Tuesday, June 13, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (4)


தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation);
ரஜினி மூலமாகவா? அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலமாகவா?


தமிழ்நாடு தற்போது வளர்ச்சி நோக்கிய திருப்பு முனையில் இருப்பதை உணர்த்தும் 'சிக்னல்கள்' (signals) எனக்கு புலப்பட்டதன் காரணமாக, அந்த போக்கிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவே;

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன் (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson );

எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி.

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize)  மற்றும் 'ஆதாய அரசியல்' போக்கில் கட்சிகள் பயணித்து வரும் சமூக சூழலில்;

ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள், குடும்பம் உள்ளிட்ட அமைப்புகளில் ஏற்பட்டு வரும் சீர்குலைவுகள், நம்பகத்தன்மை உள்ள மனிதர்கள் குறைந்து, 'சுயலாப கணக்கு' தரகர்களும், திருடர்களும் 'குடும்பம், நட்பு' உள்ளிட்ட சமூக பிணைப்புகளையும் கெடுத்து, 'சமூக ஆற்றல் ரத்த ஓட்டமே' நஞ்சாகி வருவது உள்ளிட்ட அனைத்து போக்குகளும், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட மாற்றத்தினை கணிக்க உதவும், சமூக 'சிக்னல்கள்' ஆகும்.

‘சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமுகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, போன்றவை அதிகரிப்பதும், சுமார் 11 வயதிலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் போக்குகள் அதிகரிப்பதும், சமூக நெறிமுறைகளின் சீரழிவின் வெளிப்பாடுகள் ஆகும். அதிலும் சட்டத்தை ஏமாற்றி, (பணம் ஈட்ட நாய்களாகவும், புலமை, நேர்மை, மதிக்க தெரியாத கழுதைகளாகவும், 'வாழ்வியல் புத்திசாலிகளாக') குறுக்கு வழிகளில் செல்வம் செல்வாக்கு சம்பாதிப்பவர்களை 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது,  சமூகத்தின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும்.அது தமிழ்நாட்டில் வாழும்  தமிழர்களுக்கு இடையில் உள்ள, தொடர்புகளாகிய‌, சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.’ ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.htmlநீரழிவு நோயாளிகளின் காலானது, 'காங்கிரின்' நோயால் பாதிக்கப்பட்டால், காலை அகற்றியே, உயிர் பிழைக்க முடியும். (Gangrene ; http://www.healthline.com/health/gangrene-diabetes#overview1அது போல, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றா விட்டால், நம்மையே சீரழித்து விடும், 'சமூக காங்கிரின்' தொத்து நோய்களாக வாழும் 'சுயலாப கள்வர்கள்', 'அதிவேகமாக' அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சிக்கியுள்ளது. 

ஒரு கரைசலில் (Solution) நடைபெறும் மாற்றங்களில், 'படிகம்' (crystal) உருவாவதன் தொடக்க நிகழ்வானது, 'நியுக்கிலியேசன்' (Nucleation)  என்று அழைக்கப்படும். புதிய 'வெப்ப இயக்க கட்டம்' ( new thermodynamic phase ) அல்லது 'கட்டமைப்பை' (new structure), கனிவான சூழலில், சுயமான அமைப்பின் (via self-assembly or self-organization) மூலம் உருவாகி கொள்ளும் செயல்முறை நிகழ்வே, 'நியுக்கிலியேசன்' ஆகும். (https://en.wikipedia.org/wiki/Nucleation)

கனிவான சமூக சூழலில், நடக்கும் சமூக மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க உதவும் சமூகவியல் கருத்தாக்கமானது, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆகும்.

கனிவான சமூக சூழலில், அதிவிரைவாக நடக்கும் 'சமூக நியுக்கிலியேசனை' கீழ்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில், தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும்.

ஒரு சமூகத்தில் எழும் முரண்பாடுகளை, சரியான நேரத்தில் சரியாக தீர்க்க தவறும் போது, அம்முரண்பாடுகளை தவறாக பயன்படுத்தி, சமூக நச்சு சக்திகள், கனிவான சூழலில், அமுரண்பாடுகளை, 'பொருத்தமான தீக்குச்சி' மூலம் பற்ற வைத்து, பண்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் அகற்றி, திருப்பு முனையில், ஊழல் மற்றும் ஒழுக்கக் கேடுகளை வளர்க்கும் திசையில் பயணிக்க கூடும்.

ஒரு சமூகத்தில் நல்ல சமநிலையானது (good equilibrium)  குலைந்து, ஊழலும், ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து, செல்வாக்கு பெறும் நிலையில், அடுத்த மாற்றத்திற்கான, 'திருப்பு முனை'யை அடையும். அப்போது 'தகுந்த தீக்குச்சி'யானது வெளிப்பட்டு பற்ற வைக்கும் போது, அந்த 'சமூக நச்சு வாயுக்கள்' எரிந்து, சாம்பலாகி, சமூகமானது,  திருப்புமுனை கட்டத்தினுள் நுழையும்.

சமுகத்தில் அது போன்ற 'தீக்குச்சி' சம்பவங்கள், ஏற்கனவே 'செல்வாக்குடன்' வலம் வரும் தீய அல்லது நல்ல கட்சிகளை ஒழித்து, புதிய கட்சியின் 'திடீர் வேக' செல்வாக்கில், அந்த சமூகமானது, தீய அல்லது நல்ல திசையில் பயணிக்கும்.

அதனை விளங்கிக் கொள்ள, கீழ்வரும் உதாரணம் பயன்படும்.

1982இல் ஹைதராபாத் விமான நிலையத்தில், அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ராஜிவ் காந்தி, கூடியிருந்த எண்ணற்ற மக்களின் முன்னிலையில், ஆந்திர முதல்வர் அஞ்சையாவை 'பபூன்' என்று குறிப்பிட்டு அவமதித்தார்; ஆந்திர அரசியலில் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி ,நடிகர் என்.டி.ஆர் புதிதாக 'தெலுங்கு தேசம்' கட்சி தொடங்கி, மறுவருடமே முதல்வராகி, இன்று ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிந்துள்ள இரண்டு மாநிலங்களுமே 'பிராந்திய கட்சிகளின்' ஆட்சிகளில் பயணித்து வரும் போக்குகளுக்கு அடித்தளமாக.

ஒரு சமூகத்தில் 'திருப்பு முனைக் கட்டம்' என்பதானது;

ஏற்கனவே இருந்த 'சமநிலையானது' (Social Equilibrium) சீர்குலைவு போக்கில், பயணம் செய்து, 'சமூக கலங்கலுக்கு' (Social Disequilibrium)   உள்ளாகி, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation )  மூலம், மேலே குறிப்பிட்ட 'சமூக தீக்குச்சி' நிகழ்ச்சிகள் மூலம், புதிய சமநிலையை நோக்கி பயணிக்கும்.

இந்திய விடுதலைக்குப்பின், தேச கட்டுமானத்தை (Nation Building) , நேரு குடும்ப ஆட்சியானது, சுயநல குடும்ப அரசியலுக்கு அடிமைப்படுத்தி, பயணித்ததன் விளைவாக, தமிழ்நாடானது, 1967இல் தேசியக்கட்சிகளின் பிடிகளிலிருந்து விடுபட்டது. அதிலும் பாடம் கற்காமல், இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் பயணித்ததன் விளைவாகவே, ஆந்திராவில் 'புதிய‌ கட்சி' உருவாகி ஆட்சியைப் பிடித்தது. அதன் தொடர்விளைவாகவே, கூடுதல் பிரிவினைக்கு உள்ளாகி, அது மேலும் இரண்டு மாநிலங்களாக பிரிந்துள்ளது.

உலக அளவில், நானறிந்த வரையில், 'சமூக நியுக்கிலியேசன்' கருத்தின் மூலம், சமூகத்தில் நடந்து வரும், மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற‌  மாற்றங்களை, முதலில் ஆராய்ந்ததை, வெளிப்படுத்திய ஆங்கில நூல் 'வரவிருக்கும் மாற்றங்கள்' (‘The Shape of Things to Come’- Author: H.G. Wells ) . அந்நூலின் கருத்துக்களை, ஐ.நாவில் உயர் அதிகாரியாக பணியாற்றி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்த பிலிப் ராவன் ( Dr. Philip Raven ; https://en.wikipedia.org/wiki/The_Shape_of_Things_to_Come ) எவ்வாறு உருவாக்கினார்? அவரின் மரணத்திற்குப் பின், அந்த நூலானது எவ்வாறு தொகுக்கப்பட்டு, 2ஆம் உலகப்போர் எப்போது நடக்கும்? என்பதை, முன்கூட்டியே கணித்து, உலகை வியப்பிற்கு உள்ளாகியது, உள்ளிட்டவற்றை, அந்நூலின் முன்னுரையானது, வியப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ளது.

சமூக நியுக்கிலியேசன் தொடர்பாக, ஆராய்ந்த இன்னொரு ஆராய்ச்சியாளர் சார்லஸ் ஆர்ட்டன் கோலி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Charles_Cooley  )

‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற நூலின் அடிப்படையில், 'சமூக வளர்ச்சி மற்றும் வடிவம்'- ‘ON SOCIAL GROWTH AND FORM’ பற்றிய ஆய்வினையும், அந்த ஆய்வில் 'சமூக நியுக்கிலியேசன்' ஆய்வினையும் பிணைத்து, உலக அளவில் நான் மட்டுமே ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் போது, எனது ஆய்வுகள் வளர்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன் தர வாய்ப்பிருக்கும்.

சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குகளும், மேலே குறிப்பிட்ட வகையில், ஆராய்ந்து, அடுத்து வருவதை, கணிக்க துணை புரிபவைகளாகும்.

ஆந்திராவில் ராஜிவ் காந்தியின் 'பபூன் தீக்குச்சி' சம்பவம் ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, இந்திய விடுதலை காலக் கட்டத்தில் நடந்த. 'தெலுங்கானா புரட்சியிலிருந்து, தொடங்க வேண்டும்.

அது போல, தமிழ்நாட்டின் திருப்புமுனையான 1967 ஆட்சி மாற்றத்திற்கு, வழிவகுத்த ராஜாஜியின் முயற்சியால் உருவான 'தி.மு.க கூட்டணி தீக்குச்சி' ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, காலனி 'இனம்' சூழ்ச்சியில், சிக்கி, 'பெரியார்' ஈ.வெ.ரா 1944-இல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்ததிலிருந்து  தொடங்க வேண்டும். தமிழரல்லாத மன்னர்கள் ஆட்சியிலும், பின்னர் காலனி ஆட்சியிலும், அதன்பின் இந்தியா விடுதலை அடைந்து, 1967 வரையிலும் புலமையுடன் உயிருடன் இருந்த தமிழ் மொழியானது;

இன்று தமிழ்வழிக் கல்வியின் ( எனவே தமிழின்) மரணப்படுக்கையில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html

1944இல் உருவான தி.கவிலிருந்து, 1949இல் தி.மு.க பிரிந்து உருவாக காரணமான அண்ணா, பயின்ற பச்சையப்பன் கல்லூரியும் (http://timesofindia.indiatimes.com/city/chennai/pachaiyappa-students-go-on-rampage/articleshow/59185425.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section
  ), தி.மு.க வளர்சசியில் முக்கிய பங்காற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழமும், எந்த காலக்கட்டத்தில் ஊழலுக்கும், கட்டுப்பாடு சீர்குலைவிற்கும் உள்ளானது?  

திசை மாற்றத்திற்கு உள்ளான சமூகமானது, தீய திசையில் பயணிக்கத் தொடங்கினால், ஊழலும், ஒழுக்கக் கேடுகளும் வளர்ந்து, சமூக நச்சு வாயுக்களின் பெருக்கத்தால், அந்த சமூகமானது, சமூக மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி, அடுத்த 'சமூக தீக்குச்சி' மூலம், அந்த சமூக நச்சு வாயுக்களிடமிருந்து, 'விடுதலை' பெற்று, ஆக்கபூர்வமான 'நல்ல சமுக சுவாசத்திற்கு' ஏங்கும் கட்டத்தினை அடையும்.

மேலே குறிப்பிட்ட பின்னணியிலேயே கீழ்வரும் கணிப்பை வெளிப்படுத்தினேன்.

‘முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/06/3-role-ofdifferent-media-in-shaping.html )

'அரசியல் நீக்கத்தில்', ஆதாய அரசியல் போக்கில், 'சிறை பட்டுள்ள' இன்றுள்ள கட்சிகளின், தலைவர்களின், அவர்களை ஆதரிக்கும் 'அறிவுஜீவிகளின்',  நிலை பற்றி கீழ்வரும் பதிவில் பார்த்தோம்.

‘தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்', அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html ) உலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்க‌ளையும், தியாகங்களையும், தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர் கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால் நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும், அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல‌ தலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்த‌ கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

இந்திய விடுதலைக்குப்பின் உருவான நேரு அரசே ஊழலில் சிக்கி பயணித்த பின்னணியில், எந்த அமைச்சர் மீதும் ஊழல் குற்றசாட்டு, எதிர்கட்சிகளாலேயே சுமத்தப்படாத அளவுக்கு, முதல் முறையாக, இந்தியாவில் மத்திய‌ அரசில் மோடி அரசானது, ஆட்சி புரிந்து வருகிறது. நாட்டு நலனை முன்னிறுத்தி, தேச கட்டுமானத்தை துவக்கி, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, அஸ்ஸாம் உள்ளிட்டு, வடகிழக்கு மாகாணங்களில், அடுத்து, அடுத்து, கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி, பயணித்து வருகிறது. தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களை கேடாக, கருதி, பிரிவினை முயற்சிகள் (தமிழ்நாட்டில் நடந்ததைப் போல) வடகிழக்கு மாநிலங்களில் நடக்கவில்லை. எனவே அந்த ஆணி வேர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, கூட்டணி அட்சி அமைக்கும் முயற்சி, அங்கெல்லாம் சாத்தியமாகி வருகிறது.

தமிழக பா.ஜ.கவில் அது போன்ற முயற்சிக்கு, வழி விட்டு ஒதுங்கும் மனப்பக்குவம் உள்ள தலைவர்கள் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

தமிழ்நாட்டில் பிரிவினை கட்சிகள் எல்லாம்;

தமிழ்நாட்டை ஊழல் பேராசையில் சூறையாடிய, 'திராவிட' குடும்ப அரசியலை எதிர்க்காமலும், வெளியில் தெரிந்தும், தெரியாமலும், அந்த 'சூறையாடலில்' பங்கு பெற்று, பயணித்த கட்சிகளே மிகுந்துள்ளனவா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பா.ஜ.க கூட்டணி அரசில், தமிழ்நாடு பயணிக்க தொடங்கினால், ஊழலுக்கு இடமின்றி, தாய்மொழி வழிக்கல்வி மீட்சி முயற்சிகள் வெற்றி பெறும், என்பது எனது கணிப்பாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசனுக்கான', அதற்கான‌ சமூக சூழல் கனிந்துள்ளது, என்பது எனது ஆய்வு முடிவாகும்.

ஊழலை ஒழித்து, சாதி, மத பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கில் இந்தியாவை மீட்க, மோடி ஆட்சி செய்கிறார்; அதை கெடுக்க, மத வெறி போக்குகளை பயன்படுத்தும் மோடி எதிர்ப்பில், 'இந்துத்வா' போர்வையில் பயணிக்கும், சக்திகளையும் சமாளித்து.

'மத சார்பற்ற' போர்வையில், மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம், 'இந்துத்வா' போர்வையில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்கள்.

எனது ஆய்வுகள் மூலம், 'பெரியார்' ஈ.வெ.ராவின், தமிழரின் 'ஆணி வேர்கள்' தொடர்பான தவறான நிலைப்பாடுகளை திருத்திக் கொண்டு, எனது வழியில்,  காமராஜரை ஈ.வெ.ரா ஆதரித்தது போல், 2005 முதல், மோடி ஆதரவு போக்கில், எந்த 'பெரியார்' கட்சியாவது பயணித்திருந்தால்;

இன்று 'சமூக நியுக்கிலியேசன்' போக்கில், அஸ்ஸாமைப் போல, தமிழ்நாட்டிலும் அக்கட்சியானது, தாய்மொழிவழிக் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான நிபந்தனைகளுடன்;

பா.ஜ.கவுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.

அதற்கான வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட சூழலில்;

அதற்கான சமூக நியுக்கிலியேசன் நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில் நுழைந்தாக வேண்டும்.

அது ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.


குறிப்பு: முகநூலில் வெளிவந்துள்ள எச்சரிக்கை:

“ரஜினி அரசியலுக்கு வந்த பின்னர்... அவரை ஒன்றுமில்லாமல், புஸ்ஸு என்று ஆக்கி விட அனைத்து மீடியாக்களும் ரவுண்டு கட்டி அடிப்பார்கள். ஏனென்றால், இங்கே மீடியாக்கள் எல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அரசியல் ரீதியாக தங்களைத் தவிர வேறு ஒரு சக்தி வளர்வதை விரும்ப மாட்டார்கள்... ஒருவரை தூக்கி விடுவது போல் போக்குக் காட்டி, சமாதி கட்டுவதற்கு வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டனுக்கு நேர்ந்த கதி தமிழகம் அறியும்....
இவ்வளவே...! இதை மீறி ரஜினி எப்டி ஜொலிக்கிறார்னு பாக்கலாம்!”

No comments:

Post a Comment