Tuesday, June 6, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (3)


தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் சமூக செயல்நுட்ப போக்கில்;
ரஜினியை முதல்வராக்க போட்டி போடும், சசிகலாவும் ஸ்டாலினும்


‘The Role of Different Media in Shaping Public Opinion’ (‘பொதுமக்கள் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு’) என்ற தலைப்பில், 1980களில் திருச்சி   St.Joseph College- இல், 'இதழியல் மற்றும் பொது தகவல் பரிமாற்றம்' (Journalism & Mass Communication) முதுநிலை பட்டய படிப்பிற்கான ஆய்வில் (P.G Diploma Project),  நான் ஈடுபட்டேன்.

கடந்த சட்ட மன்ற தேர்தல் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் போக்கு தொடர்பான எனது பதிவுகளில் வெளிவந்த‌  கணிப்புகள் எல்லாம், அடுத்து அடுத்து சரியென்று நிரூபணமாக, மேற்குறிப்பிட்ட உழைப்பே முக்கிய காரணமாகும்; 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்கள் உள்ளிட்டு, திராவிடர்/திராவிட இயக்கம் பற்றிய எனது புரிதலின் பின்னணியில்.

ஜெயலலிதா மறைவிற்கும், தி.மு.க தலைவரின் உடல்நலக் குறைவிற்கும் பின், தமிழ்நாட்டு திராவிட அரசியலில் எதிரெதிர் குவியங்களாக வெளிப்பட்டுள்ளவர்கள் ஸ்டாலினும் சசிகலாவும் ஆவார்கள்.

பொதுமக்கள் கருத்துருவாக்க சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி மேற்கொள்ளப்படும் நிலைப்பாடுகள் மூலம், தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் போக்கில், இருவருமே கீழ்வரும் செயல்நுட்பத்தில் பலியாகி உள்ளார்கள், என்பது எனது கணிப்பு ஆகும்.

“ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu;https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு.” (http://tamilsdirection.blogspot.sg/2017/04/depoliticize12-social-energy.html(குறிப்பு கீழே: மோடி அரசின் 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' )

முதலில் மேலே குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, சசிகலா தமக்கு தாமே எவ்வாறு குழி பறித்துக் கொண்டார், என்பதை பார்ப்போம்.

“பொது மக்களிடம், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழும் வாழ்வுக்கும் இடையே 'சுருதி பேதம்' இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்து ஈட்டிய நல்ல பேரை, அதன் பின்னர் வெளிப்படும் 'சுருதி பேதம்' மூலம் எளிதில் இழந்து விடலாம்; மீண்டும் நல்ல பேர் எடுக்க வழியே இன்றி. இது தமிழ்நாட்டில் அரசியல் நீக்க போக்கின் காரணமாக, 'ஏக போக வலிமை' பெற்றுள்ள, பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) ஆகும்.

பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.” என்பதையும்;

“விஜயகாந்த் வழியில், அவர் சந்தித்திருப்பதை விட, இன்னும் மோசமான விளைவை சந்திக்கும் திசையில், சசிகலா பயணிக்க தொடங்கி விட்டாரா? “ என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம். (December 18, 2016 ; http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )

தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்பட்டு வரும் போக்குகளை 'கண்காணித்து', அந்த போக்குகளை தமது 'அரசியல் லாபங்களுக்கு' பயன்படும் வகையில் தி.மு.க வின் நிகழ்ச்சிகளை 'நெறிப்படுத்தி' வெற்றி கண்டு வந்த, தி.மு.க தலைவர், அந்த போக்கில் எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போனார். பின்னர் ஜெயலலிதாவிடம் இரண்டு முறை தி.மு.க தலைவர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில், 'சசிகலா குடும்ப ஊழல்' காரணமாக பொதுமக்களிடம் வெளிப்பட்ட வெறுப்பே காரணமானது. அதைக் கண்டுபிடித்து, வெற்றி பெற்று, முதல்வரான ஜெயலலிதா, அதே காரணத்தால், 'மர்மமான' முறையில் மரணமடைந்துள்ளார்.

பொதுமக்கள் பார்வையில் இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமானவை, கீழ்வரும் இரண்டே குவியங்கள்  ஆகும்.

1. இப்போதுள்ள அரசு நீடிக்குமா? கவிழுமா? இந்த நிச்சயமற்ற போக்கு எப்போது முடிவுக்கு வரும்?

2. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை, மற்றும் 'மர்மமான மரணம்' தொடர்பாக சி.பி.அய் விசாரணை வருமா?

தி.மு.கவைப் பொறுத்த மட்டில்;

1952 தேர்தலில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வரான அதே வழிமுறையில்;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பான சி.பி.ஐ விசாரணை கோரிக்கையையும், ஊசலாட்டத்திற்கு இடமில்லாத, நிலையான ஆட்சியையும் முன்னிறுத்தி;

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிக்களின் எம்.எல்.ஏக்களை இழுத்து. முதல்வராகும் வாய்ப்பினை ஸ்டாலின் தவற விட்டு, அரசியல் குழப்பமானது வலிமையாக வழி செய்து விட்டார், என்பது எனது கணிப்பாகும்.

தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் உள்ள, மேலே குறிப்பிட்ட குவியங்களைப் புறக்கணித்து;

'குடியரசு தலைவர் தேர்தல்' என்ற தேசிய குவியத்தில் சிக்கி:

முதல்வராகும் வாய்ப்பினை மேலும் பலகீனமாக்கும் வகையில், தி.மு.க தலைவரின் 'வைர விழா' நிகழ்ச்சியானது, தேசிய அளவில் செல்வாக்கிழந்து வரும் ராகுலுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், முடிந்துள்ளதா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது எழுப்பியுள்ளது.

“தற்போது நான் அறிந்தவரை தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இளைய தலை முறையினரால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் காங் கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.” - ராகுல் காந்தி ( ‘தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது: வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்- காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை’; http://tamil.thehindu.com/tamilnadu )

மேலே குறிப்பிட்ட போக்கில், ஸ்டாலினோடு போட்டி, போடும் வகையில்:

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், ஓ.பி.எஸ் முதல்வராகி, குறுகிய காலத்தில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வெற்றி', சென்னை வெள்ள நிவாரணம், என்று செயல்பட்டு, 'மக்கள் குறைகளை தீர்க்காத, மாவட்ட அளவிலான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து, மத்திய அரசுடனும் இணக்கமாகி, நிலையான ஆட்சி என்ற திசையில் பயணிக்க தொடங்கிய கட்டத்தில்;

அவரை அவமதித்து, முதல்வர் பதவியிலிருந்து அகற்றி, ஈ.பி.எஸ்ஸை முதல்வராக்கி, தினகரனை துணைப் பொது செயலாளராக்கி:

ஆர்.கே. நகர் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தில், சசிகலாவின் படத்தையே தவிர்த்து, தினகரன் பிரச்சாரம் செய்த அளவுக்கு, மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளான சசிகலா:

ஈ.பி.எஸ் ஆட்சியின் நிலையற்ற போக்கினை மேலும் கூட்டி, அ.தி.மு.க கட்சியையும், விஜயகாந்த் கட்சி அளவுக்கு சீரழிக்காமல், ஓய மாட்டாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது, எழுப்பியுள்ளது.

“அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார்.
சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.” (http://www.dinamalar.com/news_detail.asp?id=1784472 )

சசிகலா குடும்ப அரசியல் ஆதிக்கமானது, கீழே குறிப்பிட்டுள்ளவாறு, சட்டத்திற்கு அப்பாற்பட்ட சசிகலாவின் வலிமையின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல் பயணித்து, மரணவாயிலை நெருங்கியுள்ளது.

உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரை எல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளாக;  (http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html   )

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கட்டுப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏக்களை, மாநில முதல்வர் விரும்பினாலும் சந்திக்க முடியாது, என்பதை 'கூவத்தூர்' மூலம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தி தமிழ்நாட்டில் சாத்தியமே என்பதை நிரூபித்தார் சசிகலா; தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான‌தைப் பற்றிய கவலையின்றி.

தமிழக பா.ஜ.கவானது, மேலே குறிப்பிட்ட இரண்டு குவியங்களையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் வேர் பிடிக்க வாய்ப்பில்லை, என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

இந்தியாவில் சாதியை ஒழித்து, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, இந்தியாவில் காலனி ஆட்சியின் எதிர்காலம் பற்றிய, காரல்மார்க்சின் கணிப்பு பொய்த்துப்போனது, மற்ற கணிப்புகளை போலவே. (“Modern industry, resulting from the railway system, will dissolve the hereditary divisions of labour, upon which rest the Indian castes, those decisive impediments to Indian progress and Indian power.” (On Colonialism, Moscow edition 1974, p. 85) & “whatever may have been the crimes of England she was the unconscious tool of history in bringing about that revolution.” ; Karl Marx in the New-York Herald Tribune 1853- The British Rule in India ; https://www.marxists.org/archive/marx/works/1853/06/25.htmஅந்த கணிப்புக்கு மாறாக, காலனி ஆட்சியை விட மிக மோசமான ஆட்சியானது, தமிழ்நாட்டில் பிற்காலத்தில் அரங்கேறுவதற்கான விதையா, காலனிய சூழ்ச்சியில் 'பெரியார்' ஈ.வெ.ராவை சிக்க வைத்து,  1944இல் திராவிடர் கழகம் உருவானது. அதன் தொடர்ச்சியாக, 1967இல் முளை விட்ட ஊழல் போக்கானது, 1991இல் இன்னும் மோசமாகி, 'ஆம்னஸ்டிக் இன்டர்நேஷ்னல்' (amnesty international) பாராட்டும் 'மனித உரிமை' காவலர்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் பலரையும், 'மெளன கூட்டாளிகளாக்கி', தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடும் போக்கில், காலனி ஆட்சியை விட மோசமான போக்கில், அடுத்த அடுத்த ஆட்சிகளிலும், தமிழ்நாடு பயணிக்க காரணமான, சசிகலாவும் கீழ்வரும் வகையில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக (unconscious tool of history) செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.

அது தொடர்பான, கீழ்வரும் எச்சரிக்கையையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

“அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;

ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2017/05/blog-post_31.htmlசில விதி விலக்குகளுடன், 'நேர்மையான' சுயசம்பாத்திய முறையில் செல்வமோ, சமூகத்தில் செல்வாக்கோ, பெற இயலாதவர்களுக்கும், 'தேர்தல் அரசியல் சூதாட்டத்தில்' பங்கு பெற்று 'பலன்' பெறும் திறமைகள் இல்லாதவர்களுக்கும்;

'குறுக்கு வழியாக',  'பெரியார் வழியில்' பயணிக்கும் சமூக கிருமிகளும், அதில் அடக்கம். 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'அறிவுபூர்வ மயக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக' பயணித்து வருவதே, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“ 'பெரியார்' கொள்கையாளர்கள் உணர்ச்சிபூர்வ போதையில் ஒரு வகையிலான 'அறிவுபூர்வ மயக்கத்தில்' பயணித்து வருவதை, பெங்களூர் குணாவின் நூல்கள் மூலம் நான், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்தபோதே, கண்டுபிடித்தேன்.

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்.

நான் 'திருச்சி பெரியார் மையம்' மூலம், குணாவின், 'ஈ.வெ.ரா எதிர்ப்பை', அறிவுபூர்வமாக எதிர்த்த போதும், மேற்குறிப்பிட்ட 'மயக்கத்தில்' பயணித்தவர்களில், யார்? யார்? தெளிவு பெற்றார்கள்? அதே மயக்கத்தில் தொடர்ந்தார்கள்? என்பது எனக்கு தெரியாது..” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html'அந்த மயக்கத்தில்', 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர் பயணித்து வந்ததை பற்றிய 'அறிவு' கொடுத்த துணிச்சலும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்ததற்கும், ஒரு காரணமா? என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது.

'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்'  தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்யும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, சசிகலா வெளிப்பட்டுள்ளதை நான் கண்டுபிடித்து;

அந்த போக்கிற்கு துணை புரியும், 'வரலாற்றின் சுயநினைவுள்ள‌ கருவி'யாக (conscious tool of history), நான் செயல்படும் ஆய்வில், எனது இசைத் தகவல் தொழில்நுட்ப (Music Information Technology) ஆய்வுகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி ஈடுபட;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்து, 'சசிகலா குடும்ப ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற, தமிழ்நாட்டில் ‘பொது வாழ்வு வியாபாரத்திற்கு’ துணை போகும் 'குருட்டு பகுத்தறிவு பார்வை' நோயில் சிக்கி, உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து வரும் நிகழ்கால சாட்சிகளான‌, 'பெரியார் சமூக கிருமிகளும்', அக்கிருமிகளின் எடுபிடிகளும் காரணமாகி;

அவர்களும் சசிகலா வழியில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'களாகி விட்டார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html1967இல் ஊழல் அறிமுகமாகியிருந்தாலும், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'வீரியத்துடன்' சீரழித்த, 'ஊழல் சுனாமி' 1991இல் உருவாகாமல் இருந்திருந்தால், இது போன்ற நபர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். அவ்வாறு 'ஊழல் சுனாமி' மூலம் இவர்கள் உருவாக, இவர்கள் மூலம் 'அந்த சுனாமியின்' விதையானது, காலனி சூழ்ச்சியில் 1944இல் உருவானது, என்பதை நான் கண்டுபிடித்து, 'மீட்சிக்கான அறிவுபூர்வ போரை' தொடங்க வேண்டும், என்பது இயற்கையின் விதி போல நடந்து, எனக்கு வியப்பை அளித்துள்ளது.


குறிப்பு: 'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு  லாபம்? ; http://tamilsdirection.blogspot.sg/2015/03/12_6.html & https://swarajyamag.com/politics/cow-politics-if-bjp-wants-to-lose-2019-this-is-the-right-way-to-go-about-it

Sunday, June 4, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (2)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பதற்காக;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களில் எவராவது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது, தமிழ்நாட்டிலேயே அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றி கவலைப்பட்டு, தீர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களா?

'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;

'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' இதழில், ' ரஜினியின் 'வருகை'யும், தமிழக அரசியலும்' என்ற தலைப்பிலான தலையங்கம், எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் 'யார் தமிழர்கள்?' என்ற உட்தலைப்பில் வெளிவந்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

அதில்  " '40 ஆண்டுகளாக நான் தமிழை காட்டுமிராண்டி பாஷை' என்றும், 'காட்டுமிராண்டிகள் தான் அதைப் பேசுகிறர்கள்'என்றும் கூறி வருகிறேன்." என்பது உள்ளிட்ட 'பெரியார்' ஈ.வெ.ராவின் மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன.

மேலே குறிப்பிட்ட போக்கில், 'பெரியார்' ஈ.வெ.ராவும், அவர் வழியில் எண்ணற்ற தொண்டர்களும் பயணித்தன் விளைவுகளை, தமிழ்நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது: சாண் ஏறி முழம் சறுக்கின கதையாக.

சில வருடங்களுக்கு முன், கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி, நான் விரும்பிய இசைத் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Music Information Technology) ஆய்வுகள் மேற்கொள்வதற்காக‌, சாஸ்திரா பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேரும் முன், 'நிர்வாக' மனப் போக்கிலிருந்து,  'ஆய்வுக்கான' மனப்போக்கிற்கு மாறும் நோக்கில், மதுரைக்கு அருகே இருந்த சிவானந்ததா ஆசிரமத்தில் சில நாட்கள் யோகா பயிற்சியில் இருந்தேன். (http://www.path2yoga.net/2016/01/the-sivananda-ashram-in-madurai-most-visit-ashram-india.html ) பயிற்சி முடிந்து, பேருந்தில் என்னை ஏற்றிவிட, அங்கு பணிபுரிந்த ஒரு கிராமப்புற பெண் (+2 முடித்தவர்) துணையாக வந்தார்.

அவரிடம் 'உன் வாழ்வின் இலட்சியம் என்ன?' என்று நான் கேட்டேன். 'ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் வேண்டும்' என்றார்.

இன்று தமிழ்நாட்டு குக்கிராமங்களில் கூட, 'விளையாட்டுப் பள்ளிகள்' (Play Schools) புற்றீசல் போல் அதிகரிக்க, 'அம்மா, அப்பா' மறைந்து, 'மம்மி, டாடி' அரங்கேறி ‘வருகிறார்கள்’(?).

இன்று தமிழ்நாடானது, 'பெரியார்' ஈ.வெ.ரா அறிவுறுத்திய கீழ்வரும் போக்கில், 'அதிவேகமாக' பயணிக்கிறது.

“"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

தாய்மொழிவழிக்கல்வி மூலம் அடிப்படைக்கல்வி பயிலும் குழந்தைகள் எல்லாம்,  புலனறி மூளை வளர்ச்சி பெற்று (Cognitive Skills Development) , ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் எளிதில் புலமை அடைந்து, சாதனையாளர்களாக வளர்வார்கள், என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

மேலே குறிப்பிட்ட ஆய்வுகளை தேடி, கண்டுபிடித்து படிக்கும் அளவுக்கு, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை, என்றாலும், அவருக்கு துணையாக இருந்த பட்டதாரிகளான அண்ணா, குத்தூசி குருசாமி, டார்பிடோ ஜனார்த்தனம் உள்ளிட்ட இன்னும் பலர் ஏன் அதைச் செய்யவில்லை? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், 1967 ஆட்சி மாற்றத்தில் ஊழல் அரங்கேறியதற்கும்;

அதன் தொடர்ச்சியாக 1970களின் பிற்பகுதியில், 'கல்வி வியாபாரம்' வளர்ந்த வேகத்தில்,  தமிழ்வழிக்கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சுனாமியாக' வளர்ந்த போக்கிற்கும்;

பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான‌ ஒழுக்க மதிப்பீடுகள் சீரழிந்ததற்கும்:

அவற்றின் தொகுவிளைவாக தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடியதற்கும்;

இடையிலான தொடர்புகள் எல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

‘ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது………… ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்காரணமாக, பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகள் முக்கியத்துவம் இழந்த சூழலில், வளர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆவது கடந்த 40 வருடங்களில் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும். ‘ (http://tamilsdirection.blogspot.sg/2015_01_01_archive.html )

மேலே குறிப்பிட்ட 'கறுப்பு ஆடுகள்' சமூக செயல்நுட்பத்தில், 'பெரியார்' முகமூடி எவ்வாறு 'அதிவேக பணக்காரராக' பயன்பட்டது? என்பதை 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் மூலம் கண்டுபிடித்தேன்.( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) அதன் தொடர்ச்சியான கண்டுபிடிப்பே, தமிழர்களை பாதித்துள்ள,‌ மேலே குறிப்பிட்ட 'இயல்முறி  வாழ்க்கை நோய்' ஆகும். அந்த 'இயல்முறி  வாழ்க்கை நோய்' கவசமாக,  'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதா? என்ற ஆய்விற்கு, 'பெரியார்' ஈ.வெ.ராவின் கீழ்வரும் எச்சரிக்கை துணை புரியும்.

ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி? (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

எனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக, 'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்று முன்வைக்கப்பட்டுள்ள வாதமானது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றிய அறிவுபூர்வ விவாதத்தை தூண்டி, தீர்வு நடவடிக்கைகளை நோக்கி, திரும்பினால்;

அது தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாகவே முடியும்.

Wednesday, May 31, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (1)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டபோது, இந்த வாதத்தை, அவர்களில் யார்? யார்? முன் வைத்தார்கள்? முன் வைக்காமல், அந்த ஆட்சியில், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் பலன் பெற்றவர்கள் யார்? யார்? என்று அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும்.

ஜெயலலிதாவிற்கு முன், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதும், மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள், அவரவர் மனசாட்சிக்கு தெரியும்.

எம்.ஜி.ஆருக்கு முன் முதல்வராக இருந்த, 'கலைஞர்' மு.கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா என்று முன் வைத்த வாதங்களையும், எதிர்வாதஙகளையும் இன்று வரை, அறிவுபூர்வ விவாதத்திற்கு, மேலே குறிப்பிட்ட நபர்களில் யார்? யார்? உட்படுத்தினார்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு இடமில்லாமல், 1967க்கு முன் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடத்திய முதல்வர்கள் பக்தவச்சலமும், காமராஜரும் ஆவர்.

இந்திய விடுதலைக்குப் பின், நேருவின் ஆட்சியே ஊழலில் சிக்கி பயணித்த காலத்தில், தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராகி ஊழலற்ற ஆட்சி நடத்திய போக்கானது, இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில்  நீதிக்கட்சி முதல்வர்கள் ஊழலற்ற ஆட்சி வழங்கிய போக்கின் தொடர்ச்சியா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“நேரு குடும்ப சுயநல அரசியல் ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத் தொடங்கியுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Feroze The Forgotten Gandhi’ ( by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துட‌ன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;

இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள்; தமிழைத் தாய்மொழியாக கொள்ளாதவர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால், அவர்களில் பாரபட்சமின்றி, ஊழலற்ற ஆட்சி நடத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். ஊழல் ஆட்சி நடத்தியவர்கள் எல்லாம், கண்டிக்கத்தக்கவர்களே; தமிழைத் தாய்மொழியாக கொண்டிருந்தாலும்.

உலக அளவிலும் அதே போக்கு தான் உள்ளது. இந்திய வம்சாவழி லியோவரத்கர் அயர்லாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; (http://www.newindianexpress.com/world/2017/jun/02/indian-origin-gay-minister-wins-leadership-race-set-to-be-irish-pm-1612230.html ) நல்லாட்சி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில்.

1967இல் முதல்வரான அண்ணா, மனமுடைந்து மரணம் அடையாமல், துணிச்சலுடன் கட்சியிலும் ஆட்சியிலும் முளைவிடத் தொடங்கிய களைகளை அகற்றியிருந்தால், அடுத்து 'கலைஞர்' மு.கருணாநிதி முதல்வராகி இருப்பாரா? (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html  )
முதல்வர் கருணாநிதியும் நேரு பாணி குடும்ப ஊழல் அரசியலில் ஈடுபடாமல், 'அந்த' களைகளை அகற்றியிருந்தால், பின்னர் எம்.ஜி.ஆரும், அதன் பின்னர் ஜெயலலிதாவும் முதல்வர்கள் ஆகி இருப்பார்களா?

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியை புறக்கணித்து;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களின் மனசாட்சிக்கு கீழ்வரும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; 

அந்த வாதமானது, சுயநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? அல்லது தமிழ்நாடு சீரழிவதைத் தடுக்கும், பொதுநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? என்ற தெளிவு பெறும் நோக்கில்.

‘‘இன்று 'ஜல்லிக்கட்டு ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;

1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா? பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகளின்'(?) எண்ணிக்கையும் வளர்ந்திருக்குமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், கோவாவில் ஜெயலலிதாவுடன், 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வராக, அது தகுதி குறைவாக, மக்களால் கருதப்படவில்லை. மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டவர்களால் சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், குடும்ப ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வரவேற்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே ரஜினி உள்ளிட்டு எவரும் அரசியல் பயணம் மேற்கொள்வதை தடுப்பது சரியாகாது. அந்த அரசியல் பயணத்தில் மக்கள் விரும்பினால், அந்த நபர் முதல்வர் ஆவதையும் எவரும் தடுக்க முடியாது. அப்படி முதல்வராகி ஊழலற்ற ஆட்சியை அவர்கள் வழங்குவார்களா? அல்லது தமது வெற்றி வாய்ப்பானது ஈர்க்கும் 'ஊழல் பெருச்சாளிகளை' எல்லாம், தமது கட்சியில் சேர்த்து, மீண்டும் 1991 ஆட்சியானது அரங்கேறுமா? என்பது தான், இன்றுள்ள‌ முக்கியமான கேள்விகளாகும்.

அத்தகைய ஆபத்தானது ரஜினியைத் தீண்டக்கூடும், என்ற அபாய எச்சரிக்கையானது கீழ்வரும் தகவலில் வெளிப்பட்டுள்ளது.

“ரஜினியின் நிலைப்பாடு பாஜக பக்கம் போவதாக இருப்பதை விட புதிய கட்சி ஆரம்பிப்பது. பாஜவுக்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து கூட்டணி ஏற்படுத்துவது. ஆந்திராவில் ராமாராவ் ஏற்படுத்தியது போல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்தது போல் தானும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக கூட இருக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அவர் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு அதிமுகவின் முக்கிய தலைகள் முழுவதும் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வளவு ஏன் திமுகவில் உள்ள ஒரு பெரிய அணியே கூட அவர் பின்னால் போகக்கூடும். இவையே இப்படி என்றால் தேமுதிக நிர்வாகிகளின் நிலை சொல்லவா வேண்டும்?’ “ (‘தமிழக அரசியல் களம்: ரஜினி தர்பாரில் நடக்கும் மாஸ்டர் பிளான்!’ ; http://tamil.thehindu.com/tamilnadu/)

அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;
ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ள, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பாக, "லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே ஏன் என்று தெரியுமா, தமிழர்களில் பலருக்கே தெரியாது. ஏன் அந்த சமயத்தில் அழலாமா வேண்டாமா என்று கூட யாருக்கும் தெரியவில்லை." என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-slams-entry-rajini-into-tn-politics-indirectly/articlecontent-pf242245-284356.html ) முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பான,  இக்கருத்து சரியா? என்ற ஆய்விற்கு உதவும் தகவல்கள் வருமாறு:
“முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   ), தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.
மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.” (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஏரிகள், குளங்கள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்களை, சூறையாடி வரும் ஊழல் கொள்ளைக்காரர்களை எதிர்க்காமலும், அந்த கொள்ளையர்களுடன் நேசமாகி பலன் பெற்றுக் கொண்டும், இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளும், 'உணர்ச்சிபூர்வ' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் இருப்பது போல, இலங்கை உள்ளிட்டு உலகில் எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை. அத்தகையோரில் யார்? யார்? சுப்பிரமணியசாமியின் 'பொர்க்கி தமிழர்' (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html) தொடர்பான கருத்தை கண்டு கொள்ளவில்லை? ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பவை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_26.html )
எவ்வளவு சமூகக் கேடான வழியிலும் செல்வம், செல்வாக்கு போன்றவற்றை, எவரும் பெற்று விட்டால், தமது எழுத்து, பேச்சு, கவிதை, 'தரகு'(?) திறமைகள் மூலம், அந்த 'சமூக கிருமிகளை', 'தமிழின், தமிழ் உணர்வின் புரவலர்களாக' பாராட்டி, பிழைக்கும் கும்பல், தமிழ்நாட்டில் ஊடக பின்பலத்துடன் வளர்ந்துள்ளனர்; அதன் மூலம் சாதாரண மக்களிடம் தமது (மற்றும் தாம் ஆதரிக்கும் பிரச்சினைகளில்) செல்வாக்கு வீழ்வது பற்றிய கவலையின்றி.

யாராயிருந்தாலும், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தான் முக்கிய கவ‌னம் செலுத்த வேண்டும்; உண்மையில் சுயலாப நோக்கமின்றி தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிவிலிருந்து மீட்க வேண்டுமானால். தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு மக்கள் காரணமல்ல; மக்களை வழி நடத்திய கட்சிகளும், தலைவர்களுமே காரணங்கள் ஆவார்கள். அந்த காரணங்களை 'அகற்றாமல்', மீட்சி சாத்தியமா?
அரசியலில் நுழைந்தவர்களும்/நுழைபவர்களும் யாராயிருந்தாலும், ஊழலுக்கும், சீரழிவிற்கும் துணை போனவர்களையும்/ போகின்றவர்களையும், எதிர்த்து, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அவர்களாகவே அரசியலில் இருந்து ஒதுங்கும் சூழலை உருவாக்குவதே புத்திசாலித்தனமாகும்.
அரசியலில் யார் வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்று தீர்மானிக்கும் உரிமை தமக்கு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதை வெளிப்படுத்துபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தோல்வி கண்டவர்கள்/காண்பவர்கள்/ தன்னம்பிக்கை அற்றவர்கள் என்ற ஏதாவது ஒன்றில், இடம் பெற்று விடுவார்கள்; அடுத்து மக்கள் மன்றத்தில் நடக்க இருக்கும் தேர்தல்கள் மூலம்.
குறிப்பு:
'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;


'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

Monday, May 15, 2017

வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வரும் காலம் இது;
தமிழின் மீட்சிக்கு ஆர்.எஸ்.எஸ்ஸே கை கொடுக்கும்


அண்மையில் நான் படித்த கீழ்வரும் கட்டுரையானது எனது கவனத்தை ஈர்த்தது. 

தமிழ்நாட்டின் அடுத்த கட்ட சமூக அரசியல் போக்குகள் பற்றிய கணிப்பு, தொடர்பான ஆய்விற்கு, அது மிகவும் துணை புரியும் என்பதே, அதற்கு காரணமாகும்.

தமிழ்நாட்டில் திராவிட/முற்போக்கு கூடாரங்களில் முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மாறாக, கி.பி 1820 வரை, உலகின் மீது செல்வாக்கு செலுத்திய பகுதிகளாக இந்தியாவும், சீனாவும் இருந்தன. அதன்பின் இயற்கை போக்கிற்கு எதிராக, வரலாற்றுப் பிறழ்வாக (major historical aberration), கடந்த சுமார் 200 வருடங்களாக, ஐரோப்பாவும், அமெரிக்காவும் உலகின் மீது செல்வாக்கு செலுத்தின. வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வருவது போலவே, அந்த செல்வாக்கும் முடியும் கட்டத்தை எட்டி விட்டது. எனவே நிச்சயமாக 21ஆம் நூற்றாண்டு என்பது ஆசியாவின் செல்வாக்கு நூற்றாண்டாகவே அமையும்.

( “As I have now documented in several books, we are now reaching the end of a 200-year cycle of Western domination of world history. Economic historian Angus Maddison has told us that the two largest economies of the world from the year one to year 1820 were China and India. It was only in the past 200 years that Europe and America took off. But against the backdrop of the past 2,000 years, the past 200 years have been a major historical aberration. All aberrations come to a natural end. Hence, the resurgence of Asia is a perfectly natural phenomenon. The 21st century will undoubtedly be the Asian century.”
-          ‘My new love: South-east Asia’ by Kishore Mahbubani,  Dean of the Lee Kuan Yew School of Public Policy at the National University of Singapore

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பிறழ்வு (major historical aberration) போக்கில், காலனிய சூழ்ச்சியில், தமிழ்நாட்டில் 'இனம்', 'சாதி' போன்ற தமிழ்ச் சொற்களின் பொருளைத் திரித்து, காங்கிரசில் உருவாகியிருந்த சீரழிவு கூறுகளை அகவயப்படுத்தி, 1944இல் வரலாற்றுப் பிறழ்வாக, திராவிடர் கழகம் உருவானது, என்பது தொடர்பான எனது ஆய்வுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.htmlhttp://tamilsdirection.blogspot.sg/2017/02/depoliticize-10.html )

“ 'இனம்', 'சாதி' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில், ஈ.வெ.ரா அவர்கள் சிக்கி;

1919 முதல் 1944 வரை அவரின் இணையற்ற தியாகத்தால் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம்;

'திராவிடர், திராவிட' சிறை உருவாக்கத்திற்கு பயன்பட்டு, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழித்து வருவதை கண்டு பிடித்தேன். ………… தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா அவர்கள், 'இனம்' தொடர்பான மேற்கத்திய சூழ்ச்சியில் சிக்கி, பழந்தமிழ் இலக்கியங்களின் அறிவுச் செல்வத்தை புறக்கணித்து;

மனிதருக்கு பணிந்து சேவகம் செய்ய வேண்டிய புலன்களை எல்லாம், 'மேற்கத்திய முற்போக்கு பகுத்தறிவு' பார்வையில், 'விடுதலை' செய்ய முயன்றதன் விளைவாகவே;(http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html  & http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html  & http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_10.html  )

இன்று தமிழ்நாட்டில் பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்' வாழும் தமிழர்கள் அதிகரித்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.“ (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html) தமிழ்நாட்டில் 'உணர்ச்சிபூர்வ' கவிதை, பேச்சு, எழுத்து, 'வீரர்களான'(?) 'அந்த அமாவாசைகளை', 'நிர்வாணமாக' அடையாளம் காட்டி, அனைத்து கட்சிகளிலும் உள்ள அமாவாசைகளின் பிழைப்பிற்கும் நெருக்கடியை ஏற்படுத்தி, ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டது. (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html'பெரியார்' ஈவெராவின் 'தொண்டில்', தாய்மொழி தமிழும், இலக்கியங்களும், பாரம்பரியமும், பண்பாடும், கேலிக்கும் கண்டனத்திற்கும் உள்ளான சமூக சூழலில், சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று,(அந்த சமூக சாபமானது-social curse- தமது குடும்பத்தை எந்த அளவுக்கு பாதிக்கும்? சிபிஐ, வருமானவரி சோதனை நமக்கு வருமா? வராமல் தடுக்க வழியுண்டா? என்ற பயத்தில், வாழ்ந்தே சாவது புத்திசாலித்தனமா? என்ற புரிதலின்றி) அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015_01_01_archive.htmlஅவ்வாறு தமிழ்நாடு சிக்கி சீரழிய, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்ததே முக்கிய காரணம், என்பது எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டை ஊழல் கோரப்பசியில் சூறையாடியவர்களுக்கு, 'வாலாக/எடுபிடியாக' இருந்து கொண்டு, 'பகுத்தறிவு, தமிழ் உணர்வு, ஊழல் எதிர்ப்பு' என்று வலம் வரும் 'அசாத்திய துணிச்சலை', 'பெரியார்' ஈவெராவின் 'குருட்டு பகுத்தறிவு' வழங்கியதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்களை எல்லாம் தமிழர்க்கு கேடாக கருதி, 1944க்கு பின், 'திராவிடர்' பார்வையில் பயணித்த 'பெரியார்' ஈ.வெராவின் இயக்கம், ஒரு வரலாற்றுப் பிறழ்வு ஆகும். தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள், பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை எல்லாம் 'தாழ்வாக' கருதி, மேற்கத்திய வழிபாட்டுப் போக்கில், 'குருட்டு பகுத்தறிவு நோயில்', தமிழர்களில் கணிசமானவர்களை சிக்க வைத்ததே, அந்த வரலாற்றுப் பிறழ்வின் விளைவாகும். காலனிய மனநோயாளிகளிடமிருந்து வேறுபடுத்தி காட்டும், திராவிட மனநோயாளிகளின் 'தனித்துவமான' (Unique), 'குருட்டு பகுத்தறிவு நோயின்' வளர்ச்சிப் போக்கும், பொதுவாழ்வு வியாபாரிகளின் வளர்ச்சியும், தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சியும்,  ஒன்றுக்கொன்று எந்த அளவுக்கு தொடர்பு கொண்டு, தமிழ்நாட்டை சீரழித்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html'திராவிட' ஆளுங்கட்சித் தலைவர்களின் ஊழல்களையும், ஒழுக்கக்கேடுகளையும், தமக்கு நெருக்கமான சமூக வட்டத்தில் கேலி பேசி மகிழ்ந்து கொண்டே, அத்தலைவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் 'தொண்டு'(?) செய்து, பலன்கள் அனுபவித்த/அனுபவிக்கும் 'அறிவுஜீவி விபச்சாரக் கூட்டம்', இன்றுவரை அம்பலமாகாமல் பயணிப்பதே, அந்த சீரழிவின் அடித்தளமான சமூக செயல்நுட்பமாகும்; அடுத்த தலைமுறையையும் சிரழிக்கும் ஆபத்துடன்.( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை, சமூக நீதி'  உள்ளிட்ட இன்னும் பல அடிப்படைகளில், 'அந்த அறிவுஜீவிகளின்' பேச்சில், எழுத்தில் 'மயங்கி', நாம் அவர்களிடம் நெருங்கி பழகினால், நமக்கு தெரியாமலேயே, நம்மையும், ('திருச்சி பெரியார் மையம்' வெளியிடுகளைப் போலவே,) அவர்களின் அந்த‌ 'அறிவுஜீவி விபச்சார மூலதனமாக்கி' விடுவார்கள், என்பதும் எனது அனுபவமாகும். 'திராவிட' தலைவர்களுக்கு, ஏதாவது ஒரு வகையில் 'தொண்டு'(?) செய்து, பலன்கள் அனுபவித்த/அனுபவிக்கும் 'அறிவுஜீவி விபச்சாரக் கூட்டம்', அந்த தலைவர்களின் மறைவுக்குப் பின், நேரு உதவியாளர் மத்தாய் பாணியில், அவர்களின் ஊழல்களையும், ஒழுக்கக்கேடுகளையும் நூலாக்கி, காசாக்கினாலும் வியப்பில்லை.

‘நமது நல்ல எண்ணங்கள், மற்றும் தீய எண்ணங்கள் முரண்பாடுகளின் தொகுவிளைவிலான‌, வினையின், நல்ல/கெட்ட பலன்களை, நமது வாழ்வு முடிவதற்குள், 'அறுவடை' செய்வது ஒரு பகுதி; 'எஞ்சியவை', நமது 'ஜீன்கள்' (gene: a unit of heredity which is transferred from a parent to offspring and is held to determine some characteristic of the offspring.) மூலம் அடுத்த தலைமுறைகளில், 'அறுவடை'யாவதிலிருந்தும் (ஊழ் வினை?) தப்ப முடியாது. அந்த 'அறுவடை'களை 'பார்க்கத் தெரியாமல்', 'நல்லதுக்கு காலமில்லை' என்று புலம்புபவர்கள் எல்லாம், சமூக நடப்புகளை, 'சரியாக' பார்க்கத் தெரியாத, 'சமூகப் பார்வை குருடர்கள்' (திருக்குறள்   573) ஆவர்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.htmlமேலே குறிப்பிட்டவாறு, நம்மிடையே 'நாய்களாகவும்', 'கழுதைகளாகவும்' வாழ்பவர்களை அடையாளம் காணாமல், 'சமூக கிருமிகள்' வளரும் வகையில்,  'சமூகப் பார்வை குருடர்கள்' போல் நாம் வாழ்ந்து, சந்தித்த/சந்திக்கும் துய‌ரங்களுக்கும், நாமே பொறுப்பாவோம்; 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' - புறநானூறு. அந்த பொறுப்புணர்வானது, சமூக கிருமிகளை ஒழிக்கும் முயற்சியில் நம்மை தூண்டி, நாம் சந்தித்த துயரங்களும், சமூகத்திற்கு பலன் தர உதவும், என்பதும் எனது அனுபவமாகும்.

மனிதர்களின் சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களாக இருப்பவை எல்லாம், அவர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, தாய் மண் போன்றவற்றுடன் தொடர்புடயவை ஆகும். வரலாற்றின் போக்குகளில், அவைகள் மாற்றங்களுக்கு உள்ளாவதும், இயற்கையின் போக்கே ஆகும். அந்த மாற்றங்களை சரியாக கணித்து, 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' என்ற வகையில்,  சமூகத்தின் சான்றோர்கள் வழி நடத்தும் போது, அந்த சமூகமானது வளர்ச்சிப் பாதையில் பயணிக்கும். மாறாக வரலாற்றுப் பிறழ்வு திசையில் பயணிக்கும் சமூகமானது, வீழ்ச்சியை நோக்கி பயணிப்பதும், வீழ்ச்சிக்கான சமூக ஆற்றல்கள் செலவான பின், மீட்சியை நோக்கி பயணிப்பதும், இயற்கையின் விதியாகும்.

“'வந்தது வளர்த்து வருவது ஒற்றி'(சிலப்பதிகாரம்:அரங்;65) இசைக்கு மட்டுமின்றி, இலக்கணத்திற்கும் பொருந்துவதாகும். தமிழில் தொல்காப்பியம் தொடங்கி, இன்றுவரை வெளிவந்துள்ள இலக்கண நூல்களை கணக்கில் கொண்டு, உலகில் இலக்கணம் தொடர்பான ஆய்வுகளையும் கருத்தில் கொண்டு, நிகழ்கால சமூக மாற்றங்களுக்கேற்ற வகையில் இலக்கணத்தை ‘வளர்த்து, வரவிருக்கும் மாற்றங்களோடு ‘ஒற்றிபயணிப்பதே சரியான வளர்ச்சி ஆகும். அதில் தவறினால், அந்த 'தொடர்பு' முறிந்து, மேலே குறிப்பிட்ட 'திரிந்த' திசையில், புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, ‘இளையதமிழர்கள் தமிங்கிலீசர்களாக‌ பயணிப்பதை குறை சொல்ல முடியாது; அவர்கள் மீது கோபப்படுவதிலும் அர்த்தமில்லை. அந்த 'தொடர்பானது', இலக்கணத்தில் திரிந்து வருவதற்கும், 1944க்கு பின், 'திராவிடர்' பார்வையில் 'திரிந்து', 'பெரியார்' ஈ.வெ.ரா பயணித்தற்கும், இடையிலான‌  தொடர்பினைப் பற்றி, 'முனைவர்' பட்ட ஆய்வில் ஈடுபடுபவர்களுக்கு, என்னால் இயன்ற உதவி புரிய இயலும். அந்த 'திரிதல்' சமூக செயல்நுட்பத்தின், 1991-க்கு பிந்திய தொடர்ச்சியே, 'பெரியார் சமூக கிருமிகளின்' வளர்ச்சியாகும், என்பதை 'திருச்சி பெரியார் மையம்' அனுபவ‌ங்கள் மூலம் நான் கண்டுபிடித்தேன்.

எல்லை மீறி போவதற்குள், மீட்பு முயற்சிகளை மேற்கொள்ளாவிடில், தமிங்கிலீசின் செல்வாக்கில், தமிழ் இன்னொரு பாலி மொழியாகிவிடும் ஆபத்தும் இருக்கிறது; 1944-இல் தி.க தோன்றி, அதன் தொடர் விளைவாக 1967 முதல் 'திராவிட' கட்சிகளின் ஆட்சியில், தமிழ்நாடு சிக்கியதற்கு 'விலையாக'(?).

தமிழ்நாட்டில் தமது குடும்பப் பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைக்காத, அல்லது அதற்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்காத, தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வரும், தமிழ்நாட்டில் வாழும் தனித்தமிழ் பற்றாளர்கள், பொதுவாழ்விலிருந்து ஒதுங்குவதே, தமிழின் மரணப்பயணத்தை தடுத்து நிறுத்த உதவும்.” (http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

காலனிய ஆட்சிக்கு முன், 'அரசியல்' நோக்கில், 'இந்தியர்' என்ற சொல்லைப் போலவே,  'தமிழர்' என்ற சொல்லும் உருவாகவில்லை என்பது தெரியாமல் (http://tamilsdirection.blogspot.sg/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html );

தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தை தடுக்கும் முயற்சியின்றி, 'தமிழன்' வரையறை பற்றிய தெளிவின்றி, சீமான் போன்றவர்கள் 'உணர்ச்சிபூர்வ' போக்கில், 'தமிழன்' என்று பயணிப்பது, தமிழுக்கும், தமிழர்க்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாகும் ஆபத்தும் இருக்கிறது: ஏற்கனவே மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில், அவை 'கேலிப்பொருளாகிவரும் சமூக சூழலில். (http://tamilsdirection.blogspot.sg/2015/06/ )

மேற்கத்திய ஆங்கில வழிக்கல்வி சுனாமியிலிருந்து, இந்தியாவில் தமிழ் உள்ளிட்ட மொழிகளின் தாய்மொழிக் கல்வியையும், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டு அனைத்து மொழிகளையும், பண்பாடுகளையும், பாதுகாக்க தவறினால், சம்ஸ்கிருதம், தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளும் அருங்காட்சியகப் பொருட்களாகி விடும், என்ற அபாயத்தினை உணர்ந்து, மீட்பு முயற்சியில் ஆர்.எஸ்.எஸ் இறங்கியுள்ளது. (‘Why RSS, the only option, to rescue the TN Tamil Medium Education & hence Tamil? Let us say 'Goodbye to hate-politics' & embrace genuine pro-Tamil politics’; http://tamilsdirection.blogspot.sg/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

அவ்வாறு ஆர்.எஸ்.எஸ் இந்திய அளவில் செயல்பட்டு வருவதானது, தமிழ்நாட்டில் தமிழ் ஆர்வலர்களின் பார்வைக்கு வரவில்லையென்றால், அதற்கு காரணமான போக்கில், தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் எல்லாம் 'உணர்ச்சிபூர்வ திராவிட நோயில்' சிக்கி, பயணித்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html & ‘தமிழர் விரோதப் போக்கில் பயணிப்பது; 'பெரியார்' கட்சிகளா? ஆர்.எஸ்.எஸ்ஸா?’; http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )
 
வரலாற்றுப் பிறழ்வுகள் எல்லாம் இயற்கையாகவே முடிவுக்கு வருவது போலவே, கடந்த சுமார் 200 வருடங்களாக, உலகின் மீது செல்வாக்கு செலுத்தி வந்த ஐரோப்பாவும், அமெரிக்காவும் செல்வாக்கும் முடியும் கட்டத்தை எட்டி விட்டன. அந்த செல்வாக்கின் பின்பலத்தில், தமிழ்நாட்டில் அரங்கேறிய 'திராவிடர்' வரலாற்றுப் பிறழ்வும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடமிருந்து அந்நியமாகி, முடிவுக்கு வந்து கொண்டிருக்கிறது.(http://tamilsdirection.blogspot.sg/2015/02/12_17.html

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகள் எல்லாம், 'உணர்ச்சிபூர்வ திராவிட நோயில்' சிக்கி, பயணிக்க  முயற்சித்தாலும், அந்த நோயே முடிவுக்கு வரும் கட்டத்தில் இருப்பதால், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சி தடுக்க முடியாததாகி விட்டது. 'தமிழ்வழிக்கல்வியின்' (எனவே தமிழின்) மீட்சிக்கு, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுடன் சேர்ந்து செயல்பட 'அஞ்சி', 'இந்துத்வா எதிர்ப்பில்' உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், 'சருகாகி' உதிர்ந்து போவதும், இயற்கையின் போக்கே ஆகும்.


குறிப்பு: எனது பதிவுகள் தொடர்பான அறிவுபூர்வ மறுப்புகளை, நான் வரவேற்கிறேன். அதை தவிர்த்து, 'உணர்ச்சிபூர்வ போக்கில்', 'பெரியார்' கொள்கையாளார்கள் பயணித்தால், அந்த போக்கானது, 1944க்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ராவின் 'குடி அரசு' பயணித்த போக்கிற்கு எதிரானதாகும்.
(‘எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்’;  http://tamilsdirection.blogspot.sg/2015_10_01_archive.html‘உணர்ச்சிபூர்வ இரைச்சலைத் தூண்டும் மூடர்களை' விட்டு விலகி, இந்துத்வா புலத்தில், அறிவுபூர்வ விவாதத்தை முன்னெடுக்கும் புலமையாளர்கள் அதிகரித்து வருகிறார்கள்.  ஆனால் தமிழ்நாட்டில், குறிப்பாக, 'பெரியார்' ஈ.வெ.ரா மற்றும் தமிழ்/தமிழர் ஆதரவாளர்கள் மத்தியில், அந்த போக்கு உள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_22.htmlநேர்மையான 'பெரியார்' தொண்டர்கள் எல்லாம், 'அறிவு' பார்வையிலிருந்து தடம் புரண்டு, 'உணர்ச்சிபூர்வ' பார்வையில், 'விட்டில் பூச்சி'களாக பயணிப்பதா? அல்லது முடிந்தவரை, 'பெரியார்' பெயரில், பொதுவாழ்வு வியாபாரம் தொடருமா? என்ற கேள்விக்கு, விடை தெரியும் காலமும் அதிக தொலைவில் இல்லை.