Wednesday, July 13, 2016



  ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்க முடியுமா?


தி.க விலிருந்து பிரிந்து, கோவை.இராமகிருட்டிணன் தலைமையில் தனிக் கட்சி தொடங்கியபோது, அதன்  துவக்க கூட்டம் மதுரையில் நடந்தது.

கி.வீரமணி புரவலராக இருந்த பகுத்தறிவாளர் கழகத்தில் இருந்து,  நான் விலகிய பின், என்னுடன் பயணித்தவர்களோடு சேர்ந்து, 'திருச்சி பெரியார் மையம்' என்று தனியாக செயல்பட்ட காலம் அது.

மேற்குறிப்பிட்ட கூட்டம் நடந்த மண்டப வாயிலில்,  திருச்சி பெரியார் மைய வெளியீடுகளை, ஒர் ஓரத்தில் பரப்பி, நானும் இன்னும் சிலரும் விற்றுக் கொண்டிருந்தோம். 

அப்போது கோவை.இராமக்கிருட்டிணன் என்னிடம் வந்து, அந்த கூட்டத்தில் பேசுமாறு வலியுறுத்தினார். கீழ்வரும் காரணத்தால், அக்கூட்டத்தில் பேச, நான் தயங்கினேன்.

'பெரியார்' சிறையில் ஈ.வெ.ரா  சிக்கியிருந்ததை,  அந்த கால கட்டத்திலேயே உணர்ந்து, 'தோழர். ஈ.வெ.ரா ' என்று திருச்சி பெரியார் மைய வெளியீடுகளில் அச்சிட்டு பரப்பிய காலம் அது.

அவர் மிகவும் வலியுறுத்தியதால், நான் அக்கூட்டத்தில் பேசத் தொடங்கினேன்.
'பெரியார்' கொள்கைகளை பாராட்டி பேசத் தொடங்கி, 'தோழர் ஈ.வெ.ரா ' என்று என் பேச்சில்  நான் குறிப்பிட்டதும்,  கூச்சலும் குழப்பமும் அரங்கை ஆக்கிரமிக்க,  நான் பேச்சை நிறுத்திவிட்டு, மேடையிலிருந்து இறங்கி வந்து, மீண்டும் புத்தக விற்பனையில் ஈடுபட்டேன்.

அங்கு வந்த, கோவை.ராமகிருட்டிணனிடம், 'இதற்கு தான், நான் பேச மாட்டேன்' என்று சொன்னேன்' என்று கோபத்தை வெளிப்படுத்தினேன். அவர் என்னை சாந்தப்படுத்திவிட்டு, அங்கிருந்து அகன்றார்.

பின் புத்தகம் வாங்கியவர்களில், ஓவியா 'ஆனைமுத்துவுக்கே மறுப்பா?' என்று வியப்புடன், அந்த மறுப்பு பற்றிய புத்தகத்தை வாங்கி சென்றதும், எனக்கு மறக்க முடியாத அனுபவமானது. 

ஆக பெரியார் கொள்கைகளை பாராட்டி பேசினாலும், 'ஈ.வெ.ரா' என்று சொல்லானது, ‘அவரை அவமதிக்கும் சொல்’ என்ற உண‌ர்ச்சிபூர்வ போதையானது,  தமிழ்நாட்டில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னரே செல்வாக்கு பெற்று விட்டது. 

இந்த அளவுக்கு, தலைவரின் பெயரை,  அவரை பாராட்டுபவர்கள்  சொன்னாலும் அவமரியாதை என்று கருதும் 'சீர்திருத்த'/'புரட்சி'(?) இயக்கம், உலகில், நானறிந்தது வரை, தமிழ்நாட்டில் மட்டுமே இருந்தது/இருக்கிறது. 

" 'தோழர் ஈ.வெ.ரா' என்று குறிப்பிடும் 'திருச்சி பெரியார் மையம்' பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை" என்று கி.வீரமணி சொல்லியதாக, நான் கேள்விப்பட்டது, வரலாற்றில் உண்மையாகி விட்டது. 

நான் இசை ஆய்வுகள் நோக்கி, திசை திரும்பி,  'திருச்சி பெரியார் மையம்' செயலிழந்து விட்டது என்று நான் கருதியிருந்தேன். ஆனால் நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான‌ வழியில்லாத நபர்கள், 'திராவிட அரசியல் கொள்ளை வலைப்பின்னலில்' இடம் பெற்று 'குறுக்கு வழி' பணக்காரர்கள் ஆகும் 'ஏணியாக' திருச்சி பெரியார் மையம் பயன்பட்டு வந்தது/வருவது எனக்கே நம்ப முடியாத அதிர்ச்சியானது. ( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html )  நான் கி.வீரமணியை விட்டு விலகாமல் இருந்திருந்தால், எனக்கும் சமூகத்திற்கும் கேடான சமூக கிருமிகள், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்திருக்க வாய்ப்பு இருந்திருக்காது. கீழ்வரும் காரணத்தால், அதில் எனக்கு வருத்தமில்லை. நமது வாழ்வில் சந்திக்கும் துயரங்களையும், சீர்குலைவுகளையும், 'சிக்னலாக' (signal) கருதி, சமூகவியல் ஆய்வுக்கு உட்படுத்துவதால், சமூகத்தின் சீர்கேடுகளிலிருந்து மீள்வதற்கான திறவுகோல் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

விருப்பு, வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட 'பெரியார் சமூக கிருமிகளை, ஆய்வுக்கு உட்படுத்தியதன் மூலமே, தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த, தமிழர்களை வேரற்றவர்களாக்கும் பாதிப்புகளை கண்டுபிடிக்க முடிந்தது; இசை இயற்பியல் (Physics of Music)  அடிப்படையில், பழந்தமிழ் இலக்கியங்களில், நான் மேற்கொண்ட ஆய்வுகளின் துணையோடு

எனது சமூகவியல் ஆய்வுகளுக்கு துணை புரிந்த/புரியும் சமூகவியல் பரிசோதனை மாதிரிகளாக ( Sociological Real Life Experimental Specimens), திருச்சி பெரியார் மையம் மூலம் நான் அடையாளம் கண்ட, 'பெரியார்' 'சமூக கிருமிகள்' பயன்பட்டு வருகிறார்கள். [ 'sociologists use empirical evidence (that is, evidence corroborated by direct experience and/or observation) combined with the scientific method or an interpretive framework to deliver sound sociological research.'; https://opentextbc.ca/introductiontosociology/chapter/chapter2-sociological-research/ ] அந்த ஆய்வு நோக்கில், எனக்கு கிடைக்கும் சான்றுகளையும், அந்த சான்றுகள் அடிப்படையில் நான் யூகிப்பவைகளையும், எனது பதிவுகளில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறேன். நான் முனைவர் பட்டம் பெறுவதற்கோ, பணம், புகழ் சம்பாதிப்பதற்கோ,  இதில் ஈடுபடவில்லை......தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் எண்ண‌ற்றோரின் தியாகங்கள் (தேசிய, திராவிட, பொதுவுடைமை உள்ளிட்ட அனைத்து இயக்கங்களிலும்) எல்லாம், தமிழ்நாட்டில் 'பொது அரங்கில் சுயநலக் கள்வர்கள்' ஆதிக்கம் பெறும் விளைவிலா,  முடிய வேண்டும்? அதிலிருந்து மீள வேண்டுமானால், அந்த பாதக விளைவை ஏற்படுத்திய சமூக செயல்நுட்பத்தை (Social Mechanism),  கண்டுபிடிக்க வேண்டாமா?  (http://tamilsdirection.blogspot.in/2016/03/normal-0-false-false-false-en-in-x-none_31.html)

இன்று தி.மு.க, மற்றும் அ.இ.அ.தி.மு.க ஆகிய கட்சிகளின் சென்னை தலைமை அலுவலகங்களில், அக்கட்சிகளின் தலைவர்களின் பெயரை சொல்லி, குறிப்பிட்டு பேசி விட்டு, அசம்பாவிதம் ஏதுமின்றி எவரும் திரும்பி வர முடியுமா? என்ற கேள்வி  உருவானதற்கு  யார் காரணம்? என்பதும் ஆய்விற்குரியதாகும். ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்பதானது, தமிழ்நாட்டின் பொதுவாழ்வை, சீரழிவிலிருந்து மீட்பதற்கான துவக்கமாக அமைய வாய்ப்புண்டு; மாணவர்கள் மத்தியில், 'பெரியார் யார்?' என்று கேட்கும் போக்கானது, உச்சத்தை தொடுவதற்கு முன்னால்.( http://tamilsdirection.blogspot.in/2015/02/12_17.html )

இன்று பொதுவாழ்வில், 'சுயலாப கணக்குடன்' தான், எவரையும் ஆதரிப்பது/எதிர்ப்பது என்றுள்ள சூழலில், ஈ.வெ.ராவின் சுயலாப நோக்கற்ற வாழ்வின் தியாகங்களை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வ போக்குகளில், 'இந்துத்வா' மற்றும் 'தமிழ்த் தேசிய' ஆதரவாளர்களில் சிலர், உணர்ச்சிபூர்வமாக ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி வருவதை எனது பதிவுகளில் விளக்கியிருக்கிறேன். ஈ.வெ.ரா 'பெரியார்' சிறையில் சிக்கியிருப்பதானது, அம்முயற்சிகளுக்கு வலுவூட்டுவதாகும்.

ஈ.வெ.ராவை 'பெரியார்' என்ற சிறையிலிருந்து மீட்டு, காலதேச வர்த்தமான மாற்றங்களுக்கு உட்படுத்தி, அவரின் சுயலாபமற்ற சமூக தொண்டை வளர்க்க விரும்புபவர்கள் பார்வைக்கு;

'பண்டிகைகளின் சமூக பரிமாணங்கள் (social dimensions)' பற்றிய புரிதலின்றி, காலனிய சூழ்ச்சியான 'ஆரியர்- திராவிடர்' கருத்தாக்கத்தில் சிக்கி;

'தீபாவளி' உள்ளிட்ட பண்டிகைகளை எதிர்த்ததானது;

தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் உருவாக காரணமான:

தமது இயக்கத்திற்கான சமூக ஆற்றல் மூலங்களிலிருந்து (Sources) அந்நியமாக;

அவர் புரிந்த பல தவறுகளில் ஒன்றா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்கள் கிழே.

இங்கர்சால் கிறித்துவராக பிறந்து, பின் 'எதீயிஸ்ட்' ஆகி (Atheist- நாத்தீகம் என்ற சொல்லானது சமஸ்கிருதத்தில் வேதத்தை மறுப்பவரை குறித்த சொல்; கடவுளை மறுப்பவரை குறிக்கும் சொல் அல்ல) ;

கிறித்துவ மத்தை எதிர்த்தவர், ஏன், எவ்வாறு கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினார்? என்பது தொடர்பான தகவல்கள் கீழே.

எனக்கு நேரம் கிடைக்கும்போது, இவற்றை தமிழில் மொழிபெயர்க்கும் எண்ணம் உள்ளது. அதற்கு முன்னே, எவராவது, இயலுமானால், தமிழில் மொழிபெயர்த்து உதவுவதை, நன்றியுடன் வரவேற்கிறேன்.

"தமிழர்கள் அழிவுபூர்வ பின்னூட்ட வளையில்  சிக்கி, சீரழிந்து வருகின்றனர். அது ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக மாறும் வரை, கடுமையாக போராடியாக வேண்டும்' (“Tamils are suffering the negative feedback loop. It will be a hard struggle until it switches to positive feedback loop. ”) என்று லண்டனில் வாழும் எனது நண்பர் வே.தொல்காப்பியன் தெரிவித்துள்ள கருத்தே, தமிழரின் மீட்சிக்கான திறவுகோல் ஆகும்

காலனிய சூழ்ச்சிகளில் தமிழில் இருந்த 'இனம்' திரிந்து,  'திராவிடர்', மற்றும் இன்றுள்ள 'சாதி அமைப்பு' அரங்கேறி, அதில் ஈ.வெ.ரா சிக்கி, 1944இல் தி.கவை உருவாக்கி, உணர்ச்சிபூர்வ பிராமண எதிர்ப்பில், பயணித்ததே, அழிவுபூர்வ பின்னூட்ட வளையில் தமிழும், தமிழரும், தமிழ்நாடும் சிக்கி, சீரழியவும், அந்த பின்னணியில் 'பெரியார் சமூக கிருமிகள்' வளரவும், காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேலே குறிப்பிட்ட மீட்சிக்கான திறவுகோலை அமுலாக்க, 'சுயலாப கள்வர் நோய்' உள்ள, நேர்மையான சுயசம்பாத்தியமின்றி, 'குறுக்குவழி, ஊழல்வழி' மனிதர்களை, எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, பாராட்டு, புகழ், செல்வாக்கு போதையில் சிக்காமல், ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக (positive feedback loop),  எனது சமூக வட்டத்தை மாற்றி வருகிறேன் (‘For Joyful Life; Beware of the Negative Feedback Loop’; http://veepandi.blogspot.in/2013/03/normal-0-false-false-false.html); ஈ.வெ.ரா 'பெரியார்' சிறையில் சிக்கியதால் விளைந்த, அழிவுபூர்வ பின்னூட்ட வளையிலிருந்து,  'மீட்சி' நோக்கிய முயற்சியாக; ஆக்கபூர்வ பின்னூட்ட வளையாக இருந்த எனது  சமூக வட்டமானது, 'பெரியார்' கொள்கையில்  நான் நுழைந்ததால்,  அழிவுபூர்வ வளையானதிலிருந்து, மீளும் முயற்சியாக.

1.    “My family and I regard Christmas as a holiday--that is to say, a day of rest and pleasure--a day to get acquainted with each other, a day to recall old memories, and for the cultivation of social amenities. The festival now called Christmas is far older than Christianity. It was known and celebrated for thousands of years before the establishment of what is known as our religion.”- AN ESSAY ON CHRISTMAS (First part)
The Works of Robert G. Ingersoll, Vol. 4

2.    “I believe in the festival called Christmas--not in the celebration of the birth of any man, but to celebrate the triumph of light over darkness--the victory of the sun. I believe in giving gifts on that day, and a real gift should be given to those who cannot return it; gifts from the rich to the poor, from the prosperous to the unfortunate, from parents to children.”
-          GIFT GIVING
-          The Works of Robert G. Ingersoll, Vol. 12

3.    As other religions have been produced, the old customs have
been adopted and continued, so that the result is, this festival of
Christmas is almost world-wide. It is popular because it is a
holiday. Overworked people are glad of days that bring rest and
recreation and allow them to meet their families and their friends.
They are glad of days when they give and receive gifts -- evidences
of friendship, of remembrance and love. It is popular because it is
really human, and because it is interwoven with our customs,
habits, literature, and thought.”
http://infidels.org/library/historical/robert_ingersoll/interviews/set_5.html

சுயலாப நோக்கின்றி, சமூக அக்கறையில் பயணித்திருந்தாலும், தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations)  பற்றிய புரிதலின்றி,  ஈ.வெ.ரா  பயணித்து, தாய்மொழி, இலக்கியங்கள், புராணங்கள், பாரம்பரியம், பண்பாடு, பண்டிகைகள், சடங்குகள் உள்ளிட்டவற்றை 'மூர்க்கத்தனமாக' எதிர்த்ததால்; 2006 முதல் நான் வெளியிட்டு வரும் 'ஆய்வு எச்சரிக்கைகளை' புறக்கணித்து, அதே தவறான திசையில், 'பெரியார்' கட்சிகள் இன்றும் பயணித்து வருவதால்;

தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் விளைந்த பாதிப்புகள் பற்றிய ஆய்வுகள்,  உலகின் கவனத்தை ஈர்க்கவல்ல, அதிர்ச்சி தரும் முடிவுகளை வெளிப்படுத்தினால், வியப்பில்லை;
என்பதற்கு அவை தொடர்பான, புதிதாக வளர்ந்து வரும் அறிவியல் துறையில் வெளிப்பட்ட சான்று வருமாறு.
"Human societies have memories that are transmitted through the culture of the group, and are most explicitly communicated through the ritual re-enactment of a founding story or myth, as in the Jewish Passover celebration, the Christian Holy Communion and the American thanksgiving dinner, through which the past become present through a kind of resonance with those who have performed the same rituals before."
http://www.sheldrake.org/research/morphic-resonance/introduction
 

No comments:

Post a Comment