Wednesday, November 25, 2015


'அந்த பட்டியலில்' அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ'

           தமிழின் மீட்சிக்கான விளக்கம் வெளிவருமா?

    வைரமுத்துவின் திரைஇசைப் பாடல்களில் சுருதி மோதல்?


"பாரதி நூற்றாண்டு விழாக்கள் தொடங்கும் முன், 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற நூலை வெளியிட்டேன். அந்த காலக்கட்டத்தில், எனது மிகவும் நெருங்கிய நண்பர் பேரா.அ.மார்க்ஸ், அப்புத்தகத்தைக் கண்டித்து, புத்தகங்களும், கட்டுரைகளும் வெளியிட்டார்." என்பதையும்,
"எங்கள் நட்பில் சிறுவிரிசலை கூட, அந்த கருத்து வேறுபாடு ஏற்படுத்தவில்லை. எனது நிலைப்பாடுகளுக்கு எதிரான நிலைப்பாடுகளுடன், சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்களை நான் மிகவும் மதிக்கிறேன்; நட்பும் பாராட்டுகிறேன் வாய்ப்பு கிடைத்தால். பணம் ஈட்ட, 'சமூகக் கிருமிகளாக' (திருக்குறள், பொருள்;அதிகாரம்:92) வாழ்பவர்களை (குடும்பம், சுற்றம், நட்பு உள்ளிட்டு), என்னை பாராட்டுபவர்களாயிருந்தாலும், ஒதுக்கி வாழ்கிறேன்." என்பதையும்,
கீழ்வரும் பதிவிலும், முகநூலிலும் வெளியிட்டேன்.

எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வரும் திரு.பொன்.முருகானந்தம், முகநூல் பதிவில், வெளியிட்ட கீழ்வரும் தகவல், எனது கவனத்தை ஈர்த்தது.

"கீழ்க்கண்ட தகவல் அ.மார்க்ஸ் வலைத்தளத்தில் (amarx.org)  படித்தது . 

 ”இரண்டு மாதங்களுக்கு முன்னால் குடந்தையில் ஒரு பன்னாட்டு இஸ்லாமிய இலக்கிய மாநாடு. தொடக்க நிகழ்ச்சியில் பேச அழைக்கப்பட்டிருந்தேன். அழைப்பிதழைப் பார்த்தவுடன் அதிர்ச்சி. என்றெல்லாம் காவடி தூக்கப்படுபவருமான ஜோ டி குருஸ். அவரோடு மேடையைப் பகிர்ந்து கொள்வதை நினைத்தால் கொடுமையாக இருந்தது. போகாமல் இருந்து விடலாமா என்று கூட நினைத்தேன். ஆனாலும் என்னை அழைத்திருந்த பெரியவர் கவிக்கோ போன்றோரை நினைத்து அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்."

மேற்குறிப்பிட்ட 'மீடியா குவியத்தில்' வாழும் அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ' ஆகியோர், 'சுயநல நோக்கின்றி, உண்மையான அர்ப்பணிப்புடனும், தியாகத்துடனும், வாழ்பவர்க'ளா? இல்லையா? என்று எனக்கு தெரிய வாய்ப்பில்லை; மூவருடனுமே எனக்கு எந்த தொடர்பும் இன்றி வாழ்வதால்.

ஆனால் மூவருமே மேற்சொன்ன கேள்விக்கு, தமது மனசாட்சிக்குட்ப்பட்டு, விடை காண உதவும், கீழ்வரும் தகவலை குறிப்பிட விழைகிறேன்.

இன்று மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் யாப்பிலக்கணமானது,தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் வரும், 'இசை', 'நிறுத்தல்' உள்ளிட்ட பல இசையியல் தொடர்பான சொற்களை, தவறுதலாக புரிந்து கொண்டு, தவறுதலாக கற்பிக்கப்பட்டுகிறது என்பதை,  கடந்த சுமார் 20 வருடங்களாக, 'கணையாழி' உள்ளிட்ட இலக்கிய இதழ்கள், ஆய்வு இதழ்கள்/மலர்கள், இணைய ஆய்வு இதழ்கள் (http://www.musicresearch.in/categorywise.php?flag=R&authid=13 ),  தமிழிலும் ('தமிழ் இசையியல்‍ புதிய கண்டுபிடிப்புகள்') , ஆங்கிலத்திலும் ('Ancient Music Treasures- Exploration for New Music') நூல்கள் வெளியிட்டும், சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை (வி.ஜெயதேவன், வீ.அரசு உள்ளிட்ட பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் முன்னிலையில்) உள்ளிட்டு  ( தமிழ்நாடு, சிங்கப்பூர்) பல ஆய்வரங்கங்களிலும் விளக்கியுள்ளேன். இவை பற்றி தெரிந்த தமிழ் அறிஞர்கள் பட்டியலையும் வெளியிட்டு, யாப்பிலக்கணம் தொடர்பான பாடங்களில் உள்ள குறைகளை நீக்க, தமதளவில் அவர்கள் என்ன முயற்சிகள் மேற்கொண்டார்கள்? மேற்கொண்டும் வெற்றி பெறவில்லையென்றால், அதற்கு 'திராவிட' அரசியலில் தமிழ் சிறையுண்டது காரணமாகுமா? அல்லது தமிழ் வள்ர்ச்சியை விட, தங்களின் செல்வம்/செல்வாக்கு வளர்ச்சியையே குறிக்கோளாக கொண்டு அவர்கள் வாழ்கிறார்களா? என்ற கேள்விகளை, கீழ்வரும் பதிவில் எழுப்பியுள்ளேன். 

அந்த பட்டியலில் அ.மார்க்ஸ், ஜோ டி குருஸ், 'பெரியவர்' 'கவிக்கோ'(?) ஆகியோரும் இடம் பெற வேண்டியவர்கள் என்பது என் கருத்தாகும்.

மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெற்ற எவரிடமிருந்தும், அல்லது அவர்களது ஆதரவாளர்களிடமிருந்தும் எந்த விளக்கமும் வெளிப்பட்டதாக எனக்கு தெரியவில்லை. இனிமேலாவது வெளிவந்தால், அது தமிழின் மீட்சி தொடர்பான முயற்சிகளுக்கு துணை புரியும் என்பதும் எனது கருத்தாகும்.

தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணத்துடன், கூடவே பாரம்பரியம், பண்பாடு உள்ளிட்டவற்றையும் இழந்து, சமூக கிருமிகளின் ஆதிக்கத்தில், தமிழ் வேரற்ற 'தமிங்கீலிசர்களின்' நாடாக, தமிழ்நாடு மாறிவரும் போக்கு வெற்றி பெறுமானால், வரலாற்றில் ஈ.வெ.ரா குற்றவாளியாக வாய்ப்புண்டா? என்ற கேள்வியை முந்தைய பதிவில் பார்த்தோம். அவ்வாறு நேர்ந்தால், அதற்கு மேற்குறிப்பிட்ட பட்டியலில் இடம் பெற்றவர்களும் பொறுப்பாக மாட்டார்களா? 

குறிப்பு:
நியுட்டன் ஆராய்ச்சி முடிவுகளில் பல தவறு என்று அவருக்கு பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். அது நியுட்டனின் புகழுக்கு பாதிப்பாக கருதப்படாமல், அறிவியல் வளர்ச்சியாக கருதியதால், அறிவியல் வளர்ந்தது.


வைரமுத்துவின் திரை இசை பிரவேசத்திலிருந்து, திரை இசையில் எழுத்தின் ஒலிக்கும், தொடர்புள்ள இசைச்சுரத்திற்கும் சுருதி மோதல் நிகழத் தொடங்கி, கீழ்நோக்கி பயணிக்கிறது என்பது, மேலே குறிப்பிட்டுள்ள யாப்பிலக்கணம் தொடர்புள்ள,  என் ஆய்வு முடிவாகும். http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html  அதை விவாதத்திற்கு உட்படுத்தி, தவறு என்று நிரூபிப்பதையும், சரி என்றால் திருத்திக்கொள்வதையும், தவிர்த்து, புறக்கணிப்பதால், இழப்பு யாருக்கு? திரைப்பட இசைப்பாடல்களுக்கு தானே. அந்த பொதுநலன் பற்றிய அக்கறையின்றி, சுயநல அடிப்படையில், தமிழ் திரை உலகம் பயணிக்கிறதா?

No comments:

Post a Comment