு' முடிவு கட்டும், ‘சமூக அதிர்ச்சி வைத்தியமாகி’ வருகிறது.( http://tamilsdirection.blogspot.com/2017/04/1967.html )

படித்த காலத்தில், பணியாற்றிய காலத்தில், எந்த அநீதிகளையும் எதிர்த்து போராடாமல், திராவிட ஆட்சிகளில் அநியாயமாக உயிழந்தவர்களில், உடைமை இழந்தவர்களில், எவரும் தமது குடும்பத்தை சார்ந்தவரல்ல என்ற துணிச்சலில், 'அந்த மனித மிருக' தலைவர்களை துதிபாடி, வெளியில் 'சமூக நீதி காவலர்களாக' வலம் வர உதவிய, 'பெரியார்' பெயரில் 'செயல்பட்ட' பாதுகாப்பு அரண்கள் தகர்ந்து வருவது எல்லாம் தெரியாமல், வாழும் 'பெரியார் புத்திசாலிகள்'(?) மற்றும் 'முற்போக்குகளின்' பங்களிப்பில்;

‘என்கவுண்டரில்  சுட்டுக் கொல்லப்பட்ட 'ரவுடி வீரமணி' மூலம் 'விகேரியஸ் இன்பம்' (Vicarious Joy) பெறக்கூடிய வாய்ப்புக்கும், அது வழி வகுத்துள்ளது. (http://tamilsdirection.blogspot.com/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_28.html )

'பெரியார்' சிறையிலிருந்து ஈ.வெ.ராவை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும், 'பெரியாரை' சமூக  காயலான் கடைக்கு ஒதுக்க முயலும் 'பெரியார்' கட்சிகளுக்கும்,  இடையே தமிழ்நாட்டில் தொடங்கியுள்ள போட்டியில், கீழ்வரும் சிக்கலுடன் 'பெரியார்' கட்சிகள் பயணிக்க வேண்டிய நெருக்கடியும் அதிகரித்து வருகிறது.

‘காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு' உட்படுத்தப்பட்டு வளர்க்கப்படாத கொள்கைகள் எல்லாம், கால ஓட்டத்தில் சமூக போக்கில் சருகாகி உதிர்ந்து விடும்’;

என்பதை எச்சரித்தவர் ஈ.வே.ரா ஆவார். இன்று அந்த அபாயத்தில் அவரின் கொள்கைகள் சிக்கியதாலேயே, கீழ்வரும் நெருக்கடியை 'பெரியார்' கட்சிகள் சந்தித்துள்ளன.

ஒன்று ஈ.வெ.ராவின் ஆங்கில‌வழிக் கல்வி ஆதரவு போக்கினை நியாயப்படுத்தி, தமிழ்வழிக்கல்வியை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸையும், துக்ளக்கையும், 'பெரியார்' கட்சிகள் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், தாய்மொழிவழிக்கல்வி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான ஈ.வெ.ராவின் கொள்கை தவறு என்று, ஈ.வெ.ரா வழியிலேயே துணிச்சலுடன் அறிவித்து, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு பகிரங்கமாக பங்களிக்க வேண்டும்.

1996இல் 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music) என்ற தலைப்பில் நான் முனைவர் பட்டம் பெற்றது முதல், இன்று வரை நான் வெளிப்படுத்திவரும் ஆய்வு முடிவுகள் எல்லாம், சில விதி விலக்குகளை தவிர்த்து,

'பெரியார்' கட்சிகளைப் பொறுத்த மட்டில், 'செவிடர்கள் காதில் ஊதிய சங்கான' விளைவினையே சந்தித்து வந்துள்ளன‌.

எனவே தமிழ்வழிக்கல்வியை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸையும், துக்ளக்கையும், 'பெரியார்' கட்சிகள் எதிர்க்க முடியாமலும், 'தமிழ் காட்டுமிராண்டி மொழி, தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தமிழர்க்கு கேடானவை' என்ற 'பெரியாரின் நிலைப்பாடுகள்' எல்லாம் தவறு என்று, ஈ.வெ.ரா வழியிலேயே துணிச்சலுடன் அறிவிக்க முடியாமலும், 'தோற்கப் போவது' நிச்சயமாகி வருகிறது.

'பெரியார்' கட்சிகளாக இருந்தாலும், ஆர்.எஸ்.எஸாக இருந்தாலும், வேறு எந்த கட்சியினராக இருந்தாலும்;

இன்று தமிழ்நாட்டில் சாமான்ய மக்களும், மாணவர்களும், படித்த இளைஞர்களும் 'செயல்பூர்வமாக' பேசி வருபவர்களையே மதிக்கிறார்கள்.

'தமிழ்வழிக்கல்வியை' ஆதரித்து பேசுபவர்கள், எழுதுபவர்கள் எல்லாம், தமது குடும்பப்பிளைகளை அங்கிலவழியில் படிக்க வைத்திருந்தால், அந்த பேச்சுகளுக்கும் எழுத்துக்களுக்கும் மதிப்பிருக்காது.

தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில் சாதி, மத அடிப்படைகளில் பாரபட்சம் கடைபிடிப்பவர்களை செயல்பூர்வமாக எதிர்ப்பவர்களின் பேச்சுக்களும், எழுத்துக்களுமே அவர்களிடம் எடுபடும்.

தமது குடும்பத்தில், நண்பர்கள் வட்டத்தில் ஊழல்வாதிகளுடன் நெருக்கமாக இருந்து கொண்டு, ஊழலை எதிர்க்கும் பேச்சுகளுக்கும் எழுத்துக்களுக்கும் மதிப்பிருக்காது.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வியை மீட்பதும், சாதி, மத பாரபட்சங்களை எதிர்ப்பதும், இன்று ஆர்.எஸ்.எஸ் பின்பற்றும் கொள்கைகளாகும்.

தமிழ்நாட்டில் அதனை விளம்பர ஆராவாரமற்ற முறையில், காரியம் சாதிக்கும் நோக்கில், ஆர்.எஸ்ஸை செயல்சாத்தியமுள்ள வழிகளில் ஈடுபடுமாறு தூண்டி, ஆதரிக்கும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன்.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக்கல்வி மீட்சி, கல்வி மற்றும் அரசு/தனியார் நிறுவனங்களில் சாதி, மத அடிப்படைகளில் பாரபட்ச போக்குகளை எதிர்த்தல், போன்றவற்றில் காரியம் சாதிக்க கனிந்து வரும் ஒற்றுமையை, கடந்த கால அடிமைகளாக வெறுப்பு அரசியலில் பயணிப்பவர்கள் எல்லாம், கெடுக்க அனுமதிக்கக்கூடாது; என்ற திசையில் நான் பயணிக்கிறேன். (http://tamilsdirection.blogspot.com/2018/05/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

குழந்தைகள் பிற்காலத்தில் பெரிய அறிவாளிகளாகவும், விஞ்ஞானிகளாகவும், படைப்பாளர்களாகவும் வர வேண்டுமானால், குழந்தைப் பருவத்தில் புலன் உணர்வுகள் தொடர்புள்ள மூளை வளர்ச்சி(Cognitive Skills Development) நன்றாக நடைபெற வேண்டும். அதற்கு 10 வயது வரை அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருப்பது நல்லது என்று உணர்த்தியுள்ள உலக ஆய்வுகள் பற்றிய சான்றுகள் வெளிவந்துள்ளன. (http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html )

10 வயதிற்குப்பின் ஆங்கில வழியில் படிக்க வைத்தாலும் அந்த பலன்கள் உண்டு. மாறாக விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படிக்கும் குழந்தைகளுக்கு அந்த பலன்கள் கிடையாது.

..டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெரும்பாலோர் இந்தி தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி கற்று,  இந்தியிலேயே நுழைவுத் தேர்வு எழுதியவர்களா என்பது பற்றியும்,  தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், 8- ஆவதிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சியைத் தொடங்கினாலும், ..டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மிகக்குறைவு என்பது பற்றியும் தமிழ்நாட்டு பெற்றோர்கள் மத்தியில் விவாதத்தைத் தூண்ட வேண்டும்.

இந்த ஆய்வுகளும், விவாதங்களும்  தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் பார்வைக்குச் செல்லுமானால், முதலில் அந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளவை சரியா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வார்கள். உறுதிப்படுத்தியபின், தங்கள் குடும்பங்களில் உள்ள பிள்ளைகளைத் தாய்மொழி வழியில் படிக்க வைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவார்கள். பெற்றோர்கள் மத்தியில் அப்படிப்பட்ட ஆர்வம் வெளிப்பட்டுள்ளதை அறிந்தவுடன், சென்னையில் புகழ் பெற்ற 'பத்மா சேஷாத்திரி' போன்ற கல்விக் குழுமங்கள் நடத்தும் பள்ளிகளில் தமிழ்வழி, தெலுங்கு வழி, இந்தி வழி என்று 5ஆம் வகுப்பு வரை தாய்மொழிவழிக் கல்வியும், 6 ஆம் வகுப்பிலிருந்து ஆங்கில வழிக் கல்வியும் இருக்குமாறு வகுப்புகள் துவங்க வாய்ப்புள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள படித்த புத்திசாலிப் பெற்றோர்களாக உள்ள பிராமணர்களின் குடும்பப் பிள்ளைகள் அடிப்படைக் கல்வியைத் தமிழ்வழியில் படிக்க ஆரம்பித்தவுடன், அவர்கள் வழியில் பிராமணரல்லாத படித்த பெற்றோர்கள் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைப்பார்கள். அதன்பின் 'தமிழ், தமிழுணர்வு, பகுத்தறிவு, திராவிட'க் கட்சித் தலைவர்களும் முக்கிய நபர்களும் தங்கள் குடும்பப் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள். அந்த போக்கு கிராமங்களிலும் பரவ, தமிழ்நாட்டில் கடந்த பல வருடங்களில் படிக்க மாணவரின்றி மூடப்பட்ட/மூடப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் ஒவ்வொன்றாக செயல்பட ஆரம்பிக்கும். தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படும்.

இதில் வியப்பென்னவென்றால், மேற்கூறிய வாய்ப்பின் சாத்தியம் பற்றி, கல்லூரி மாணவர்கள் முதல் வயதான பிராமணரல்லாதோரிடமும், பெரியார் ஆதரவாளர்களிடமும் நான் கேட்ட போது, விதி விலக்கின்றி அனைவருமே, 'பிராமணர்கள் தங்கள் பிள்ளைகளைத் தமிழ்வழியில் படிக்க வைத்தால், மற்றவர்கள் அனைவரும் உடனே தங்கள் பிள்ளைகளையும் தமிழ்வழியில் படிக்க வைப்பார்கள்' என்று கருத்துத் தெரிவித்தார்கள்.’ (http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_19.html )

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளின் 'சாதனை'யாக; 
          
'வாழ்க்கைக்கு பணம் தேவை' என்பதை, 'பணமே வாழ்க்கை' என்ற இலட்சியமாக மாற்றிய, 'அந்த'(?) ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' வளரும் நாடாக தமிழ்நாடு மாறி வருகிறது. (http://tamilsdirection.blogspot.com/2017/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

திராவிட ஊழல் ஆக்சிஜனில் 'அதிவேகமாக' வளர்ந்த‌ ஆங்கிலவழிக்கல்வி வியாபாரமானது, அந்த ஓட்டப்பந்தயத்தில் குக்கிராமத்தில் வாழ்பவர்களையும் சிக்க வைக்கும் அளவுக்கு 'வீரியமாகியுள்ளது'.  

ஆங்கிலவழிக்கல்வியில் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் வேகத்திற்கு ஏற்ப, ' பெரியார் யார்?' என்று கேட்கும் மாணவர்களும் அதிகரித்து வருகிறார்கள். (http://tamilsdirection.blogspot.com/2015/02/12_17.html )

'வஞ்சிக்கோட்டை வாலிபன்' திரைப்படத்தில் பார்வையாளர்களுக்கு போட்டியின் முடிவை தெரிந்து கொள்ளும் ஆர்வம் இருந்தும், இருளே முடிவாகி ஏமாற்றமானது. ஆனால் ஆர்.எஸ்.எஸுக்கும், 'பெரியார் கட்சிகளுக்கும்' இடையில் நடக்கும் போட்டியின் முடிவை தெரிந்து கொள்வதில் கூட, மேலே குறிப்பிட்ட ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய தமிழர்களுக்கு ஆர்வம் இல்லாமல் போனால் வியப்பில்லை.

தமிழ்வழிக்கல்வி மீட்பும், கல்வி நிலையங்களிலும், அரசு/தனியார் துறைகளிலும் சாதி/மத அடிப்படையிலான பாரபட்சங்களை எதிர்த்தல், ஊழலை எதிர்த்து வெளிப்படைத்தன்மையையும்(Transparency), பொறுப்பேற்பையும்(Accountability) வளர்த்தல், நோக்கி தமிழ்நாடு பயணிக்கும் நேரம் நெருங்கி விட்டது; 'எந்த கொள்கையின் வாய்ச்சொல் வீரர்களும்'(?) தடுக்க முடியாத வகையில்.

No comments:

Post a Comment