Saturday, November 4, 2017

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே 'தனித்துவமான ரசனை இடைவெளி'? (2)


'இரட்டை வேடப் போக்குசமூக செயல்நுட்பமும்

தமிழின் சீரழிவும்



தமது பார்வைக்கு வரும் சான்றுகளின் வரை எல்லைகள் யாவை?, கால ஓட்ட ஆராய்ச்சி முன்னேற்றத்தில், அச்சான்றுகளில் எவை எவை செல்லாக்காசாகி வருகின்றன? என்பவை பற்றிய கவலையின்றியும், வாத சுருதி பேதங்களுடனும் (Logical Fallacy- https://yourlogicalfallacyis.com/ & https://en.wikipedia.org/wiki/List_of_fallacies );

'பெரியார்' கட்சிகள் பயணித்து வருவதற்கு, 'ரேஸ்' (Race)  என்ற ஆங்கிலச் சொல்லின் பொருளில், தமிழில் இருந்த 'இனம்' சொல்லின் பொருளைத் திரித்து, திருந்தாமல் பயணித்து வருவதும்;

தேவநேய பாவாணர் முன்வைத்த 'லெமூரியா'வைப் பற்றிய திசையில் பயணிக்கும் தனித்தமிழ் கட்சிகளும்; (http://tamilsdirection.blogspot.sg/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html )

இன்றும் சான்றுகளாக தொடர்வதன் காரணமாக‌, அத்தகையோரையெல்லாம் கல்லூரி மாணவர்கள் கேலிப்பொருளாக்கி மகிழும் அபாயங்களும் கூடி வருகின்றன.

தமிழிசை மீட்பு முன்னோடியாக ஆபிரகாம் பண்டிதர் பயணித்தது போல; (http://tamilsdirection.blogspot.sg/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

தனித்தமிழ் இயக்கத்தின் முன்னோடிகளான திரு.வி.-வும்மறைமலையடிகளும் உணர்ச்சிபூர்வ 'பார்ப்பன எதிர்ப்பு', 'சமஸ்கிருத எதிர்ப்பு' இன்றி, பயணித்த திசையில் இருந்து;

தடம் புரண்டு, மேற்குறிப்பிட்ட உணர்ச்சிபூர்வ 'பார்ப்பன எதிர்ப்பு', 'சமஸ்கிருத எதிர்ப்பு' திசையில் பயணிக்க,  தேவநேய பாவாணர், பெருஞ்சித்திரனார், போன்ற இன்னும் பலர் எல்லாம், எந்த அளவுக்கு பங்களித்துள்ளார்கள்?

என்பது தொடர்பாக, பாரபட்சமின்றி அறிவுபூர்வமாக எவரேனும் ஆய்வில் ஈடுபட முனைந்தால், அத்தகையோருக்கு என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்.

அது தொடர்பாக, எனக்கு கிடைத்த, முன் டயங்களின்(prima face evidencesஅடிப்படையில், கீழ்வரும் பதிவை வெளியிட்டேன்.

தமிழின் மரணப்பயணத்திற்கும், தமிழர்களின் சீரழிவிற்கும்,  'சுயநினைவற்றபங்களிப்பு வழங்கிய குற்றவாளிகளா; தனித்தமிழ் அமைப்புகளும், பற்றாளர்களும் ?’ (http://tamilsdirection.blogspot.sg/2016/07/fetna.html )

மேலே குறிப்பிட்ட பதிவில் உள்ள கீழ்வரும் கருத்தானது, தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் 'தனித்துவமான ரசனை இடைவெளியுடன்' தொடர்புடையதாகும்.

"சமூகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றங்களோடு இயைந்து, அறிவுபூர்வமாக வளர்ச்சி நோக்கிய திசையில் இலக்கணத்தில் மாற்றங்கள் ஏற்பட வழியின்றி, உயர்பீட (Ivory Tower) சிறையில், தனித்தமிழ் அமைப்புகளும் பற்றாளர்களும் காவல் காக்க, தமிழ் இலக்கணமானது சிறையுண்டிருக்கிறதா? அதன் விளைவாக;

தமிழும் ஆங்கிலமும் கலந்து, நமக்கே புரியாத புதிய இலக்கண விதிகளையும், புதிய சொற்களையும் தாமாகவே உருவாக்கி, இன்று மாணவர்களும், இளைஞர்களும், தமிங்கிலீசர்களாக பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். "

தமிழில் புத்தகங்களின் ரசனைக்கும், தமிழ் திரைப்படங்களின் ரசனைக்கும் இடையே வெளிப்பட்டுள்ள 'தனித்துவமான (Unique) ரசனை இடைவெளி' உருவான சமூக செயல்நுட்பத்துடன்;

மேலே குறிப்பிட்ட தமிழ் இலக்கணம் தொடர்பான சமூக செயல்நுட்பமானது;

எந்த அளவுக்கு தொடர்புடையது? என்பதானது, துவக்கத்தில் குறிப்பிட்ட ஆய்வு முயற்சியில் இடம் பெற வேண்டும்.

தமிழ்ப் புத்தகங்களின் ரசனையில் பயணிக்கும் மூத்த தலைமுறையின் கீழ்வரும் இரட்டை வேடப் போக்குகள் எல்லாம், மேலே குறிப்பிட்டுள்ள தொடர்புக்கு எந்த அளவுக்கு பங்களித்தது? என்பதும் துவக்கத்தில் குறிப்பிட்டுள்ள ஆய்வில் இடம் பெற வேண்டும்.

‘'பெரியார்' கொள்கையில் இரண்டாம், மூன்றாம் தலைமுறை குடும்பங்களில் கூட, சாதிக்குள் திருமணம் செய்து கொண்டு, 'கறுப்பு சட்டைகளாக' வலம் வருபவர்களை எல்லாம், 'பெரியார்' கட்சிகள் சகித்துக் கொள்ளவில்லையா? 'தனித்தமிழ்' கட்சிகளில் உள்ள பேராசிரியர்களில், வசதியானவர்களில், எத்தனை குடும்பங்களில்,  'தமிழ் இன ஒற்றுமையை' ஓரங்கட்டி, 'தம் சாதிக்குள்', திருமணங்கள் எல்லாம் நடைபெறுகின்றன?’ ( http://tamilsdirection.blogspot.sg/2017/10/2_24.html )

'தமிழர்என்று பொது அரங்கில் ஏமாற்றிக் கொண்டு, தமது குடும்பப் பிள்ளைகளின் திருமணங்களை தத்தம் சாதிக்குள் நடத்தும், இரட்டை வேடப் போக்கில், 'பெரியார்' கொள்கையாளர்களை விட, 'தனித்தமிழ்' கொள்கையாளர்கள் ஒப்பீட்டில் அதிக அளவில் இருக்கிறார்கள்;

என்பது சரியா? தவறா? என்று ஆரவமுள்ளவர்கள் ஆராயலாம். 

குக்கிராமங்கள் வரை, ஆங்கிலவழி விளையாட்டுப் பள்ளிகள் புற்றீசல் போல வளர்ந்து வரும் சூழலில்;

படிக்க மாணவரின்றி மூடப்படும் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையானது, அதிகரித்து வருவதை ஊடகங்கள் வெளிப்படுத்தி வருகிறன.

அவ்வாறு மூடும் போக்கினைத் தடுக்கும் நோக்கில், அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளையும் தொடங்க, அன்றைய முதல்வர் ஜெயலலிதா முடிவெடுத்தார்.

அதைக் கண்டித்து, பல தமிழறிஞர்கள் கூட்டாக வெளியிட்ட கண்டன அறிக்கையானது, ஊடகங்களில் வெளி வந்தது.

அதில் இடம் பெற்றிருந்த பெரும்பாலான தமிழறிஞர்களின் குடும்பப் பிள்ளைகள் எல்லாம், ஆங்கிலவழிப் பள்ளிகளில், கூடுதலாக இந்தியும் படித்தவர்கள் என்பது சரியா? தவறா? என்பதை ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

தமிழின் அடுத்த கட்ட (Next Phase) புலமை பற்றியும், அதனை ஊக்குவிக்கும் முயற்சிகள் பற்றியும், மேலே குறிப்பிட்ட தமிழறிஞர்களில் எவராவது செயல்பூர்வமாக பங்களித்திருக்கிறார்களா? என்பதையும் ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம். (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html )

‘மத்திய அரசு 'இந்தி மட்டுமே மத்திய அரசின் ஆட்சி மொழி' என்று அறிவித்தாலும், தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமா? நடத்தினால் பொதுமக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாக நேரிடுமா? என்ற கேள்விகள் எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அப்படி போராட்டம் நடத்தினாலும், "உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழியில் இந்தியும் படித்து உருப்பட வேண்டும். எங்க பிள்ளைகள் மட்டும் வீணாகப் போகணுமா?" என்ற கேள்விகளைச் சந்திக்க நேரிடதா?’ (http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழைக் காட்டுமிராண்டி மொழி என அறிவித்து, தமிழ் இலக்கியங்கள் எல்லாம் தமிழருக்கு கேடானவை எனக் கண்டித்த 'பெரியார்' .வெ.ராவின் போக்கில் வெளிப்பட்ட 'பார்ப்பன எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்புவெறுப்பு நோயில் சிக்கி;

ஆனால் தமிழை உயர்த்திப் பிடித்த தனித்தமிழ் கட்சிகள் எல்லாம், 'சாதிப் பற்றில்' ஒப்பீட்டில், 'பெரியார்கொள்கையாளர்களை விட மோசமான திசையில் பயணித்தார்கள்;

என்பது சரியா? தவறா? என்று ஆர்வமுள்ளவர்கள் ஆராயலாம்.

திராவிடக் கட்சிகளின் ஆட்சிகளில் 'அவரவர் சமரச சாமார்த்தியத்திற்கு' ஏற்ற அளவில் 'பலன்கள்' பெற்ற தமிழ் அறிஞர்களின், ஆர்வலர்களின் , 'இரட்டை வேடப் போக்கினை' 'ஊழலாட்சியின் முதுகெலும்பாக' கொண்டே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவானது அரங்கேறியது.


1944இல்  முளை விட்டு, 1949‍ இல் உரம் பெற்று,1965இல் 'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு' வெளிப்பட்டு, அதே போக்கில் 1967இல் ஆட்சியைப் பிடித்து;

அந்த விளையாட்டின் அபாயங்களை உணர்ந்த 'பெரியார்' ஈ.வெ.ரா 'முனிவராக' பொதுவாழ்விலிருந்து ஒதுங்க முற்பட்டு, 'விரைவில் மரணமடைய விரும்பும் அளவுக்கு முதல்வர் அண்ணாவும் மனம் வெறுத்து; ( http://tamilsdirection.blogspot.sg/2016/04/normal-0-false-false-false-en-in-x-none.html )

மேலே குறிப்பிட்ட 'ஊழல் முதுகெலும்பின்' துணையுடன், அந்த விளையாட்டானது 'காவு'  வாங்கியதே;

அனிதாவின் தற்கொலை, பேரறிவாளன் விடுதலைக்காக, தீக்குளித்த செங்கொடி, வைகோ தி.மு.கவிலிருந்து வெளியேறியபோது நடந்த தீக்குளிப்புகள் போன்று, 1965 முதல் இன்று வரை நடந்துள்ள தற்கொலைகள் ஆகும்.

பொதுச் சொத்துக்களுக்கும், பொது மக்களுக்கும் சேதம் விளைவிக்காத, ஆனால் கைதாகும் போது எதிர்வழக்காடாமல், அதிகப்பட்ச தண்டனை வழங்குமாறு கோரி, அரசையே அதிர வைத்த, போராட்ட வடிவங்களை கையாண்ட ஈ.வெ.ரா அவர்களால், கண்டிக்கப்பட்ட 'தற்கொலைகளே' மேலே குறிப்பிட்டவையாகும். அதே நோக்கில், அவரின் பொதுத் தொண்டருக்கான இலக்கணத்தை, எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில் நான் பின்பற்றி வருகிறேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

‘அனிதாவின் அண்ணன் எனது மாணவராக இருந்து, உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப் பின், அவர்கள் இருவரும் என்னை சந்தித்திருந்தால், தோல்வியைக் கண்டு துவள வேண்டாம் என்றும், ஐ.ஏ.எஸ், சார்ட்டர்ட் அக்கவுண்ட் போன்ற வாய்ப்புள்ள இலக்குகளுக்கான படிப்புகளை தேர்ந்தெடுத்து, படிக்குமாறும் அறிவுறுத்தியிருப்பேன்.

என்னை சந்தித்த பின், சில நாட்களில், அந்த பெண் தற்கொலை செய்திருந்தால், அந்த உரையாடலில் நான் எங்கு தவறு செய்திருக்கக் கூடும்? என்று ஆராய்ந்து, அந்த தற்கொலையை தவிர்த்திருக்க வேண்டுமே என்ற கவலையானது, என்னைப் பற்றியிருக்கும்.’ (‘தமிழ்நாட்டில் 'திராவிடர்/தமிழர் சமூக‌ நீல வேல் மீன் விளையாட்டு'   
(Dravidar/Tamizhar Social Blue Whale Game)?; http://tamilsdirection.blogspot.sg/2017/09/dravidartamizhar-social-blue-whale-game.html )

மேலே குறிப்பிட்ட  தற்கொலைகளை எல்லாம் பாராட்டி ஊக்குவித்த, ஆனால் தமது குடும்பப் பிள்ளைகளை மட்டும் அவ்வாறு சீரழியாமல் பாதுகாத்த  தமிழ்றிஞர்களின் 'இரட்டை வேடப் போக்கு' பற்றிய அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரமும் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

மேலே குறிப்பிட்ட எல்லா வகையிலுமான - அரசியல் அதிகார அமைப்புகள் உள்ளிட்டுஇரட்டை வேடப் போக்குகள் இன்று சமூகத்தில் வெளிப்படுபவைகளையே, திரைக்கதைக்கும் வசனத்திற்கும் மூலங்களாக (sources) கொண்டு, இளைஞர்கள் வியப்பூட்டும் புத்திசாலித்தனத்துடன் பங்களித்து உருவாகி வணிகரீதியிலும் வெற்றி பெற்ற திரைப்படங்கள் எல்லாம்;

தமிழ் இதழ்களையும், நூல்களையும் நாம் படிக்குமாறு காட்டினாலும், 'இலாவகமாக' அவற்றை ஒதுக்கி பயணிக்கும் போக்குகளில் உள்ளவர்களில் பெரும்பாலோரின் 'ரசனை' காரணமாக:

சூது கவ்வும், ஜிகிர் தண்டா, சதுரங்க வேட்டை, காக்கா முட்டை, கோலி சோடா, ஜோக்கர்,'விக்ரம் வேதா' போன்ற இன்னும் பல (ரஜினி, கமல், விஜய், போன்ற பெரிய நடிகர்கள் இல்லாத) திரைப்படங்கள் எல்லாம் வணிக ரீதியில் வெற்றி பெற்று வருகின்றன‌.

பாதகமான ரசனையிலிருந்து, தமிழ்நாடு மீளத் தொடங்கியுள்ள இந்த காலக்கட்டத்தில், தமிழ்வழிக்கல்வி மீட்சியானது, 'தமிழ் வேர்க்கொல்லி' நோயிலிருந்து தமிழர்களை  மீட்கும் முயற்சியே ஆகும்.

திருட்டை ஒழிப்பதாக கூறும் திருடர்களை அடையாளம் கண்டு அகற்றுவது போலவும்;

ஊழலை ஒழிப்பதாக கூறும் ஊழல் பேர்வழிகளை அடையாளம் கண்டு அகற்றுவது போலவும்;

தமிழ்நாட்டில் 'ஆங்கிலவழிக் கல்வியை' எதிர்ப்பதாக பொது அரங்கில் வலம் வந்து கொண்டு, தத்தம் குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழிப்பள்ளிக்களில், கூடுதலாக இந்தியும் படிக்க வைக்கும் நபர்களை எல்லாம், 'தமிழ்வேர்க் கொல்லிகளாக' அடையாளம் கண்டு, பொது அரங்கிலிருந்து அகற்றும்;

துணிச்சலை, முன்மாதிரியாக(Role Model) நாம் வெளிப்படுத்தி, தமிழ்வழிக் கல்வியையும், அதன் மூலம் தமிழையும் மரணப்படுக்கையிலிருந்து மீட்போம்
(http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none.html )

No comments:

Post a Comment