Monday, January 4, 2016


ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (3)

 

ஈ.வெ.ரா வளர்த்த சமூக ஆற்றல்கள் எல்லாம்,

'பெரியார்' சமூக கிருமிகள் செயல்நுட்பத்தில் எவ்வாறு சிக்கியது?



நாம் எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, தியாகத்துடன் வாழ்ந்தாலும், நமது சமூக ஆற்றலை, தத்தம் சுயலாப நோக்கிற்கு 'களவாடும்',  'சமூக கிருமிகள்' யார்? யார்? அந்த 'சமூக ஆற்றல் களவு செயல்நுட்பம்' எவ்வாறு நடைபெறுகிறது? 'சமூக தூண்டல்' (Social Induction) மூலம் எவ்வாறு, இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம் அந்நோயில் சிக்கினார்கள்? என்ற ஆய்வின்றி, தமிழும், தமிழரும், தமிழ்நாடும் வீழ்ச்சியிலிருந்து மீள முடியுமா?

சமூக மாற்றத்திற்கான சமூக ஆற்றல்கள்(Social Energy)  உருவாகி வளரும் போக்கில், அந்த போக்கில், செல்வாக்கான‌ சமூக தொகுவிசையாக (Social Resultant)  செயல்படும் தலைவர்கள் முயற்சியால்,  நடைபெறும் திசைமாற்றத்தின் தன்மையைப் பொறுத்தே, அதுவரை உருவான சமூக ஆற்றல்கள், ஆக்கபூர்வ திசையில் பயணிக்குமா? அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்குமா? என்பது முடிவாகும்.

சமூக மாற்றத்திற்கு ஆதரவான‌ "மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,"

ஒரு மனிதரை செயலுக்கு தூண்டுபவையாக, அம்மனிதரின் மனத்தில் உள்ள தேவைகளும், ஈடுபாடுகளும் இருக்கின்றன. ஒரு மனிதர் பிறந்து வளரும் போக்கில் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு, சமூக சூழல் உள்ளிட்ட காரணிகளின் செல்வாக்கில், அவரின் அடையாளக் கூறுகள் உருவாகும்; அவரின் வளர்ச்சிப் போக்கிற்கு ஏற்ற மாற்றங்களுடன்.

'1944இல் ஏற்பட்ட‌ திசை திருப்பல் மூலம் அரங்கேறிய, 'திராவிட, திராவிடர், தமிழர்' அடையாள குழப்பங்களால், தமிழர்களிடம் ஏற்பட்ட‌  அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) அதன் தொடர்விளைவாக,  தமிழர்களின் மூளை செயல்பாட்டின், 'தேவைகளில்' (Needs) மற்றும் ஈடுபாடுகளில்' (Interests) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாற்றங்கள் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் என்னென்ன சீர்குலைவுகள் ஏற்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, வன்முறை, திருட்டு போன்றவையெல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதும், கட்சி, கொள்கைகளிடமிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதும், அதன் தொடர்விளைவுகளா? அதனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இன்றுள்ள சீரழிவுகள் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே, 'மீட்சிக்கான' வழிகளை காட்டும்.' என்பதை இத்தொடரின் முந்தைய பதிவில் பார்த்தோம்.

"ஒரு மக்கள் சமூகத்தின் அடையாளங்கள் ஆனவை,  சமூக வரலாற்றில், அச்சமூகம் சந்திக்கும், சமூக தேவைகளின் அடிப்படைகளிலேயே உருவாகும்." என்பதையும்;

"ஆரிய எதிர்ப்பு நோக்கில், இனம் தொடர்பான சொல்லாக‌ , 'திராவிடர்' என்ற சொல், காலனி ஆட்சிக்கு முன், தமிழ்நாட்டில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. உலகில் வெளிப்பட்டுவரும் ஆய்வுமுடிவுகளின் அடிப்படையில், 'இனம்' என்ற பொருளில், 'திராவிடர்' என்ற சொல்லை பயன்படுத்துவது என்பது, அறிவுபூர்வமாக சரியா? “A consensus consequently developed among anthropologists and geneticists that race as the previous generation had known it – as largely discrete, geographically distinct, gene pools – did not exist.”- https://en.wikipedia.org/wiki/Race_%28human_classification%29 அறிவுக்கு தொடர்பில்லாமல், உணர்ச்சிபூர்வமாக, அச்சொல்லை இன்றும் பயன்படுத்துவது தவறில்லையா?

அதே போல, காலனிய ஆட்சிக்கு முன், 'சமஸ்கிருதத்திலிருந்து தமிழ் பிறந்தது', மொழி உயர்வு, தாழ்வு, சாதி உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவை தொடர்பான சான்றுகள் இருப்பதாக தெரியவில்லை.
'சமூக ஒப்பீடின்' (social comparison) அடிப்படையில் அனைத்து வகையிலான உயர்வு, தாழ்வும், காலனியத்தின் நன்கொடையா? என்பது ஆய்விற்குரியது. இசையில் அவை ‘காலனியத்தின் நன்கொடை’, என்பது தொடர்பான, எனது ஆய்வினை ஏற்கனவே பார்த்தோம். ('இசையில் ' தீண்டாமை காலனியத்தின் ‘நன்கொடை’யா?'

1944இல், தி.க தோன்றுவதற்கு முன்னரே, நீதிக்கட்சி ஆட்சியில், பிராமணர்கள் அமைச்சர்களாக இருந்ததை, ஈ.வெ.ரா எதிர்க்கவில்லை என்பதானது, ஆனைமுத்து வெளிப்படுத்தியுள்ள அபூர்வ சிக்னலாகும். "1944இல் 'திராவிடர்' என்ற அடையாளத்தில், 'திராவிடர் கழகம்' தொடங்கி, ஒட்டு மொத்த பிராமணர்களையும் எதிரிகளாக பாவித்து, அந்த ஆக்கபூர்வ சமூக தள விளைவினை சீர்குலைத்து, அழிவுபூர்வ உணர்ச்சிகளை ஊக்குவித்து, அழிவுபூர்வ சமூக தளவிளவினை (destructive social polarization)  தூண்டினார்கள்.  
 
சுயசம்பாத்தியத்திற்கான தகுதி, திறமைகள் இல்லாத  மனிதர்கள், 'உணர்ச்சிபூர்வ' பேச்சுக்கள், எழுத்துக்கள் மூலம் அறிவுபூர்வ கூறுகளையும், ஒழுக்க நெறிகளையும் சீர்குலைத்து, பொதுவாழ்வில் 'அதிவேகமாக' வளர்ந்தார்கள். அத்தகைய தலைவர்கள், ‘போராட்டங்கள்’ என்ற பெயரில் வன்முறையைத் தூண்டி, தொண்டர்களை 'பலி ஆடுகளாக' போராட வைத்து, வாழ்க்கையைத் தொலைக்கச் செய்து, தமது செல்வம்,செல்வாக்கை 'அதிவேகமாக' வளர்க்கும் போக்கும், பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கும் போக்கும், தமிழ்நாட்டில் அறிமுகமானது. இன்று தொண்டர்கள் விழித்துக் கொண்டு, அவர்களில் சுயசம்பாத்திய தகுதி, திறமைகள் இல்லாதவர்கள் 'கூலி ஆடுகளாகி', பின்னர் 'குட்டித் தலைவர்களாக' வளர்ந்து வருகிறார்கள். 'பலி ஆடுகளுக்கு' பஞ்சம் துவங்கியுள்ளது." என்பதையும்;

பின்வரும் பதிவில் பார்த்தோம்.

"தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம். அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்." என்பதையும் மேலே குறிப்பிட்ட பதிவில் பார்த்தோம்.

ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உள்ள உள் முரண்பாடுகளை கணித்து கையாளும் அறிவின்றி, தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் இருப்பதானது, அந்த சிதைவு முயற்சியின் 'ஆக்சிஜன்' என்பதும், என் கருத்தாகும்.

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, சுயலாப ஆதாய அடிப்படையில் பயணிக்கும் தொண்டர்கள், தலைவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்களா? அரசியல் கட்சிகள் மீது நம்பிக்கையற்ற மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதா? தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக விமர்சிக்கும் போக்கு ஊக்குவிக்கப்படுகிறதா? அல்லது உணர்ச்சிபூர்வ எதிர்ப்புகளும், வன்முறைகளும் ஊக்குவிக்கப்படுகின்றனவா?  தமக்கு பிடிக்காத கட்சிகளையும், அமைப்புகளையும் ஒட்டு மொத்தமாக, வெறுத்து ஒதுக்கும் உணர்ச்சிபூர்வ அடிமைகள் அல்லது 'பிழைப்புக்கு வழி'யாக கொண்டவர்கள் அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா? ஆக்கபூர்வ அறிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குகிறார்களா?

மேற்குறிப்பிட்ட கேள்விகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இன்று செயல்பாட்டில் உள்ள சமூக இயக்க ஆற்றல்களையும் (Social Kinetic Energy), சமூக நிலை ஆற்றல்களையும் (social Potential Energy)  எவை, எவை, அழிவுபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை? எவையெவை ஆக்கபூர்வ போக்கிற்கு பங்களிப்பு வழங்குபவை?;

என்று பிரித்து பார்க்க,  நமக்கு தெரியவில்லையென்றால்;

நாம் எவ்வளவு உண்மையாக, நேர்மையாக, தியாகத்துடன் வாழ்ந்தாலும், நமது சமூக ஆற்றலை தத்தம் சுயலாப நோக்கிற்கு 'களவாடும்', சமூக கிருமிகளின் 'வெற்றி பயணத்தை' தடுக்க முடியுமா? 'பெரியார்' போர்வையில், 'வெற்றிகரமாக' பயணித்து வரும் சமூக கிருமிகள் யார்? யார்? என்று அடையாளம் கண்டு ஒதுக்கவில்லையென்றால், தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான சமூக ஆற்றல் வற்றுவதை தடுக்க முடியுமா; தமிழர்களிடையே அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் 'பதர்கள்' அதிகரித்து வரும் ஆபத்தான சூழலில்? (http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

குறிப்பு: 'நேற்று(past) நீ எப்படி இருந்தாய்?' என்று குறை சொல்லி (கடந்த கால அடிமை  செயல்நுட்பம் மூலம், 'நிகழ் கால பிணமாக' வாழ்ந்து- 'Freedom from the Known' by J.Krishnamurti ; http://www.jkrishnamurti.org/krishnamurti-teachings/view-text.php?tid=48&chid=56788 ) ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை கண்டிக்காமல்

ஈ.வெ.ரா, 'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையை ஆதரிக்குமாறு கோரியபோது, ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும், தயக்கமின்றி ஆதரித்தது போல; (ஈ.வெ.ரா அவர்கள் சாகும் வரை பொது சிவில் சட்ட கோரிக்கையை ஆதரித்தே பிரச்சாரம் செய்தார்.. அந்த 'பெரியார் தந்த புத்தியை' இழந்து, இன்று தி.க அதை எதிர்க்கிறது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது.)

ஈ.வெ.ரா இன்று உயிரோடிருந்தால்; 

குன்றக்குடி அடிகளாரை பாராட்டியது போல, ஆர்.எஸ்.எஸ் தலைவரின், கீழ்வரும் கருத்தை (Bold mine)  பாராட்டி, வரவேற்று; 

சமத்துவமின்மையையும் (inequality), பாரபட்சத்தையும் (discrimination), 'செயல்பூர்வமாக' எதிர்க்க, வாய்ப்புள்ளவற்றில், இன்றும்(present)  நாளையும்(future) ஆர்.எஸ்.எஸுடன்   கூட்டாக செயல்பட்டு, அக்கருத்து 'வெறும் பேச்சா? அல்லது செயல்பூர்வமா?' என்று சமூகவியல் சோதனை (sociological experiment)  மூலம் நிரூபிப்பார் என்பது என் கருத்தாகும்.  

" Without mentioning the debate on intolerance,  Bhagwat emphasised that truth has no place for inequality and discrimination. “Accept all the diversities and look at others with affection in all circumstances. Consider others in your place. They all our ours. The society gets its power from the social unity. A person behaves when he realises that all are equal,” Bhagwat said.

He referred to Ambedkar to insist that political unity cannot be achieved sans economic and social unity. “The Constitution can’t protect us unless we stand united leaving aside social inequality. Equality will be established only when everyone resolves that he won’t exploit anyone,” Bhagwat said echoing Ambedkar’s opinion.": http://www.newindianexpress.com/nation/Embrace-People-of-Different-Beliefs-Ideologies-Bhagwat/2016/01/04/article3210181.ece

( வளரும் )

Monday, December 28, 2015



              ஈ.வெ.ராவும் , பாவ்லோ பிரையரும்


"பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை. பெரியாரைப் பற்றிய கட்டுரையில் இந்த இடத்தில் பாவ்லோ பிரையரை நான் கொண்டுவரக் காரணம், வெறும் கல்விச் சிந்தனையாளர் மட்டுமே அல்ல அவர்; பெரியாரைப் போலவே அவரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகத் தங்களது இறுதிமூச்சு வரை பேசினார், அவர்களுக்குக் கற்பித்தார் என்பதுதான்."
'பெரியார் எனும் கல்வியாளர்!' பூ. மணிமாறன்

மேற்குறிப்பிட்ட கட்டுரையை படித்தபோது, 'கல்வி' தொடர்பாக, உலக அளவில் புகழ் பெற்ற, பாவ்லோ பிரையரை, நான் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' (மே 1981) என்ற நூலில், கீழ்வரும் வரிகளில், ('பெரியார்' ஆதரவாளர்களின் பார்வைக்கு) முன்வைத்ததானது, ஞாபகத்திற்கு வந்தது.

"சுரண்டும் வர்க்கத்தைச் சார்ந்த ஒருவன், உண்மை நிலையினை சுரண்டலை உணரும்போது, அதனைத் தீர்க்க நடைபெற வேண்டிய, சார்பிலா நடைமுறை மாற்றம், தன் நலனையோ, தான் சார்ந்துள்ள வர்க்க நலனையோ, பாதிக்குமென்றால், அவன் மனநோயாளி போன்று நடப்பான்.' என்று  Paulo Freire தனது 'Pedagogy of the oppressed' என்ற நூலில் சொல்கிறார். Paulo Freire. "
'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' பக்கம்19,

கல்லூரியில் பேராசிரியராகவும் (எனவே சராசரி மனிதரைவிட, அறிவு நிலையிலும், வாழ்வு நிலையிலும் சற்று மேல் நிலையில் இருந்த; பாவ்லோ பிரையரின் கருத்துப்படி, 'சமூக அக்கறை' என்ற பேரில் 'மனநோயாளிகள்' அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழ, அதிக வாய்ப்புள்ள‌), இன்று அதைவிட மேலான, திருச்சி தேசிய தொழில் நுட்ப கழகத்தில் ஆய்வுத்திட்ட ஆலோசகராக ( Project Consultant to R & D Project) பங்களித்து வரும் நான், என்னை தொடர்ந்து, மேற்குறிப்பிட்ட அளவுகோல் அடிப்படையிலான சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தி வாழ்ந்து வருவதால், 'பாராட்டு, புகழ், செல்வம், செல்வாக்கு' அதிகரிப்பிற்காக, அத்தகையோருக்கு வாலாட்டும் நாயாக வாழாமல்,( http://tamilsdirection.blogspot.com
/2013_10_01_archive.html ) அதனால் வரும் 'இழப்புகளையும், அவமானங்களையும்' ஏற்று, எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுக்கும்(Passions), சமூக அக்கறைக்கும் இணக்கமான (Harmonious) வாழ்வுமுறையில், வாழ முடிகிறது.

"மக்களுக்காக தங்களை உண்மையாக அர்ப்பணிப்பவர்கள் எல்லாம், தம்மை தொடர்ந்து சுயவிமர்சனதிற்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும்."
" Those who authentically commit themselves to the people must re-examine themselves constantly." 'Pedagogy of the oppressed' , P60

ஆனால் 'பெரியார்' ஆதரவாளர்களில் யார், யார், பாரதியைப் போல;
(வழிபாட்டுப் புழுதிப் புயலில் சிக்கிய தமிழ்நாடு;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html),
'சமூக மனநோயாளிகளாக' வாழ்ந்து வருகிறார்கள்? அல்லது 'சுயநல கள்வர்களாக' வாழகிறார்கள்? என்ற ஆய்வினை தாமதப்படுத்துவது என்பதானது, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் கேடாக மட்டுமின்றி,ஈ.வே.ராவை வரலாற்றில் குற்றவாளியாக்கிவிடும், அபாயத்திலும் முடிய வாய்ப்பிருப்பதாக கருதுகிறேன்.

அதாவது ஒரு சமூகத்தை மாற்ற முயலும் அமைப்பில் உள்ளவர்கள் எல்லாம், தமது செயலை, தமது அமைப்பை, எங்கிருந்து? எப்படி பயணித்து? இன்று என்னை நிலையில்? எதை  நோக்கி?, என்று எடை போட துணை புரியும், அமைப்பின் ஒழுக்க நெறிகளை, புரிந்து செயல்படுவதன் அவசியத்தை,  பாவ்லோ பிரையர் சுட்டிக்காட்டியுள்ளார். 
(Such an organization does need, as Freire often suggested, an ethic that people understand and can use to judge what they do, what the organization is, where they have been, and where they are headed.   http://richgibson.com/freirecriticaledu.htm)


தனது அகத்தில், குடும்பம், நட்பு, கட்சி உள்ளிட்ட தமது சமூக வட்டத்தில், திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், சமூக மாற்றதிற்கான போராட்டத்தை, முன்னெடுக்கும் மனிதர்,  சந்திக்க வேண்டிய ஆபத்துகளை, நன்கு விளக்கி, வழிகாட்டியுள்ள நூல் 'Pedagogy of the oppressed'. 

அதற்கான போராட்டத்தை நடத்தாமல், தனது 'பாதுகாப்பு வளையத்தை' (comfort Zone) மேற்குறிப்பிட்ட நூலில் விளக்கியுள்ளவாறு, இழிவான சமரசங்களுடன் உறுதி செய்து, 'புறத்தில்' முற்போக்கு வேடமிட்டவர்கள் முன் நின்றதே, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் வீழ்ச்சிக்கு வழி வகுத்தது என்பதும் என் கருத்தாகும்.


அடுத்து, தனது தொண்டர்கள் ஆனபின்,  தனது தலைமையில் 'முட்டாள்களாக' இருக்க வேண்டும் என்று,  1948 தூத்துக்குடி மாநாட்டில் ஈ.வெ.ரா அறிவித்ததானது,  எந்த அளவுக்கு, "பாவ்லோ பிரையரின் கல்விச் சிந்தனைகள் தந்தை பெரியார் எனும் கல்வியாளரை பளிச்சென்று அடையாளம் காட்டுபவை."  என்று எழுத அனுமதிக்கும்?' என்பது விவாதத்திற்குரியதாகும்.

ஈ.வெ.ரா தனது வரைஎல்லைகள்(limitations) பற்றிய புரிதலின்றி பயணித்ததால், தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பாதக விளைவுகள் பற்றிய எனது ஆய்வுகளை விளங்கிக்கொள்ள, 'Pedagogy of the oppressed' என்ற நூலை ஆழ்ந்து படிப்பது துணை புரியும். பழந்தமிழ் இலக்கியங்கள், மற்றும் புராணங்கள் தொடர்பாக, தனது வரைஎல்லைகள் பற்றிய புரிதலின்றி, ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கருத்துக்களில் உள்ள குறைபாடுகளை,  நான் வெளிப்படுத்தியுள்ளேன்.


ஈ.வெ.ராவுக்கு இருந்த வரைஎல்லைகள்(limitations) இல்லாததாலேயே, பாவ்லோ பிரையர் தான் சார்ந்திருந்த, கத்தோலிக்க கிறித்துவ மதத்தில் இருந்த குறைபாடுகளை ஆராய்ந்து, வெளிப்படுத்தி, மேல்நாட்டில் கிறித்துவர்கள் தமது சமூக மாற்றத்திற்கு, பங்களிப்பு வழங்க துணை புரிந்துள்ளார்; ஈ.வெ.ரா வைப் போல, அவை தொடர்பான இலக்கியங்களை, புராணங்களை முற்றிலுமாக கண்டித்து, வெறுக்காமல். (Freire's method helped Christians rediscover the prophetic call to social change that not only was part of their biblical heritage but had, in fact, been an integral part of the history of adult education in the United States (Clare, 2000); http://www.talbot.edu/ce20/educators/catholic/paulo_freire/#contributions; In Freire's work, the world and the mind exist, but finally as territory in the mind of a god.
For Freire, filled with a lifetime of radical Roman Catholicism, the material world is subordinate to, and plays itself out in, the world of ideas and religion;  http://richgibson.com/freirecriticaledu.htm )

ஈ.வெ.ராவின் வரைஎல்லைகள் காரணமாகவே, வேதங்களுக்கு எதிரான நூல்களும் இருந்த, உலகின் தொன்மை மொழிகளில் நாத்தீகம் பற்றி அதிகம் உள்ள சம்ஸ்கிருத மொழியை (Amartya Sen:  'Identity and Violence; The Illusion of Destiny' Page 35  ), 'பிராமணர்கள், வேதங்கள்' மொழியாக மட்டுமே அடையாளப்படுத்தி, வெறுக்கும் போக்கு வந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அது மட்டுமல்ல, பாவ்லோ பிரையரின் எழுத்துக்களை, 'வேத வாக்காக' கருதாமல், அவர் பற்றி வெளிவந்துள்ள அறிவுபூர்வமான விமர்சனங்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். உதாரணமாக ,  பாவ்லோ பிரையர் வழியில், சமூக மாற்றங்களுக்கு ஏன் வழியில்லை? என்பது பற்றிய விமர்சனம்;

"Discourse analysis in the tradition of the idealist Freire will not supply the social forces necessary to make change." ; http://richgibson.com/freirecriticaledu.htm 

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் சிக்கல்களுக்கு, அவர் கருத்துக்கள் எந்த அளவுக்கு தொடர்புள்ளவை, தொடர்பற்றவை, என்பது போன்ற அவரின் வரை எல்லைகள் பற்றிய புரிதலும் அவசியம். உதாரணமாக 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச்சொல்லின் பொருளிலின்றி, சங்க இலக்கியங்களில் வரும் 'இனம்' என்ற சொல்லின் பொருள் பற்றி, பாவ்லோ பிரையருக்கு தெரிந்திருந்தால், அவரின் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ள தவறுகள் ஆனவை, அவரின் எழுத்துக்களில் வெளிப்பட்டிருக்காது என்பதும் என் கருத்தாகும். பாவ்லோ பிரையரின் ஆய்வுகளில், திறனாய்வுகள் சுட்டிக்காட்டியுள்ள குறைகளை சரி செய்து, வளர்க்கும் முயற்சிகளுக்கு துணைபுரியக் கூடியது, கீழ்வரும் பதிவாகும்.
http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

Sunday, December 27, 2015



ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2)


அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?


புலமையிலும், செல்வத்திலும், ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த பிராமண‌ர்களையும், பிராமணரல்லாதோரையும் உள்ளடக்கிய நீதிக்கட்சியில், அவர்கள் எவரும் பொதுவாழ்வில், சாமான்ய மனிதர்கள் வாழ்வு நிலைக்கு இறங்காத  நிலையில், காந்தியே வியந்து மலைக்கும் அளவுக்கு, தனது செல்வ வாழ்வு நிலையில் இருந்து, தமது குடும்பத்தினருடன் கீழிறங்கி, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், தனித்துவமாக பயணித்தவர் ஈ.வெ.ரா.  

பிராமணர்களும் அமைச்சர்களாக‌ இருந்து ஆட்சி செய்த‌,  நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவரும், அதனை அங்கீகரித்தே, சிறையிலிருந்த ஈ.வெ.ராவை, 'ஏகமனதாக', தமிழ்நாட்டை காப்பாற்ற, நீதிக்கட்சித்தலைவராக்கினார்கள்.

இது தொடர்பாக; 'சிந்தனையாளன்' இதழில் வெளிவந்த கீழ்வரும் பகுதி கவனிக்கத்தக்கதாகும்.

"ஒரு கட்டத்தில் நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரையும் பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் சேர்க்கலாமா என்பது பற்றி யோசிக்க தலைப்பட்டனர். சுமார் 10 ஆண்டு காலம் அந்த போராட்டம் நீடித்தது. இன்னொரு கட்டத்தில் கோவை மாநாட்டில் 1927 சூலையில் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசிலேயே சேர்ந்து விடலாம் என்று தீர்மானமே போட்டனர். ஈ.வெ.ரா அதை ஆதரித்து பேசினார். இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகி விடும் என்று ஒவ்வொரு கட்டத்திலும் இளைஞர்கள் கருதினர்."
'சிந்தனையாளன்' (மார்ச் 1988 பக்கம்13)

நெல்லூர் மாநாடு நடந்த வருடம் 1929. கோவை மாநாடு நடந்த வருடம் 1927. நெல்லூர் மாநாட்டிற்குப்பின் கோவை மாநாடு நடந்ததாக பொருள் கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் வெளிப்பட்ட தவறு பெரிதல்ல. ஆனால், அம்மாநாடுகளில் ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை குறை சொல்லி, 'இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகிவிடும்' என்று தெரிவித்த கருத்து, ஆய்விற்குரியதாகும். 

இது தொடர்பாக, 'குடி அரசு' 3.7.1927; 10.7.1927; இதழ்களில் வெளிவந்துள்ளவையானது, 'தோழர் பெரியாரைக் கொச்சைப்படுத்திய தோழர் ஆனைமுத்துவுக்கு மறுப்பு' என்ற தலைப்பில், திருச்சி 'பெரியார் மையம்' சிறுநூல் (மார்ச் 1990) வெளிவந்தது.

மேலே 'சிந்தனையாளன்' கட்டுரை விவாதித்துள்ள காலக்கட்டத்தில், த‌மிழ்நாட்டில் 'திராவிடர் கட்சி' இருந்ததா?  1944 இல் 'திராவிடர் கழகம்' தொடங்கும் முன், அன்றைய சென்னை மாகாணத்தில், 'திராவிட மொழிகள்' பேசிய மக்களை உள்ளடக்கி தான்,  'திராவிட' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை' உள்ளடக்கிய, 'திராவிடர்' என்ற சொல், 1944க்கு பின் தான், அரசியல் புலத்தில் இடம் பெற்றதா? அந்த 1944 திசை திருப்பலானது, தனிநாடாக 'திராவிட நாடு' பிரிய இருந்த வாய்ப்பை கெடுத்ததா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை, அடுத்து பார்ப்போம்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா, 1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தவர்,1938இல் தான், அக்கட்சிக்குள் இடம் பெற்ற தலைவரானார்.  

நீதிக்கட்சி துவக்கப்பட்ட வருடம் 1916. அக்கட்சியானது,1920இல் முதலாவதாக நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து, அன்றைய‌ சென்னை  மாகாணத்தில் 17 வருடங்கள் ஆட்சி நடத்திய 5 அமைச்சரவைகளில், நான்கு நீதிக்கட்சி அமைச்சரவையாக இருந்தது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி படு தோல்வி அடைந்தது. 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், ஈ.வெ.ராவின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, நீதிக்கட்சி ஆதரித்தது. ஈ.வெ.ரா, ஏகமன‌தாக, நீதிக்கட்சியின் தலைவராக,  29.12. 1938இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா,1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தார்.

அவ்வாறு நிதிக்கட்சியை ஆதரித்து,1938இல் அதன் தலைவரான பின்,17.12.1939 இல் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பிரிட்டனில் உள்ள அரசு செயலரின் நேரடிக் கட்டுப்பாட்டில், 'தனி திராவிட நாடு' கோரி, தீர்மானம் நிறைவேறியது; 1939இல் அந்த கோரிக்கைக்காக மட்டுமே ஒரு மாநாடு நடத்தினார்.

அதன்பின் 1942இல், பிரிட்டனிலிருந்து வருகை புரிந்த கிரிப்ஸ் குழுவிடம் (Cripps Mission), அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சட்டசபை தீர்மானம் மூலமோ, அல்லது பொது வாக்கெடுப்பு மூலமோ, அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று வெள்ளையர் அரசின் பிரதிநிதி ஆலோசனை வழங்கினார். 

இம்முயற்சிகளில் முன்னுக்கு நின்ற, நீதிக்கட்சித்தலைவர்கள், காங்கிரஸ் ஆதரவுடன், 1940 மற்றும் 1942இல் நீதிக்கட்சி  ஆட்சிக்கு வர முயன்றதானது, ஈ.வெ.ராவின் எதிர்ப்பால், தோல்வியடைந்தது. பின் 1944இல் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி, மேற்குறிப்பிட்ட நீதிக்கட்சித்தலைவர்களையும், நீதிக்கட்சியில் இருந்த பிராமணர்களையும் புண்படுத்தி வெளியேற்றி, 'திராவிடர் கழகமாக' ஈ.வெ.ரா மாற்றியதானது, அன்றைய சென்னை மாகாணம், 'திராவிட மொழிகளை' பேசிய மக்கள், அடிப்படையில் , 'தனி திராவிட நாடாக' மாற இருந்த வாய்ப்பினை, அதனால், எந்த அளவுக்கு கெடுத்த‌து? மேற்கத்திய மொழியில் இருந்த 'ரேஸ்' (Race) என்ற சொல்லின் பொருளில், தமிழில் வேறு பொருளில் வழங்கி வந்த 'இனம்' சொல்லாக, 'பொருள் திரிபு' செய்து, ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை முன்னிறுத்தியன் மூலமாக,  (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html ), அந்த 'திராவிட நாடு' கோரிக்கைக்கான, சமூக ஆதரவு ஆற்றல்கள் எந்த அளவுக்கு குறைந்தன? என்பவை ஆய்விற்குரியனவாகும்.

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகள், இந்திய விடுதலைக்கு முன், 'முழு வீச்சில்' செயல்பட்டது தொடர்பான தகவல்கள் ங்கில ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளதை, ஏற்கனவே பார்த்தோம். நீதிக்கட்சியில் இருந்த பிராமண, பிராமணரல்லாத தலைவர்களின் முயற்சியில் வளர்ந்து, பிரிட்டன் அரசின் பிரதிநிதி, 'சட்டசபை தீர்மானம் மூலம் அல்லது பொது கருத்து வாக்கெடுப்பு மூலம் தனிநாடாக ஆலோசனை' கூறியிருந்த நிலையில், அந்த திசையில் பயணிக்காமல், திசை திரும்பி, 'திராவிட நாடு பிரிவினை' கானல் நீரானதில், அந்த உளவு அமைப்புகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கு, அந்த அமைப்புகள் வசம் உள்ள கோப்புகள், 'இரகசிய நீக்கத்திற்கு' (Declassify) உள்ளாகும்போது, விடைகள் தெரியும்.

ஈ.வெ.ரா யாருடைய செல்வாக்கில், 'திசை திரும்பி', தனிநாடு கோரிக்கைக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு வழங்கிய நீதிக்கட்சித் தலைவர்களையும், ஒட்டுமொத்த பிராமணர்களையும் எதிரியாகக் கருதி, ஒதுக்கி, 'திராவிடர் கழகம்' தொடங்கி, சுய‌சம்பாத்தியம் அற்ற, நீதிக்கட்சித்தலைவர்கள் அளவுக்கு புலமையிலும், ஒழுக்கத்திலும் ஒப்பிடமுடியாதவர்களை, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் வலிமையாக்கினார்? அதனால் தமிழ்நாட்டின் புலமைக்கும், நேர்மையான முறையில் சம்பாதிக்கும் செல்வத்திற்கும், ஒழுக்கத்திற்கும், மனித மாண்புகளுக்கும், ஏற்படப்போகும் ஆபத்துகளை, 'தீர்க்கதரிசி' போல, 1948 தூத்துக்குடி மாநாடு உரையில் வெளிப்படுத்திய ஈ.வெ.ரா;

 அதே ஆபத்து சூழ்ச்சிவலையில் மீண்டும் விழாதிருந்திருந்தால்;

தமிழ்நாட்டில் 'ஊழல் கோரப்பசி'க்கு இரையாகி;
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளும்; 
கிரானைட், தாது மணல், ஆற்றுமணல், சந்தன மரக்காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும்;
தமிழ்வழிக்கல்வி ( எனவே தமிழ்) சமூக அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதும் நடந்திருக்குமா?

மேலும், ஈ.வெ.ராவின் மூளை செயல்பாட்டில், மேற்குறிப்பிட்ட 'திசை திருப்பம்' ஏற்படுத்தியதன் தொகுவிளைவாக, அவரின் இயக்கம் மூலம் 'சமூக உளவியலில்'(Social Psychology)  பாதகமான திசை திருப்பம்  ஏற்பட்டதா? 

அந்த திசை திருப்பல் மூலம் அரங்கேறிய, 'திராவிட, திராவிடர், தமிழர்' அடையாள குழப்பங்களால், தமிழர்களிடம் ஏற்பட்ட‌  அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) அதன் தொடர்விளைவாக,  தமிழர்களின் மூளை செயல்பாட்டின், 'தேவைகளில்' (Needs) மற்றும் ஈடுபாடுகளில்' (Interests) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாற்றங்கள் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் என்னென்ன சீர்குலைவுகள் ஏற்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, வன்முறை, திருட்டு போன்றவையெல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதும், கட்சி, கொள்கைகளிடமிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதும், அதன் தொடர்விளைவுகளா? அதனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இன்றுள்ள சீரழிவுகள் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே, 'மீட்சிக்கான' வழிகளை காட்டும்.

(வளரும்)